பெரியார் நாகம்மை அறக் கட்டளையின் தலைவர் வே. ஆனை முத்து, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ இரண்டாம் பதிப்பை 20 தொகுதிகளாக, 9000 பக்க அளவில் வெளியிடவிருக்கும் செய்தியை ‘முர சொலி’ உள்ளிட்ட நாளிதழ்களிலும், சிற்றிதழ்களிலும், மக்கள் தொலைக் காட்சியிலும் விளம்பரமாக வெளி யிட்டுள்ளதன் வழியாக அறிந்து, நாம் மகிழ்ச்சி அடைகிறோம். பெரியாரிய சிந்தனைகள் முழுமையாக மக்களிடையே சென்றடைய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சிந்தனைகளை தோழர் வே. ஆனை முத்து பெரியாரின் ஒப்புதலுடன் வெளியிட்டார். அந்த ஆவணம் மட்டுமே இதுவரை பெரியார் சிந்தனைகளின் ஒரே தொகுப்பாக இருந்து வந்தது. இப்போது வெளி யிடப்பட இருக்கும் தொகுப்புகளின் மொத்த விலை ரூ.5800 என்றும், முன்பதிவாக, ஒரே தவணையில் செலுத்தினால் ரூ.3500 என்றும், இரண்டு தவணைகளில் செலுத்தினால் ரூ.3800 என்றும் டிசம்பர் இறுதிக்குள், “பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக் கட்டளை” என்ற பெயரில் பண விடை / காசோலை எடுத்து, 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றும், தோழர் வே. ஆனைமுத்து, தமது அறக்கட்டளை சாhபில் இதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. பெரியாரியலைப் பரப்பும் முயற்சிக்கு, ஆதரவினை வழங்குவது, பெரியாரி யல்வாதிகளின் கடமையாகும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)

PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862

மின்னஞ்சல் முகவரி:
sinthaniyalan@yahoo.in
periyar_era@yahoo.in

நூல் வெளியீடு:
அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் வரும் மார்ச் 23ம் தேதி கலைஞர் அவர்கள் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டு சிறப்பிக்கிறார்

0 comments: