என்னதான் எழுதினார் ஞானி?

/பதிவுலகின் இன்றைய பரபரப்பான ஞானிக்கு இன்னும் மக்கள் சரியான எதிர் விணை புறிய மக்கள் வசதிக்காக விகடன் கட்டுரை இங்கே மக்கா படிச்சுட்டு எத்தால வேனாலும் அடிங்கோ/

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்பான் பாரதி. இந்த ‘ஓ பக்க’க் கட்டுரையும் அப்படித்-தான்... பாரதி வழியில் பேசாப் பொரு-ளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!

‘எந்த ஒரு சமூகம் தன் குழந்தை-களையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!’ என்பது அறிஞன் வாக்கு.



இதைச் சற்றே மாற்றியமைத்துச் சொல்வ-தானால், எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறதோ, அந்தச் சமூகம் ஒரு சுரண்டல் சமூகம்!’ என்பேன் நான்.

குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், படிப்பதும் விளையாடுவதும் தான். முதியவர்கள்..? இந்தச் சமூகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் போதுமான அளவு வேலை செய்து முடித்தாயிற்று. இனி உடலையும் உள்ளத்தையும் வருத்திக்-கொள்ளாமல் ஓய்வெடுப்-பதும்,


மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்துகொண்டு எஞ்சிய காலத்தை இனிமையான-தாகக் கழிப்பதும்தான் முதியவர்களின் நிஜமான தேவை. அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது-தான் குடும்பத்தின், சமூகத்தின் கடமை.

அப்படியானால், 84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைப்படுத்திக்கொண்டு இருப்ப-தைப் பார்த்து, நாம் ஏன் வாய் மூடிச் சகித்துக்கொண்டு இருக்கிறோம்?

கலைஞர் கருணாநிதிதான் அந்த முதியவர்!

அவருடைய சில கருத்துக்களுடனும், அரசியலுடனும், நிர்வாக வழி முறைகளுடனும் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டுதான். ஆனால், ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடு-வதைப் பார்த்துக்-கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கை-யில் பல துறைகளில் மிகுந்த புத்திக்-கூர்மையுடன் செயல்படுவதைத் தன் முத்திரை யாக நிலை நிறுத்திவைத்தி-ருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?

மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ

84 வயது முதியவர் ஒருவர் நம் வீட்டில் இருந்தால், அவர் இந்த நிலையிலும் வேலைக்குச் செல்வதை நாம் விரும்புவோமா? அனுமதிப்-போமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நடந்த உண்ணா-விரதப் பந்தலில், உட்கார்ந்த நிலையி-லேயே தன்னை மீறிய களைப்பில் அவர் தலை துவள்கிறது. உதட்டோரம் வடியும் எச்சிலை கைக்குட்டை எடுத்துத் துடைத்துக்கொள்ளவும் முடியாத அயர்ச்சியில் அவர் இருக்-கிறார். அவரால் நடக்க முடியவில்லை. சிறுசிறு அடிகளாக எடுத்துவைக்கும்-போது, இரு பக்கமும் பிடித்துக்-கொள்ள ஆட்கள் தேவைப்படு-கிறார்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்கவோ, நின்றிருந்தால் வாகாக உட்காரவோ, குழந்தையைப் போல அவருக்குப் பிடிமானம் தேவைப்படுகிறது.

என் அப்பா இந்த நிலையில் அலுவலக வேலைக்குப் போய்க்-கொண்டு இருந்தாரானால், நிச்சயம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் மகனாகவே நான் இருப்பேன்.



மேடைப் பேச்சுக்களில் ஒரு விஷயத்திலிருந்து இடையில் இன்னொன்றுக்குத் தாவிப்போய் விரிவாகப் பேசினாலும், மீண்டும் விட்ட இடத்துக்கே கச்சிதமாக வந்து அர்த்தத்துடன் கோத்துக்-கொள்ளும் பேச்சாற்றல் உடையவர் கருணாநிதி. இப்-போது பல வாக்கியங்களைப் பாதியில் விட்டுவிட்டு வேறொன்-றுக்குப் போய்-விடுகிறார். சட்டைப்பையில் வைத்த காகிதத்தை மறந்து-போய் வேறெங்கோ தேடிய-தையும், ஒரு காலில் கட் ஷ¨ கழன்றுபோனது-கூடத் தெரியாமலே தொடர்ந்து நடந்த-தையும் பத்திரிகைச் செய்தி தெரி-விக்கிறது.

இவை எதுவும் அவருடைய குறைகள் அல்ல; முதுமையில் எவருக்கும் இயல்பானவை. உடல் பலவீனமும், செயல் பலவீனமும் எல்லா மனிதர்-களும் முதுமையில் சந்தித்தே தீர வேண்டியவை. ஆனால், அப்போதும் கடும் உழைப்புக்கு அவர்களை உட்படுத்துவதை ஒரு குடும்பமும் சமூகமும் தொடர்ந்து செய்யுமானால், அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கருணாநிதி சராசரியாக இன்று ஒரு நாளைக்கு 18 மணி நேரமாவது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் அரசியல் உள்ளிட்ட பணிகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.

அரசாங்கக் கோப்புகளைப் படித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது, அரசியல் எதிரிகளுக்குப் பதில் அறிக்கைகளைக் காரசாரமாக உடனுக்குடன் வெளி யிடுவது, எதிரிகளிடமிருந்து மட்டு-மல்ல... கூட்டணி நண்பர்களிடமிருந்தும் தன் ஆட்சியைக் காப்பாற்ற தொடர் வியூகங்கள் வகுப்பது, முன்னாள் உடன்பிறப்புக்களும் இந்நாள் எதிரி-களுமான மாறன் சகோதரர்களை எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு அச்சுறுத்தலாக வளரவிடாமல் பல வீனப்-படுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது... இதெல்லாம் போக, எஞ்சிய நேரத்தில் தன் மனதுக்கு விருப்பமான இலக்கிய & சினிமா & விளை-யாட்டு ரசனைகளில் திளைப்-பது என்று, தான் விழித்-திருக்கும் 18 மணி நேரத்தில் 36 மணி நேரத்துக்-கான உழைப்பை அவர் கொடுத்தாக வேண்டியிருக்-கிறது.

இதில் பாதியைக்கூட, அவர் வயதில் பாதியளவே இருக்கும் ஒருவரால் செய்ய முடி-யாது. இதைப் பார்த்து பிரமிக்கி-றார்கள். Ôதலைவர் மாதிரி வருமா!Õ என்கிறார்கள். உண்மையில், இது பிரமிப்புக்கான விஷயம்தானா?

கலைஞர் கருணாநிதிக்கு இனிமேல் வாழ்க்கையில் அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; புதிய அவதூறுகளும் இல்லை; சந்திப்பதற்-கான புதிய விமர்சனங்களும் இல்லை. அவருக்-குச் சூட்டப்படும் புகழுரை-களும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் இனி புதிதாக மாறுவதற்கும் வழியும் இல்லை.

யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரீடத்தைத் தரித்திருக்க வேண்டும்? இதையெல்லாம் ‘விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலேÕ சுதந்திரமாகச் சிறகடிக்க வேண்டியவர் அவர். தன்னை உண்மையான பகுத்தறிவாளராக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் முதலமைச்சர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, எழுத்தாளர் & இலக்கியவாதி & சமூகச் சிந்தனையாளராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?

அவருடைய ரத்த வாரிசுகளும் அரசியல் வாரிசுகளுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி மூவருக்கும் ஒரு கேள்வி: ‘ஒரு தலைவராக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் உபாதைகளுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?’

தி.மு.க&வினருக்கு ஒரு கேள்வி: ‘கட்சிக்குள் ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதை எழுதாத விதி-யாக ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, இப்போதே ஸ்டாலினை முதல்வராக்கு-வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிவிட்டு, சோனியா கட்சித் தலைவராக இருந்து காங்கிரஸை வழிநடத்துவது போல, கட்சித் தலைவராக மட்டும் இருந்து-கொண்டு கலைஞர் உங்களை வழிநடத்-தினால், உங்களால் அரசியல் எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறீர்களா? உங்கள் அச்சத்தி-னால், ஒரு முதியவரை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டுமா?’

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு கேள்வி: ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ வேண்டுமென்று கேட்ட பாரதிக்கு அது 39 வயது வரைகூட வாய்க்கவில்லை. உங்களுக்கு அது 80 வயது தாண்டும் வரை வாய்த்தது. இன்னும் 20 ஆண்டுகள் உங்கள் விருப்பம் போல் ஓய்வெடுக்கவும், உங்கள் விருப்பம் போல் கருத்து தெரிவிக்கவும், உங்கள் விருப்பம் போல் கலை இலக்கியப் படைப்புகளில் ஈடுபடவும் தடையாக இருக்கும் பதவி யைத் தூக்கி எறியக்கூட வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்கு-கிறீர்கள்? இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உங்களை நீங்களேதானே விடுவித்துக்-கொள்ள வேண்டும்?

4 comments:

Anonymous said...

இதுல என்ன தப்பு இருக்கு. புரியலயே

Anonymous said...

மகேந்திரன் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

இந்த முடிவு அவருடையதாகவே இருக்கவேண்டும்.

முள் கிரீடங்களை தரித்துக்கொண்டு ரோஜா படுக்கைகளில் புரள்வது சிலருக்கு ஓய்வை விட சிறந்ததாயிருக்கும்.

G.Ragavan said...

கருணாநிதிக்கும் சரி வாஜ்பாயிற்கும் சரி இப்பொழுது உண்மையிலேயே தேவை ஓய்வு. ஞாநி எந்த உள்ளர்த்தத்துல சொன்னாரோ தெரியாது. ஆனா டீவில பாக்குறப்போ கஷ்டமாத்தான் இருக்கு. என்னையைக் கேட்டா ஸ்டாலினை முன்னிறுத்த இது சரியான நேரமாத்தான் தோணுது. ஷங்கர் தயாள் சர்மா முந்தி பாக்குறப்போ கஷ்டமாயிருக்கும். வாஜ்பாயும் இப்பிடித்தான். அதுலயும் முட்டீல ஏதோ அப்பரேஷன் செஞ்சாராமே. வண்டீல தள்ளீட்டு வந்தாங்க. ஐயோ பாவம்.

Chittoor Murugesan said...

ஞானி இன்றுதான் சொல்கிறார்..

கலைஞர் முதல்வர் பதவியை தூக்கியெறிய வேண்டும் என்று நான் அன்றே சொன்னேன். உடல் நிலை கருதி ஓய்வெடுப்பதற்காக அல்ல. ராமன் ஒரு கற்பனை பாத்திரம் என்று தான் அறிந்த (!) உண்மையை துணிந்து கூறிய கலைஞரின் தலையை எடுப்போம்,நாக்கை வெட்டுவோம் என்று கொக்கரிக்கும் அளவுக்கு துளிர் விட்டுவிட்ட பார்ப்பனீயத்தின் விஷ வேர்களை கெல்லியெறிய துள்ளி எழத் தான் கலைஞர் முதல்வர் பதவியை தூக்கியெறிய வேண்டும் என்றேன். ஆதாரம்: என் வலைப்பூ

கவிதை07