ஹிட்டு கொடுக்கனும்னா

. " ஹிட்டு கொடுக்கனும்னா நீ கிட்ட வராதே நான் சொல்றத அப்டியே எய்து இல்லன்னா சொல்லமாட்டேன் " என்று நெஞ்சில் கைவைத்து தள்ளியவரை சமாளித்து அவரிடம் இருந்து கறக்கப்பட்ட சில ரகசியங்கள்: அதிக பின்னூட்டங்களை பெறவும் அதிக சொல்லடிகளை வாங்கவும் நம் குவாட்டர் கோவிந்தனின் சில யோசனைகள் இங்கே.
1. முதல்ல இருக்கிற சாதி எல்லாத்தையும் திட்டு அப்றமா உன் சாதிதான் ஒசந்த சாதின்னு கத்து
2. அதுக்கு யாராவது பின்னூட்டம் போட்டா நீ அதுக்கொரு பின்னூட்டம் போட்டு ஒப்பேத்து
3. யாரும் தொடவே யோசிக்கிற விஷயத்த நீ தில்லா ஆரம்பிச்சு பின்னூட்டத்த நீயே போட்டு சூடேத்து
4. ஒரு அஞ்சாரு வலைய வேர வேர பேர்ல ஆரம்பிச்சு ஒன் ஒரிஜினல் பேருக்கு புகழ்மால சூட்டிக்க எல்லா
இடத்திலியும் லிங்க் குடுத்துரு
5. வலைல கவனிக்கிற மாதிரி யாரும் எழுதுனா ஒட்னே நீ ஒரிஜினல் பேர்ல ஆதரிச்சும் அனானிமசா திட்டியும் பின்னூட்டம் போடு அப்றமா ஒரிஜினல் பேரில போயி அனானிய ஒரு புடி புடி அப்றமா அந்த வலையோட ஓனரு ஒனக்கு நிரந்தர வாசகரு.
6. ஒனக்கு யாரும் பின்னூட்டம் போட்டா ஒடனே வெத்தல பாக்கு வச்சி அவங்கள உள்ள கூப்பிடு அவங்க உனக்கு பிடிக்காத எதையும் சொன்னா வெளிய தொரத்தி கதவ சாத்து அப்றம் அவங்க வலைக்கி போயி அனானியா பின்னூட்டம் போடு
7. தினசரி பேப்பர பாரு தலைப்பு செய்தி என்னான்னு பாத்து எல்லா பேப்பர்லியும் இருந்து ஒரே சேதிய ஒவ்வொரு பத்தி வெட்டி ஒட்டுனா ஒரு பதிவு ரெடி .
8. இதவிட இன்னொரு வேல பன்னு நீயே ஒனக்கொரு போலிய ரெடிபன்னு அதுல ஒன்ன நீயே திட்டிக்க ஒரிஜினல் பேருல போலி வந்துட்டான்னு கத்து நீ ஒடனே பேமசு. ஆனா ஒன்னு சமத்துல ஒரிஜினல் போலியாயிடும் சாக்கிரதை
9. கவர்மண்டுல நல்லது எதும் செஞ்சா கண்டுக்காத எதாவது ஒரு சின்ன தப்பு நடந்தா அய்யோ அம்மான்னு கத்தி ஊரக்கூட்டு ஒனக்கு நிறயா பின்னூட்டம் முன்னூட்டமுல்லாம் வரும்
10. பா.ம.க வ ஆதரிச்சு இல்ல திமுகவ ஆதரிச்சு இல்ல திராவிடத்த ஆதரிச்சு எழுதுனா நிறயா அனானிமசூ பின்னூட்டம் வரும். பாதி இங்லீசுலேயே இருக்கும். குறிப்பா இடஒதிக்கீட்ட ஆதரிச்சு எழுதாத, எல்லாரும் வெளிநாட்டு அனானிமசு உள்ளூரு சோமாதிரி ஆட்கள் தொடர்ந்து பின்னூட்டம் போடுவாங்க ஆனா எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்க கத்துக்கோ.
11.கடேசியா ஒன்னு " இந்த மாதிரி குவாட்டர் குடிக்கிர எங்கிட்ட ஐடியா கேக்கறத விட்டுபுட்டு உருப்படியா எதாவது உலகத்துக்கு சொல்ற வழியப்பார்"!



2 comments:

Anonymous said...

:)
nalla ezhuthuringa sir sirippum varuthu unmaiyum athaana

Anonymous said...

excellent ideas,+ add one thing
start screwing Brahmins and do mud slingning on them,
dont miss even a single blog without blaming brahmins
you will get lot of appreciations.
good wishes