முள் படுக்கையில் உறங்குவது எப்படி இருக்கும் என்று அன்று இரவுதான் அத்துப்படியானது அவனுக்கு. ஒருத்தனுக்கு கோடி காசிருக்கலாம் கொஞ்சும் குழந்தை இருக்கலாம் பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம் வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால் உறக்கமற்ற இரவுக்காரனுக்கு நிம்மதி இருக்காது. தலையில் புண் வந்த மிருகம்போல அவஸ்தைப்பட வேண்டியதுதான்.

படுத்த பத்தாம் வினாடி குறட்டை ஒலியால் வீட்டைப் பெயர்க்கும் வீரன் இன்றுதான் உறக்கமற்றுப் புரண்டான். அடிக்கடி பீரோவை திறந்து அந்த பத்தாயிரம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்தான். மீண்டும் முள் படுக்கையில் படுத்துக்கொண்டான்.

இதை கவனித்த மனைவி தூக்கக் கலக்கத்தோடு தெளிவாகக் கேட்டாள், “தூங்காம அடிக்கடி எங்க எழுந்து போறீங்க?”

வயிறு சரியில்லை என்று காரணம் சொன்னான். சாதாரணமாக வயிறு சரியில்லை என்றால் எல்லோரும் பாத் ரூம் போவார்கள். சிலர் வயிற்றை சமாதானம் செய்வதற்காக கஷாயம் போன்ற வஸ்துவைக் குடிக்க சமயலறைக்கு கூட செல்வார்கள். படுக்கை அறையில் இருக்கும் பீரோவை அடிக்கடி திறந்து பார்த்தால் வயிறு சரியாகிவிடும் என்ற சூட்சுமத்தை அவள் இன்றுதான் கண்டாள். குழம்பிப்போனவள், ‘இது எந்த ஊர் வயித்தியம்?’ என்று கேட்கத்தான் ஆசைப்பட்டாள். ஆனாலும் திரும்பிப் படுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரிக்கு முடி முழுவதும் கொட்டிப்போய் விகாரமாகிவிடும் கனவை தொடர்வதில் ஆர்வம் காட்டினாள்.

மேற்படி பீரோ திறந்து பார்க்கும் முள் படுக்கை இரவினால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் மறுநாள் காலையில் கண் இரண்டுக்கும் மிளகாய்ப் பொடி கலந்த சிவப்பு பெயிண்ட்டை அடித்துக்கொண்டு எழுந்தான். வழக்கமான வேலை ஓடவில்லை. சரியா தப்பா கேள்வி தலையை சுழற்றியது. பீரோவில் இருக்கும் அந்த பத்தாயிரத்தை... நொந்துபோனான்.

விசயம் வேறு ஒன்றும் இல்லை. அவனுக்கு நேற்று சாயிந்தரம் ஒரு பெட்டிக்கடை பக்கத்தில் ரூபாய் பத்தாயிரம் மஞ்சள் பை சகிதமாய் கிடைத்துவிட்டது. மசங்கலில் பணத்தை எடுத்ததை யாரும் பார்த்திருக்க நியாயமில்லை. பணத்தை தேடியும் யாரும் வரவில்லை. இப்பொழுது சிக்கலே அந்த பணத்தை என்ன செய்வது என்பதுதான். நல்ல மனிதனாய் தொலைத்தவனை தேடி கொடுத்துவிடுவதா, இல்லை அமுக்கி விடுவதா என்று ஒரே குழப்பம். மனைவியிடம் யோசனை கேட்டிருக்கலாம் அவள் ‘பணத்தை அமுக்கு!’ என்று ஒரேயடியாக யோசனை சொல்லிவிட்டால்... அது தப்பில்லையா?

தவறிய ஒரு குழந்தையை கண்டெடுத்தால் அதை பெற்றவர்களிடம் ஒப்படிப்பது மனித குணம். சற்று வித்தியாசமாக ஒரு ஆட்டுக் குட்டியை கண்டெடுத்தால் பெற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாதே என்று சொல்லிக்கொண்டு உரியவர்களிடமும் தராமல் பிரியாணி செய்து சாப்பிடுவதும் மனித குணம்தான். ஆனால் பணத்தை கண்டெடுத்தால் என்ன செய்யவேண்டும்?

இதற்கு தீர்வு சொல்ல சரியான ஆள் பகவான் தாஸ்தான் என்ற முடிவோடு அவனை பார்க்கப் போனான். அங்கே பகவான் தாஸ் வாசற் படியில் உட்கார்ந்து தலை போகும் அவசரத்தில் பேப்பர் படித்தான். இவனைப் பார்த்ததும் “வா, இவனே. ஒக்காரு.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவசரமாக படித்தான். இவனும் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டான்.

பகவான் தாஸ் ஒரு வினோதப் பிறவி. வாழ்க்கையின் எல்லா புள்ளிகளுக்கும் ஒரு வியாக்கியானம் - விளக்கம் வைத்திருப்பான். நாலு பேரை வார்த்தையால் மடக்க பலவும் தெரிந்து வைத்திருக்கும் பராக்கிரமன். தெரிந்த விசயம் மட்டுமல்ல செய்யும் தொழிலும் பலதுதான். ஆட்டோ வாங்கி ஓட்டுவான். ஒரே மாதத்தில் விற்றுவிட்டு சோப்புப் பவுடர் ஏஜென்சி எடுப்பான். அடுத்த மாசமே ஆட்டுக் கால் சூப் விற்றுக் கொண்டிருப்பான். நாள் முழுதும் நாயாய் உழைப்பான். சாயிந்திரத்தில் சாமி கும்பிடுவான். ராத்திரியில் குவாட்டர் குடிப்பான். குடித்த பிறகு யாராவது கிடைத்தால் நெத்தியடியாக தத்துவம் பேசுவான். வாந்தி எடுத்துவிட்டோ எடுக்காமலோ தூங்குவான்.

பேப்பரை படித்து முடித்து நன்றாக மடித்து வைத்துவிட்டு “சொல்லு இவனே... அதிசயமா என்ன பாக்க வந்திருக்கே... டீ அடிக்கிறீயா? வீட்டுல ஒய்ப் இல்ல. கடையில போயி குடிப்போம். காசு வெச்சிருக்கே இல்லே?” என்று கேட்ட பகவான் தாஸ{க்கு உச்சந் தலையெல்லாம் மேதாவித்தனம் வழுக்கியது. அடுத்தவன் பாக்கெட்டின் பத்து ரூபாயை தனக்கென வெளியே வரவைக்கும் வித்தை ஞானவானான அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. வித்தியாசமாய் ஒய்ப் இல்லை என்கிறான்.

பணம் கண்டெடுத்ததை இவன் சொல்லவில்லை. சொன்னால் அவனுக்கு பொறாமை வரும். பொறாமை வந்தால் பொய்யான அறிவுறை தருவான். அதனால் பேச்சை வேறு வாக்கில் திருப்பி விசயத்திற்கு வர நினைத்தான். “பேப்பரை அத்தனை தலை பிச்சிகிட்டு படிச்சியே, புதுசா ஏஜென்ஸி எதாவது எடுக்கப் போறீயா?”

“அதெல்லாம் இல்ல. பேப்பர் மாடி வீட்டுக்காரனோடது. அவன் கீழ எறங்கி வரதுக்குள்ள ஒருவாட்டி படிச்சிடுவேன். விடிஞ்ச பிறகும் தூங்கறது தப்பும்பாங்க துப்பத்தவங்க. ஒருத்தன் ரொம்ப நேரம் தூங்கறது ரொம்ப நல்லதுன்னு மாடிவீட்டுக்காரன் இன்னமும் தூங்கற விசயத்தில தெரியுதில்லையா?” ஓசி பேப்பர் படிப்பதற்கு ‘வைகரை துயில் எழேல்’ என்று ஒரு நீதி வாக்கியம் சொல்லி சிரித்தான்.

இருவரும் சேர்ந்து டீ குடித்தார்கள். அவனின் தற்போதய தொழில், வரும்படி பற்றி பேசிவிட்டு, எதேச்சையாக போல கேட்டான், “தாஸ், உனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கீழ கெடைக்குதுன்னு வெச்சிக்கோ. நீ கண்டெடுத்ததை யாரும் பாக்கல, தொலைச்சவன் யாருன்னும் தெரியல. அந்த பத்தாயிரத்துல நீ மொத என்ன செலவு செய்வே? சொல்லு”

தாஸ{க்கு உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. “பத்தாயிரமா, இவனே..! மொத ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு போயி நல் ல பாரீன் சரக்கா ஏத்திப்பேன். தினுசு தினுசா ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். மூவாயிரம் ரூபா குளோசாயிடும்.” சொல்லும்போதே பகவான் தாஸ் கண்ணில் போதை தெரிந்தது. ஒரு பேச்சுக்கே இத்தனை போதையென்றால் பத்தாயிரம் நிஜமாக கிடைத்திருந்தால் கிடைத்த இடத்தில் குடிகாரனாய் சுருண்டு விழுந்திருப்பான் போலிருக்கிறது.

“மீதி காசை என்ன செய்வே?” இவன் மேலும் கேட்டான்.

“மீதியா? நேரா கடைவீதிக்கு போய் ஒஸ்த்தி டிரஸ் நாலு எடுப்பேன். சினிமா பாப்பேன். யாராவது ராத்தங்களுக்கு வருவாங்களான்னு பாப்பேன். எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாய் மீதியாகும். அதுல அஞ்சி ரூபாய் தெரிஞ்ச சின்ன வயசு பிச்சக்காரிக்கும் மீதிய அனாதை ஆசிரமத்துக்கும் தந்துடுவேன்.”

“சின்ன வயசு பிச்சக்காரிக்கு எதுக்கு காசு போடறேன்னு தெரியுது. அனாத ஆசிரமத்துக்கு ஏன் காசு தரே?” ஆச்சரியமாக கேட்டான் இவன். “அதையும் ஒரு ஒன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் ஊத்திக்க வேண்டியது தானே.”

“அதெப்படி இவனே. அடுத்தவன் காசெடுத்து ஊத்தி ஏத்திகிட்ட பாவத்தை எப்படி தொலைக்க? ஆயிரத்தை ஆசிரமத்துக்கு தந்தா பாவம் கழுவிக்கும் இவனே... செய்யற தப்பை சரியா செய்யணும். பாவத்தில ஆரம்பிக்கிற வாழ்க்கை புன்னியத்தில முடியணுங்கறதுதான் பகவான்தாஸோட கொள்கை.” பகவான் தாஸ் ஒரு தந்திரமான சாத்தானைப்போல பேசினான்.

கண்டெடுத்த பணத்தை சந்தோசமாய் செலவு செய்ய இவனுக்கும் துளி ஆசைதான். ஆனாலும் தாஸின் பேச்சு குமட்டியது. என்ன ஒரு குரூரமான யோசனை. பகவான் தாஸ் மீது கோபம் வந்தது.

“சரி, தாஸ். குவாட்டர் அடிச்சி காசு மொத்தமும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து அந்த காசை கேட்டா நீ என்ன செய்வே?” கேட்டதும் பகவான் தாஸின் கற்பனை போதை பொசுக்கென்று இறங்கியது.

“ஆஹா... உனக்கு வேலை இல்ல. நீ லீவ்ல இருக்கியா? எனக்கு வேலை இருக்கு இவனே. பத்து வீட்டுக்கு ஊறுகாய் போடணும்.” சொல்லிவிட்டு ஓடியவனை தடுத்து நிறுத்தி கேட்டான், “ஏழை பாலையோட காசில குடிக்கிறது தப்பில்லையா, தாஸ்?”

“எது தப்பு, இவனே? பணத்தில எழுதியிருக்கா ஏழையோட பேரு. அந்த பணம் பணக்காரன் கையில இருந்திருக்கும், ஏழை கையிலையும் இருந்திருக்கும். பணம் எப்பவும் யாரோடதும் இல்ல, இவனே. தொலைச்சவன் தேம்பி ஆழுவான்னு நெனைச்சா தெம்பா குடிக்க முடியாது. இவனுங்க காசை மட்டுமா தொலைக்கிறானுங்க... வாழ்க்கைய, சந்தோசத்தை, தன்மானத்தை எல்லாம்தான் தொலைக்கிறாங்க. அத்தனையும் மீட்டுட முடியுமா? அப்படி கிடைக்காத பொருள் தொலைஞ்சதா நெனைக்கட்டும். நம்பு இவனே, யோக்கியனுக்கு என்னைக்கும் சந்தோசம் கிடைக்காது. நம்பாட்டி ஆளை விடு. நான் ஊறுகாய் விக்கப் போறேன்.” அவன் போய்விட்டான்.

பகவான் தாஸ் பேசப் பேச அவனுக்கு சாத்தான் கொம்பு முட்டி வளர்வதை கண்டான் இவன். அவன் பேச்சு அற்பத்தனமானது என்று நினைத்தான.; மேலும் இவனின் சின்ன வயசு அனுபவம் வேறு பெரும் தலைவலியாக உறுத்த ஆரம்பித்தது.

அவன் அம்மா ரேஷன் அரிசி வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தலை விறித்துப்போட்டு நடுத்தெருவில் கத்தியபொழுது இவன் பொடிசிறுவன். அன்று அம்மா கத்திய பரிதாப ஓலம் இன்றும் காதில் ஊளையிடுகிறது. அது வெறும் பத்து ரூபாய் காசு. எடுத்த எவனும் திருப்பித் தரவேயில்லை. அம்மா போல பத்தாயிரம் தொலைத்தவனும் இன்று கதறத்தானே செய்வான். ‘ஐயோ என் வாழ்க்கையே போச்சே!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்காமலா இருப்பான்.

அந்த பணம் பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளை பெற்றவளின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமாக இருக்கலாம். வருசமெல்லாம் உழைத்து விளைந்ததை விற்று கடனை அடைக்க ஒரு விவசாயி கொண்டு போன காசாகவும் இருக்கலாம். எப்படிப்பட்ட பணமாக இருந்தாலும் அதை செலவு செய்தால் அது பாவத்தின் பணமாகிவிடும். உள்ளே நப்பாசை நாய் வேறுவிதமாய் புத்தி சொன்னது. ஒருவேளை அது கந்து வட்டிக்காரனுடையதாகவோ, ஒரு கோடிஸ்வரனின் அற்பக் காசாகவோ இருந்தால் செலவு செய்வதில் தப்பில்லையே...!

இவன் ஒன்றும் காசுக்கு கஷ்டப்பட்டு அல்லாடுபவன் இல்லை. மாசத்திற்கு இருபதாயிரத்திற்கும் குறைவில்லாமல் சம்பாதிக்கத்தான் செய்கிறான். ஆனால் என்ன பிரயோஜனம். இவனுக்கென்று என்ன செலவு செய்கிறான். இதே பகவான் தாஸ் குடித்துவிட்டு அன்று சொன்ன ஒரு நெத்தியடி வார்த்தை இன்றும் உறுத்துகிறது.

ஒருநாள் பெரும் போதையில் உடையவிழ நடுத்தெருவில் கிடந்த தாஸை எழுப்பி “எதுக்கு தாஸ் இப்படி குடிச்சி ஒடம்பை அழிச்சிக்கிறே... ஒருத்திய கட்டிகிட்டு குடும்பம் குட்டின்னு உருப்படலாம் இல்லே” என்று யோக்கியனாக இவன் அறிவு சொன்னான்.

பகவான் தாஸ் உடை அவிழ்ந்தவனாய், நாக்கு குழறலாக பேசினாலும் மிதியடியில் அடித்ததுபோல அழுத்தமாக பேசினான். “ழே இவனே. நீ மாசம் எவ்ளோ சம்பாதிப்பே... நாப்பதாயிழமா? உன் சந்தோசத்துக்குனு எத்தன காசு செழவளிப்பே சொல்லு?”

இவன் யோசித்து “ஏழாயிரம்” என்றான்.

“போடா கிழுக்;கா.. திங்கழதும் துணி போடழதும் பொண்டாட்டி புள்ளைய வளக்கிறதும் கணக்கில வழாது. ஒழு குடி, ஒழு பீடி, ஒழு ஜோடி உண்டா உனக்கு. உன் சந்தோசத்துக்கு எழ்த்தனை காசு செலவளிப்பே, சொல்லு?

இவனுக்கு பகீர் என்றது. தன் சொந்த சந்தோசத்திற்கு எவ்வளவு செலவாகும்? பகவான் தாஸ் சொன்னது போல ‘குடி - பீடீ - ஜோடி’ பழக்கம் எதுவும் கிடையாது. எப்பொழுதாவது ஒரு ஸ்வீட் பீடா தின்பான். அது மூணு ரூபாய். அதுதானா இவனுக்கு சொர்க்கம்?

ஒரு பேச்சுக்கு “முந்நூறு ரூபாய் செலவளிப்பேன்” என்றான்.

தாஸ் வாயை கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தான். “அட கேனப் பயலே. உன்னோட சந்தோசம் கேவலம் முந்நூழு லூபாய்ல தானாடா இழுக்கு? இதுக்காடா மாடு மாதிழி ஒழைக்கிழே. அந்த காசை ரெண்டு நாள் பிச்சை எடுத்தா சம்பாதிக்க முடியாதாடா உன்னால? நான் ஏழு காசு சம்பாதிச்சாலும் அது எஞ் சொந்த சொர்க்கம்டா ராசா. நீ ஒரு சவம்டா தங்கம். செத்த பொணம் நீ. எனக்கு அழிவு சொல்லாத. என் வேட்டிய நானே கட்டிப்பேழ்ன். நீ போயி வாழற வழியப் பாருடா எந் தங்கம்” என்றான்.

குடித்து விழுந்து கிடந்த தாஸின் வேட்டியை கட்டிவிடப் போனான். கடைசியில் குடிக்காத இவனுக்கு வேட்டி அவிழ்ந்து கொண்டது. உண்மைதானா? தனக்கென்ற சந்தோசத்திற்கு மட்டும் சம்பாதித்தால் போதுமா? இது அபத்தமில்லையா? அற்ப சந்தோசங்கள்தான் மனிதனின் நிஜ சந்தோசமா? ஒரு கொண்டாட்டம், சந்தோசம், வேடிக்கை, சினிமா, பாட்டு என்று இவன் வாழ்வில் இவனுக்கான தனி சந்தோசமாக எதுவும் கிடையாது. தினம் ஜடம்போல சொந்த லேத்துப் பட்டரையில் இரும்போடு இரும்பாக சொந்தமாக துருவாகி உதிர்கிறான். அதற்கு ‘லேத்துப் பட்டரை ஓனர்’ என்று விசிட்டிங் கார்டு வேறு.

அன்றிலிருந்து இவனுக்கு ஒரே நமைச்சல். ஒரு நாளாவது விரும்பியதைத் தின்று பிடித்தவர்களோடு பேசி பிடித்ததை செய்து சந்தோசமாய் இருக்க வேண்டுமென்று. ஆனால் ஒரு நாள் விடுமுறை என்றாலும் லேத்துப் பட்டரை வேலை ஊத்திக்; கொள்ளும். எத்தனை காசு சம்பாதிக்கிறானோ அத்தனை காசுக்கும் சீட்டு, தவணை, வட்டி, கடன் இருக்கிறது. இப்படி தத்தேறியாய் யோசிக்கவே முடியாது, கூடாது.

ஆனால் அனாமத்தாக ஒரு பத்தாயிரம் கத்தையாக கிடைத்ததும் இவனுக்கு அந்த நமைச்சல் ஒட்டிக்கொண்டது. மனசின் சாத்தான், செய்யும் தப்புக்கு துணையாக ஒரு ஆள், ஒரு சொல், ஒரு நியாயத்தை கண்டுபிடிக்க விரும்பியது. அதற்காகத்தான் பகவான் தாஸை பார்க்க வந்தான். பகவான்தாஸ் சாதகமாய்த்தான் பேசினான் என்றாலும் அவனுக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்தது. தன் முகம் ஒரு நல்லவனின் முகமாகத்தான் ஊரில் எல்லோருக்கும் தெரியும். தன் மனைவிக்கும் கூடத்தான். பணமெடுத்து கயவனாக செலவு செய்தது தெரிந்தால் முகத்தின் கோரம் ஊரை விட்டு விலக்கி வைத்துவிடுமோ என பயந்தான். ஆளற்ற இடத்தில் பணம் கண்டெடுத்த தன் முகம் தனக்கே அந்நியமாகி ஒரு கோர சாத்தான் முகமாக தெரிந்தது. யாருமற்ற பொழுதில் மனிதர்கள் யார் போலவோ ஆகிவிடுகிறார்கள்.

பணத்தை திருப்பித் தந்துவிடும் யோக்கியம் இவனுக்கிருந்தது. ஆனால் தொலைத்தவன் மட்டுமே பணத்தைப் பெறும் யோக்கியம் உலகத்திற்கு இருக்கிறதா? வேறு ஆள் வந்து என் பணம் என்று கேட்டு வாங்கிவிட்டால். பணத்தில் அடையாளமா இருக்கிறது? பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு அபத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஆறாம் வகுப்பில் ஒரு முறை இவன் தன் பக்கத்துப் பையனின் அழகான பேனாவை திருடியிருக்கிறான். (அன்றைக்கே ஆள் திருடன்தானா என்று அடுத்தவர் நினைப்பார்களோ என்று அச்சப்பட்டு, அறியாப் பருவத்தில் திருடிய சிறு பேனா குறித்து யோசிக்கவும் இன்று பயந்தான்.) அடையாளம் தெரியாதபடி அந்த பேனா மூடியை விளக்கு நெருப்பில் தீய்த்து மறைத்து எடுத்துப்போய் அதில் எழுதியும் இருக்கிறான். அந்த பேனா ஒரு முறை தொலைந்துபோனது. மறுநாள் பிரேயர் நடக்கும்போது தலைமையாசிரியர் தீய்ந்த பேனாவை காட்டி மாணவர்க்ளிடம் கேட்டார் “இது யாரோட பேனா...?”

இவனுக்கு தன் பேனா என்று சொல்லி வாங்க பயம். பேனாவின் உண்மையான உரிமையுள்ள பையன் பக்கத்தில் நிற்கிறான். அவனுக்கோ களவு போன தன் சொந்த பேனாவே அடையாளம் தெரியவில்;லை. அப்படி மூடியை தீய்த்து வைத்திருந்தான். பிறகு நடந்த சங்கதிதான் வினோதமானது. “என்னோட பேனா சார்” என்று சொல்லியபடி செந்தாமரை என்ற பெண் நூறு பிள்ளைகளுக்கு மத்தியில் மிடுக்காக நடந்து போய் பேனாவோடு திரும்பினாள். யாருடையதையோ யாருக்கோ தந்த அந்த தலைமை ஆசிரியரின் அபத்த முகம் இன்று நினைவுக்கு வந்தது. அப்படி ஒரு அபத்தம் செய்வதில் விருப்பமில்லை இவனுக்கு.

பொது இடத்தில் பணம் கிடைத்தால் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவிருந்தது போலவே இது கல்ல நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. ஒரு வேளை கல்ல நோட்டாக இருந்தால் போலீசில் மாட்டிக்கொண்டு தெரியாத கல்லநோட்டுக் கும்பல் தலைவன் பெயரை சொல்ல வேண்டியிருக்குமே என்று தொடை நடுங்கினான். அதனால்தான் மொத்தக் காசையும் அல்ல, ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் உறுவி செலவு செய்யவும் பயந்து இருந்தான்.

அடுத்து சீத்தாராமனிடம் யோசனை கேட்டால் என்ன என்று தோன்றியது. சீத்தாராமன் ஒழுக்கமான வேலை பார்ப்பவன். கொஞ்சம் ஒல்லியாக இருப்பவன். ஜனங்களுக்கு பொதுவாக வரும் சில வியாதிகள் இருப்பவன். உலகத்தில் புது வியாதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கிருக்குமோ என்று டாக்டரிடம் ஓடுபவன். வியாதி இல்லை என்று சொன்னாலும் ஒரு ஊசி போட்டுக்கொள்பவன். உடம்பில்தான் கொஞ்சம் வியாதி. ஆனால் அடுத்தவனுக்கு உதவும் மனசில் தங்கம். அவனிடமும் போய் அதே கேள்வியை கேட்டான். “பத்தாயிரம் வழியில கிடைச்சா நீ மொதல்ல என்ன செலவு செய்வே... சீத்தாராமா?”

சீத்தாராமன் தீர்மானமாக சொன்னான். “அந்த காசு முழுசையும் எடுத்துகிட்டு ரங்கசாமி ஹார்ட் பவுண்டேசன் ஆஸ்பிடலுக்கு ஓடுவேன்”

இவனுக்கு சந்தோசமாகிவிட்டது. இதுதான் நல்ல ஆத்மாவின் பண்பு. புற்று நோய்க்கு தாயை பறிகொடுத்த ஒருத்தன் பணக்காரனான பிறகு தாய் நினைவாக ஒரு புற்று நோய் மருத்துவமனை ஆரம்பிப்பதில்லையா? அப்படித்தான் நோய் பல கண்ட ஒரு நல்ல மனுசன் கிடைத்த பணத்தை ஓடிப்போய் ஒரு பவுண்டேசனுக்கு தந்து மற்ற நோயாளிகளுக்கு உதவ நினைப்பான்.

“ஆறாயிரம் கொடுத்து உடம்பு முழுசும் ஒருவாட்டி தரோவா செக் பண்ணிப்பேன்” என்று சீதாராமன் முடித்ததும் இவனுக்கு மனசில் காற்று பிடிங்கிக்கொண்டது. இவனும் காசை தொலைத்தவனிடம் தருவதாய்; இல்லை. வியாதிக்கு மருத்துவம்தான் பார்ப்பானாம்.

“மீதி நாலாயிரத்தை என்ன செய்வே?” சலிப்புடன் கேட்டான்.

“அதுக்கு நல்லா ட்டிரீட்மெண்ட எடுத்துப்பேன்.”

இப்பொழுது சீத்தாராமன் மீதும் கோபம் வந்தது. அவனிடமும் ‘காசு முழுசும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து பணம் கேட்டா என்ன செய்வே?’ என்று கேட்கத்தான் நினைத்தான். ஆனால் அவன் ஒரு இருதய நோயாளி. பாதியில் புட்டுக்கொள்வான்.

ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் - ஆக இருவருமே கண்டெடுத்த பணத்தை உரியவனிடம் தருவது குறித்து பேசாததில் வருத்தம் இருந்தது இவனுக்கு. எதற்காக இப்படி கண்டெடுத்த பணத்தை வைத்துக்கொண்டு குமைந்து சாகிறோம் என்று குழப்பமாகவும் இருந்தது. ஒரு ஆட்டோக்காரன், ஒரு பூ விற்கும் கிழவி லெட்ச ரூபாய் கண்டெடுத்து நாணயமாய் திருப்பித் தந்ததாய் செய்தி படித்ததில்லையா இவன். அந்த காசை ஏப்பம் விட ஒரு நியாயம் தேடி கோர முகத்தோடு அழைகிறோம் என்பது மட்டும் உறைத்தது.

மனசுக்குள் தெரியும் தன் முகம் தனக்கே அறுவெருத்தது. கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறி செய்யும் திருடனுக்கும், நகைக்காக முகத்தில் தலையணை வைத்து கொல்லும் குரூரமானவனுக்கும் தனக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கிறது என்று அசிங்கப்பட்டுக்கொண்டான். தன் மனசின் பாவம் ரத்தத்தில் கலந்ததாய் நினைத்து வருத்தப்பட்டான். வாழ்வில் நிம்மதியாக இருக்க ஒரே வழி காசை உரியவனிடம் தருவதுதான் என்று முடிவெடுத்து பணம் கண்டெடுத்த பெட்டிக்கடை அருகே போனான். ஒரு வேளை அந்த பெட்டிக் கடைக்காரருக்கு தெரிந்திருக்கும். பணம் தொலைத்தவன் அங்குதான் அழுதபடி தேடியிருப்பான்.

கடைக்காரர் காய்ச்சல் வந்தவரைப்போல கடையில் உட்கார்ந்திருந்தார். வயதானவர்தான் என்றாலும் வழக்கமாக கடன் சொன்னாலும் சிரிக்கும் ஆசாமி அவர்.

“என்ன ஆச்சி கடக்கார்ரே... ஒடம்பு சரியில்லையா?”

அவர், “ப்ச்... இல்ல சார். என்ன பொழப்போ. தொட்டதெல்லாம் தொலங்கல. எல்லா காசையும் தொலைச்சி நஷ்டப்பட்டு கிடக்கேன். கடன்காரன் கழுத்துல கை வக்கிறான். ஊரை காலிபண்ணிகிட்டு போகலாமான்னு இருக்கேன்.”

இவனுக்கு சுறுக்கென்றது. “காசை தொலைச்சிட்டிங்களா... எவ்ளோ?”

“ம் தொலைச்ச மாதிரிதான். விட்ட காசு திரும்ப கிடைக்கவா போது. எவன் யோக்கியம் இந்த உலகத்தில. நஷ்டமான காசுக்கு கணக்கென்ன? வட்டியில கொஞ்சம் பொட்டியில கொஞ்சமா மொத்தமா போச்சி”

“பத்தாயிரமா?”

“ம், இருக்கும்.”

“கவலைய விடு கடக்கார்ரே. நல்லவங்கள கடவுள் சோதிக்க மாட்டான். காசு என்கிட்டதான் இருக்கு.” வீட்டுக்கு ஓடினான். ஒரு அப்பாவி பெட்டிக் கடைக்காரனின் காசை தின்னப் பார்த்தோமே என்று வருந்தினான்.

வீட்டிற்கு வந்தால் மனைவி ஒரு அழகான வாசிங் மெஷினை வாங்கி நடு வீட்டில் வைத்திருந்தாள். “ஒன்பதாயிரம் ரூபாய்ங்க... கலர் நல்லா இருக்கா?”;என்று கேட்கிறாள். இவனுக்கு மனசில் என்னவோ உறுத்தியது. பீரோவை பூட்டினோமா இல்லையா?

துக்கமும் கோபமுமாக கத்தினான், “ஏ கூறு கெட்டவளே... அடுத்தவன் காசுல வாசிங் மெஷின் வாங்கறது பாவமுன்னு தோணல? காசுன்னா ஏம் பேய் மாதிரி அலையற?”

மனைவி புதிராக கேட்டாள். “எதுக்கு இப்படி கத்தறீங்க. எது அடுத்தவன் காசு. நான் கஷ்டப்பட்டு சீட்டு சேத்த காசு. மாசக் கணக்கா கேக்கறேன் வாங்கித் தர வக்கில்லே. நானே வாங்கினா கத்துங்க.”

“உன் காசா?”

ஓடிப்போய் பீரோவை திறந்து பார்த்தான். பத்திரமாக அந்த காசு அழுக்கு மஞ்சள் பையில் இருந்தது. மெல்ல இளித்தான். மனைவியிடம் ஒரு வார்த்தை பேசாமல் கடைக்காரனிடம் வந்து பெருமிதத்தோடு காசை தந்தான். கண்டெடுத்த விதத்தைச் சொன்னான். கடைக்காரன் பணத்தை திருப்பித் திருப்பி பார்த்துவிட்டு ஒரு ஆயிரம் ரூபாயை இவன் கையில் கொடுத்தான். நாள் முழுதும் இந்த பணம் படுத்திய பாட்டில் வேலைக்கு போகாமல் ஆயிரம் நஷ்டம்தான். ஆனாலும் செய்த உதவிக்கு காசு வாங்குவது தப்பென்று “பரவாயில்ல வை, பெரியவரே. இனி ஜாக்ரதையா இருங்க.” என்றான்.

வரும் வழியெல்லாம் அவன் மனசு கணமற்று மெல்லியதாய் மிதந்து வந்தது. ஒரே நாளில் பெரும் பாவியாக ஆக இருந்தான். கைக்கெட்டும் தூரத்தில்தான் மனிதர்களைச் சுற்றி பாவங்கள் இருக்கிறது. ஒரு சின்ன சபலம் ஒருத்தனை பாவியாக்கிவிடும். நல்லவனாவதற்கும் சந்தர்ப்பங்கள் வெக அருகிலேயே இருக்கிறது. நான் நல்லவனானதற்கு நன்றி கடவுளே!

உண்மையில் அவன் ஒரு பெரும் தவறு செய்துவிட்டான். வீட்டில் அவனுக்காக கசாப்புக் கடை கத்தியோடு இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.

ஒருத்தன் தெரிந்த லைன்மேன். இன்னொருத்தன் புதியவன்.

“சார், நேத்து நீங்க பெட்டிக்கடை பக்கத்தல ஒரு பை எடுத்திங்களே... அது இவரோடதாம். நான் எடுக்கும்போது பாத்தேன். உங்களோடதா இருக்கும்னு நெனைச்சேன். இந்த மனுசன் பாவம் பத்தாயிரம் காணம்னு இன்னைக்கு அலையறத பாத்தேன். நீங்க நல்ல மனுசன் தந்துடுவிங்கன்னு சொல்லி கூட்டியாந்தேன்.” லைன்மேன் சொல்ல இவனுக்கு தலை கிறுகிறுத்தது.

அடப் பாவி கடக்காரா...

கடைக்காரன் எந்த கஷ்டத்துக்கோ புழம்ப நாந்தான் பணம் தொலைஞ்ச கஷ்டமுன்னு தப்பா நெனைச்சேனா? தலைதெறிக்க பெட்டிக் கடைக்கு ஓடினான். அங்கே பெட்டி மட்டும்தான் இருந்தது. ஒரு ஆட்டோவில் மொத்த சாமானையும் அள்ளிப் போட்டுக்கொண்டு சற்று முன்தான் கடைக்காரன் போனதாய் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்.

தெரியாத்தனமா ஆள் மாத்தி தந்துட்டேன் என்று சொன்னால் யார் நம்புவார்கள். ஆனாலும் சொன்னான். காசு தொலைத்தவனும் லைன்மேனும் பாதி நம்பினார்கள். ஆனாலும் ‘காசை எண்ணி வை.’ என்றார்கள். மறு நாள் காசை எண்ணி கொடுத்தான்.

கடைக்காரனின் மேல் இவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் பணத்தை ஏப்பம் விட தானும் விரும்பியதை நினைத்துப் பார்த்தான். இவன் நினைத்தான், கடைக்காரன் செய்தான். பெரிய வித்தியாசமில்லையே! அன்று காசு கண்டெடுத்ததை யாரும் பார்க்காததற்காக சந்தோசப்பட்டான். இப்பொழுது எடுத்ததை யாராவது பார்த்திருந்தால் பரவாயில்லையே என்று வருத்தப்பட்டான்.

‘நாலு பேர் அறிய பணத்தை கண்டெடுக்கும் எல்லோருமே உலகத்தில் யோக்கியர்களாக இருக்க விதியுண்டு. ஆனால் யாரும் அறியாமல் பணத்தை கண்டெடுத்தவன் யோக்கியனாய்த்தான் இருப்பான் என்பதற்கு எந்த யோக்கியரிடத்திலாவது உத்ரவாதமுண்டா?’ என்று ஒரே தத்துவார்த்தமான குழப்பத்தோடு இரவெல்லாம் அவன் குழம்பினான்.

சூராவளிபோல வந்து ஒரு நாள் இரவு தங்கிப்போன அந்த பத்தாயிரத்தின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு இரவாகி முள் படுக்கையாய் குத்த ஆரம்பித்தது அதன் பிறகு. அப்படி ஒரு நாளின் இரவில் அவன் தன் மனைவியிடம் கேட்டான், “ஏஞ் செல்லம் உனக்கு ஒரு பத்தாயிரம் கீழ கெடைச்சா அந்த காசுல நீ மொத என்ன செலவு செய்வே?”

அவள் இவனை கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னாள், “கண்டிப்பா பீரோவுல புருசனுக்கு தெரியாம ஒளிச்சி வெச்சிட்டு ராத்திரி பூரா திறந்து திறந்து பாக்கமாட்டேன்.” அவள் கோபத்தில் நியாயமிருக்கிறது. பணம் தொலைத்தவனுக்கு அன்று எண்ணி கொடுத்த பணம் அவள் கஷ்டப்பட்டு சேர்த்த பணமாயிற்றே.

- எழில்வரதன்
2000 ஆகஸ்டில் சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்த பண்பாடு மக்கள் தொடர்பகம் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தியது. (மறைந்த) அறந்தை நாராயணன் தனது உரையில் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனைப் பற்றி கூறியது இப்போதும் நினைவில் இருக் கின்றது. "பாதை தெரியுது பார்" ('காலம் மாறிப்போச்சு' என்று முதலில் பெயர் வைக்கப்பட்டது) என்ற திரைப்படம் 1961,62இல் வெளிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன். இந்தப் படப்பிடிப்பு நடந்த தினங்களில் அதே தளத்தின் மற்றொரு பகுதியில் அன்றைய பிரபல நடிகர் மூன்று எழுத்து இனிசியல் பெயர்க்காரர் (வசன உச்சரிப்பில் புகழ் பெற்றவர்) சக நண்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: 'கம்யூனிஸ்ட்டுக்கள் படம் எடுக்குறாங்க, ஜாக்கிரதை. படம் எப்டி ஓடுதுன்னு பார்க்கலாம்'. சொன்னபடியே அந்தப் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார்கள்."

அந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஆர்.கே.கண்ணன், அவர் மார்க்சிஸ்ட் விமர்சகர். அந்தப் படத்தை இயக்கியவர் வங்காளியான நிமாய்கோஷ். அவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர். அவரை அழைத்து வந்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அந்தப்படத்தின் கதா நாயகனாக நடித்தவர் திருச்சி பொன்மலை கோல்டன் ராக் ரயில்வே தொழிலாளியான கே.எம்.விஜயன் என்பவர். படத்துக்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன். பாடல் எழுதியவர்கள் கே.சி.எஸ்.அருணாச்சலம் (சின்னச்சின்ன மூக்குத்தியாம்...), ஜெயகாந்தன் (தென்னங்கீற்று ஊஞ்சலிலே...). பட்டுக்கோட்டையாரும் ஒரு பாடல் எழுதினார். அனைவரும் கம்யூனிஸ்டுகள்.

தமிழ்ச்சினிமா தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்க விதைபோட்டவர்களில் நிமாய்கோஷ் முக்கியமானவர். சினி டெக்னீசியன்ஸ் கில்ட் ஆஃப் சௌத் இந்தியாவின் முதல் தலைவர் அவரே. அதேபோல் இன்னொருவர் எம்.பி.சீனிவாசன். இந்தியா விடுதலை பெற்ற காலைப்பொழுதில் 'விடுதலைப்போரில் வீழ்ந்த மலரே! தோழா! தோழா!' எனும் பாடலை மணவாளன், சங்கரராஜ் ஆகியோருடன் இணைந்து பல மேடைகளில் பாடினார் (தகவல்: அம்ஷன் குமார், உயிர்மை அக்.2007).

'என்னோடு பாட்டுப்பாடுங்கள்' என்ற பாடகர் தேர்வுக்கான ஒரு போட்டி ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பா கின்றது. இதில் நடுவராக இருக்கின்ற எஸ்.பி.பாலசுப்ர மணியம் ஒரு முக்கிய தகவலைக் கூறினார்: "நாங்கள்லாம் இப்போ பாடின உடனே 'டாண்'ணு கையிலே பணம் வருதுன்னா அதுக்குக் காரணம் எம்.பி.சீனிவாசன்தான்". அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அன்றைய காலத் தில் பம்பாய் தவிர தென்னிந்தியப்பகுதியின் சினிமா என்றால் அது கோடம்பாக்கம்தான். ஆனால் சினிமாக் கலைஞர்களுக்கோ, உதிரிக்கலைஞர்களுக்கோ, கூலி களுக்கோ உரிமையும் கிடையாது, சங்கமும் கிடையாது, எனவே உழைத்ததற்கான கூலியும் உடனடியாக வராது, சொன்னபடியும் வராது. இவர்களுக்கான 'தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சங்க'த்தை உருவாக்கியவர் எம்.பி.சீனிவாசனே. வெறுமனே 'நான் இசைக்குப் பிறந்த வன், இசை தூய்மையானது, புனிதமானது, எனவே நானும் புனிதமானவன்' என்று அவர் ஒதுங்கியிருந்தால் இன்று அந்த சங்கம் இல்லை. 'பாட்டும் சங்கீதமும் யாருக்கும் சொந்தம் அல்ல, பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானா லும் பாடலாம்' என்பதை மெய்ப்பித்தவர். மெட்ராஸ் யூத் கொயர் என்ற இசைக்குழுவை 1970இல் தொடங்கினார். சாதாரணத் தொழிலாளிகள், வங்கி ஊழியர்கள், மாணவர் கள், ஆசிரியர்கள் ஆகியோர்தான் பாடகர்கள்! 5000 பேர் பாட ஒரு சேர்ந்திசை நிகழ்ச்சியை 1984ஆம் ஆண்டு சென்னை குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் நடத்திக் காட்டினார்! இளையராஜா இன்று புலம்புகின்ற 'இசை ஒரு புனிதம், ஆன்மிகம், தவம்' போன்ற மேல்த்தட்டு கற்பிதங் களை உடைத்துக்காட்டியவர். இத்தனைக்கும் அவர் மலை யாளத்திரைப்பட உலகில் வெற்றி பெற்ற பல படங்களின் இசையமைப்பாளர். தேசவிடுதலைக்கான போராட்டத்தில் மும்முரமாக தங்களை இணைத்துக்கொண்ட எழுத்தாளர் களும் கலைஞர்களும் ஒன்றுக்கூடி ஏற்படுத்திய அமைப்பு தான் இந்திய மக்கள் நாடக மன்றம் (மிஸீபீவீணீஸீ றிமீஷீஜீறீமீs ஜிலீமீணீtக்ஷீமீ கிssஷீநீவீணீtவீஷீஸீ மிறிஜிகி). அதில் அவர் உறுப்பினர். எல்லாவற் றுக்கும் மேலாக அவர் மக்களுடன், தொழிலாளிகளுடன் தெருவில் நின்று பாடியவர்.

தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் மகிழ்ச்சிகரமான தருணங்களில் மட்டுமே பங்கு கொள்பவன் கலைஞனோ விஞ்ஞானியோ அல்லன். மக்களால் அங்கீகரிக்கப்படு கின்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளுக்கு சமூகக்கடமை உண்டு. தன்னைச் சுற்றி மனிதர்கள் குடல் உருவப்பட்டு செத்து விழும்போதும் பெண்கள் நடுவீதி யில் கும்பலாக வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற போதும் குழந்தைகள் வாணலியில் வறுக்கப்படுகின்ற போதும் கண்டும் காணாமல் இருப்பதும், "எல்லாம் நல்லபடியே நடக்கின்றது" என்று வசனம் பேசுவதும், "எல்லாரும் கனவு காணுங்கப்பா" என்று குஷிப்படுத்துவதும், "இந்தியா 2020இல் வல்லரசாகி விடும்" என்று உடுக்கை அடித்துக் குறி சொல்வதும், 'எல்லாம் இறைவன் செயல்' என்று அள்ளி விடுவதும், சமூகத்துக்கு செய்கின்ற துரோகம். சாமானிய மக்கள் துன்புறுத்தப்படுகின்றபோது, அவமானப்படுத்தப்படும்போது, உரிமைகள் மறுக்கப்படு கின்றபோது, கலைஞனும் விஞ்ஞானியும் தமது அடை யாளத்தையும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டவும் ஒரு சலசலப்பை உரு வாக்குவதற்கான, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதுதான் நியாயம். எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுதான் நியாயம். சக மனிதன் கொடுத்த காசுகளால் வயிறு நிரப்பி, அதே சமூகம் பற்றி எரிகின்றபோது கண்டு கொள்ளாமல் இருப்பவனும் வாயைத் திறக்காமல் மவுனம் காப்பவனும் சுயநலமி, பச்சைத்துரோகி இல்லாமல் வேறு யார்?

தொடக்கத்தில் குறிப்பிட்ட எம்.பி.சீனிவாசனும், மறைந்த எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோ ரும், மூத்த எழுத்தாளர்கள் ப்ரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், விஜய் தெண்டுல்கர், அமர்த்தியா சென், ஜெயகாந்தன், மஹேஷ் பட், இவர்களோடு சபானா ஆஷ்மி யும், ஜாவேத் அக்தரும், எம்.எஃப்.ஹ§சேனும், ஓவியர்கள் விஷ்வமும், ட்ராட்ஸ்கி மருதுவும், வீர.சந்தனமும், கூத்துப் பட்டறை முத்துசாமி போன்ற பலரும் தமது சமூகக் கடமையை சரியாகவே செய்தார்கள், செய்து வருகிறார்கள். கலைஞர்களும் மேதைகளும் விஞ்ஞானிகளும், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் தமது கருத்துக்களைப் பதிவு செய்வ திலும், உழைப்பாளி மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக் கும் தலித்துக்களுக்கும் எதிராக எப்போதெல்லாம் அராஜகங் கள் நிகழ்த்தப்படுகின்றனவோ அப்போதெல்லாம் தமது எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்வதிலும், சாமானிய மனி தனை ஒரு ஜடப்பொருளாகவும் வியாபாரப்பொருளாகவும் அரைத்து சாற்றை விழுங்கி சக்கையைத் துப்புகின்ற உலகமயம்+தாராளமயத்துக்கு எதிராக குரல் எழுப்புவதி லும் ஒரு அரசியல் இருக்கவே செய்கின்றது. அது அடக்கு முறைக்கு எதிராகவும் நியாயத்துக்கு ஆதரவாகவும் நிற்கின்ற அரசியல். இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமய சூழலில் கலைஞர்கள், அறிவாளிகளின் குரல் அதிகமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்லது.

நம் ஊரில் அப்துல் கலாம் என்று ஒருவர் இருக்கின் றார். மீன்பிடித்தொழில் செய்கின்ற கடற்கரையோர கிராமத்தைச் சேர்ந்த, மீன், கருவாடு, மாமிசம், உப்புக் கண்டம் உண்கின்ற ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்தவர். இந்திய சமூகத்தில் பொ£ய்ய விஞ்ஞானியாக அடையாளம் காணப்படுபவர். தான் தயிர்சாதம் சாப்பிடுவதாகவும், மாமிசம் சாப்பிடுவதில்லை என்று கூறுவதன் மூலமும், வீணை வாசிப்பது, ராகங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், 'எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்வ தற்கு; நடந்ததெல்லாம் நல்லதற்கே, நடக்கப் போவதும் நல்லதற்கே' என்ற பகவத்கீதை வசனங்களைப் பேசுவதன் மூலமும் தன்னை பார்ப்பனீய கும்பலுடன் அடையாளப் படுத்திக்கொண்டார்.

குஜராத்திலும் ஒரிசாவிலும் சிறுபான்மை முஸ்லிம் கள், கிறித்துவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கும்பல் படுகொலை நடத்திக் கொண்டிருக்கும்போது விஞ்ஞானி என்ற மேதைமையோடு அடையாளம் காணப்படும் தனது முஸ்லிம் அடை யாளத்தை ஜனாதிபதி பதவிக்காக ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கும்பலுக்கு விற்றவர்தான் அப்துல் கலாம். இதன் மூலம் இந்திய சிறுபான்மைச் சமூகத்துக்கு நெருக்கடியான நேரத்தில் துரோகம் செய்தவர். அவர் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் தன்னை விற்ற பின், அரசு அலுவலகங்களில் மேசையில், மூன்று சங்கராச்சாரியார்கள் படத்துக்கு அருகே இவரது படத்தையும் வைத்து பார்ப்பன அடையாளம் கொடுத்து கொண்டாடியது மேல்சாதிக் கூட்டம். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதாவின் அணுகுண்டு அரசியலின் மென்மையான முகமூடியாக, வக்கீலாக கலாம் இருந்ததால், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர் களும் பேருந்து, ரயில், போஜனசாலை, கக்கூஸ் போன்ற பொது இடங்களில் அவரது சாத்வீக குணங்கள் பற்றி தீவிர விளம்பரம் செய்தார்கள்.

அப்துல் கலாம் மட்டுமல்ல, இந்திய சமூகத்தின் அறிவுஜீவிகள் என்று அறியப்படுகின்றவர்களில் பெரும் பாலோரின் மூளைகளில் உயர்சாதி பார்ப்பனீய சிந்தனை களும், தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக் களும்தான் பாசிபிடித்து அப்பிக்கிடக்கின்றன என்பதை யும், விஞ்ஞானிகள் என்று அறியப்படும் பலர் உண்மை யில் விஞ்ஞானத்துக்கு சற்றும் தொடர்பில்லாத மாதச்சம்பள பழைமைவாத பத்தாம்பசலிகளே என்பதையும் நானே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்.

2ம் உலகப்போர் தீவிரநிலையை எட்டியிருந்த நேரம் அது. புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானன்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகி யோர் 1945 காலகட்டத்தில் அமெரிக்காவோ ஜெர்மனியோ அணுகுண்டு வீசக்கூடும் என்ற ஐயத்தில் அணுகுண்டுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். நீல்ஸ்போர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சி லையும் நேரில் சந்தித்து "புதிய ஆயுத"த்தை மக்கள் மத்தி யில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டிக் கொண்டார்.

2003ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டார்கள். இத்துயர சம்பவம் நடந்த ஒரு சிலநாட்களுக்குப் பிறகு அதே குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் பெரிய்ய அறிவாளியான கலா முக்கு விருது வழங்கப்பட்டது. கோத்ரா சம்பவம் பற்றியோ தொடர்ந்த கொலைகள் பற்றியோ எள்முனை அளவுகூடக் கவலை இல்லாதவராக, இவை பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் விருதை வாங்கிக்கொண்டு வந்த வர்தான் கலாம். அடுத்த ஜனாதிபதியாக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஐயர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று குதூகலத்துடன் சொன்னபோது இவருக்குள் இருந்த முதலாளித்துவவாதி யும் வெளியே வந்தான். இந்திய சட்டம் சொல்கின்ற எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு போன்ற அடிப் படை உரிமைகளை மதிக்காத, தனது தொழிலாளிகளின் உண்மையான சம்பளம் எவ்வளவு என்பதைக்கூட தைரிய மாக வெளியே சொல்லாத மோசடி நாராயணர்களின் வக்கீ லாக கலாம் அம்பலமானார். ஒரு பானை நாராயண மூர்த்தி களுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்கராஜூ என்ற ஒரு சோறுதான் பதம். கலாமுக்கு இந்த சாதம்தான் பிடிக்கின்றது.

எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதி. அப்போதெல் லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஒலிபரப்பு தென்மாவட்ட மக்களின் ரத்தத்தோடு கலந்த ஒன்று. அதிகாலை ஐந்தரை தொடங்கி காலை பத்து மணிவரையும், மீண்டும் பன்னிரண்டு தொடங்கி மாலை ஆறு வரையும் வங்கக்கடல் தாண்டி பாட்டோடு தமிழும் காற்றோடு எமது காதுகள் வழியே இதயத்தில் நிரம்பி வழிந்த காலம். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா, தண்டபாணி தேசிகர், டி.ஆர்.மஹாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், பி.லீலா, வசந்தகோகிலம், கண்ட சாலா,எம்.எல்.வசந்தகுமாரி, ஏ.எம்.ராஜா, ஜிக்கி என்ற கிருஷ்ணவேணி...என்று இவர்களின் குரலில் பள்ளி செல் லும் அந்த வயதிலேயே லயிப்பு வர இலங்கை வானொலி மட்டுமே காரணம். ஜி.ராமனாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சீ.ராமச்சந்திரா, தட்சிணாமூர்த்தி சுவாமிகள், சுதர்சனம், ஏ.எம்.ராஜா, இந்த வரிசையில் எம்.எஸ்.விஸ்வ நாதன், ராமமூர்த்தி, மஹாதேவன் ஆகியோரின் கொடி உயரப்பறந்து கொண்டிருந்த காலம். தென்றல், சாரல், மழை, அடைமழை...என்று போய்க்கொண்டிருந்த தமிழ்த் திரையின் வானிலையில் திடீர் என ஒரு மாற்றம் ஏற்பட்டு, சூறாவளி அடித்து அது பெரும் புயலாக உருமாறி "மச்சானப் பாத்தீங்களா.." என்று ஒவ்வொரு வீட்டுக்குள் ளும் நுழைந்து விசாரிக்க ஆரம்பித்தது... தமிழ்நாட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அதன்பின் இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஒன்பது முறை அந்தப் பெண் எஸ்.ஜானகியின் குரலில் மச்சானத் தேடிக் கொண்டிருந்தாள்... ஒரு பக்கம் மச்சானை இவள் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம் "சுத்தச்சம்பா பச்சநெல்லு குத்தத் தான் வேணும்.." என்று ராக்காயி, மூக்காயி போன்ற பொண்ணுக தெருவுக்குத்தெரு உலக்கை சத்தத்துடன் நெல்லுக்குத்த ஆரம்பித்தார்கள். கால் மாத்திரை, அரை மாத்திரை, மில்லிமீட்டர், சென்டிமீட்டர் ... என எந்த நேரமும் ஒரு கையில் இன்ச் டேப்புடனும், இன்னொரு கையில் வெட்டரிவாளுடனும் வலம் வந்துகொண்டிருந்த சுப்புடு போன்ற "மஹாமேதை"களால் அதுவரை வரை யறுக்கப் பட்டிருந்த வாய்ப்பாடு, சூத்ரங்கள், ஆரோகணம், அவரோகணம் போன்ற கட்டுப்பாடுகள், எல்லைகள் எதற்கும் அடங்காமல் சிறகு விரித்துப் புறப்பட்ட இந்தப் பாடல்கள் சாமானிய மக்களின் இதயத்தில் சாணம் போட்டு மெழுகி சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டன. இளையராஜா என்ற கலைஞன் இந்தப்புயலை ஏவி விட்டி ருந்தான். கோடம்பாக்கம் கதி கலங்கியது. சுப்புடுக்கள் சபாக்களில் கூட்டம் போட்டுப் பேச ஆரம்பித்தார்கள். "ஏற்கனவே கொடிகட்டி ஆண்டுண்டிருக்கிற நம்மவா கதி என்னாறது?" என்று பதட்டப்பட ஆரம்பித்தார்கள். கோடம்பாக்கத்தில் அன்னக்கிளியும் இளையராஜாவும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள். அன்று கொடி கட்டிப் பரந்த குறிப்பிட்ட ஒரு ஆண் பாடகர் இளைய ராஜாவிடம் பாட மறுத்ததும் உண்மை. அந்த இடத்தை மலேசியா வாசுதேவன் என்ற இளைஞன் பிடித்தான்.

யார் இந்த இளையராஜா? அன்றைய மதுரை மாவட்டத்தின் பண்ணைப்புரத்தில் தலித் சமூகத்தில் பிறந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த பாவலர் வரதராசனின் இளையசகோதரர். கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் வரதராசனும் அவரது சகோதரர்களான பாஸ்கர், ராசையா, அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோரும் பாடாத கிராமங்களும் நகரங்களும் தமிழ்நாட்டில் இல்லை.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மூத்த தோழரான டி.செல்வராஜ் தீக்கதிர் வண்ணக்கதிரில் (2.10.2005) கூறி யிருப்பதை அப்படியே தருகின்றேன்: "பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப்பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ஆம் ஆண்டில் கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத்தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழுநேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர். அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிப் பாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரிசபையைக் காப் பாற்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தேவிகுளம் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ்.

"அப்போது முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவரது இசைஞானமும் கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று 'மைக்' கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரை யாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில் கூட மக்கள் அந்தப்பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.... இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரத ராசன், தோழர் ஐ.மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை இணைத்து இசைக் குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்".

28 வருடங்களுக்கு முன் பாவலர் பாடல் தொகுப்புக்கு இளையராஜாவே எழுதிய முன்னுரை இது: "இப்பொழுது கூட நான் வேடிக்கையாகச் சொல்வது உண்டு. மாட்டுவண்டி போகாத ஊருக்குக்கூட எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு. இது வெறும் வார்த்தையல்ல. பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம். இன்று கூட நான் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியைப் பலமைல்கள் தலையில் தூக்கி நடந்து சென்று கிராமம் கிராமமாகப் பாடியிருக்கின்றோம்".

பாவலரின் அரவணைப்பில், அவரது அறிவொளி யில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோள்களில் நின்று உலகைப் பார்த்து வளர்ந்தவர், தமிழ் மக்களின் இசை ரசனையை நேருக்குநேர் அறிந்தவர் ராசையா என்ற இளையராஜா. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டு மெனில் தமிழ்த்திரைப்பட உலகம் ஒரு மாற்றுத்திசையில் பயணப்பட்ட நேரம். எம்.ஜி.ஆர்., "பாவம் சினிமா, விட்டு விடுவோம்" என்று ஒதுங்கி அரசியலைச் சீரழிக்க சென்று விட்ட காலம். பாரதிராஜா, பாக்கியராஜ், ஆர்.செல்வராஜ், துரை, எம்.ஏ.காஜா, பாலுமஹேந்திரா, மகேந்திரன், அசோக்குமார் போன்ற புதியவர்கள் புதிய கதைகளுடன், புதிய காமிராக் கோணங்களுடன் சினிமா எடுக்க, நல்ல காலம் பிறந்தது. சாதாரண முகங்களுடன், குறிப்பாக கறுப்பு மனிதர்களை கதாநாயகர்களாக பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டு தியேட்டர்களின் திரைச்சீலைகள், தங்கள் மேல் வருடக்கணக்கில் அப்பிக்கிடந்த ஜிகினாக்களையும் டோப்பா மயிர்களையும் உதிர்த்துவிட்டு குளித்து நிம்மதிப் பெருமூச்சு விடத்தொடங்கிய நேரம். பொதுவாக அது வரை 'இதுதான் கதை', 'இவன்தான் கதாநாயகன், நாயகி' என்று அறியப்பட்ட பெரும்பான்மை சினிமாக்களில் இருந்து இவர்களின் கதைகள் வேறுபட்டு நின்றன என்பது உண்மை. கதைகள் தங்களை ஈர்த்ததனால்தான் அன்று கொடிகட்டிப்பறந்த கமலஹாசன் கொவணத்துடன் நடித் தார்; ரஜினிகாந்த் ஆன்டிஹீரோத்தனமான பாத்திரங்களை யும் ஏற்று நடித்தார். புதிய இயக்குனர்கள், கதையாளிகளின் சிந்தனைகள், விளிம்பு நிலை மக்களின் கதைகளையும் சொன்னதால், திரையிசையின் வடிவமும் போக்கும் கூட வேறு பரிமாணங்களைக் காட்ட வேண்டியிருந்தது.

இந்த புதிய கதைசொல்லும் போக்குக்கு இளையராஜாவின் இசைவடிவம் பொருந்தி, அதுவரை என்போன்ற பயல்கள் கேட்டுக்கொண்டிருந்த இசைவடிவத்தில் இருந்து இளைய ராஜாவின் வடிவம் வித்தியாசமாக இருந்ததாக மனசுக்குப் பட்டதற்கு காரணம் புதிய கதையோடும் கதை சொல்லலோடும் இசைந்த அவரது இசைதான்.

நாட்டார் பாடல்களின் பாரம்பரிய வளமும் மக்கள் வாழ்வோடு இசைந்த தன்மையும் இசை வடிவமும் அவர் இசையின் மையமாக இருந்தன, மண்ணின் இசை. எனவே மக்கள்திரளில் பெரும்பாலாக இருக்கின்ற உழைக் கும் மக்களின் ரசனையைக் கைப்பற்ற முடிந்தது, சாமானிய மக்களின் இசையமைப்பாளர் என்ற பெயரைக் கைக் கொள்ள முடிந்தது. எங்கிருந்து கற்றீர்கள் இந்த இசையை இளையராஜா? "பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம்". 1975ல் அன்னக்கிளியில் தொடங்கிய இளைய ராஜாவின் பயணம் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ச்சினிமாவின் இசைப்பாதை இவருக்கு என்றே திறந்து கிடந்தது.

ஆனால் அவரது பயணத்தின் பாதையில் இரண்டு புறங்களிலும் இருந்த மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த பார்ப்பனீயப்பேய்கள் பல்லை இளித்து பயங்காட்டி அவரை விரட்டப் பார்த்தன என்பது வரலாறு. இன்றைக்கு அவரை ஒரு மேதை என்று பேசுகின்ற பல மேல்சாதி 'சங்கீத தெர்மாமீட்டர்'கள் அன்று அவரை ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே பார்த்தவர்கள். சுப்புடு போன்ற 'சங்கீத பாராமீட்டர்'கள் எப்படியாவது அவரை திரையுல கிலிருந்து துரத்திவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சதிகளும் சாகசங்களும் ஏராளம். ஆனால் இளையராஜாவின் பெயர் தமிழ்மக்களின் வீடுகளில் தண்ணீரைப் போல் சாதாரணமாக புழங்க ஆரம்பித்தது கண்டு, கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள், பொழைக்கிற வழியைப் பார்த்தார்கள். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே வண்டுமுருகன் (வடிவேலு) கட்சி மாறி சைக்கிளில் உட்கார்ந்து டாட்டா காமிக்கிறது மாதிரி, இவர்களும் இளையராஜாவை சடுதியில் இசைஞானி என் றும், இசைத்துறவி, இசைச்சாமியார், இசைப்பூசாரி, சக்ர வர்த்தி, மெழுகுவர்த்தி என்று தலையில் தூக்கி ஆட ஆரம் பித்தார்கள். ஒரே காரணம் - போஸ்டரில் இளையராஜா பேர் இருந்தால் படம் கண்டிப்பாக நூறு நாள் ஓடும், கல்லாப் பெட்டி நிரம்பி வழியும். இங்கேதான் சனியன் பிடித்தது.

இளையராஜா பார்ப்பனீய துதிபாடிகளின் வலை யில் விழுந்தார். சாமானிய மக்களிடமிருந்து விலக ஆரம் பித்தார். 'ஜனனி ஜனனி, அகம் நீ', 'முதலே முடிவே, மூகாம்பிகையே', 'என் பாவக்கணக்குக்கு பட்டியல் போட் டால் சொல்ல நடுங்குதம்மா' என மேல் சாதி கடவுள்களின் அருள்வேண்டி கீதவழிபாடு கேசட் போட்டார்; அவர்களை இறைஞ்சி மனம் உருகி எழுதிய பாடல்களுக்குத் தானே இசை அமைத்து கச்சேரி செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட கோடிக்கணக்கில் நிதி, மூகாம்பிகை கோவில் யாத்திரை என மேல்சாதி வேடம் போட ஆரம்பித் தார். 'ரமணமணிமாலை' பாடினார். மறந்தும்கூட சிறு தெய் வங்கள், தனது கிராமம், உழைக்கும்மக்கள் பற்றி பேசியது இல்லை. முக்கியமாக, மக்கள் பிரச்னைகளைப் பேசி உரிமைக்குரல் எழுப்புகிற,ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பேசுகின்ற தனது அண்ணன் பாவலர் வரதராசனின் பாடல் களையும், அதேபோல் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் முழங்குகின்ற பாப் டில்லான் போன்ற மக்கள் பாடகர்களின் இசையையும் "அந்தக் குப்பைகளை ஏன் கிளறுகின்றீர் கள்?" என்று எடுத்தெறிந்து இழிவாகப்பேச ஆரம்பித்தார். நாட்டார் இசை வடிவங்கள்தான் தனக்கு வழியை காண்பித் தன, மக்களின் ஆதரவைக் கொடுத்தன, கேசட்டுகளாக லட்சக்கணக்கில் விற்று தனது வயிற்றை நிறைத்தன என் பதை மறக்க ஆரம்பித்தார். "தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை சோப்பு போட்டுக் குளித்தாலும் சுத்தம் ஆகமாட்டார்கள்" என்று கொழுப்பெடுத்துப்பேசிய கோவணாண்டிகளின் படங்களை தினமும் பூஜை செய்ய ஆரம்பித்தார், ஆதிசங்கரரை கும்பிடுவதாக எழுதினார். கோடம்பாக்கத் தின் மேல்சாதி வட்டாரமும் சபாக்கச்சேரி வட்டாரமும் இப்போது அவரை ஆஹா ஓஹோ என்று கொண்டாடத் தொடங்கின. சுஜாதா போன்ற 'அறிவாளி' விஞ்ஞானிகள் இவரது புகழ் பாடினார்கள்.

தலித்துகளை ஏற்கனவே நாயினும் கீழாக வைத்தி ருக்கின்ற பார்ப்பனக்கூட்டத்தின் முகத்தில் காறி உமிழ் வதை விட்டுவிட்டு, 'திருவாசகம்' என்ற தனி ஆல்பத்தில் தன்னை 'நாயினும் கீழோன்', 'கடையோன்' (நாயிற் கடை யாய்க் கிடந்த அடியேற்கு..என்ற திருவாசகப்பாடல்) என்று இளையராஜா தன்னை அழைத்துக் கொண்டார். இவ்வாறு தன்னை நாயினும் கீழோன் என்று தாழ்த்திக்கொண்ட தால்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான (நவரத்தினங்களில் ஒன்று) எண்ணெய் இயற்கை எரிவாயுக் கமிஷன் (ளிவீறீ ணீஸீபீ ழிணீtuக்ஷீணீறீ நிணீs சிஷீனீனீவீssவீஷீஸீ) இந்த பாடல் தகட்டின் ஸ்பான்சராக இருந்தது.அதாவது மக்கள் பணத்தை சூறையாடியது! பொதுத்துறை வங்கிகளும் நிறுவனங் களும் கடந்த சில வருடங்களாக கூச்சநாச்சம் ஏதுமின்றி இந்த வேலையை தந்திரமாக செய்து வருகின்றன. இதே போல் இஸ்லாமிய, கிறித்துவ, தலித் சமூகத்தினரின் பாடல் களோடு, தந்தை பெரியார், அம்பேத்கரின் போதனைகளை யும் கேசட்டுக்களாக, குறுந்தகடுகளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் மத்தியரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்! 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, ஐயனே' என்று பிச்சைப்பாத்திரமும் ஏந்தினார். 35 வருடங் களுக்கு முன் 'ஆதி பராசக்தி' என்ற படத்தில் வந்த 'ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா, ஆழாக்கு அரிசிய பாழாக்க வேண்டாம், தின்னுப்புட்டு போடியம்மா' என்று சோறு ஆக்கி வைத்து 'ஏய், வந்து தின்னுட்டுப் போறியா இல்லியா?' என்று சாமியையே அதிகாரம் பண்ணுகிற அந்தப்பாட்டு எத்தனையோ மேல் அல்லவா!

உச்சகட்டமாக, ஞான.ராஜசேகரன் இயக்கிய 'பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்ததன் மூலம் தன்னை சனாதனக்கூட்டத்தின் விசுவாசி என்று உறுதி செய்தார். வேட்டியும் செருப்பும் அணிய முடியாமல் குறைந்தபட்ச மானமுள்ள மனிதனாகக் கூடவாழ முடி யாமல் கிடந்த தமிழக தலித் சமூகம் தலைநிமிர வழிசெய்த பெரியாருக்கு ஒரு தலித்தே துரோகம் செய்தது கண்டு பார்ப்பனக் கூட்டம் குஷியானது. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மனித மலத்தை திணித்தபோதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தலித்து கள் தலைவராவதற்கு ஆதிக்கசாதி வெறியர்கள் மறுத்து அவமதித்தபோதும், தான் பிறந்த அதே மாவட்டத்தில் உத்தப்புரம் என்ற ஊரில் சுவர் கட்டி தலித்துகளை ஆதிக்க சாதிக் கூட்டம் கேவலப்படுத்தியபோதும் இளையராஜா போன்ற தலித் சமூகத்தவர்கள் வாய் திறக்க மறுப்பது துரோகம் எனில், பார்ப்பன வேசம் போடுவது அதனினும் துரோகம்.

ஏற்கனவே தாழ்ந்த குலத்தில் பிறந்தவரென நந்தனாரை நாயை விடவும் கேவலமாக நடத்திய பார்ப் பனக்கூட்டம் தந்திரம் செய்து நந்தனை தீயில் தள்ளி 'அவன் ஜோதியில் கலந்துவிட்டான்' என்பதாக கதை திரித்தது. மேல்சாதியை மறுத்த, பிள்ளைமார் வகுப்பில் பிறந்த வள்ள லாருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அவரும் ஒரு நாள் 'ஜோதியில் கலந்தார்'. இது இன்று நேற்று கதை அல்ல, ஏகலைவன், கர்ணன், சம்பூகன், குகன், ராவணன் என்று காலங்காலமாக 'ஜோதியில்' கலந்தவர்கள் ஏராளம். ராசையாவின் கதை இப்படிப் போனது.

இளையராஜாவும் அப்துல் கலாமும் மறந்துவிட்ட அல்லது தெரியாததுபோல் நடிக்கின்ற ஒரு உண்மை உண்டு - என்னதான் திருவாசகம், மூகாம்பிகை, தயிர்ச்சாதம், பகவத் கீதை என்று வேசம் போட்டாலும், ராசைய்யாவும் கலாமும் கருவறைக்கு உள்ளே போக முடியாது. பூணூல் போட்டாலும் பார்ப்பனக்கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. தனது குலத்தில் பிறந்தாலும் பாரதியாரையே ஒதுக்கி வைக்கத் தயங்காத கூட்டம்தான் அது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் அல்லா ரக்கா ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 'லட்சாதிபதி யான சேரிநாய்' என்ற பொருள்படும் 'ஸ்லம்டாக் மில்லிய னேர்' (ஷிறீuனீபீஷீரீ விவீறீறீவீஷீஸீணீவீக்ஷீமீ) என்ற இந்திய ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததற்காகவும், அதே படத்தில் 'ஜெய் ஹோ!' (ஜெயிப்போம்) என்ற பாடலைப் பாடியதற் காகவும் அவருக்கு இரண்டு விருதுகள். அவர் விருது பெற்ற பின் தமிழில் பேசிய "எல்லாப்புகழும் இறைவனுக்கே!" என்ற சொற்றொடர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது 26.2.2009 நள்ளிரவு 2.30 மணிக்கும் மேல். ஆனால் வெளியே அவரை வரவேற்கும் கூட்டம் அலை மோதுகின் றது. சிவமணி என்ற தோல்கருவி இசைக்கலைஞர் தன்னை விடவும் பெரிதான ஒரு மேளத்தை உடலில் கட்டிக் கொண்டு அடித்து ஆடுகின்றார். பக்கத்தில் கேரள மக்களின் பாரம்பரிய செண்டைமேளக் கலைஞர்கள் வாசித்து தூள் கிளப்புகின்றார்கள். ரஹ்மான் வசிக்கின்ற கோடம்பாக்கம் சுப்புராயன் தெரு மக்கள் மதபேதங்கள் ஏதுமின்றி "அவர் இருக்கின்ற தெருவில் நாங்கள் இருப்பது எங்களுக் கெல்லாம் பெருமை" என்று பெருமை கொள்கின்றார்கள்.

சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகள், அங்கீ காரங்கள் அனைத்துக்கும் பின்னால் 'சர்வதேச வியாபார அரசியல்' இல்லை என்று யாராவது நம்பினால் அவர்கள் அப்பாவிகளே. 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவுக்குள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், குறிப்பாக அழகு சாதனப்பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்தவும் "இந்தியப் பெண்கள்தான் உலகின் மிகச் சிறந்த அழகிகள்" என்று கண்டுபிடித்து தொடர்ந்து இந்தியப் பெண்களுக்கு உலக அழகி, பிரபஞ்ச அழகி, பாதாள அழகி, ஈரேழுலோக அழகி போன்ற பட்டங்களை சர்வதேச முதலாளிகள் அள்ளி அள்ளி வழங்கியதை இப்போது நினைக்கத் தோன்றுகின்றது. பொருள்+குறைந்த பட்ச லாபம்= சில்லரை வணிகம். பொருள்+ விளம்பரம்+ இங்கிலீஸ்+பகல் கொள்ளை லாபம்=கார்ப்பொரேட் வணிகம். காங்கிரசும் பாரதீய ஜனதாவும் இரண்டாவது வகை கடைக்காரர்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சர்வதேச இசையமைப்பாள ராக ஏற்கனவே அடையாளம் பெற்றுள்ளார். இந்த நிலை யில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் பின்னணி யில் 'சர்வதேச வியாபார அரசியல்' இருப்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். 'அதெல்லாம் முடியாது, நீ உடன டியாக நிரூபிக்கணும்' என்று கேட்கின்றீர்களா? 'ஜெய் ஹோ' பாட்டை இந்திரா காங்கிரஸ் கட்சி தனது தேர்தலுக் கான பிரச்சாரப் பாடலாக இப்போது வாங்கி இருக்கின்றது. 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற பழைய சரக்கை விடவும் 'ஜெய் ஹோ' என்ற புதிய சரக்கு நல்ல லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என்பதை காங்கிரஸ் கடைக்காரர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். வாய்மை யாவது மண்ணாவது! இதில் ரஹ்மானுக்கு நேரடியாக ஏதாவது தொடர்பு உண்டு என்பதாக இதுவரை செய்தி இல்லை. 'அடடா, நழுவ விட்டுட்டோமே' என்று பாரத மாதாவின் நேரடி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா தீவிரவாதிகள் கவலைப்பட்டு அழுவதாகவும், உடனடி போர்க்கால நடவடிக்கையாக 'ஜனங்க ஏமார்ற மாதிரி அதிரடியா ஒரு பாட்டுப்போட்டுக் குடுங்க' என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு டெண்டர் விட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

உண்மையில் 'ஜெய் ஹோ!' என்ற இந்தப்பாடல், ரஹ்மான் பத்து வருடங்களுக்கு முன் தமிழில் இந்திரா என்ற படத்தில் செய்த "இனி அச்சம் என்பதில்லை" என்ற பாடலின் சாயலே. இதை விடவும் நல்ல பாடல்களை அவரே தந்தி ருக்கின்றார் என்பதும் உண்மை. தவிர, தரத்தின் அடிப்படை யில் ஒப்பிட்டால், இதுவரை தமிழில் இளையராஜா செய்த பல பாடல்களின் பக்கத்தில்கூட இந்த 'ஜெய் ஹோ' வர வில்லை. பலர் விமர்சிப்பதுபோல் ரஹ்மானின் பாடல் களில் மேற்கத்திய சாயல் அதிகம் இருப்பதும் உண்மையாக இருக்கலாம். இசையின் தகுதி குறித்தோ அதன் நீள, ஆழ, அகலங்கள் குறித்தோ இங்கு நான் பேச முற்படவில்லை, நான் இசை விற்பன்னனும் அல்லன். ஆனால் விருது பெற்ற ரஹ்மான் அதன் பின் பேசிய பேச்சு, ரஹ்மான் என்ற கலைஞனுக்குள் இருக்கின்ற இசை குறித்த அரசியலையும் அவருக்குள்ளான அரசியல் பார்வையையும் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவப்படுத்துகின்றது.

ஆர்.கே.சேகர் என்ற இசையமைப்பாளரின் மகனே திலீப். மலையாளத்தில் 60 படங்களுக்கும் மேலாக செய்த வர் சேகர். திலீப் மிகச் சிறிய வயதிலேயே இசைஞானம் பெறுகின்றார். தந்தை இறந்துவிட, குடும்பம் சிரமத்தில் ஆழ்ந்துவிட, திலீப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மாறு கின்றார். கூடவே அவரது மூன்று சகோதரிகளும் தாயாரும் இஸ்லாமைத் தழுவுகின்றனர், சூஃபி பிரிவின் மீது பற்று கொள்கின்றார். ஒருநிமிட, அரைநிமிட விளம்பரப்படங் களுக்கான இசை அமைத்து வாழ்க்கையைத் தொடங்குகின் றார். பின்னாட்களில் இளையராஜா போன்ற இசையமைப் பாளர்களிடம் இசைக்கோர்ப்பாளராக (நீஷீனீஜீஷீsமீக்ஷீ) பணி செய்கின்றார். ரஹ்மான் 'ரோஜா' படத்தின் மூலம் திரையில் நுழைந்தார். 'இஸ்லாமும் சூஃபி தத்துவ நம்பிக்கையும் எனக்கு அமைதியையும் மனஉறுதியையும் அளித்தன' என் கிறார் ரஹ்மான். இறைவனை மட்டுமே மதங்கள் பிரதா னப்படுத்தும்போது, சூஃபி பிரிவினர் மனித வாழ்க்கை யையும் மனித உறவுகளையும் மேம்படுத்தப் பேசுகின் றன. மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தத்தம் மதம் தமக்கு அமைதியும் மன உறுதியும் அளிப்பதாகக் கூறுவது வழக்கமே. அது அவர்களது உரிமையும் கூட.

ரஹ்மானின் திரைப்படப்பாடல்கள் யாரோ எழுதித் தர ஏதோ ஒரு இடத்தில் படத்தில் இடம் பெறலாம். ஆனால் ரஹ்மான் என்ற கலைஞனுக்குள் இருக்கின்ற சமூகம் குறித்தான பார்வையும், அவன் தனது கலைத் திறனை எதற்கு பயன்படுத்த விரும்புகின்றான் என்பது வுமே மிக முக்கியமானதாக நான் கருதுகின்றேன். அவரே வெளியிட்ட 'சகோதரனே, எனக்காக பிரார்த்தனை செய்' (றிக்ஷீணீஹ் யீஷீக்ஷீ னீமீ, தீக்ஷீஷீtலீமீக்ஷீ) என்ற தனிப்பாடல்களின் மையக் கருத்து இப்படி இருக்கின்றது: "உலகில் சக மனிதர்கள் பட்டினியாலும், நோயினாலும், தேசம், தேசியம், மதம் போன்றவற்றின் பெயரால் அடித்துக்கொண்டு சாகின்றார் கள். மனிதனுக்கு மனிதனே எதிரியா? பார், மனிதர்களுக் குள் அன்பு இல்லை, வெறுப்பு கூடிவிட்டது. என்ன நியாயம் இது? மனித வாழ்வை துக்கமும் வெறுமையும் சூழ்ந்து கொண்டிருக்கும்போது நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?".

ஆஸ்கர் விருது பெற்ற பின் அவர் பேசிய பேச்சி லும் இதுதான் எதிரொலிக்கிறது: "எனது வாழ்க்கை நெடுகி லும் அன்பு, வெறுப்பு என்ற இரண்டும் எப்போதும் என் முன் சேர்ந்தே வந்திருக்கின்றன. நான் எப்போதும் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். மதத்தாலும் சாதியாலும் பிரதேச அடையாளத்தாலும் மட்டுமே பிரித்து அடையாளம் காணப்படுகின்ற இந்த உலகில், அன்பு செலுத்துங்கள் என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. இசை மனிதர்களை இணைக்க வேண் டும். விருதுகளை நான் எதிர்பார்ப்பதில்லை". இங்கே தான் ரஹ்மான் என்ற கலைஞன் மகத்தான மனிதனாக நிற்கின் றான். இந்திய சமூகம் மத ரீதியாக சாதிரீதியாகப் பிளவு பட்டிருப்பதையும் இதன் பின்னணியில் உள்ள 'ஒரே மதம், ஒரே இனம், தேசியம்' என்று பேசுகின்ற ஆர்.எஸ்.எஸ். மதவெறி சக்தி களையும் பெயர் சொல்லாமல் அடையாளம் காட்டுகின் றான். தனது இசையின் அரசியல் இதுதான் என்று அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.

விமானநிலையத்தில், நள்ளிரவில் தனது உடலை விடவும் பெரிய ஒரு மேளத்தை கட்டிக்கொண்டு ஆடிய சிவமணி, வடசென்னையில் ஒரு சுடுகாட்டின் ஓரம் பிறந்த வர், தனது பிள்ளைப்பிராயத்தை சுடுகாட்டு ஆட்டத்துக்கும் மேளச்சத்தத்துக்கும் நடுவில் கழித்தவர். இந்த ஆட்டமும் இசையும்தான் அவருக்கு இசை ஞானத்தை கற்றுத்தந் தது. இன்றைக்கு சென்னையிலே மரண கானா விஜி மக்களி டையே பிரபலம் அடைந்து வருகின் றார். மரண வீடுகளில் விடிய விடிய காப்பித் தண்ணி குடித்துக் கொண்டு யாருக் காகப் பாடுகின்றார் விஜி? செத்துப் போன வன் எழுந்து கேட்கப் போகின்றானா? இல்லை. செத்துப் போனவரின் நல்ல, கெட்ட குணங்கள், மனிதஉறவுகள், ஆசாபாசங்கள் இவற்றோடு கூடவே இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, விஜியின் தோல் இசைக்கருவியான 'டேப்' வழியே வந்து விழுகின்றது.

ரஹ்மானும் சிவமணியும் விஜியும் அவர்களைப் போன்ற எண்ணற்ற கலைஞர்களும் தமது இசை வடிவில் மக்களின் அரசியலைப் பேசுகின்றார்கள். தமது மேதை மையை மக்களின் குரலை எதிரொலிக்கப் பயன்படுத்து கின்றார்கள். இசைஞானியாக வானத்தில் சஞ்சரிப்பதை விடவும் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, எம்.பி.சீனி வாசன் போன்ற மனிதநேயம் மிக்கதெருப்பாடகனாக இருப்பதே மனிதனாக இருப்பதற்கு அழகு என்பதையும் கலைஞனுக்குள் இருக்க வேண்டிய அரசியலையும் நமக்கு சொல்லாமல் சொல்கின்றார்கள்.

- சார்லி
என்னதான் நடு வீட்டில் வைத்து, பன்னீரில் குளிப்பாட்டி, சந்தனமும் சவ்வாதும் கலந்து பூசி, சீவி சிங்காரித்து வைத்திருந்தாலும் அசிங்கத்தைக் கண்டால் ஆசையாய்ப் பறக்கும் மிருகங்களைப் போல, எங்கெல்லாம் மக்கள் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் பாய்ந்தோடிச் சென்று தங்கள் கைத்தடிகளைச் சுழற்றி போராட்டக்காரர்களின் மண்டைகளை உடைத்து மண்ணில் பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை நக்கிச் சுவைத்தப் பின்தான் ஆசை அடங்குகிறது நமது காவல்துறைக்கு.

கடந்த ஜூலை 14ம் தேதி சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரியும் தமிழகத் தனியார் பள்ளிக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் கோட்டை முன் ஊர்வலம் நடத்தச் சென்ற இந்திய மாணவர் சங்கத் தலைவர்களையும் கலந்துகொண்டவர்களையும் கலைஞரின் கைத்தடிகளான காவல்துறை தடியடி நடத்தி, பெண்களென்றும் பாராமல் காலித்தனமாக, ஆடைகளை பிடித்து இழுத்து, அடித்து, மண்டைகளை உடைத்தனர். இதில் 17 மாணவர்கள் படுகாயமுற்றனர். இந்திய மாணவர் சங்க அகில இந்திய செயலாளர் ஜி.செல்வா, மாநில தலைவர் ரெஜிஸ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பலத்த காயமுற்றனர். ரத்தம் சொட்டச்சொட்ட அடித்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கூட கொண்டு செல்லாமல் ஒன்றரை மணிநேரம் காவல் வேனிலேயே வைத்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தது, காவல்துறை.

சமீப காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வாலிபர்கள், பெண்கள், முறைசாரா-அமைப்புசாரா தொழிலாளர்கள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காத நோயாளிகள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், டாஸ்மாக் ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊனமுற்றோர், தண்ணீர், சாலை, கால்வாய் கேட்ட மக்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் அல்லல்படும் பள்ளிச்சிறுவர்கள் என தமிழக அரசு இயந்திரத்தில் துவங்கி அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு அமைப்புகளும் அதித் தீவிரமாக போராடவேண்டிய அவலநிலையை தமிழகத்தில் கலைஞர் அரசு உருவாக்கியுள்ளது.

யாரும், எந்த அமைப்பினரும் திடீரென போராட்டத்தில் இறங்குவதில்லை. பேச்சுவார்த்தை நடத்தி, அடையாள இயக்கம் நடத்தி, எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது அதிகார திமிர்த்தனத்தைக் காட்டி, கோரிக்கைகளை நிராகரிக்கும் போதுதான் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

போராட்டம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கலைஞர் கருணாநிதி மிளகாயைக் கடித்தது போன்று எரிச்சலடைகிறார். டில்லிக்குச் சென்று தன் குடும்பத்திற்குத் தேவையான மத்திய மந்திரி பதவிகளை குட்டிக்கரணம் போட்டாவது வாங்கி சாதித்துக்கொள்கிற கலைஞருக்கு, மாணவர்கள் மக்களுக்கு தேவையானதைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அதை பரிசீலிக்கக்கூட மனமில்லாமல் காவல்துறையை வைத்து மாணவர்களின் தலைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார். கலைஞர் என்ற முகமூடி கிழிந்து லோக்கல் ரவுடி கவுன்சிலர் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கை ஓரிடம், கால் ஓரிடம், இடுப்பு ஓரிடம், தலை கிடைப்பதே இல்லை என தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் பட்டப்பகல் படுகொலைகள், திருட்டு, வழிபறி, கொலையோடு கூடிய கொள்ளை, வெடிகுண்டு கலாச்சாரம், போலீஸ் வேடமிட்டு திருடுதல், போன்ற நவீன திருட்டுவகைகளிலும் கொலைகளிலும் காட்ட வேண்டிய வீரத்தை கல்விக்காக நிராயுதபாணிகளாக போராடும் மாணவ மாணவியர்களிடத்தில் காட்டிக்கொண்டிருக்க காவல்துறைக்கு வெட்கமாக இல்லையா என்று தெரியவில்லை?

கடந்த 2006ஆம் ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி விடுவோம் என்று வெற்று வாய்ச்சவடால் விட்ட தமிழக அரசு 2009ம் ஆண்டில் பாதிக்கும் மேல் கடந்தும் அமல்படுத்த வக்கற்று கிடக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை காலம் கடத்த கமிஷன் மேல் கமிஷனாக போட்டு வருகிறது.

இப்படிப்பட்ட கமிஷன்களுக்கு உதாரணம் தான் அயோத்தியில் இந்து மதவெறியார்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி கலவரத்தை ஆராய அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகாலம் கழித்து, 8 கோடி செலவு செய்து அறிக்கை அளித்துள்ளது என்பதை மனதில் பதிய வைக்கவேண்டும். இன்னும் இதுபோன்ற எத்தனையோ கமிஷன்கள் ஆட்சியாளர்களின் ஆசியுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்தினால் கல்வியை விற்றுக் காசாக்கும் கொள்ளைக்கும்பலுக்குத்தான் பாதிப்பு. அவர்கள் பாதிக்கப்படுவதில் கலைஞருக்கு என்ன கரிசனை வேண்டியுள்ளது.

எந்த ஒரு திட்டம், தனியார் முதலாளிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற பினாமிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ அத்திட்டத்தின் மீது ஒரு கமிஷனைப் போட்டு அந்தக் கமிஷனின் தலையில் தீயை வைத்து அதை சாம்பலாக்கி, காலம் தாழ்த்தி அதை முடக்குவது கலைஞர் அரசு உட்பட ஆட்சியாளர்களின் வாடிக்கை.

பள்ளிகள் அனைத்தும் துவக்கப்பட்டு, அனுமதியெல்லாம் முடிந்து, பாடங்கள் ஆரம்பித்த நிலையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி முதலாளிகளுக்கு 7 ஆண்டு சிறை என்ற அற்ப சட்டத்தைப் போட்டு கல்வி முதலாளிகளைக் காப்பாற்றிய பெருமை கலைஞருக்குத் தான். தன்னுடைய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனத்தின் அவல நிலை ஆங்கில தொலைக்காட்சி முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் சந்தி சிரித்த போது அமைதி காத்து அருள்புரிந்தார்.

அனுமதியின்றி கோட்டை நோக்கி யாராவது போராட்டமோ ஊர்வலமோ நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார். திடீரென சகல வசதிகளுடனும் மெரினா கடற்கரையில் கலைஞர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு யாரிடம், எங்கே பெற்றார் அனுமதி? ஆங்கிலேய ஆட்சி முதலும், அதற்கு முன்பும் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்து திமிர்ந்தெழுந்ததுதான் மக்கள் போராட்டம். அவர்கள் தங்கள் தேவைக்கான போராட்டத்தை கோட்டைச் சுவரல்ல, டில்லி செங்கோட்டைச் சுவராக இருந்தாலும் உடைத்துக் கொண்டு போராடுவார்கள். எனவே, எப்படியாவது நாய்வாலை நிமிர்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நிமிர்த்த முடியவில்லயென்றால் நாய்வாலை நறுக்கவும் மக்களுக்கு தெரியும் என்பதை கலைஞரும் காவல்துறையும் புரிந்துகொண்டாலும் சரி அல்லது அனுபவித்து தெரிந்துகொண்டாலும் சரி!

- இரா.சரவணன்(dreucitu@dataone.in

கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?

கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு... ரணகளமா திரும்பி வருவாரு.

பான் கி மூன் ஒரு கைப்புள்ள. அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே... அதுதான்).

பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.

ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?

மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்). அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.

சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்... போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும். கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார்.

ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்... நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.

இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:

அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம். சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.

‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?

யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை. புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?

தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான். தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.

ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.

‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?

அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.

‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே...?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது. கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.

புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.

‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?

வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.

‘மனோகரா’ கதை இது.

‘ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை. அப்பன் புருசோத்தமன் என்ன... மகன் மனோகரனே மாட்டிக் கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது. விடுவாரா புருசோத்தமன்! ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு. புகுந்து விளையாடிவிட்டார்.

‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.

தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா

யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே...

எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.

தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு. பெரிய தில்லாலங்கிடி! அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது. அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம். ‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள். சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை. தேவை ஒரேயொரு கணினி. ‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’... அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும். ‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.

இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன... அடையாறு பார்க் என்ன... என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.

புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.

உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?

இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்கார ன்.
ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.
இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.
இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.
காலம் கடந்த போதனை. சரி, அது போய் தொலையட்டும்; பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில் “இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?
பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!
ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே. அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!
என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!
சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ... ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.

அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே.... ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?

அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு! துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.

பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே... ஏன்?

போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?

போராளிகள் கிடக்கிறார்கள்... இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே! ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.

ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை. சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது... போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது. போராளிகளுக்கு சரிப்படாது.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?

பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது. அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.

எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.

புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது: ‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’.

-தீசுமாசு டி சில்வா