tag:blogger.com,1999:blog-286162412024-03-14T13:11:18.296+04:00கதம்பம்"மாற்றான் தோட்டத்து மல்லிகை"Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger181125tag:blogger.com,1999:blog-28616241.post-18975612695254210282014-07-19T22:04:00.002+04:002014-07-19T22:04:19.993+04:00பதவிக்காக...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சுஜாதாவின் பதவிக்காக நவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இதைஎத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..<br />
<br />
தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.<br />
<br />
நாவலில் எங்குமே தன்ராஜ் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,<br />
<br />
திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களில் இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.<br />
<br />
காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது.<br />
<br />
பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக கூடவே வருகிறது.<br />
<br />
ஒரு மாநில அரசை மத்திய அரசு என்னவெல்லாம் செய்யலாம் ஒரு முதல்வர் , மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அதன் உச்சம் வரை சென்று பார்க்கிறது நாவல்.<br />
<br />
இதேல்லாவற்றையும் விட ஜமுனாவின் கணவனாக வரும் கோவிந்தராவ்..... எமகாதகன். சாருவின் வார்த்தைகளில் சொன்னால் பெட்டிஷ் பெட்டிஷ்.<br />
<br />
ஜமுனாவும் பிறந்து இருபதே நிமிடத்தில் இறந்த குழந்தையும் பொட்டில் அறைய தன்ராஜ் விரக்தியின் உச்சியில் முதல்வர் பதவி வேண்டாம் என்க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத அரங்கராரும், ஆட்சிக்கு வந்த ஆறுமுகமும் அதையும் காப்பாற்ற முடியாத நிலையில் தேர்தலுக்குள் தள்ளி விடுகிறார் கவர்னர்.<br />
<br />
இதை அப்போது நாவலாக இல்லாமல் தொடராக படித்தவர்களுக்கு வாரா வாரம் கண்டிப்பாக காத்திருப்பது ஒரு தண்டனை போல் இருந்திருக்கலாம்.<br />
<br />
ஒரு அரசியல் சினிமா ஆவதற்க்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கும் நாவலை இதுவரை யாரும் சினிமாவாக்காமல் இருப்பதற்க்காக பல கோடி நன்றிகள்</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-45256814426684855002014-07-17T18:09:00.001+04:002014-07-17T18:10:28.560+04:00நாங்களும் எப்பத்தான் ஓபிஎஸ் ஐ முதல்வரா பாக்குறது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPjZ6E725-cofiJxD7tXL-I5wOY5xkMteOBIRKupBgzoJzl1RY1JQXn9AA04n_NYb8_lsdFk6GU8eLlbh6j7OLFQpzekl5OH0NUTAW82dMsand4jo187werW7H0asL0xLGwtf4_Q/s1600/jayalalitha9_100412090854.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPjZ6E725-cofiJxD7tXL-I5wOY5xkMteOBIRKupBgzoJzl1RY1JQXn9AA04n_NYb8_lsdFk6GU8eLlbh6j7OLFQpzekl5OH0NUTAW82dMsand4jo187werW7H0asL0xLGwtf4_Q/s1600/jayalalitha9_100412090854.jpg" /></a>'விவசாயம் செய்தார் ஜெயலலிதா!''<br />
''நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.<br />
ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பஷிராபாத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த திராட்சை, கத்திரி, வாழை, தேங்காய், மாம்பழம், சீத்தாபழம், பப்பாளி பழங<span class="text_exposed_show" style="display: inline;">்கள் விவசாயம் செய்ததில் 1992-93-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் 9,50,000 ரூபாய். 1993-94-ல் கிடைத்த வருமானம் 10,50,000 ரூபாய். 1994-95- ல் கிடைத்த வருமானம் 11,00,000 ரூபாய். 1995-96-ல் கிடைத்த வருமானம் 10,00,000 ரூபாய். 1996-97-ல் கிடைத்த வருமானம் 11,50,000 ரூபாய். ஆக வழக்கு நடைபெறும் ஐந்து ஆண்டுகளில் விவசாய நிலத்தில் கிடைத்த மொத்த வருமானம் 52,50,000 ரூபாய். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 வருடங்களில் இந்த நிலங்களில் கிடைத்த வருமானமாக 5,78,340 ரூபாயாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர்'' என்று வாதிட்டார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார்.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">
<div style="margin-bottom: 6px;">
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?source=feed_text&story_id=925205704172260" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><span class="_58cl" style="color: #6d84b4;">#</span><span class="_58cm">அம்மையார்</span></a> இந்த காலங்களில் எந்த வருமானமும் இல்லாமல் இருந்ததால் வருமானவரி கட்டாத வழக்கு ஒன்றும் இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தம்மா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் , குற்றவியல் சட்டத்தையும் மாத்தாம விடாது போல. யோவ் எதாச்சும் ஒன்னுல தூக்கி உள்ள போடுங்கய்யா </div>
நாங்களும் எப்பத்தான் ஓபிஎஸ் ஐ முதல்வரா பாக்குறது?</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28616241.post-47736803580675953902011-06-09T08:40:00.002+04:002011-06-09T08:43:29.453+04:00பெரியார்''பெரியாரிடம் இருந்து இன்றைய தமிழக அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?''<br /><br /> ''நிறைய இருக்கிறது. 'குழந்தைகளும் குடும் பமும் இருப்பதாலேயே ஒருவன் ஒழுக்கக் கேடு உள்ளவன் ஆகவும் அயோக்கியன் ஆகவும் மாற நேரிடுகிறது’ என்றார் பெரியார். பெரியார் தன் காதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது 'குடிஅரசு’ இதழில் எழுதியது இலக்கியத்தரம் வாய்ந்தது. 'பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தி யாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக் கிறேனோ, அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நடந்து கொண்டேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங் களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்க மாகவும் குறிப்பிட்டு இருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்துகொண்டு இருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டு இருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்’ என்று தன்னைத்தானே சுய விமர்சனம் செய்தவர். அது மட்டும் இல்லாமல், நாகம்மாள் மறைவால் 'தனக்குப் பொதுவாழ்வில் இருந்த ஒரே தடையும் நீங்கியது’ என்றும் ஆன்ம தைரியத்துடன் தெரிவித்து, 'நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக!’ என்று அந்தக் குறிப்பை முடிக்கிறார். இன்றைக்குப் பொது வாழ்வில் இருப்பவர்களில் எத்தனை பேரிடம் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியும்!''<br /><br />- ஆ.சாக்ரடீஸ், சென்னை-18. <br />நன்றி: ஆனந்த விகடன்<br />பெரியார்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-22119774548203348642011-05-31T11:05:00.002+04:002011-05-31T15:37:03.642+04:00ஆல் கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWr4pHBW2y5pAFvI5D8BbV6AwVRkUN_Q_WwOQxlIbNGeMUibvFWMyz6E9MjoovtLnwWX9uf42PgLPMdaES4QzhWkipMlf-sUVY5CUOmxXVcXI29kJotueF1jmuom7x_SM4fEzY3A/s1600/pun.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWr4pHBW2y5pAFvI5D8BbV6AwVRkUN_Q_WwOQxlIbNGeMUibvFWMyz6E9MjoovtLnwWX9uf42PgLPMdaES4QzhWkipMlf-sUVY5CUOmxXVcXI29kJotueF1jmuom7x_SM4fEzY3A/s400/pun.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612777375265624242" /></a><br />கக்காநாட்டின் இந்த ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே பதவி விலகிவிட்டார். இது எதிர் பார்க்கப்பட்டதுதான். அண்டையிலிருக்கும் உச்சாநாட்டிலும் கலீஜ்பாளையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் முழுமையாக தங்கள் பதவிக்காலத்தில் நீடிக்கிறார்கள். இங்கு அப்படியா... கடந்த பத்துவருடங்களில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவியேற்கிறவர் ஜனாதிபதியாகி விட்டதன் அடையாளமாக தனது மாளிகையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பியதும் அவர் ராஜினாமா செய்துவிடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பக்கத்துநாடான இந்தியாவில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் நடந்ததைப்போல கக்காநாட்டு ஜனாதி பதியை யாரும் வற்புறுத்தியோ மிரட்டியோ பதவி விலகச் சொல்வதில்லை. இவர்கள் தாங்களாகவே முன்வந்து விலகிவிடுகின்றனர்.<br /><br />கடந்த பத்தாண்டுகளாக இங்கு தொடர்ந்து ஜனாதிபதியே இல்லாததால், இந்நாட்டிற்கு வருகிற வெளிநாட்டு அதிபர்களுக்கும் அரசர்களுக்கும் அவர்களோடு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வருகிற குட்டைக்கவுன் மொழி பெயர்ப்பாளினிகளுக்கும் வரவேற்பளித்து தேநீர் விருந்து கொடுக்கிற மிக முக்கியமான பணி முடங்கிவிட்டது. எனவே ஜனாதிபதி மாளிகையில் வாங்கி அம்பாரமாய் குமிக்கப்பட்டிருந்த டீத்தூள் பயனின்றி மக்கிக் கொண்டிருந்தது.<br /><br />பழக்கதோஷத்தில் பால்காரன் தினமும் போட்டுவிட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் கேட்பாரற்று வாசலில் கிடந்தன. பால் திரிந்து எழும் துர்நாற்றம் அப்பகுதியை எல்லைதாண்டிய/தாண்டாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதாயிருந்தது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் முக்யஸ்தர்கள், தம்மை வரவேற்று உபசரிக்க யாருமில்லையே என்ற துக்கத்தோடு அவர்களாகவே ரோட்டோர கடைகளில் வண்டியை நிறுத்தி டீ குடித்து விட்டுப் போகவேண்டியிருந்தது. தங்களுக்கிணையான அந்தஸ்தில் யாருமேயில்லாத ஒரு நாட்டிற்கு செல்லும்போது இத்தகைய அவமானங்களை சந்திக்க நேர்வது குறித்து உளைச்ச லடைந்த அவர்கள் கக்காநாட்டுடனான ராஜீய உறவுகளை துண்டித்துக் கொண்டனர். அங்கெல்லாமிருந்த கக்காநாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டன.<br /><br />இதற்குமுன் பதவி விலகியவர்களைப் போலவே இந்த ஜனாதிபதியும், எதற்கும் உதவாத வெறும் அலங்காரப் பதவியில் நீடித்திருப்பதைவிட ஒரு தூய்மைப் பணியாளராகி மக்களின் செப்டிங் டேங்க் சுத்தம் செய்வது, கக்கூஸ் கழுவுவது, தெருக்கூட்டுவது போன்ற வேலை களில் ஈடுபட வேண்டுமென்பதே தன் வாழ்நாள் லட்சிய மென்றும் ஆகவே தான் பதவி விலகுவதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தான் நினைத்ததை துணிந்து பேசிட ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதினம் வரைக்கும் காத்திருக்க வேண்டிய இந்த அடிமைப் பிழைப்பை சுதந்திர வேட்கையும் மானவுணர்வுமுள்ள எந்தவொரு பிரஜையும் ஏற்கமாட்டான் என்பதை உலக றியவே அவர் இம்முடிவை எடுத்திருப்பதாய் அறிக்கை மேலும் தெரிவித்தது.<br /><br />''ஆட்டுக்கு தாடியும் பூட்டுக்கு சாவியும் தேவையில்லாததைப் போலவே நாட்டுக்கு ஜனாதிபதியும் தேவையில்லை என்று எங்கள் தலைவர் அன்றே சொன்னார்'' என்று சுவரொட்டி மூலமாக ஒரு கட்சி இந்த ராஜினாமாவை வரவேற்றிருந்தது.<br /><br />வீதிகளையும் கழிவறைகளையும் துப்புரவாய் சுத்தப் படுத்தி சுகாதாரத்தைப் பாதுகாத்து மக்கள் ஆரோக்கிய மாய் வாழ சேவையாற்றும் தூய்மைப் பணியாளரைவிட, நாடுநாடாய் சுற்றிக்கொண்டும்- எதுவும் புரியாத பள்ளிச் சிறார்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்போல் கண்டதையும் பேசிக்கொண்டும் இறக்குமதித் துணியாலான தேசியக்கொடியை ஏற்றிட கோடிக்கணக்கில் செலவழித்தும் திரிகிற இந்தப் பதவி நாட்டுக்கு முக்கியமல்ல என்று ஒரு ஜனாதிபதி உணர்ச்சிவயப்பட்டு பேசியதில் ஆரம்பித்ததுதான் இந்த வினை.<br /><br />அப்படியானால் உபயோகமற்ற ஜனாதிபதிக்கு வழங்குவதைவிட நாட்டுக்கு மிகவும் அவசியமான தூய்மைப்பணியாளருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வழங்கத் தயாரா என்ற கேள்வி எழப் போய் கடைசியில் மலம் அள்ளும் தொழிலைச் செய்கிறவர்களுக்கு ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒரு ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டியதாகிவிட்டது. அது வெறும் சம்பளத்துடன் முடியவில்லை. ஜனாதிபதி மாளிகையில் 300அறைகள் உள்ளதெனில் 301 அறைகளைக் கொண்ட தாய் இருந்தது தூய்மைப் பணியாளர் குடியிருப்பு.<br /><br />அதற்கு வாடகை, மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் எதுவும் கிடையாது. நகரின் வெளியே மாசற்ற காற்றும் குளிர்ந்த நன்னீரும் கிடைக்கும் நிலப்பரப்பில் அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து எப்போதும் பறவை களின் வினோத ஒலிகளில் கிறக்கமுற்று இருப்பதாய் அமைந்திருந்தன அந்த குடியிருப்புகள். குடியிருப்பில் இம்மென்றால் ஏனென்று கேட்கவும் நிறைவேற்றவும் திரும்பிய பக்கமெல்லாம் உதவியாட்கள்.<br /><br />அதிகாலையில் இருசொட்டு ஒடிகோலன் விடப்பட்ட இதமான வெந்நீரில் கமகம வென குளித்து காக்கிச்சட்டை, காக்கி அரைக்கால் டிரவுசர் (பெண்களுக்கு காக்கி புடவை, ரவிக்கை) உடுத்தி கனகம்பீரமாக தூய்மைப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அவரவர் வாசலில் சைரனும், சிவப்பு சுழல்விளக்கும் பொருத்திய கார் தயராய் நிற்கும். அவர்களது கார்களுக்கு பதிவெண்கள் கிடையாது. விஐபி அந்தஸ்தைக் குறிக்கும் 3 அல்லது 5 நட்சத்திரங்களும் அரசு இலச்சினையும் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். முகப்பில் தேசியக்கொடி. டிக்கியைத் திறந்து பணியிட உபகரணங்களாகிய துடைப்பம், தொரட்டி, ஏந்துகரண்டி, பினாயில் பாட்டில், குளோரின் பவுடர் பாக்கெட், கையுறைகள், மாஸ்க் ஆகியவை உள்ளனவா என ஒருமுறை சோதிக்கப்படும். பின் வண்டி கிளம்ப வேண்டியதுதான்.<br /><br />நகரின் பிரதான சதுக்கம்வரை அணிவகுத்துச் செல்லும் அவ்வண்டிகள் அங்கிருந்து பல்வேறு பாகங்களுக்கும் பிரிந்து செல்லும் அழகே தனிதான். வழிநெடுக குழந்தை களும் பள்ளிச்சிறாரும் பூங்கொத்துகளை ஆட்டி தெரிவிக்கும் காலை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு சாலை யோரப் பூங்காக்களின் நிழலில் வண்டிகள் காத்திருக்கும். எட்டு மணியளவில் பிரபல உணவுவிடுதி ஏதாவதொன்றிலிருந்து மெய்க்காப்பாளரால் பரிசோதித்து வாங்கி வரப்படும் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொள்ள அரை மணிப்பொழுது ஓய்வு. ஓய்வின்போது புகைக்க கியூப சுருட்டு வழங்கப்படும். (பிடல் காஸ்ட்ரோவை கொல்ல சுருட்டில் மெதுநஞ்சு கலந்த சிஐஏ சதி அம்பலமான பிறகு தடயவியல் நிபுணர்களால் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே சுருட்டு வழங்கப்படுகிறது) இந்த சிற்றுண்டிக்கும் பணிநேரத்திலான மதிய உணவு, தேநீர், லாகிரி வஸ்துக்கள் போன்றவற்றுக்குமான அலவன்சுகள் ஊதியத்தை விடவும் கூடுதலாக இருந்தன. மிலிட்டரி சரக்கைப் போலவே ஸ்கேவன்ஜர் சரக்கு (கேஎம்எப்எல்) என்பதும் சமீபத்தில் புகழடைந்த ஒன்று.<br /><br />ஊராரின் அசுத்தங்களை சுத்தப்படுத்தும்போது ஏற்படும் துர்நாற்றம், அசூயை, அருவருப்பு, மனசஞ்சலத்தை உணராதிருக்க குடித்த மறுநொடியிலேயே போதையின் உச்சத்தை அடைய வைக்கிற அளவுக்கு அந்த சரக்குகள் வீர்யமுள்ளவையாய் இருந்தன. இவற்றை தூய்மைப் பணியாளருக்கு வழங்குவதற்கென்றே வட்டத் தலை நகரங்களில் தனியாக கேன்டீன்களும்கூட உருவாக்கப் பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்குமே குழந்தைகளுக்கும் இங்கு தனித்தனியாக கோட்டா உண்டு.<br /><br />இருவருமே தூய்மைப் பணியாளராகவே இருக்க வேண்டியுள்ளதால் இந்த ஏற்பாடு. இவ்வகையான மது வகைகளை உலகின் பிறநாடுகளில் உயரதிகாரிகள், ராஜ வம்சத்தார் மட்டுமே உபயோகிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கக்காநாட்டு தூய்மைப் பணியாளர்கள் அவற்றை சர்வசாதாரணமாக குடித்து வந்தனர். அரிதாக குடிப்பழக்கம் இல்லாத ஒருசில பணியாளர்களின் டோக்கனைப் பயன்படுத்தி நாட்டின் உயர்குடியினர் சிலர் கள்ளத்தனமாக கோட்டாவை வாங்கிக் கொள்வது முண்டு. கண்டவர்களின் அசுத்தத்திலும் புழங்கி அலுப் பும் அயர்ச்சியும் கண்டுவிடுகிற தூய்மைப்பணியாளர்கள் மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கொள்ளும் வகையில் அவர்கள் குடும்பத்தோடு வருடத்தில் இரண்டுமுறை உலகத்தின் எப்பகுதிக்கும் சென்று உல்லாசமாய் சுற்றி ஓய்வெடுத்துத் திரும்ப இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிற ஏற்பாடும் நடப்பிலிருக்கிறது.<br /><br />இதில்லாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதல் அல்லது பணியிடத்தில் வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமானால் நாட்டின் தலைமையகத்திலுள்ள ஏகேஐஎம்எஸ் (ஆல் கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆ•ப் மெடிக்கல் சயின்சஸ்) மருத்துவ மனைக்கு உடனடியாக தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஒருவேளை உயிரிழப்பு நேர்ந்துவிடுமெனில் அப்பணியாளரின் குடி யிருப்பும் அவர் உபயோகித்த காரும் அவரது குடும்பத்தா ருக்கே சொந்தமாக்கப்படுவதோடு இழப்பீடாக பெருந் தொகையும் மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. வாரீசுதாரருக்கு வேலையும் உண்டு. டேங்கில் இறங்கி மீண்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின விழாவில் வீரதீர செயலுக்குரிய நாட்டின் மிகவுயரிய விருதும் பணமுடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.<br /><br />நட்சத்திர உணவுவிடுதியையோ நகைக்கடையையோ திறந்துவைக்கவும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்குமாறும் சுகாதார அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைக்குமாறும் புதுப்பட ப்ரிவியூ காட்சிக்கு வரவேண்டு மென்றும் தூய்மைப் பணியாளர்களை தொல்லைப் படுத்தும் போக்கு கக்காதேசத்தில் அதிகரித்து வந்தது. பேட்டிக்கான டி.வி.களின் தொல்லையும் கூடிவிட்டது. கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினரிடயே காக்கிசட்டையும் காக்கி டிரவுசரும் பிரபலமடைந்து வந்தன. வைபவங்களிலும் கொண்டாட்டத்திற்குரிய தருணங்களிலும் ஸ்கேவஞ்சர்/ஸ்வீப்பரைப் போல உடுத்திக்கொள்வதை மிகுந்த பெருமைக்குரியதாய் கருதும் போக்கு அவர்களிடையே பரவிவந்தது.<br /><br />தூய்மைப் பணியாளருக்கு கிடைக்கிற வருமானமும் சலுகைகளும் ஊரையே சுத்தம் செய்கிறவர் என்ற மரியாதையும் இத்தொழிலுக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆசையை யாவருள்ளும் கிளறிவிட்டது. நாட்டின் மாவட்ட, மாநில, தலைமை நீதியமைப்பு களாயிருந்த எச்ச, சொச்ச, மிச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு தூய்மைப் பணியாளருக்கு இணையான சம்பளம் சலுகை வழங்குமாறு அரசிடம் போர்க் கொடி உயர்த்தினர். ஐ.டி படித்து முடித்ததும் டாலர் பிச்சையெடுக்க பறந்தோடி வருவோரது எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது கண்டு பதற்றமடைந்த யு.எஸ். புதிய குடியுரிமைச் சலுகைகளை அறிவித்தது. எப்போதும் திருவிழாக் கூட்டம்போல் நிரம்பி வழியும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் வெறிச்சோடத் தொடங்கின.<br /><br />பாஸ்போர்ட்டை வாயில் கவ்விக்கொண்டு பிறந்த வர்கள் இப்போது ஏன் ஸ்டேட்சுக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் இப்படி தூய்மைப் பணியாளர் வேலைக்குப் பறக்கிறீர்கள் என்று கேட்டால் ‘வெளியூர் லாபமும் சரி உள்ளூர் நஷ்டமும் சரி’ என்று இளைஞர்கள் தங்கள் முடிவை நியாயப்படுத்தினர். பன்னாட்டு நிறுவனங் களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட சிஇஓக்களை விடவும் அந்நிறுவனங்களின் ஸ்கேவஞ்சருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வாய்த்ததும் இக்காலத்தில் தான்.எனவே அவர்கள் மாதக்கடைசியில் கேளிக்கை விடுதி செலவுகளுக்கு ஸ்கேவஞ்சர்களிடம் கைமாற்று வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.<br /><br />ஸ்கேவஞ் சர்களை பசப்பி ஏமாற்றி சிஇஓவாக சிக்கவைத்துவிட்டு அவர்களது துடைப்பத்தையும் மலக்கரண்டியையும் கைப்பற்றும் ரகசியமோசடியில் ஈடுபட்டனர். டாக்டர் வக்கீல் கலெக்டர்கூட இத்தகைய ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாய் தகவலுண்டு. இதைவிட பெரிய கூத்து என்னவென்றால், ஜனாதிபதிகள் ராஜினாமா கொடுத்து விட்டு எஸ்எஸ்சி தேர்வெழுதி தூய்மைப் பணியாளராக ஆசைப்பட்டதுதான். (வீடுவீடாக கெஞ்சியும் ஜனாதி பதியாவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. மிஞ்சி வந்தா லும் நாமினேஷன் தாக்கலிடும் நேரத்தில் ஒன்னுக்கு வருவதாய் ஒருவிரலைக் காட்டிவிட்டு ஓடி தலைமறை வாகிவிடுகிறார்கள். கடைசியில் பக்கத்து நாடுகளி லிருந்து ஆள்பிடித்து ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு).<br /><br />'ஆசையிருக்கு மலமள்ள அம்சமிருக்கு கலெக்டராக' என்பதுபோல எல்லோருக்கும் ஆசையிருந்தாலும் ஒரு தூய்மைப் பணியாளராய் சேர்வது அப்படியொன்றும் எளியக் காரியமாயிருக்கவில்லை. அதற்கான எஸ்எஸ்சி (ஸ்கேவஞ்சர்/ ஸ்வீப்பர் செலக்ஷன் கமிஷன்) தேர்வில் வெற்றி பெற்றாகவேண்டும். அதைக்கூட மனப்பாடம் செய்து ஒருவர் எழுதிவிட முடியும். ஆனால் செய்முறைத் தேர்வு? மகா கடினம். அதில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்தே ஒருவரின் வேலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த செய்முறைத் தேர்வு முடிந்தபின் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப் படுவதாயும், பிரதமர் உள்ளிட்ட எவரின் சிபாரிசும் அங்கு செல்லுபடியாகாதென்றும் கருத்துள்ளது. தகுதியும் திறமையுமுள்ள விண்ணப்பதாரரை பகிரங்கப் போட்டியின் மூலமே தேர்வு செய்யவேண்டும், அல்லாவிடில் பணியின் தரம் குறைந்துவிடும் என்பதால் இத்தனை கெடுபிடிகள் நிறைந்ததாய் இருந்தது தேர்வுமுறை.<br /><br />இத்தேர்வுக்கு தயார்படுத்திட நாடெங்கும் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. செழித்த அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த, ஓய்வு பெற்ற தூய்மைப் பணி யாளர்களால் இம்மையங்கள் நிர்வகிக்கப்பட்டன. லட்ச லட்சமாய் காசுபணம் கொட்டி இடம் பிடித்து சேர்ந்து விடினும் பாடத்திட்டம் மிகக்கடுமையாகவே இருந்தது. எல்லாமே செய்முறைப் பயிற்சிதான். முதற்பாடம் தொடங்கும் முன் கேன்டீனிலிருந்து சலுகைவிலையில் பெறப்பட்ட மதுவகைகளை மூக்குமுட்ட குடித்தாக வேண்டும்.<br /><br />அரைமயக்க நிலைக்காட்பட்டு மலத்தையும் சந்தனத்தையும் ஒன்றென பாவிக்கும் மனோநிலையை எய்துவதற்கே இந்த ஏற்பாடு. இருமருங்கும் பலவண் ணங்களிலும் தினுசுகளிலும் மலம் நிறைந்துள்ள தெரு வோரத்தில் அமர்ந்து மாணாக்கர்கள் தங்கள் காலை ஆகாரத்தை உண்ணவேண்டும் என்பதே முதல்பாடம். துளியும் முகச்சுளிப்பின்றி குமட்டி குடல்புரட்டி வாந்தி யெடுக்காமல் உண்போர் மட்டுமே அடுத்த பாடத்திற்கு செல்லமுடியும். இச்சோதனையில் தேறியோர் தெருவில் குமிந்துள்ள மலக்குவியல்கள்மீது சாம்பல் தூவி ஏந்து கரண்டியால் துப்புரவாக சுரண்டியள்ள வேண்டும்.<br /><br />பின் தெருவை சுத்தமாகக் கூட்டி பவுடர் தெளிக்கவேண்டும். இவ்வேலைகளை செய்யும்போது டுர்டுர்ரென உலும்பிக் கொண்டு வரக்கூடிய பன்றிகளை செல்லமாக விரட்டத் தெரிந்திருக்கிறதா என்பதும் பயிற்றுநர்களால் கவனிக்கப் படும். பன்றிகள் விட்டை போடுமானால் அவற்றையும் முகங்கோணாமல் அள்ளியாக வேண்டும். தெருவிலிருந்து கிளம்பும் முன் சமுதாயக் கழிப்பிடம்/ கட்டணக் கழிப்பறை இருக்குமானால் அதை சுத்தப்படுத்துவதும் மாணாக்கர்களின் பாடத்திட்டத்திற்குள் வருவதுதான். இதற்குள் நடுப்பகலாகிவிடுமாதலால் அந்த கழிப்பறைத் தண்ணீரிலேயே கைகால் முகம் அலம்பி வாய் கொப்ப ளித்து அங்கேயே மதியஉணவை முடித்துக் கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு, காலியாக இருக்கிற கழிப் பறையில் சற்றே ஓய்வெடுக்க அனுமதியுண்டு. கலை இலக்கிய தாகம் கொண்ட மாணவர்கள் கழிவறை சுவர்களிலும் கதவிலும் காணப்படும் ஓவியங்களையும் காவியங்களையும் இப்போது படித்துக் கொள்ளலாம்.<br /><br />தமது படைப்பையும் பொறித்து வைக்கலாம். பின் கிளம்பி ஆங்காங்கே அடைத்தும் தேங்கியுமுள்ள சாக்க டைகளை சுத்தம் செய்யவேண்டும். இவ்வேலைகளின் போது வெண்ணிறச்சீருடை அணிந்திருக்க வேண்டும். காலணிக்கு அனுமதியில்லை. மனோதிடத்தை குலைய வைக்கும் இந்த ஆரம்பப் பயிற்சிகளுக்கு தாக்கு பிடித்து நிற்பவர்களே அடுத்தக் கட்டத்திற்கு உயர முடியும்.<br /><br />பயிற்சி தொடங்கிய ஆறாம் மாதத்திலிருந்து செப்டிக் டேங்கில் இறங்கி அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பயிற்சி தொடங்கும். இத்தருணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு பயிற்சிமையம் பொறுப்பல்ல என்று உறுதி எழுதிக் கொடுத்தப் பின்தான் மாணவர்கள் அனுமதிக்கப் படுவர். இறங்கும்போது வாய்க்குள் புகுந்துவிடும் கழிவு நீருக்குப் பழகவேண்டி தெருவோர சாக்கடையிலிருந்து ஒரு மடக்கு குடிப்பதும், தலை மற்றும் உடலின் பல பாகங்களிலும் கழிவுகளை பூசிக்கொள்வதும், குப்பைத் தொட்டியிலிருந்து சானிடரி நாப்கின்களை எடுத்து வீசுவதும் இந்தப் பயிற்சிக்கான முன்தயாரிப்புகள். தொட்டிக் குள் இறங்கும்முன் மீண்டும் மது அருந்தி முக்கால் மயக்க நிலைக்குச் சென்றுவிட வேண்டும்.<br /><br />ஒருவேளை இதுவே கூட கடைசியாய் குடிப்பதாக இருக்கக் கூடுமாதலால் தொட்டிக்குள் இறங்குபவர் எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக்கொள்ளலாம் என்பது பொதுவாக பின் பற்றப்படும் மரபு. போதையின் உச்சத்தில் பிரக்ஞையும் மனித சுபாவங்களும் தப்பியதொரு கணத்தில் உள்ளே இறக்கிவிடப்படுவர். மீண்டு மேலேறி வருகிறவருக்கு குளிப்பதற்காக ஒருகுடம் நன்னீரும் சந்தன சோப்பும் பயிற்சிமையத்தால் வழங்கப்படுகிறது. எமன் வாயிலிருந்து மீண்டு புதுப்பிறப்பு எடுத்ததாய்க் கருதி வீடு திரும்பும் ஆண்களை குலவையிட்டு பெண்கள் வரவேற்கும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானதாயிருக்கும். இச்சடங்கு கல்லூரியில் பயிலும் மாணவியருக்கானதாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.<br /><br />கடினமான இப்பயிற்சிகளை முடித்தப்பின் எஞ்சியிருப்பவை சற்றே லகுவானவைதான். அழுகியப் பிணங்களை அப்புறப்படுத்துவது, செத்தமாட்டை புதைப்பது, பன்றி வளர்ப்பது, பன்றிக் கொட்டிலை சுத்தப்படுத்துவது என்ப தெல்லாம் அடுத்தடுத்து பயிற்றுவிக்கப்பட்டு வருட முடிவில் சான்றிதழ் தரப்படும். இதற்குள் எப்படியும் செலவு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் வரையாகிவிடும். பயிற்சி முடிய இரண்டுமாதம் இருக்கும்போதே பல முன்னணி தொழிற்சாலைகளும் அரசு நிறுவனங்களும் முனிசிபாலிடிகளும் மருத்துவமனைகளும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பணிநியமன உத்தரவுகளை வழங்கி விடுவார்கள்.<br /><br />எனவே பயிற்சி முடித்து வெட்டியாய் காலங்கழிக்கும் இக்கட்டான நிலை ஒருவருக்கும் நேர்வதில்லை. பயிற்சி முடித்தக் கையோடு வேலைக்கு எடுக்காவிடில் அவர்களுக்கு நறுமணங்களை நுகரக்கூடிய உணர்ச்சி கிளர்ந்து துர்நாற்றங்களுக்கு முகம் சுளிக்கும் கெடுமதி வந்து சேர்ந்துவிடுமானால் பின் அவர்களது பணித்திறன் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சி இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன.<br /><br />பெண்களும் இக்கல்லூரிகளில் ஆர்வமாக சேரத் தொடங்கினர். அவர்களுக்கு இதே பாடத்திட்டத்துடன் தனித்துவமான வேறுசில பயிற்சிகளும் தரப்பட்டன. உதாரணத்திற்கு, போக்கிரிகள் வம்புதும்பு செய்தால் எதிர்த்துக் கேட்காதிருக்குமாறு குடும்பத்தில் சொல்லித்தரப்பட்டிருந்த அடக்கஒடுக்கத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டியிருந்தது. யார் சீண்டினாலும் அந்நேரத்திற்கு கையிலுள்ள துடைப்பக்கட்டையாலோ மலக்கரண்டியாலோ பிய்த்தெறிந்துவிட வேண்டும் என்பதும், வேற்றார் தம்மை அண்டாமலிருக்குமளவுக்கு தம்மீது எப்போதும் தூர்நாற்றம் கமழுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுக்கு உடனடி பாடமாயிருந்தது. வெற்றிலை போடுவது, புகையிலை அதக்குவது, கேன்டீனிலிருந்து வரும் மதுவகைகளை நிதானம் தப்புமளவுக்கு குடிக்கப் பழகுவதும் பாடமாயிருந்தன.<br /><br />இன்னும் முதுகலைப்பட்டம் பயில விரும்புவோர் செத்த மிருகங்களின் தோல் உரித்து பதனப்படுத்துவது (ரோட்டோரம் செத்து நாறிக்கிடந்த மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐவரை கல்லால் அடித்துக் கொன்ற இந்தியக் கொடூரம் கக்காநாட்டில் நிகழாதிருக்க இப்பிரிவு மாணவர்களுக்கு 'கறுப்பு சொரிநாய்ப்படை' பாதுகாப்பு தரப்படுகிறது), தோல் தொழிற்சாலைகளில் பிராஜெக்ட் டிரெய்னியாக மூன்றுமாதம் பணியாற்றுவது, நொதித்து நாறும் தோல் கழிவுகளின் நாற்றத்திற்குப் பழகும் பொருட்டு மூக்கின் நுகரும் திறனை செயலிழக்கச் செய்யும் யோகா பயில்வது, செருப்பு தைக்கப் பழகியபின் பொதுஇடங்களில் வாடிக்கையாளரை ஈர்த்து அறுந்த செறுப்புகளைத் தைத்து பாலிஷ் போட்டு பளபளப்பாக்குவது ஆகிய பாடங்களை கூடுதலாய் கற்க வேண்டியிருந்தது. இதிலும் தேறிவிட்டால் பிறகென்ன.. ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒருரூபாய் கூடுதலாகவும் முன்சொன்ன இதர சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கண்ணியமாக வாழ வேண்டியது அவரவர் பொறுப்பாகி விடுகிறது.<br /><br />மிகப்பெரும் வேலைவாய்ப்புச் சந்தையாக திடீரென மவுசு கண்டுவிட்ட இத்துறையில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்ட பிறகுதான் இத்தொழிலில் நிபுணர்களையும் 'ஆய்' வாளர்களையும் உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் கே.ஐ.டி (கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்கள் நீண்டகாலமாக செயல்பட்டுவருவதும் அங்கு மேற்சொன்ன பாடங்களில் பட்ட மேற்படிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. ஒரு ரகசிய அல்லது தலைமறைவு ஸ்தாபனம்போல் செயல்பட்டு வந்த இந்த 17 கேஐடிகளுக்கும் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துவரும் அதிர்ச்சியான தகவலும் சமீபத்தில் தான் அம்பலமானது.<br /><br />சங்கேதக்குறிகளைக் கொண்டு வெளியாகும் இந்நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விளம்பரங்களை மாயமந்திரங்கள் தொடர்பானது என்றஞ்சி கருத்தூன்றி கவனியாது விட்டதன் விளைவாக கக்காநாட்டு பெரும்பான்மை சாதியரில் ஒருவரும் கேஐடிக்குள் நுழையவேயில்லை. இங்கே யார் படிக்கிறார்கள், அவர்கள் எங்கே பணியாற்றுகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இத்தனைக்காலமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கிருந்ததிய சேரிக்குள் நுழைந்தால் தீட்டு எனக்கூறி அந்தப் பக்கம் யாருமே எட்டிப்பார்க்காததால் அங்கிருந்த மாணவர்கள்தான் கேஐடிக்களை ஆக்கிரமித்திருக்கிற விசயமே வெளியில் தெரியாமல் போய்விட்டது.<br /><br />மலமள்ளவும் தெருக்கூட்டவும் ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்றப் பொழுதுகளில் கிருந்ததியர்கள் யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது என்ற தடையுத்தரவு அமலில் இருந்ததால் இவ்வளவு காலமும் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் போனது குறித்து பலபட்டறை சாதிகளும் தங்களுக்குள் கூடி பேசிப்பேசி மாய்ந்தனர். கேஐடியில் படித்த கிருந்ததியர்களை தூக்கிப்போக கேஐடி வளாகத்திற்குள்ளேயே பல விமானங்கள் காத்திருக்கும் விசயம் கூட எப்படி தங்களது சாதிச்சங்கத் தலைவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது என்று அவர்கள் அங்கலாய்த்துக் கிடந்தனர்.<br /><br />பலபட்டறை சாதியாரும் கேஐடிக்கள் மீது கவனங் கொள்ளத் தொடங்கியதையடுத்து இவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின: இங்கு சேர்ந்து படிப்பவர்களை மிகுந்த கௌரவத்திற்குரியவர்களாய் மதிக்கும் பண்பு மேலைநாடுகளில் வளர்ந்துவிட்டிருந்தது. இங்கே படிப்போருக்கு வெளிநாடுகளில் பல கக்கூசுகள் எப்போதும் திறந்தேயிருக்கின்றன. கீழ்நிலை படிப்பாளிகளைப் போல அவர்கள் தெருக்கூட்டுவதோ சாதாரண கக்கூசு கழுவுவதோ கிடையாது. பெரிய அரண்மனைகளின் அந்தபுரம், பிரபஞ்ச, உலக அழகிகள் மற்றும் நடிகைகளின் கிறக்கமூட்டும் கழிப்பறைகள், ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் போன்றோரின் அதிகாரம் பொங்கும் கழிப்பிடங்கள், போப்பாண்டவர் உள்ளிட்ட மதகுரு மார்களின் புனிதமலம் போன்றவற்றை மட்டுமே அவர்கள் கையாளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.<br /><br />மட/மத குரு ஒருவர் வாழையிலையில் வெளிக்கியிருந்த விசயம் (இச்சம்பவம்/ அசம்பாவிதத்திற்குப் பிறகு வாழையிலையில் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தலைவாழை இலையை விரித்து பரிமாறப்படும் பதார்த்தம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளின் மலம்போல வெவ்வேறு நிறத்தோடும் மணத்தோடும் தென்படத் தொடங்கி பின் குமட்டலெடுத்து இலையிலேயே வாந்தியெடுக்கும் வரை பலரது நிலையும் சிக்க லாகிவிட்டதையடுத்து கல்யாணம் காதுகுத்து எதுவாயினும் அங்கு முற்றாக வாழையிலை தடை செய்யப்பட்டு விட்டது.<br /><br />வேண்டாத விருந்தாளிகளுக்கு வாழையிலையில் உணவளித்து அவமதிக்கும் குரூரம் சமூகத்தில் தலை தூக்கி வருகிறது) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டப் பிறகுதான் மேற்சொன்ன அழகிகள், தலைவர்கள், புனிதர்களுக்கும் ஆசனவாய் இருக்கிற தென்பதையே பலரும் அறிந்துகொண்டனர். ‘எங்களுக்குத் தெரியும் தேவதைகளுக்கும் குசு வருமென்று’ என சனதருமபோதினியில் சுகன் கவிதை எழுதியபோது நம்மைப்போலவே அவர்களுக்கும் இருக்குமானால் அவர்கள் எப்படி தேவதையாக இருக்கமுடியுமென வாதிட்டு மறுத்தவர்கள் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.<br /><br />இதே காலகட்டத்தில் மேலை மதத் தலைவர் ஒருவர் சிறுநீர் பிரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதை ஆன்மீகத்தில் சொஸ்தப் படுத்த முடியாதென்பதால் ஆபரேசன் செய்யப்போவதாகவும் செய்தி வெளியானது. ஆக யாராயிருந்தாலும் மலஜலம் கழித்தாக வேண்டியவர்களே என்பது உலகத்துக்கே ஊர்ஜிதமானது. அதற்கப்புறமே இங்கெல்லாம் ஸ்கேவஞ்சர்களாக இருப்பவர்கள் கேஐடியில் படித்த கிருந்ததியர்கள் என்பதும் தெரியவந்தது. உலகத்தின் கழிப்பறைகளில் கணிசமானவை மக்கள் தொகையில் மிகக்குறைவேயான கிருந்ததியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்டவுடனேயே பலருக்கும் வயிற்றைக் கலக்கியது.<br /><br />காலங்காலமாய் இத் தொழில்களில் ஈடுபட்டு பல தலைமுறைகளாக பயிற்சி பெற்று வந்திருக்கும் கிருந்ததியர்களே கேஐடியின் பெரும்பாலான இடங்களை ஆக்ரமித்திருந்தனர். எனவே புதிதாக இத்துறைக்கு படிக்கவிரும்பும் இதர சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகவும் எறும்பின் மூத்திரமாகவும் அரிதாகியிருந்தது. கிருந்ததியர் ஏகபோகத்துக்கு எப்படியாவது முடிவு கட்டவேண்டுமெனப் பலபட்டறையினரும் கூடிப் பேசி கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பை (•போரம் எகென்ஸ்ட் இன்ஈக்வாலிட்டி) நிறுவினர்.<br /><br />கூட்டமைப்பு பலமுறை கூடிக் கலைந்தும், கலைந்து கூடியும் வெளியிட்ட கோரிக்கை சாசனம் கக்காநாட்டில் பெரும் பரபரப்பாகிவிட்டது. கிருந்ததியர் கட்டுப்பாட்டில் உலகத்தின் கழிப்பறைகள் இருப்பது நல்லதல்ல என்றும் அவர்கள் தயவில் தான் உலகத்தார் ஒன்னுக்கு கூட போகமுடியும் என்ற நிலை நீடிக்குமானால் அது கடும் அடக்குமுறைக்கு வழிவகுக்குமென்றும் அவ்வாறு அடக்கப்படும்போது மூத்திரப்பைகள் வலுவிழந்து உயிரிழப்பும்கூட ஏற்படுமெனவும் எடுத்தயெடுப்பில் எச்சரிக்கப்பட்டது.<br /><br />மனிதனாய்ப் பிறந்த யாவருக்குமே எல்லா வகையான தகுதியும் திறமையும் இருக்கவே செய்கின்றன. ஒரு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கிருந்ததியரல்லாதாரும் மலமள்ளுவது தொடர்பான வேலைகள், தோலுடன் தொடர்புடையப் பணிகள், பிணத்தோடு தொடர்புள்ளக் காரியங்கள் யாவிலும் தமது தகுதி திறமையை வெளிப்படுத்திக் காட்டுவர். ஆனால் இத்தகுதியும் திறமையும் கிருந்ததியர்களுக்கு மட்டுமே கருவிலே திருவுடையதாய் பீற்றிக் கொள்வதைக் கேட்கவே அருவருப்பாய் இருக்கிறது. முடக்கப்பட்டுள்ள எமது அறிவும் ஆற்றலும் நாட்டின் கக்கூஸ்களுக்கு பயன்படும் வகையில் திருப்பி விடப்பட வேண்டுமானால் அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கிருந்ததியரல்லாதார் அனைவருக்கும் அவரவர் சாதிக்கேற்ப பிரதிநிதித்துவம் தரவேண்டும்.<br /><br />நாட்டின் மிகவுயரிய அதிகாரமும் வருமானமும் உள்ள ஸ்கேவஞ்சர் பதவிகளை தமது சாதிபலத்திற்கும் மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற கிருந்ததியர்கள், சாதி வாரி பிரதிநிதித்துவம் என்று நாங்கள் கேட்கும்போது, தமது சேரிக்குள் சாதி வேற்றுமையே கிடையாதென்றும் ஊருக்குள் என்ன நிலவரமிருந்தாலும் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் மழுப்பலாக பதிலளிக்கின்றனர். இது முழு பூசணிக்காயை துளி பீயில் மறைக்கிற வேலை. இந்நாடு சாதியாகத்தான் இருக்கிறது என்பது உண்மையிலேயே கிருந்ததியருக்குத் தெரியாதா? சாதியின் காரணமாகத்தான் இவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டனரா? முன்பு முத்தல நக்கம்பட்டியிலும் மருதங்குளத்திலும் ஊராட்சித் தலை வராக இருந்த இவங்காள்களை எங்காள்கள் கொன்றது கூட சாதிவித்தியாசம் இருப்பதைத்தானே காட்டியது? ஏதோ இன்றைக்கு ஸ்கேவஞ்சர் வேலைக்கு ஒரு மரியாதை வந்துவிட்டதால் தாம் ஆதியிலிருந்தே இப்படி பெருவாழ்வு வாழ்வதாய் நினைத்துக்கொள்வதா?<br /><br />சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதிடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்பு மேயில்லையா? தினமும் குறைந்தது மூன்றுவேளையாவது எங்களது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள், படுத்தப் படுக்கையாகிவிடும் எம்வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்கமுடியுமா? முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?<br /><br />இதையெல்லாம் தொட்டக்கையால் யாருடையதை வேண்டுமானாலும் தொட்டு அள்ள முடியும்தானே...? இது என்ன பெரிய கம்பசூத்திரமா...? வீட்டுக்குள்ளேயே கக்கூசுகள் வந்த பிறகு உள்ளே வந்து கிருந்ததியர் கழுவும்பட்சம் வீடு தீட்டாகிவிடும் என்பதால் நாங்களே ஹார்பிக் மாதிரி ஏதாவதொரு கரைசலைப் பயன்படுத்தி எங்கள் வீடு களுக்குள் கழுவி சுத்தம் செய்வதில்லையா...? கறையும் அழுக்கும் இல்லாதபடி சுத்தமாக்க இந்த பிராண்ட் லிக்விட்டை பயன்படுத்துங்கள் என்று கிருந்ததியரல்லாத எத்தனையோ நடிகர்கள் கழிப்பறைத் தொட்டியை கழுவுவதைப்போல விளம்பரங்கள் வருகின்றனதானே.. என்னதான் மிக்ஸி வந்துவிட்டாலும் அம்மியில் சம்பாரம் அரைத்து குழம்புவைத்தால்தான் சுவையாக இருக்கிறது என்பதுபோல, இப்போதெல்லாம் டாய்லெட்டுகளில் ஹெல்த் வாஷ் பைப்புகள் வந்துவிட்டாலும் கையால் கழுவும் போதுதானே சுத்தமானதுபோல ஒரு திருப்தி ஏற்படுகிறது...? எனவே ஒரு கிருந்ததியனுக்கும் மலத்துக்கும் எந்தளவுக்கு தொடர்பிருக்கிறதோ அதேயளவு எங்களுக்குமுண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.<br /><br />சமையலறையும் பூஜையறையும் இருப்பது போலவே எங்கள் வீடுகளில் கழிப்பறையும் இருக்கிறது என்பதி லிருந்தே நாங்கள் மலத்தை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா? அந்த நேசிப்பின் வெளிப்பாட்டால்தானே நாங்கள் கக்கூசுடன் கூடிய பெட்ரூம்களை கட்டிக்கொள்கிறோம்...? அதேபோல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்டிக் டேங்கில் இறங்கி ஏறும் சாமர்த்தியம் எங்களுக்கு மட்டுமே உண்டு என்று கிருந்ததியர்கள் வாதாடிக் கொண்டிருப்பார்களோ தெரியாது. நாட்டிலிருக்கிற எல்லாநதிகளும் குளங்களும் சற்றேறக்குறைய மலக்குழிகளுக்கு நிகரான அளவுக்கு மாசடைந்து சாக்கடைகளாகத்தானே தேங்கிக் கிடக்கின்றன... அவற்றில் குளித்தால் தோஷம் நீங்கும் புண்ணியம் பெருகுமென்று கிருந்ததியரல்லாத பெரும் பான்மை மக்கள் தினமும் அவற்றில் முங்கிக் குளித்து பெற்றிருக்கும் அனுபவத்தின் காரணமாக எவ்வளவு துர்நாற்றமுள்ள செப்டிக் டேங்கிற்குள்ளும் அவர்களால் பணியாற்ற முடியும் என்று கூட்டமைப்பு சவால்விட்டு அறிவிக்கிறது. இதுவன்றி ஒவ்வொரு மனிதனும் நடமாடுமொரு செப்டிக் டேங்க்தான் என்று நம்முடைய பித்தர் மரபில் சொல்லப்பட்டுள்ள தத்துவத்தையும் இவ்விடம் நினைவுகூர்தல் வேண்டும்.<br /><br />உணவுப் பழக்கத்திற்கு வந்தோமென்றால் ஆடாயிருந்தாலும் கோழியாயிருந்தாலும் அதை உயிருடனேயே துள்ளத்துடிக்க சிங்கம் புலிபோல கடித்தா தின்கிறோம்... இல்லையே. செத்தபின்தானே நாங்களும் அறுத்துத்தின்கிறோம்... எனவே செத்ததைத் தின்கிறவர்கள் தாங்கள் மட்டுமே என்று கிருந்ததியர் பீற்றிக்கொள்வதில் எந்த நேர்மையும் இல்லை. அதிலும் புல் பூண்டு போன்ற தாவரவகைகளை மட்டுமே மேய்கிற சுத்த சைவப் பிராணியான மாட்டைத் தின்கிற கிருந்ததியர்களே தாழ்த்தப்பட்டவரெனில், குப்பையையும் ஏன் மலத்தையும்கூட கிளறித் தின்கிற கோழியை கபாப் என்றும் சிக்கன் 65 என்றும் வகைவகையாய் வறுத்துத் தின்கிற எங்களை மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக ஏன் கருதக்கூடாது என்பதற்கு தக்க விளக்கத்தைத் தருமாறு கிருந்ததியரையும் அரசையும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. எங்களிடம் வாலாட்டிய எத்தனையோ கிருந்ததியரை பட்டப்பகலில் வெட்டிப் புதைத்தவர்கள் நாங்கள் என்பதை தெரிந்திருந்தும் எங்களுக்கு பிணத்தை அப்புறப்படுத்தவோ புதைக்கவோ தெரியாது என்று வாதிடுவதில் கிருந்ததியர்களின் அறிவீனம்தான் வெளிப்படுகிறது.<br /><br />சுடுகாட்டில் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு பிணங்களை எரிக்கிற இவர்கள் ஒரேநேரத்தில் விண்மணியில் 44 பேரை எரித்த செழித்த அனுபவம் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து பிணம் எரிக்கத் தெரியுமா உங்களுக்கு என்று கேட்கிறார்கள். இப்படி வேண்டு மென்றே எங்களை ஆத்திரமூட்டி, எரிப்பதிலும் புதைப்பதிலும் எமக்கு நீண்டகாலமாக இருக்கும் அனுபவத்தை யெல்லாம் எங்கள் வாயாலேயே சொல்லவைத்து, பின் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி கொலைக்கேசில் சிக்கவைக்கப் பார்க்கும் கிருந்ததியரின் பாசிச சூழ்ச்சியை முறியடிக்க கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.<br /><br />மணியாட்டும் கைக்கு மலக்கரண்டி பிடிக்கத் தெரியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள். கண் பார்த்தால் கை செய்யும் என்பது முன்னோர் வாக்கு. அப்படியிருக்கும் போது கிருந்ததியருக்கு ஆதரவான பத்திரிகையொன்று, உச்சந்தலையில் டும்மியும் தார்ப் பாய்ச்சி வேட்டியும் கட்டிக்கொண்டு கோயிலில் மணி யாட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, ‘அந்த மணியை கர்ப்பஸ்தானத்தில் வீசியெறிந்துவிட்டு இங்கே வாரும், உமக்கு கேஐடியில் இடம் கிடைச்சிருக்கு’ என்று கூட்ட மைப்பினர் கூப்பிடுவதைப்போல கேலிச்சித்திரம் வெளியிட்டிருப்பதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக் கிறது.<br /><br />அதேபோல தப்பித்தவறி கிருந்ததியரல்லாத மாணவருக்கு கேஐடியில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டால் அவர்கள் மிகுந்த இளக்காரமாக நடத்தப்படுகின்றனர். சிறுசிறு தவறுகளுக்கும்கூட பொறுமையிழக்கும் பேராசிரியர்கள், ‘மக்கு.. மக்கு... நீயெல்லாம் மலமள்ள வரலேன்னு எவன் அழுதான்... உனக்கு சுட்டுப் போட்டாலும் பிணம் எரிக்க வராது. நீயெல்லாம் உன் குலத்தொழிலுக்குத்தான் லாயக்கு... இங்க வந்து ஏன் எங்க உயிரை எடுக்கிறே...’ என்று திட்டுவது வாடிக்கை யாக உள்ளது. இந்த அவமானம் தாங்காத கிருந்ததியரல் லாத குடும்பப் பிள்ளைகள் கேஐடியிலிருந்து தப்பித்து கள்ளத்தனமாய் ரயிலேறி பட்டணம் போய் இன்றைக்கு அமைச்சர்களாகவும் வியாபாரிகளாகவும் கோயில் குருக் களாகவும் வெறும் ஐநூறு ஏக்கர் கொண்ட பண்ணையாராகவும் காலந்தள்ள வேண்டிய இழி நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதெற்கெல்லாம் காரணம், கேஐடி பேராசிரியர்களில் பெரும்பாலோர் கிருந்ததிய ராய் இருப்பதே. எனவே பேராசிரியர் பதவியிலும் எமக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.<br /><br />ஸ்கேவஞ்சர் படிப்பு மற்றும் வேலை மட்டுமல்லாது பறையடிப்பதிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவை என்று இப்போதே வலியுறுத்துகிறோம். தோலாலான பறையை நீங்கள் தொடக்கூடாது, தீட்டாகிவிடுவீர்கள் என்று எம்மை மிரட்டி தடுக்கப் பார்க்கின்றனர். தீட்டுப்படாத சாதி என்ற வெற்று கௌரவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன விரல் சூப்புவதா அல்லது வேறேதையாவது சூப்புவதா? எமக்கும் ஆடுமாடுகளின் தோல்களுக்கும் எந்தத் தொடர்புமே இல்லையா? காலணிகள், இடுப்பு பெல்ட், கடிகார வார், பிரயாணப் பை என்று எங்களிடம் இல்லாத தோல் பொருட்களா? அவற்றையெல்லாம் நாங்கள் தொட்டு பயன்படுத்தவில்லையா....?<br /><br />அவ்வளவு ஏன்? எமது கடவுள்களும் முனிபுங்கவர்களும் ரிஷிகளும்கூட மான்தோலின் மீதமர்ந்து தவம் செய்வதை காலண்டர்களில் கண்டதில்லையா...? நாங்கள் மிகவும் விரும்பி வாசிக்கும் மிருதங்கத்திலும் தவிலிலும்கூட தோல் இருக்கிறதே? அதையெல்லாம் நாங்கள் தொட்டு அடித்ததால் இசை எழும்பாமல் போய்விட்டதா என்ன? மிருதங்கத்தை இப்படி வாசிக்க வேண்டுமானால் பறையை அப்படி வாசிக்கவேண்டும். வேண்டுமானால் யார் வீட்டு சாவிலும் நாங்கள் அடித்து ஆடி எங்கள் தகுதி, திறமையை நிரூபிக்கத் தயாராயிருக்கிறோம்.<br /><br />ஆக எப்படிப் பார்த்தாலும் கிருந்ததியருக்கும் அவரொத்த சாதியனருக்கும் மேலாக நாங்கள் யாரும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் செய்கிற எல்லாத் தொழில்களிலும் அதற்கான படிப்புகளிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவையென அரசையும் சொச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்துகிறோம். ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திலிருக்கும் கட்சியினர் இவ்விசயத்தில் பாராமுகமாய் இருக்கக் கூடும் என்பதால் நாங்கள் சொச்சநீதிமன்றத்தையே பெரிதும் நம்பியிருக்கிறோம். தாங்கள் வகிக்கும் பதவி, அதற்குரிய மாண்புகள் என்றெல்லாம் மயங்கி ஒருபால் கோடாமையோடு நீதிவழங்கவேண்டும் என்று அவர்கள் துணிந்துவிடக்கூடாது. துலாக்கோலை சற்றே தாழ்த்திப் பிடித்து சுயசாதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று பணிந்து வேண்டுகிறோம்....<br /><br />‘நீதிமன்றம் திடீரென பிரம்மாண்டமான கழிப்பறையாகி விடுகிறது. ஆர்டர் ஆர்டர் என்று மேசையைத் தட்டும் சுத்தி ஒரு மலக்கரண்டியாக மாறிவிடுகிறது. தனக்குத் தானே துக்கம் அனுஷ்டிப்பதுபோல இவ்வளவுகாலமும் உடுத்தியிருந்த கருப்பு அங்கியை உதறிவிட்டு காக்கி யுடுப்பு அணிந்து கனகம்பீரமாக நீதிபதி மலமள்ளும் அழகை நீதிதேவதையானவள் கண்ணைக் கட்டியுள்ள கறுந்துணியவிழ்த்து பொறாமையோடு ரசிக்கிறாள். பின் தன் கையிலிருக்கும் தராசுத்தட்டை வாகாகப் பிடித்து அதில் அவளும் மலமள்ளத் தொடங்குகிறாள்’ - இப்படி தகுதிக்கு மீறி கனவுகண்ட குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த பதினாறு நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்திலிருந்தனர் நீதிபதிகள்.<br /><br />கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஒரு ஸ்கேவஞ்சர் வரும்போது டவாலி ஒருத்தன் சைலன்ஸ் என்று அறிவித்தவுடன் யாராயிருந்தாலும் எழுந்துநின்று முகமன் கூறி ஸ்கேவஞ் சரை வரவேற்பதைப் போலவே நீதிமன்றத்துக்குள் நுழையும்போது தங்களையும் அவ்வாறு வரவேற்க வேண்டும் என்று கடந்தமாதம் அவர்கள் நடத்தியப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ‘நீங்க என்ன ஸ்கேவஞ்சரோ, இல்ல ஸ்வீப்பரா... ஆ•ப்டர் ஆல் ஒரு ஜட்ஜ்தானே... உங்களுக்கு எதுக்கு மரியாதை தரணும்?’ என்று அரசு மறுத்துவிட்டது. ஸ்கேவஞ்சர்கள்மீது காழ்ப்பிலும் பொறாமையிலும் மேலங்கி இன்னும் கருக்குமளவுக்கு பொங்கிக்கொண்டிருந்த நீதிபதிகள் ஸ்கேவஞ்சருக்கு இணையான சம்பளம் சலுகைகள், மரியாதை மானம் ரோஷம், கோடைவிடுமுறை, மூன்று தலைமுறையாக நீதிபதியாக இருந்தவரின் குடும்பத்தை கண்ணியமான மாற்றுத்தொழிலில் ஈடுபடுத்தும் வகையில் அவரது வாரீசுகளில் ஒருவருக்கு ஸ்கேவஞ்சர் வேலை, நீதிபதிகளுக்கும் காக்கிச் சீருடை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.<br /><br />தம் வாரீசுகளுக்காவது காக்கியுடை அணியும் கௌரவம் கிடைக்குமா அல்லது அவர்களும் தங்களைப்போலவே காலகாலத்துக்கும் நீதிபதிகளாகவே இருந்து இப்படி கருப்பு உடைக்குள் புழுங்கிச் சாக நேரிடுமோ என்ற கவலையும் அவர்களை பீடித்துக்கொண்டது. எனவே போராட்டத்தை அவசரஅவசரமாக முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பினர். கூட்டமைப்பிலிருந்த தமது சொந்தபந்தம் சிலரைத் தூண்டிவிட்டு பொதுநல வழக்கு தொடுக்கவைத்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் கட்டிங், குவார்ட்டர், ஆ•ப், •புல் என்று எந்த சைஸ் பெஞ்சில் ஏறி நின்று விவாதித்தாலும் தூய்மைப் பணியாளர் நியமனத் திட்டத்தில் நீதிமன்றம் கை வைக்கவே முடியாதபடி அது அரசியல் சட்டத்தால் காப்பு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.<br /><br />வெறுமனே கக்காநாட்டு சட்டப் புத்தகங்களுக்குள் உலும்பிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற பிரச்னைகளுக்கு பல்வேறு உலகநாடுகளின் நீதிமன்றங்களும் எவ்வாறு தீர்வுகண்டன என்பதை ஆராய்வதன் மூலம் கக்காநாட்டில் கிருந்ததியர் ஏகபோகத்திற்கு முடிவுகட்டி யாவரும் ஸ்கேவஞ்சராகவும் ஸ்வீப்பராகவும் மேன்மை யடையும் வழியை கண்டடைய முடியும் என்ற நம்பினர். இவர்கள் பெரிதும் நம்பியிருந்த- இடஒதுக்கீடு விசயத்தால் பரபரப்புக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் பிரசித்திப் பெற்ற-அண்டைநாடான லிபரல் பாளையத்திலிருந்து அவர்களுக்கு விரும்பத்தக்க தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடங்கிய காலந்தொட்டு தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இயங்கி வரும் லிபரல்பாளைய நீதிமன்றங்களை இவ்விசயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.<br /><br />கருப்பு அங்கி அணிந்திருந்ததால் பெரியாரின் சீடர்களாயிருக்கக்கூடும் என்று நம்பி இந்த நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்க கள்ளத்தோணி ஏறி வந்த தமது மதியீனத்தை எண்ணி வெட்கப்பட்டனர் கக்காநாட்டு நீதிபதிகளும் •போரம் எகைன்ஸ்ட் இன்ஈக் வாலிட்டி அமைப்பினரும். ஆனால் இதனாலெல்லாம் அவர்கள் சோர்வடைந்து விடவில்லை. இறுதியில் தமக் கான நற்செய்தியை அவர்கள் இந்தியாவுக்குள்ளிருந்து கண்டெடுத்தனர்.<br /><br />Mari Marcel Thekaekara எழுதிய Endless Filth என்ற புத்தகம், பலபட்டறை சாதி யினருக்கு போட்டியில்லாத ஒரு புதிய வேலைவாய்ப்புச் சந்தையை திறந்துகாட்டியது: பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது அறிமுகமாகி நடைமுறையிலிருந்து பின் கைவிடப்பட்டத் தொழில் ஒன்றைப் பற்றிய குறிப்பு அப் புத்தகத்திலிருந்தது- மலம் கழித்தப்பின் கழுவிக் கொள்வதற்கு பதிலாக டிஷ்யூ காகிதத்தால் துடைத்துக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அந்த காகிதத்தை இங்கிலாந்திலிருந்து பெருஞ்செலவில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததாம்.<br /><br />கொள்ளையடிக்கும் காசில் பெரும்பகுதியை இப்படி குண்டி துடைக்கவே செல விட்டால் கஜானா திவாலாகிவிடும் என்ற கவலை பீடித்ததாம் பிரிட்டிஷ் விசுவாசிகளுக்கு. பிரபு, இனி மேல் நீங்கள் பேப்பர் வாங்க வேண்டாம்... அதற்கு பதிலாக துண்டுத்துண்டாக கிழிக்கப்பட்டிருக்கும் இந்தத் துணியிலேயே துடைத்துக் கொள்ளுங்கள். தினமும் துணியை சுத்தமாகத் துவைத்து டெட்டாலில் அலசி காய வைத்து பக்குவப்படுத்தித் தர ஆட்களை நியமித்துவிட்டால் செலவு குறையும் என்று ஆலோசனை கூறினராம். மலம் துடைத்தத் துணியை யாராவது துவைப்பார்களா என்று பிரிட்டிஷ்காரர்கள் ஆச்சர்யமாய் கேட்க, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதற்காகத்தான் எங்கள் நாட்டில் ஒரு சாதியையே வைத்திருக்கிறோம் என்று கூறி அருந்ததியர்களை மிரட்டி துவைக்கவைத்தனராம்.<br /><br />இந்தியாவில் வழக்கொழிந்துவிட்ட ‘துணியால் துடைத்துக்கொள்ளும்’ அந்த தொழில்நுட்பம் ‘துதுது- துணியால் துடைத்து தூய்மைப்படுத்திக் கொள்ளும் திட்டம்’ என்ற புதுப்பெயரில் கிருந்ததியரல்லாதாரால் கக்காநாட்டில் பிரபல்யமாக்கப்பட்டது. என்ட்லெஸ் •பில்த் புத்தகத்தைப் படித்து ரகசியமாக இதற்கென பயிற்சி எடுத்திருந்ததால் அத்துணிகளை வெளுக்கும் புதிய வேலைவாய்ப்பு முழுவதையும் கிருந்ததியரல்லா தாரே கைப்பற்றிக் கொண்டனர்.<br /><br />மலம் துடைத்தத் துணியை கையால் துப்புரவாக கசக்கித் துவைக்கும் அவர்களிடமே தமது கக்கூசை கழுவும் பணியையும் ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர். கிருந்ததியர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துகொண்டிருந்த பல்வேறு தரப்பினரும் புதிதாக களமிறங்கியுள்ள கிருந்ததியரல்லாதாருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷாருக்குப் போலவே கக்காநாட்டு மேட்டுக்குடியினருக்காக டிஷ்யூ தாள் இறக்குமதி செய்துவந்த வகையில் இதுகாறும் விரயமாகிக் கொண்டிருந்த அன்னியச் செலாவணி இனி மிச்சமாகப் போவதனாலும், மலம் துடைப்பதற்கென்று ஒவ்வொருவரும் துணி வாங்கியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், நலிவடைந்து கிடக்கும் ஜவுளித் தொழில் புத்துணர்ச்சி பெறும் என்பதாலும் கக்காநாட்டு அரசாங்கமும் இந்த ‘துதுது’ தொழில்நுட்பத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்கியது. நீராதாரம் சேதார மாவது தடுக்கப்படுவதாலும் டிஷ்யூ பேப்பர் பயன்பாடு முற்றாக ஒழிக்கப்படுவதால் காகிதக்கூழ் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்பதாலும் இத்திட்டத் திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.<br /><br />ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.7பில்லியன் டாலர் அளவுக்கு கழிவறைத்தாளுக்காக அமெரிக்கா செலவழிக்கிறது என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியுடன் யுஎஸ் அதிபரை கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இத் தொகையில் பாதியளவுக்கு கொடுத்தாலும்கூட தங்களது சாதிகளைச் சார்ந்த இளைஞர்கள் 'துதுது' தொழில்நுட்பத் தோடு அமெரிக்கா வந்து பணியாற்றத் தயாராயிருப்ப தாக தெரிவித்தனர். தங்கள் சேவையால் மிச்சமாகும் காசைக் கொண்டு இன்னும் நாலு குண்டு செய்து ஈராக்மீது வீசலாமே என்று அவர்கள் கொடுத்த ஐடியாவால் குஷி கண்டுவிட்ட புஷ் உடனடியாக 'துதுது'வுக்கு ஒப்புதல் அளித்தார்.<br /><br />அதன்படி கக்காநாட்டு கிருந்ததியரல்லாதார் அமெரிக்க கக்கூசுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். வாடிக்கையாளரை கவர்வதற்காக, மலம் கழிக்கும் வரை கக்கூசுக்கு வெளியே காத்திருந்து மணிச்சத்தம் கேட்டதும் உள்ளேபோய் ஆசனவாயை இவர்களே துடைத்து விடுவது, மலம் கழிக்கிறவருக்கு போரடிக்காமலிருக்க செய்தித்தாள் வாசித்துக் காட்டுவது போன்ற புதிய உத்திகளைக் கையாண்டனர். சுத்தம் செய்கிற சாக்கில் அமெரிக்கர்களின் விதவிதமான பிருஷ்டங்களையும் குறிகளையும் காணும் வாய்ப்பினைப் பெற்ற இந்த பலபட்டறைச் சாதி இளைஞர்கள் எப்போதும் கிளுகிளுப் பான மனநிலையுடன் பணியாற்றிய விதம் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.<br /><br />‘கையால் தொட்டுத் துடைக்கும் இன்பத்தை அனுபவியுங்கள்...’,‘கிருந்ததியரல்லதார் கக்கூசுகளைக் கழுவும் உரிமை கிருந்ததியரல்லாதாருக்கே’, ‘மரபுக்குத் திரும்பு வோம்... துதுது- வை விரும்புவோம்’, ‘தண்ணீர் மிச்சம்... தாளும் மிச்சம்’, ‘காலமெல்லாம் கிருந்தியர் கழுவிய உங்கள் கழிப்பறைகளைக் காண அலுப்பாயிருக்கிறதா...? நீங்கள் அணுகவேண்டிய முகவரி- கிருந்ததி யரல்லாதார் கூட்டமைப்பு’ என்பது போன்ற விளம்பரங் களால் கிருந்ததியர் நிலைகுலைந்துப் போயினர். உள் நாட்டில் எழுந்தப் போட்டியை சமாளிக்கமுடியாத அவர்கள் தமது பாரம்பர்யத் தொழில்களில் நீடிக்க முடியாமல் வேறுவேலைகளைத் தேடி அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளுக்கு செல்லத்தொடங்கினர். மலத்துணி கசக்கும் நுணுக்கமறிந்த கிருந்ததியரல்லாதார் தலைமுறை தலை முறையாக செய்துவந்த அர்ச்சகர், நீதிபதி, மருத்துவர், அரசு ஊழியர் போன்ற இழிதொழில்களிலிருந்து விடுபட்டு படிப்படியாக கக்காநாட்டிலும் அமெரிக்காவிலும் ஸ்கேவஞ்சர்களாகவும் ஸ்வீப்பர்களாகவும் மேன்மை அடையும் காலம் கனிந்துவிட்டது.<br /><br />சுபம்.<br />சிறுகதை- ஆதவன் தீட்சண்யா , புதுவிசை இணைய இதழ்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-14566308941113697932011-05-26T19:31:00.001+04:002011-05-26T19:35:32.303+04:00ஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயின<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VVO3YRKcFVE/Td5zLm2P50I/AAAAAAAAAz0/0ruxVZrKjeM/s1600/jayalalitha_20091012.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-VVO3YRKcFVE/Td5zLm2P50I/AAAAAAAAAz0/0ruxVZrKjeM/s320/jayalalitha_20091012.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5611048828994053954" /></a><br />"முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்கிற பழமொழிக்கு ஏற்ப.. தமிழகத்தில் துக்ளக் தர்பார் தொடங்கி விட்டது. "ஒரு அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது” என்றார் நபிகள் நாயகம். நிகழ்காலத் தவறுகளின் மீதுள்ள கோபத்தில், கடந்த காலத் தவறு ஆட்சிக்கு வந்துள்ளது.<br /><br />தன்னை மகாராணியாக கருதிக்கொள்ளும் ஜெயலலிதாவிற்கு, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை நினைவுப்படுத்த வேண்டிய நேரம், இவ்வளவு சீக்கிரம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வித்திட்டம் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அரசு நிறுத்தி வைத்துள்ளது.<br /><br />மனுதர்மம் எப்படி நால்வருணம் என்கிற சாதிய அமைப்பைக் காப்பற்றுகிறதோ, அதைப் போலவே நான்கு வகையான கல்வி முறைகள் இங்கே காப்பற்றப்படுகின்றன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என நான்கு வகையான பாடத்திட்டங்கள், தனித் தனியாக இயங்குகின்றன. குழந்தைகள் விசயத்தில் காட்டப்படும் இந்த அநாகரிகமான வேறுபாடு அருவெறுக்கத்தக்கது. அதை மாற்ற முனைந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை ஜெயலலிதா அரசு நிறுத்தி வைத்துள்ளது.<br /><br />சமச்சீர் கல்வித் திட்டம் என்பது திடீரென்று முளைத்த மழை நேரத்துக் காளான் அல்ல. அதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பத்தாண்டு காலம் போராடி இருக்கிறார்கள். அதன் விளைவாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஒரு குழுவை அன்றைய கலைஞர் அரசு அமைத்தது. அந்த குழு மாவட்டந்தோறும், பள்ளிக்கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.<br /><br />பின்னர், 2007 இல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழு அறிக்கையின் கருத்துக்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தது. இதன் பிறகு, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தெரிந்து வர 2008 ஆம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு நியமித்தது.<br /><br />பின்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 26.08.2009 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விதமான பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டது. சட்ட வடிவு கொண்டு வரப்பட்டது. அதன் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி 2010 இல் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011-இல் கொண்டு வரப்படும் என முந்தைய அரசு அறிவித்து இருந்தது.<br /><br />அதிகாரம் தலைக்கு ஏறிய சில தினங்களுக்குள்ளேயே ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டார். ஏழைகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஒரே கல்வி என்பதை ஏற்றுக் கொள்ள அவரின் பார்ப்பனீய ஆதிக்க மனம் மறுக்கிறது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் தனியார்மயமாக மாறும் அவலமான உலகமய சூழலில், தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வெறிக்கு துணை போயிருக்கிறது இன்றைய அரசு.<br /><br />உயர்நீதி மன்றத் தீர்ப்பும், மக்களின் ஆவேசமும் மட்டுமே இதற்கு மாற்றான சூழலைக் கட்டமைக்க முடியும். ”ஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயினர்” என்ற கண்ணதாசன் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஆளுமையற்றவர்களை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி உள்ளார். ஜெயலலிதாவின் அமைச்சர்கள் யாரும் 150 கல்வியாளர்களை கொண்டு நியமிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் தகுதி படைத்தவர்கள் இல்லை.<br /><br />பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பலரும் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்து முன்ணணித் தலைவர் இராம.கோபாலன் சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். இந்த முடிவு பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. பாடத்திட்டத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதி இருந்தால், அதை மட்டுமே நீக்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக நீக்குவது என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.<br /><br />'அரசு மதுபானம் விற்பது தவறு’ என ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு கொண்டு வருவதில் அதிரடி முடிவு எடுப்பாரா ஜெயலலிதா? செய்ய மாட்டார். ஏனெனில், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பால், இலவசத் திட்டங்கள் என்னும் ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்த வேண்டி வரும். இதில் மட்டும் கலைஞர் அரசின் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றுவது ஏன்? <br /><br />'ஒரு விசயம் உருப்படாமல் போக வேண்டும் என்றால் அதை கிணற்றில் போடு. இல்லையென்றால் அதை விசாரிக்க கமிசன் போடு' என்றார் இராஜாஜி. ஜெயலலிதா கிணற்றில் போட வழியின்றி வல்லுநர்கள் குழுவைப் போட்டிருக்கிறார். அச்சடித்த புத்தகங்கள் குழந்தைகளின் கனவுகளில் மண் அள்ளிப் போட காத்திருக்கின்றன. மக்கள் வரிப்பணம் வழக்கம் போல 200 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.<br /><br />பெற்றோர்களை போராடத் தூண்டுகிறது ஜெயலலிதா அரசு. மக்களின் போராட்டம் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை என்பதை நிரூபிக்கும் காலம் மீண்டும் கூடி வந்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் பற்றிய விசயத்தில் அரசின் இத்தகைய மோசமான போக்கு நீடிக்குமானால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். <br /><br />- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28616241.post-85713552560198284172011-05-23T14:44:00.001+04:002011-05-23T14:50:14.886+04:00தினமலருக்கு உண்மை கசக்கிறதா?குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில், மோடியின் கரம் படிந்துள்ளது என்பதற்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சான்றுகள் வெளியாகியுள்ளன.<br /><br />அந்த வரிசையில், குஜராத் கலவரம் நடந்தபோது அங்கு மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த வரும், தற்போது உளவுத்துறையில் பணியில் இருப்பவருமான சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில்,<br /><br />“குஜராத் கலவரத்துக்கும், முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றி னேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி னார். இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள் ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோ ருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்கு ரலை கேட்க வேண்டாம் என்று சொன்னார்'' என குறிப்பிட்டிருந் தார்.<br /><br />இவரது இந்த அதிரடி அபிட விட் மோடியின் முகத்திரையை யும், புலனாய்வுத் துறையின் முகத் திரையையும் ஒரு சேரக் கிழித்தது. இதை மோடி கூட தாங்கிக் கொண் டார். ஆனால் மோடியின் ஊதுகுழ லான தினமலருக்கு தாங்க முடிய வில்லை போலும். அது டவுட் தனபாலு என்ற பகுதியில் இப்படி கிண்டலடித்திருக்கிறது.<br /><br />குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்:<br /><br />கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் தால், இந்துக்களிடையே கொந்த ளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாத வாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற் பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்துக்கு தடை விதிக்காமல், கண்டும், காணாமல் இருக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி கூறினார்.<br /><br />டவுட் தனபாலு:<br /><br />இன்னும் பெட்டரா எதிர்பார்க்கி றேன்... “எல்லா போலீஸ்காரங்க கையிலயும் துப்பாக்கியைக் கொடுத்து, முஸ்லிம்களை எங்கே பார்த்தாலும் சுட்டுக்கொல்லச் சொன்னாரு'ன்னு சொல்லுங்க... வாய்க்கு வந்தபடி சொல்றதுன்னு ஆகிப்போச்சு... எவ்ளோ சொன்னா என்ன...? என்கிறது தினமலர்.<br /><br />அதாவது அந்த அதிகாரி வாய்க்கு வந்தபடி சொல்கிறாராம். வருத்தப்படுகிறது தினமலர். அந்த அதிகாரி தாக்கல் செய்துள்ள மனு வில் மோடி குறித்து சொன்னவை கள் உண்மையா? அல்லது பொய்யா? என்று ஆராய்வதற்கு நீதிமன்றம் இருக்கிறது. அதற்குள் அந்த அதிகாரியை பொய் சொல்ப வராக வாய்க்கு வந்தபடி தினமலர் எழுத வேண்டிய அவசியம் என்ன? இதற்கு வேரூன்றிய இந் துத்துவா சிந்தனையே தவிர வேறென்ன காரணமிருக்க முடி யும்?<br /><br />அடுத்து இதே போன்று மோடி மீது குற்றம் சாட்டிய இன்னொரு வரையும் சாடியுள்ளது தினமலர். அதை கீழே படியுங்கள்;<br /><br />நில மோசடி வழக்கில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பிரதீப் சர்மா:<br /><br />குஜராத் கலவரம் நடந்தபோது, நான், ஜாம்நகர் நகராட்சி கமிஷன ராக இருந்தேன். என் சகோதரர் குல்தீப் சர்மா, போலீஸ் அதிகாரி யாக பணியாற்றினார். அப்போது, முதல்வர் மோடி அலுவலகத்தில் இருந்து, ஓர் அதிகாரி என்னைத் தொடர்பு கொண்டு, “கலவரக்காரர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, சகோதரரிடம் தெரிவிக்கும்படி கூறினார்.<br /><br />டவுட் தனபாலு:<br /><br />மோசடி வழக்கு தொடர்பா சிறையில இருக்கற ஆட்கள் எல் லாம் மோடி மேல குற்றம் சொல்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சு, பாருங்க... உள்துறை அமைச்சரான அண்ணன் சிதம்பரம், இவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிச்சா, தேவலை...! என்கிறது தினமலர்.<br /><br />மோசடி வழக்குல சம்மந்தப் பட்ட ஒருத்தர் சொல்லும் எல் லாமே பொய்யாகி விடுமா? அல்லது மோசடி வழக்கில் சம்மந் தப்பட்டவர்களின் சாட்சியம் வேறு வழக்குகளில் ஏற்கப்படாது என்று ஏதேனும் சட்டமிருக்கிறதா? தினம லர் சொன்னால் நன்றாக இருக்கும்.<br /><br />அதோடு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தடி சாக்கில் சாடியுள்ளது தினமலர். மோடி அப்பழுக்கற்றவர் என்று தினமலர் நம்பினால் இருந்து விட்டுப் போகட்டும். அது அதன் சொந்த விருப்பம். அதற்காக தான் தூய்மை யாளர் என்று நம்புபவரை எவரும் குற்றம் சாட்டக்கூடாது என்ற கோணத்தில் எல்லோர் மீதும் விழுந்து பிறாண்டுவது ஒரு பத்தி ரிக்கைக்கு அழகல்ல.<br /><br />யார் குற்றவாளி? யார் வாக்கு மூலம் உண்மையானது என்பதை ஆய்வு செய்யத்தான் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் வேலையை தினமலர் செய்யாமல் இருப்பதுதான் அதற்கு நல்லது. உண்மையின் உரைகல் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் தினமலர், மற்றவர்களின் உண்மைக் குரலை ஊனமாக்க முயல்வது ஏன்? உண்மை கசக்கிறதா?<br /><br /><br />-முகவை அப்பாஸ்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-32453256039926808312011-05-22T21:06:00.002+04:002011-05-22T21:11:18.243+04:00நேர்காணல்-லீனா மணிமேகலை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-TxWsUHdQecQ/TdlDh88OrJI/AAAAAAAAAzc/OKWNing7TKM/s1600/il_430xN.66569934.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 357px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-TxWsUHdQecQ/TdlDh88OrJI/AAAAAAAAAzc/OKWNing7TKM/s400/il_430xN.66569934.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609589061440154770" /></a><br />நேர்காணல்: "ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும்தான் என்னைப் பொறுத்தவரை கலை"<br />லீனா மணிமேகலை<br /><br /><br />-<span style="font-style:italic;">நன்றி வல்லினம்</span><br /><br />http://www.vallinam.com.my/issue27/interview.html<br /><br />கவிஞர், இயக்குநர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கிவருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக் கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடது சாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்கரியம் எனது தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் 'செங்கடல்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் அகதிகள் மற்றும் இலங்கைக் கடற்படையாலும் கொல்லப்படும் தமிழக மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டிருக்கும் இப்படம் தணிக்கை குழுவினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தத் தணிக்கையை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடிக்கொண்டிருக்கும் லீனா வல்லினத்தோடு தீர்க்கமாகவும் உற்சாகமாகவும் உரையாடினார்.<br /><br />இன்றைய உங்களின் கடைசி நிமிட வாழ்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?<br /><br />ம்<br /><br />பேட்டி கேள்வி ஒன்று<br />கேளுங்க நவீன்<br /><br />இந்த நிமிடம்<br />அந்த சாளரத்தின் கம்பிகள்<br />பிரித்த என் உடல்<br />நான்கைந்து பிம்பங்கள்<br /><br />சூனியக்காரி<br />ஆர்வத்தில் எட்டிப்பார்க்க தலையை நீட்டியவள்<br />சிதறி செத்தாள்<br /><br />பிணத்தைக் கண்டும்<br />குனிந்த மற்றொருவன்<br />மண்டை மோதி<br />மோசக்காரி<br />முணங்கி செத்தான்<br /><br />64 தந்திரங்கள் தெரிந்தவள்<br />பணம் பறிப்பாள்<br />காரியத்திற்கு படுப்பாள்<br />எல்லாம் தெரிந்தவள் போல நடிப்பாள்<br />எண்ணிக் கொண்டே ள் விகுதியை<br />அழுத்தியதில் நாக்கறுந்தவன்<br />முனை சறுக்கி செத்தான்<br /><br />நச்சுப் பாம்பு<br />தீவினை வைப்பவள்<br />செய்தி பரவியதில்<br />கூடிய மக்கள்<br />நெரிசலில் சன்னல் வெடித்து<br />மொத்த பேரும் செத்தனர்<br /><br /> காட்சி 1 2 3 4 11 1 1<br />அலுத்துப் போய்<br />சந்தைக்கு திரும்பினேன்<br /><br />மரண பீதி சூழ்ந்ததில்<br />கறுப்புத் துணி வியாபாரம் சூடு பிடித்திருந்தது<br />கண்களுக்கென்று வித விதமான காப்பீட்டுத் திட்டங்கள்<br />சன்னல் பழுதுபார்ப்பவர்கள்<br />பெருத்திருந்தார்கள்<br />30 நாட்களில் நீங்களும் கவிதை எழுதலாம்<br />எல்லோருக்கும் பிடித்த மாதிரி என்பதை சற்று உரக்க கூவினான்<br />புத்தகம் விற்றுப் போன தம்பி<br /><br />2. உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?<br /><br />வயதுக்கு வந்த நேரம், என் அம்மா அருகில் இல்லை, கிராமத்திற்கு எதோ காது குத்திற்குப் போயிருந்தார்கள். அப்பாவிடம், " கிலி பிடித்த குரலில், அப்பா, பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்" என்று சொன்னேன். வெரிகுட் என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்துக் கேட்ட ஒரே கேள்வி, நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும் என்று! இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து எதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள்.<br /><br />உங்கள் கேள்வி ஏதோ இதைத் தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.<br /><br />3.உங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்தது? இன்றைய மன நிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?<br /><br />என் தொடக்க கால எழுத்து, முதல் காதலின், அந்த காதல் தந்த முத்தம் போன்றவை. என் குழந்தமை வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறு போல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலகட்டங்களின் சாட்சி தானே எழுத்தும்.<br /><br /> ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககால கட்டம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.<br /><br /><br />4.பெரும்பாலும் ஆண்களே இயங்கி கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தது?<br /><br />பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்,. அதே மனநிலை தான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். பாலுறுப்புகளின் வடிவம் பார்த்து ஆணா, பெண்ணா, வேறா, ஆண்பிரதியா, பெண் பிரதியா , வேறு பிரதியா என்று வரையறை செய்து விட முடியாது என்பதை என் தீவிரத்தை தொடர்வதற்காக நம்ப விரும்புகிறேன் .<br /><br />5.இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயர்த்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?<br /><br /><br />உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயுத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம்,எண்ணம், செயல், கருத்து, அரசியல்,வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்றி சொச்சம் வயது தானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். நமக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில் நுட்பம் எதுவும் வசப்படாத போதும் உரையாடிக் கொண்டு தானே இருந்தோம்.புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு , அதைக் கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.<br /> <br />தொடக்ககால ஆயுத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களை திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடு தான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். எனக்கு தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், அவற்றின் கூடிய இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள் தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம். பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக் கொண்டு கவியரங்கங்களில் பங்கு கொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, பிராக்டிகல் வொர்க்ஷாப்புகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காக தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தை தேர்வு செய்தது,, கவிதையை தீவிரமாக பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்பருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.<br /><br />கி.மு. கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர், இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமா கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி டிக்ஷனரிகளை கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களை தான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடு கூடத் தான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.<br /><br /><br /><br />கல்லூரி காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும் தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபத்துவ செட்அப்பாக சினிமாத் துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தை தொடங்கினேன்<br /><br /><br />6.எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?<br /><br />எம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது? ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை? ஏன் ஒரு சாரார் மற்றும் சமமாக நடத்தப் படுவதில்லை? ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? இந்த ஏற்றத்தாழ்வின் ப்ரோக்ராம்மிங்கை யார் செய்கிறார்கள்? என்ற கேள்வி தான் நம் எல்லோருடைய சிந்தனைக்கு வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பன்னாம் பெரிய தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால் தானே இருக்கின்றன.<br /><br />7.இலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறிர்கள்?<br /><br />கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும் படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்க மாட்டேன். பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால், பெண் என்பவளுக்கு இருப்பு மட்டுமல்ல, நினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும், வெள்ளிவீதியாரையும், காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், முத்துப்பழநியையும்,இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துக் கொண்டிருக்க மாட்டேன். என் முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், என் முன்னோடியாக பெரியாரை தெரிவு செய்திருக்கிறேன்.<br /><br />இடதுசாரி குடும்ப பிண்ணனி என்பதால் கார்க்கியின் தாய் நாவல் தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதி. புரட்சியில் இளைஞர்கள், ஜமீலா, முதல் ஆசிரியன், செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும், தாமரையும், பாரதி –பாரதிதாசன் பட்டுக்கோட்டை கலயாண்சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்தியவை. கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும், ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவை. சுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும், அம்பையும் தான் என் ஆதர்ச எழுத்தாளுமைகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின் பருவம். அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம். சிறுகதையில் மாண்டோ பெரியவனா, கடவுள் பெரியவனா என வியந்ததுண்டு. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், புதுமைப் பித்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், லா.ச.ரா,வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில் தான். தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம் என் நூலகராகவும் உதவி செய்தார்.<br /><br />கவிதையில் பிரமிள், கலாப்ரியா, ஆத்மநாம், சி.மணி, நகுலன், பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகள், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன்,யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி,ரசூல், ரிஷி, சுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.<br /><br />ஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும், கவிதையில் சேரன், வ.ஐச.ஜெயபாலன், சிவரமணியும், கட்டுரைகளில் அ.முத்துலிங்கமும், மொழியியலில் நுஃப்மானும், எனக்கு நெருக்கமானவர்கள்.<br /><br />ஆங்கில வழி தாஸ்தாவெஸ்கி,டாட்ஸ்டாய், செகாவ், மிலன் குந்தரா, பாமுக், மார்குவெஸ், கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி,அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ருஷ்டி, கிரண் தேசாய், காலத் ஹுஸைனி, சில்வியா பிளாத், செக்ஸ்டன், சிக்சூ, உல்ஃப், கேதெ ஆக்கர், அக்மதோவா, கொலண்டாய், ட்ரின் மின் ஹா, காஃப்கா, ஜெர்மைன் க்ரீர் ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.<br /><br />சம காலத்தில், நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கண்டராதித்தன், மாலதி மைத்ரி, செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன் சிறுகதை எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, அசதா நாவலாசிரியர்கள் பாமா, ஜோ.டி.குரூஸ், ஜாகிர் ராஜா.<br /><br />அ.மார்க்ஸும், மார்க்ஸின் எழுத்தும் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக் கொண்டேயிருக்கும் உந்துசக்திகள். சாஹிப் கிரான் சுயத்தை இழந்து அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.<br /><br />இப்படி எல்லோரும், எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும் முன்மாதிரிகள் தாம்.<br /><br />8.இயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த<br />மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் ?<br />(கஞ்சா கடத்துவது மற்றும் அடிப்பது, தரகு வேலை பார்ப்பது, பிச்சை எடுப்பது, நண்பர்களுடன் குடித்து விட்டு ரோட்டில் விழுந்துக் கிடப்பது, இவை தவிர தான் வாசிப்பதும், எழுதுவதும், படைப்பதும். ஏங்க உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?)<br /><br />இலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும், பயணமும், கலை-கோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும், திரைப்பட விழாக்களுக்கு செல்வதும், அரசியல் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில் தான் எழுதுவதும், திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன். மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும், அவர்களோடு தணிக்கைக்கெதிரான, கருத்துச்சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. பெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன். தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்கு தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும், சாதி-பெண்ணியம்- கலாசார அரசியல்-சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.<br /><br />என் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும் மக்களை சந்தித்து உரையாடியது, விவாதித்தது, அவர்களின் கவலைகளை, நம்பிக்கைகளை, அனுபவங்களை, கோபங்களை, ஆதங்கங்களைப் பகிர்ந்துக் கொண்டதும் நான் கற்ற சிறந்த கல்வி. பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பை விட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்ப்டங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியே தான் பெற முடிந்தது. கருத்தியல் ரீதியாகவும், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதை விட மக்களின் அன்றாடப் போராட்டங்களின் வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிற அனுபவம்.<br /><br /><br />9. கனிமொழி , சல்மா , குட்டி ரேவதி , மாலதி மைதிரி, சுகிர்தராணி போன்ற கவிஞர்கள் ஆரம்பகாலத்தில் மிகவும் பிரபலமாகத் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டார்கள். இன்று அவர்களின் இலக்கிய செயல்பாடுகள் என்ன?<br /><br />ஆரம்ப காலம், முடிவு காலம் என்றெல்லாம் இருக்கிறதா என்ன? அவர்கள் இப்போதும் எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.<br />கவிதையைத் தவிர்த்து அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். நல்ல விசயம் தானே?<br />பெண்கள், அதுவும் படைப்பாளிகள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது தானே?<br /><br />ஆனால் என்ன, கனிமொழியின் தொலைபேசி அழைப்புகளை யாரும் ஒட்டுக்கேட்காமல் இருந்திருக்கலாம், அல்லது இந்த நீரா ராடியா வின் நட்பையாவது அவர் தவிர்த்திருக்கலாம். 2ஜி, 3ஜி ஊழலெல்லாம் நமக்கும் தெரியாமல் போயிருக்கும். கருவறையிலேயே ஊழல் வாசனை பிடித்திருக்காங்களே மேடம் என்ற அருவருப்பையாவது நாம் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். குடும்ப பெருமையைக் காப்பாற்றுவதில் அண்ணன்களையும் விஞ்சிவிட்டதால் நம்ம இலக்கியவாதிகள் குலவிளக்கு, குலக்கொழுந்து என்று ஏதாவது விருதை அறிவிக்க, அதற்கு மனுஷ்யபுத்திரன் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் விரைவில் நடக்கும்.<br /><br /><br />கவிஞர் சல்மா துவரங்குறிச்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று தோற்றார். இப்போது சமூக நலத்துறையில்(?) அவர் சேவை செய்ததற்கு கருணாநிதியின் வீட்டு மோசடியில் பங்காக திருவான்மியூரில் ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை “சமூக சேவகர்” என்ற அடிப்படையில் பரிசாக பெற்றிருக்கிறார். இனி அந்த வீட்டில் சாவகாசமாக அமர்ந்து மூன்றாம் சாமம் எழுதுவார்.<br /><br />குட்டி ரேவதி எழுத்தாளர் சிவகாமியோடு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாயாவதியின் ஆயிரத்தி ஒன்றாவது சிலையை தமிழ்நாட்டில் நிறுவும் வேலை அவருக்குத் தரப்பட்டிருக்கலாம். அவர் விலகி வந்து விட்டார் என்று நம்புகிறேன். ஒரே ஆசுவாசம், அவருடைய புதிய தொகுப்பும், பழைய நான்கு தொகுப்புகளும் அடையாளம் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருப்பது தான். அவருடைய பூனையைப் போல அலையும் வெளிச்சம் என்ற முதல் தொகுப்பு நான் இரண்டாயிரமாவது ஆண்டு எழுத வந்தபோது, எனக்கொரு முன்மாதிரி. அந்த வகையில் அவருக்கு என்றும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.<br /><br />மாலதி மைத்ரியும் சுகிர்தராணியும் கவிதையில் எனக்கு முக்கியமானவர்கள். எழுத்தில் மட்டும் இல்லாது சமூக இயக்கங்களிலும் பங்கு பெறும், தலைமையேற்கும் ஆற்றல் மிகுந்தவர்கள். நானும் சுகிர்தராணியும் தமிழ்க்கவிஞர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியிருக்கிறோம். மாலதிமைத்ரியோடு ஈழத்தமிழர் தோழமை குரலின் இயக்கங்களில் இணைந்து பொறுப்புகளைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். மிக உற்சாகமான காலங்கள் அவை. தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் அரசியலாகவும் படைப்பாளிகள் சுதந்திரமாக இணைந்து பணி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய நாட்கள்.ஆனால் எல்லாவற்றையும் காலச்சுவட்டிற்கு காட்டிக் கொடுக்கும் இவர்களின் அரசியல் மிக மோசமானது. பார்ப்பனீயத்திற்கு, ஆட்காட்டி அரசியலுக்கு, இலக்கிய கமிசாருக்கு இருவரும் காட்டும் விசுவாசம் இவர்கள் பேசும் அரசியலுக்கே எதிரானது. காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப் படுத்துவதற்கு, ’காலச்சுவடால் அறியப்பட்ட நான்’ என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் மாலதி மைத்ரி என்ன பதில் வைத்திருக்கிறார். இஸ்லாமியருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதை, பார்ப்பன சங்க விளம்பரங்கள் வெளியிடுவதை இவர்கள் உள்ளிருந்துக் கண்டித்திருக்கிறார்களா?<br /><br /><br />டெல்லிப் போராட்டத்தை பிரேமா ரேவ்தியை வைத்து ஃபேஷன் பேரேடு என்று எழுத வைத்தது காலச்சுவடு.அரசாங்க எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துதல், சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி கவிஞர்கள், படைப்பாளிகள், மாணவர் இயக்கங்கள், மீனவர் இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரவாணிகள், பெண்கள் அமைப்பினர் அன்ற பல ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்து உருவான ஈழத்தமிழர் தோழமைக் குரலின் முக்கிய ஒருங்கிணப்பாளரான மாலதி மைத்ரி இதற்கு உடன்படுகிறாரா? டில்லியில் பாராளுமன்றத்திற்கு முன் மறியல்,ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம், சிங்கள தூதரக முற்றுகை-கைது, ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் எதிர்ப்பு ஊர்வலம் என்று கடுமையான தொடர் போராட்டங்களை மேற்கொண்ட மக்கள பிரதிநிதிகளை ஏதோ மந்தை போல சித்தரிக்கும் தகுதியும், தார்மீகமும் காலச்சுவட்டிற்கு இல்லை என்பதை ஏன் மாலதி மைத்ரி உணரவில்லை.<br /><br />வால்பாறை தமிழ்க் கவிஞர் இயக்கக் கூட்டத்தையொட்டி, மதுவின் பிடியில், இளங்கவிஞர்கள் ஆதிக்க மனநிலைக்கு மாறுகிறார்கள் என்று சுகிர்தராணி தலித் அரசியல், இலக்கிய அல்லது தலித நேச சக்திகளுக்கு காட்டிக் கொடுத்திருந்தால் நேருக்கு நேராக விவாதித்திருக்கலாம். வடிக்கட்டிய இந்துத்துவ, பார்ப்பன,முதலாளியான கண்ணனுக்கு காட்டிக்கொடுக்கும் எடுபிடி வேலைக்கு சுகிர்தராணி தலித அரசியல் என்றல்லாம் தரகு செய்யாமல் இருந்திருந்தாலும் மன்னிக்கலாம்.<br /><br /><br /><br />10. உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள். அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?<br /><br />ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாசாரப்<br />பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும், திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடூயூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று ’கனெக்டிங் லைன்ஸ்’ என்ற மாணவ்ர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில் தான் லண்டனில்,ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.<br /><br />சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும் , சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைகழக இந்திய அமெரிக்க நண்பர்களையும், செயல்பாட்டாளரகளையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.<br /><br /><br />சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது.மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது. மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத் தமிழ்ச் சங்கத்திலும் , சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.<br /><br />அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப் போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ் கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின் போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.<br /><br />தேவதைகள் என் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.<br /><br /><br />காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோது தான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.<br /><br />11. உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?<br /><br />ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே! அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில், இப்படங்கள் வெற்றி பெற்றன.<br /><br />ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளை தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, என் மக்கள பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத் தான் என்னை வரித்துக் கொண்டேன்.கிராமங்கள தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொட்டில்களில் கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்-பெண்கள்-பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்,ஜி,ஓக்கள், பல்கலைகழகங்கள என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.<br />என்.ஜி.ஓக்களோடு இணைந்து வேலை செய்வதை என் மீதான் விமர்சனமாக வைக்கிறார்கள். என்னுடைய ஒன்பது ப்டங்களில் என்.ஜி.ஓக்களின் நேரடி தயாரிப்பில் இரண்டே படங்களைத் தான் செய்திருக்கிறேன். ஒரு சில படங்களுக்கு ம்க்களை அணுகி வேலை செய்வதற்கான ஊட்கமாக அவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். அதற்கான கிரடிட்டை படத்தில் தந்திருப்பேன். அப்படி ஒட்டுமொத்தமாக என்.ஜி.ஓக்களை பொதுமைப்படுத்திப் பார்த்து, அவர்களைத் தவிர்ப்பது தேவையற்றதும் கூட என்றே நான் நம்புகிறேன். அவ்ர்கள் மூலமாக இன்னொரு நூறு மக்களுக்கு நான் என் படங்களைக் காட்ட முடியுமென்றால் எனக்கு ஒப்புக் கொள்வதில் எந்த சிரமமுமில்லை. ரூத் மனோரமா, பெர்னார்ட் பாத்திமா, யேசு மரியான், கிருஸ்துராஜ், நீலவள்ளி போன்ற மிகச் சிறந்த நண்பர்களை என்.ஜீ.ஒ தொடர்பினூடே நான் அடைந்தேன்.<br /><br />என் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்<br /><br /><br />12. பெரியாரியம் பற்றி பேசினீர்கள். திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?<br /><br />திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளுபவை தான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள சொல்கின்றன.<br />உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமை தான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப் படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துக் கொளவதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!<br />மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.<br /><br />ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி-மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களை கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத் தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது. <br /><br />வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத் தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!<br /><br />13.தமிழகத்தின் தற்போதைய இலக்கிய சூழலில் சிற்றிதழ்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்பவை உண்மையில் இலக்கியம் வளக்க செயல்படுகின்றன என நம்புகிறீர்களா?<br /><br />புது எழுத்து, மணல் வீடு, கல்குதிரை, புதுவிசை, உன்னதம், நிழல், தக்கை, கருக்கல், தாமரை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், சஞ்சாரம், செம்மலர், பவளக்கொடி, தலித் முரசு, அணி, அகநாழிகை என்று இன்றும் சிறுபத்திரிகைகள் மாத இதழ்களாக, இருமாத இதழ்களாக, காலாண்டிதழ்களாக, தம்மளவில் சாத்தியமான கால அலகுகளில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடையறாமலும் வெளிவந்தபடி இயக்கம் பெற்றிருக்கின்றன. காலச்சுவடு, உயிர்மை போன்ற மடாலயங்களில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளாமல், அவர்களின் நிலைய வித்துவான்களின் வரிசாக்கிரமங்களில் இடம்பெறாத என்னைப் போன்ற தவிட்டுக் குழந்தைகளுக்கு சிறுபத்திரிகைகள் மட்டுமே நம்பிக்கைவெளி. ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகரும் இவற்றைத் தேடிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றளவும் கலாசாரப் பெரும்போக்குகளில் உடைவுகளை ஏற்படுத்திய படைப்புகள் சிறுபத்திரிகைகளிலேயே வெளிவந்துள்ளன.<br /><br />போர்ஹே, மார்க்வெஸ், வில்லியம் பர்ரோஸ், லோசா, நபகோவ், போன்றோரது நேர்காணல்களையும் கதைகளையும் மொழிபெயர்த்து மிகுந்த சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறது ’உன்னதம்’. ரோலன்பார்த்தின் 'ஆசிரியன் என்பவன் யார்?', மிஸல்பூக்கோவின் 'ஆசிரியனின் மரணம்' என மிக முக்கியமான பின் நவீனத்துவக் கட்டுரைகளை ஒரு ஆரம்ப நிலைப் படைப்பாளியாக எனக்கு வாசிக்க தந்ததும் உன்னதமே.<br /><br />அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைக் கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தள்ளும் இலக்கிய விசாரங்களுக்கு மத்தியில் காத்திரமான அரசியல் விவாதங்களையும், சமூக முரண்களை அலசும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் சமரசமின்றி முன்வைக்கின்றது ’புதுவிசை’. புதுவிசையின் ஒவ்வொரு இதழையும் அழுக்கேறி, பக்கங்கள் கசங்க கசங்க வாசிக்க தீவிர இலக்கிய மனம் பித்தம் கொள்ளும்.<br /><br />தமிழ்க்கவிதை மீதான கனவுகளுக்கும், கவிதை பாய்ச்சலெடுக்கும் பாதைகளின் மீதான கட்டியம் கூறுதலுக்கும் ’புது எழுத்து’ சளைக்காமல் உழைக்கிறது. கடும் சவால்களைக் கடந்தும் இதழை உயிர்ப்போடும் உயிரோடும் வைத்திருக்கும் மனோன்மணி அவர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்குமான அங்கீகாரமாக சிறந்த சிறுபத்திரிக்கைக்கான தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் விருதைப் புது எழுத்து சமீபத்தில் பெற்றது.<br /><br />மானாட மயிலாட ஊடக வன்முறைகளுக்கு மத்தியில் எது கலை, எதற்கு கலை, யாருக்கு கலை என்ற கேள்விகளை சதா எழுப்பிக்கொண்டு, காலம் தின்று வாழும் மண்ணின் கலைகளை, கலைஞர்களை, அவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பதிவு செய்வதோடு, அவர்களை மரியாதை செய்யும் பணியாக கலை இலக்கிய விழாக்களையும் வருடந்தோறும் நிகழ்த்தி வரும் ’மணல் வீடு’, இலக்கிய அரசியல் குறித்து வைக்கும் விவாதங்கள் இலக்கியப் பீடங்களை கூசச் செய்பவை.<br /><br />தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ’நிழல்’ மாற்று சினிமாவுக்கான ஆற்றலுள்ள களம். என்னைப் போன்ற மாற்று சினிமா முயற்சியாளர்களை அடையாளப்படுத்தியதில் நிழல் பத்திரிகை, திரைப்பட இயக்கம் இரண்டிற்கும் தவிர்க்க முடியாத பங்குண்டு., சினிமாவை கருணாநிதி குடும்ப மாஃபியாக்கள் ஆக்கிரமித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில், சுவாதீன முயற்சிகளை கற்பனையில் கூட நினைத்து பார்த்து விட முடியாத வன்சூழலில் நிழல் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து வருவதும் கூட பண்பாட்டுச் சூழலில் மிக முக்கியமான சலனம்.<br /><br />இப்படி, ஒவ்வொரு சிறு பத்திரிகையும், தனிநபர்களை மையமாகக் கொண்ட இலக்கிய அரசியலின் வன்முறைகளுக்கு மத்தியில் தன்னிச்சையாகவும், பிரஞ்யாபூர்வமாகவும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. கார்பரேட் குருக்களாகவும், அதிகாரத்தின் கைக்கூலிகளாகவும், வணிக சினிமாவின் பஞ்ச் டயலாக் வசனக் கர்த்தாக்களாகவும், இணைய ஃபாஸ்ட் புட் பிளாக் எழுத்தாள காளான் பண்ணைக்காரர்களாகவும் இருக்கும் எழுத்தாள பீடங்களின் மேல் பூச்சிக் கொல்லி மருந்தை அடிக்கும் புகை மண்டிய வண்டிகளின் ஓட்டுநர்கள் நமது சிறுபத்திரிகை காரர்கள். அவ்வண்டிகளின் பின்னே தொற்றிக் கொண்டு ஆராவாரித்துக் கொண்டே செல்லும் சாலை சிறுவர்களாய் என்னைப் போன்ற தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள்.<br /><br />என்னளவில் திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் ’திரை’ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்து, ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம்-சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம்.<br /><br />ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.<br /><br /><br />http://www.vallinam.com.my/issue28/interview.html<br /><br />14. தமிழ்ச்சினிமாவில் ஒரு ஹீரோவை சில பில்டப்புகள் கொடுத்து உருவாக்கிவிட்டு, பின்னர் அவர் பெயரை வைத்து சம்பாதிக்கும் மலிவான சூழல் போல தமிழகத்தில் நீங்கள் சொன்ன இதழியல் மடாலயங்களும் செயல்படுவதைப் போன்று வெளியிலிருந்து பார்க்கும் என் போன்ற வாசகர்களுக்குத் தோன்றுகிறது. அது பற்றி கூறுங்கள்...<br /><br />இளம் படைப்பாளராகவும், வாசகராகவும், தமிழ்ச் சூழலின் சந்தைமயச் சூழல் என்னை கவலையில் ஆழ்த்துகிறது. சந்தை என்ற பேரதிகாரத்திற்கு எதிராக எந்த எழுத்தும் உருவாகி விடக் கூடாது என்பதில் இலக்கிய மடங்கள் மிக கவனமாகவே உள்ளன.<br /><br />சர்வதேச பார்ப்பன வலைப்பின்னலை வைத்துக் கொண்டு சமூகத்தின் உள்முரண்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் காலச்சுவடு கண்ணன் தன்னை விக்கி லீக்ஸ் அளவுக்கு நம்பிக் கொள்வதும் , நம்மை நம்ப வைக்கத் துணிவதும் இலக்கியச் சூழலின் சாபக்கேடு. சுந்தரராமசாமியோடு காலச்சுவடு நின்றிருந்தால் இலக்கியப் பிரதியாகவாவது காலத்தின் நினைவில் இருந்திருக்கும். தொண்ணூறுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் பேசி பரப்பி, இஸ்லாமிய வெறுப்பை கக்கிய கண்ணன் இரண்டாயிரங்களில் இஸ்லாமியப் பிரதிகளை விற்கிறார். அவருக்கு பத்திரிக்கை நடத்த தெரிந்திருக்கிறது. அல்லது வாசகர்களின் மறதியையும், முட்டாள்தனத்தையும் சந்தைப் படுத்தும் தந்திரம் கைவந்திருக்கிறது. <br /><br />பார்ப்பனிய சங்கத்திற்கு சென்று பார்ப்பனிய விழுமியங்களைப் பேசிய சுஜாதாவை இலக்கிய கர்த்தாவாக கூவி விற்கும் மனுஷ்ய புத்திரன் மனிதர்களைப் பேதபடுத்திப் பார்க்க முடியாத குழந்தையாகிவிட்டார். அவருக்கு எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் போலிருக்கிறது. இதற்கிடையில், அவர் காலச்சுவட்டில் விட்டு வந்த மூட்டையை வேறு எரித்துவிட்டார்கள். அவருடைய அன்பின் பரிமாணம் எல்லா திசைகளிலும் சந்தை வரை வழிகிறது. மேல்தட்டு பாலியல் அரிப்புகளை சுரண்டும் கார்பரேட் பிரதிகளையும், மிக கவனமாக அரசியல் நீக்கத்தை தணிக்கை முறையாக கொண்ட இலக்கியப் பிரதிகளையும் , புனைவு மொழியாக ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பழைய ஆசிரியப் பிரதிகளையும் அவர் அன்பிற்காகவே உற்பத்தி செய்து தரும் நாயகர்களும் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள்.<br /><br />15.உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. மிகுந்த பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்கள். அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன ?<br /><br />கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாக சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில் தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன, வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில் தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.<br />ஆமாம், நான் பிரக்ஞையோடு தான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாக கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின்(Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.<br /> <br /><br />16.எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்.<br /><br />ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத் தான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.<br />இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.<br /><br />வாசகர் படைப்பாளியாக கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாக புரிந்துக் கொள்ளும் பட்சத்தில், மூலப்ப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்துக் கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகை புதியதாக கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன். <br /><br />17.உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள் , உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?<br /><br />இல்லை. நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும், நோய்மையையும் காட்டியது. அது குறித்து எனக்கு வருத்தம் தான்., <br /><br />சமுகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதட்டம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படை வாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத் தான் மார்க்சிய வாதிகளும் வைக்கிறார்கள், எல்லா வாதிகளும் வைக்கிறார்கள். பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாக சமூகத்தின் கையிருப்பில் இருக்கிறது. <br /><br />ஆனால் பொதுவாக அத்தகைய "சமூக" ஆரோக்கியம்? குறித்து நான் கவலைப்படுவதில்லை.<br /><br /><br />18.கவிதை தவிர வேறெந்த இலக்கிய வடிவத்தில் முயன்றுள்ளீர்கள்? <br /><br />கவிதை தவிர என் கவனமெல்லாம் சினிமா மட்டுமே. <br /><br />19.தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தையும் கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?<br /><br /> யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சனை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ -லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக் கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக் கொடுத்ததும் இனப்போருக்கு முன் தானே நிகழ்ந்தது. <br />இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி.முன்னெடுத்த மார்க்சிய எழுச்சியின் போது பெரும்பான்மை இனமான சிங்களர் களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது. <br /><br />சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் "சர்வதேச குற்றவாளிகளை" காப்பாற்றுமா என்றால் செய்யாது.பாரம்பர்யமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக் கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும். <br />ஆகவே மீனவர் பிரச்சனையை மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க முடியாது. அது அரசியல் பிரச்சனை. <br /><br />ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக் கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடு தான் யுத்தம்.மக்களை சதா சாமானியர் களாக்கி அச்சுறுத்துவது தான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத் தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாக கருவிகளை உற்பத்தி செய்கின்றன.<br />இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் <br /><br /><br />20.தனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின்(செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லவும்.<br /><br />எப்படி கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற சாடிசத்தொடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர்சாமிகள் இறந்தவர்களுக்கு திதி குடுக்கும் வங்காள வரிகுடாவும் - இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதஸ்தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு.உயிர் வாழ்தலை மட்டுமே செய்துக் கொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக் கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்த சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதை எந்த பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.<br />ராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை, என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத் தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது. <br /><br />ஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது. <br /><br />21. ஷோபா சக்தியின் இலக்கிய ஆளுமையும் அதே சமயத்தில் யுத்தம் தொடர்பான நெருக்கமான அவருடைய அனுபவமும் செங்கடல் சினிமாவில் எப்படி வெளிப்பட்டுள்ளது? சினிமாவின் எந்தப் பகுதியில் அவருடைய ஆளுமைத் தீவிரமாக இயங்கியது?<br /><br />ஒரு இலக்கிய வாசகராக ஷோபாசக்தியின் தீவிர காதலி நான். அவரின் பிரதிகளிலேயே ஒரு நூறு திரைக்கதைகள் விரவியிருக்கின்றன. செங்கடலை பற்றி சொன்ன போது, இது தனுஷ்கோடி மீனவ சமூகத்தை கள ஆய்வு செய்ததன் மூலமாக எழுதப்பட்ட கதை, அதன் அடிப்படையிலேயே திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்றேன். குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் வரும் காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள் போன்றவற்றிற்கு அவர் பொறுப்பேற்று உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். ஜெரால்டோடும், என்னோடும் திரைக்கதைப் பணியில் இணைந்துப் பணியாற்றுவதற்கு உற்சாகமாக ஒத்துக் கொண்டார். வசனத்தையும் பொறுப்பேற்று செய்தார். அது அவரின் பெருந்தன்மை. அந்த நிமிடத்தில் இருந்து இன்று வரை செங்கடலில் என்னை விடவும்,ஜெரால்டை விடவும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் அவர்.தயாரிப்பாளர் இருந்தபோது சரி, கைவிட்டபோதும் சரி, எந்த ஆதரவும் இல்லாமல் நண்பர்களிடமும், குடும்பத்திடமும் கடன் வாங்கி படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்திலும், படத்தை தொடர்ந்து முடிக்க முடியுமா, வேறு தயாரிப்பாளர் கிடைப்பாரா என்ற அவநம்பிக்கையும், அலைதலும், விரக்தியுமாய் நொந்து திரிந்த நேரத்திலும், எண்ணற்ற தடைகளும், கல்லடிகளும் அவமானமுமாய் மௌனித்திருக்கும் தருணங்களிலும் அவர் தந்த அசைக்க முடியாத உறுதி எனக்கு பாரிய ஆறுதல். <br /><br />படத்தில் அகதிகளாக நடித்தவர்களும் அகதிகளே. அவர்களைப் பயிற்றுவித்ததும், அவர்களின் அனுபவங்களை வசனங்களாக மாற்றியதும், முக்கியமாக சூரி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியதுமாய் செங்கடலின் ஆக்கத்தில் அவர் பங்கு முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட அகதி கதாபாத்திரத்திற்கு யாரும் சரியாக வராததால், நானும் அகதி தானே, எனக்கு வாய்ப்பு தர மாட்டீர்களா என்று கேட்டதோடு , அதை மிகச் சிறப்பாக நடித்தும் தந்தார்.<br />எந்த சூழ்நிலையிலும், படைப்பாக்க மன நிலையையும், ஆன்மாவையும் சிதைக்க அனுமதிக்காத அவரின் தோழமை செங்கடல் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.<br /><br /><br />22.தங்களின் முந்தைய படைப்புகளின்(குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்? <br /><br />ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.<br /><br />"யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?"<br />செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன். <br />நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.<br /><br />23. இத்தனை சிரமங்களுக்கிடையில் தனிகை குழுவினரால் நிராகரிக்கப்பட்ட செங்கடலைத் திரையிட அடுத்த தங்களின் செயல்பாடு என்ன? தணிகை குழுவினர் சொல்லும் காரணம்தான் என்ன?<br /> <br />வெட்கங்கெட்ட இந்திய சனநாயகம் கலையைக் கண்டு அஞ்சுகிறது. சட்டமன்றம் நாடாளுமன்றம் போன்ற தன் கண்ணாடி கூடுகளை நிஜமான கலை, சிறு கல் கொண்டு எரிந்து நாசம் செய்து விடுமோ என்று நடுங்குகிறது. அவ்வளவு பலவீனமான அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மக்களுக்குமான கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆர்டிகல்(Article) பத்தொன்பதை வாபஸ் பெற்றுக் கொண்டு இந்தியாவில் எமெர்ஜென்சி யை அறிவிக்கட்டும். ஏன், எல்லோரையும் முட்டாளாக்கி சுதந்திர இந்தியா என்று நம்ப வைக்க வேண்டும்?<br /><br />எண்பதுகளிலேயே,மத்திய தணிக்கை குழு, மத்திய சான்றிதழ் குழு என சட்டப்படி மாறிவிட்டது.எல்லோரும் பார்க்கும் படம்(U), அல்லது பெற்றோர் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் பார்க்கும் படம் ( UA ) அல்லது வயது வந்தோருக்கான படம் (A ) என்று சான்றிதழ் வழங்கும் வேலை மட்டும் தான் சான்றிதழ் குழுவிற்கானது.அந்நிலையில் கத்தரிக்கோலை வைத்துக் கொண்டு திரைப்படைப்பாளிகளை அதிகாரம் செய்ய, இவர்களுக்கு யார் உரிமை தந்தது.<br /><br />என் கலையை மக்கள் மன்றத்தின் முன் வைக்க தடை செய்வது என் அடிப்படை உரிமையைப் பறிப்பது அன்றி வேறென்ன? மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் மந்தையாக்கும் குப்பை சினிமா கலாசாரம் "தணிக்கை அதிகாரிகளால் பாராட்டு பெற்ற படம்" என்று ஆளுயுர கட் அவுட் விளம்பரம் வைக்கும் வணிகத்திற்கு மத்தியில் என் உரிமைக்கான குரல் ஒரு பைத்தியக்காரியின் குரலாக இந்த காயடிக்கப்பட்ட தமிழ்ச் சூழலில் பார்க்கப்படுகிறது. <br /><br />24 மணி நேரமும், குறைந்தபட்சம் 200 தொலைகாட்சி சேனல்கள் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறைகளிலும் தணிக்கையில்லாமல் தான் ஓடுகின்றன. இதில் கட்சிக்கொரு ஊடகம் வேறு. இணைய வெளி எல்லோருக்கும் எதற்கும் திறந்தே கிடக்கின்றது. அரை மணி நேரத்திற்குள், ஒரு நூறு விளம்பரங்கள் நம்மீது ஏதோவொரு ஷேம்பூவையோ , சிவப்பழகு க்ரீமையோ , ஆணுறையையோ எறிந்து விட்டுப் போகின்றன. ரேடியோ, பத்திரிக்கை என்று எதிலும் தணிக்கை இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கி சினிமா பார்க்க வரும் பார்வையாளன் மட்டும் எப்படி அரசாங்கத்திற்கு முட்டாளாக தெரிகிறான்?<br /><br />செங்கடலைத் தடை செய்ய மூன்று காரணங்களாம். ஒன்று - படம் நேரடியாக தமிழக இந்திய அரசாங்கங்களை விமர்சனம் செய்கிறது. இரண்டு - படம் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சனம் செய்கிறது. மூன்று - நியதிக்கு புறம்பான ஆபாச மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. <br /><br />படத்தில் பங்கேற்று நடித்த மீனவ, அகதி மக்கள் பயன்படுத்துவது வட்டார வழக்கு சொற்கள். இந்தியப் பாராளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் பயன்படுத்தும் ஆபாச சொற்களை விட மீனவனின் மொழி மேலானதே! அப்படியென்றால் பாராளுமன்றத்தை தடை செய்வோமா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு தன் உறுப்பினர்களை நியமித்து தன் சொந்த மக்கள் பேசும் மொழியையே அவமானப்படுத்துகிறது. விக்டோரியா மகாராணி, அதிகாரத்தின் மன அமைப்புகளில் இன்னும் சாக வில்லை என்பதையே இது காட்டுகிறது.<br />இந்திய இலங்கை நாட்டு நட்புறவுகளை அப்பாவி மீனவர்களின் சடலங்களின் மீது நின்று அரசாங்கங்கள் பாதுகாக்க நினைத்தால், எப்படி மக்களும், கலைஞர்களும் எதிர்க்காமல், உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். அரசை விமர்சிக்க கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதியிருக்கின்றது?<br /><br />ராஜபக்சேயும், மன்மோகன் சிங்கும், கருணாநிதியும், தங்கள் சொந்த மக்களைக் கொன்றார்கள். அரச பயங்கரவாதிகளுக்கு ஒரு கலைஞன் எப்படி பல்லக்கு தூக்க முடியும்.<br />ஒரு வேளை,செங்கடல் உதயநிதி ஸ்டாலின் அண்ட் கோ வழங்கும் படமாக இருந்திருத்தால் , அல்லது சன்பிக்சர்ஸ் பெருமையுடன் திரையிடும் படமாக இருந்திருத்தால், மீனவர்கள் கடலுக்குச் சென்று தாங்களே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்று எடுத்திருப்பார்கள் , தடையேதும் இருந்திருக்காது. காட்சிப் பிழை போன்று இன்டலக்சுவல் திரைப்பட பத்திரிகை நடத்தும் மேதாவிகள் கூட சூட்டோடு சூடாக படத்தை மதித்து, அலசி, ஆராய்ந்து அதிகாரத்திற்கு , முதலாளிகளுக்கு தங்கள் அறிவைக் கப்பம் கட்டியிருப்பார்கள். <br /><br />ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும் தான் என்னைப் பொறுத்தவரை கலை. தணிக்கையில்லாமல் செங்கடலை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது வரை நடக்கும் என் போராட்டம். I know, it is a lonely fight.<br /><br />தமிழ் நாட்டின் அறிவுத்துறையில் தொண்ணூறு சதவிகிதம் கேடு கேட்ட கும்பல். பிரதியைக் குறித்தல்லாமல் பிரதியாளரைக் குறித்துப் பேச்சைப் பெருக்கும் சாதீயப் புற்று நோய் பிடித்தவர்கள். அவர்கள் செங்கடலை மௌனித்து விடலாம் என நினைப்பது நடக்காது.ஏனெனில் செங்கடல் அவர்களுக்காக எடுக்கப்பட்டதல்ல.<br /><br />ஒரு பார்ப்பனரல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி சிறுபான்மை இனப் பெண் அறிவுத்துறையில், கலைத்துறையில் பயிற்சி பெற்று எடுத்த தேவதைகள் என்ற ஆவணப்படம் மும்பை சர்வதேச திரைப்படப் பிரிவில் தங்கச் சங்கு அங்கீகாரத்தைப் பெற்றது தற்செயலானதல்ல. <br /><br />எனக்கு என் நேர்மையிலும், மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிலும் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-60766933920103532332010-08-22T09:18:00.000+04:002010-08-22T09:21:01.285+04:00உங்களுக்கு லோககுரு, எங்களுக்குப் பெரியார்திடீரென்று, அடைமொழிகள் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலின் அடைமொழிக் கலாச்சாரம் தினமணிக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தினமணிக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுக் குமட்டல் அதன் தலையங்கத்தில் (04.08.2010) கொட்டிக் கிடக்கிறது.<br /><br />பார்ப்பனியத்திற்கு எப்போதும் ஒரு ‘சிறப்புப் பண்பு’ உண்டு. எந்தவொன்றும் அதற்கு மட்டுமே ஏகபோக சொத்தாக, உரிமையாக இருக்கும் வரை அது புனிதத் தன்மையுடையது, தனித்தன்மையானது, தெய்வீகமானது, (மநு)நியாயமானது. அதுவே, காலச்சூழலினால் மற்றவர்களுக்கும் உரியதாகும் நிலை ஏற்படும்போது தேவையற்றதா(க்)கிவிடும், மதிப்பில்லாததா(க்)கிவிடும். அதுதான் பார்ப்பனியம்.<br /><br />அப்படித்தான் அடைமொழிகள் அவாள்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தவரை, சொல்லச்சொல்ல இனித்தது. இப்போது அடுத்தவர்களுக்கும் அடைமொழிகள் கொடுக்கப்படுகின்ற மாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.<br /><br />அடைமொழிகள் அர்த்தமில்லாதவையாம்!<br /><br />அப்படியானால், ‘மகா பெரியவா’, ‘லோக குரு’, ‘ஜெகத் குரு’ போன்ற அடைமொழிகளும் கூட அர்த்தமில்லாதவைகள்தானே? முதலில் லோக குருவையும், ஜெகத் குருவையும் (அடைமொழிகளையாவது) தூக்கிவீசட்டும்.<br /><br />இன்றும் அவர்கள் ராஜகோபாலச்சாரியாரைப் பற்றிப் பேசும் போதும், எழுதும்போதும் ‘சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார், ‘மூதறிஞர்’ ராஜாஜி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். சக்கரவர்த்தியும், மூதறிஞரும் தினமணிகளுக்கு அருவருப்பைத் தரவில்லையே? ஏன்?<br /><br />மேலே சொன்னதுதான் காரணம். அவாளுக்கு என்றால் அமுதம் அடுத்தவர்களுக்கு என்றால் அசிங்கம்.<br /><br />“பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாச்சார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவுவாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறது தினமணி.<br /><br />தன்னைவிட வயதில் சிறியவர்களையும், சிறு குழந்தைகளையும்கூட வாங்க, சொல்லுங்க என்று மரியாதையுடன் அழைத்தவர் தந்தைபெரியார் - இது திராவிடக் கலாச்சாரம்.<br /><br />60 வயது முதியவர்களையும் 6 வயது மழலை, ‘அடே’ என்று முகத்தில் அறைந்தாற் போல பெயர் சொல்லி அழைக்க வைத்தது பார்பனியம். அழைப்பது மனைவியையா, மகளையா, சகோதரியையா, மூத்தவரையா, இளையவரையா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி விளிச் சொற்களைக் கொண்டது அவாளின் பேச்சுவழக்கு - இது ஆரியக் கலாச்சாரம்.<br /><br />பகுத்தறிவுக்குப் பனியாக்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய நிலைமை இங்கே இல்லை.<br /><br />ஒரு முழத் துண்டுத் துணியைக்கூட அடிமைத்தனத்தின் அடையாளமாக்கியது ஆரியம். அதை உடைத்தது திராவிட இயக்கம். அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க.வைத் தொடங்கியபோது அனைவரும் தோளில் துண்டு அணிந்து மேடையில் தோன்றினர். அதிலும் அண்ணா அவர்கள் அணிந்திருக்கும் துண்டு தரையில் புரளும். பிறகு கழகத் தோழர்களைத் ‘துண்டுக்காரன்’ என்று கேலிபேசினர். காரணம் அவாளின் கழுத்தை மட்டுமே சுற்றியிருந்த அங்கவஸ்திரம், அனைவரின் தோளிலும் துண்டாக ஆடியதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை அவர்களால்.<br /><br />சென்னை வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இங்கே சொல்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும். அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள்படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனே நிறுத்த வேண்டாம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கலாம்” என்று சொல்ல, அதைக் கேட்ட மற்றவர்கள் ஆச்சரியத்துடன், “சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி அந்த அடிமை முறை தொடரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் சொன்ன விடை பார்ப்பனீய சூழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது. “வேறொன்றுமில்லை, விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள். அப்போது அவர்களை ‘மை லார்டு’ என்று வழக்கறிஞர்கள் அழைத்தனர். அதற்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துவந்தனர். அவர்களையும் ‘மை லார்டு’ என்று அழைத்தோம். அப்போதெல்லாம் உறுத்தாத அடிமைத்தனம், பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நீதிபதிகள் ஆகியுள்ள இக்காலத்தில் மட்டும் ஏன் உறுத்துகிறது? இந்த நீதிபதிகளையும், சிலகாலம் ‘மை லார்டு’ என்று அழைக்கலாம். தங்களை மேல்சாதியினர் என்று கருதிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், வெள்ளைக்காரர்களை மை லார்டு என்று அழைத்த நாவால், நம்மவர்களையும் சில காலம் அழைக்கட்டுமே!” என்று விளக்கமாக விடைசொன்னபோது, மெல்ல மெல்லக் கரவொலி, கூட்ட அரங்கை நிறைத்தது.<br /><br />பார்ப்பன விசமம் எப்படியயல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா?<br /><br />அப்படித்தான் சூத்திரத் தலைவர்கள் அடைமொழிகளோடு அழைக்கப்படுவதைக் கண்டு குமுறியிருக்கிறது தினமணி. நம்முடைய முதல்வர் அவர்கள் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுவது கட்டாயத்தினால் அல்ல, கலைத் துறையிலும், சமுதாயத்திலும் அவருடைய எழுதுகோல் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக, சுயமரியாதைமிக்க ஒரு சக கலைஞனால் வழங்கப்பட்டதுதான் கலைஞர் என்னும் அடைமொழியே தவிர, வலியப்போய் ஒட்டிக்கொண்டு வந்த புரட்சிப்பட்டமல்ல.<br /><br />தன்னுடைய மாணாக்கர்களேயானாலும், அண்ணாவையும், கலைஞரையும் அவர்கள் வகித்த பதவிக்கு மதிப்புக் கொடுத்து, நமது முதலமைச்சர் அண்ணா என்றும், கலைஞர் என்றும் மரியாதையோடு அழைத்தவர் தந்தை பெரியார். மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் கலைஞரை பெயர் சொல்லி அழைத்ததில்லை. கலைஞர் என்றுதான் குறிப்பிடுவார். இன்று இருக்கும் தலைமை, அ.தி.மு.க. தலைமை மட்டுமல்ல பார்ப்பனீயத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி. அங்கிருந்து சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது.<br /><br />மனிதர்களையே மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்கள் கொடுத்த பதவியை மதிக்கத் தெரியாததில் வியப்பில்லைதான்.Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-40157550085289437062010-08-01T09:52:00.001+04:002010-08-01T09:54:55.305+04:00தமிழ் சினிமாவின் கலக கலைஞன்<a href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/TFUMAIUIjJI/AAAAAAAAAxo/-xGOt78Gh1Q/s1600/p42b.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 191px; height: 350px;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/TFUMAIUIjJI/AAAAAAAAAxo/-xGOt78Gh1Q/s400/p42b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500315716274392210" /></a><br /><blockquote></blockquote>கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் <br /><br /> <br />சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...<br /><br />'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!<br /><br />கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!<br /><br />பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!<br /><br />அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!<br /><br />கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!<br /><br />மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!<br /><br />இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. <br /><br />கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்! <br /><br />உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்! <br /><br />திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!<br /><br />சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!<br /><br />கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்! <br /><br />புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!<br /><br />ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!<br /><br />கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!<br /><br />கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.<br /><br />ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!<br /><br />ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!<br /><br />கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!<br /><br />எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!<br /><br />டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!<br /><br />கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!<br /><br />'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!<br /><br />சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!<br /><br />ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-28616241.post-82110463581324932522010-05-17T11:55:00.001+04:002010-05-17T12:15:53.217+04:00துப்பட்டாவும் சிலுவையில் தொங்கும் யேசுவும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S_D7HqbbDoI/AAAAAAAAAxg/IrR298r_glE/s1600/Ladies-Punjabi-Suit-with-Dupatta.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/S_D7HqbbDoI/AAAAAAAAAxg/IrR298r_glE/s400/Ladies-Punjabi-Suit-with-Dupatta.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5472149656322117250" /></a><br />அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இச்சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டிய இடத்தில்தான் நாமிருக்கிறோம். பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக்கிடக்கிறது. சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு/ தாளிணிமை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல்/ காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது. தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதே கசப்பான உண்மை.<br /><br />சென்னை லயோலோ கல்லூரியில் கடந்த டிசம்பர் 15 சனிக்கிழமையன்று காட்சி ஊடகவியல் துறையினர், கனாக்களம்-2007 கருத்தரங்கின் கலந்துரையாடலில் ‘சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணி மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன். ‘உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் ஜீன்சும் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள்- துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.<br /><br />கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், ‘சிறிது நேரம் பொறுங்கள் நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில், ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து ‘இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. “சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில். சுதந்திரமான சினிமாவை நேசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன். அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்சினை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.<br /><br />கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாச்சாரத்தை துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக்கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்கிறது?<br /><br />லயோலா கல்லூரியில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விசயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். படிப்பிலும் கவனம் செலுத்தமுடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது. இதை விசாரித்துக்கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார்.<br /><br />சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ‘ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள்-நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதி கவர்னர்- ஒரு வெள்ளை துரையிடம் முறையிட்டாராம். வெள்ளைத்துரை அதற்கு, ‘பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாச்சாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார். லயோலா கல்லூரி போன்ற சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடெல்லாம் என்னாவது?<br /><br />பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பித்திருக்கிறது. நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியேயிருந்தாலும் சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்? ‘உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும். குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை, மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாக செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல மொத்த சமூகமும்தான்.<br /><br />அரசோ ஆணையோ நிறுவனமோ ஏன் தனிமனிதனோ உறவோ வாழ்க்கைத்துணையோ சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக்கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம். யேசு சபை, புரட்சி, கலக இறையியல் என்றெல்லாம் ஊரை ஏமாற்றாமல் லயோலா போன்ற கல்விக்கூடங்களும் தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாச்சாரத்தையும் காத்துக்கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக்கொள்ளலாம். <br /><br />- லீனா மணிமேகலை,<br />கவிஞர், திரைப்பட இயக்குநர்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-20052529976663130582010-04-25T09:27:00.003+04:002010-04-25T09:34:07.102+04:00உடல்மொழி அரசியல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQE5Hi7-YtaYl-Y8U61u4nnov5tEYYb88JIJ79kRO3jq61029uOoYuu7-JBOoXouJsrZ_OkySzZOId_d92dstxEnBBJM_GHrk8w3pCjZ_rmjPfLovC0sp8yH1JyWCnmVtXss-39A/s1600/leena_manimekalai.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQE5Hi7-YtaYl-Y8U61u4nnov5tEYYb88JIJ79kRO3jq61029uOoYuu7-JBOoXouJsrZ_OkySzZOId_d92dstxEnBBJM_GHrk8w3pCjZ_rmjPfLovC0sp8yH1JyWCnmVtXss-39A/s400/leena_manimekalai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5463944140215808658" /></a><br /><br />ஒரு பெண் ஏன் எழுத வருகிறாள்? வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.<br /><br />வெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.<br /><br />ஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும். <br /><br />ஆம் நான்தான்<br />உலகின் அழகிய முதல் பெண்<br /><br />ஒரு நாள்<br />என் தோலைக் கழற்றி வீசினேன்<br />கூந்தலை உரித்து எறிந்தேன்<br />துவாரங்களில் ரத்தம் ஒழுகும்<br />மொழுக்கைப் பெண்ணென <br />காதல் கொள்ள அழைத்தேன்<br />காதலர்கள் வந்தார்கள்<br />கரிய விழிகள் கொணட அவர்கள்<br />நெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்<br />குருதியை நூலாக்கித் திரித்து<br />செந்நிறத்தின் ஊடுபாவிய வலையை<br />எட்டுக் கால்களில் விரித்தார்கள்<br />அந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்<br /><br />அப்பொழுதும் சொன்னேன்<br />நான் பூரணமாய் காதலிக்கப்பட்டவள்<br />மறுபடி நானே<br />உலகின் அழகிய முதல் பெண்<br /><br />-லீனா மணிமேகலையின் வலைத்தளத்தில் இருந்துAnonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-14726031217662792302010-02-27T09:22:00.000+04:002010-02-27T09:24:36.382+04:00ஆரியர் கற்பும் - திராவிடர் கற்பும்கற்பு பெண்களுக்கே உரியது. ஆண்கள் கற்பாய் இருப்பதற்குத் தமிழில் வார்த்தைகளே கிடையாது. ஏன் ஆரியத்திலும் வார்த்தைகளே கிடையாது.<br /><br />அதுமாத்திரமா? உலகில் வேறு எந்த மொழியிலும் வார்த்தைகள் இருப்பதாகக் காணப்படுவதில்லை. என்றாலும் இருக்குமோ என்னமோ தெரியாது. நம் நாட்டு ஆண்கள் கற்பாய் இருக்கவேண்டும் என்பதற்கு மதக் கட்டளை இருப்பதாகக்கூடத் தெரியவில்லை. கடவுள்களாவது கற்பாக இருந்தார்களா என்றால் அதையும் காணமுடியவில்லை.<br /><br />ஆரியர் கற்பும் - தமிழர் கற்பும்<br /><br />அது எப்படியோ போகட்டும். பெண்கற்பு தமிழர்களுக்குத்தான் தொல்லையாக முடிந்ததே தவிர ஆரியர்க்கு அதில் எவ்விதத் தொல்லையுமில்லை. ஆரியர் கற்புக்கும் தமிழர் கற்புக்கும் தத்துவத்திலேயே (டெபனிஷனிலேயே) அதிக வித்தியாசமிருக்கிறது.<br /><br />ஆரியர் கற்புக் கு வியாக்கியானம் அதாவது யோக்கியதாம்சம் வெகு சுலபமானது.<br /><br />எப்படி என்றால் கற்புக்கும் பிற புருஷரைக் கூடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப்போனால் அருந்ததி, திரவுபதை, சீதை, அகலியை, தாரை, பிருந்தை முதலியவர்கள் தலை சிறந்த கற்புக்கரசிகள். இவர்களை நினைத்தாலே சகல பாபமும் நாசமாகிவிடும் என்பதோடு இவர்கள் கடவுள்களாகவும் விளங்குகிறார்கள்.<br /><br />அருந்ததியின் கற்பு<br /><br />இவர்களுள், அருந்ததியானவள் பெண்களுக்கு விபசாரித்தனம் செய்ய லைசென்சு கொடுத்தவள். உலகத்தில் ஒழிந்த இடமும் ஆண்பிள்ளைகளும் இருக்கிறவரை பெண்கள் கற்பாக இருக்க முடியாது என்று சொன்னவள். அதாவது இயற்கையாக யாரும் கற்பாக இருக்க முடியாது என்பது ஆகச் சொன்னவள். அப்படி இருக்க விபசாரித்தனத்துக்குத் தண்டனை இருக்கவும் நியாயமிருக்காது. திரவுபதையின் கற்புநெறி திரவுபதை அதை நடத்தையில் காட்டினவள். அய்ந்து பேருடன் நான் கலவி செய்து வந்தும், ஆறாவது புருஷன் மீது எனக்குக் காதல் இருந்து வந்தது. என் இருதயம் இவைகளை விபசாரித்தனம் என்று கருதவே இல்லை. ஏனெனில் ஆண் பிள்ளைகள் உலகத்தில் இருக்கும்போது பெண்கள் எப்படிக் கற்பாயிருக்க முடியும் என்பதாகக் கூறிவிட்டாள்.<br /><br />உடற்சம்பந்தத்தால் கற்பு கெடாது<br /><br />சீதை என் மனம் ஒருவரிடமும் விருப்பம் கொள்ளவில்லை. என் உடலைப் பற்றி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓங்கி அடித்து விட்டாள். ஆதலால் உடல் சம்பந்தத்தால் கற்பு கெடுவதில்லை என்று சீதை ஒரு விலக்கு விதி ஏற்படுத்திவிட்டாள்.<br /><br />விபசாரித்தனத்துக்கு இலக்கியம்<br /><br />தாரையின் கற்பு சங்கதி விபசாரித்தனத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் இலக்கியக் கலையாகும். விபசாரித்தனம்தான் பெண் ஜென்மத்துக்கு இன்பமளிக்கக் கூடிய சாதனம் என்பதாக விளக்கியவள் தாரையே.<br /><br />அகலிகை கற்பு சங்கதி<br /><br />நல்ல பெண்களைக் கண்டால் எப்படிப் பட்டவனானாலும் ஆசைப்படுவது இயற்கை யென்றும், கவுரவமும் பெருமையும் உள்ள மனிதன் ஆசைப்பட்டால் பெண்கள் மனம் இளகுவது இயற்கைதான் என்றும், இதனால் தப்பிதம் ஒன்றும் இல்லை யென்றும், புருஷனுக்குக் கோபம் வருவதும் அந்தச் சமயத்தில் இயற்கையென்றும், பிறகு அது மாறிப்போகும் என்றும், அனுபவித்த இன்பம் எந்நாளும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றும் எடுத்துக்காட்டினவள்.<br /><br />ஆரியர்களில் இந்தத் தெய்வீகப் பெண்களின் கற்பு இப்படி இருக்குமானால் மற்றச் சாதாரணப் பெண்களின் கற்பைப் பற்றிப் பேசுவது நேரத்தைக் கொலை செய்வதாகும். ஆரியர்களின் கற்பு இந்த விதமான யோக்கியதாம்சங்கள் கொண்டிருப்பதால் அவர்கள் மேலோர்களாகவும் உண்மையான மேன்மையான வாழ்வு வாழ்கின்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.<br /><br />தமிழர்களின் கற்பு தமிழன் கதியைப்பார்த்தால் பரிதாபகரமாய் இருக்கிறது. கண்ணகி கற்பு அவர்கள் வாழ்வையே கெடுத்துவிட்டது. அவ்வளவுதானா? அவர்கள் அரசர்களையும் கெடுத்தது; அவர்கள் நாட்டையும் கெடுத்தது; ஒரு முலையும் திருகி எடுக்கப்பட்டது. இவ்வளவோடு போகாமல் நிரபராதிகள் எல்லாம் வெந்து சாம்பலானார்கள். அது மாத்திரமா? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறமாதிரி பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் வெந்து சாம்பலானார்கள்.<br /><br />இது தமிழ்க் கற்புக்கரசியின் கண்ணகியின் கட்டளையாம். இப்படிக் கட்டளை இட்டவளுக்குக் கோவிலாம், கொண்டாட்டமாம். இவள் பாண்டிய நாடு பூராவையும் எரித்துச் சாம்பலாக்கி இருந்தால் இன்னும் பெரிய கடவுளாக ஆயிருப்பாள் போலும். ஆகவே ஆரியர்கள் கற்பு முறை அவர்களுக்கு எவ்வளவு இலாபத்தைக் கொடுக்கிறது என்பதும் அவர்களைப் பார்த்துக் காப்பி அடிக்கும் தமிழர்கள் கற்பு முறை நமக்கு எவ்வளவு தொல்லையையும் கேட்டையும் கொடுமையையும் கொடுக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.<br /><br />கற்பு மக்களுக்கு வேண்டும், கட்டாயம் வேண்டும் ஆனால் ஆண்களை அயோக்கியர்களாக ஆக்கும் கற்பு அயோக்கியர்களாக ஆவதற்கு வசதி அளிக்கும் கற்பு, தூண்டும் கற்பு, குடும்பத்தை, வாழ்க்கையை, பெண் உரிமையைக் கெடுக்கும் கற்பு, மனித சமுதாயத்து ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும், குழந்தை, குட்டி, பெற்றோர், உற்றார் ஆகியவர்களுக்காகிலும் எவ்விதப் பயனும் அளிக்காது. அளிக்காது என்பதோடு அதற்கு ஒரு மோக்ஷமுண்டு என்பது மகா அயோக்கியத்தனம் என்றே சொல்லுவேன்.<br /><br />தந்தை பெரியார் “குடிஅரசு” 9-7-1943Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-48723362809892671022010-02-15T10:00:00.002+04:002010-02-15T10:05:38.980+04:00பெரியார் ஈவெரா சிந்தனைகள் புத்தக வெளியீடுபெரியார் நாகம்மை அறக் கட்டளையின் தலைவர் வே. ஆனை முத்து, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ இரண்டாம் பதிப்பை 20 தொகுதிகளாக, 9000 பக்க அளவில் வெளியிடவிருக்கும் செய்தியை ‘முர சொலி’ உள்ளிட்ட நாளிதழ்களிலும், சிற்றிதழ்களிலும், மக்கள் தொலைக் காட்சியிலும் விளம்பரமாக வெளி யிட்டுள்ளதன் வழியாக அறிந்து, நாம் மகிழ்ச்சி அடைகிறோம். பெரியாரிய சிந்தனைகள் முழுமையாக மக்களிடையே சென்றடைய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சிந்தனைகளை தோழர் வே. ஆனை முத்து பெரியாரின் ஒப்புதலுடன் வெளியிட்டார். அந்த ஆவணம் மட்டுமே இதுவரை பெரியார் சிந்தனைகளின் ஒரே தொகுப்பாக இருந்து வந்தது. இப்போது வெளி யிடப்பட இருக்கும் தொகுப்புகளின் மொத்த விலை ரூ.5800 என்றும், முன்பதிவாக, ஒரே தவணையில் செலுத்தினால் ரூ.3500 என்றும், இரண்டு தவணைகளில் செலுத்தினால் ரூ.3800 என்றும் டிசம்பர் இறுதிக்குள், “பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக் கட்டளை” என்ற பெயரில் பண விடை / காசோலை எடுத்து, 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றும், தோழர் வே. ஆனைமுத்து, தமது அறக்கட்டளை சாhபில் இதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. பெரியாரியலைப் பரப்பும் முயற்சிக்கு, ஆதரவினை வழங்குவது, பெரியாரி யல்வாதிகளின் கடமையாகும்.<br /><br />வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)<br /><br />PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,<br /><br />திரு.வே.ஆனைமுத்து,தலைவர்<br />பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,<br />19,முருகப்பா தெரு,<br />சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா<br /><br />என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.<br /><br />தொலைபேசி எண்: + 91 44 2852 2862<br /><br />மின்னஞ்சல் முகவரி:<br />sinthaniyalan@yahoo.in<br />periyar_era@yahoo.in<br /><br />நூல் வெளியீடு:<br />அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் வரும் மார்ச் 23ம் தேதி கலைஞர் அவர்கள் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டு சிறப்பிக்கிறார்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-66294209304097905402010-02-13T12:02:00.000+04:002010-02-13T12:06:00.266+04:00இதை படிச்சா சிரிப்புதான் வருது,வரனும்நம் தமிழினத் தாய்மார்களை கருத்த எருமை போன்ற தடிச்ச தமிழச்சி என காறித் துப்பிய மலையாளத்துப் பார்ப்பான் ஜெயராமனுக்கு ஆதரவாக சில முற்போக்கு அங்குலி மாலாக்கள் கிளம்பி இருக்கின்றன. ஊரில் எதுவும் நடந்து விடக் கூடாது. நடந்து விட்டால் இந்த அங்குலிமாலாக்களுக்கு எப்படித்தான் அலாரம் அடிக்குமோ தெரியாது. உடனே மார்க்சையும் அழைத்துக் கொண்டு பாசிசத்தினை கழுவ வந்து விடுவார்கள். நல்லவேளை கார்ல் மார்க்ஸ் உயிருடன் இல்லை. இருந்தால் இந்த வெங்காயத் தோல்களை கூட்டி அள்ளிக் கொட்டியிருப்பார் குப்பையில்...<br /><br />கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ஈழத்தின் பேரழிவு உலகத் தமிழ் சமூகத்தின் மீது மிகப் பெரிய சோக அவலமாக கவிழ்ந்திருக்கிறது. உலக வல்லாதிக்க நாடுகளும், இந்தியாவும் குறிப்பாக மலையாளிகளும் காத்திருந்து நம் இனத்தினை காவு கொடுத்து அழித்தார்கள். நம் கண்ணெதிரே நாடு கட்டி வாழ்ந்த நம்மினம் நாதியற்று கம்பி வேலி சிறைகளுக்குள் வெம்பிக் கிடக்கிறது. உயிரைக் காத்துக் கொள்ள உறவைத் தேடி வந்த மீதி சனம் அகதி முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டு போன்ற இடங்களில் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தமிழர்கள் மிகப் பெரிய உளவியல் போருக்கு மத்தியில் கண்கலங்கி நின்று கொண்டிருக்கிறார்கள். இத்தனை அவலங்களுக்குப் பிறகும் மீள் எழுவதற்கான சாத்தியங்கள் குறித்து பல கேள்விகளோடு தமிழினம் இன்று நின்று கொண்டிருக்கிறது. தாயகத் தமிழர்களை விட இனமான உணர்விலும், வீரத்திலும், தொன்ம இனம் வழி வந்த அறத்திலும் நின்ற ஈழத் தமிழர்களே இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இங்கோ ஏற்கனவே மார்வாடிகளும், சேட்டுகளும், மலையாள சேட்டன்களும் தமிழகத்தினை தொழில் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் ஆக்டோபஸ் விழுங்குவது போல விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழுக்கு இடம் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. கல்விக் கூடங்களில் தமிழ் இல்லை. சமூக வாழ்வியலில் தமிழ் இல்லை. பேச்சிலோ,எழுத்திலோ தமிழ் இல்லை. இளைஞர்கள் மீது கவிழும் புதுப்புது பண்பாட்டு வேர்களில் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மொழிக்கும் இடமில்லை. சென்னை நகரம் மார்வாடிக்களின் கைகளிலும், ஆந்திர, மலையாளிகளின் கைகளிலும் சென்று கொண்டே இருக்கிறது. நடைபாதைகளில் நாதியற்றுக் கிடக்கிறான் விவசாயத்தினை விட்டு, கிராமத்தை விட்டு, பட்டணத்திற்கு பிழைக்கப் போன தமிழன்.<br /><br />[சீமான்] அதனால் தான் தன்னைக் காத்துக்கொள்ள, தன் பண்பாட்டை காத்துக் கொள்ள தமிழ் தேசிய அமைப்புகள் செயல்படத் துவங்கி உள்ளன. ஜெயராம் வீடு தாக்கப்பட்டது வன்முறை என்றால், அதைத் தாண்டிய வன்முறை மலையாள ஜெயராம் உதிர்த்த சொற்கள். பொருட்கள் மீதான வன்முறையின் தாக்கத்தினை விட கருத்துக்கள் மீதும், ஓட்டு மொத்த இனத்தின் அடிப்படை உருவகங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. அவை சொற்களாக இருந்தாலும் கூட அவை மூர்க்கமானவையே. வெகு நாட்களாக ஒடுக்கப்பட்டவன் திமிறி எழுவது அவ்வளவு சுமூகமாக இயல்பாக இருக்காதுதான். அதனால் எதையும் எதிர்த்துக் கேட்காதே, மலையாளத்தான் உன் தாயின் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட கண்டன ஆர்பார்ட்டம், மனிதச் சங்கலி, உண்ணாவிரதம் ஆகியவை செய்! காறி உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்காதே! நீ துடைத்தால் அது மலையாளத்தானுக்கு எதிரான வன்முறை என்று அங்குலிமாலா உள்ளீடான வார்த்தைகளில் அறிவுஜீவித்தனம் பேசுகிறார்.<br /><br />ஜெயராமின் கருப்பின கருத்தியல் அவரின் ஆரிய மனவியலின் சின்னம். ஆரிய புளுகுப் புராணங்களில் தமிழர்களை அரக்கர்களாகவும், குரங்குகளாகவும் படைத்த ஆரிய படைப்பு மனம் தான் இன்றளவும் உயிருடன் இருந்து தமிழச்சியை கருத்த எருமை என எகத்தாளம் பேச வைக்கிறது.<br /><br />தமிழ் தேசியவாதிகளுக்கு கருத்தியல் பலம் இல்லையாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய இலக்கண வளமையைக் கொண்டு, மொழியியல், பண்பாட்டியியல், அரசியல் என அனைத்து சமூகவியல் கூறுகளையும் உலகிற்கு கற்பித்த ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு கருத்தியல் பலம் இல்லையென்பது ஜெயராம் இழிவுபடுத்திய சொற்களுக்கு நிகரான அரசியல் தன்மை கொண்டவை. என்ன செய்வது எமக்கு எதிராக உதிர்க்கப்பட்ட சொற்களின் ஊடாக இருந்துதான் எங்களுக்கான கருத்தியல் பலத்தினை நாங்களே உண்டாக்கி கொள்ள வேண்டி இருக்கிறது.<br /><br />இனம் அழியும்போது கூட எதிர்த்துக் கேள்வி கூட கேட்க முடியாத இயலாத அச்ச மன நிலையை அரசு இயந்திரங்கள் மிகச் சரியாக ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் மத்திய அரசின் உயர் பதவிகளில் உளவுத் துறைகளின் உச்சப் பதவிகளில் இன்று மலையாளிகளே இருக்கின்றார்கள். முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல்களில் நமக்கு மிகப்பெரிய எதிரிகளாக மலையாளிகள் இருக்கின்றார்கள். வேறு எந்த இனத்தினைக் காட்டிலும் நம் ஈழ இனத்தின் ரத்தம் மலையாளிகளின் கரங்களில் தான் படிந்திருக்கிறது. ஜெயராமின் சொல்லாடல்களுக்குள் எங்களை ஈழப் போரில் வீழ்த்திக் காட்டிய மலையாள இனத் திமிர் ஒளிந்திருக்கிறது. மலையாளப்பார்ப்பானை நேரடியாக ஆதரிக்க கூச்சப்பட்டுக் கொண்டு “சும்மா இருந்தவன அவன் காறி துப்புனது தப்புதான் ஆனா இவன் திருப்பி அடிச்சது ரொம்ப ரொம்ப தப்பு” என்று கருணாநிதி பாணியில் அங்குலி மாலா முரசொலித்திருக்கிறார்.<br /><br />பிரச்சனை இவர்களுக்கு என்னவென்றால், மலையாளத்தான் திட்டியது அல்ல தமிழன் தட்டிக் கேட்டதுதான். இந்த லட்சணத்தில் மலையாளத்தானுக்கு ஒரு கையில் குடை பிடித்துக் கொண்டு மறு கரத்தால் உழைத்துச் சோர்ந்த கரங்களோடு கைக் கோர்ப்பார்களாம் இவர்கள்.<br /><br />நம் இனம் அழியும் போது நாம் அசாதாரணமாக கடைப்பிடித்த மவுனம் தான் இந்த மலையாளப் பார்ப்பான் ஜெயராமின் வாய்க் கொழுப்பிற்கு காரணம். ஜெயராமின் கொழுப்பு மிகுந்த வார்த்தைகளை தமிழன் வழமைப் போல மவுனமாக கடந்திருந்தால் இந்த அங்குலிமாலாவிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. தட்டிக் கேட்கிறானே என்ற அச்சமும் தவிப்பும் அங்குலிமாலாக்களை வார்த்தைகளை மாற்றிப் போட்டு வித்தை காட்ட வைக்கின்றன. கேட்டால் வன்முறையாம். இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் இந்த அகிம்சை (?) மார்க்சியவாதி சொல்கிறார். இந்த கொழுப்பினை தட்டிக் கேட்டால் அங்குலிமாலா நாம் தமிழர் இயக்கத்தினையும் சிவசேனாவையும் ஒப்பிடுகிறார். நாம் வெகு தீவிரமாக எதிர்க்கக் கூடிய மதவாத அரசியலின் மராட்டிய முகமான சிவசேனாவிற்கு கூட மராட்டிய மக்களினத்தின் வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அங்குலிமாலா போன்ற முற்போக்கு முகமுடிகளுக்கு எவ்விதப் புரிதலும் அறிதலும் இல்லை.<br /><br />தமிழ்ப் படங்கள் மலையாளப் பெண்களை இழிவுப்படுத்துகின்றன என அங்குலிமாலா வெகுவாக வருந்துகிறார். அதனால்தான் ஜெயராமும் நம்மினப் பெண்களை இழிவுபடுத்த உரிமைப் படைத்தவராகிறார் என சொல்ல வருகிறார் அங்குலிமாலா. இந்தியா முழுவதும் தேசிய இனங்களின் தன்னுரிமை குறித்தான சிந்தனை செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் பல்வேறு மாநிலங்களில் அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுடைய மொழியையும், பண்பாட்டினையும் காக்க போராடத் துவங்கியுள்ளார்கள். அதனுடைய ஒரு வடிவம் தான் ஜெயராம் வீட்டு மீதான தாக்குதல்.<br /><br />தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வந்து எங்களோடு சகோதரர்களாக அமைதியாக வாழலாம். ஆனால் எங்களை இழிவு படுத்தவும், சிறுமைப்படுத்தவும் எவருக்கும் உரிமை இல்லை. சர்வதேசியம் பேசியவர்களும் பொதுவுடைமை உலகை உருவாக்கக் கிளம்பியவர்களும் சேர்ந்து கொண்டுதான் ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தார்கள். இனி எங்களுக்கான அரசியலை எங்களுக்கான தத்துவங்களை நாங்கள் எங்களின் தொன்ம இலக்கிய மரபின் ஊடாகவே அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.<br /><br />நாங்கள் வீழ்ந்தவர்கள்; தோற்றவர்கள். எங்கள் காயத்தின் ரத்தம் கூட இன்னும் உலரவில்லை. எங்களிடம் அறம் பேசும் அங்குலிமாலாக்கள் முதலில் மலையாளிகளிடம் போய் பேசி, கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரட்டும். எதற்கெடுத்தாலும் எம் தந்தை பெரியாரை இழுப்பதை இந்த மார்க்சியவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று தனித்தமிழ் நாடு கேட்ட தந்தை பெரியார் இன்று உயிருடன் இருந்தால் திராவிடத்தின் பேரால் மலையாள பார்ப்பனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டு தமிழனை தூக்கி சிறைக்குள் போடும் பிழைப்புவாத அரசியல்வாதிகளை தடி கொண்டு அடிப்பார்.<br /><br />மலையாளிகள் பல்வேறு நிலைகளில் இன்று தமிழர்களின் உழைப்பையும், ஆற்றலையும் சுரண்டும் மிகப் பெரிய சக்தியாக விரிந்திருக்கின்றனர். ஊருக்கு ஊர் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை பரப்புகிறது. அரசு அதிகாரங்களில், மத்திய அரசின் முடிவெடுக்கும் பதவிகளில் இன்று மலையாளிகளின் கரமே ஒங்கி இருக்கிறது. அதனால் தான் ஜெயராமை வீட்டினை தாக்கியதாக சொல்லப்படும் நாம் தமிழர் இயக்கத் தோழர்களின் கைதுகளுக்குப் பிறகும் எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாமல் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை எப்படியாவது கைது செய்து விட அரசு துடிக்கிறது. ஒரு இயக்கத்தினரின் செயல்களுக்காக அதன் தலைமையும் கைது செய்யப்பட வேண்டுமென்றால் மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பினில் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் யார் ?<br /><br />திரைப்படங்களில் பெண்களின் நிலை குறித்த பார்வையை மலையாளத்தானுக்கு ஆதரவாக சீமான், தங்கருக்கு எதிரான முரணாக முன் நிறுத்துவது அபத்தம். ஒட்டு மொத்த இனத்திற்கான இனமானக் குரலுக்கு எதிராய் உள் சமூக முரண்களை பெரிதாக்கிக் காட்டும் போக்கு இனத்தின் மேன்மையை இன்னும் வீழ்ச்சிக்கே தள்ளும்.<br /><br />என் இனம் வீழ்ந்ததும், அழிந்ததும் எனக்கு வலிக்கிறது. எம் தாய்மார்களைப் பற்றி பேசினால் எனக்கு சுடுகிறது. என் நிலமும், வாழ்வும், என் மீதான அதிகாரம் செலுத்தும் உரிமையும் மலையாளத்தான் கரங்களில் சிக்கும்போது நான் பாதிக்கப்படுகிறேன். எம் இனத்தினை எள்ளலுக்கும் கேலிக்கும் மாற்றான் உட்படுத்தும் போது நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். என் துயரையும், வலியையும் பொறுத்து என் எதிர்வினை அமைகிறது. இதுவும் அறச் சீற்றம் தான்.<br /><br />வன்முறையை தனது திமிரால் விதைத்தவன் அந்த மலையாளத்துப் பார்ப்பான் ஜெயராம்தான். மலையாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. முடிந்தால் அதை எதிர்த்துக் கேளுங்கள். நாங்கள் வெறும் வன்முறையாளர்கள் அல்ல என்பதை முத்துக்குமாரர்களாக, திலீபன்களாக நிருபித்து இருக்கிறோம். ஏற்கனவே வரலாற்றில், கையில் விமானம் இருந்தும் பொது மக்களை தாக்காமல் ராணுவ நிலைகளை மட்டுமே தாக்கிய தமிழர்களின் அறம் உலகம் அறிந்தது. அங்குலிமாலாக்கள் அறியாதது ஏனோ.?--<br /><br />- மணி.செந்தில்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-44753740626770602582010-01-11T18:47:00.000+04:002010-01-11T18:49:51.684+04:00ஜாதியைக் காப்பாற்றியதால்தான் அவர் "மகாத்மா"எந்தப் பார்ப்பான் தொழிலாளியாக இருக்கிறான்? விவசாயம் செய்யும் பார்ப்பனன் உண்டா? மில்லில் கூலி வேலை செய்யும் பார்ப்பனன் உண்டா? அத்தனைத் தொழிலாளர்களும் தமிழ் மக்கள் தானே?<br /><br />எனவே, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்தின் மீது அவர்களிடம் ஆத்திரமூட்டி, தூண்டிவிட்டு முதலாளியிடம் இவ்விதம் வம்புக்குப் போகும்படி செய்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களே பார்ப்பனர்களும் அவர்களுக்குத் துணை புரியும் கம்யூனிஸ்ட்களும். இவர்கள் கம்யூனிஸ்ட்களாக இருப்பதனால், முதலில் ஜாதியை ஒழிக்கப் பாடுபட வேண்டும். ஜாதிப்பாகுபாடு நிலைநாட்டப்பட்டிருப்பதால்தானே, உழைக்கும் தொழிலாளியும், உழைக்காமல் சுகமாக வாழும் பார்ப்பனரும் இருக்கின்றார்கள். <br />ஜாதிப் பிரிவு இல்லையானால், தொழிலாளி - முதலாளி என்ற பிரிவும் மறைந்துபோகும். எனவே, ஜாதியின் பெயரால் இருக்கும் சின்னங்களையும், உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கான எண்ணங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் முதலாவது தன் கையில் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் புகவேண்டும். அங்குள்ள பார்ப்பனர்களின் ஒரு உச்சிக் குடுமியோ, பூணூலோ இல்லாமல் அடியோடு கத்திரித்து விட வேண்டும். முதலில் இதில் ஈடுபட்டால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.<br /><br />ஆனால், இந்த முயற்சியில் புகுந்தீர்களானால் முதன் முதலில் தங்களுக்குத் தலைவர்களாக உள்ள பார்ப்பனர்களின் பூணூலைக் கத்தரித்துவிட்டுத்தான் மற்ற பார்ப்பனர்களிடம் போக நேரிடும். ஆனால், இவற்றால் ஜாதி ஒழியும் என்று கூறுவதற்கில்லை.<br />இன்னமும் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற யாருடைய முயற்சியாலும் ஜாதி ஒழிவதற்கு வழியே கிடையாது. இதுவரை கீழ்ஜாதி என்பவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் மரியாதை இருந்திருக்குமானால், அவர்களுடைய முயற்சினால் தான் வந்திருக்கும்.<br /><br />காந்தியார் கூட மேல் ஜாதிக்காரனுக்கு என்று தனியாக கோயிலும் குளமும் வேண்டும், கீழ் ஜாதிக்காரனுக்கென்று தனியாகக் கோவிலும் குளமும் வேண்டும் என்றார். நாங்கள் பிறகு கூப்பாடு போட்டு இரண்டு பேருக்கும் தனித்தனியே இருக்குமானால் அந்தக் கோவிலும் குளமும் பறையன் கோவில், பறையன் குளம் என்று பெயரிடப்பட்டு அவை உள்ளவரை அந்த ஜாதியும் மறைவதற்கு வழி இல்லை என்று சொன்னோம்.<br /><br />அதன் பிறகுதான் ஒரே கோவிலில் எல்லோரும் சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னமும் பார்ப்பான் கோவிலில் அனுபவிக்கும் சுதந்திரம் சூத்திரனும் பறையனும் அனுபவிக்க முடியாது. பார்ப்பான் மட்டும்தான் சாமிக்கு பக்கத்தில் போகமுடியும். அந்த இடத்தில் நாம் போக முடியாது.<br /><br />இப்படிக் கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது? இன்னமும் இந்த மூடங்கள் அவிழ்த்துக் கொடுக்கின்றன. பார்ப்பான் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டே இருக்கிறான். 1956 ஆம் ஆண்டிலும் இந்த அக்கிரமம் நடக்கலாமா? இதையல்லவா கம்யூனிஸ்ட்கள் ஒழிக்க வேண்டும்?<br /><br />எந்த நாட்டில் கம்யூனிஸ்ட்களுக்குப் பாதிரி தலைவனாக இருக்கிறான்? கம்யூனிஸ்ட் என்றாலே பாதிரிக்கு வேலை இல்லை. இந்தப் பாதிரியை விட மகாக் கொடுமையும், பித்தலாட்டமும் செய்யும் முதல்தரப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்க்குத் தலைவராக இருக்கின்றனர். ஏன்? நம்முடைய ஆளுக்கு யோக்கியதையும் திறமையும் இல்லையா? பார்ப்பனர் கம்யூனிஸ்ட்களின் தலைவராக இருக்க என்ன யோக்கியதை உடையவர்கள்? எப்படியாவது உண்மை கம்யூனிசம் நம் நாட்டில் பரவினால் பார்ப்பனர்களுக்குச் சீட்டுக் கொடுத்தனுப்பும் நிலையைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்காகப் போலி கம்யூனிசம் நாட்டில் பார்ப்பனர்களால் பரவச் செய்யப்படுகிறது.<br /><br />உண்மைக் கம்யூனிசம் இந்த நாட்டில் பரவுமானால் இங்கே பார்ப்பனருக்கும், மதம் சாஸ்திரம் புராணங்களுக்கும், கடவுள்களுக்கும் வேலையே இருக்காது. எனவே, இந்த மதமும் ஜாதியும் ஒழிய வேண்டுமானால், எங்களைத் தவிர வேறு யாரும் கவலை கொள்பவர்கள் கிடையாது. நாங்கள் தான் முதன் முதலில் ஜாதி ஒழியவேண்டும் என்றும் கூறியவர்கள்.<br /><br />காந்தியார் கூட செத்துப் போவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாகத்தான் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார். அதற்கு முன் ஜாதியைப் பற்றிய கவலை காந்திக்கு இருந்ததேயில்லை. ஜாதியைக் காப்பாற்றியதால்தான் அவர் "மகாத்மா" என்று போற்றப்பட்டார்.<br /><br />ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவரும், புத்தரும் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதைத் தவிர இப்போது முதன் முதலில் எங்களைத் தவிர வேறு யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினதுமில்லை. நாங்கள் சொன்ன பிறகு, டாக்டர் அம்பேத்கர், காந்தியின் தவறுகளை உணர்ந்தபின் தான் அவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினார். அதற்கு முன் அவரும் காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றப்பட்டவர்தான். காந்தியார் ஜாதியைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார்.<br /><br />இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும் தான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறோம்.<br /><br />முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்டமிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத்தனர். இவரும் ஒப்புக் கொண்டார். மாநாடு நடத்தும் தினம் நெருங்குவதற்கு ஆரம்பித்தது. அம்பேத்கரை, "நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும்" என்று கேட்டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவதாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். "நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே" என்று கூறினர்.<br /><br />ஆனால், அம்பேத்பர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். "நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட்சேபனை இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.<br /><br />இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று அடிக்கடியும் கூறுகிறார். ஆனால், முதலில் அவருடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அப்படியே வைத்துக் கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார். ஆகக்கூடிய காரியமா?<br /><br />சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைப்பாராகில் அதற்கென்று சட்டமே இயற்றிவிடலாம். "இனிமேல் யாரும் ஜாதிச் சின்னம் அணியக்கூடாது பூணூலை அறுத்து எறியவேண்டும். இல்லையேல் இந்தச் சட்டப்படி போலீசார் கத்தரித்து விடுவார்கள். கோவில்களில் பார்ப்பனர் மட்டுமல்லாது பறையன், சக்கிலியன் யாவரும் மணி அடிக்கலாம்" என்று சட்டமியற்றி விட்டால் சீக்கிரமாகவே ஜாதியை ஒழிக்கலாம். அதன்றி வாயினால் சொன்னால் மட்டும் போதாது.<br /><br />ஆனால், நேரு அப்படிக் கூறுவதற்கு அவருக்குப் பைத்தியம் பிடித்தால் ஒழியக் கூறமுடியாது. பச்சைப் பார்ப்பனராக இருந்து கொண்டு அப்படிக் கூறுவாரா? அவருடைய ஆட்சியே பார்ப்பனர்களின் நன்மைக்கென்று இருக்கையில் பார்ப்பனர்கள் விஷயத்தில் கை வைக்க மாட்டார்.<br /><br />இப்போது கூட நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்ற காரணம் என்ன? அரசாங்கம் பார்ப்பனருடையது.... பார்ப்பனரை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆகையால்தான் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன்.<br /><br />நான் என் வேலையை விட்டு, "இனிமேல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். ஏதோ இதுவரை தெரியாமல் பார்ப்பனர்கள், சாஸ்திரம், கடவுள் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறினேன். இப்போது பகவான் என்முன் தோன்றி இதுவெல்லாம் கூடாது என்று சொன்னார். ஆகவே பார்ப்பனர்கள் 'பூலோகத் தேவர்கள்' என்று காமராசருக்கு மட்டுமல்ல. நேருவுக்கும் தந்தி கொடுத்தேனாகில், உடனே மறு தந்தியில் உனக்கு ஒரு மந்திரி மட்டும் போதுமா? அல்லது இரண்டு மந்திரி உத்தியோகம் வேண்டுமா? சென்னை அரசாங்கத்தில் வேண்டாம். மத்திய அரசாங்க மந்திரியாகவே அமர்ந்துவிடலாம். எந்த இலாகாவுக்கு என்று கவலைப்பட வேண்டாம் இலாகா பொறுப்பு இல்லாத இலாக்கா என்று ஒன்று அமைத்து அந்த இலகாவுக்கு மந்திரியாக இருக்கலாம் என்று தெரிவிப்பாரே."<br /><br />ஏனெனில், என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலை நாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை. முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலன்டியராக இருந்தாராம். அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்தபோது எனக்கு வாலன்டியராக இவரை அமர்த்தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன். அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன். எனக்கு வாலன்டியராக இருந்தவர் சென்னை முதன் மந்திரியாக இருக்க நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கூட ஆகமுடியும்.<br /><br />ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியின் கொடுமை அடியோடு ஒழிய வேண்டும். நான் மற்றவர்களைப் போல் சும்மா பணக்காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால் இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல. கடவுளையே ஒழிக்க முற்படுபவனாகிய எனக்கு இந்தப் பணக்காரர்களை ஒழிப்பதா பெரிய காரியம்?<br /><br />மேலும் இப்போது கூறுகிறேன். மந்திரிகளைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை. சட்டத்தின் மூலம் ஜாதி ஒழியவேண்டும் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் நான் கொஞ்சம் அயர்வேன்.<br /><br />பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல, வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்திவிட்டு பிறகு நேரு 'ஜாதி ஒழிய வேண்டும்' என்று சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.<br /><br />காமராசராவது ஓரளவு தம்மால் இயன்ற அளவு ஜாதியினால் ஏற்பட்ட கொடுமைகளையாவது உணர்ந்திருக்கிறார். வேறு யாருடைய ஆட்சியிலும் இல்லாத முறையில் நல்லவர்களுக்கு உதவி செய்கிறார். தேவஸ்தான இலாகா மந்திரியாக பஞ்சம ஜாதி என்று இகழப்படுபவரை (பரமேஸ்வரன்) அமர்த்தினார். அர்ச்சகப் பார்ப்பனர் எல்லாம் இவரைக் கண்டால் கை கட்ட வேண்டும். இந்த அளவுக்காவது பார்ப்பனத் திமிரை ஓரளவு அவரால் அடக்க முடிந்தது. மேலும் அவர் காலியாகிற உத்யோகங்களை எல்லாம் தமிழர்களுக்கே கொடுத்து வருகிறார். இதைவிட இன்னமும் அவர் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்?<br /><br />மேலும் அவரும் வடநாட்டுப் பார்ப்பனத் தலைமை பீடத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர். வடநாட்டினர் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் ஆட்சியில் இருந்து கொண்டு நமக்கு இவ்வளவாவது நன்மை செய்கிறார் என்பதைக் கொண்டு நாம் சந்தோஷமடைய வேண்டும்.<br /><br />அதைவிட அவருடைய ஆட்சிக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சிப்பது மிகவும் அறிவீனமாகும். அவரைப் பற்றி ஏதேதோ இல்லாதவைகளைச் சேர்த்துப் பேசி அவர் மேல் மக்களுக்கு வெறுப்பூட்ட நினைக்கிறார்கள். இதுவரை அவர் அந்த இடத்தில் இருக்கவில்லையானால் அந்த இடத்தில் நண்பர் ஆச்சாரியார் அவர் அவருடைய தொழிலாளியான ஜாதி வளர்ப்புத் தொழிலையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் இல்லையேல் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய சுப்ரமணியனோ அல்லது<br />பக்தவத்சலமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.<br /><br />பூணூல் உள்ள பார்ப்பனர்களாவது கொஞ்சம் நம்பலாம். இந்த பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது. பார்ப்பனர்களாவது பதவியின் பேரால் கொஞ்சம் கோழைத்தன்மை உடையவர்கள். தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட தமிழர்கள் எந்தக் கொடுமையும் துணிந்து செய்வர்.<br /><br />உங்கள் குல வேலையை நீங்கள் பார்த்த பிறகல்லவா பிறருக்குப் புத்தி சொல்ல வேண்டும்? என்றேன். இதைக் கேட்டு அவர் ராமசாமிக்கு ஜாதித் துவேஷம் ரொம்பவும் முத்திப் போச்சுது என்றாராம்.<br /><br />பிறகு இந்த ஆள் ஒழுங்குபடமாட்டார் என்று தெரிந்து அதற்காக கத்தியும், பெட்ரோலும் தயாரா இருக்கும்படி செய்திருந்தேன். அதன் பிறகுதான் ஒரு வழிக்குச் சரியாக வந்தது. அவரும் ஆட்சியை விட்டுப் போனார். மறுபடியும் காமராசர் வர முடிந்தது.<br /><br />இவருக்குத் தொல்லை கொடுப்பவர்கள் இப்போது மலிந்து போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் பீர்மேடு, தேவிகுளம் என்று தாண்டிக் குதிக்கிறார்கள். தேவிகுளம், பீர்மேடு வேண்டாம் என்ற ஆட்களெல்லாம் இப்போது விளம்பரத்திற்காக மாற்றிக் கூறுகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு நம்முடையதாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட போது, இதே கம்யூனிஸ்ட்கள் நடுநிலைமை வகித்தார்கள். சோஷலிஸ்ட்கள்தான் இதன் சம்பந்தமாக என்ன யோக்கியதை உடையவர்கள்? பட்டம் தாணுவின் சர்க்கார் நடக்கும் சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு வேண்டுமென்று கேட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைப் பார்த்து "இப்படித்தான் சுட்டுக்கொல்ல வேண்டும். தேவிகுளம், பீர்மேட்டைக் கேட்க தமிழர்கள் தகுதியற்றவர்கள்" என்றெல்லாம் இங்குள்ள சோஷலிஸ்டுகள் கூறினார்கள். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டும், சோஷலிஸ்டும் இன்றைக்குத் தேவிகுளம், பீர்மேடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களாம்.<br /><br />----------------------------- <br /><br />17.02.1956 இல் மணல்மேட்டில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 05-03-1956<br /><br />அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியாAnonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-22643916441986695662009-11-19T11:08:00.002+04:002009-11-19T11:28:31.980+04:00யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLVchuYI7KHyrtv98gv76TB14d1ovMDgdKlE8jjtOE_WJXHolQx3939fy2i4UxrZh919Iv1KeTBzOl2iOo-9CnRKfZxaJGLYH9SScoWmBhlLnQgbL1GVz1aloCM12TJZHfXl3_VA/s1600/CoverArtMoney.MS.PWP.Covers.ArtMoney"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 367px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLVchuYI7KHyrtv98gv76TB14d1ovMDgdKlE8jjtOE_WJXHolQx3939fy2i4UxrZh919Iv1KeTBzOl2iOo-9CnRKfZxaJGLYH9SScoWmBhlLnQgbL1GVz1aloCM12TJZHfXl3_VA/s400/CoverArtMoney.MS.PWP.Covers.ArtMoney" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405712556512082322" /></a><br />முள் படுக்கையில் உறங்குவது எப்படி இருக்கும் என்று அன்று இரவுதான் அத்துப்படியானது அவனுக்கு. ஒருத்தனுக்கு கோடி காசிருக்கலாம் கொஞ்சும் குழந்தை இருக்கலாம் பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம் வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால் உறக்கமற்ற இரவுக்காரனுக்கு நிம்மதி இருக்காது. தலையில் புண் வந்த மிருகம்போல அவஸ்தைப்பட வேண்டியதுதான். <br /><br />படுத்த பத்தாம் வினாடி குறட்டை ஒலியால் வீட்டைப் பெயர்க்கும் வீரன் இன்றுதான் உறக்கமற்றுப் புரண்டான். அடிக்கடி பீரோவை திறந்து அந்த பத்தாயிரம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்தான். மீண்டும் முள் படுக்கையில் படுத்துக்கொண்டான்.<br /><br />இதை கவனித்த மனைவி தூக்கக் கலக்கத்தோடு தெளிவாகக் கேட்டாள், “தூங்காம அடிக்கடி எங்க எழுந்து போறீங்க?”<br /><br />வயிறு சரியில்லை என்று காரணம் சொன்னான். சாதாரணமாக வயிறு சரியில்லை என்றால் எல்லோரும் பாத் ரூம் போவார்கள். சிலர் வயிற்றை சமாதானம் செய்வதற்காக கஷாயம் போன்ற வஸ்துவைக் குடிக்க சமயலறைக்கு கூட செல்வார்கள். படுக்கை அறையில் இருக்கும் பீரோவை அடிக்கடி திறந்து பார்த்தால் வயிறு சரியாகிவிடும் என்ற சூட்சுமத்தை அவள் இன்றுதான் கண்டாள். குழம்பிப்போனவள், ‘இது எந்த ஊர் வயித்தியம்?’ என்று கேட்கத்தான் ஆசைப்பட்டாள். ஆனாலும் திரும்பிப் படுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரிக்கு முடி முழுவதும் கொட்டிப்போய் விகாரமாகிவிடும் கனவை தொடர்வதில் ஆர்வம் காட்டினாள்.<br /><br />மேற்படி பீரோ திறந்து பார்க்கும் முள் படுக்கை இரவினால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் மறுநாள் காலையில் கண் இரண்டுக்கும் மிளகாய்ப் பொடி கலந்த சிவப்பு பெயிண்ட்டை அடித்துக்கொண்டு எழுந்தான். வழக்கமான வேலை ஓடவில்லை. சரியா தப்பா கேள்வி தலையை சுழற்றியது. பீரோவில் இருக்கும் அந்த பத்தாயிரத்தை... நொந்துபோனான்.<br /><br />விசயம் வேறு ஒன்றும் இல்லை. அவனுக்கு நேற்று சாயிந்தரம் ஒரு பெட்டிக்கடை பக்கத்தில் ரூபாய் பத்தாயிரம் மஞ்சள் பை சகிதமாய் கிடைத்துவிட்டது. மசங்கலில் பணத்தை எடுத்ததை யாரும் பார்த்திருக்க நியாயமில்லை. பணத்தை தேடியும் யாரும் வரவில்லை. இப்பொழுது சிக்கலே அந்த பணத்தை என்ன செய்வது என்பதுதான். நல்ல மனிதனாய் தொலைத்தவனை தேடி கொடுத்துவிடுவதா, இல்லை அமுக்கி விடுவதா என்று ஒரே குழப்பம். மனைவியிடம் யோசனை கேட்டிருக்கலாம் அவள் ‘பணத்தை அமுக்கு!’ என்று ஒரேயடியாக யோசனை சொல்லிவிட்டால்... அது தப்பில்லையா?<br /><br />தவறிய ஒரு குழந்தையை கண்டெடுத்தால் அதை பெற்றவர்களிடம் ஒப்படிப்பது மனித குணம். சற்று வித்தியாசமாக ஒரு ஆட்டுக் குட்டியை கண்டெடுத்தால் பெற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாதே என்று சொல்லிக்கொண்டு உரியவர்களிடமும் தராமல் பிரியாணி செய்து சாப்பிடுவதும் மனித குணம்தான். ஆனால் பணத்தை கண்டெடுத்தால் என்ன செய்யவேண்டும்?<br /><br />இதற்கு தீர்வு சொல்ல சரியான ஆள் பகவான் தாஸ்தான் என்ற முடிவோடு அவனை பார்க்கப் போனான். அங்கே பகவான் தாஸ் வாசற் படியில் உட்கார்ந்து தலை போகும் அவசரத்தில் பேப்பர் படித்தான். இவனைப் பார்த்ததும் “வா, இவனே. ஒக்காரு.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவசரமாக படித்தான். இவனும் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டான்.<br /><br />பகவான் தாஸ் ஒரு வினோதப் பிறவி. வாழ்க்கையின் எல்லா புள்ளிகளுக்கும் ஒரு வியாக்கியானம் - விளக்கம் வைத்திருப்பான். நாலு பேரை வார்த்தையால் மடக்க பலவும் தெரிந்து வைத்திருக்கும் பராக்கிரமன். தெரிந்த விசயம் மட்டுமல்ல செய்யும் தொழிலும் பலதுதான். ஆட்டோ வாங்கி ஓட்டுவான். ஒரே மாதத்தில் விற்றுவிட்டு சோப்புப் பவுடர் ஏஜென்சி எடுப்பான். அடுத்த மாசமே ஆட்டுக் கால் சூப் விற்றுக் கொண்டிருப்பான். நாள் முழுதும் நாயாய் உழைப்பான். சாயிந்திரத்தில் சாமி கும்பிடுவான். ராத்திரியில் குவாட்டர் குடிப்பான். குடித்த பிறகு யாராவது கிடைத்தால் நெத்தியடியாக தத்துவம் பேசுவான். வாந்தி எடுத்துவிட்டோ எடுக்காமலோ தூங்குவான்.<br /><br />பேப்பரை படித்து முடித்து நன்றாக மடித்து வைத்துவிட்டு “சொல்லு இவனே... அதிசயமா என்ன பாக்க வந்திருக்கே... டீ அடிக்கிறீயா? வீட்டுல ஒய்ப் இல்ல. கடையில போயி குடிப்போம். காசு வெச்சிருக்கே இல்லே?” என்று கேட்ட பகவான் தாஸ{க்கு உச்சந் தலையெல்லாம் மேதாவித்தனம் வழுக்கியது. அடுத்தவன் பாக்கெட்டின் பத்து ரூபாயை தனக்கென வெளியே வரவைக்கும் வித்தை ஞானவானான அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. வித்தியாசமாய் ஒய்ப் இல்லை என்கிறான்.<br /><br />பணம் கண்டெடுத்ததை இவன் சொல்லவில்லை. சொன்னால் அவனுக்கு பொறாமை வரும். பொறாமை வந்தால் பொய்யான அறிவுறை தருவான். அதனால் பேச்சை வேறு வாக்கில் திருப்பி விசயத்திற்கு வர நினைத்தான். “பேப்பரை அத்தனை தலை பிச்சிகிட்டு படிச்சியே, புதுசா ஏஜென்ஸி எதாவது எடுக்கப் போறீயா?”<br /><br />“அதெல்லாம் இல்ல. பேப்பர் மாடி வீட்டுக்காரனோடது. அவன் கீழ எறங்கி வரதுக்குள்ள ஒருவாட்டி படிச்சிடுவேன். விடிஞ்ச பிறகும் தூங்கறது தப்பும்பாங்க துப்பத்தவங்க. ஒருத்தன் ரொம்ப நேரம் தூங்கறது ரொம்ப நல்லதுன்னு மாடிவீட்டுக்காரன் இன்னமும் தூங்கற விசயத்தில தெரியுதில்லையா?” ஓசி பேப்பர் படிப்பதற்கு ‘வைகரை துயில் எழேல்’ என்று ஒரு நீதி வாக்கியம் சொல்லி சிரித்தான்.<br /><br />இருவரும் சேர்ந்து டீ குடித்தார்கள். அவனின் தற்போதய தொழில், வரும்படி பற்றி பேசிவிட்டு, எதேச்சையாக போல கேட்டான், “தாஸ், உனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கீழ கெடைக்குதுன்னு வெச்சிக்கோ. நீ கண்டெடுத்ததை யாரும் பாக்கல, தொலைச்சவன் யாருன்னும் தெரியல. அந்த பத்தாயிரத்துல நீ மொத என்ன செலவு செய்வே? சொல்லு”<br /><br />தாஸ{க்கு உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. “பத்தாயிரமா, இவனே..! மொத ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு போயி நல் ல பாரீன் சரக்கா ஏத்திப்பேன். தினுசு தினுசா ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். மூவாயிரம் ரூபா குளோசாயிடும்.” சொல்லும்போதே பகவான் தாஸ் கண்ணில் போதை தெரிந்தது. ஒரு பேச்சுக்கே இத்தனை போதையென்றால் பத்தாயிரம் நிஜமாக கிடைத்திருந்தால் கிடைத்த இடத்தில் குடிகாரனாய் சுருண்டு விழுந்திருப்பான் போலிருக்கிறது.<br /><br />“மீதி காசை என்ன செய்வே?” இவன் மேலும் கேட்டான்.<br /><br />“மீதியா? நேரா கடைவீதிக்கு போய் ஒஸ்த்தி டிரஸ் நாலு எடுப்பேன். சினிமா பாப்பேன். யாராவது ராத்தங்களுக்கு வருவாங்களான்னு பாப்பேன். எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாய் மீதியாகும். அதுல அஞ்சி ரூபாய் தெரிஞ்ச சின்ன வயசு பிச்சக்காரிக்கும் மீதிய அனாதை ஆசிரமத்துக்கும் தந்துடுவேன்.”<br /><br />“சின்ன வயசு பிச்சக்காரிக்கு எதுக்கு காசு போடறேன்னு தெரியுது. அனாத ஆசிரமத்துக்கு ஏன் காசு தரே?” ஆச்சரியமாக கேட்டான் இவன். “அதையும் ஒரு ஒன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் ஊத்திக்க வேண்டியது தானே.”<br /><br />“அதெப்படி இவனே. அடுத்தவன் காசெடுத்து ஊத்தி ஏத்திகிட்ட பாவத்தை எப்படி தொலைக்க? ஆயிரத்தை ஆசிரமத்துக்கு தந்தா பாவம் கழுவிக்கும் இவனே... செய்யற தப்பை சரியா செய்யணும். பாவத்தில ஆரம்பிக்கிற வாழ்க்கை புன்னியத்தில முடியணுங்கறதுதான் பகவான்தாஸோட கொள்கை.” பகவான் தாஸ் ஒரு தந்திரமான சாத்தானைப்போல பேசினான்.<br /><br />கண்டெடுத்த பணத்தை சந்தோசமாய் செலவு செய்ய இவனுக்கும் துளி ஆசைதான். ஆனாலும் தாஸின் பேச்சு குமட்டியது. என்ன ஒரு குரூரமான யோசனை. பகவான் தாஸ் மீது கோபம் வந்தது.<br /><br />“சரி, தாஸ். குவாட்டர் அடிச்சி காசு மொத்தமும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து அந்த காசை கேட்டா நீ என்ன செய்வே?” கேட்டதும் பகவான் தாஸின் கற்பனை போதை பொசுக்கென்று இறங்கியது.<br /><br />“ஆஹா... உனக்கு வேலை இல்ல. நீ லீவ்ல இருக்கியா? எனக்கு வேலை இருக்கு இவனே. பத்து வீட்டுக்கு ஊறுகாய் போடணும்.” சொல்லிவிட்டு ஓடியவனை தடுத்து நிறுத்தி கேட்டான், “ஏழை பாலையோட காசில குடிக்கிறது தப்பில்லையா, தாஸ்?”<br /><br />“எது தப்பு, இவனே? பணத்தில எழுதியிருக்கா ஏழையோட பேரு. அந்த பணம் பணக்காரன் கையில இருந்திருக்கும், ஏழை கையிலையும் இருந்திருக்கும். பணம் எப்பவும் யாரோடதும் இல்ல, இவனே. தொலைச்சவன் தேம்பி ஆழுவான்னு நெனைச்சா தெம்பா குடிக்க முடியாது. இவனுங்க காசை மட்டுமா தொலைக்கிறானுங்க... வாழ்க்கைய, சந்தோசத்தை, தன்மானத்தை எல்லாம்தான் தொலைக்கிறாங்க. அத்தனையும் மீட்டுட முடியுமா? அப்படி கிடைக்காத பொருள் தொலைஞ்சதா நெனைக்கட்டும். நம்பு இவனே, யோக்கியனுக்கு என்னைக்கும் சந்தோசம் கிடைக்காது. நம்பாட்டி ஆளை விடு. நான் ஊறுகாய் விக்கப் போறேன்.” அவன் போய்விட்டான்.<br /><br />பகவான் தாஸ் பேசப் பேச அவனுக்கு சாத்தான் கொம்பு முட்டி வளர்வதை கண்டான் இவன். அவன் பேச்சு அற்பத்தனமானது என்று நினைத்தான.; மேலும் இவனின் சின்ன வயசு அனுபவம் வேறு பெரும் தலைவலியாக உறுத்த ஆரம்பித்தது.<br /><br />அவன் அம்மா ரேஷன் அரிசி வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தலை விறித்துப்போட்டு நடுத்தெருவில் கத்தியபொழுது இவன் பொடிசிறுவன். அன்று அம்மா கத்திய பரிதாப ஓலம் இன்றும் காதில் ஊளையிடுகிறது. அது வெறும் பத்து ரூபாய் காசு. எடுத்த எவனும் திருப்பித் தரவேயில்லை. அம்மா போல பத்தாயிரம் தொலைத்தவனும் இன்று கதறத்தானே செய்வான். ‘ஐயோ என் வாழ்க்கையே போச்சே!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்காமலா இருப்பான்.<br /><br />அந்த பணம் பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளை பெற்றவளின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமாக இருக்கலாம். வருசமெல்லாம் உழைத்து விளைந்ததை விற்று கடனை அடைக்க ஒரு விவசாயி கொண்டு போன காசாகவும் இருக்கலாம். எப்படிப்பட்ட பணமாக இருந்தாலும் அதை செலவு செய்தால் அது பாவத்தின் பணமாகிவிடும். உள்ளே நப்பாசை நாய் வேறுவிதமாய் புத்தி சொன்னது. ஒருவேளை அது கந்து வட்டிக்காரனுடையதாகவோ, ஒரு கோடிஸ்வரனின் அற்பக் காசாகவோ இருந்தால் செலவு செய்வதில் தப்பில்லையே...!<br /><br />இவன் ஒன்றும் காசுக்கு கஷ்டப்பட்டு அல்லாடுபவன் இல்லை. மாசத்திற்கு இருபதாயிரத்திற்கும் குறைவில்லாமல் சம்பாதிக்கத்தான் செய்கிறான். ஆனால் என்ன பிரயோஜனம். இவனுக்கென்று என்ன செலவு செய்கிறான். இதே பகவான் தாஸ் குடித்துவிட்டு அன்று சொன்ன ஒரு நெத்தியடி வார்த்தை இன்றும் உறுத்துகிறது.<br /><br />ஒருநாள் பெரும் போதையில் உடையவிழ நடுத்தெருவில் கிடந்த தாஸை எழுப்பி “எதுக்கு தாஸ் இப்படி குடிச்சி ஒடம்பை அழிச்சிக்கிறே... ஒருத்திய கட்டிகிட்டு குடும்பம் குட்டின்னு உருப்படலாம் இல்லே” என்று யோக்கியனாக இவன் அறிவு சொன்னான்.<br /><br />பகவான் தாஸ் உடை அவிழ்ந்தவனாய், நாக்கு குழறலாக பேசினாலும் மிதியடியில் அடித்ததுபோல அழுத்தமாக பேசினான். “ழே இவனே. நீ மாசம் எவ்ளோ சம்பாதிப்பே... நாப்பதாயிழமா? உன் சந்தோசத்துக்குனு எத்தன காசு செழவளிப்பே சொல்லு?”<br /><br />இவன் யோசித்து “ஏழாயிரம்” என்றான்.<br /><br />“போடா கிழுக்;கா.. திங்கழதும் துணி போடழதும் பொண்டாட்டி புள்ளைய வளக்கிறதும் கணக்கில வழாது. ஒழு குடி, ஒழு பீடி, ஒழு ஜோடி உண்டா உனக்கு. உன் சந்தோசத்துக்கு எழ்த்தனை காசு செலவளிப்பே, சொல்லு?<br /><br />இவனுக்கு பகீர் என்றது. தன் சொந்த சந்தோசத்திற்கு எவ்வளவு செலவாகும்? பகவான் தாஸ் சொன்னது போல ‘குடி - பீடீ - ஜோடி’ பழக்கம் எதுவும் கிடையாது. எப்பொழுதாவது ஒரு ஸ்வீட் பீடா தின்பான். அது மூணு ரூபாய். அதுதானா இவனுக்கு சொர்க்கம்?<br /><br />ஒரு பேச்சுக்கு “முந்நூறு ரூபாய் செலவளிப்பேன்” என்றான்.<br /><br />தாஸ் வாயை கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தான். “அட கேனப் பயலே. உன்னோட சந்தோசம் கேவலம் முந்நூழு லூபாய்ல தானாடா இழுக்கு? இதுக்காடா மாடு மாதிழி ஒழைக்கிழே. அந்த காசை ரெண்டு நாள் பிச்சை எடுத்தா சம்பாதிக்க முடியாதாடா உன்னால? நான் ஏழு காசு சம்பாதிச்சாலும் அது எஞ் சொந்த சொர்க்கம்டா ராசா. நீ ஒரு சவம்டா தங்கம். செத்த பொணம் நீ. எனக்கு அழிவு சொல்லாத. என் வேட்டிய நானே கட்டிப்பேழ்ன். நீ போயி வாழற வழியப் பாருடா எந் தங்கம்” என்றான்.<br /><br />குடித்து விழுந்து கிடந்த தாஸின் வேட்டியை கட்டிவிடப் போனான். கடைசியில் குடிக்காத இவனுக்கு வேட்டி அவிழ்ந்து கொண்டது. உண்மைதானா? தனக்கென்ற சந்தோசத்திற்கு மட்டும் சம்பாதித்தால் போதுமா? இது அபத்தமில்லையா? அற்ப சந்தோசங்கள்தான் மனிதனின் நிஜ சந்தோசமா? ஒரு கொண்டாட்டம், சந்தோசம், வேடிக்கை, சினிமா, பாட்டு என்று இவன் வாழ்வில் இவனுக்கான தனி சந்தோசமாக எதுவும் கிடையாது. தினம் ஜடம்போல சொந்த லேத்துப் பட்டரையில் இரும்போடு இரும்பாக சொந்தமாக துருவாகி உதிர்கிறான். அதற்கு ‘லேத்துப் பட்டரை ஓனர்’ என்று விசிட்டிங் கார்டு வேறு.<br /><br />அன்றிலிருந்து இவனுக்கு ஒரே நமைச்சல். ஒரு நாளாவது விரும்பியதைத் தின்று பிடித்தவர்களோடு பேசி பிடித்ததை செய்து சந்தோசமாய் இருக்க வேண்டுமென்று. ஆனால் ஒரு நாள் விடுமுறை என்றாலும் லேத்துப் பட்டரை வேலை ஊத்திக்; கொள்ளும். எத்தனை காசு சம்பாதிக்கிறானோ அத்தனை காசுக்கும் சீட்டு, தவணை, வட்டி, கடன் இருக்கிறது. இப்படி தத்தேறியாய் யோசிக்கவே முடியாது, கூடாது.<br /><br />ஆனால் அனாமத்தாக ஒரு பத்தாயிரம் கத்தையாக கிடைத்ததும் இவனுக்கு அந்த நமைச்சல் ஒட்டிக்கொண்டது. மனசின் சாத்தான், செய்யும் தப்புக்கு துணையாக ஒரு ஆள், ஒரு சொல், ஒரு நியாயத்தை கண்டுபிடிக்க விரும்பியது. அதற்காகத்தான் பகவான் தாஸை பார்க்க வந்தான். பகவான்தாஸ் சாதகமாய்த்தான் பேசினான் என்றாலும் அவனுக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்தது. தன் முகம் ஒரு நல்லவனின் முகமாகத்தான் ஊரில் எல்லோருக்கும் தெரியும். தன் மனைவிக்கும் கூடத்தான். பணமெடுத்து கயவனாக செலவு செய்தது தெரிந்தால் முகத்தின் கோரம் ஊரை விட்டு விலக்கி வைத்துவிடுமோ என பயந்தான். ஆளற்ற இடத்தில் பணம் கண்டெடுத்த தன் முகம் தனக்கே அந்நியமாகி ஒரு கோர சாத்தான் முகமாக தெரிந்தது. யாருமற்ற பொழுதில் மனிதர்கள் யார் போலவோ ஆகிவிடுகிறார்கள்.<br /><br />பணத்தை திருப்பித் தந்துவிடும் யோக்கியம் இவனுக்கிருந்தது. ஆனால் தொலைத்தவன் மட்டுமே பணத்தைப் பெறும் யோக்கியம் உலகத்திற்கு இருக்கிறதா? வேறு ஆள் வந்து என் பணம் என்று கேட்டு வாங்கிவிட்டால். பணத்தில் அடையாளமா இருக்கிறது? பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு அபத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.<br /><br />ஆறாம் வகுப்பில் ஒரு முறை இவன் தன் பக்கத்துப் பையனின் அழகான பேனாவை திருடியிருக்கிறான். (அன்றைக்கே ஆள் திருடன்தானா என்று அடுத்தவர் நினைப்பார்களோ என்று அச்சப்பட்டு, அறியாப் பருவத்தில் திருடிய சிறு பேனா குறித்து யோசிக்கவும் இன்று பயந்தான்.) அடையாளம் தெரியாதபடி அந்த பேனா மூடியை விளக்கு நெருப்பில் தீய்த்து மறைத்து எடுத்துப்போய் அதில் எழுதியும் இருக்கிறான். அந்த பேனா ஒரு முறை தொலைந்துபோனது. மறுநாள் பிரேயர் நடக்கும்போது தலைமையாசிரியர் தீய்ந்த பேனாவை காட்டி மாணவர்க்ளிடம் கேட்டார் “இது யாரோட பேனா...?”<br /><br />இவனுக்கு தன் பேனா என்று சொல்லி வாங்க பயம். பேனாவின் உண்மையான உரிமையுள்ள பையன் பக்கத்தில் நிற்கிறான். அவனுக்கோ களவு போன தன் சொந்த பேனாவே அடையாளம் தெரியவில்;லை. அப்படி மூடியை தீய்த்து வைத்திருந்தான். பிறகு நடந்த சங்கதிதான் வினோதமானது. “என்னோட பேனா சார்” என்று சொல்லியபடி செந்தாமரை என்ற பெண் நூறு பிள்ளைகளுக்கு மத்தியில் மிடுக்காக நடந்து போய் பேனாவோடு திரும்பினாள். யாருடையதையோ யாருக்கோ தந்த அந்த தலைமை ஆசிரியரின் அபத்த முகம் இன்று நினைவுக்கு வந்தது. அப்படி ஒரு அபத்தம் செய்வதில் விருப்பமில்லை இவனுக்கு.<br /><br />பொது இடத்தில் பணம் கிடைத்தால் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவிருந்தது போலவே இது கல்ல நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. ஒரு வேளை கல்ல நோட்டாக இருந்தால் போலீசில் மாட்டிக்கொண்டு தெரியாத கல்லநோட்டுக் கும்பல் தலைவன் பெயரை சொல்ல வேண்டியிருக்குமே என்று தொடை நடுங்கினான். அதனால்தான் மொத்தக் காசையும் அல்ல, ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் உறுவி செலவு செய்யவும் பயந்து இருந்தான்.<br /><br />அடுத்து சீத்தாராமனிடம் யோசனை கேட்டால் என்ன என்று தோன்றியது. சீத்தாராமன் ஒழுக்கமான வேலை பார்ப்பவன். கொஞ்சம் ஒல்லியாக இருப்பவன். ஜனங்களுக்கு பொதுவாக வரும் சில வியாதிகள் இருப்பவன். உலகத்தில் புது வியாதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கிருக்குமோ என்று டாக்டரிடம் ஓடுபவன். வியாதி இல்லை என்று சொன்னாலும் ஒரு ஊசி போட்டுக்கொள்பவன். உடம்பில்தான் கொஞ்சம் வியாதி. ஆனால் அடுத்தவனுக்கு உதவும் மனசில் தங்கம். அவனிடமும் போய் அதே கேள்வியை கேட்டான். “பத்தாயிரம் வழியில கிடைச்சா நீ மொதல்ல என்ன செலவு செய்வே... சீத்தாராமா?”<br /><br />சீத்தாராமன் தீர்மானமாக சொன்னான். “அந்த காசு முழுசையும் எடுத்துகிட்டு ரங்கசாமி ஹார்ட் பவுண்டேசன் ஆஸ்பிடலுக்கு ஓடுவேன்”<br /><br />இவனுக்கு சந்தோசமாகிவிட்டது. இதுதான் நல்ல ஆத்மாவின் பண்பு. புற்று நோய்க்கு தாயை பறிகொடுத்த ஒருத்தன் பணக்காரனான பிறகு தாய் நினைவாக ஒரு புற்று நோய் மருத்துவமனை ஆரம்பிப்பதில்லையா? அப்படித்தான் நோய் பல கண்ட ஒரு நல்ல மனுசன் கிடைத்த பணத்தை ஓடிப்போய் ஒரு பவுண்டேசனுக்கு தந்து மற்ற நோயாளிகளுக்கு உதவ நினைப்பான்.<br /><br />“ஆறாயிரம் கொடுத்து உடம்பு முழுசும் ஒருவாட்டி தரோவா செக் பண்ணிப்பேன்” என்று சீதாராமன் முடித்ததும் இவனுக்கு மனசில் காற்று பிடிங்கிக்கொண்டது. இவனும் காசை தொலைத்தவனிடம் தருவதாய்; இல்லை. வியாதிக்கு மருத்துவம்தான் பார்ப்பானாம்.<br /><br />“மீதி நாலாயிரத்தை என்ன செய்வே?” சலிப்புடன் கேட்டான்.<br /><br />“அதுக்கு நல்லா ட்டிரீட்மெண்ட எடுத்துப்பேன்.”<br /><br />இப்பொழுது சீத்தாராமன் மீதும் கோபம் வந்தது. அவனிடமும் ‘காசு முழுசும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து பணம் கேட்டா என்ன செய்வே?’ என்று கேட்கத்தான் நினைத்தான். ஆனால் அவன் ஒரு இருதய நோயாளி. பாதியில் புட்டுக்கொள்வான்.<br /><br />ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் - ஆக இருவருமே கண்டெடுத்த பணத்தை உரியவனிடம் தருவது குறித்து பேசாததில் வருத்தம் இருந்தது இவனுக்கு. எதற்காக இப்படி கண்டெடுத்த பணத்தை வைத்துக்கொண்டு குமைந்து சாகிறோம் என்று குழப்பமாகவும் இருந்தது. ஒரு ஆட்டோக்காரன், ஒரு பூ விற்கும் கிழவி லெட்ச ரூபாய் கண்டெடுத்து நாணயமாய் திருப்பித் தந்ததாய் செய்தி படித்ததில்லையா இவன். அந்த காசை ஏப்பம் விட ஒரு நியாயம் தேடி கோர முகத்தோடு அழைகிறோம் என்பது மட்டும் உறைத்தது.<br /><br />மனசுக்குள் தெரியும் தன் முகம் தனக்கே அறுவெருத்தது. கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறி செய்யும் திருடனுக்கும், நகைக்காக முகத்தில் தலையணை வைத்து கொல்லும் குரூரமானவனுக்கும் தனக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கிறது என்று அசிங்கப்பட்டுக்கொண்டான். தன் மனசின் பாவம் ரத்தத்தில் கலந்ததாய் நினைத்து வருத்தப்பட்டான். வாழ்வில் நிம்மதியாக இருக்க ஒரே வழி காசை உரியவனிடம் தருவதுதான் என்று முடிவெடுத்து பணம் கண்டெடுத்த பெட்டிக்கடை அருகே போனான். ஒரு வேளை அந்த பெட்டிக் கடைக்காரருக்கு தெரிந்திருக்கும். பணம் தொலைத்தவன் அங்குதான் அழுதபடி தேடியிருப்பான்.<br /><br />கடைக்காரர் காய்ச்சல் வந்தவரைப்போல கடையில் உட்கார்ந்திருந்தார். வயதானவர்தான் என்றாலும் வழக்கமாக கடன் சொன்னாலும் சிரிக்கும் ஆசாமி அவர்.<br /><br />“என்ன ஆச்சி கடக்கார்ரே... ஒடம்பு சரியில்லையா?”<br /><br />அவர், “ப்ச்... இல்ல சார். என்ன பொழப்போ. தொட்டதெல்லாம் தொலங்கல. எல்லா காசையும் தொலைச்சி நஷ்டப்பட்டு கிடக்கேன். கடன்காரன் கழுத்துல கை வக்கிறான். ஊரை காலிபண்ணிகிட்டு போகலாமான்னு இருக்கேன்.”<br /><br />இவனுக்கு சுறுக்கென்றது. “காசை தொலைச்சிட்டிங்களா... எவ்ளோ?”<br /><br />“ம் தொலைச்ச மாதிரிதான். விட்ட காசு திரும்ப கிடைக்கவா போது. எவன் யோக்கியம் இந்த உலகத்தில. நஷ்டமான காசுக்கு கணக்கென்ன? வட்டியில கொஞ்சம் பொட்டியில கொஞ்சமா மொத்தமா போச்சி”<br /><br />“பத்தாயிரமா?”<br /><br />“ம், இருக்கும்.”<br /><br />“கவலைய விடு கடக்கார்ரே. நல்லவங்கள கடவுள் சோதிக்க மாட்டான். காசு என்கிட்டதான் இருக்கு.” வீட்டுக்கு ஓடினான். ஒரு அப்பாவி பெட்டிக் கடைக்காரனின் காசை தின்னப் பார்த்தோமே என்று வருந்தினான்.<br /><br />வீட்டிற்கு வந்தால் மனைவி ஒரு அழகான வாசிங் மெஷினை வாங்கி நடு வீட்டில் வைத்திருந்தாள். “ஒன்பதாயிரம் ரூபாய்ங்க... கலர் நல்லா இருக்கா?”;என்று கேட்கிறாள். இவனுக்கு மனசில் என்னவோ உறுத்தியது. பீரோவை பூட்டினோமா இல்லையா?<br /><br />துக்கமும் கோபமுமாக கத்தினான், “ஏ கூறு கெட்டவளே... அடுத்தவன் காசுல வாசிங் மெஷின் வாங்கறது பாவமுன்னு தோணல? காசுன்னா ஏம் பேய் மாதிரி அலையற?”<br /><br />மனைவி புதிராக கேட்டாள். “எதுக்கு இப்படி கத்தறீங்க. எது அடுத்தவன் காசு. நான் கஷ்டப்பட்டு சீட்டு சேத்த காசு. மாசக் கணக்கா கேக்கறேன் வாங்கித் தர வக்கில்லே. நானே வாங்கினா கத்துங்க.”<br /><br />“உன் காசா?”<br /><br />ஓடிப்போய் பீரோவை திறந்து பார்த்தான். பத்திரமாக அந்த காசு அழுக்கு மஞ்சள் பையில் இருந்தது. மெல்ல இளித்தான். மனைவியிடம் ஒரு வார்த்தை பேசாமல் கடைக்காரனிடம் வந்து பெருமிதத்தோடு காசை தந்தான். கண்டெடுத்த விதத்தைச் சொன்னான். கடைக்காரன் பணத்தை திருப்பித் திருப்பி பார்த்துவிட்டு ஒரு ஆயிரம் ரூபாயை இவன் கையில் கொடுத்தான். நாள் முழுதும் இந்த பணம் படுத்திய பாட்டில் வேலைக்கு போகாமல் ஆயிரம் நஷ்டம்தான். ஆனாலும் செய்த உதவிக்கு காசு வாங்குவது தப்பென்று “பரவாயில்ல வை, பெரியவரே. இனி ஜாக்ரதையா இருங்க.” என்றான்.<br /><br />வரும் வழியெல்லாம் அவன் மனசு கணமற்று மெல்லியதாய் மிதந்து வந்தது. ஒரே நாளில் பெரும் பாவியாக ஆக இருந்தான். கைக்கெட்டும் தூரத்தில்தான் மனிதர்களைச் சுற்றி பாவங்கள் இருக்கிறது. ஒரு சின்ன சபலம் ஒருத்தனை பாவியாக்கிவிடும். நல்லவனாவதற்கும் சந்தர்ப்பங்கள் வெக அருகிலேயே இருக்கிறது. நான் நல்லவனானதற்கு நன்றி கடவுளே!<br /><br />உண்மையில் அவன் ஒரு பெரும் தவறு செய்துவிட்டான். வீட்டில் அவனுக்காக கசாப்புக் கடை கத்தியோடு இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.<br /><br />ஒருத்தன் தெரிந்த லைன்மேன். இன்னொருத்தன் புதியவன்.<br /><br />“சார், நேத்து நீங்க பெட்டிக்கடை பக்கத்தல ஒரு பை எடுத்திங்களே... அது இவரோடதாம். நான் எடுக்கும்போது பாத்தேன். உங்களோடதா இருக்கும்னு நெனைச்சேன். இந்த மனுசன் பாவம் பத்தாயிரம் காணம்னு இன்னைக்கு அலையறத பாத்தேன். நீங்க நல்ல மனுசன் தந்துடுவிங்கன்னு சொல்லி கூட்டியாந்தேன்.” லைன்மேன் சொல்ல இவனுக்கு தலை கிறுகிறுத்தது.<br /><br />அடப் பாவி கடக்காரா...<br /><br />கடைக்காரன் எந்த கஷ்டத்துக்கோ புழம்ப நாந்தான் பணம் தொலைஞ்ச கஷ்டமுன்னு தப்பா நெனைச்சேனா? தலைதெறிக்க பெட்டிக் கடைக்கு ஓடினான். அங்கே பெட்டி மட்டும்தான் இருந்தது. ஒரு ஆட்டோவில் மொத்த சாமானையும் அள்ளிப் போட்டுக்கொண்டு சற்று முன்தான் கடைக்காரன் போனதாய் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்.<br /><br />தெரியாத்தனமா ஆள் மாத்தி தந்துட்டேன் என்று சொன்னால் யார் நம்புவார்கள். ஆனாலும் சொன்னான். காசு தொலைத்தவனும் லைன்மேனும் பாதி நம்பினார்கள். ஆனாலும் ‘காசை எண்ணி வை.’ என்றார்கள். மறு நாள் காசை எண்ணி கொடுத்தான்.<br /><br />கடைக்காரனின் மேல் இவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் பணத்தை ஏப்பம் விட தானும் விரும்பியதை நினைத்துப் பார்த்தான். இவன் நினைத்தான், கடைக்காரன் செய்தான். பெரிய வித்தியாசமில்லையே! அன்று காசு கண்டெடுத்ததை யாரும் பார்க்காததற்காக சந்தோசப்பட்டான். இப்பொழுது எடுத்ததை யாராவது பார்த்திருந்தால் பரவாயில்லையே என்று வருத்தப்பட்டான்.<br /><br />‘நாலு பேர் அறிய பணத்தை கண்டெடுக்கும் எல்லோருமே உலகத்தில் யோக்கியர்களாக இருக்க விதியுண்டு. ஆனால் யாரும் அறியாமல் பணத்தை கண்டெடுத்தவன் யோக்கியனாய்த்தான் இருப்பான் என்பதற்கு எந்த யோக்கியரிடத்திலாவது உத்ரவாதமுண்டா?’ என்று ஒரே தத்துவார்த்தமான குழப்பத்தோடு இரவெல்லாம் அவன் குழம்பினான்.<br /><br />சூராவளிபோல வந்து ஒரு நாள் இரவு தங்கிப்போன அந்த பத்தாயிரத்தின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு இரவாகி முள் படுக்கையாய் குத்த ஆரம்பித்தது அதன் பிறகு. அப்படி ஒரு நாளின் இரவில் அவன் தன் மனைவியிடம் கேட்டான், “ஏஞ் செல்லம் உனக்கு ஒரு பத்தாயிரம் கீழ கெடைச்சா அந்த காசுல நீ மொத என்ன செலவு செய்வே?”<br /><br />அவள் இவனை கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னாள், “கண்டிப்பா பீரோவுல புருசனுக்கு தெரியாம ஒளிச்சி வெச்சிட்டு ராத்திரி பூரா திறந்து திறந்து பாக்கமாட்டேன்.” அவள் கோபத்தில் நியாயமிருக்கிறது. பணம் தொலைத்தவனுக்கு அன்று எண்ணி கொடுத்த பணம் அவள் கஷ்டப்பட்டு சேர்த்த பணமாயிற்றே.<br /><br />- எழில்வரதன்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-75099566362870032032009-09-29T17:22:00.000+04:002009-09-29T17:26:22.381+04:00சேரி நாய்களும் சிம்பொனி ராஜாக்களும்2000 ஆகஸ்டில் சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்த பண்பாடு மக்கள் தொடர்பகம் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தியது. (மறைந்த) அறந்தை நாராயணன் தனது உரையில் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனைப் பற்றி கூறியது இப்போதும் நினைவில் இருக் கின்றது. "பாதை தெரியுது பார்" ('காலம் மாறிப்போச்சு' என்று முதலில் பெயர் வைக்கப்பட்டது) என்ற திரைப்படம் 1961,62இல் வெளிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன். இந்தப் படப்பிடிப்பு நடந்த தினங்களில் அதே தளத்தின் மற்றொரு பகுதியில் அன்றைய பிரபல நடிகர் மூன்று எழுத்து இனிசியல் பெயர்க்காரர் (வசன உச்சரிப்பில் புகழ் பெற்றவர்) சக நண்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: 'கம்யூனிஸ்ட்டுக்கள் படம் எடுக்குறாங்க, ஜாக்கிரதை. படம் எப்டி ஓடுதுன்னு பார்க்கலாம்'. சொன்னபடியே அந்தப் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார்கள்."<br /><br />அந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஆர்.கே.கண்ணன், அவர் மார்க்சிஸ்ட் விமர்சகர். அந்தப் படத்தை இயக்கியவர் வங்காளியான நிமாய்கோஷ். அவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர். அவரை அழைத்து வந்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அந்தப்படத்தின் கதா நாயகனாக நடித்தவர் திருச்சி பொன்மலை கோல்டன் ராக் ரயில்வே தொழிலாளியான கே.எம்.விஜயன் என்பவர். படத்துக்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன். பாடல் எழுதியவர்கள் கே.சி.எஸ்.அருணாச்சலம் (சின்னச்சின்ன மூக்குத்தியாம்...), ஜெயகாந்தன் (தென்னங்கீற்று ஊஞ்சலிலே...). பட்டுக்கோட்டையாரும் ஒரு பாடல் எழுதினார். அனைவரும் கம்யூனிஸ்டுகள்.<br /><br />தமிழ்ச்சினிமா தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்க விதைபோட்டவர்களில் நிமாய்கோஷ் முக்கியமானவர். சினி டெக்னீசியன்ஸ் கில்ட் ஆஃப் சௌத் இந்தியாவின் முதல் தலைவர் அவரே. அதேபோல் இன்னொருவர் எம்.பி.சீனிவாசன். இந்தியா விடுதலை பெற்ற காலைப்பொழுதில் 'விடுதலைப்போரில் வீழ்ந்த மலரே! தோழா! தோழா!' எனும் பாடலை மணவாளன், சங்கரராஜ் ஆகியோருடன் இணைந்து பல மேடைகளில் பாடினார் (தகவல்: அம்ஷன் குமார், உயிர்மை அக்.2007).<br /><br />'என்னோடு பாட்டுப்பாடுங்கள்' என்ற பாடகர் தேர்வுக்கான ஒரு போட்டி ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பா கின்றது. இதில் நடுவராக இருக்கின்ற எஸ்.பி.பாலசுப்ர மணியம் ஒரு முக்கிய தகவலைக் கூறினார்: "நாங்கள்லாம் இப்போ பாடின உடனே 'டாண்'ணு கையிலே பணம் வருதுன்னா அதுக்குக் காரணம் எம்.பி.சீனிவாசன்தான்". அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அன்றைய காலத் தில் பம்பாய் தவிர தென்னிந்தியப்பகுதியின் சினிமா என்றால் அது கோடம்பாக்கம்தான். ஆனால் சினிமாக் கலைஞர்களுக்கோ, உதிரிக்கலைஞர்களுக்கோ, கூலி களுக்கோ உரிமையும் கிடையாது, சங்கமும் கிடையாது, எனவே உழைத்ததற்கான கூலியும் உடனடியாக வராது, சொன்னபடியும் வராது. இவர்களுக்கான 'தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சங்க'த்தை உருவாக்கியவர் எம்.பி.சீனிவாசனே. வெறுமனே 'நான் இசைக்குப் பிறந்த வன், இசை தூய்மையானது, புனிதமானது, எனவே நானும் புனிதமானவன்' என்று அவர் ஒதுங்கியிருந்தால் இன்று அந்த சங்கம் இல்லை. 'பாட்டும் சங்கீதமும் யாருக்கும் சொந்தம் அல்ல, பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானா லும் பாடலாம்' என்பதை மெய்ப்பித்தவர். மெட்ராஸ் யூத் கொயர் என்ற இசைக்குழுவை 1970இல் தொடங்கினார். சாதாரணத் தொழிலாளிகள், வங்கி ஊழியர்கள், மாணவர் கள், ஆசிரியர்கள் ஆகியோர்தான் பாடகர்கள்! 5000 பேர் பாட ஒரு சேர்ந்திசை நிகழ்ச்சியை 1984ஆம் ஆண்டு சென்னை குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் நடத்திக் காட்டினார்! இளையராஜா இன்று புலம்புகின்ற 'இசை ஒரு புனிதம், ஆன்மிகம், தவம்' போன்ற மேல்த்தட்டு கற்பிதங் களை உடைத்துக்காட்டியவர். இத்தனைக்கும் அவர் மலை யாளத்திரைப்பட உலகில் வெற்றி பெற்ற பல படங்களின் இசையமைப்பாளர். தேசவிடுதலைக்கான போராட்டத்தில் மும்முரமாக தங்களை இணைத்துக்கொண்ட எழுத்தாளர் களும் கலைஞர்களும் ஒன்றுக்கூடி ஏற்படுத்திய அமைப்பு தான் இந்திய மக்கள் நாடக மன்றம் (மிஸீபீவீணீஸீ றிமீஷீஜீறீமீs ஜிலீமீணீtக்ஷீமீ கிssஷீநீவீணீtவீஷீஸீ மிறிஜிகி). அதில் அவர் உறுப்பினர். எல்லாவற் றுக்கும் மேலாக அவர் மக்களுடன், தொழிலாளிகளுடன் தெருவில் நின்று பாடியவர்.<br /><br />தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் மகிழ்ச்சிகரமான தருணங்களில் மட்டுமே பங்கு கொள்பவன் கலைஞனோ விஞ்ஞானியோ அல்லன். மக்களால் அங்கீகரிக்கப்படு கின்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளுக்கு சமூகக்கடமை உண்டு. தன்னைச் சுற்றி மனிதர்கள் குடல் உருவப்பட்டு செத்து விழும்போதும் பெண்கள் நடுவீதி யில் கும்பலாக வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற போதும் குழந்தைகள் வாணலியில் வறுக்கப்படுகின்ற போதும் கண்டும் காணாமல் இருப்பதும், "எல்லாம் நல்லபடியே நடக்கின்றது" என்று வசனம் பேசுவதும், "எல்லாரும் கனவு காணுங்கப்பா" என்று குஷிப்படுத்துவதும், "இந்தியா 2020இல் வல்லரசாகி விடும்" என்று உடுக்கை அடித்துக் குறி சொல்வதும், 'எல்லாம் இறைவன் செயல்' என்று அள்ளி விடுவதும், சமூகத்துக்கு செய்கின்ற துரோகம். சாமானிய மக்கள் துன்புறுத்தப்படுகின்றபோது, அவமானப்படுத்தப்படும்போது, உரிமைகள் மறுக்கப்படு கின்றபோது, கலைஞனும் விஞ்ஞானியும் தமது அடை யாளத்தையும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டவும் ஒரு சலசலப்பை உரு வாக்குவதற்கான, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதுதான் நியாயம். எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுதான் நியாயம். சக மனிதன் கொடுத்த காசுகளால் வயிறு நிரப்பி, அதே சமூகம் பற்றி எரிகின்றபோது கண்டு கொள்ளாமல் இருப்பவனும் வாயைத் திறக்காமல் மவுனம் காப்பவனும் சுயநலமி, பச்சைத்துரோகி இல்லாமல் வேறு யார்?<br /><br />தொடக்கத்தில் குறிப்பிட்ட எம்.பி.சீனிவாசனும், மறைந்த எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோ ரும், மூத்த எழுத்தாளர்கள் ப்ரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், விஜய் தெண்டுல்கர், அமர்த்தியா சென், ஜெயகாந்தன், மஹேஷ் பட், இவர்களோடு சபானா ஆஷ்மி யும், ஜாவேத் அக்தரும், எம்.எஃப்.ஹ§சேனும், ஓவியர்கள் விஷ்வமும், ட்ராட்ஸ்கி மருதுவும், வீர.சந்தனமும், கூத்துப் பட்டறை முத்துசாமி போன்ற பலரும் தமது சமூகக் கடமையை சரியாகவே செய்தார்கள், செய்து வருகிறார்கள். கலைஞர்களும் மேதைகளும் விஞ்ஞானிகளும், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் தமது கருத்துக்களைப் பதிவு செய்வ திலும், உழைப்பாளி மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக் கும் தலித்துக்களுக்கும் எதிராக எப்போதெல்லாம் அராஜகங் கள் நிகழ்த்தப்படுகின்றனவோ அப்போதெல்லாம் தமது எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்வதிலும், சாமானிய மனி தனை ஒரு ஜடப்பொருளாகவும் வியாபாரப்பொருளாகவும் அரைத்து சாற்றை விழுங்கி சக்கையைத் துப்புகின்ற உலகமயம்+தாராளமயத்துக்கு எதிராக குரல் எழுப்புவதி லும் ஒரு அரசியல் இருக்கவே செய்கின்றது. அது அடக்கு முறைக்கு எதிராகவும் நியாயத்துக்கு ஆதரவாகவும் நிற்கின்ற அரசியல். இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமய சூழலில் கலைஞர்கள், அறிவாளிகளின் குரல் அதிகமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்லது.<br /><br />நம் ஊரில் அப்துல் கலாம் என்று ஒருவர் இருக்கின் றார். மீன்பிடித்தொழில் செய்கின்ற கடற்கரையோர கிராமத்தைச் சேர்ந்த, மீன், கருவாடு, மாமிசம், உப்புக் கண்டம் உண்கின்ற ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்தவர். இந்திய சமூகத்தில் பொ£ய்ய விஞ்ஞானியாக அடையாளம் காணப்படுபவர். தான் தயிர்சாதம் சாப்பிடுவதாகவும், மாமிசம் சாப்பிடுவதில்லை என்று கூறுவதன் மூலமும், வீணை வாசிப்பது, ராகங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், 'எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்வ தற்கு; நடந்ததெல்லாம் நல்லதற்கே, நடக்கப் போவதும் நல்லதற்கே' என்ற பகவத்கீதை வசனங்களைப் பேசுவதன் மூலமும் தன்னை பார்ப்பனீய கும்பலுடன் அடையாளப் படுத்திக்கொண்டார்.<br /><br />குஜராத்திலும் ஒரிசாவிலும் சிறுபான்மை முஸ்லிம் கள், கிறித்துவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கும்பல் படுகொலை நடத்திக் கொண்டிருக்கும்போது விஞ்ஞானி என்ற மேதைமையோடு அடையாளம் காணப்படும் தனது முஸ்லிம் அடை யாளத்தை ஜனாதிபதி பதவிக்காக ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கும்பலுக்கு விற்றவர்தான் அப்துல் கலாம். இதன் மூலம் இந்திய சிறுபான்மைச் சமூகத்துக்கு நெருக்கடியான நேரத்தில் துரோகம் செய்தவர். அவர் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் தன்னை விற்ற பின், அரசு அலுவலகங்களில் மேசையில், மூன்று சங்கராச்சாரியார்கள் படத்துக்கு அருகே இவரது படத்தையும் வைத்து பார்ப்பன அடையாளம் கொடுத்து கொண்டாடியது மேல்சாதிக் கூட்டம். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதாவின் அணுகுண்டு அரசியலின் மென்மையான முகமூடியாக, வக்கீலாக கலாம் இருந்ததால், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர் களும் பேருந்து, ரயில், போஜனசாலை, கக்கூஸ் போன்ற பொது இடங்களில் அவரது சாத்வீக குணங்கள் பற்றி தீவிர விளம்பரம் செய்தார்கள்.<br /><br />அப்துல் கலாம் மட்டுமல்ல, இந்திய சமூகத்தின் அறிவுஜீவிகள் என்று அறியப்படுகின்றவர்களில் பெரும் பாலோரின் மூளைகளில் உயர்சாதி பார்ப்பனீய சிந்தனை களும், தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக் களும்தான் பாசிபிடித்து அப்பிக்கிடக்கின்றன என்பதை யும், விஞ்ஞானிகள் என்று அறியப்படும் பலர் உண்மை யில் விஞ்ஞானத்துக்கு சற்றும் தொடர்பில்லாத மாதச்சம்பள பழைமைவாத பத்தாம்பசலிகளே என்பதையும் நானே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்.<br /><br />2ம் உலகப்போர் தீவிரநிலையை எட்டியிருந்த நேரம் அது. புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானன்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகி யோர் 1945 காலகட்டத்தில் அமெரிக்காவோ ஜெர்மனியோ அணுகுண்டு வீசக்கூடும் என்ற ஐயத்தில் அணுகுண்டுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். நீல்ஸ்போர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சி லையும் நேரில் சந்தித்து "புதிய ஆயுத"த்தை மக்கள் மத்தி யில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டிக் கொண்டார்.<br /><br />2003ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டார்கள். இத்துயர சம்பவம் நடந்த ஒரு சிலநாட்களுக்குப் பிறகு அதே குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் பெரிய்ய அறிவாளியான கலா முக்கு விருது வழங்கப்பட்டது. கோத்ரா சம்பவம் பற்றியோ தொடர்ந்த கொலைகள் பற்றியோ எள்முனை அளவுகூடக் கவலை இல்லாதவராக, இவை பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் விருதை வாங்கிக்கொண்டு வந்த வர்தான் கலாம். அடுத்த ஜனாதிபதியாக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஐயர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று குதூகலத்துடன் சொன்னபோது இவருக்குள் இருந்த முதலாளித்துவவாதி யும் வெளியே வந்தான். இந்திய சட்டம் சொல்கின்ற எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு போன்ற அடிப் படை உரிமைகளை மதிக்காத, தனது தொழிலாளிகளின் உண்மையான சம்பளம் எவ்வளவு என்பதைக்கூட தைரிய மாக வெளியே சொல்லாத மோசடி நாராயணர்களின் வக்கீ லாக கலாம் அம்பலமானார். ஒரு பானை நாராயண மூர்த்தி களுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்கராஜூ என்ற ஒரு சோறுதான் பதம். கலாமுக்கு இந்த சாதம்தான் பிடிக்கின்றது.<br /><br />எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதி. அப்போதெல் லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஒலிபரப்பு தென்மாவட்ட மக்களின் ரத்தத்தோடு கலந்த ஒன்று. அதிகாலை ஐந்தரை தொடங்கி காலை பத்து மணிவரையும், மீண்டும் பன்னிரண்டு தொடங்கி மாலை ஆறு வரையும் வங்கக்கடல் தாண்டி பாட்டோடு தமிழும் காற்றோடு எமது காதுகள் வழியே இதயத்தில் நிரம்பி வழிந்த காலம். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா, தண்டபாணி தேசிகர், டி.ஆர்.மஹாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், பி.லீலா, வசந்தகோகிலம், கண்ட சாலா,எம்.எல்.வசந்தகுமாரி, ஏ.எம்.ராஜா, ஜிக்கி என்ற கிருஷ்ணவேணி...என்று இவர்களின் குரலில் பள்ளி செல் லும் அந்த வயதிலேயே லயிப்பு வர இலங்கை வானொலி மட்டுமே காரணம். ஜி.ராமனாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சீ.ராமச்சந்திரா, தட்சிணாமூர்த்தி சுவாமிகள், சுதர்சனம், ஏ.எம்.ராஜா, இந்த வரிசையில் எம்.எஸ்.விஸ்வ நாதன், ராமமூர்த்தி, மஹாதேவன் ஆகியோரின் கொடி உயரப்பறந்து கொண்டிருந்த காலம். தென்றல், சாரல், மழை, அடைமழை...என்று போய்க்கொண்டிருந்த தமிழ்த் திரையின் வானிலையில் திடீர் என ஒரு மாற்றம் ஏற்பட்டு, சூறாவளி அடித்து அது பெரும் புயலாக உருமாறி "மச்சானப் பாத்தீங்களா.." என்று ஒவ்வொரு வீட்டுக்குள் ளும் நுழைந்து விசாரிக்க ஆரம்பித்தது... தமிழ்நாட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அதன்பின் இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஒன்பது முறை அந்தப் பெண் எஸ்.ஜானகியின் குரலில் மச்சானத் தேடிக் கொண்டிருந்தாள்... ஒரு பக்கம் மச்சானை இவள் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம் "சுத்தச்சம்பா பச்சநெல்லு குத்தத் தான் வேணும்.." என்று ராக்காயி, மூக்காயி போன்ற பொண்ணுக தெருவுக்குத்தெரு உலக்கை சத்தத்துடன் நெல்லுக்குத்த ஆரம்பித்தார்கள். கால் மாத்திரை, அரை மாத்திரை, மில்லிமீட்டர், சென்டிமீட்டர் ... என எந்த நேரமும் ஒரு கையில் இன்ச் டேப்புடனும், இன்னொரு கையில் வெட்டரிவாளுடனும் வலம் வந்துகொண்டிருந்த சுப்புடு போன்ற "மஹாமேதை"களால் அதுவரை வரை யறுக்கப் பட்டிருந்த வாய்ப்பாடு, சூத்ரங்கள், ஆரோகணம், அவரோகணம் போன்ற கட்டுப்பாடுகள், எல்லைகள் எதற்கும் அடங்காமல் சிறகு விரித்துப் புறப்பட்ட இந்தப் பாடல்கள் சாமானிய மக்களின் இதயத்தில் சாணம் போட்டு மெழுகி சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டன. இளையராஜா என்ற கலைஞன் இந்தப்புயலை ஏவி விட்டி ருந்தான். கோடம்பாக்கம் கதி கலங்கியது. சுப்புடுக்கள் சபாக்களில் கூட்டம் போட்டுப் பேச ஆரம்பித்தார்கள். "ஏற்கனவே கொடிகட்டி ஆண்டுண்டிருக்கிற நம்மவா கதி என்னாறது?" என்று பதட்டப்பட ஆரம்பித்தார்கள். கோடம்பாக்கத்தில் அன்னக்கிளியும் இளையராஜாவும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்கள். அன்று கொடி கட்டிப் பரந்த குறிப்பிட்ட ஒரு ஆண் பாடகர் இளைய ராஜாவிடம் பாட மறுத்ததும் உண்மை. அந்த இடத்தை மலேசியா வாசுதேவன் என்ற இளைஞன் பிடித்தான்.<br /><br />யார் இந்த இளையராஜா? அன்றைய மதுரை மாவட்டத்தின் பண்ணைப்புரத்தில் தலித் சமூகத்தில் பிறந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த பாவலர் வரதராசனின் இளையசகோதரர். கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் வரதராசனும் அவரது சகோதரர்களான பாஸ்கர், ராசையா, அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோரும் பாடாத கிராமங்களும் நகரங்களும் தமிழ்நாட்டில் இல்லை.<br /><br />கம்யூனிஸ்ட் இயக்கத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மூத்த தோழரான டி.செல்வராஜ் தீக்கதிர் வண்ணக்கதிரில் (2.10.2005) கூறி யிருப்பதை அப்படியே தருகின்றேன்: "பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப்பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ஆம் ஆண்டில் கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத்தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழுநேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர். அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிப் பாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரிசபையைக் காப் பாற்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தேவிகுளம் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ்.<br /><br />"அப்போது முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவரது இசைஞானமும் கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று 'மைக்' கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரை யாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில் கூட மக்கள் அந்தப்பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.... இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரத ராசன், தோழர் ஐ.மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை இணைத்து இசைக் குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்".<br /><br />28 வருடங்களுக்கு முன் பாவலர் பாடல் தொகுப்புக்கு இளையராஜாவே எழுதிய முன்னுரை இது: "இப்பொழுது கூட நான் வேடிக்கையாகச் சொல்வது உண்டு. மாட்டுவண்டி போகாத ஊருக்குக்கூட எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு. இது வெறும் வார்த்தையல்ல. பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம். இன்று கூட நான் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியைப் பலமைல்கள் தலையில் தூக்கி நடந்து சென்று கிராமம் கிராமமாகப் பாடியிருக்கின்றோம்".<br /><br />பாவலரின் அரவணைப்பில், அவரது அறிவொளி யில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோள்களில் நின்று உலகைப் பார்த்து வளர்ந்தவர், தமிழ் மக்களின் இசை ரசனையை நேருக்குநேர் அறிந்தவர் ராசையா என்ற இளையராஜா. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டு மெனில் தமிழ்த்திரைப்பட உலகம் ஒரு மாற்றுத்திசையில் பயணப்பட்ட நேரம். எம்.ஜி.ஆர்., "பாவம் சினிமா, விட்டு விடுவோம்" என்று ஒதுங்கி அரசியலைச் சீரழிக்க சென்று விட்ட காலம். பாரதிராஜா, பாக்கியராஜ், ஆர்.செல்வராஜ், துரை, எம்.ஏ.காஜா, பாலுமஹேந்திரா, மகேந்திரன், அசோக்குமார் போன்ற புதியவர்கள் புதிய கதைகளுடன், புதிய காமிராக் கோணங்களுடன் சினிமா எடுக்க, நல்ல காலம் பிறந்தது. சாதாரண முகங்களுடன், குறிப்பாக கறுப்பு மனிதர்களை கதாநாயகர்களாக பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டு தியேட்டர்களின் திரைச்சீலைகள், தங்கள் மேல் வருடக்கணக்கில் அப்பிக்கிடந்த ஜிகினாக்களையும் டோப்பா மயிர்களையும் உதிர்த்துவிட்டு குளித்து நிம்மதிப் பெருமூச்சு விடத்தொடங்கிய நேரம். பொதுவாக அது வரை 'இதுதான் கதை', 'இவன்தான் கதாநாயகன், நாயகி' என்று அறியப்பட்ட பெரும்பான்மை சினிமாக்களில் இருந்து இவர்களின் கதைகள் வேறுபட்டு நின்றன என்பது உண்மை. கதைகள் தங்களை ஈர்த்ததனால்தான் அன்று கொடிகட்டிப்பறந்த கமலஹாசன் கொவணத்துடன் நடித் தார்; ரஜினிகாந்த் ஆன்டிஹீரோத்தனமான பாத்திரங்களை யும் ஏற்று நடித்தார். புதிய இயக்குனர்கள், கதையாளிகளின் சிந்தனைகள், விளிம்பு நிலை மக்களின் கதைகளையும் சொன்னதால், திரையிசையின் வடிவமும் போக்கும் கூட வேறு பரிமாணங்களைக் காட்ட வேண்டியிருந்தது.<br /><br />இந்த புதிய கதைசொல்லும் போக்குக்கு இளையராஜாவின் இசைவடிவம் பொருந்தி, அதுவரை என்போன்ற பயல்கள் கேட்டுக்கொண்டிருந்த இசைவடிவத்தில் இருந்து இளைய ராஜாவின் வடிவம் வித்தியாசமாக இருந்ததாக மனசுக்குப் பட்டதற்கு காரணம் புதிய கதையோடும் கதை சொல்லலோடும் இசைந்த அவரது இசைதான்.<br /><br />நாட்டார் பாடல்களின் பாரம்பரிய வளமும் மக்கள் வாழ்வோடு இசைந்த தன்மையும் இசை வடிவமும் அவர் இசையின் மையமாக இருந்தன, மண்ணின் இசை. எனவே மக்கள்திரளில் பெரும்பாலாக இருக்கின்ற உழைக் கும் மக்களின் ரசனையைக் கைப்பற்ற முடிந்தது, சாமானிய மக்களின் இசையமைப்பாளர் என்ற பெயரைக் கைக் கொள்ள முடிந்தது. எங்கிருந்து கற்றீர்கள் இந்த இசையை இளையராஜா? "பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம்". 1975ல் அன்னக்கிளியில் தொடங்கிய இளைய ராஜாவின் பயணம் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ச்சினிமாவின் இசைப்பாதை இவருக்கு என்றே திறந்து கிடந்தது.<br /><br />ஆனால் அவரது பயணத்தின் பாதையில் இரண்டு புறங்களிலும் இருந்த மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த பார்ப்பனீயப்பேய்கள் பல்லை இளித்து பயங்காட்டி அவரை விரட்டப் பார்த்தன என்பது வரலாறு. இன்றைக்கு அவரை ஒரு மேதை என்று பேசுகின்ற பல மேல்சாதி 'சங்கீத தெர்மாமீட்டர்'கள் அன்று அவரை ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே பார்த்தவர்கள். சுப்புடு போன்ற 'சங்கீத பாராமீட்டர்'கள் எப்படியாவது அவரை திரையுல கிலிருந்து துரத்திவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சதிகளும் சாகசங்களும் ஏராளம். ஆனால் இளையராஜாவின் பெயர் தமிழ்மக்களின் வீடுகளில் தண்ணீரைப் போல் சாதாரணமாக புழங்க ஆரம்பித்தது கண்டு, கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள், பொழைக்கிற வழியைப் பார்த்தார்கள். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே வண்டுமுருகன் (வடிவேலு) கட்சி மாறி சைக்கிளில் உட்கார்ந்து டாட்டா காமிக்கிறது மாதிரி, இவர்களும் இளையராஜாவை சடுதியில் இசைஞானி என் றும், இசைத்துறவி, இசைச்சாமியார், இசைப்பூசாரி, சக்ர வர்த்தி, மெழுகுவர்த்தி என்று தலையில் தூக்கி ஆட ஆரம் பித்தார்கள். ஒரே காரணம் - போஸ்டரில் இளையராஜா பேர் இருந்தால் படம் கண்டிப்பாக நூறு நாள் ஓடும், கல்லாப் பெட்டி நிரம்பி வழியும். இங்கேதான் சனியன் பிடித்தது.<br /><br />இளையராஜா பார்ப்பனீய துதிபாடிகளின் வலை யில் விழுந்தார். சாமானிய மக்களிடமிருந்து விலக ஆரம் பித்தார். 'ஜனனி ஜனனி, அகம் நீ', 'முதலே முடிவே, மூகாம்பிகையே', 'என் பாவக்கணக்குக்கு பட்டியல் போட் டால் சொல்ல நடுங்குதம்மா' என மேல் சாதி கடவுள்களின் அருள்வேண்டி கீதவழிபாடு கேசட் போட்டார்; அவர்களை இறைஞ்சி மனம் உருகி எழுதிய பாடல்களுக்குத் தானே இசை அமைத்து கச்சேரி செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட கோடிக்கணக்கில் நிதி, மூகாம்பிகை கோவில் யாத்திரை என மேல்சாதி வேடம் போட ஆரம்பித் தார். 'ரமணமணிமாலை' பாடினார். மறந்தும்கூட சிறு தெய் வங்கள், தனது கிராமம், உழைக்கும்மக்கள் பற்றி பேசியது இல்லை. முக்கியமாக, மக்கள் பிரச்னைகளைப் பேசி உரிமைக்குரல் எழுப்புகிற,ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பேசுகின்ற தனது அண்ணன் பாவலர் வரதராசனின் பாடல் களையும், அதேபோல் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் முழங்குகின்ற பாப் டில்லான் போன்ற மக்கள் பாடகர்களின் இசையையும் "அந்தக் குப்பைகளை ஏன் கிளறுகின்றீர் கள்?" என்று எடுத்தெறிந்து இழிவாகப்பேச ஆரம்பித்தார். நாட்டார் இசை வடிவங்கள்தான் தனக்கு வழியை காண்பித் தன, மக்களின் ஆதரவைக் கொடுத்தன, கேசட்டுகளாக லட்சக்கணக்கில் விற்று தனது வயிற்றை நிறைத்தன என் பதை மறக்க ஆரம்பித்தார். "தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை சோப்பு போட்டுக் குளித்தாலும் சுத்தம் ஆகமாட்டார்கள்" என்று கொழுப்பெடுத்துப்பேசிய கோவணாண்டிகளின் படங்களை தினமும் பூஜை செய்ய ஆரம்பித்தார், ஆதிசங்கரரை கும்பிடுவதாக எழுதினார். கோடம்பாக்கத் தின் மேல்சாதி வட்டாரமும் சபாக்கச்சேரி வட்டாரமும் இப்போது அவரை ஆஹா ஓஹோ என்று கொண்டாடத் தொடங்கின. சுஜாதா போன்ற 'அறிவாளி' விஞ்ஞானிகள் இவரது புகழ் பாடினார்கள்.<br /><br />தலித்துகளை ஏற்கனவே நாயினும் கீழாக வைத்தி ருக்கின்ற பார்ப்பனக்கூட்டத்தின் முகத்தில் காறி உமிழ் வதை விட்டுவிட்டு, 'திருவாசகம்' என்ற தனி ஆல்பத்தில் தன்னை 'நாயினும் கீழோன்', 'கடையோன்' (நாயிற் கடை யாய்க் கிடந்த அடியேற்கு..என்ற திருவாசகப்பாடல்) என்று இளையராஜா தன்னை அழைத்துக் கொண்டார். இவ்வாறு தன்னை நாயினும் கீழோன் என்று தாழ்த்திக்கொண்ட தால்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான (நவரத்தினங்களில் ஒன்று) எண்ணெய் இயற்கை எரிவாயுக் கமிஷன் (ளிவீறீ ணீஸீபீ ழிணீtuக்ஷீணீறீ நிணீs சிஷீனீனீவீssவீஷீஸீ) இந்த பாடல் தகட்டின் ஸ்பான்சராக இருந்தது.அதாவது மக்கள் பணத்தை சூறையாடியது! பொதுத்துறை வங்கிகளும் நிறுவனங் களும் கடந்த சில வருடங்களாக கூச்சநாச்சம் ஏதுமின்றி இந்த வேலையை தந்திரமாக செய்து வருகின்றன. இதே போல் இஸ்லாமிய, கிறித்துவ, தலித் சமூகத்தினரின் பாடல் களோடு, தந்தை பெரியார், அம்பேத்கரின் போதனைகளை யும் கேசட்டுக்களாக, குறுந்தகடுகளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் மத்தியரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்! 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே, ஐயனே' என்று பிச்சைப்பாத்திரமும் ஏந்தினார். 35 வருடங் களுக்கு முன் 'ஆதி பராசக்தி' என்ற படத்தில் வந்த 'ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா, ஆழாக்கு அரிசிய பாழாக்க வேண்டாம், தின்னுப்புட்டு போடியம்மா' என்று சோறு ஆக்கி வைத்து 'ஏய், வந்து தின்னுட்டுப் போறியா இல்லியா?' என்று சாமியையே அதிகாரம் பண்ணுகிற அந்தப்பாட்டு எத்தனையோ மேல் அல்லவா!<br /><br />உச்சகட்டமாக, ஞான.ராஜசேகரன் இயக்கிய 'பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்ததன் மூலம் தன்னை சனாதனக்கூட்டத்தின் விசுவாசி என்று உறுதி செய்தார். வேட்டியும் செருப்பும் அணிய முடியாமல் குறைந்தபட்ச மானமுள்ள மனிதனாகக் கூடவாழ முடி யாமல் கிடந்த தமிழக தலித் சமூகம் தலைநிமிர வழிசெய்த பெரியாருக்கு ஒரு தலித்தே துரோகம் செய்தது கண்டு பார்ப்பனக் கூட்டம் குஷியானது. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.<br /><br />திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் மனித மலத்தை திணித்தபோதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தலித்து கள் தலைவராவதற்கு ஆதிக்கசாதி வெறியர்கள் மறுத்து அவமதித்தபோதும், தான் பிறந்த அதே மாவட்டத்தில் உத்தப்புரம் என்ற ஊரில் சுவர் கட்டி தலித்துகளை ஆதிக்க சாதிக் கூட்டம் கேவலப்படுத்தியபோதும் இளையராஜா போன்ற தலித் சமூகத்தவர்கள் வாய் திறக்க மறுப்பது துரோகம் எனில், பார்ப்பன வேசம் போடுவது அதனினும் துரோகம்.<br /><br />ஏற்கனவே தாழ்ந்த குலத்தில் பிறந்தவரென நந்தனாரை நாயை விடவும் கேவலமாக நடத்திய பார்ப் பனக்கூட்டம் தந்திரம் செய்து நந்தனை தீயில் தள்ளி 'அவன் ஜோதியில் கலந்துவிட்டான்' என்பதாக கதை திரித்தது. மேல்சாதியை மறுத்த, பிள்ளைமார் வகுப்பில் பிறந்த வள்ள லாருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அவரும் ஒரு நாள் 'ஜோதியில் கலந்தார்'. இது இன்று நேற்று கதை அல்ல, ஏகலைவன், கர்ணன், சம்பூகன், குகன், ராவணன் என்று காலங்காலமாக 'ஜோதியில்' கலந்தவர்கள் ஏராளம். ராசையாவின் கதை இப்படிப் போனது.<br /><br />இளையராஜாவும் அப்துல் கலாமும் மறந்துவிட்ட அல்லது தெரியாததுபோல் நடிக்கின்ற ஒரு உண்மை உண்டு - என்னதான் திருவாசகம், மூகாம்பிகை, தயிர்ச்சாதம், பகவத் கீதை என்று வேசம் போட்டாலும், ராசைய்யாவும் கலாமும் கருவறைக்கு உள்ளே போக முடியாது. பூணூல் போட்டாலும் பார்ப்பனக்கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. தனது குலத்தில் பிறந்தாலும் பாரதியாரையே ஒதுக்கி வைக்கத் தயங்காத கூட்டம்தான் அது.<br /><br />இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் அல்லா ரக்கா ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 'லட்சாதிபதி யான சேரிநாய்' என்ற பொருள்படும் 'ஸ்லம்டாக் மில்லிய னேர்' (ஷிறீuனீபீஷீரீ விவீறீறீவீஷீஸீணீவீக்ஷீமீ) என்ற இந்திய ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததற்காகவும், அதே படத்தில் 'ஜெய் ஹோ!' (ஜெயிப்போம்) என்ற பாடலைப் பாடியதற் காகவும் அவருக்கு இரண்டு விருதுகள். அவர் விருது பெற்ற பின் தமிழில் பேசிய "எல்லாப்புகழும் இறைவனுக்கே!" என்ற சொற்றொடர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது 26.2.2009 நள்ளிரவு 2.30 மணிக்கும் மேல். ஆனால் வெளியே அவரை வரவேற்கும் கூட்டம் அலை மோதுகின் றது. சிவமணி என்ற தோல்கருவி இசைக்கலைஞர் தன்னை விடவும் பெரிதான ஒரு மேளத்தை உடலில் கட்டிக் கொண்டு அடித்து ஆடுகின்றார். பக்கத்தில் கேரள மக்களின் பாரம்பரிய செண்டைமேளக் கலைஞர்கள் வாசித்து தூள் கிளப்புகின்றார்கள். ரஹ்மான் வசிக்கின்ற கோடம்பாக்கம் சுப்புராயன் தெரு மக்கள் மதபேதங்கள் ஏதுமின்றி "அவர் இருக்கின்ற தெருவில் நாங்கள் இருப்பது எங்களுக் கெல்லாம் பெருமை" என்று பெருமை கொள்கின்றார்கள்.<br /><br />சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகள், அங்கீ காரங்கள் அனைத்துக்கும் பின்னால் 'சர்வதேச வியாபார அரசியல்' இல்லை என்று யாராவது நம்பினால் அவர்கள் அப்பாவிகளே. 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவுக்குள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், குறிப்பாக அழகு சாதனப்பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்தவும் "இந்தியப் பெண்கள்தான் உலகின் மிகச் சிறந்த அழகிகள்" என்று கண்டுபிடித்து தொடர்ந்து இந்தியப் பெண்களுக்கு உலக அழகி, பிரபஞ்ச அழகி, பாதாள அழகி, ஈரேழுலோக அழகி போன்ற பட்டங்களை சர்வதேச முதலாளிகள் அள்ளி அள்ளி வழங்கியதை இப்போது நினைக்கத் தோன்றுகின்றது. பொருள்+குறைந்த பட்ச லாபம்= சில்லரை வணிகம். பொருள்+ விளம்பரம்+ இங்கிலீஸ்+பகல் கொள்ளை லாபம்=கார்ப்பொரேட் வணிகம். காங்கிரசும் பாரதீய ஜனதாவும் இரண்டாவது வகை கடைக்காரர்கள்.<br /><br />ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சர்வதேச இசையமைப்பாள ராக ஏற்கனவே அடையாளம் பெற்றுள்ளார். இந்த நிலை யில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் பின்னணி யில் 'சர்வதேச வியாபார அரசியல்' இருப்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். 'அதெல்லாம் முடியாது, நீ உடன டியாக நிரூபிக்கணும்' என்று கேட்கின்றீர்களா? 'ஜெய் ஹோ' பாட்டை இந்திரா காங்கிரஸ் கட்சி தனது தேர்தலுக் கான பிரச்சாரப் பாடலாக இப்போது வாங்கி இருக்கின்றது. 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற பழைய சரக்கை விடவும் 'ஜெய் ஹோ' என்ற புதிய சரக்கு நல்ல லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என்பதை காங்கிரஸ் கடைக்காரர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். வாய்மை யாவது மண்ணாவது! இதில் ரஹ்மானுக்கு நேரடியாக ஏதாவது தொடர்பு உண்டு என்பதாக இதுவரை செய்தி இல்லை. 'அடடா, நழுவ விட்டுட்டோமே' என்று பாரத மாதாவின் நேரடி வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா தீவிரவாதிகள் கவலைப்பட்டு அழுவதாகவும், உடனடி போர்க்கால நடவடிக்கையாக 'ஜனங்க ஏமார்ற மாதிரி அதிரடியா ஒரு பாட்டுப்போட்டுக் குடுங்க' என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு டெண்டர் விட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.<br /><br />உண்மையில் 'ஜெய் ஹோ!' என்ற இந்தப்பாடல், ரஹ்மான் பத்து வருடங்களுக்கு முன் தமிழில் இந்திரா என்ற படத்தில் செய்த "இனி அச்சம் என்பதில்லை" என்ற பாடலின் சாயலே. இதை விடவும் நல்ல பாடல்களை அவரே தந்தி ருக்கின்றார் என்பதும் உண்மை. தவிர, தரத்தின் அடிப்படை யில் ஒப்பிட்டால், இதுவரை தமிழில் இளையராஜா செய்த பல பாடல்களின் பக்கத்தில்கூட இந்த 'ஜெய் ஹோ' வர வில்லை. பலர் விமர்சிப்பதுபோல் ரஹ்மானின் பாடல் களில் மேற்கத்திய சாயல் அதிகம் இருப்பதும் உண்மையாக இருக்கலாம். இசையின் தகுதி குறித்தோ அதன் நீள, ஆழ, அகலங்கள் குறித்தோ இங்கு நான் பேச முற்படவில்லை, நான் இசை விற்பன்னனும் அல்லன். ஆனால் விருது பெற்ற ரஹ்மான் அதன் பின் பேசிய பேச்சு, ரஹ்மான் என்ற கலைஞனுக்குள் இருக்கின்ற இசை குறித்த அரசியலையும் அவருக்குள்ளான அரசியல் பார்வையையும் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவப்படுத்துகின்றது.<br /><br />ஆர்.கே.சேகர் என்ற இசையமைப்பாளரின் மகனே திலீப். மலையாளத்தில் 60 படங்களுக்கும் மேலாக செய்த வர் சேகர். திலீப் மிகச் சிறிய வயதிலேயே இசைஞானம் பெறுகின்றார். தந்தை இறந்துவிட, குடும்பம் சிரமத்தில் ஆழ்ந்துவிட, திலீப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மாறு கின்றார். கூடவே அவரது மூன்று சகோதரிகளும் தாயாரும் இஸ்லாமைத் தழுவுகின்றனர், சூஃபி பிரிவின் மீது பற்று கொள்கின்றார். ஒருநிமிட, அரைநிமிட விளம்பரப்படங் களுக்கான இசை அமைத்து வாழ்க்கையைத் தொடங்குகின் றார். பின்னாட்களில் இளையராஜா போன்ற இசையமைப் பாளர்களிடம் இசைக்கோர்ப்பாளராக (நீஷீனீஜீஷீsமீக்ஷீ) பணி செய்கின்றார். ரஹ்மான் 'ரோஜா' படத்தின் மூலம் திரையில் நுழைந்தார். 'இஸ்லாமும் சூஃபி தத்துவ நம்பிக்கையும் எனக்கு அமைதியையும் மனஉறுதியையும் அளித்தன' என் கிறார் ரஹ்மான். இறைவனை மட்டுமே மதங்கள் பிரதா னப்படுத்தும்போது, சூஃபி பிரிவினர் மனித வாழ்க்கை யையும் மனித உறவுகளையும் மேம்படுத்தப் பேசுகின் றன. மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தத்தம் மதம் தமக்கு அமைதியும் மன உறுதியும் அளிப்பதாகக் கூறுவது வழக்கமே. அது அவர்களது உரிமையும் கூட.<br /><br />ரஹ்மானின் திரைப்படப்பாடல்கள் யாரோ எழுதித் தர ஏதோ ஒரு இடத்தில் படத்தில் இடம் பெறலாம். ஆனால் ரஹ்மான் என்ற கலைஞனுக்குள் இருக்கின்ற சமூகம் குறித்தான பார்வையும், அவன் தனது கலைத் திறனை எதற்கு பயன்படுத்த விரும்புகின்றான் என்பது வுமே மிக முக்கியமானதாக நான் கருதுகின்றேன். அவரே வெளியிட்ட 'சகோதரனே, எனக்காக பிரார்த்தனை செய்' (றிக்ஷீணீஹ் யீஷீக்ஷீ னீமீ, தீக்ஷீஷீtலீமீக்ஷீ) என்ற தனிப்பாடல்களின் மையக் கருத்து இப்படி இருக்கின்றது: "உலகில் சக மனிதர்கள் பட்டினியாலும், நோயினாலும், தேசம், தேசியம், மதம் போன்றவற்றின் பெயரால் அடித்துக்கொண்டு சாகின்றார் கள். மனிதனுக்கு மனிதனே எதிரியா? பார், மனிதர்களுக் குள் அன்பு இல்லை, வெறுப்பு கூடிவிட்டது. என்ன நியாயம் இது? மனித வாழ்வை துக்கமும் வெறுமையும் சூழ்ந்து கொண்டிருக்கும்போது நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?".<br /><br />ஆஸ்கர் விருது பெற்ற பின் அவர் பேசிய பேச்சி லும் இதுதான் எதிரொலிக்கிறது: "எனது வாழ்க்கை நெடுகி லும் அன்பு, வெறுப்பு என்ற இரண்டும் எப்போதும் என் முன் சேர்ந்தே வந்திருக்கின்றன. நான் எப்போதும் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். மதத்தாலும் சாதியாலும் பிரதேச அடையாளத்தாலும் மட்டுமே பிரித்து அடையாளம் காணப்படுகின்ற இந்த உலகில், அன்பு செலுத்துங்கள் என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. இசை மனிதர்களை இணைக்க வேண் டும். விருதுகளை நான் எதிர்பார்ப்பதில்லை". இங்கே தான் ரஹ்மான் என்ற கலைஞன் மகத்தான மனிதனாக நிற்கின் றான். இந்திய சமூகம் மத ரீதியாக சாதிரீதியாகப் பிளவு பட்டிருப்பதையும் இதன் பின்னணியில் உள்ள 'ஒரே மதம், ஒரே இனம், தேசியம்' என்று பேசுகின்ற ஆர்.எஸ்.எஸ். மதவெறி சக்தி களையும் பெயர் சொல்லாமல் அடையாளம் காட்டுகின் றான். தனது இசையின் அரசியல் இதுதான் என்று அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.<br /><br />விமானநிலையத்தில், நள்ளிரவில் தனது உடலை விடவும் பெரிய ஒரு மேளத்தை கட்டிக்கொண்டு ஆடிய சிவமணி, வடசென்னையில் ஒரு சுடுகாட்டின் ஓரம் பிறந்த வர், தனது பிள்ளைப்பிராயத்தை சுடுகாட்டு ஆட்டத்துக்கும் மேளச்சத்தத்துக்கும் நடுவில் கழித்தவர். இந்த ஆட்டமும் இசையும்தான் அவருக்கு இசை ஞானத்தை கற்றுத்தந் தது. இன்றைக்கு சென்னையிலே மரண கானா விஜி மக்களி டையே பிரபலம் அடைந்து வருகின் றார். மரண வீடுகளில் விடிய விடிய காப்பித் தண்ணி குடித்துக் கொண்டு யாருக் காகப் பாடுகின்றார் விஜி? செத்துப் போன வன் எழுந்து கேட்கப் போகின்றானா? இல்லை. செத்துப் போனவரின் நல்ல, கெட்ட குணங்கள், மனிதஉறவுகள், ஆசாபாசங்கள் இவற்றோடு கூடவே இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, விஜியின் தோல் இசைக்கருவியான 'டேப்' வழியே வந்து விழுகின்றது.<br /><br />ரஹ்மானும் சிவமணியும் விஜியும் அவர்களைப் போன்ற எண்ணற்ற கலைஞர்களும் தமது இசை வடிவில் மக்களின் அரசியலைப் பேசுகின்றார்கள். தமது மேதை மையை மக்களின் குரலை எதிரொலிக்கப் பயன்படுத்து கின்றார்கள். இசைஞானியாக வானத்தில் சஞ்சரிப்பதை விடவும் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, எம்.பி.சீனி வாசன் போன்ற மனிதநேயம் மிக்கதெருப்பாடகனாக இருப்பதே மனிதனாக இருப்பதற்கு அழகு என்பதையும் கலைஞனுக்குள் இருக்க வேண்டிய அரசியலையும் நமக்கு சொல்லாமல் சொல்கின்றார்கள்.<br /><br />- சார்லிAnonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-28616241.post-16211000804205550992009-09-12T17:44:00.001+04:002009-09-12T17:44:57.726+04:00நிமிர்த்தப்பட வேண்டிய நாய் வால்!என்னதான் நடு வீட்டில் வைத்து, பன்னீரில் குளிப்பாட்டி, சந்தனமும் சவ்வாதும் கலந்து பூசி, சீவி சிங்காரித்து வைத்திருந்தாலும் அசிங்கத்தைக் கண்டால் ஆசையாய்ப் பறக்கும் மிருகங்களைப் போல, எங்கெல்லாம் மக்கள் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் பாய்ந்தோடிச் சென்று தங்கள் கைத்தடிகளைச் சுழற்றி போராட்டக்காரர்களின் மண்டைகளை உடைத்து மண்ணில் பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை நக்கிச் சுவைத்தப் பின்தான் ஆசை அடங்குகிறது நமது காவல்துறைக்கு.<br /><br /> கடந்த ஜூலை 14ம் தேதி சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரியும் தமிழகத் தனியார் பள்ளிக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் கோட்டை முன் ஊர்வலம் நடத்தச் சென்ற இந்திய மாணவர் சங்கத் தலைவர்களையும் கலந்துகொண்டவர்களையும் கலைஞரின் கைத்தடிகளான காவல்துறை தடியடி நடத்தி, பெண்களென்றும் பாராமல் காலித்தனமாக, ஆடைகளை பிடித்து இழுத்து, அடித்து, மண்டைகளை உடைத்தனர். இதில் 17 மாணவர்கள் படுகாயமுற்றனர். இந்திய மாணவர் சங்க அகில இந்திய செயலாளர் ஜி.செல்வா, மாநில தலைவர் ரெஜிஸ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பலத்த காயமுற்றனர். ரத்தம் சொட்டச்சொட்ட அடித்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கூட கொண்டு செல்லாமல் ஒன்றரை மணிநேரம் காவல் வேனிலேயே வைத்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தது, காவல்துறை.<br /><br />சமீப காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வாலிபர்கள், பெண்கள், முறைசாரா-அமைப்புசாரா தொழிலாளர்கள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காத நோயாளிகள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், டாஸ்மாக் ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊனமுற்றோர், தண்ணீர், சாலை, கால்வாய் கேட்ட மக்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் அல்லல்படும் பள்ளிச்சிறுவர்கள் என தமிழக அரசு இயந்திரத்தில் துவங்கி அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு அமைப்புகளும் அதித் தீவிரமாக போராடவேண்டிய அவலநிலையை தமிழகத்தில் கலைஞர் அரசு உருவாக்கியுள்ளது.<br /><br />யாரும், எந்த அமைப்பினரும் திடீரென போராட்டத்தில் இறங்குவதில்லை. பேச்சுவார்த்தை நடத்தி, அடையாள இயக்கம் நடத்தி, எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது அதிகார திமிர்த்தனத்தைக் காட்டி, கோரிக்கைகளை நிராகரிக்கும் போதுதான் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.<br /><br />போராட்டம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கலைஞர் கருணாநிதி மிளகாயைக் கடித்தது போன்று எரிச்சலடைகிறார். டில்லிக்குச் சென்று தன் குடும்பத்திற்குத் தேவையான மத்திய மந்திரி பதவிகளை குட்டிக்கரணம் போட்டாவது வாங்கி சாதித்துக்கொள்கிற கலைஞருக்கு, மாணவர்கள் மக்களுக்கு தேவையானதைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அதை பரிசீலிக்கக்கூட மனமில்லாமல் காவல்துறையை வைத்து மாணவர்களின் தலைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார். கலைஞர் என்ற முகமூடி கிழிந்து லோக்கல் ரவுடி கவுன்சிலர் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.<br /><br />கை ஓரிடம், கால் ஓரிடம், இடுப்பு ஓரிடம், தலை கிடைப்பதே இல்லை என தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் பட்டப்பகல் படுகொலைகள், திருட்டு, வழிபறி, கொலையோடு கூடிய கொள்ளை, வெடிகுண்டு கலாச்சாரம், போலீஸ் வேடமிட்டு திருடுதல், போன்ற நவீன திருட்டுவகைகளிலும் கொலைகளிலும் காட்ட வேண்டிய வீரத்தை கல்விக்காக நிராயுதபாணிகளாக போராடும் மாணவ மாணவியர்களிடத்தில் காட்டிக்கொண்டிருக்க காவல்துறைக்கு வெட்கமாக இல்லையா என்று தெரியவில்லை?<br /><br />கடந்த 2006ஆம் ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி விடுவோம் என்று வெற்று வாய்ச்சவடால் விட்ட தமிழக அரசு 2009ம் ஆண்டில் பாதிக்கும் மேல் கடந்தும் அமல்படுத்த வக்கற்று கிடக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை காலம் கடத்த கமிஷன் மேல் கமிஷனாக போட்டு வருகிறது.<br /><br />இப்படிப்பட்ட கமிஷன்களுக்கு உதாரணம் தான் அயோத்தியில் இந்து மதவெறியார்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி கலவரத்தை ஆராய அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகாலம் கழித்து, 8 கோடி செலவு செய்து அறிக்கை அளித்துள்ளது என்பதை மனதில் பதிய வைக்கவேண்டும். இன்னும் இதுபோன்ற எத்தனையோ கமிஷன்கள் ஆட்சியாளர்களின் ஆசியுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றன.<br /><br />யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. சமச்சீர் கல்வியை அமல்படுத்தினால் கல்வியை விற்றுக் காசாக்கும் கொள்ளைக்கும்பலுக்குத்தான் பாதிப்பு. அவர்கள் பாதிக்கப்படுவதில் கலைஞருக்கு என்ன கரிசனை வேண்டியுள்ளது.<br /><br />எந்த ஒரு திட்டம், தனியார் முதலாளிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற பினாமிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ அத்திட்டத்தின் மீது ஒரு கமிஷனைப் போட்டு அந்தக் கமிஷனின் தலையில் தீயை வைத்து அதை சாம்பலாக்கி, காலம் தாழ்த்தி அதை முடக்குவது கலைஞர் அரசு உட்பட ஆட்சியாளர்களின் வாடிக்கை.<br /><br />பள்ளிகள் அனைத்தும் துவக்கப்பட்டு, அனுமதியெல்லாம் முடிந்து, பாடங்கள் ஆரம்பித்த நிலையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி முதலாளிகளுக்கு 7 ஆண்டு சிறை என்ற அற்ப சட்டத்தைப் போட்டு கல்வி முதலாளிகளைக் காப்பாற்றிய பெருமை கலைஞருக்குத் தான். தன்னுடைய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனத்தின் அவல நிலை ஆங்கில தொலைக்காட்சி முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் சந்தி சிரித்த போது அமைதி காத்து அருள்புரிந்தார்.<br /><br />அனுமதியின்றி கோட்டை நோக்கி யாராவது போராட்டமோ ஊர்வலமோ நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார். திடீரென சகல வசதிகளுடனும் மெரினா கடற்கரையில் கலைஞர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு யாரிடம், எங்கே பெற்றார் அனுமதி? ஆங்கிலேய ஆட்சி முதலும், அதற்கு முன்பும் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்து திமிர்ந்தெழுந்ததுதான் மக்கள் போராட்டம். அவர்கள் தங்கள் தேவைக்கான போராட்டத்தை கோட்டைச் சுவரல்ல, டில்லி செங்கோட்டைச் சுவராக இருந்தாலும் உடைத்துக் கொண்டு போராடுவார்கள். எனவே, எப்படியாவது நாய்வாலை நிமிர்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நிமிர்த்த முடியவில்லயென்றால் நாய்வாலை நறுக்கவும் மக்களுக்கு தெரியும் என்பதை கலைஞரும் காவல்துறையும் புரிந்துகொண்டாலும் சரி அல்லது அனுபவித்து தெரிந்துகொண்டாலும் சரி! <br /><br />- இரா.சரவணன்(dreucitu@dataone.inAnonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-27204194623775658972009-08-27T09:16:00.002+04:002009-08-27T09:21:49.373+04:00வலைவிரித்தாள் வசந்தசேனை மாட்டிக்கொண்டான் புருஷோத்தமன்<a href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SpYXvcI2iwI/AAAAAAAAAus/kX-Yus17Ul8/s1600-h/haditha_more.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 260px;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SpYXvcI2iwI/AAAAAAAAAus/kX-Yus17Ul8/s400/haditha_more.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374509309087877890" /></a><br />கண் முன்னே நடக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்த வக்கற்ற பான் கி மூன் வேறு எதற்குத்தான் இருக்கிறார்?<br /><br />கைப்புள்ள என்று ஒருவர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். சங்கத்து ஆளை எவனாவது அடிச்சா போய் தட்டிக் கேட்க வேண்டியது அவர் வேலை. ஆனால், நடப்பதோ தலைகீழ். நியாயம் கேட்கப்போற கைப்புள்ளயே உதை வாங்கி, சட்டை டார் டாரா கிழிஞ்சு... ரணகளமா திரும்பி வருவாரு.<br /><br />பான் கி மூன் ஒரு கைப்புள்ள. அவர் தலைமையேற்று நடத்தும் ஐ.நா.சபையோ ஒரு லொள்ளு சபா (விஜய் டி.வி.யில வருதே... அதுதான்).<br /><br />பார்த்துச் சிரிக்கலாம், சீரியசா எடுத்துக்கக் கூடாது.<br /><br />ராஜபக்சே போர் நிறுத்தம் செய்யாத போதும் உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் முடித்துக் கொண்டது ஏன்?<br /><br />மறைந்த நடிகர் சுருளிராஜன் பிச்சையெடுப்பதற்காக தள்ளுவண்டியில் (சக்கர நாற்காலியில் அல்ல) சென்று கொண்டிருப்பார் (படத்தில்தான்). அப்போது எதிர்படும் ஒருவன் “அண்ணே, ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் ‘ஸ்கார்ச்சி’ படம் (அப்போதைய ஆபாசக் குப்பை) ஓடுதுண்ணே” என்று சொல்ல, பிச்சையெடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு டாக்சி பிடித்து தியேட்டருக்கு ஓடுவார் சுருளிராஜன்.<br /><br />சுருளியைப் போல் ஆபாசப் படம் பார்க்க பாதியில் எழுந்து ஓடினாரென்று அவதூறு சொல்லவில்லை. ‘மானாட மயிலாட’ ஷூட்டிங், டப்பிங், ஏதோவொரு படவிழாவில் ஏதோவொரு நடிகையின் குத்தாட்டம்... போன்ற முதல்வரின் அன்றாட நிகழ்ச்சி நிரல் உண்ணாவிரதப் பந்தலில் அவருக்கு நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும். கடமையை நிறைவேற்ற கிளம்பியிருப்பார்.<br /><br />ஆரம்பித்தது ஈழப் பிரச்சனையென்பதால் நிறுத்தப்பட்டதற்கும் அதுதான் காரணமாயிருக்கும் என கருணாநிதியின் ரசனை தெரியாத ஜென்மங்கள் (வேறு யார்... நிருபர்கள்தான்) தவறாகச் செய்தி கொடுத்து ‘போரை நிறுத்தி விட்டார்கள்’.<br /><br />இந்தக் கற்பனை கொஞ்சம் அதிகம் என முகம் சுழித்தால் உங்களுக்கு மேலும் ஒரு தகவல்:<br /><br />அம்மா ஆட்சியில் அய்யா ஒரு நள்ளிரவு நேரத்தில் ‘கும்மாங்குத்து’ வாங்கிய பிறகு, இனி காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை எப்படி எதிர்கொள்வது என கவலையோடு கட்சியின் செயற்குழு விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், டெண்டுல்கர் பூஜ்யத்தில் அவுட்டான சேதி துண்டுக் காகிதத்தில் வந்ததாம். சேதி கண்ட கலைஞர் கர்ச்சீப்பால் கண்கள் துடைக்க, சாடையறிந்த செயற்குழு ‘அம்மா’வை அந்தரத்தில் போட்டு விட்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பற்றிய கவலையைக் கையிலெடுத்து விவாதித்ததாம்.<br /><br />‘இலங்கைக்கு உதவவில்லை’ என்று சொல்லி வந்த இந்தியா இறுதிக் கட்டத் தாக்குதலில் 25,000 தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்சேவுக்கு ஐ.நா.வில் பகிரங்க ஆதரவு தெரிவித்து விட்டதே?<br /><br />யாருக்கும் தெரியாமல் சோரம் போகும் பெண்ணுக்குத்தான் பத்தினி வேசம் தேவை. புருஷனே கூட்டிக் கொடுக்கத் தயாராகி விட்ட பிறகு வெட்டியா அது எதுக்கு?<br /><br />தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழன் துடித்தெழுவான் என ஈழத்தமிழன் எதிர்பார்த்தான். தங்களுக்கு இதுதான் கடைசித் தேர்தலோ என கதர்சட்டைக்காரன் பயந்து செத்தான்.<br /><br />ஆனால், நூறோ, இருநூறோ வீசியெறிஞ்சா பொறுக்கிக்கிட்டு சொந்தச் சகோதரனை, சகோதரியை துடித்துச் சாக அனுமதிக்கும் ஈனத் தமிழன் இவன் என்ற உண்மையை தேர்தலுக்குப் பின் புரிந்து கொண்ட அன்னை முகமூடி விலக்கி, சொந்த முகம் காட்டி விட்டார்.<br /><br />‘தனி ஈழம் கிடைக்குமென்றால் ஆதரிக்கத் தயார்’ என்கிறாரே கருணாநிதி?<br /><br />அவர் ஆதரிக்காவிட்டாலும் கிடைக்கும் ஈழம்.<br /><br />‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என இவருடைய அறிவு ஆசான் அண்ணா சூளுரைத்தபோது “கிடைத்து விடுமா ஆசானே...?” என கேள்வியெழுப்பாமல் வழிமொழிந்ததோடு, மேடைதோறும் அதை வாந்தி எடுத்தவருக்கு ஈழம் என்றவுடன் பொத்துக்கொண்டு வருகிறது. கருணாநிதியின் இந்த எள்ளலில் கரைந்திருப்பது அய்யப்பாடல்ல, கையாலாகாத்தனம்.<br /><br />புத்திர பாக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால் கோவணத்தை அவிழ்க்கத் தயார் என்பவன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்.<br /><br />‘இந்தியாவின் உதவியின்றி புலிகளை நாங்கள் வென்றிருக்க முடியாது’ என சரத் பொன்சேகா அறிவித்த பிறகும் ஈழத் தமிழரைக் காக்க சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியது ஏன்?<br /><br />வலை விரித்தாள் வசந்தசேனை. அதில் மாட்டி சீரழிந்து போனான் ஷோக்குப் பேர்வழி புருசோத்தமன்.<br /><br />‘மனோகரா’ கதை இது.<br /><br />‘ஸ்பெக்ட்ரம்’ என்ற பெயரில் அன்னையும் விரித்தார் ஒரு வலை. அப்பன் புருசோத்தமன் என்ன... மகன் மனோகரனே மாட்டிக் கொள்ளும் அளவுக்கு சிக்கலான, ‘அறுபதாயிரம் கோடி’ கண்ணிகளைக் கொண்ட வலை அது. விடுவாரா புருசோத்தமன்! ஒரு காலத்தில் புறங்கையை நக்கியவர் வேறு. புகுந்து விளையாடிவிட்டார்.<br /><br />‘சொக்கத்தங்கம்’ என்று கொஞ்சுவதும், மடிப்பிச்சை ஏந்தி கெஞ்சுவதும் தனக்காகத்தானே தவிர, தமிழருக்காக இல்லை.<br /><br />தகவல் தொழில் நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இனி புலிகளின் கொரில்லா <br /><br />யுத்த முறைக்கு சாத்தியமே இல்லையென எழுத்தாளர் சாருநிவேதிதா சொல்கிறாரே...<br /><br />எதையும் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு அவுத்துவிடக்கூடிய ஆளில்லை சாரு.<br /><br />தகவல் தொழில் நுட்ப விசயத்தில் மைக்ரோ சாப்ஃடு, இன்போசிஸ் முதலாளிகளுக்கே வகுப்பெடுக்கும் அளவு ரொம்ப வெவரமானவரு. பெரிய தில்லாலங்கிடி! அப்படிப்பட்டவரே இவ்வளவு தூரம் அடிச்சுப் பேசினதுக்கப்புறம் கொரில்லா யுத்தம் தொடங்குவது பத்தி கண்டிப்பா புலிகள் மறு பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இந்தப் பாழாய்ப்போன தகவல் தொழில் நுட்பம் போராளிகளுக்குத்தான் ஆப்பு அடித்தது. வேற சிலருக்கோ பெரிய ஜாக்பாட்டா மாறிவிட்டது. அச்சடிக்குறது எப்படி? போலீசு கண்ணுல மண்ணைத் தூவி விக்குறது எப்படி?ன்னு ரொம்ப நாளா தவியாய் தவிச்சுக்கிட்டிருந்தது ஒரு கூட்டம். ‘சரோஜாதேவி புக்கு போடுறவங்க’ என்று அவர்களை அடையாளப்படுத்துவார்கள். சாரு வியந்து பார்க்கும் புதிய தகவல் தொழில் நுட்பம் அவர்களில் சிலரை இப்போது ‘ஹைடெக்’ புத்தக தயாரிப்பாளர்களாக தரம் உயர்த்தியிருக்கிறது. போலீஸ் தொல்லையில்லை, மாமூல் பிரச்சனையில்லை; ஏஜென்சி கமிஷனுமில்லை. தேவை ஒரேயொரு கணினி. ‘ஒரு பெண் சொல்லும் பாலியல் கதைகள்’... அது இதுன்னு ஆணின் வக்கிரத்தையெல்லாம் ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றி விட்டால் போதும். ‘எங்கே கிளுகிளுப்பு’ என அலையும் வாலிப, வயோதிக அன்பர்களின் அடிமடியில் கை வைத்து விடலாம்.<br /><br />இப்படியாகத்தான் ஆபாசத்தை புத்தகமாகப் போட்டபோது ‘டாஸ்மாக்கில்’ ஒரு கட்டிங் அடிக்கவே கஷ்டப்பட்டவர், பிரமிக்க வைக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்தால் லீ மெரிடீன் என்ன... அடையாறு பார்க் என்ன... என்று காரில் பறந்து பறந்து சரக்கடிக்கிறார்.<br /><br />புலிகளுக்குப் போர் தந்திரம் கற்றுக் கொடுப்பவர், கஷ்டத்திலிருக்கும் சக எழுத்து வியாபாரிகளுக்கும் தான் கடைப்பிடிக்கும் இந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம்.<br /><br />உலகம் முழுக்க பிரிந்த நாடுகளெல்லாம் சேர முயற்சிக்கையில் இலங்கையிலிருந்து ஈழம் பிரிவது சாத்தியமாகாது என்கிறாரே ஞானி?<br /><br />இறையாண்மையைச் சொல்லி ஈழத்தை எதிர்க்கிறான் காங்கிரசுக்கார ன்.<br />ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதக் கனவை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு ‘சாத்தியமில்லை’ என்கிறார் ஞானி.<br />இருவேறு அலைவரிசைகளில் சிந்தித்தாலும் பேராயக் கட்சியோடு ஒரே திசையில் பயணிக்கிறார் ஞானி.<br />இந்தியாவோடு சேர பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு சேர பங்களா தேசமும், இந்தோனேசியாவோடு சேர கிழக்கு திமோரும் துடியாய் துடிப்பதை தகுந்த ஆதாரங்களுடன் முன்பே இவர் விளக்கியிருந்தால் தனி ஈழக் கோரிக்கையை அப்போதே கடலில் தூக்கி வீசியிருப்பார்கள் புலிகள்.<br />காலம் கடந்த போதனை. சரி, அது போய் தொலையட்டும்; பல்வேறு சமூகங்கள் பிரிந்து போவது ஒரு தேசத்துக்கு, தேசத்தின் மக்களுக்கு நல்லதில்லையென்றால், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருக்கையில் “இனி நான் புருசனுமில்லை, நீ என் பொண்டாட்டியுமில்லை” என ஒன்றாய் இருந்த குடும்பத்தை இரண்டாக்கி (அல்லது மூன்றாக்கி), ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போவது மட்டும் எப்படி சரி?<br />பல குடும்பங்களை உள்ளடக்கியதுதானே ஒரு தேசம்!<br />ஒரு நாளில் அதிகபட்சம் வீட்டுக்குள் இருப்பது பத்து மணி நேரமே. அந்தச் சொற்ப நேரத்திலும் சம்சாரத்தின் ரோதனையை (அல்லது இந்த ஆளு சேட்டைகளை அந்தம்மா) தாங்க முடியாம அறுத்துக்கிட்டு ஓடலாம்! ஆனா, பல நூறு ஆண்டுகளாய் அடித்து உதைத்து கறிக்கடையிலே ஆட்டிறைச்சிக்குப் பதில் தமிழ் பெண்களின் மார்புகளை வெட்டித் தொங்க விட்டு ‘இங்கே தமிழச்சியின் கறி கிடைக்கும்’ என எழுதிப் போட்ட சிங்களக் காடையனுடன் தமிழன் ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டும்!<br />என்ன நெஞ்சுரமடா இவனுங்களுக்கு!<br />சிங்களனுக்கு ஞானி செய்யும் இந்தப் பாத பூஜைக்கு குமுதம் காசு கொடுக்குதோ இல்லையோ... ராஜபக்சே கண்டிப்பாகக் கொடுப்பார் ‘சிங்களஸ்ரீ’ விருது.<br /><br />அகிம்சை வழியில் போராடினால்தான் விடுதலை கிடைக்குமென்கிறார்களே.... ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும்?<br /><br />அப்படிக் கிடைத்திருந்தால் சுதந்திர இந்தியாவில் இராணுவம், போலீசு கைகளில் காந்தியின் சத்திய சோதனையைக் கொடுத்திருப்பார் நேரு! துப்பாக்கியையும், குண்டாந்தடியையும் கொடுத்திருக்க மாட்டார்.<br /><br />பிரபாகரனுக்கு அகிம்சை போதிக்கும் இவர்கள் ராஜபக்சேவுக்கு எதுவும் சொல்வதில்லையே... ஏன்?<br /><br />போராடுபவனுக்கு அகிம்சையும், அவனை ஒடுக்குபவனுக்கு ஆயுதமும் பரிந்துரைப்பதுதான் காந்தியம் என்பதாலா?<br /><br />போராளிகள் கிடக்கிறார்கள்... இரத்த வெறி பிடித்தவர்கள்! இலக்கியவாதிகள் காந்தியின் கொள்ளுப் பேரன்களாயிற்றே! ஜிப்பா கிழியாமல், வேட்டி அவிழாமல் அகிம்சை வழியில் ஒரேயொரு இலக்கியச் சந்திப்பை நடத்திக் காட்டச் சொல்லுங்கள்.<br /><br />ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்த, அரியர்சை ஒரே தவணையில் வாங்கி சரவணா செல்வரத்தினத்திற்குக் கொண்டு ஓட அரசு ஊழியர்களுக்கு காந்தி விட்டுச் சென்றிருக்கும் சொத்து அகிம்சை. சத்தியாக்கிரகம், தர்ணா, மறியல், தட்டேந்துவது, மொட்டையடிப்பது... போன்ற ‘புரட்சிகர’ வடிவங்களைக் கொண்டது அது. போராளிகளுக்கு சரிப்படாது.<br /><br />ஈழத் தமிழர்களின் எதிர்காலம் இனி என்ன ஆகும்?<br /><br />பார்ப்பன ஊடகங்கள் பீதியைக் கிளப்புவதைப்போல் அதோகதி ஆகிவிடாது. அதற்காக சாம்பலிலிருந்து சிலிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல புலிகள் மீண்டு வருவர் என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் ஊட்டத் தேவையில்லை.<br /><br />எதுவுமற்ற வெற்றிடமே ஒரு புயலை கருக்கொள்ள வைக்கிறது எனும் விஞ்ஞானத்தை நம்பிக்கையாக்கிச் சொல்கிறோம்.<br /><br />புறநானூறு காட்டும் தமிழனின் வீரம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற அய்யத்தைப் புரட்டிப் போட்ட ஈழத் தமிழரின் போர்த்திறம், சாவு சிலநூறு மீட்டர் தொலைவிலிருந்த போதும் புரிந்த வீரச்சமர் நமக்கு இப்படி உரத்துச் சொல்கிறது: ‘தங்களின் எதிர்காலம் குறித்து இனி கவலைகொள்ள வேண்டியவர்கள் சிங்களர்கள் மட்டுமே’.<br /><br />-தீசுமாசு டி சில்வா <br /><br /><br />Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-25997162703553881902008-06-29T16:23:00.001+04:002008-06-29T16:23:59.122+04:00நாயகன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 4அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்! <br /><br />-கார்ல் மார்க்ஸ்<br /><br />அம்பேத்கருக்குள் புது கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். <br /><br />காரணம், இங்கே அவர் மகர் இல்லை. சாலையில் எதிரே அவரைக் கடந்து செல்பவரிடம் 'இவன் என்ன சாதியாக இருப்பான்' என்கிற சந்தேகப் பார்வைகள் இல்லை. முகச் சுளிப்புகள் இல்லை. விலகி நடந்து, சக மனிதனை அற்பப் பிராணி போன்று நடத்தும் அசிங்கங்கள் இல்லை. இதனாலேயே அவரது நெஞ்சு நிமிர்ந்தது. நடையிலும் மனதிலும் உற்சாகம் பிறந்தது. கைகள் சற்று அகலமாகவே நகரத்தின் வீதிகளை வீசி அளந்தன. என்றாலும், தனது தாய்நாடான இந்திய மண்ணில் இந்த அக சுதந்திரத்தைத் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கம் ஒரு புண்ணாக அவரது நினைவில் வலி ஏற்படுத்திக்கொண்டு இருந் தது. இந்தக் குறைகளிலிருந்து தன் தேசத்தையும் தன் மக்களையும் விடுவிப்பதுதான் எதிர்காலத்தில் தான் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர். 22 வயதில் விரும்பி தன் முதுகில் ஏற்றிக்கொண்ட இந்தச் சுமையுடன், அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக்கழகத்தினுள் அடியெடுத்து வைத்தார்.<br /><br /> <br /> <br />கல்லூரிப் பருவத்துக்கே உண்டான சக மாணவர்களின் கேளிக்கைகளைக் கண்டும் காணாதவராக விலகி நடந்தார். வராந்தாக்களில் அவர்கள் விடுக்கும் உற்சாகக் கூக்குரல்கள், எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போலத்தான் இவருக்குக் கேட்டது. அந்த அளவுக்கு வேறு எது பற்றிய சிந்தனையுமே இல்லாதவராக, எந்நேரமும் கல்வி ஒரு காந்தம் போல இழுத்துக்கொண்டு இருந்தது. இதனாலேயே அவரது கால்கள் கல்லூரிக்கும் அவர் தங்கியிருந்த காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கும் இடைப்பட்ட தூரத்தை மட்டுமே அளந்துகொண்டு இருந்தன. <br /><br />அமெரிக்கர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் அம்பேத்கரைக் கவர்ந்தன. குறித்த நேரத்தில் உணவு மேசைக்கு வரும் ஒழுங்கு, சிந்தாமல் சிதறாமல் உணவு அருந்தும் பாங்கு, அணியும் உடைகளின் நேர்த்தி, தன்னையும் இழக்காமல் பிறரையும் மதிக்கும் அவர்களது பண்பு போன்ற குணங்களை மெள்ள மெள்ள அவர் தனதாக மாற்றிக்கொண்டார். இரண்டு ரொட்டித் துண்டு, ஒரு மீன் துண்டு, ஒரு குவளை காபி... இவ்வளவுதான் அங்கு அவர் மேற்கொண்ட உணவு முறை. இதற்கே ஒரு நாளைக்கு ஒரு டாலரும் பத்து சென்ட்டும் அவர் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட உதவித்தொகையில் பாதிப் பணம் இதற்கே செலவழிந்ததால், சில சமயம் உணவு விடுதிக்குள் நுழையாமலே கடந்துசென்றுவிடுவார்.<br /><br />1915ல், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் வென்ற அம்பேத்கர், அடுத்த ஆண்டிலேயே 'இந்தியாவில் சாதியம்' மற்றும் 'பண்டைய இந்தியாவில் வாணிபம்' என்னும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, டாக்டர் பட் டங்களைத் தன் பெயரின் அடைமொழியாக இழுத்துக்கொண்டார். அமெரிக்காவில் ஒருவழியாக அவர் வந்த காரியம் பூர்த்தியானது என்றாலும், தான் காண விரும்பும் லட்சிய உலகுக் கான போராட்டத்துக்கு இந்தப் படிப்பெல்லாம் போதாது என உணர்ந்தார். அறிவுத் தேடல் நெருப் பெனக் கொழுந்துவிட்டு எரிய, அடுத்து லண்ட னுக்குப் பயணமானார். லண்டன் நகரத்தின் 'கிரேஸ் இன்' சட்டக் கல்லூரி, பொருளாதாரம் படிக்க அவரை அனுமதித்துக்கொண்டது. 'என்னதான் ஒருவனுக்கு அறிவு நெருப்பு இத்தனை பிரகாசமாக எரிந்தாலும், இப்படியா வெறியுடன் நாடு நாடாக அலைவது' என, அதுவரை அம்பேத்கரின் கல்விக்கு உதவிய மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டுக்குத் தோன்றியதோ என்னவோ... 'இனி என்னால் தம்பிடி காசுகூடச் செலவு செய்ய முடியாது' எனக் கையை விரித்துவிட்டார். அதோடு மட்டுமின்றி, இது வரை படிக்க வைத்த செல வுக்குப் பிரதியாக உடனே அம்பேத்கர் அரண்மனை வந்து சேவகம் செய்ய வேண்டும் எனும் கண்டிப்பான உத்தரவு வேறு!<br /><br />பட்டம் பாதியில் அறுந்து தொங்கியது. அம்பேத்கரின் மனச் சோர்வைப் புரிந்துகொண்ட 'கிரேஸ் இன்' கல்லூரி நிர்வாகம், 'எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இங்கே வந்து உங்களின் படிப்பைத் தொடரலாம்' என அனுமதி வழங்கி விடை கொடுக்க, அம்பேத்கர் அரை மனதோடு பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானார். 1917 ஜூலையில், மார்ஷல் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எஸ்.எஸ்.கெய்ஸர் எனும் கப்பல், அம்பேத்கரை சமாதானம் செய்யும் விதமாகக் கூவியபடி, இந்தியா நோக்கிப் புறப்பட்டது.<br /><br />இந்தியா திரும்பியதும், அம்பேத்கரின் புகழ் பம்பாய் மாகாணத்தில் சரசரவெனப் பற்றிப் பரவத் தொடங்கியது. அமெரிக்கா சென்று படிப்பது என்பது, இந்தியாவில் அன்றைக்குச் சாதாரண காரியமல்ல.வசதிமிக்க உயர் சாதியினருக்கேகூட அன்றைய நிலையில் ஆகாத காரியம் அது. இச்சூழலில், மகர் இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பியது, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. கண்டிப்பாக இதற்கு விழா எடுத்தே தீர வேண்டும் எனஅனைவரும் விரும்பினர். மாகாண முதன்மை நீதிபதி தலைமையில் பாராட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்த பின், பெரும் கூட்டம் வீடு தேடி வந்து முற்றுகையிட்டுப் பாராட்டைக் குவித்தது. ஆனால், அத்தனைப் பாராட்டுக்களும் ஒரே வாரத்தில் அம்பேத்கரின் கண் முன் சரிந்து விழுந்தன. <br /><br /><br /><br />படிப்பு எப்படியும் தன் கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்த்திவிடும் என நினைத்திருந்த அம்பேத்கரின் எண்ணத்தில் மண் அள்ளிப் போடுவதற்கென்றே பரோடா அரண்மனையில் காத்திருந்தனர் சாதி வெறியர்கள் சிலர். ஆனால், இது தெரியாத பரோடா மன்னரோ, அம்பேத்கரின் உயர்ந்த படிப்பைக் கௌரவப்படுத்தும் வகையில் ராணுவச் செயலாளராக நியமித்துப் பத்தாண்டுகள் பணிபுரியுமாறு கனிவான கட்டளை விடுத்திருந்தார். துவக்கத்தில் அம்பேத்கரும் அந்தப் பதவியை உவப்புடன் ஏற்றுக்கொண்டு, அதற்கான வேலைகளில் மூழ்கினார். ஆனால், அரண்மனையே அவரைக் கண்டதும் ஓடி ஒளிய ஆரம்பித்தது. ஒரு நாள் தனக்குச் சேவகம் செய்ய நியமிக்கப்பட்ட ஒரு கடைநிலை ஊழியனிடம் அம்பேத்கர் தண்ணீர் கொணருமாறு சொன்னார். வெகு நேரம் அந்தப் பணியாளன் சிலை போல நின்றுவிட்டு, பின்பு தயங்கித் தயங்கி அவரையே எடுத்துக் குடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். படிப்பறிவு இல்லாத அந்தப் பாமரனிடம் இருந்த சாதிவெறியை நினைத்து வருந்தியபடியே, அம்பேத்கர் அருகில் இருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுக்கப் போக, சட்டென அங்கு வந்த இன்னொரு பணிப் பெண் பதற்றத்துடன், அம்பேத்கருக்கெனப் பிரத்யேகமாக வேறொரு பானை வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகுமாறும் கூறினாள். சாதி வெறி எந்த அளவுக்கு ஒரு நோயாக அவர்களுள் ஊறிப்போயிருக்கிறது என்பதை அறிந்து அம்பேத்கர் அடைந்த துயரத்துக்கு அளவில்லை. கூடவே, இந்த நோயிலிருந்து இவர்களை மீட்டாக வேண்டுமே என்கிற கவலையும் சேர்ந்து, அம்பேத்கரின் மனதில் தாங்க முடியாத பாரத்தை ஏற்றிவிட்டது. இந்த வேதனையுடன், தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார். அங்கோ இதை எல்லாம்விடப் பெரும் வேதனை காத்திருந்தது.<br /><br />சற்றுத் தொலைவிலேயே பார்த்துவிட்டார்... விடுதிக்கு வெளியே பத்துப் பதினைந்து பேர் கைகளில் தடியோடு, கண்களில் வெறியோடு காத்திருந்தனர். <br /> <br /> <br /> <br />-சரித்திரம் தொடரும்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28616241.post-38980565439231224492008-06-29T16:22:00.000+04:002008-06-29T16:23:17.685+04:00நாயகன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 3சென்ற இதழ் தொடர்ச்சி...<br /><br />ஜெய் பீம் என்றால் ஒளி,<br />ஜெய் பீம் என்றால் அன்பு,<br />ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்,<br />ஜெய் பீம் என்றால் பல கோடி மக்களின் கண்ணீர்த் துளி!<br /><br />-விலாஸ் பி டிலாரெ (மராத்திய கவி)<br /><br />கிளை பிரிந்து செல்லும் ஆறு, வறண்ட நிலங்களைத் தேடி அலைந்து, இறுதியில் வீணே கடலில் கலக்கிறது.<br /><br /><br /><br /> <br /> <br />ஆனால், அம்பேத்கர் எனும் மூல ஆறு, தன் பயணத்தின் துவக்கத்திலேயே ஒடுக்கப்பட்டவர்களுக் கான பயணமாகத் தன் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதி வரை பயணித்தது. <br /><br />அந்த நெடிய பயணத் தின் முதல் புள்ளிதான் அன்று விழாவில் கெலுஸ்கர் அவருக்குப் பரிசாகத் தந்தபுத்தகம்.<br /><br />அந்தப் புத்தகத்தின் பெயர் 'கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு'. <br /><br />அனைத்து உயிர்களுக்கும் அன்பையும் அமைதியையும் இன்பத்தையும் நல்கும் வாழ்க்கைநெறியான புத்தரது போதனைகள் அம்பேத்கரது உள்ளத்தில் புது வெளிச்சம் பாய்ச்சின. தன்னைச் சூழ்ந்து அழுத்தியிருக்கும் சாதியம் எனும் கற்பாறைகளை அடித்து நொறுக்க, அறிவு ஒன்றுதான் தன் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என்பதை அம்பேத்கர் அந்த விழா மேடையில் உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் அந்த மெட் ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றது 750க்கு 282 எனும் மிகக் குறைந்த மதிப்பெண்களில்தான்.ஆனால், அன்று வரை வேறு எவரும் மகர் இனத்தில் இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றி ருக்கவில்லை. <br /><br />முந்தைய பகுதிகள் <br /> <br />சென்ற இதழ்...<br /> <br /> <br /> <br /> <br /> <br /> <br /> <br />உயிருக்காகப் போராடிக் கொண்டு இருக்கும் பெரும் கூட்டத்தினரின் நெருக்கடிகளில்இருந்து தப்பித்திருப்பது தான் ஒருவர் மட்டுமே என்பதை உணர்ந்தார் அம்பேத்கர். துன்பத்திலும் துயரிலுமாக இந்தியா முழுக்க உழலும் எத்தனையோ கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் ஒரு ஏணியாக மாறி, அவர்களையும் தன்னைப் போல மாற்ற முடியுமா எனக் கனவு கண்டார். அவருக்குள் அந்தக் கனவு ஒரு பொறியாகக் கனன்றது. தான் இன்னும் பல உயர்ந்த படிப்புகளை படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க இயலும் என அவரது உள்ளம் அறிவுறுத் தியது.<br /><br />பாய்மரக் கப்பல் கிழக்குத்திசை யில் பயணிக்கும்போது கடல் காற்று மேற்கு நோக்கி அடித்து அதனைத் திசைதிருப்புவதுபோல, அவரது எண்ணங்களுக்கு மாறாக ஒரு திடீர்ச் சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அது அவரின் திருமணம். உண்மையில், அம்பேத் கர் தன் தந்தையிடம் இப்போது திருமணம் வேண்டாம் என எவ்வளவோ மன்றாடிப் பார்த் தார். ஆனாலும், ஒரு சம்பந் தத்தை அவரது தந்தையார் பேசி முடித்துவிட, அம்பேத்கர் மறுத்து விட்டார். பஞ்சாயத்து அவருக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்த தோடு, அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் எனத் தீர்ப்புச் சொன்னது. அப்போது அம்பேத் கருக்கு வயது பதினாறுதான். மணப் பெண்ணோ ஒன்பதே வயதான சிறுமி. பெயர் ரமாபாய்.டபோலியில் ஒரு சுமை தூக்கும் கூலியின் இரண்டாவது மகள். பம்பாய் பைகுல்லா மார்க்கெட்டில் ஒரு திறந்தவெளி அங்காடியில், சந்தடிகள் ஓய்ந்த இரவு நேரத்தில் கரிய வானும் நட்சத்திரங்களும் உடன் சில நண்பர்கள், உறவினர் கள் சாட்சியாக எளிமையான அவர்களின் திருமணம் நிகழ்ந்தது.கருக்கலில் மீன் விற்கும் பெண்கள் அங்கு வருவதற்குள் மொத்தக் கூட்டமும் கலைந்து சென்றது.<br /><br />சாயாஜிராவ் கெய்க்வாட். பரோடாவை ஆண்டுகொண்டுஇருந்த சிற்றரசர். கெலுஸ்கர்தான் அவரைப் பற்றி முதன்முதலாக அம்பேத்கரின் தந்தையிடம் எடுத்துக் கூறி, ''அந்த மன்னர் யாராவது ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்குரிய கல்விக்கான முழுத் தொகையையும் செலவு செய்யச் சித்தமாக இருக்கிறார். நாம் ஏன் அம்பேத்கரின் கல்லூரிப் படிப்புகாக அவரிடம் உதவிகேட்கக் கூடாது?'' என்றார். கெலுஸ்கரின் இந்தக் கேள்வி அடுத்த சில நாட்களிலேயே அம்பேத்கரையும் அவரது தந்தை யையும் பரோடா அரண்மனை யில், மன்னர் சாயாஜி முன் கொண்டு நிறுத்தியது. அம்பேத்கரின் புத்திசாலித்தனத்தைச் சில கேள்விகளின் மூலம் அறிந்து கொண்ட மன்னர், மாதா மாதம் 25 ரூபாய் உதவித்தொகை தருவதாக உத்தரவாதம் அளித்தார். <br /><br />பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரி, அம்பேத்கரின் வரவால் சற்றுப் பரபரப்படைந்தது. தன்னைக் கண்டதும் விலகிச் செல்லும் சில உயர்சாதி மாணவர்களைக்கண்டு உள்ளூர நகைத்தார் அம்பேத்கர். கண்ணிருந்தும் குருடர்களாகத் தடுமாறும் அவர்களை அவரது அறிவின் வெளிச்சம் அலட்சியப்படுத்தி அப் பால் தள்ளியது. கல்லூ ரியில் முல்லர் போன்ற ஆசிரியர்கள் அவரது அறிவின் ஆழத்தைக் கண்டு, அவருக்கு அவ்வப்போது அத்தியாவசியமான உதவிகளைச் செய்து, தங்களது பெயரை வரலாற்றில் இணைத்துக்கொண் டனர். அம்பேத்கரின் தந்தையான ராம்ஜிசக்பால் தன் மகனுக்காக பம்பாய் பரேலில் இரண்டு அறை களைக்கொண்ட புதிய வீட்டுக்கு குடிபுகுந்தார். அவற்றில் ஒரு அறை படிப்பதற்கென்றே பிரத் யேகமாக ஒதுக்கப்பட்டது. மகன் இரவு வெகு நேரம் கண்விழித்துப் படித்துக்கொண்டு இருப்பதை வெளியில் இருட்டில் அமர்ந்து, ஜன்னலின் வெளிச்சத்தை பார்த் தபடியே ராம்ஜியும் பூரிப்புடன் கண்விழித்திருப்பார். அம்பேத் கரின் உழைப்பின் பலனாக 1912ல் பி.ஏ., பட்டம், அவரது தலையை அலங்கரித்தது. <br /><br />படிப்பு முடிந்த பின், மன்னருக்குக் கொடுத்த வாக்கின்படி அம்பேத்கர் அரண்மனையில் வேலை செய்தாக வேண்டும்.ஆனால், தந்தையார் ராம்ஜி <br /><br />சக்பாலுக்கோ தன் மகன் மேலும் உயர் படிப்புகள் படித்து, அனைவரும் வியக்கத்தக்க உன்னத நிலைக்கு வர வேண்டும் என்பது பிடிவாதமான அவா. ஆனால், அம்பேத்கரோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுதான் கற்ற கல்விக்கு அழகு என்பதில் தீவிரமாக இருந் தார். படைப் பிரிவில் லெப்டி னென்ட் பதவி அவருக்காகவே காத்திருந்தது. தன் மகன் இத்த னைப் படித்தும், மீண்டும் தன் னைப் போலவே மன்னனுக்கு சேவகம் செய்யப் போய்விட்டானே எனும் கவலை ராம்ஜிசக்பாலை உருக்குலைக்கத் தொடங்கியது.<br /><br />வேலைக்குச் சேர்ந்து சரியாகப் பதினைந்தே நாளில், அம்பேத்க ருக்கு ஒரு தந்தி வந்தது. அடுத்த நாள் காலையில், கட்டிலில் படுத் திருந்த அந்த வயதானவரின் மெல்லிய கரங்கள் நடுங்கியபடி அம்பேத்கரின் முதுகை வாஞ்சை யோடு தடவிக்கொடுத்தன. சுற்றி யிருந்த உறவினர்களின் கேவல் களும் அழுகை ஒலிகளும் ஒரு கட்டத்தில் வெடித்துப்பீறிட, நொடியில் சடலமாகிப்போன தன் தந்தையின் உடலைப் பார்த்து அம்பேத்கர் கதறியழுதார். அந்த வெற்றுடம்புக்கு இப்போது மகனை உயர்ந்த படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை ஏதும் இல்லை. அம்பேத்கருக்குள் அது இடம் மாறியிருந்தது.<br /><br /><br /><br />ஒரு மகனாகத் தந்தைக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடித்ததும்,இனி அரண்மனைக்குத் திரும்புவ தில்லை என அம்பேத்கர் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார். தந்தையின் கனவு என்பது ஒரு காரணம்தான் என்றாலும், அரண்மனையில் இதர சாதியினர் காட்டும் சாதிய வேறுபாடுகளும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந் நிலையில், அடுத்து என்ன செய்வது எனக் குழம்பிய நிலையில் அம்பேத்கர் தன் எதிர் காலத்தின் இருண்ட வாசலில் நின்றுகொண்டு இருந்தபோது, தூரத்து வெளிச்சப் புள்ளியாய் ஒரு தகவல் வந்தது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைத் தன் சொந்த செலவில் படிக்கவைக்கப்போவதாக பரோடா மன்னர் விடுத்திருந்த அழைப்பு அது. எந்த அரண்மனைக்குள் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந் தாரோ, அதே அரண்மனைக்கு தன் கல்வியின் நிமித்தமாகவும் தன் தந்தையின் கனவு நிமித்த மாகவும் மீண்டும் உதவி கேட்டு விண்ணப்பித்தார் அம்பேத்கர். மூன்று முத்துக்களை பரோடா அரண்மனை தேர்வு செய்தது.அவர்களில் ஒருவராக அம்பேத்கர் மீண்டும் அரசரின் முன் நின்றார்.கல்வி முடிந்ததும், பத்தாண்டுக் காலம் அரண்மனைச் சேவகம் எனும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கையெழுத்திட்டார்.<br /><br />1913 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு காலை நேரம்... நியூயார்க் நகரம் எப்போதும் போல் காபியைச் சுவைத்தபடி பரபரப்பாகத் தன் நாளை ஒரு புதிய இளைஞனுடன் கைகுலுக்கித் துவக்கிக்கொண்டது.அம்பேத்கருக்குள் இனம்புரியாத மன எழுச்சி. என்னவென்றே விவரிக்கத் தெரியாத உற்சாகம்! <br /><br />காரணம்...Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-41423315526191936532008-06-29T16:19:00.001+04:002008-06-29T16:19:43.884+04:00நாயகன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 2சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, <br />சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!<br /><br />-ஏங்கல்ஸ்<br /><br />காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தறுவாயில்இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும், இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். ''உன்னால்இந்த அடைமழையில் பள்ளிக்குச் செல்ல முடியுமா?'' எனச்சவால் விட்ட.னர். அடுத்த நொடியே, எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல் லாம் தனது புத்தகப் பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ, அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற் கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துசென்றான். ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்துகிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப் பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத் துடன் நின்றுகொண்டு இருந்தாள். ''நீ ஒரு மகார்! என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்?'' என இரைந் தாள். அந்தக் கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது.<br /><br /> <br /> <br />தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என கிராமத்திலிருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு வித மான ரூபங்களில் தன் குழந்தை களைப் பயமுறுத்தி வருவதைக் கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார். <br /><br />பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்பக் கல்விகள் முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளி யில் தன் மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவு களிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண் டார். அதன்படி, பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான். <br /><br />ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர் களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட் டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத் துப் போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாட கைக்கு ஒரு மாட்டுவண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்... வண்டிக்கார னுக்கு தான் மகார் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரிய வர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத் தடுமாறி, ஒரு வழியாக காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப் பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார். <br /><br />பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்புவேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார். <br /><br />இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமை யுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ் கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.<br /><br /><br /><br />அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளி யானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல்முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. 'நமது சமூகத்தில் முதல்முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்' என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து, எந்த மாணவ னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிச ளிக்கப் போகிறோம் என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி!<br /><br />விழாவில், சிறுவன் அம்பேத் கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்க் கட்டியணைத்துப் பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியைக் கண்டு, ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். பின்னாளில் அந்தப் புத்தகம்தான் அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்கப் போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது!<br /> <br /> <br /> <br />-சரித்திரம் தொடரும்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28616241.post-12884444214650824902008-06-29T16:15:00.000+04:002008-06-29T16:18:28.440+04:00நாயகன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்கல்வியின்மையால் அறிவை இழந்தோம்; <br />அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;<br />வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து<br />இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!<br /><br />-ஜோதிராவ் புலே (1890)<br /><br />மகாராஷ்டிராவில் கொங்கன் மாவட்டத்தின் டபோலி எனும் சிறு கிராமம். அதிகாலைப் பனி விலகாத வயல்வெளிக்கிடையே பாம்பு போல வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஒரு ஜோடிப் பிஞ்சுக் கால்கள் தாவிக் குதித்து ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப் பள்ளியின் முதல் நாள். அதனாலேயே, தந்தை மகன் இருவருக்குள்ளும் கரை காணாத உற்சாகம். <br /><br />ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம் வடிந்து, வகுப்பறையைவிட்டு வெளியேறியது. காரணம், சக மாணவர்களுடன் சரி சமமாக உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவன் மகார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம். மீறி அந்தச் சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால், வகுப்புக்கு வரும்போது புத்தகப் பையுடன் ஒரு கோணிச்சாக்கையும் கொண்டுவரும்படி வேண்டா வெறுப்பாக உத்தரவிட்டார் ஆசிரியர்.<br /><br /> <br /> <br />அன்று, அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். 'நாம் தீண்டத்தகாதவர்கள். நாம் சார்ந்திருக்கும் இந்து மதம் நம்மை அப்படித்தான் மற்றவர்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி இருக்கிறது' எனத் தன் மகனுக்கு பிற்பாடு விளக்கினார் அவனது தந்தை. அன்று இரவு, அந்தச் சிறுவனின் கன்னங்களில் நீர் வழிந்தது.<br /><br />மறுநாள், ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கித் திரும்பியது. அங்கே, அந்தச் சிறுவன் கையில் கோணிச்சாக்குடன் நின்றிருந்தான்.<br /><br />1947... ஐம்பது ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியுடன் இப்போது அந்தச் சிறுவன் கோட் சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டுமொத்த இந்தியாவே அவனது வருகைக்காக நாடாளுமன்றத்தில் திரும்பிப் பார்த்தது. இப்போது அவன் கையில் கோணிச்சாக்கு இல்லை... மாறாக, கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானித்த இந்திய அரசியல் சாசனச் சட்டம் அந்தக் கோப்பில் இருந்தது.<br /><br />தாழ்த்தப்பட்டவர்களின் மீதான அடிமைத்தளையைக் கல்விஎனும் வெடி வைத்துத் தகர்த்த வீரனாகவும், இந்து மதத்தின் 2,500 வருட மனக் கசடான மனு எனும் அதர்மத்தை விரட்டியடித்த அறிவுச் சுரங்கமாகவும், இந்தியாவின் அக விடுதலைக்காகத் தனது காலத்தை விதையாக்கிப் போராடி வெற்றித் திருமகனாக வாழ்ந்த தியாகி... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.<br /><br /><br /><br />அம்பேத்கரின் வாழ்க்கை தவிர்க்கவே முடியாமல் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து துவங்குகிறது.<br /><br />மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழும் நிமித்தம் நாடோடிகளாக வந்த புதிய இனத்தவரான ஆரியர்கள், பொருளீட்டும் வாழ்வில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவின் பூர்வகுடிகளை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. தங்களை எதிர்ப்பிலிருந்து காத்துக்கொள்ளும் பொருட்டாக, சமூகத்தை நான்காகப் பிரித்தனர். பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்பதாக அதிகாரத்தின் படிகளை அவர்களே அமைத்தனர். அதற்கான காரணங்களை வடிவமைக்க, கடவுளும் மதமும் உருவானது. அதனை நம்பவைக்க வேதங்களும், புராணங்களும், கதைகளும் உருவாக்கப்பட்டன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் இறுக இறுக, அதிகாரம் சூத்திரர்களை மேலும் மேலும் ஒதுக்கிக்கொண்டே போனது. <br /><br />உலகில் எந்த நாட்டிலும், ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும், வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக்கொள்வது அவனது அறிவையும் நடத்தையையும் பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில் பிறக்கும்போதே அது தீர்மானிக்கப்பட்டு, வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும் தாழ்ந்தவனாக கருதப்படும் இழிநிலை கட்டமைக்கப்பட்டது. இதனால், அவர்களின் உரிமைகள் பிடுங்கப்பட்டன; அறிவு பிடுங்கப்பட்டது; அவர்களுக்கான வாழ்நிலம் பிடுங்கப்பட்டது; ஆடைகள் பிடுங்கப்பட்டன; சுதந்திரமும் பிடுங்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர். <br /><br />இந்த இழிநிலையிலிருந்து தன்னையும் தனது சமூகத்தையும் விடுவிக்கத் தோன்றிய விடிவெள்ளியாக, டாக்டர் அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் மாஹ¨ எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தையார் ராம்ஜி சக்பால். மகாராஷ்டிரத்தில் கொங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவடே எனும் சிறு கிராமம்தான் அவரது பூர்விகம். ராம்ஜியின் வம்சாவளியினர் மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளான மகார் இனத்தைச் சேர்ந்தவர்கள். துவக்க காலத்தில் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்த காரணத்தால்தான் மகா(ர்)ராஷ்டிரம் என்ற பெயர் இந்த நிலப்பரப்புக்கு உருவானது. <br /><br />ஓங்குதாங்கான மகார்களை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி, தன் படைவீரர்களாகச் சேர்த்துக்கொண்டது. அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பாலும் அந்தப் படையில் சுபேதாராகப் பணிபுரிந்துவந்தார். இதனாலேயே, ராம்ஜி சக்பாலுக்கு ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீமா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிந்தது. ராம்ஜி சக்பாலுக்குத் தனது மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். வரிசையாகப் பிறந்தன பதினாலு குழந்தைகள். அதில், பதினான்காவதாகப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என யோசித்த ராம்ஜிக்கு, சட்டெனத் தோன்றியது மகாபாரத பீமனின் உருவம். அடிப்படையில், தீவிர பக்திமானான அவர், ஒரு குத்துச்சண்டை பிரியரும்கூட. அதன் காரணமாக, தனது மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் என அவனுக்குப் பெயர் சூட்டினார்.<br /><br />பீமுக்கு இரண்டு வயதானபோது, சுபேதார் ராம்ஜி சக்பாலின் வாழ்வில் ஒரு திடீர் சோதனை. இனி மகார்களைப் படைப் பிரிவில் சேர்க்கக் கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்ததால், ராம்ஜியின் வேலை பறிபோனது. மீண்டும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் டபோலிக்கே குடும்பத்துடன் இடம்பெயர்ந்த ராம்ஜிக்கு அந்த இடமும் கசந்தது. காரணம், அங்கும் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமை. தீண்டாமை எனும் பேய் அந்த ஊரையே நோய்க்கூறாகப் பற்றியிருந்தது. தனது பிள்ளைகள் பள்ளி சென்று முறையான கல்வியைப் பெறுவதற்குக்கூட அங்கிருந்த ஆசிரியர்களும் இதர சாதிகளைச் சேர்ந்த மக்களும் தடையாக இருப்பதைக் கண்டு ராம்ஜி வேதனைகொண்டார். தன் பிள்ளைகள் தினம்தினம் கோணி சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. <br /><br />குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் தீண்டாமையின் வேதனை தீண்டிவிடக் கூடாது என உணர்ந்த ராம்ஜி, சிறிது காலத்திலேயே தனது குடும்பத்தை சதாரா நகரத்துக்கு மாற்றிக்கொண்டார். சதாராவுக்கு அவர்கள் குடி பெயர்ந்ததுமே, குடும்பத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, ராம்ஜி சக்பாலின் மனைவி பீமாபாயின் திடீர் மறைவு. ராம்ஜியால் அந்தத் துக்கத்திலிருந்து அத்தனை சுலபமாக வெளிவர முடியவில்லை. இன்னொன்று, அதற்கு ஆறுதலான விஷயம். அது, ராம்ஜிக்குக் கிடைத்த ஸ்டோர் கீப்பர் வேலை. இனி, தனது குழந்தைகளுக்குக் கௌரவமான படிப்பைத் தர முடியும் எனும் நம்பிக்கை வந்தது. <br /><br />அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆங்கில வகுப்பில் தனது மகனைச் சேர்த்தார் ராம்ஜி. என்னதான் இடம் மாறினாலும் சாதி துவேஷம் அங்கும் அதிகம் இருந்தது. தனது பிள்ளைகளுக்கு இங்கும் அந்த வேதனையின் நிழல் படிந்துவிடக் கூடாது என நினைத்தார் ராம்ஜி. அவரது எண்ணத்தை தலைகீழாக மாற்றுவதற்கென்றே அன்று வந்தது ஒரு மழை!<br /> <br /> <br /> <br />-சரித்திரம் தொடரும்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28616241.post-60126381157069985102008-05-29T23:07:00.001+04:002008-05-29T23:10:21.238+04:002011-ன் நிச்சய முதல்வர்<a href="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SD7_jVreGMI/AAAAAAAAAe0/H2dzlfWXiI8/s1600-h/p26.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_4nqliyy-z-Y/SD7_jVreGMI/AAAAAAAAAe0/H2dzlfWXiI8/s400/p26.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205879201866848450" /></a><br />'வருங்கால முதல்வர் கார்த்திக்... 2011-ன் நிச்சய முதல்வர் கார்த்திக்... நாளைய பிரதமர் கார்த்திக்..!' என்னும் வகைதொகையில்லாத கோஷங்களுக்கு நடுவே, வாய் நிறைய சிரிப்போடு மைக் பிடிக்கிறார் நடிகரும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவருமான கார்த்திக். <br /><br />''கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள். கடவுள் இருக்கிறார்... இருக்கிறார்... இருக்கிறார்..! கண்ணால் கண்டால் மட்டுமே கடவுள் என்று சொன்னால், கண் இல்லாதவர்களுக்கு அவர் கடவுள் இல்லையா..! நமக்கு ஏற்படும் சோதனைகளுக்குக் கடவுளை நம்ப வேண்டும்!'' என்று அதிரடி ஆத்திகம் பேசுகிறார் கார்த்திகானந்தா! குழுமி நின்ற ரசிகர்களைக் கொஞ்ச நேரம் குழப்பியடித்துவிட்டு, பேட்டிக்குத் தயாரானார்.<br /><br /> <br /> <br />''பிஸ்வாஸோட நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சு! அரசியல்ல என்னோட ஃபாஸ்ட் குரோத் அவருக்குப் புடிக்கலை. அதனாலதான் கட்சியோட தமிழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியிருக்கார். இதுக்கு மேல ஒரு கட்சியை யார் பொறுப்பா பார்த்துக்குவாங்க? இனி நான் ஃபார்வர்ட் பிளாக்ல இல்லை. நான் இல்லாதது இன்னும் கொஞ்சம் நாள்ல அவங்களுக்குத் தெரியும்! ஆக்சுவலி, இப்போ எனக்கு 'மூடு' சரியில்லை. இருந்தாலும், பேட்டி தரேன். கேள்விகளைக் கேளுங்க..!'' என்று சுறுசுறுப்பானவரிடம், ''முதல்ல... உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை..?'' என்றோம். <br /><br />''எந்தப் பிரச்னையைன்னு சொல்றது? நான் ஒப்புக்கிறேன் சார், எனக்கு அரசியல் தெரியலை, தெரியலை, தெரியலை! அரசியலுக்கு வந்த புதுசுல, அப்பாவியா யார் என்ன சொன்னாலும் தலையாட்டினேன். கொஞ்சம் லேட்டா னாலும், என்னைச் சுத்தி சதி வலை பின்றாங்கன்னு கண்டு பிடிச்சுட்டேன். நான் நம்பின எல்லாரும் என்கூட இருந்தே குழி பறிச்சாங்க சார்! ஐ நெவர் லைக் திஸ், யூ ஸீ! அப்பவும் ரொம்பப் பொறுமையா எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, 'ஒத்துமையா நல்லபடியா இருங்க'ன்னு அட்வைஸ் பண்ணிக் கை குலுக்கினேன். அப்படியும் யாரும் என் பேச்சை கேட்கலே. இப்ப கடைசியில பாதிக்கப்பட்டது நான்தான்!''<br /><br />''அடுத்ததா என்ன செய்யப் போறீங்க..?'' <br /><br />''யூ ஸீ... நான் சும்மா விட்டுடுவேன்னு நினைக்கிறீங்களா..? சான்ஸே இல்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பதான் நான் ரொம்ப அவசியம்(!!!). ஒண்ணு சொல்லட்டுமா... தமிழகத்து மக்கள், குறிப்பா தென் மாவட்டங்களில் இருக்கிற என் இன மக்கள் ரொம்பப் பாசம் வெச்சிருக்காங்க! இப்ப கொஞ்ச நாளா நான் சினிமாவிலும் நடிக்கிறதில்லை. ஆனாலும், என் மேல இத்தனைப் பிரியமா இருக்கிற அந்தப் பாசக்கார மக்களுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும். ஆனா, உடனடியா என்ன செய்யறதுனு ரொம்பக் குழப்பமா இருக்கு! ஆனா, பெருசா ஏதாவது செய்யணும்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன்!'' <br /><br />''அப்ப புதுக்கட்சி துவக்குறதுனு முடிவே பண்ணிட்டீங்களா?'' <br /><br />''ம்ம்ம்... சீக்கிரமே புதுக் கட்சி பத்தி அறிவிப்பேன். அந்தக் கட்சி தேவர் ஐயா பேர்ல இருக்கும். இத்தனை வருஷ தீவிர அரசியல்ல(!) இருந்ததால, இன்னொண்ணும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். தனியா கட்சி நடத்துறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். அதனால கட்டாயம் கூட்டணி வைப்பேன். அது அ.தி.மு.க-வா இருக்கலாம். அல்லது, தி.மு.க-வா இருக்கலாம். அல்லது... ம்... வேற என்ன பெரிய கட்சிங்க இருக்கு... நிச்சயம் அவங்களோட கூட்டணி வைப்பேன். வர்ற பார்லிமென்ட் எலெக்ஷன்ல எப்படியும் என் கட்சிக்கு ஒரு எம்.பி. சீட்டு இருக்குங்க!''<br /><br />''உலக அரசியலைக் கவனிக்கிறீங்களா?''<br /><br />''இங்கே ஒரு கார்த்திக் - பிஸ்வாஸ் மாதிரி, உலகம் பூரா அப்பாவி அரசியல்வாதிகளும் மோச மான அரசியல்வாதிகளும் நிறையப் பேர் இருக்காங்க. அந்த புஷ்ஷைப் பாருங்க... இரான் வழியா நாம கேஸ் பைப் லைன் கொண்டு வந்தா அந்தாளுக்கு என்னங்க வந்துச்சு? இண்டியாக்காரன் நெறைய சாப்பிடுறதாலதான் உணவுப் பஞ்சம்னு அந்தாளு சொல்றது சுத்தப் பைத்தியக்காரத்தனம். <br /><br />கார்த்திக் சும்மா இருக்கான்னு நிறையப் பேர் நினைச்சுட்டு இருக்காங்க. நான் ஒண்ணும் சும்மா இல்லீங்க பிரதர்! என்னோட 'லேப்-டாப்' மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட் டுதான் இருக்கேன். உலகத்துல எங்கே, எது நடந்தாலும், அது என் கவனத்துக்கு வந்துடும். எல் லாத்துக்கும் ஒரு நாள் வெச்சுக் கிறேன்!''<br /><br />''அரசியல் இருக்கட்டும்... சினிமா என்னாச்சு?''<br /><br />''சினிமாவுல கொஞ்சம் பெரிய 'கேப்' விழுந்துருச்சு இல்ல... ஆனா, இந்த 'கேப்'புல படு பிரமாண்டமா மூணு கதை எழுதியிருக்கேன். அப்புறம், சீக்கிரமே பெரிய டைரக்டர் ஒருத்தர்கிட்ட படம் பண்ணப்போறேன். அது சினிமாவுல என்னோட மிகப் பெரிய இரண்டாவது இன்னிங்ஸா இருக்கும். தமிழ் சினிமா இதுவரைக்கும் பார்க்காத ஒரு பெரிய படமா அது இருக்கும்!''Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-28616241.post-32967327162905530442008-03-04T10:36:00.004+04:002008-03-04T10:51:29.560+04:00காமக் கிறுக்கன் கொடூரன்இவன பாத்தா வெட்டிக் கொல்லுவீங்களா..?<br /><br /><a href="http://thatstamil.oneindia.in/news/2008/03/03/tn-girl-molested-and-murdered.html">நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செக்ஸ் சித்ரவதை மூலம் சிறுமியை கொலை செய்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</a><br /><br />நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வேல்ராஜ்-பேச்சியம்மாள் தம்பதியினரின் மகள் சந்தனமாலதி (4). கடந்த 27ம் தேதி விளையாடச் சென்ற மாலதி வீடு திரும்பவில்லை.<br /><br />அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமி மாலதியை தேடிவந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சிறுமியின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.<br /><br />உடனே வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பார்த்தபோது, அது காணாமல் போன சந்தனமாலதி எனத் தெரியவந்தது.<br /><br />பிரேத பரிசோதனையில் மாலதியின் கழுத்தில் காயங்களுடன் செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலையாகி இருப்பது தெரியவந்தது.<br /><br />இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாலமுருகனை போலீசார் தேடிவந்தனர்.<br /><br />இந்நிலையில் பாலமுருகன் கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாவிடம் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில்,<br /><br />நான் எனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். சம்பவத்தன்று மாலதிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அங்குள்ள குளத்து பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன்.<br /><br />பின்னர் கழுத்தை நெறித்தேன். இதில் அவள் இறந்துவிட்டாள். உடனே அவளை குளத்துக்குள் போட்டுவிட்டு வந்து விட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com2