லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார்.
கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும்.
தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் `பூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது.
இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தாரிடம் சொல்ல, இப்போது கன்சாபாபா முன்பு நீண்ட கிï வரிசையில் கூட்டம் கூடி நிற்கிறது.
அந்த கிராமம் முழுவதும் `` ஜெய் கோ கன்சா பாபா கீ'' என்ற குரல் முழங்குகிறது.
அவர் மாயாஜாலம் நிகழ்த் துகிறாரா! போலிச் சாமியாராப பூ எப்படி பணமாக மாறுகிறது என்பது பற்றி யாரும் கேள்வி
கேட்கவில்லை.பணத்தை வாங்கிகொண்டு போய் உடனடியாக செலவழித்து வருகின்றனர். இதற்கு காரணம் ரூபாய் நோட்டு மாயமாக மறைந்து விடக்கூடாது என்ற பயம் தான்.
இதற்கிடையே அங்குள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரோசன்லால் என்பவர் இந்த சாமியார் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீசில் புகார் கூறியுள்ளார்.
ஏற்கனவே இதுபோல் ஒரு சாமியார் வந்து நோயைக் குணப்படுத்துவதாக கூறி பிரம்பால் ஒரு சிறுவனை அடித்தபோது அவன் இறந்துவிட்டான். அதேபோல் மற்றொரு சாமியார் தண்ணீரில் விபூதி கலந்துகொடுத்து ஒருபெண் காணாமல் போய்விட்டார். அதேபோல் இவரும் போலிச்சாமியார் தான் என்கிறார் அவர்.
இதுகுறித்து கஞ்சா பாபா கூறும்போது ``நான் கடவுளின் அவதாரமாக வந்திருக்கிறேன். என்னிடம் உண்மை இருக்கிறது. ஏழைகளை சந்தோசப் படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அந்தப் பகுதியை சுற்றிலும் வங்கிகளோ, ஏ.டி.எம். மையங்களோ கிடையாது. இந்த நிலையில் பணம் தரும் சாமியாரை பலர் `ஏ.டி.எம். பாபா' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். பாமரர்கள், படித்தவர்கள் என அனைவருமே கன்சா பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள்.
பக்தர்களுக்கு பணம் தரும் இந்த நவீன சாமியாரால் எட்டுபட்டி சுத்துக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பேர் `எங்க ஊருக்கு வாங்க பாபா' என்று அவரை அன்புடன் அழைத்து வருகின்றனர்
(கண்டிப்பாக 2020 இந்தியா வல்லரசாகிவிடும் என்ற பயத்தில் சீனா அந்த ஆசாமியை நேபாளம் வழியே கள்ள பாஸ்போர்ட்டில் கடத்த முயற்ச்சிப்பதாக காற்றுவழி தகவல் தெரிவிக்கிறது)
Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts
யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?
கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?
அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.
லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.
வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?
-பெரியார் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956
கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?
அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.
லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.
வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?
-பெரியார் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956
நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.
ஏனெனில், செல்வான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
ஏனெனில், செல்வான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.
ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.
சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.
காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.
பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?
ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?
மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.
ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.
-பெரியார்
ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.
சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.
காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.
பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?
ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?
மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.
ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.
-பெரியார்
நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன.
உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்?
ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.
ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
-பெரியார்
உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்?
ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.
ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
-பெரியார்
ஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட்டது. சாரதாபீடத்தின் தலைவர் சுவருபானந்தா உட்பட பல பார்ப்பனர்கள் ஆகமத்துக்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். மடாதிபதிகளும் சுவாமிஜிகளும் விமானத்திலும்இ குளிரூட்டப்பட்ட பேருந்துகளிலும் பயணம் செய்கிறார்களே; இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று கேட்டார் நாவிதர் சங்கத் தலைவி ராதாரவி! தமிழ்நாட்டில் இதுவரை பெரியார் இயக்கங்கள் எழுப்பிய கேள்விகள் - இப்போதுஇ பல்வேறு முகாம்களிலிருந்து ஒலிக்கத் துவங்கியுள்ளது.
பிரிட்டனில் - அயிஷா ஆஸ்மி என்ற முஸ்லீம் பள்ளி ஆசிரியை வகுப்பில் முகத்தை ‘பர்தா’ போட்டு மூடிக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார். தனது பர்தாவை வகுப்பறையில் நீக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர்இ தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதுஇ அவரவர் விருப்பம். அதை மதத் தலைவர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் மதச் சட்டங்களுக்கான வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி முஸ்லீம் மதகுருமார்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்று வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் குயாசிம் ரசீல்இ ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வடமாநிலங்களிலும்இ வடகிழக்கு மாநிலங்களிலும் கிராமப்புற முஸ்லிம் பெண்கள்இ தினக் கூலிகளாகவும்இ உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? என்பது நியாயமான கேள்வி.
இசுலாம் மார்க்கத்தின்படிஇ பர்தா அணிவது கட்டாயமில்லை என்று சமூக சீர்திருத்தவாதியும்இ சிறந்த நடிகையுமான சப்னா ஆஸ்மி கூறினார். இதற்கு அவர் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. சீக்கிய இளைஞர்களிடமும் தலைப்பாகை அணியும் மதப் பழக்கம் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் - 80 சதவீத இளைஞர்கள் முடிவெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சீரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே கூறுகிறார். இந்த மத அடையாளங்களில் பெண்ணடிமையும்இ மூட நம்பிக்கைகளும் - வசதிக் குறைவுகளும் அடங்கியுள்ளன. ஆனால்இ பார்ப்பனர்கள் இன்னமும் தங்களின் மத அடையாளம் என்று கூறிக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாத ‘இந்துக்களை’ இழிவுபடுத்துகின்றனர். அதாவது தன்னை ‘பிராமணன்’ என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.
பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால் ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும்இ ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான்இ பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால் அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?
“பிராமணர்களின்” தாசி புத்திரர்கள்தான் சூத்திரர்கள் என்று தான் - மனுதர்மமும் கூறுகிறது! பர்தாஇ தலைப்பாகை பற்றி எல்லாம் விவாதித்து வரும் பார்ப்பனர்கள் பார்ப்பன எடுகள் அவர்களின் ஆசிரியருக்குக் கடிதப் பகுதிகளில் ‘பூணூல்’ போடுவதை மட்டும் விவாதத்துக்கே உட்படுத்த மறுப்பதை கவனிக்க வேண்டும்! பூணூல் அறுப்பு தொடங்கினால்தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?
நன்றி கீற்று இணையதளம்
பிரிட்டனில் - அயிஷா ஆஸ்மி என்ற முஸ்லீம் பள்ளி ஆசிரியை வகுப்பில் முகத்தை ‘பர்தா’ போட்டு மூடிக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார். தனது பர்தாவை வகுப்பறையில் நீக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர்இ தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதுஇ அவரவர் விருப்பம். அதை மதத் தலைவர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் மதச் சட்டங்களுக்கான வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி முஸ்லீம் மதகுருமார்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்று வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் குயாசிம் ரசீல்இ ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வடமாநிலங்களிலும்இ வடகிழக்கு மாநிலங்களிலும் கிராமப்புற முஸ்லிம் பெண்கள்இ தினக் கூலிகளாகவும்இ உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? என்பது நியாயமான கேள்வி.
இசுலாம் மார்க்கத்தின்படிஇ பர்தா அணிவது கட்டாயமில்லை என்று சமூக சீர்திருத்தவாதியும்இ சிறந்த நடிகையுமான சப்னா ஆஸ்மி கூறினார். இதற்கு அவர் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. சீக்கிய இளைஞர்களிடமும் தலைப்பாகை அணியும் மதப் பழக்கம் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் - 80 சதவீத இளைஞர்கள் முடிவெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சீரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே கூறுகிறார். இந்த மத அடையாளங்களில் பெண்ணடிமையும்இ மூட நம்பிக்கைகளும் - வசதிக் குறைவுகளும் அடங்கியுள்ளன. ஆனால்இ பார்ப்பனர்கள் இன்னமும் தங்களின் மத அடையாளம் என்று கூறிக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாத ‘இந்துக்களை’ இழிவுபடுத்துகின்றனர். அதாவது தன்னை ‘பிராமணன்’ என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.
பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால் ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும்இ ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான்இ பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால் அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?
“பிராமணர்களின்” தாசி புத்திரர்கள்தான் சூத்திரர்கள் என்று தான் - மனுதர்மமும் கூறுகிறது! பர்தாஇ தலைப்பாகை பற்றி எல்லாம் விவாதித்து வரும் பார்ப்பனர்கள் பார்ப்பன எடுகள் அவர்களின் ஆசிரியருக்குக் கடிதப் பகுதிகளில் ‘பூணூல்’ போடுவதை மட்டும் விவாதத்துக்கே உட்படுத்த மறுப்பதை கவனிக்க வேண்டும்! பூணூல் அறுப்பு தொடங்கினால்தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?
நன்றி கீற்று இணையதளம்
ஒரு சாரரில் உள்ள பிரபலமானவர்களை தாக்கி எழுதினாலே தெரிந்து விடும் அவர் எச்சார்புடையவர் என்று. இத்தமிழ்மணத்தில் யாரும் எச்சார்பினரையோ அதில் பிரபலமானவர்களையோ தாக்கி எழுதுவதே கிடையாது. பார்ப்பனர்களைத் தவிர!
எச்சார்பினரிலும் தீவிரவாதம், மிதவாதம் மற்றும் வாதமின்மை என்ற மூன்று வகையுண்டு. தீவிரவாதிகள் அடித்துக்கொன்டு நாறுவதைத்தான் நாம் அன்றாடம் பார்க்கின்றோமே. அந்த தீவிரவாதத்தைதான் பார்ப்பனர் எதிர்க்கின்றீர்கள் என்றால், ஆன்மீகம் மற்றும் ஆன்மீக வாதிகளின் வெட்க்ககேடான செயல்களையும் சொல்லலாமே. காஞ்சி காமகேடி சுப்பிர மணி செய்யாத லீலைகளா? அதனை ஏன் இந்த பார்ப்புகள் எழுதுவது இல்லை? தமிழ்மணம் தீவிரவாதிகளுக்கானது அல்ல என்றுதான் நானும் சொல்வேன்.
உலகத்தில் பகுத்தறிவு இயக்கம் இறக்கவில்லை. இறைவனை அடைவதற்கு எந்த ஒரு பார்ப்பன இடைத்தரகரும் எங்களுக்கு தேவையில்லை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். அதன் விளைவாகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவிகளில் தமிழ் பூசை போன்ற ஆரம்பங்கள். உண்மையில் பகுத்தறிவு என்பது என்ன? பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான்.
உன் மனத்தில் தோன்றுவதை, சரியென்று நினைத்தால், தைரியமாக செய், உன்னை அமுக்க நினைத்து, யாராவது சொல்லும் வேத புருடாக்களை நம்பாதே. யார் சொல்வதையும், பகுத்து அறிந்துகொள். போலியான தகவல்கள் மூலம், தன்னை பெரியாளாக காண்பித்து தவறான முறையில், உன்னை ஆட்கொள்ள நினைப்பவர்களின் பிரசங்கங்களையும், செயல்களையும் பகுத்து அறிந்துகொள்.
தன்னிகரில்லா தமிழர் பண்பாட்டினையும் அவர்கள்தம் உணர்வினையும், காக்கும் தீச்சுவராகத்தான் பெரியாரையும், கருனாநிதியையும் நாங்கள் இன்று பார்க்கின்றோம்.இதுதான் எங்களுக்கான இறை நம்பிக்கை.
கண்டிப்பாக இறை நம்பிக்கை ஒரு மனிதனுக்கு வேண்டும். மனிதனை நல்வழிப்படுத்துவதில் இறை நம்பிக்கை இன்றியமையாத பங்கு வகிக்கின்றது, ஆனால் அந்த இறைநம்பிக்கை இயல்பாக இருக்க வேண்டும். மனமுவந்து செய்யும் செய்யும் காரியங்களை தடை செய்ய பார்ப்பனர்களான இவர்கள்யார்? இப்படித்தான் செய்யவேன்டும், இந்த மொழியில் செய்யக்கூடாது என்று தடைபோட இவர்கள் என்ன இறைத்தூதர்களா?.
உழைக்கும் மக்கள் கடவுளை ஒரு எட்டாக் கனியாகவே பார்க்கவில்லை. தனக்கு பிடித்ததையெல்லாம் இறைவனுக்கு படைத்து மகிழ்ந்தான். தான் குடிக்கும் கள், தான் உன்னும் புலால் அனைத்தையும் கடவுளுக்கு ஆசையோடு கொடுத்து மகிழ்ந்தான். அதை சட்டம் போட்டு தடுக்கப்பார்த்தனர்.
மக்கள் நல்ல பதிலடி கொடுத்தார்கள்.
99.99 சதவிகித மக்கள் , இறை நம்பிக்கை உடையவர்கள்தான். அவர்கள் அனைவரும் அய்யா பெரியாரை எதிர்க்கவில்லை.
0.001 சதவிகித பார்ப்பன மக்கள் மட்டும்தான், பெரியாரையும், அவர் கருத்துக்களையும், தொண்டர்களையும் வெறுக்கின்றனர். திமுக, திக, இவர்களுக்கு ஓட்டுப்போடும் எல்லோரும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் என்றா நினைக்கின்றீர்கள்? தவறு, திமுக, ஓட்டுப்போடும்
99.99 சதவிகிதத்தினர் மற்றும் திகவை ஆதரிக்கும்
99.99 சதவிகிததினர் இறைநம்பிக்கை உள்ளவர்களே.பெரியாரை போன்று ஆயிரம் பேர்கள் வந்தாலும், தமிழனை இனி தட்டியெழுப்புவது கடினம்தான். அந்த அளவுக்கு அமுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு இருக்கின்றான் மனிதன். இந்த அளவுக்கு பெரியார் செய்ததினால்தான் கொஞ்சமாவது சூடு சொரணை வந்திருக்கிறது நம் மக்களுக்கு.
ஆன்மீகவாதிகள் சாதித்தது என்ன? பெரியார் சிலையை உடைத்தனர். பெரியார், கருனாநிதி, வீரமனி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் கருத்துக்களை இழிவாக பேசினர். தலைவர்களுக்கு சிலை வைப்பதை முட்டாள் தனம் என்கிறார்கள்.தலைவர்களுக்கு மாலையிடுவதை முட்டாள் தனம் என்கிறார்கள். வேறு என்ன தெரியும் இந்த மிருகங்களுக்கு?
திராவிடர்கள் தங்கள் உழைப்பாலும் நல்ல மந்ததலும் தங்கள் வாழ்க்கையில் மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றனர். உங்களளப் போன்ற பாப்பான்களை நாங்கள் தீண்டத்தாகதவர்கள் என ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. நீயே திருந்தினால் உண்டு. நாங்களாக திருத்தினால் நிச்சயம் அந்நிலை உருவாகும்
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் - அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாடுகளிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லப்படுவதுண்டு. இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதேயாகும்.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
படித்துப் ‘பாஸ்’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் - காரியத்தைச் செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந் தானே சொல்லவேண்டும்?
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
ஏனென்றால், சகல காரியங்களும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது.
அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.
சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று. “நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.
இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.
அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
படித்துப் ‘பாஸ்’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் - காரியத்தைச் செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந் தானே சொல்லவேண்டும்?
தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
ஏனென்றால், சகல காரியங்களும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது.
அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.
சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று. “நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.
இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.
ஊர் பெரிய தனம் பூராவும் என் கைக்கு வந்துவிட்டது; முதலாவது நான் ஒரு ஆடம்பர மைனர். இரண்டாவது சில காலிகளும் என் கூடவே இருப்பார்கள். மூன்றாவது, நான் ஒரு பெரிய மனிதன் மகன். நான்காவது, அதிகாரிகள் ஸ்நேகம், அய்ந்தாவது, ஊர் காரியங்கள், தகராறுகள், விவகாரங்களை நானே மேலே எடுத்துப் போட்டுக் கொண்டு பைசல் செய்வது; இவ்வளவும் இருந்தாலே ஒருவனுக்கு ஊரில் செல்வாக்கு இருக்கும்.
இவற்றை விட மற்றொரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், அப்போது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் இல்லை. தாசில்தார். டிப்டி கலெக்டர் தான் இன்கம்டாக்ஸ் போட வேண்டும். அவர்கள் உள்ளூர் கணக்குப்பிள்ளை, மணியக்காரர் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் சொன்னபடி தான் போடுவார்கள்.
ஆனால், தாசில்தாரும், டிப்டிகலெக்டரும் ஊரில் ஒரு பெரிய யோக்கியமான வியாபாரியைக் கூப்பிட்டு அல்லது சென்று இரகசியமாய் விசாரித்துக் கொண்டு, இரண்டையும் சரிபார்த்துத்தான் போடுவார்கள். இந்த காரியத்துக்கு ஏற்றபடி பெரிய யோக்கியமான வியாபாரி யாய்' இருந்தவர் என் தகப் பனார். அவர் இருக்கும் போதே, சில சமயங்களில் நான் போய், அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் இது விஷயமாய் சொல்லுவேன். அவர்களுக்கு, நானே `பெரிய யோக்கியமான வியாபாரி' யாகிவிட்டேன். அந்த இடத்திற்கு யார் வந்தாலும், முன்னவர் செய்தபடி என்னைத் தான் கேட்பார்கள். இந்த சங்கதி எங்கள் ஊர் கணக்கு மணியக்காரருக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்களும் அப்போது என் வயசுக்காரர்கள்.
எனது 2-ந்தர கூட்டங் ளில் இவர்கள் கலந்தே இருப்பார்கள். ஆதலால், இவர்களுக்கும் என்னைக் கேட்டுத்தான் வியாபாரிகள் வரும்படி தெரிந்தாக வேண்டும். என்னைக் கேட்காவிட்டால், அதிகாரிகளிடம் நான் வேறு மாதிரியாய்ச் சொல்லி விட்டால், இவர் சிபாரிசு கெட்டுப்போகும். வியாபாரி களிடம் இதற்கு ஆக இவர் கள் வாங்கிய மாமூல் பணம் திரும்பக் கொடுக்கவேண்டி வரும். ஆதலால் இவர்களும் என்னைக் கேட்டே இன்கம்டாக்ஸ் லிஸ்ட் தயார் செய்வார்கள். பிறகு, மெள்ள மெள்ள வர்த்தகர்களுக்கும் தெரியும்.
ஆதலால் கணக்கப் பிள்ளை (கர்ணம்) பட்டா மணியக்காரர், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதல் எல்லா அதிகாரிகளும் எனக்கு தெரிந்தவர்கள், என்கின்ற காரணத்தினால், எல்லா வர்த்தகர்களும் கணக்கு மணியக் காரர்களும் கூட என்னிடம் வந்தே குறைந்த அளவுக்கு' சிபார்சு செய்து கொள்ள வேண்டியதாகி விட்டதால், வருவார்கள்.
அடுத்தாற்போல் ஊரில் என்கரோச்மெண்ட் என்னும் நில ஆக்கிரமிப்பு என்கின்ற தொல்லை அதிகம். அப்போது இந்த சர்வேக்கல் வேலை முனிசிபாலிட்டிக்கு இல்லை; அதற்கும் கணக்கு மணியக்காரர்கள்தான் அதிகாரிகள். ஆதலால், அது சம்மந்தமான, இல்லாவிட்டால் கட்டடம் இடிபடும் சிபாரிசுக்கும் என்னிடம் வருவார்கள்.
ஆஸ்பத்திரி டாக்டர்; எனக்கு வேண்டியவர்; குடும்ப சிநேகிதர் போல் இருப்பார். அந்த சிபாரிசுக்கும் என்னிடம் தான் வருவார்கள். ஏனெனில் - ஆஸ்பத்திரி டாக்டர் ஆங்கிலோ இந்தியர்கள். நான் ஹானரெரி மாஜிஸ்ட் ரேட்டாகவும் இருந்தேன். டிப்டி கலெக்டர் எனக்கு சிநேகமானதால் மாஜிஸ்ட்ரேட் எந்த பெஞ்சி கேசுக்கும் என் அபிப்பிராயம்தான் கேட்பார். இதனால், பெஞ்சு கேசில் பட்டுக் கொண்டவர்களும் என்னிடம் வருவார்கள்.
நான் பெஞ்சில் முக்கிய வாயாடி; பெஞ்சு மாஜிஸ்ட்ரேட் ஆனதால், புண்ணுக் கழுத்து பிடிக்கிற எஸ்.பி.சி.ஏ. இன்ஸ்பெக்டர் என் கடையில் வந்து காத்திருப்பார். இதனால், செக்கு ஆட்டும் வாணியச் செட்டியார்கள் (ஈரோட்டில், அப்போது 150 செக்குபோல் ஓடும்) எனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள். ஒத்தவண்டி, குதிரை வண்டிக்காரர்கள் சிலர், இறங்கிக் கும்பிடுவார்கள். இப்போதைய இம்பிரியல் பாங்கிக்கு அப்போது `மதறாஸ் பாங்கி' என்று பெயர். அந்த பாங்கி ஏஜண்ட் ஒரு துரை, அவருடைய காஷ்கீப் பர் போட்ட, மதிப்பு, அதா வது எந்தெந்த வியாபாரிக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம், 3 மாதத்துக்கு ஒரு முறை அவர்கள் அந்தஸ்து எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிக் கேட்க என்னைக் கூப்பிடுவார்.
ஆதலால், கேஷ்கீப்பர் எனக்கு வேண்டியவரானதால் வியாபாரிகளும் சிலர் எழுந்து வணங்குபவர்களாக இருப்பார்கள்; நான் ரீடிங்ரூம் செக்ரடரி, மகாஜன ஸ்கூல் செக்ரடரி, டென்னீஸ் கோர்ட் செக்ரடரி, தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட் முதலிய பல உத்தியோகங்கள் எனக்கு உண்டு; இந்த நிலையில் முனிசிபல் தேர்தலுக்கு நிற்பவர்கள் என்னைக் கேட்காமல் எப்படி நிற்க முடியும்? நான் நினைத்தபடிதான் தேர்தல். அப்புறம் நானே `நாய்க்கர்' (என் தகப்பனார்) ஆகி விட்டேன். நான் போகாமல் எந்த வீட்டிலும் கல்யாணம் நிச்சயதார்த்தம் நடக்காது; நான் போகாமல் அநேக வீட்டில் ப்ரேதம் எடுக்கப்பட மாட்டாது; எந்த கல்யாணத்தில் எந்த மேளத்தானை வைப்பது. எந்த தாசியை சதுருக்கு, பாட்டுக்கு வைப் பது என்பதும் என்னைக் கொண்டே செய்யும்படி ஆகி விட்டதால், இந்த கூட்டமும் எனக்கு ரொம்பவும் வேண்டியவர்களாகவும் மிகவும் கீழ்ப்படிபவர்கள் ஆகவும் ஆகிவிட்டார்கள். கடைசியில் நானே முனிசிபல் சேர்மனும் ஆகிவிட்டேன்.
இதுவரை என் வியாபாரம் சிறிதாவது, அதாவது அக்காலத்தில் ஒரு வருஷத்துக்கு ஒரு 500 ரூபா இன்கம்டாக்ஸ் வரி சுட்டுகிற அளவுக்கு நடந்தது; சேர்மென் ஆனதும், என் வியாபாரம் குறைந்தது. அப்போது எனது தானிய மண்டியில் வேலை பார்த்த ஆள் பணம் கையாடிவிட்டார். எனக்குச் சொந்தமான பஞ்சாலை ஜின்னிங் பேக்டரி எண்ணை செக்கு (ரோட்டரி) ஆகிய எந்திரசாலையில் வேலை செய்த ஏஜெண்ட் நான் சரியாய் வேலைகளை கவனித்து அவருக்கு தக்கது செய்வதில்லை என்று சொல்லி விலகி விட்டார். நான் சிபாரிசு செய்து ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த வியாபாரிகள் பணம் கட்டமுடியாமல் என் மீது குறை கூறும்படியான அளவுக்கு வாய்தாவில் டியூ கட்டாமல் தவறவிட்டு விடுவார்கள் போல் தோன்றிற்று.
உடனே வியாபாரத்தைக் கூட கவனியாமல் விழுந்து போன வியாபாரிகள் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொத்துக்களை விற்று அவர்களை மீட்டுவிட்டு என் பஞ்சாலையை விற்றுவிட்டு, வியாபாரம், மாத்திரம் நன்றாய் ஏற்பாடு செய்து கொண்டு' சேர்மன் வேலையையும் ஊர் வேலையையும் செய்து கொண்டு நல்ல பிரபலமாய் இருந்து வருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சேலம் சேர்மேன்; டாக்டர், வரதராஜலுநாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் பெசண்ட் அம்மைக்கு எதிர்ப்பாகவும் (பெயர் ஞாபகமில்லை ஏதோ ஒரு பெயருடன் திருப்பூரில்) ஒரு வாரப் பேப்பர் நடத்திக் கொண்டு, சந்தா சேர்க்க ஈரோட்டுக்கு, வந்தார். அவருக்கு ஈரோடு கடைவீதிகளில் பல சந்தா சேர்த்துக் கொடுத்து, வீட்டில் விருந்து செய்து, பெருமைப்படுத்தினேன்; என்றாலும் அப்போது நான் பெசண்ட் அம்மைக்கு வேண்டியவனாகவும் ஈரோடு பிரம்மஞான சபைக் கூட்டத்திற்கு மெம்பராகவும் இல்லாமல் இருந்தாலும் வக்கீல் எல்லாம் மெம்பரான தால் அவர் நட்புக்கு அடிக்கடி போய் வருபவனாகவும் இருந்தேன்;
பெசண்ட் அம்மையை இண்டென்ட் செய்த காலத்தில் சர்க்காருக்கு விரோதமாக, அந்தம்மைக்கு அனுகூலமாக, பல காரியங்கள் கூட செய்து கொண்டு இருந்த சமயம்; ஏனெனில், எனக்கு அரசியலிலும் ஆசை இருந்தது. இண்டியன் பேட்ரியட் பத்திரிக்கை அடிக்கடி என்னைப்பற்றி புகழ்ந்து எழுதும்; ஆசிரியர் கருணாகர மேனனுக்கு என்மீது அன்பு உண்டு; அதில், அப்போது உதவி ஆசிரியராய் இருந்த ரங்கைய்யர் எனக்கு நல்ல பழக்கமுடையவர். இந்தக் கூட்டத்தில் இருந்த என்னை டாக்டர். வரதராஜீலு நாயுடுவின் சினேகமானது பெசண்ட் அம்மைக் கூட்டத்திலிருந்து பிரித்துவிட்டது.
டாக்டர் வரதராஜீலுநாயுடு மீது மதுரையில் கேசு நடந்த போது, சி.ராஜகோபாலாச் சாரியாரும், டாக்டர், நாயுடுவும் ஈரோடுக்கு வந்துதான், கேஸ் விசாரணைக்கு மதுரைக்குப் போவார்கள்; இதற்கு முன்பே எனக்கும், சி.ராஜகோபாலாச்சாரியாருக்கும் அவர் வக்கீல் என்கிற முறை யில் பழக்கம் இருந்தது. சில ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறோம். ஆச்சாரியார் முனிசிபல் சேர்மேனானதால், நானும் சேர்மனாயிருந்ததால் ஈரோட்டு சேனி டேஷன், ரோட்டு நன்றாக இருப்பதாக ஈரோடுக்கு கேசுக்கு வரும்பொழுதெல்லாம் சொல்லி என்னைப் புகழுவார். ``ஈரோடு, இயற்கையில் நல்ல சாக்கடை வசதியும், ரொம்பவும் குறைந்த மயில் நீளமுள்ள ரோட்டமைப்பாகவும் அதிக பண வரும்படி உள்ள முனிசீபாலிடி ஆனதாலும், ஈரோடு உங்கள் கண்ணுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்று நான் சொன்னேன்.
இதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி யடைந்து ``நாய்க்கர் உண்மையிலேயே பெருமையை வெறுப்பவர். என்பதாக நன்றாய்த் தெரிகிறது'' என்று, மேலும் புகழ்ந்தார். ``இவ்வளவு சாமார்த்தியம் இருப்பதால்தான், தாங்கள் கெட்டிக்கார வக்கீலாக இருக்கிறீர்கள்'' என்றேன்; கூட இருந்தவர்கள் சிரித்தார்கள்; எங்களுக்குள் அன்பு ஏற்பட்டது; இந்த அன்பு இருக்கும்போது, ஆச்சாரியார் டாக்டர் நாயுடு கேசு விஷயமாக செல்லுகையில் நம்ம வீட்டிற்கு நாயுடு உடன் வந்தபோது, `நாயுடு கேசுக்கு வக்கீலாக வருகிறார்; பீசு இல்லாமல் பேசுகிறார்', என்ற காரணத்தால் ஆச்சாரியாரிடம் எனக்கு அதிக அன்பு, நெருங்கிய தொடர்பு கொண்டு பெசண்டம்மைக்கு விரோதமாக வேலை செய்தார்கள். நாயுடு ஸ்நேகம் காரணமாக நான் அந்த தொண்டில் இழுக்கப்பட்டேன்.
அவர்கள் கூப்பிடும் கூட்டங்கட்கெல்லாம் செல்ல ஆரம்பித்தேன். இந்த மத்தியில், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக, `சென்னை மாகாண சங்கம்' என்ற பெயரால் பார்ப்பன ரல்லாதாருக் கென்றே ஒரு சங்கம் துவங்கி வேலை செய்து வந்தது. அந்த ``மெட்ராஸ் பிரசிடென்ஸி அஸோஸியேஷன்'' என்ற சங்கத்துக்கு கேசவபிள்ளை தலைவர், லாட். கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார், நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை, (காயாரோகணம் அவர்கள் தகப்பனார்) நான், ஆகியவர்கள் உபதலைவர்கள். டாக்டர் நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களும் கார்யதரிசிகள், என்பது எனது ஞாபகம், அதில், நான் அதிக பங்கெடுத்துக் கொண்டேன். பத்திரிக்கைக்கு ``1000 ரூபா கொடுத்தேன்.
1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஈரோட்டில் நான் வரவேற்புக் கழக தலைவனாக இருந்து லாட் கோவிந்ததாஸ் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினேன். அதில் தமிழ்நாடு பிரபலஸ்தர்களும், தொண்டர்களும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் அறிமுகமானார்கள். விஜயராகவாச்சாரியார். சி.இராஜகோபாலச் சாரியார். டாக்டர். ராஜன். சீரங்கம் கொடியாலம் வாசுதேவ அய்யங்கார் பிள்ளை கே.வி. ரங்கசாமி அய்யங்கார் முதலிய பார்ப்பன பிரமுகர்களும் மற்றும் எனக்கு முன்பு சாதாரண வியாபாரி என்கின்ற முறையில் அறிமுக மாகியிருந்தார்கள். பலரும் அரசியலிலும் சினேகமானார்கள். ஆனதால் பல வெளியூர் வியாபாரிகளும் சிதம்பரம்பிள்ளை, கல்யாணசுந்தர முதலியார், ஆதி நாராயண செட்டியார் முதலியவர்களும் அப்பொழுது முதல் அதிக சினேகிதர்கள் ஆனார்கள்.
அந்த மகாநாட்டில் 100க்கு 50க்கு குறையாமல் பார்ப்பனரல்லதாருக்கு உத்தியோகப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. இதன் பயனாய் அரசியல் சம்பந்தமான எல்லாக் கூட்டங்களுக்கும் மகாநாடுகளுக்கும் நான் அழைக்கப்பட்டேன். நானும் ஈரோட்டிலிருந்து பெரும் கூட்டத்தோடு ஒவ்வொரு மாநாட்டுக்கும் சென்று வந்தேன். எனக்கு, என்தொழிலை விட இதில் அதிக பற்று உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ராஜகோபாலச்சாரியார் சேலம் விட்டு, சென்னைக்கு போய்விட நினைத்தார். தன்னுடன் இருந்து, வேலை செய்ய என்னையும் அழைத்தார். தான் சேலம் சேர்மன் வேலையை விட்டு விடுவதாகச் சொன்னார். டாக்டர். நாயுடு என்னையும் சேர்மன் வேலையை விட்டு விட்டு தங்களோடு கலந்து அரசியல் காரியமே செய்யலாம் என்றார்.
மூவரும் கலந்து பேசியதில் எனக்கு துணிவு ஏற்பட்டு நானும் சம்மதித்து விட்டேன். சர்க்கார் நடத்தையைக் கண்டித்து சேர்மன், தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லாபோர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபீசர் முதலிய பல கௌரவ வேலைகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா கொடுத்தேன். இது நடந்து பத்திரிக்கையில் வெளி வந்தவுடன் ``சுதேச மித்திரன்'' ``ஹிந்து'' இரண்டும் தலையங்கம் எழுதி என்னைப் புகழ்ந்து பிரமாதப் படுத்திவிட்டன. இதைப் பார்த்து அப்பொழுது சென்னை சர்க்கார் லோகல் முனிசிபல் டிபார்ட்மெண்ட் இலாகா நிர்வாகச் சபை மெம்பரான சர்.பி. ராஜ கோபாலாச்சாரியார் தன்னை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வந்து, அடுத்த நாள் காலையில் சந்திக்கும் படி சென்னையிலிருந்து தந்தியனுப்பினார். அப்போது, அவரை ரயிலில் போய் பார்த்தேன். பக்கத்தில் அவரது மலையாள மனைவி இருந்தார்; அந்த அம்மையாரிடம், அடிக்கடி என்னைப் பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அம்மையாரும், என்னிடம் அன்பாய்ப் பேசுவார்கள்.
அப்போதைக்கு, சுமார் இரண்டு மாதத்திற்கு முன், ஈரோட்டில் நான் சேர்மனாக இருந்து `தண்ணீர்க்குழாய் துவக்க விழா' நடந்தபோது, அதை நடத்த பி.ராஜகோபாலாச்சாரியாரை அழைத்ததற்கு, அவர் மனைவியுடன் வந்து துவக்கவிழா நடத்தினபோது, என்னைப் பற்றி மிகமிகப் புகழ்ந்து பேசியதை அந்தம்மையும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆதலால், அந்தம்மையிடம் நான் சேர்மன் பதவியை ராஜீனாமா கொடுத்துவிட்டதாக இவர் சொன்னஉடன், அந்தம்மையார் வருத்தப்பட்டு என்னை, ராஜினாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்வதாக இந்தம்மையார் கணவனுக்கு சொல்லியிருக்கிறார். இதை அனுசரித்து, அந்தம்மையார் என்னைக் கண்டதும் அன்பாய் வரவேற்று, தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்; நான் உட்கார்ந்தேன். உடனே கணவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, பிளாட்பாரத்தில் நின்று கொண்டார்.
அம்மையார் ``நாய்க்கரே, நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டீர்களாம். நிஜமா?'' என்றார். நான் ``ஆம்'' என்றேன். ``அது சரியல்ல; எங்கள் அய்யர் உங்களுக்கு ராவ் சாகீப் பட்டம் சிபார்சு பண்ணியிருக்கிறார்; அய்யருக்கு அவமானமாய் விடும். அய்யர் ரொம்பவும் வருத்தப்படுகிறார். உங்களுக்கு, மேலும் ஏதோ உத்தியோகம் கொடுக்கவேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்படிச் செய்யாதீர்கள். அதை வாப்பஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்’’ என்றார். ``செய்து போட்டேனே அம்மா. இனி, வாபஸ் வாங்கினால் எனக்கு அவமானம். ஆபிஸுலும் நான் எல்லோரிடமும் சொல்லி விட்டேன்; ஊரிலும் கலெக்டர் முதல் கேட்டும், `மாட்டேன்' என்று சொல்லிவிட்டேன். இனி, எப்படி வாபஸ் வாங்குவது? மன்னிக்க வேண்டும்'', என்று கெஞ்சினேன்.
அய்யர் (சர்.பி.ராஜகோபாலச்சாரியார்) இதை ஜாடையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். `முடியவில்லை' என்று அறிந்து, வந்து, வண்டிக்குள் ஏறினார். நான் எழுந்து நின்றேன். என் கையைப் பிடித்து ``சிட் டவுன்மை பாய் (உட்காரு என் மகனே)'' என்று உட்கார வைத்து ``நீ அப்படிச் செய்யாதே. உனக்கு பாலிடிக்ச் தெரியாது. உனக்கு அது தகுதியல்ல. நீ நல்ல வியாபாரி; உனக்கு வேண்டிய பெருமை ஏராளமாக இருக்கிறது... அதற்கு ஏன் போகிறாய்?... கவர்ன்மெண்டில், உன்மீது நல்ல அபிப்ராயம், கலெக்டரும் உன்னை பற்றி, நிறையச் சிபாரிசு செய்திருக்கிறார். என் பேச்சைக்கேள். நான் உன் தகப்பனார் உங்கய்யா, எனக்குத் தெரிந்தவர். நான் உங்கள் ஊரில் சப்-கலெக்டராக இருந்தேன். என்ன சொல்கிறாய்? என்னிடமே ஒரு கடிதம் எழுதிக்கொடு... `நான் ராஜீனாமாவை வாபசு வாங்கிக் கொண்டேன்'' என்று சொல்லி, ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
நான் ``மன்னிக்க வேண்டும். ஊரிலேயே குடி - இருக்க முடியாது. யார்யாரோ சொல்லி முடியாது என்று சொல்லி விட்டேன்'' என்றேன் ``என்ன மகாப்பிரமாதமாய் பேசுகிறாய். பண்டித மதன் மோகன் மாளவியாவே தான் கொடுத்த ராஜீனாமாவை வாபஸ் வாங்கிக் கொண்டார். போன வாரத்தில், நீ என்ன பிடிவாதம் செய்கிறாய்?’’ என்றார். நான் மறுபடியும் ``மன்னிக்க வேண்டும்'' என்று கைகூப்பி கும்பிட்டேன்; ``நீ தவறு செய்கிறாய்; பொது ஜனங்களுக்கும் துரோகம் செய்கிறாய். உனக்கும் விரோதம் செய்து கொள்ளுகிறாய். உன் இஷ்டம் போ'' என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது, இதற்குப் பிறகு ஊரில் எனக்கு இன்னமும் அதிக பெருமை ஏற்பட்டுவிட்டது. இரண்டு மூன்று நாளில் ஈரோட்டுக்கு வந்த சி.ஆர். - இடமும் டாக்டர். நாயுடுவிடமும் இதைச் சொன்னேன். அவர்களுக்கு என்னைப் பற்றி, மிகப் பெரிய எண்ணம் ஏற்பட்டு விட்டது. ஒரு நல்ல ஆள் அவர்களுக்கு கிடைத்ததாகக் கருதிக் கொண்டு என்னிடம் அதிக மரியாதை காட்டினார்கள்.
சி.ஆர். அவர்கள் என்னை சென்னைக்கு வந்துவிடும் படி அழைத்தார். நான் வாடகைக்கு வாங்கி குடியிருக்கும் பங்களாவில், ஒருபாகம் இடம் காலியாய் இருப்பதாகவும், மனைவியுடன் வரும்படியும் அழைத்தார். டாக்டர். நாயுடு என்னை சென்னைக்குப் போக வேண்டாமென்றும், இஷ்டப்பட்டால் சேலத்துக்கு வந்து தன்னுடன் ஒன்றாக குடும்பத்துடனே இருக்கலாம், என்றும், அழைத்தார், எனக்கு எங்காவது போய் விடலாம்; ஈரோட்டில் இருக்க வேண்டாம்; என்றே தோன்றிற்று. ஆனால், ஈரோட்டு வியாபாரிகள்'' நீங்கள் எங்கும் போகக் கூடாது. ஈரோட்டில் இருந்து கொண்டே எங்கு வேண்டுமானாலும் போங்கள்; நீங்கள் போய்விட்டால் ஊருக்கு மதிப்பு கெட்டுப் போகும்'' என்றார்கள். என் மனைவிக்கு இவர்கள் வருவதும், போவதும் நான் வேலை ராஜினாமா கொடுத்ததும், சர்க்கார் `மெம்பர் டைடில்' கொடுப்பதாகச் சொல்லியும் நான் ஒப்புக் கொள்ளாததும், ஊரையும், வீடுவாசலையும், மாடுகளையும் விட்டுவிட்டு வெளியூருக்கு ஒண்டுக்குடியாய்ப் போவதும்'' சிறிதும் பிடிக்க வில்லை.
``உனக்கு என்ன பயித்தியமா. நம்ம நிலை என்ன? சங்கதி என்ன? ஆளு அம்பு வாழ்க்கை என்ன? இவைகளை, திடீரென்று விட்டு விட்டு யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? நீ வேண்டுமானால் போ; நான் வெளியூருக்குப் போய் ஒண்டுக்குடியாய் இருக்க முடியாது'' என்று சொன்னார்கள். நான் `சரி, எங்கும் போகவில்லை இங்கேயே இருக்கிறேன். நீ மாத்திரம், நான் சொல்லுகிறபடி நடக்க வேண்டும்'' என்றேன் ``சரி'' என்று ஒப்புக் கொண்டார்கள். மகா நாடுகளுக்கும், காங்கிரஸ் மகாநாட்டுக்கும் நான் ஈரோட்டிலிருந்தே பெருங்கூட்டத்துடன் செல்வேன் மகாநாடுகளில் எனக்குத் தனி மரியாதை இருக்கும். இந்த நிலையில், சென்னையில் இருப்பவர்கள் இடமிருந்து அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற வேண்டும்; என்பதாகக் கருத்து கொண்டு ஒரு இரகசிய கூட்டத்தை சீரங்கத்தில் சி.ஆர்.கூட்டினார்.
அதில் சேலம் விஜயராகவாச்சாரி யார், சி.ராஜகோபாலாச்சாரி யார், டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன், ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோஸப், டாக்டர் நாயுடு, நான் ஆகியவர்களே முக்கியமாய்க் கூடிப் பேசினோம். அதில் முக்கியமாகப் பேசினது ``பெசண்டம்மையார் ஆதிக்கத்தை ஒழிப்பதுதான்'' இதற்கு ஒரு கமிட்டி நியமித்து, பணவசூல் செய்வது; ஒரு பத்திரிக்கை துவக்குவது; ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்வது ஆகியவை நோக்கம். பிரச்சாரத் திட்டம் என்னவென்றால் `பெசன்ட் அம்மை எங்கள் பிரதிநிதி அல்ல. அந்த அம்மாள் அபிப்பிராயம், இந்த நாட்டு மக்கள் அபிப்ராயமல்ல' என்று உலகறியச் செய்ய வேண்டும், என்பவையாகும். இதைச் செய்ய சென்னை கஸ்தூரி ரங்க அய்யங்கார் கூட்டம் ஒட்டிக் கொள்ள தைரியம் இல்லை.
அது மாத்திரமல்லாமல் சி.ஆர். முன்னுக்கு வருவதும் அப்போது அவர்களுக்கு பொறாமையாய் இருந்தது. இதை அறிந்து சி.ஆர். ஒரு தனிக்கட்சி மாகாணத்துக்கே ஏற்படுத்த முயற்சித்தார்; அதற்கும் நாங்கள் சம்மதித்தோம்; திரு.வி.க. அவர்களும் இதில் முக்கிய பங்கு கொண்டார். உடனே சென்னை சௌந்தர்ய மகாலில் அது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குப் பெயர் ``மெட்ராஸ் நேஷனலிஸ்ட் அஸோஸியேஷன்'' அது கஸ்தூரி ரங்கய்யங்கார் கூட்டம் இதில் கலந்து கொண்டதற்கு காரணம் நான், டாக்டர். நாயுடு, திரு.வி.க. மூவரும் இதில் கலந்ததால் பார்ப்பனரல்லாதாரிடம் உள்ள செல்வாக்கு, தங்களுக்குப் போய்விடுமே என்ற பயம்தான். மற்றும் ஆந்திரா, மலையாளம், தமிழ் ஆகிய எல்லா நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்தார்கள்.
இது பெரிய பிரபல மகாநாடாக ஆகிவிட்டது. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை ஆகியவர்களும் கலந்து கொண்டார்கள். அது பல தீர்மானங்கள் செய்தது. அதில் 100க்கு 30 ஸ்தானங்களுக்கு குறைவில்லாமல் பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகம், பிரதி நிதித்துவம் எல்லாம் கொடுப்பது என்பதாக ஒரு தீர்மானம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் நானேயாகும். டாக்டர். நாயுடுவும் திரு.வி.க.வும் உத்யோக விகிதாச்சாரத்துக்கும் வகுப்பு உணர்ச்சிக்கும் அப்போது எதிர்ப்பானவார்கள். நான் ஒவ்வொன்றுக்கும் வகுப்பு வீதம் கேட்பவன். அதனால், எனக்காக அதைச் செய்தார்கள். அந்த மாநாட்டுக்கு நான்கு காரியதரிதிகள், சி.ஆர்.பிரதம காரியதரிசி, நான் டி.பிரகாசம், கே.பி. கேசவமேனன் மூவர், முறையே தமிழ், ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று நாட்டுக்கு காரியதரிசிகள் விஜயராகவாச்சாரியார் தலைவர், கஸ்தூரி ரங்க அய்யங்கார் பி.சிதம்பரம் பிள்ளை உபதலைவர்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கிய சங்கதி; என் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ``மதராஸ் நேஷனலிஸ்ட் அசோசியேஷனுக்கு சி.விஜயராகவாச்சாரியாரை தலைவராக பிரேரபித்து மக்கள் ஒப்புக்கொண்ட உடன், சி. கஸ்தூரிரங்க அய்யங்கார் அவர்களை உபதலைவராக சி.ராஜ கோபா லச்சாரியார் பிரேரபித்தார். உடனே வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரையும் நான் பிரேரபித்து, இரண்டு உபதலைவர் இருக்க வேண்டும் என்று சொன்னேன். என். தண்ட பாணிபிள்ளை இதை ஆமோதித்தார். கஸ்தூரிரங் கய்யங்காருக்கு இது பிடிக்க வில்லை சி.ஆர். அவர்கள் ஒரே உபதலைவர். போதும்' என்றார்.
இது வாதத்துக்கு இடமாய் விட்டதுடன் வி.ஒ.சிதம்பரம் பிள்ளைக்கு இந்த மரியாதை கொடுப்பது கஸ்தூரிரங்கய்யங்கார் கூட்டத்திற்கும் மற்றும் சில பாப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை, என்று அக்கூட்டத்தில் உள்ள பல பார்ப்பனரல்லாத மக்கள் உள்ளத்தில் பட்டுவிட்டது; சி.ஆர். ஆச்சாரியார் இதை சமாளிக்க என்னமோ செய்து பார்த்தார். அவர் சாமார்த்தியம் கூட்டத்தில் பலமான பிளவு ஏற்படும்படி செய்துவிட்டது. உடனே, கூட்டத்தை ஒத்திவைத்து மாலைக் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கப் பட்டுவிட்டது. நானும் டாக்டர். வரத ராஜுலு நாயுடுவும் திரு.வி.க. அவர்களும் ராஜ கோபாலாச்சாரியாரும் ஒரே காரில் ஏறி ஜாகைக்கு வரும் போது வழியில் ஆச்சாரியார் உப தலைவர் நியமன சம்பவத்துக்கு சமாதானம் சொல்லும் முறையில் எங்களைப் பார்த்து ``இன்றைய நடவடிக்கை, ஜஸ்டிஸ் கட்சியாரே மேலானவர்கள் என்று கருதும் படியாக ஆகிவிட்டதே'' என்று சொன்னார்.
அதற்கு நாங்கள் ஒரு வரை ஒருவர் பார்த்து'' ஜாடை செய்து கொண்டதோடு நான் ஆச்சாரியாரைப் பார்த்து ``தலைவர் விஜயராகவாச்சாரியார். உபதலைவர் கஸ்தூரி ரங்கய்யங்கார். தாங்கள் தலைமை காரியதரிசி இப்படி இருக்கும்போது, ஒரு தமிழர் உப தலைவர்களில் ஒருவராக கூட இருக்க தங்களுக்கு இஷ்டமில்லை என்பதாக மக்கள் நினைக்கும்படியாக ஏற்பட்டுவிட்டதால்தான் சிலர் அந்தப்படி கிளர்ச்சி செய்தார்களே ஒழிய, மற்றபடி வேறு காரணம் ஒன்றும் இல்லை'' என்று நான் சமாதானம் சொன்னேன்; ஆச்சாரியார் பேசவில்லை; மாலைக் கூட்டத்தில் ஒரே உபதலைவர் போதும் என்கின்ற பிரேரபனைக்கு கஸ்தூரி ரங்கய்யங்கார் கட்சி ஓட்டு சேகரிப்பதாக சேதி தண்டபாணி பிள்ளையால் தெரிந்தது. ஆந்திரா, மலையாள பிரதிநிதிகள் எனது பிரேரபனைக்கு எதிராக ஒட்டு செய்வார்கள் என்பதாகவும் தெரியவந்தது.
உடனே நான் 50ரூ. எடுத்து தண்டபாணி பிள்ளை அவர்களிடம் கொடுத்து 100 டெலிகேட் டிக்கெட் வாங்கி 100 தொழிலாளர் தோழர்களை அழைத்து வரும்படி செய்துவிட்டோம் மாலைக் கூட்டம் சௌந்தர்ய மகாலில் கூடிற்று; தொழிலாளர்கள் 100 பேர் வந்து உட்கார்ந்து விட்டார்கள்; என் பிரேரபனை ஜெயித்துவிடும் என்று அய்யங்கார் கோஷ்டி தெரிந்து கொண்டது. இந்த சமயத்தில் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்து ஒரு சமாதான தீர்மானம் கொண்டு வந்தார். அது என்னவென்றால் 4 உபதலைவர்கள்-அதில் வி.ஓ.சி. உள்பட சத்தியமூர்த்தி அய்யரும் ஒருவர்-என்பதாக பிரேரேபித்தார்; நான் ஒப்புக் கொண்டேன்; மற்ற தோழர்கள் அதாவது டாக்டர் நாயுடு திரு.வி.க. தண்ட பாணிப்பிள்ளை ஆகியவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
இவர்கள், ஒப்புக் கொள்ளாததால் 4 உபதலைவர்கள் தீர்மானம் தோல்வியுறும் போலாகிவிட்டது; பிறகு, ஒட்டுக்கு விடாமலேயே எனது பிரேரனை ஒப்புக் கொள்ளப்பட்டு கஸ்தூரி ரங்கய்யாங்காரும் வி.ஒ. சிதம்பரம் பிள்ளையும் உபதலைவர்களானார்கள். சத்தியமூர்த்தி அய்யருக்கும் எ.ரெங்கசாமி அய்யங்காருக் கும் அந்த கமிட்டியில் மெம்பர் பதவி கூட கிடைக்கவில்லை. டாக்டர் நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க. ஆகியோர்களும் மற்றும் பலரும் முக்கிய மெம்பர்கள், இதன் பயனாய் சென்னையில் மாகாணத்துக்கே தலைவர்களாக இருந்து வந்த ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிக்கும், பெசண்ட் கோஷ்டிக்கும் ராஜ கோபாலாச்சாரியார் கோஷ்டியாக இருந்த எங்கள் மீது பொறாமை ஏற்பட்டது. நாங்கள் மூவரும் அதாவது நான் ஆச்சாரியார், நாயுடு ஆகிய மூவரும் அதிக நண்பர்களாகிவிட்டோம்.
எங்களுக்கு விரோதமாய் கஸ்தூரி ரங்க அய்யங்காரும் ரெங்கசாமி அய்யங்காரும் தங்கள் பத்திரிக்கைகளில் ஜாடையாகவும் சத்திய மூர்த்தி அய்யரைக் கொண்டு வெளியிடங்களில் வெளிப்படையாகவும் எதிர்ப்பிரச்சாரம் செய்யச் செய்தார்கள். நாங்கள் ஆச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததால் அவர்கள் செல்வாக்கு குறைய ஆரம் பித்தது. அநேக பார்ப்பனர்களும் எங்களை ஆதரிக்க முன்வந்து விட்டார்கள். இந்தக் காலத்தில்தான் காந்தியார் அரசியலில் விளம்பரமாகினார். இவருக்கு சி.ஆர். மிக்க உதவி: பஞ்சாப் படுகொலை நடந்த சமயம் அதன் பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கி எழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக் கூட்டம். இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம். இந்த டிசம்பரில் மோதிலால்நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் ஏற்பாடாகியிருந்தது. இந்த காங்கிரஸ் பிரபல காங்கிரசாகிவிட்டது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்கள் சென்றிருந்தோம். அங்கு சென்று நேரில் அந்த படுகொலை சம்பவங்களைப் பார்த்த பிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசிய வாதியாகிவிட்டேன்.
இவற்றை விட மற்றொரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், அப்போது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் இல்லை. தாசில்தார். டிப்டி கலெக்டர் தான் இன்கம்டாக்ஸ் போட வேண்டும். அவர்கள் உள்ளூர் கணக்குப்பிள்ளை, மணியக்காரர் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் சொன்னபடி தான் போடுவார்கள்.
ஆனால், தாசில்தாரும், டிப்டிகலெக்டரும் ஊரில் ஒரு பெரிய யோக்கியமான வியாபாரியைக் கூப்பிட்டு அல்லது சென்று இரகசியமாய் விசாரித்துக் கொண்டு, இரண்டையும் சரிபார்த்துத்தான் போடுவார்கள். இந்த காரியத்துக்கு ஏற்றபடி பெரிய யோக்கியமான வியாபாரி யாய்' இருந்தவர் என் தகப் பனார். அவர் இருக்கும் போதே, சில சமயங்களில் நான் போய், அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் இது விஷயமாய் சொல்லுவேன். அவர்களுக்கு, நானே `பெரிய யோக்கியமான வியாபாரி' யாகிவிட்டேன். அந்த இடத்திற்கு யார் வந்தாலும், முன்னவர் செய்தபடி என்னைத் தான் கேட்பார்கள். இந்த சங்கதி எங்கள் ஊர் கணக்கு மணியக்காரருக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்களும் அப்போது என் வயசுக்காரர்கள்.
எனது 2-ந்தர கூட்டங் ளில் இவர்கள் கலந்தே இருப்பார்கள். ஆதலால், இவர்களுக்கும் என்னைக் கேட்டுத்தான் வியாபாரிகள் வரும்படி தெரிந்தாக வேண்டும். என்னைக் கேட்காவிட்டால், அதிகாரிகளிடம் நான் வேறு மாதிரியாய்ச் சொல்லி விட்டால், இவர் சிபாரிசு கெட்டுப்போகும். வியாபாரி களிடம் இதற்கு ஆக இவர் கள் வாங்கிய மாமூல் பணம் திரும்பக் கொடுக்கவேண்டி வரும். ஆதலால் இவர்களும் என்னைக் கேட்டே இன்கம்டாக்ஸ் லிஸ்ட் தயார் செய்வார்கள். பிறகு, மெள்ள மெள்ள வர்த்தகர்களுக்கும் தெரியும்.
ஆதலால் கணக்கப் பிள்ளை (கர்ணம்) பட்டா மணியக்காரர், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முதல் எல்லா அதிகாரிகளும் எனக்கு தெரிந்தவர்கள், என்கின்ற காரணத்தினால், எல்லா வர்த்தகர்களும் கணக்கு மணியக் காரர்களும் கூட என்னிடம் வந்தே குறைந்த அளவுக்கு' சிபார்சு செய்து கொள்ள வேண்டியதாகி விட்டதால், வருவார்கள்.
அடுத்தாற்போல் ஊரில் என்கரோச்மெண்ட் என்னும் நில ஆக்கிரமிப்பு என்கின்ற தொல்லை அதிகம். அப்போது இந்த சர்வேக்கல் வேலை முனிசிபாலிட்டிக்கு இல்லை; அதற்கும் கணக்கு மணியக்காரர்கள்தான் அதிகாரிகள். ஆதலால், அது சம்மந்தமான, இல்லாவிட்டால் கட்டடம் இடிபடும் சிபாரிசுக்கும் என்னிடம் வருவார்கள்.
ஆஸ்பத்திரி டாக்டர்; எனக்கு வேண்டியவர்; குடும்ப சிநேகிதர் போல் இருப்பார். அந்த சிபாரிசுக்கும் என்னிடம் தான் வருவார்கள். ஏனெனில் - ஆஸ்பத்திரி டாக்டர் ஆங்கிலோ இந்தியர்கள். நான் ஹானரெரி மாஜிஸ்ட் ரேட்டாகவும் இருந்தேன். டிப்டி கலெக்டர் எனக்கு சிநேகமானதால் மாஜிஸ்ட்ரேட் எந்த பெஞ்சி கேசுக்கும் என் அபிப்பிராயம்தான் கேட்பார். இதனால், பெஞ்சு கேசில் பட்டுக் கொண்டவர்களும் என்னிடம் வருவார்கள்.
நான் பெஞ்சில் முக்கிய வாயாடி; பெஞ்சு மாஜிஸ்ட்ரேட் ஆனதால், புண்ணுக் கழுத்து பிடிக்கிற எஸ்.பி.சி.ஏ. இன்ஸ்பெக்டர் என் கடையில் வந்து காத்திருப்பார். இதனால், செக்கு ஆட்டும் வாணியச் செட்டியார்கள் (ஈரோட்டில், அப்போது 150 செக்குபோல் ஓடும்) எனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள். ஒத்தவண்டி, குதிரை வண்டிக்காரர்கள் சிலர், இறங்கிக் கும்பிடுவார்கள். இப்போதைய இம்பிரியல் பாங்கிக்கு அப்போது `மதறாஸ் பாங்கி' என்று பெயர். அந்த பாங்கி ஏஜண்ட் ஒரு துரை, அவருடைய காஷ்கீப் பர் போட்ட, மதிப்பு, அதா வது எந்தெந்த வியாபாரிக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம், 3 மாதத்துக்கு ஒரு முறை அவர்கள் அந்தஸ்து எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிக் கேட்க என்னைக் கூப்பிடுவார்.
ஆதலால், கேஷ்கீப்பர் எனக்கு வேண்டியவரானதால் வியாபாரிகளும் சிலர் எழுந்து வணங்குபவர்களாக இருப்பார்கள்; நான் ரீடிங்ரூம் செக்ரடரி, மகாஜன ஸ்கூல் செக்ரடரி, டென்னீஸ் கோர்ட் செக்ரடரி, தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட் முதலிய பல உத்தியோகங்கள் எனக்கு உண்டு; இந்த நிலையில் முனிசிபல் தேர்தலுக்கு நிற்பவர்கள் என்னைக் கேட்காமல் எப்படி நிற்க முடியும்? நான் நினைத்தபடிதான் தேர்தல். அப்புறம் நானே `நாய்க்கர்' (என் தகப்பனார்) ஆகி விட்டேன். நான் போகாமல் எந்த வீட்டிலும் கல்யாணம் நிச்சயதார்த்தம் நடக்காது; நான் போகாமல் அநேக வீட்டில் ப்ரேதம் எடுக்கப்பட மாட்டாது; எந்த கல்யாணத்தில் எந்த மேளத்தானை வைப்பது. எந்த தாசியை சதுருக்கு, பாட்டுக்கு வைப் பது என்பதும் என்னைக் கொண்டே செய்யும்படி ஆகி விட்டதால், இந்த கூட்டமும் எனக்கு ரொம்பவும் வேண்டியவர்களாகவும் மிகவும் கீழ்ப்படிபவர்கள் ஆகவும் ஆகிவிட்டார்கள். கடைசியில் நானே முனிசிபல் சேர்மனும் ஆகிவிட்டேன்.
இதுவரை என் வியாபாரம் சிறிதாவது, அதாவது அக்காலத்தில் ஒரு வருஷத்துக்கு ஒரு 500 ரூபா இன்கம்டாக்ஸ் வரி சுட்டுகிற அளவுக்கு நடந்தது; சேர்மென் ஆனதும், என் வியாபாரம் குறைந்தது. அப்போது எனது தானிய மண்டியில் வேலை பார்த்த ஆள் பணம் கையாடிவிட்டார். எனக்குச் சொந்தமான பஞ்சாலை ஜின்னிங் பேக்டரி எண்ணை செக்கு (ரோட்டரி) ஆகிய எந்திரசாலையில் வேலை செய்த ஏஜெண்ட் நான் சரியாய் வேலைகளை கவனித்து அவருக்கு தக்கது செய்வதில்லை என்று சொல்லி விலகி விட்டார். நான் சிபாரிசு செய்து ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த வியாபாரிகள் பணம் கட்டமுடியாமல் என் மீது குறை கூறும்படியான அளவுக்கு வாய்தாவில் டியூ கட்டாமல் தவறவிட்டு விடுவார்கள் போல் தோன்றிற்று.
உடனே வியாபாரத்தைக் கூட கவனியாமல் விழுந்து போன வியாபாரிகள் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொத்துக்களை விற்று அவர்களை மீட்டுவிட்டு என் பஞ்சாலையை விற்றுவிட்டு, வியாபாரம், மாத்திரம் நன்றாய் ஏற்பாடு செய்து கொண்டு' சேர்மன் வேலையையும் ஊர் வேலையையும் செய்து கொண்டு நல்ல பிரபலமாய் இருந்து வருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சேலம் சேர்மேன்; டாக்டர், வரதராஜலுநாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் பெசண்ட் அம்மைக்கு எதிர்ப்பாகவும் (பெயர் ஞாபகமில்லை ஏதோ ஒரு பெயருடன் திருப்பூரில்) ஒரு வாரப் பேப்பர் நடத்திக் கொண்டு, சந்தா சேர்க்க ஈரோட்டுக்கு, வந்தார். அவருக்கு ஈரோடு கடைவீதிகளில் பல சந்தா சேர்த்துக் கொடுத்து, வீட்டில் விருந்து செய்து, பெருமைப்படுத்தினேன்; என்றாலும் அப்போது நான் பெசண்ட் அம்மைக்கு வேண்டியவனாகவும் ஈரோடு பிரம்மஞான சபைக் கூட்டத்திற்கு மெம்பராகவும் இல்லாமல் இருந்தாலும் வக்கீல் எல்லாம் மெம்பரான தால் அவர் நட்புக்கு அடிக்கடி போய் வருபவனாகவும் இருந்தேன்;
பெசண்ட் அம்மையை இண்டென்ட் செய்த காலத்தில் சர்க்காருக்கு விரோதமாக, அந்தம்மைக்கு அனுகூலமாக, பல காரியங்கள் கூட செய்து கொண்டு இருந்த சமயம்; ஏனெனில், எனக்கு அரசியலிலும் ஆசை இருந்தது. இண்டியன் பேட்ரியட் பத்திரிக்கை அடிக்கடி என்னைப்பற்றி புகழ்ந்து எழுதும்; ஆசிரியர் கருணாகர மேனனுக்கு என்மீது அன்பு உண்டு; அதில், அப்போது உதவி ஆசிரியராய் இருந்த ரங்கைய்யர் எனக்கு நல்ல பழக்கமுடையவர். இந்தக் கூட்டத்தில் இருந்த என்னை டாக்டர். வரதராஜீலு நாயுடுவின் சினேகமானது பெசண்ட் அம்மைக் கூட்டத்திலிருந்து பிரித்துவிட்டது.
டாக்டர் வரதராஜீலுநாயுடு மீது மதுரையில் கேசு நடந்த போது, சி.ராஜகோபாலாச் சாரியாரும், டாக்டர், நாயுடுவும் ஈரோடுக்கு வந்துதான், கேஸ் விசாரணைக்கு மதுரைக்குப் போவார்கள்; இதற்கு முன்பே எனக்கும், சி.ராஜகோபாலாச்சாரியாருக்கும் அவர் வக்கீல் என்கிற முறை யில் பழக்கம் இருந்தது. சில ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறோம். ஆச்சாரியார் முனிசிபல் சேர்மேனானதால், நானும் சேர்மனாயிருந்ததால் ஈரோட்டு சேனி டேஷன், ரோட்டு நன்றாக இருப்பதாக ஈரோடுக்கு கேசுக்கு வரும்பொழுதெல்லாம் சொல்லி என்னைப் புகழுவார். ``ஈரோடு, இயற்கையில் நல்ல சாக்கடை வசதியும், ரொம்பவும் குறைந்த மயில் நீளமுள்ள ரோட்டமைப்பாகவும் அதிக பண வரும்படி உள்ள முனிசீபாலிடி ஆனதாலும், ஈரோடு உங்கள் கண்ணுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்று நான் சொன்னேன்.
இதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி யடைந்து ``நாய்க்கர் உண்மையிலேயே பெருமையை வெறுப்பவர். என்பதாக நன்றாய்த் தெரிகிறது'' என்று, மேலும் புகழ்ந்தார். ``இவ்வளவு சாமார்த்தியம் இருப்பதால்தான், தாங்கள் கெட்டிக்கார வக்கீலாக இருக்கிறீர்கள்'' என்றேன்; கூட இருந்தவர்கள் சிரித்தார்கள்; எங்களுக்குள் அன்பு ஏற்பட்டது; இந்த அன்பு இருக்கும்போது, ஆச்சாரியார் டாக்டர் நாயுடு கேசு விஷயமாக செல்லுகையில் நம்ம வீட்டிற்கு நாயுடு உடன் வந்தபோது, `நாயுடு கேசுக்கு வக்கீலாக வருகிறார்; பீசு இல்லாமல் பேசுகிறார்', என்ற காரணத்தால் ஆச்சாரியாரிடம் எனக்கு அதிக அன்பு, நெருங்கிய தொடர்பு கொண்டு பெசண்டம்மைக்கு விரோதமாக வேலை செய்தார்கள். நாயுடு ஸ்நேகம் காரணமாக நான் அந்த தொண்டில் இழுக்கப்பட்டேன்.
அவர்கள் கூப்பிடும் கூட்டங்கட்கெல்லாம் செல்ல ஆரம்பித்தேன். இந்த மத்தியில், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக, `சென்னை மாகாண சங்கம்' என்ற பெயரால் பார்ப்பன ரல்லாதாருக் கென்றே ஒரு சங்கம் துவங்கி வேலை செய்து வந்தது. அந்த ``மெட்ராஸ் பிரசிடென்ஸி அஸோஸியேஷன்'' என்ற சங்கத்துக்கு கேசவபிள்ளை தலைவர், லாட். கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார், நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை, (காயாரோகணம் அவர்கள் தகப்பனார்) நான், ஆகியவர்கள் உபதலைவர்கள். டாக்டர் நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களும் கார்யதரிசிகள், என்பது எனது ஞாபகம், அதில், நான் அதிக பங்கெடுத்துக் கொண்டேன். பத்திரிக்கைக்கு ``1000 ரூபா கொடுத்தேன்.
1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஈரோட்டில் நான் வரவேற்புக் கழக தலைவனாக இருந்து லாட் கோவிந்ததாஸ் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினேன். அதில் தமிழ்நாடு பிரபலஸ்தர்களும், தொண்டர்களும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் அறிமுகமானார்கள். விஜயராகவாச்சாரியார். சி.இராஜகோபாலச் சாரியார். டாக்டர். ராஜன். சீரங்கம் கொடியாலம் வாசுதேவ அய்யங்கார் பிள்ளை கே.வி. ரங்கசாமி அய்யங்கார் முதலிய பார்ப்பன பிரமுகர்களும் மற்றும் எனக்கு முன்பு சாதாரண வியாபாரி என்கின்ற முறையில் அறிமுக மாகியிருந்தார்கள். பலரும் அரசியலிலும் சினேகமானார்கள். ஆனதால் பல வெளியூர் வியாபாரிகளும் சிதம்பரம்பிள்ளை, கல்யாணசுந்தர முதலியார், ஆதி நாராயண செட்டியார் முதலியவர்களும் அப்பொழுது முதல் அதிக சினேகிதர்கள் ஆனார்கள்.
அந்த மகாநாட்டில் 100க்கு 50க்கு குறையாமல் பார்ப்பனரல்லதாருக்கு உத்தியோகப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. இதன் பயனாய் அரசியல் சம்பந்தமான எல்லாக் கூட்டங்களுக்கும் மகாநாடுகளுக்கும் நான் அழைக்கப்பட்டேன். நானும் ஈரோட்டிலிருந்து பெரும் கூட்டத்தோடு ஒவ்வொரு மாநாட்டுக்கும் சென்று வந்தேன். எனக்கு, என்தொழிலை விட இதில் அதிக பற்று உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ராஜகோபாலச்சாரியார் சேலம் விட்டு, சென்னைக்கு போய்விட நினைத்தார். தன்னுடன் இருந்து, வேலை செய்ய என்னையும் அழைத்தார். தான் சேலம் சேர்மன் வேலையை விட்டு விடுவதாகச் சொன்னார். டாக்டர். நாயுடு என்னையும் சேர்மன் வேலையை விட்டு விட்டு தங்களோடு கலந்து அரசியல் காரியமே செய்யலாம் என்றார்.
மூவரும் கலந்து பேசியதில் எனக்கு துணிவு ஏற்பட்டு நானும் சம்மதித்து விட்டேன். சர்க்கார் நடத்தையைக் கண்டித்து சேர்மன், தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லாபோர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபீசர் முதலிய பல கௌரவ வேலைகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா கொடுத்தேன். இது நடந்து பத்திரிக்கையில் வெளி வந்தவுடன் ``சுதேச மித்திரன்'' ``ஹிந்து'' இரண்டும் தலையங்கம் எழுதி என்னைப் புகழ்ந்து பிரமாதப் படுத்திவிட்டன. இதைப் பார்த்து அப்பொழுது சென்னை சர்க்கார் லோகல் முனிசிபல் டிபார்ட்மெண்ட் இலாகா நிர்வாகச் சபை மெம்பரான சர்.பி. ராஜ கோபாலாச்சாரியார் தன்னை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வந்து, அடுத்த நாள் காலையில் சந்திக்கும் படி சென்னையிலிருந்து தந்தியனுப்பினார். அப்போது, அவரை ரயிலில் போய் பார்த்தேன். பக்கத்தில் அவரது மலையாள மனைவி இருந்தார்; அந்த அம்மையாரிடம், அடிக்கடி என்னைப் பற்றி அவர் பேசுவது வழக்கம். அந்த அம்மையாரும், என்னிடம் அன்பாய்ப் பேசுவார்கள்.
அப்போதைக்கு, சுமார் இரண்டு மாதத்திற்கு முன், ஈரோட்டில் நான் சேர்மனாக இருந்து `தண்ணீர்க்குழாய் துவக்க விழா' நடந்தபோது, அதை நடத்த பி.ராஜகோபாலாச்சாரியாரை அழைத்ததற்கு, அவர் மனைவியுடன் வந்து துவக்கவிழா நடத்தினபோது, என்னைப் பற்றி மிகமிகப் புகழ்ந்து பேசியதை அந்தம்மையும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆதலால், அந்தம்மையிடம் நான் சேர்மன் பதவியை ராஜீனாமா கொடுத்துவிட்டதாக இவர் சொன்னஉடன், அந்தம்மையார் வருத்தப்பட்டு என்னை, ராஜினாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்வதாக இந்தம்மையார் கணவனுக்கு சொல்லியிருக்கிறார். இதை அனுசரித்து, அந்தம்மையார் என்னைக் கண்டதும் அன்பாய் வரவேற்று, தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்; நான் உட்கார்ந்தேன். உடனே கணவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, பிளாட்பாரத்தில் நின்று கொண்டார்.
அம்மையார் ``நாய்க்கரே, நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டீர்களாம். நிஜமா?'' என்றார். நான் ``ஆம்'' என்றேன். ``அது சரியல்ல; எங்கள் அய்யர் உங்களுக்கு ராவ் சாகீப் பட்டம் சிபார்சு பண்ணியிருக்கிறார்; அய்யருக்கு அவமானமாய் விடும். அய்யர் ரொம்பவும் வருத்தப்படுகிறார். உங்களுக்கு, மேலும் ஏதோ உத்தியோகம் கொடுக்கவேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்படிச் செய்யாதீர்கள். அதை வாப்பஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்’’ என்றார். ``செய்து போட்டேனே அம்மா. இனி, வாபஸ் வாங்கினால் எனக்கு அவமானம். ஆபிஸுலும் நான் எல்லோரிடமும் சொல்லி விட்டேன்; ஊரிலும் கலெக்டர் முதல் கேட்டும், `மாட்டேன்' என்று சொல்லிவிட்டேன். இனி, எப்படி வாபஸ் வாங்குவது? மன்னிக்க வேண்டும்'', என்று கெஞ்சினேன்.
அய்யர் (சர்.பி.ராஜகோபாலச்சாரியார்) இதை ஜாடையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். `முடியவில்லை' என்று அறிந்து, வந்து, வண்டிக்குள் ஏறினார். நான் எழுந்து நின்றேன். என் கையைப் பிடித்து ``சிட் டவுன்மை பாய் (உட்காரு என் மகனே)'' என்று உட்கார வைத்து ``நீ அப்படிச் செய்யாதே. உனக்கு பாலிடிக்ச் தெரியாது. உனக்கு அது தகுதியல்ல. நீ நல்ல வியாபாரி; உனக்கு வேண்டிய பெருமை ஏராளமாக இருக்கிறது... அதற்கு ஏன் போகிறாய்?... கவர்ன்மெண்டில், உன்மீது நல்ல அபிப்ராயம், கலெக்டரும் உன்னை பற்றி, நிறையச் சிபாரிசு செய்திருக்கிறார். என் பேச்சைக்கேள். நான் உன் தகப்பனார் உங்கய்யா, எனக்குத் தெரிந்தவர். நான் உங்கள் ஊரில் சப்-கலெக்டராக இருந்தேன். என்ன சொல்கிறாய்? என்னிடமே ஒரு கடிதம் எழுதிக்கொடு... `நான் ராஜீனாமாவை வாபசு வாங்கிக் கொண்டேன்'' என்று சொல்லி, ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
நான் ``மன்னிக்க வேண்டும். ஊரிலேயே குடி - இருக்க முடியாது. யார்யாரோ சொல்லி முடியாது என்று சொல்லி விட்டேன்'' என்றேன் ``என்ன மகாப்பிரமாதமாய் பேசுகிறாய். பண்டித மதன் மோகன் மாளவியாவே தான் கொடுத்த ராஜீனாமாவை வாபஸ் வாங்கிக் கொண்டார். போன வாரத்தில், நீ என்ன பிடிவாதம் செய்கிறாய்?’’ என்றார். நான் மறுபடியும் ``மன்னிக்க வேண்டும்'' என்று கைகூப்பி கும்பிட்டேன்; ``நீ தவறு செய்கிறாய்; பொது ஜனங்களுக்கும் துரோகம் செய்கிறாய். உனக்கும் விரோதம் செய்து கொள்ளுகிறாய். உன் இஷ்டம் போ'' என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது, இதற்குப் பிறகு ஊரில் எனக்கு இன்னமும் அதிக பெருமை ஏற்பட்டுவிட்டது. இரண்டு மூன்று நாளில் ஈரோட்டுக்கு வந்த சி.ஆர். - இடமும் டாக்டர். நாயுடுவிடமும் இதைச் சொன்னேன். அவர்களுக்கு என்னைப் பற்றி, மிகப் பெரிய எண்ணம் ஏற்பட்டு விட்டது. ஒரு நல்ல ஆள் அவர்களுக்கு கிடைத்ததாகக் கருதிக் கொண்டு என்னிடம் அதிக மரியாதை காட்டினார்கள்.
சி.ஆர். அவர்கள் என்னை சென்னைக்கு வந்துவிடும் படி அழைத்தார். நான் வாடகைக்கு வாங்கி குடியிருக்கும் பங்களாவில், ஒருபாகம் இடம் காலியாய் இருப்பதாகவும், மனைவியுடன் வரும்படியும் அழைத்தார். டாக்டர். நாயுடு என்னை சென்னைக்குப் போக வேண்டாமென்றும், இஷ்டப்பட்டால் சேலத்துக்கு வந்து தன்னுடன் ஒன்றாக குடும்பத்துடனே இருக்கலாம், என்றும், அழைத்தார், எனக்கு எங்காவது போய் விடலாம்; ஈரோட்டில் இருக்க வேண்டாம்; என்றே தோன்றிற்று. ஆனால், ஈரோட்டு வியாபாரிகள்'' நீங்கள் எங்கும் போகக் கூடாது. ஈரோட்டில் இருந்து கொண்டே எங்கு வேண்டுமானாலும் போங்கள்; நீங்கள் போய்விட்டால் ஊருக்கு மதிப்பு கெட்டுப் போகும்'' என்றார்கள். என் மனைவிக்கு இவர்கள் வருவதும், போவதும் நான் வேலை ராஜினாமா கொடுத்ததும், சர்க்கார் `மெம்பர் டைடில்' கொடுப்பதாகச் சொல்லியும் நான் ஒப்புக் கொள்ளாததும், ஊரையும், வீடுவாசலையும், மாடுகளையும் விட்டுவிட்டு வெளியூருக்கு ஒண்டுக்குடியாய்ப் போவதும்'' சிறிதும் பிடிக்க வில்லை.
``உனக்கு என்ன பயித்தியமா. நம்ம நிலை என்ன? சங்கதி என்ன? ஆளு அம்பு வாழ்க்கை என்ன? இவைகளை, திடீரென்று விட்டு விட்டு யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? நீ வேண்டுமானால் போ; நான் வெளியூருக்குப் போய் ஒண்டுக்குடியாய் இருக்க முடியாது'' என்று சொன்னார்கள். நான் `சரி, எங்கும் போகவில்லை இங்கேயே இருக்கிறேன். நீ மாத்திரம், நான் சொல்லுகிறபடி நடக்க வேண்டும்'' என்றேன் ``சரி'' என்று ஒப்புக் கொண்டார்கள். மகா நாடுகளுக்கும், காங்கிரஸ் மகாநாட்டுக்கும் நான் ஈரோட்டிலிருந்தே பெருங்கூட்டத்துடன் செல்வேன் மகாநாடுகளில் எனக்குத் தனி மரியாதை இருக்கும். இந்த நிலையில், சென்னையில் இருப்பவர்கள் இடமிருந்து அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற வேண்டும்; என்பதாகக் கருத்து கொண்டு ஒரு இரகசிய கூட்டத்தை சீரங்கத்தில் சி.ஆர்.கூட்டினார்.
அதில் சேலம் விஜயராகவாச்சாரி யார், சி.ராஜகோபாலாச்சாரி யார், டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன், ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோஸப், டாக்டர் நாயுடு, நான் ஆகியவர்களே முக்கியமாய்க் கூடிப் பேசினோம். அதில் முக்கியமாகப் பேசினது ``பெசண்டம்மையார் ஆதிக்கத்தை ஒழிப்பதுதான்'' இதற்கு ஒரு கமிட்டி நியமித்து, பணவசூல் செய்வது; ஒரு பத்திரிக்கை துவக்குவது; ஊர் ஊராய் சென்று பிரச்சாரம் செய்வது ஆகியவை நோக்கம். பிரச்சாரத் திட்டம் என்னவென்றால் `பெசன்ட் அம்மை எங்கள் பிரதிநிதி அல்ல. அந்த அம்மாள் அபிப்பிராயம், இந்த நாட்டு மக்கள் அபிப்ராயமல்ல' என்று உலகறியச் செய்ய வேண்டும், என்பவையாகும். இதைச் செய்ய சென்னை கஸ்தூரி ரங்க அய்யங்கார் கூட்டம் ஒட்டிக் கொள்ள தைரியம் இல்லை.
அது மாத்திரமல்லாமல் சி.ஆர். முன்னுக்கு வருவதும் அப்போது அவர்களுக்கு பொறாமையாய் இருந்தது. இதை அறிந்து சி.ஆர். ஒரு தனிக்கட்சி மாகாணத்துக்கே ஏற்படுத்த முயற்சித்தார்; அதற்கும் நாங்கள் சம்மதித்தோம்; திரு.வி.க. அவர்களும் இதில் முக்கிய பங்கு கொண்டார். உடனே சென்னை சௌந்தர்ய மகாலில் அது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குப் பெயர் ``மெட்ராஸ் நேஷனலிஸ்ட் அஸோஸியேஷன்'' அது கஸ்தூரி ரங்கய்யங்கார் கூட்டம் இதில் கலந்து கொண்டதற்கு காரணம் நான், டாக்டர். நாயுடு, திரு.வி.க. மூவரும் இதில் கலந்ததால் பார்ப்பனரல்லாதாரிடம் உள்ள செல்வாக்கு, தங்களுக்குப் போய்விடுமே என்ற பயம்தான். மற்றும் ஆந்திரா, மலையாளம், தமிழ் ஆகிய எல்லா நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்தார்கள்.
இது பெரிய பிரபல மகாநாடாக ஆகிவிட்டது. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை ஆகியவர்களும் கலந்து கொண்டார்கள். அது பல தீர்மானங்கள் செய்தது. அதில் 100க்கு 30 ஸ்தானங்களுக்கு குறைவில்லாமல் பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகம், பிரதி நிதித்துவம் எல்லாம் கொடுப்பது என்பதாக ஒரு தீர்மானம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் நானேயாகும். டாக்டர். நாயுடுவும் திரு.வி.க.வும் உத்யோக விகிதாச்சாரத்துக்கும் வகுப்பு உணர்ச்சிக்கும் அப்போது எதிர்ப்பானவார்கள். நான் ஒவ்வொன்றுக்கும் வகுப்பு வீதம் கேட்பவன். அதனால், எனக்காக அதைச் செய்தார்கள். அந்த மாநாட்டுக்கு நான்கு காரியதரிதிகள், சி.ஆர்.பிரதம காரியதரிசி, நான் டி.பிரகாசம், கே.பி. கேசவமேனன் மூவர், முறையே தமிழ், ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று நாட்டுக்கு காரியதரிசிகள் விஜயராகவாச்சாரியார் தலைவர், கஸ்தூரி ரங்க அய்யங்கார் பி.சிதம்பரம் பிள்ளை உபதலைவர்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கிய சங்கதி; என் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ``மதராஸ் நேஷனலிஸ்ட் அசோசியேஷனுக்கு சி.விஜயராகவாச்சாரியாரை தலைவராக பிரேரபித்து மக்கள் ஒப்புக்கொண்ட உடன், சி. கஸ்தூரிரங்க அய்யங்கார் அவர்களை உபதலைவராக சி.ராஜ கோபா லச்சாரியார் பிரேரபித்தார். உடனே வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரையும் நான் பிரேரபித்து, இரண்டு உபதலைவர் இருக்க வேண்டும் என்று சொன்னேன். என். தண்ட பாணிபிள்ளை இதை ஆமோதித்தார். கஸ்தூரிரங் கய்யங்காருக்கு இது பிடிக்க வில்லை சி.ஆர். அவர்கள் ஒரே உபதலைவர். போதும்' என்றார்.
இது வாதத்துக்கு இடமாய் விட்டதுடன் வி.ஒ.சிதம்பரம் பிள்ளைக்கு இந்த மரியாதை கொடுப்பது கஸ்தூரிரங்கய்யங்கார் கூட்டத்திற்கும் மற்றும் சில பாப்பனர்களுக்கும் பிடிக்கவில்லை, என்று அக்கூட்டத்தில் உள்ள பல பார்ப்பனரல்லாத மக்கள் உள்ளத்தில் பட்டுவிட்டது; சி.ஆர். ஆச்சாரியார் இதை சமாளிக்க என்னமோ செய்து பார்த்தார். அவர் சாமார்த்தியம் கூட்டத்தில் பலமான பிளவு ஏற்படும்படி செய்துவிட்டது. உடனே, கூட்டத்தை ஒத்திவைத்து மாலைக் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கப் பட்டுவிட்டது. நானும் டாக்டர். வரத ராஜுலு நாயுடுவும் திரு.வி.க. அவர்களும் ராஜ கோபாலாச்சாரியாரும் ஒரே காரில் ஏறி ஜாகைக்கு வரும் போது வழியில் ஆச்சாரியார் உப தலைவர் நியமன சம்பவத்துக்கு சமாதானம் சொல்லும் முறையில் எங்களைப் பார்த்து ``இன்றைய நடவடிக்கை, ஜஸ்டிஸ் கட்சியாரே மேலானவர்கள் என்று கருதும் படியாக ஆகிவிட்டதே'' என்று சொன்னார்.
அதற்கு நாங்கள் ஒரு வரை ஒருவர் பார்த்து'' ஜாடை செய்து கொண்டதோடு நான் ஆச்சாரியாரைப் பார்த்து ``தலைவர் விஜயராகவாச்சாரியார். உபதலைவர் கஸ்தூரி ரங்கய்யங்கார். தாங்கள் தலைமை காரியதரிசி இப்படி இருக்கும்போது, ஒரு தமிழர் உப தலைவர்களில் ஒருவராக கூட இருக்க தங்களுக்கு இஷ்டமில்லை என்பதாக மக்கள் நினைக்கும்படியாக ஏற்பட்டுவிட்டதால்தான் சிலர் அந்தப்படி கிளர்ச்சி செய்தார்களே ஒழிய, மற்றபடி வேறு காரணம் ஒன்றும் இல்லை'' என்று நான் சமாதானம் சொன்னேன்; ஆச்சாரியார் பேசவில்லை; மாலைக் கூட்டத்தில் ஒரே உபதலைவர் போதும் என்கின்ற பிரேரபனைக்கு கஸ்தூரி ரங்கய்யங்கார் கட்சி ஓட்டு சேகரிப்பதாக சேதி தண்டபாணி பிள்ளையால் தெரிந்தது. ஆந்திரா, மலையாள பிரதிநிதிகள் எனது பிரேரபனைக்கு எதிராக ஒட்டு செய்வார்கள் என்பதாகவும் தெரியவந்தது.
உடனே நான் 50ரூ. எடுத்து தண்டபாணி பிள்ளை அவர்களிடம் கொடுத்து 100 டெலிகேட் டிக்கெட் வாங்கி 100 தொழிலாளர் தோழர்களை அழைத்து வரும்படி செய்துவிட்டோம் மாலைக் கூட்டம் சௌந்தர்ய மகாலில் கூடிற்று; தொழிலாளர்கள் 100 பேர் வந்து உட்கார்ந்து விட்டார்கள்; என் பிரேரபனை ஜெயித்துவிடும் என்று அய்யங்கார் கோஷ்டி தெரிந்து கொண்டது. இந்த சமயத்தில் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்து ஒரு சமாதான தீர்மானம் கொண்டு வந்தார். அது என்னவென்றால் 4 உபதலைவர்கள்-அதில் வி.ஓ.சி. உள்பட சத்தியமூர்த்தி அய்யரும் ஒருவர்-என்பதாக பிரேரேபித்தார்; நான் ஒப்புக் கொண்டேன்; மற்ற தோழர்கள் அதாவது டாக்டர் நாயுடு திரு.வி.க. தண்ட பாணிப்பிள்ளை ஆகியவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
இவர்கள், ஒப்புக் கொள்ளாததால் 4 உபதலைவர்கள் தீர்மானம் தோல்வியுறும் போலாகிவிட்டது; பிறகு, ஒட்டுக்கு விடாமலேயே எனது பிரேரனை ஒப்புக் கொள்ளப்பட்டு கஸ்தூரி ரங்கய்யாங்காரும் வி.ஒ. சிதம்பரம் பிள்ளையும் உபதலைவர்களானார்கள். சத்தியமூர்த்தி அய்யருக்கும் எ.ரெங்கசாமி அய்யங்காருக் கும் அந்த கமிட்டியில் மெம்பர் பதவி கூட கிடைக்கவில்லை. டாக்டர் நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க. ஆகியோர்களும் மற்றும் பலரும் முக்கிய மெம்பர்கள், இதன் பயனாய் சென்னையில் மாகாணத்துக்கே தலைவர்களாக இருந்து வந்த ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிக்கும், பெசண்ட் கோஷ்டிக்கும் ராஜ கோபாலாச்சாரியார் கோஷ்டியாக இருந்த எங்கள் மீது பொறாமை ஏற்பட்டது. நாங்கள் மூவரும் அதாவது நான் ஆச்சாரியார், நாயுடு ஆகிய மூவரும் அதிக நண்பர்களாகிவிட்டோம்.
எங்களுக்கு விரோதமாய் கஸ்தூரி ரங்க அய்யங்காரும் ரெங்கசாமி அய்யங்காரும் தங்கள் பத்திரிக்கைகளில் ஜாடையாகவும் சத்திய மூர்த்தி அய்யரைக் கொண்டு வெளியிடங்களில் வெளிப்படையாகவும் எதிர்ப்பிரச்சாரம் செய்யச் செய்தார்கள். நாங்கள் ஆச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததால் அவர்கள் செல்வாக்கு குறைய ஆரம் பித்தது. அநேக பார்ப்பனர்களும் எங்களை ஆதரிக்க முன்வந்து விட்டார்கள். இந்தக் காலத்தில்தான் காந்தியார் அரசியலில் விளம்பரமாகினார். இவருக்கு சி.ஆர். மிக்க உதவி: பஞ்சாப் படுகொலை நடந்த சமயம் அதன் பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கி எழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக் கூட்டம். இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம். இந்த டிசம்பரில் மோதிலால்நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் ஏற்பாடாகியிருந்தது. இந்த காங்கிரஸ் பிரபல காங்கிரசாகிவிட்டது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்கள் சென்றிருந்தோம். அங்கு சென்று நேரில் அந்த படுகொலை சம்பவங்களைப் பார்த்த பிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசிய வாதியாகிவிட்டேன்.
நான் சாதாரணமான ஆள்தான். என் கூட்டத்தில் வந்து கூடியிருக்கிறீர்கள். சாதாரணமான ஆள்தான் என்றாலும் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் கும்பிடுகிற சாமிகளான ராமனையும், பிள்ளையாரையும் உடைத்து தூள்தூளாக ஆக்கினவன்.
பெரும்பாலோர் மதிக்கிற ராமனையும் அவன் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சீதை ஒரு ஒண்ணா நம்பர் விபச்சாரி; "அவள் சினையானதே' ராவணனால்; அதுவும் இலங்கையில் என்பதை ராமாயணத்திலிருந்தே எடுத்துக்காட்டி வருகிறவன். 20, 30 வருஷத்திற்கு முன்பாகவே நான் சாஸ்திரத்தை, மநுதர்ம சாஸ்திரத்தை நெருப்பிலே போட்டு எரித்தவன். இந்த ராமாயணத்தை எரிக்கணும் என்று சொன்னவன். எல்லோரும் ஜனநாயகம் (மக்களாட்சி) என்று சொல்வதை நான் முழுப் பித்தலாட்டம், மக்களைப் பிடித்த பேய் என்று சொல்லுகிறவன்.
சாதி ஒழியணும் என்பதுதான் எங்களுடைய முதலாவது கொள்கை. பார்ப்பானும் இருக்கக்கூடாது; பறையனும் இருக்கக்கூடாது; மனிதன்தான் இருக்கணும் என்று சொல்லுகிறோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லுகிறான். சாதி காப்பாற்றப்படும் என்பது, மூலாதார உரிமை என்று அரசமைப்புச் சட்டத்திலே எழுதி வைத்துக் கொள்கிறான். அதில் நாம் சூத்திரன் நாலாஞ்சாதி மக்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்! இதுக்குப் பேர் ஜனநாயகமா? நாம் 100க்கு 97 பேர். அவன்கள் 100க்கு 3 பேர். அவனிடம் ஆட்சி இருக்கிறது. அவன் சாதியைக் காப்பாற்ற சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற மற்றக் கட்சிக்காரனெல்லாம் அவன் போடுகிற எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு, அந்தச் சட்டத்தின் மீது சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு அவனுடைய சட்டசபையில் உட்காருகிறான். அவனுக்கு சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க முடியுமா? சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், கிளர்ச்சி தவிர வேறு ஏதாவது வழி நமக்கு இருக்கிறதா?
20 கோடி ரூபாய் இந்த வருஷத்து கல்விக்கு செலவாகிறதே! இவையெல்லாம் யாருடைய பணம்? நம் பணம்தான்; ஆனால் இதனால் படிக்கிறவன் நூற்றுக்கு நூறு பார்ப்பான் தானே? நாம் வரி கொடுத்துத்தானே இப்படிப் பணம் செலவிட முடிகிறது? நம்மிடத்தில் வரி வாங்கணும் என்றால், அவன் தேவையை உத்தேசித்து அல்ல. நம்மைப் "பாப்பராக' (பணம் இழந்தவன்) ஆக்கவேணும்; பிச்சையெடுக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? ஏன் நமக்குப் படிப்பு வராதா? நம் வாயிலே மாத்திரம் படிப்பு நுழையாதா?
இவற்றையெல்லாம் மீறி நம் பையன்கள் இப்போது படித்து விடுகிறார்கள்.
அதைத் தடுக்கவும் சூத்திரனைப் படிக்க விடக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் பார்ப்பான் செய்கிறான். வெளிப்படையாகச் சொல்லவில்லை. வேறுவிதமாக அதையே சொல்லுகிறான்.
பள்ளிக்கூடத்திலே தகுதி, திறமை அடிப்படையில் இனிமேல் சேர்க்கணும்; ஜாதி அடிப்படையில் பின் தங்கியவர்கள் இவர்கள் என்பதைப் பார்த்து, எந்தவிதச் சலுகையும் கூடாது என்பதாக ஓர் உத்தரவு போடணும் என்கிறான். இன்னும் நூற்றுக்கு 70 - 80 மார்க் வாங்கினவனைத்தான் சேர்க்கணும் என்கிறான்.
பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?
டாக்டர், எஞ்சினியர் என்று ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடிக்கிற உத்தியோகம் எல்லாம் நமக்குக் கிடைக்காதபடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து அவனே படிக்கும்படியான அளவுக்கு வசதி செய்து கொண்டான். வேறு ஒரு நாடாக இருந்தால், இந்த மாதிரி அக்கிரமம் செய்கிற பார்ப்பானைச் சுட்டுத்தள்ளியே இருப்பார்களே!
சாதாரணமாக நாட்டு வைத்தியம் பண்ணணும் என்றால், தனியாகப் பிராக்டீஸ் (தொழில்) செய்கிறவர்கள் ஒரு சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. ஓமியோபதி டாக்டர் என்கிறான். ஆனால், அலோபதி ஆங்கில மருத்துவர் டாக்டர் படிப்பு படிக்கணும் என்றால் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன அர்த்தம்?
3 பேர் வேலைக்கு வரணும் என்றால் 30 வருடமாக நாம் முட்டிக் கொள்ள வேணும். பார்ப்பான் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூச்சல் போடுகிறான் என்றால் இது எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத்தனத்திற்குக் கேள்வி கேட்பாரே இல்லையே! ஒரு பயலும் இதை எடுத்துக்காட்டி இதற்குப் பரிகாரம் தேடணும் என்று வருவதே கிடையாதே! நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது.
தகுதியும், திறமையும் தான் முக்கியமா? அதை அளப்பதற்கு தர்மா மீட்டர் பார்ப்பான்தானா? நம்மவன் படித்தால் என்ன, இவன் அப்பன் வீட்டு முதல் குறைந்தா போகிறது? முதலிலே ‘இண்டர்மீடியெட்' படித்தால் போதும் என்றான். இப்போது என்ன என்றால், நீ அது பாஸ் பண்ணியிருந்தாலும் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன போக்கிரித்தனம்!
மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்! அவன்தான் பெரிய பெரிய எஞ்சினியரை எல்லாம் நிர்ணயிக்கிறான். சீப் எக்சிகியூடிவ் எஞ்சினியர் போன்ற பலவித உத்தியோகஸ்தர்களையும் நியமிக்கிறான் என்றால் அதற்கு மாத்திரம் தகுதி, திறமை வேண்டாமா?
சேலம் - பொட்டிரெட்டிப்பட்டியில் 25.3.1959 அன்று ஆற்றிய உரை
பெரும்பாலோர் மதிக்கிற ராமனையும் அவன் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சீதை ஒரு ஒண்ணா நம்பர் விபச்சாரி; "அவள் சினையானதே' ராவணனால்; அதுவும் இலங்கையில் என்பதை ராமாயணத்திலிருந்தே எடுத்துக்காட்டி வருகிறவன். 20, 30 வருஷத்திற்கு முன்பாகவே நான் சாஸ்திரத்தை, மநுதர்ம சாஸ்திரத்தை நெருப்பிலே போட்டு எரித்தவன். இந்த ராமாயணத்தை எரிக்கணும் என்று சொன்னவன். எல்லோரும் ஜனநாயகம் (மக்களாட்சி) என்று சொல்வதை நான் முழுப் பித்தலாட்டம், மக்களைப் பிடித்த பேய் என்று சொல்லுகிறவன்.
சாதி ஒழியணும் என்பதுதான் எங்களுடைய முதலாவது கொள்கை. பார்ப்பானும் இருக்கக்கூடாது; பறையனும் இருக்கக்கூடாது; மனிதன்தான் இருக்கணும் என்று சொல்லுகிறோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லுகிறான். சாதி காப்பாற்றப்படும் என்பது, மூலாதார உரிமை என்று அரசமைப்புச் சட்டத்திலே எழுதி வைத்துக் கொள்கிறான். அதில் நாம் சூத்திரன் நாலாஞ்சாதி மக்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்! இதுக்குப் பேர் ஜனநாயகமா? நாம் 100க்கு 97 பேர். அவன்கள் 100க்கு 3 பேர். அவனிடம் ஆட்சி இருக்கிறது. அவன் சாதியைக் காப்பாற்ற சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற மற்றக் கட்சிக்காரனெல்லாம் அவன் போடுகிற எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு, அந்தச் சட்டத்தின் மீது சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு அவனுடைய சட்டசபையில் உட்காருகிறான். அவனுக்கு சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க முடியுமா? சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், கிளர்ச்சி தவிர வேறு ஏதாவது வழி நமக்கு இருக்கிறதா?
20 கோடி ரூபாய் இந்த வருஷத்து கல்விக்கு செலவாகிறதே! இவையெல்லாம் யாருடைய பணம்? நம் பணம்தான்; ஆனால் இதனால் படிக்கிறவன் நூற்றுக்கு நூறு பார்ப்பான் தானே? நாம் வரி கொடுத்துத்தானே இப்படிப் பணம் செலவிட முடிகிறது? நம்மிடத்தில் வரி வாங்கணும் என்றால், அவன் தேவையை உத்தேசித்து அல்ல. நம்மைப் "பாப்பராக' (பணம் இழந்தவன்) ஆக்கவேணும்; பிச்சையெடுக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? ஏன் நமக்குப் படிப்பு வராதா? நம் வாயிலே மாத்திரம் படிப்பு நுழையாதா?
இவற்றையெல்லாம் மீறி நம் பையன்கள் இப்போது படித்து விடுகிறார்கள்.
அதைத் தடுக்கவும் சூத்திரனைப் படிக்க விடக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் பார்ப்பான் செய்கிறான். வெளிப்படையாகச் சொல்லவில்லை. வேறுவிதமாக அதையே சொல்லுகிறான்.
பள்ளிக்கூடத்திலே தகுதி, திறமை அடிப்படையில் இனிமேல் சேர்க்கணும்; ஜாதி அடிப்படையில் பின் தங்கியவர்கள் இவர்கள் என்பதைப் பார்த்து, எந்தவிதச் சலுகையும் கூடாது என்பதாக ஓர் உத்தரவு போடணும் என்கிறான். இன்னும் நூற்றுக்கு 70 - 80 மார்க் வாங்கினவனைத்தான் சேர்க்கணும் என்கிறான்.
பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?
டாக்டர், எஞ்சினியர் என்று ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடிக்கிற உத்தியோகம் எல்லாம் நமக்குக் கிடைக்காதபடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து அவனே படிக்கும்படியான அளவுக்கு வசதி செய்து கொண்டான். வேறு ஒரு நாடாக இருந்தால், இந்த மாதிரி அக்கிரமம் செய்கிற பார்ப்பானைச் சுட்டுத்தள்ளியே இருப்பார்களே!
சாதாரணமாக நாட்டு வைத்தியம் பண்ணணும் என்றால், தனியாகப் பிராக்டீஸ் (தொழில்) செய்கிறவர்கள் ஒரு சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. ஓமியோபதி டாக்டர் என்கிறான். ஆனால், அலோபதி ஆங்கில மருத்துவர் டாக்டர் படிப்பு படிக்கணும் என்றால் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன அர்த்தம்?
3 பேர் வேலைக்கு வரணும் என்றால் 30 வருடமாக நாம் முட்டிக் கொள்ள வேணும். பார்ப்பான் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூச்சல் போடுகிறான் என்றால் இது எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத்தனத்திற்குக் கேள்வி கேட்பாரே இல்லையே! ஒரு பயலும் இதை எடுத்துக்காட்டி இதற்குப் பரிகாரம் தேடணும் என்று வருவதே கிடையாதே! நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது.
தகுதியும், திறமையும் தான் முக்கியமா? அதை அளப்பதற்கு தர்மா மீட்டர் பார்ப்பான்தானா? நம்மவன் படித்தால் என்ன, இவன் அப்பன் வீட்டு முதல் குறைந்தா போகிறது? முதலிலே ‘இண்டர்மீடியெட்' படித்தால் போதும் என்றான். இப்போது என்ன என்றால், நீ அது பாஸ் பண்ணியிருந்தாலும் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன போக்கிரித்தனம்!
மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்! அவன்தான் பெரிய பெரிய எஞ்சினியரை எல்லாம் நிர்ணயிக்கிறான். சீப் எக்சிகியூடிவ் எஞ்சினியர் போன்ற பலவித உத்தியோகஸ்தர்களையும் நியமிக்கிறான் என்றால் அதற்கு மாத்திரம் தகுதி, திறமை வேண்டாமா?
சேலம் - பொட்டிரெட்டிப்பட்டியில் 25.3.1959 அன்று ஆற்றிய உரை
பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.
மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?
என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?
நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.
தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.
நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.
மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?
என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.
எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?
நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.
தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.
நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.
-பெரியார் - நன்றி கீற்று.காம்
அனைவரும் அர்ச்சகராக தடை மற்றும் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட தடை இரண்டு முக்கிய அநீதி தீர்ப்புகள் வெளியாகியிருக்கும் இவ் வேளையில் இப் பதிவு மிக அவசியாமாய் இருக்கிறது
பார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்
மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (தலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு 23.4.1957 அன்று,சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துப் பேசியதிலிருந்து..
பார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்
மேன்மை தங்கிய கனம் நீதிபதிகள் அவர்களே சமூகம் கோர்ட்டார் எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீசில், சமூகம் கோர்ட்டை அவமதித்ததாகவும், அதற்கு ஏன் நான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்ட வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சிவசாமி (தலியார்) என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரிகையில் (Write petition) ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 இல் சமூகம் கோர்ட்டு தீர்ப்பில், கனம் திருச்சி ஜில்லா கலெக்டரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைக் குறித்து, திருச்சி பொதுக்கூட்டத்தில், நான் 4.11.1956 ஆம் தேதியில் மேற்படி தீர்ப்பைச் சொன்ன கனம் நீதிபதிகளைக் குறை கூறியிருப்பதாகவும், அந்த நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருப்பதாகவும், அவர்களுக்கு உள்ளெண்ணம் கற்பித்துத் தாக்கியிருப்பதாகவும், அதனால் சமூகம் கோர்ட்டின் கவுரவம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சமூகம் கோர்ட் நீதிபரிபாலனத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கிறதென்றெல்லாம் கண்டிக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு வார்த்தைகளில், நேரிடையான பொருளுக்கு, ஏற்றமாதிரி நான் யாதொரு குற்றம் செய்தவனல்ல. பொதுவாக, மனித சுபாவத்தைப் பற்றியும், நீண்ட காலமாக அது பிரதிபலித்து வருவதைப் பற்றியுமே எடுத்துச் சொல்லி, அதற்குப் பரிகாரம் தேடவே முயற்சித்து இருக்கிறேன். உதாரணமாக பிரஸ்தாபத் தீர்ப்பில் ரிட் பெட்டிஷன் நெம்பர் 568 55 தீர்ப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு திராவிடர். அதிலும் தமிழர் (Non-Brahmin) மீது தீர்ப்புக் கொடுத்திருக்கிறவர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள். இந்தத் தீர்ப்பின்மீது என்னுடைய ஆராய்ச்சிக்கு எட்டிய கருத்து, பாதிக்கப்பட்டவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதாலும், தீர்ப்புக் கூறினவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதாலும் இம்மாதிரி ஏற்பட்டது என்பது எனது தாழ்மையான முடிவு...
மநுதர்ம சாஸ்திரத்தின்படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (பார்ப்பனர்களும் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ, உயர் பதவியாளனாகவோ இருக்கக்கூடாது என்பது தர்மமாகும். அப்படியிருக்கவிடக்கூடாது என்பதும் பார்ப்பனர் தர்மமாகும். இந்த மநு தர்மந்தான் நீதிபதிகள் கையாளும் இந்துச் சட்டத்திற்கு மூலாதாரமாகும். இதற்கு உதாரணங்கள் அதிகம். கனம் கோர்ட்டார் அவர்களுக்குக் காட்டவேண்டியதில்லை என்றே கருதுகிறேன்... ஆகையினால்தான் பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட நாட்களாக செய்து வருகிறார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் எடுத்துக் காட்ட முடியும்...
...என்னுடைய குறிப்பெல்லாம் பொதுவான பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது, அவர்கள் ஜாதி மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும், மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்... நான் சொல்வதெல்லாம் எங்களைக் "கீழ் சாதி' என்றும், நாங்கள் மேலே வருவது தங்களுக்கு ஆபத்து என்றும், தங்கள் மதத்திற்குக் கேடு என்றும், தங்களை மேல் ஜாதி என்றும், இந்த ஜாதிப் பிரிவுகள் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருக்க மநுதர்ம இந்து பார்ப்பனர்கள் ஜட்ஜுகளாகவும், வேறு எந்த உத்தியோகஸ்தர்களாகவும் எங்கள் நாட்டில் எங்களுக்கு வேண்டாம். வேறு நாட்டில் அவர்களுக்கு எவ்வளவு உயர் பதவி வேண்டுமானாலும் கொடுங்கள். அவற்றில் நாங்கள் குறுக்கிடவில்லை. இந்தக் கருத்தை வெளியிடும் வகையில்தான் பிரஸ்தாப வழக்கு பேச்சில் நான் பேசியிருக்கிறேன்...
பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான். "எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா?' என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம்...
...இந்த மாதிரி விஷயம் எப்படி இருந்தாலும், உண்மையில் விவாதத்திற்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்து கொண்டால், தீர்ப்பு அளித்தால், அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீரவேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும், பொதுக்கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடம் சட்ட அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கின்றது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களுடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதற்கு 23.4.1957 அன்று,சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துப் பேசியதிலிருந்து..
சற்றே பெரிய பதிவு
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்
( 1919- 25)
தங்களின் உடல், மன, ஒழுக்கத் திறன்களை அனைவரும் வளர்த்துக் கொள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே பெரியார் ஈ. வெ. ராமசாமி
( 17-9-1879 - 24-12-1973) அவர்களின் அடிப்படைத் தத்துவம். இந்த இலக்கை எட்ட, மக்களிடையே நிலவும் அனைத்து வகையான வேறு பாடுகளுக்கு முடிவு கட்டி, சமூக நீதி உணர்வையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும் வளர்க்க அவர் விரும்பினார்.
தனது கொள்கைளை நடைமுறைப்படுத்த, சென்னை ராஜதானி சங்கத்துடன் 1917- ஆம் ஆண்டில் பெரியார் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டார். பார்ப்பனல்லாதவர்களுக்கும் , சிறுபான்மை சமூக மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களையும் நோக்கில் இட ஒதுக்கீடு அளிக்கும் ஜாதி பிரதிநிதித்து வம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த சங்கம் வேண்டுகோள் வைத்துப் போராடியது.
தேசிய காங்கிர° கட்சியை மகாத்மா காந்தி
( 1869- 1948) வழி நடத்திச் சென்ற
1919- ஆம் ஆண்டில் பெரியார் காங்கிரசில் சேர்ந்தார். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அப்போது அவர் வகித்து வந்த
29 பொதுப் பதவிகளையும் அவர் துறந்தார். நல்ல லாபம் கிடைத்துக் கொண்டிருந்த தனது மளிகை மற்றும் விவசாயப் பொருள்கள் மொத்த வியாபாரத்தையும் கைவிட்டார்; அப்போதுதான் புதிய தாகத் தொடங்கப் பட்ட தனது நூற்பாலையையும்அவர் மூடிவிட்டார். காதி பயன்படுத்தும் பழக்கத்தை பரப்புவது, கள்ளுக்கடை மறியல் செய்வது அந்நிய நாட்டுத் துணி விற்கும் கடைகளைப் புறக்கணிப்பது, தீண்டாமையை ஒழிப்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களைப் பெரியார் முழுமனதுடன் ஏற்றுத் தீவிரமாகச் செயல்பட்டார்.
1921-இல் கள்ளுக் கடை மறியல் செய்ததற்காக அவர் ஈரோட்டில் சிறைத் தண்டனை பெற்றார். அவரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும இப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, பேராட்டத்தின் வேகம் கூடியது; ஏதேனும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டிய கட்டாய நிலை நிருவாகத்திற்கு ஏற்பட்டது.
திருப்பூரில்
1922-இல் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டி கூட்டத்தில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பிறப்பினால் மக்களிடையே வேறு பாடு காட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வர, அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் அனைத்துக் கோயிலுக்குள்ளும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். வேதம் மற்றும் இந்து சா°திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை எடுத்துக் காட்டி கமிட்டியில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, அது நிறைவேற்றப்பட இயலாமல் தடுத்து நிறுத்தினர். உயர் ஜாதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் இந்த எதிர்ப்புப் போக்கினால் ஆவேசம் அடைந்த பெரியார் மனுதர்ம சா°திரம், ராமாயணம் ஆகியவற்றைக் கொளுத்தப் போவதாக அறிவித்தார். மக்களின் சமூக, மத, கலாசார அம்சங்களைப் பற்றி இந்த புராண, சா°திரங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளத் தனது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இந்த அறிவிப்பை பெரியார் வெளியிட்டார்.
சமூகக் கலாசாரப்புரட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்ற பெரியாரின் உறுதியான முடிவு, தனது முன்னேற்றத் திட்டங்களை நடை முறைப் படுத்தியவர்கள் எதிரிகளாக இருந்தபோதும் அவர்களையும் ஆதரிக்கும் நிலைக்கு அவரை ஆளாக்கியது. இந்து கோயில்கள் மற்றும் மத அறக்கட்டனைகளின் நிருவாகத்தில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி, தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தி வந்த உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் நீதிக் கட்சி 1923-இல் இந்து மத அறக்கட்டளைக் குழுவை உருவாக்கியதை, ஒரு காங்கிர°காரராக இருந்த போதும் பெரியார் ஆதரித்ததன் காரணம் இதுதான்.
நவீன இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக வரலாற்றுப் புகழ் மிக்க வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்
(1924-25) பெரு வெற்றி பெற்றதற்கு பெரியார் ஆற்றிய பங்கு சற்றும் குறைந்ததல்ல. பொதுப் பாதைகளை தீண்டத்தகாத மக்கள் சுதந்திர மாக எந்த விதத் தடையுமின்றிப் பயன்படுத்தவும், அது போன்ற மற்ற சமத்துவம் நிறைந்த சமூக நடவடிக்கை களை மேற்கொள்ளவும் இப் போராட்டம் வழி வகுத்தது.
ஆங்கிலேய அரசாங்கம் நடத்தும் பள்ளிகளுக்கு ஒரு மாற்றாக தேசிய பயிற்சிப் பள்ளி ஒன்று தமிழ் நாட்டின் தென் பகுதியில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சேரன்மாதேவியில் தொடங்கப்பட்டது. குருகுலம் என்று அழைக்கப்பட்ட அந்த பள்ளியை தமிழ்நாடு காங்கிர° கமிட்டியும், இதர பார்ப்பனரல்லாத புரவலர்களும் இணைந்து தான் உருவாக்கினர். அதனை வி.வி.எ°. அய்யர் என்ற ஒரு பார்ப்பனர் நிருவகித்து வந்தார். அவரது நிருவாகத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களி டையே பாகுபாடு காட்டப்பட்டது. உணவு, தங்கும் இடம் மற்றும் பாடதிட்டம் போன்றவற்றில் மற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை விட மேலான முறையில் பார்ப்பன மாணவர்கள் நடத்தப்பட்டனர். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பெரியார் இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
வர்ண ஜாதி நடைமுறை ஒழிக்கப்படும்போது தான், உலக மக்கள் அனைவரும் அனைத்து உரிமை களையும் சமமாக அனுபவிப்பது என்ற கோட்பாடு நடைமுறையில் வெற்றிபெறும் என்று பெரியார் உறுதியாக நம்பினார். இவ்வாறு ஜாதிகள் அழிந்து, சமூகச் சீரமைப்பு ஏற்படும்வரை, சமூக நீதியை நிலைநாட்ட ஓர் ஆக்க பூர்வமான செயல்பாடாக ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் காரணமாக
1919- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டிக் கூட்டத்திலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சிகள் எந்த விதப் பயனையும் அளிக்கவில்லை; காங்கிர° கமிட்டி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதனால்
1925- நவம்பரில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின் போது பெரியார் காங்கிர° இயக்கத்தை விட்டு விலகினார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அமைப்பு முறைக்கு எதிராகப் போராடவும் மகாத்மா காந்தி தயாராக இல்லாத நிலையில், பெரியால் அவரை விட்டுப் பிரிந்து வர நேரிட்டது.
சுயமரியாதை இயக்கம்
நாட்டின் செல்வத்தையும் முன்னேற்றப் பயன்களையும் மக்களின் அனைத்துப்பிரிவினரும் சமமாக நுகரும் வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும், அரசாட்சியிலும் நிருவாகத்திலும் தங்களின் மக்கள்தொகைக் கேற்ற பிரதிநிதித்துவத்தை அனைத்து சமூக மக்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதும்தான் பெரியாரின் கோட்பாடாகும். பெரியாருக்கு முன்பும் வேறு பலரும், குறிப்பாக நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் இந்தச் சமூக நீதிக் கொள்கையை வலியுறுத்தி வந்தது. ஒரு ஆரோக்கியமான உலகக் கண்ணோட் டத்தைப் பெற்றிருக்க உதவும் வகையில் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள மக்களுக்குப் பகுத்தறிவுப் பார்வை தேவை என்று பெரியார் வலியுறுத்தியதுதான் அவரது மிகச் சிறந்த ஈடு இணையற்ற பங்களிப்பாகும். ஒரு புதுவகையான சமத்துவம் நிறைந்த சமூக அமைப்பை உருவாக்க முன்னோடியாக பிறப்பின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த, பாரம்பரியமான ஜாதி அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். வேறு சொற்களில் கூறுவதானால், வலிவுபெற்ற வளம் மிகுந்த ஒரு பொருளாதார நிலையையும் சுதந்திரமான அரசியல் அமைப்பையும் உருவாக்கும் முன், ஒரு பலம் பொருந்திய சமூகக் கலாசார அடித் தளம் போடப்படவேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
இந்த நிலையில்தான்,
1925-இல் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம், கேலிக்குரிய தீங்கிழைக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக் கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரம் ஒன்றினை இடைவிடாது மேற்கொண்டது. மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களை விழிப்புணர்வு பெறச் செய்ய அவர் விரும்பினார். அர்த்தமற்ற பிரிவினைகளுக்கும், நீதியற்ற பாகுபாடு ககளுக்கும் வழிவகுக்கும் மத அமைப்புகள் மற்றும் மதிப்பீடுகளை மாற்றத் தேவையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாறி வரும் காலத்தின் தேவைக் கேற்றபடி அவற்றை மாற்றிக் கொண்டு, இன்றைய சூழ்நிலையுடன் நடைபோட இயன்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பார்ப்பன புரோகிதர்களும், மதச் சடங்குகளும் அற்ற திருமணங்களைச் சுயமரியாதைக்காரர்கள் நடத்தினர். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் நிலவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஜாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்களை அவர்கள் ஊக்குவித்தனர்.
1920-ஆம் ஆண்டு வாக்கிலேயே பெரியார் குடும்பக் கட்டுப் பாட்டு திட்டத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரம் செய்து வந்தார். கோயில் தேவதாசி முறையினையும், குழந்தைத் திருமணத்தையும் சட்டப்படி ஒழிக்க அவர் ஆதரவு திரட்டினார். அப்போதிருந்த சென்னை ராஜதானி அரசின் பணி வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை
1928- இல் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு பெரியாரின் தொடர்ந்த தீவிரமான பிரச்சாரமே முக்கியக் காரணமாக அமைந்தது.
மாநாடு
சுயமரியாதை இயக்கம்
1925-இல் தொடங்கப் பட்டபோதும்,
1929- பிப்ரவரியில்தான் முதல் சுயமரியாதை இயக்க மாநல மாநாடு செங்கல்பட்டில் பெரியாரால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம் மாநாட்டிற்கு டபிள்யூ. பி. சவுந்தரபாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு எம்.ஆர்.ஜெயகர் தலைமை வகித்தார். விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிற்கு சர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். இம் மாநாடுகள் மக்களுக்கு ஆர்வத்தை அளித்தது மட்டுமன்றி, ஜாதி ஒழிப்பு, சமூக ஒருங்கி ணைப்பு, பெண்களுக்கு சமஉரிமைகள் வழங்குவது போன்றவை பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன.
வேதகால சனாதன தர்தமத்தின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வர்ண ஜாதி அமைப்பு முறை நீடிக்க வேண்டும் என்ற எந்த வித ஆர்வமும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு இல்லை என்பதால், இத்தகைய சமத்துவமற்ற சமூக அமைப்பை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்திய அரசை சம்மதிக்கச் செய்யவோ அல்லது நிர்பந்திக்கவோ இயலும் என்று பெரியாரும் அவரைப் பின்பற்றியவர்களும் கருதினர். அதன் காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் ஒரு மித நிலையையே கடை பிடித்து வந்தனர்.
சமூகக் கலாசார சமத்துவத்திற்குப் போராடுவது என்ற தனது முதல் செயல்திட்டத்துடன் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டத் தையும் பெரியார்
1930- ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் இணைத்துக் கொண்டார். காம்ரேட் எம். சிங்காரவேலு என்ற முன்னணிக் கம்யூனி°டுத் தலைவ ருடன் சேர்ந்து, மிகப் பெரிய முதலாளிகள், நிலச் சுவான்தார்கள் ஆகியோர் மக்களைச் சுரண்டி வாழ்வதற்கு எதிராகக் போராடுமாறு தொழிலாளர், விவசாயக் கூலிகள் அமைப்புகளைப் பெரியார் உருவாக்கினார். கம்யூனி°டு கட்சியையும், அதன் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளையும் தடை செய்ய மத்திய, மாநில அரசகள்
1930-ஆம் ஆண்டுகளின் இடையில் நடவடிக்கைகள் மேற்கொண்டன. சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளைத் தடுக்கவும் அவர்கள் தொடங்கினர். இந்த நேரத்தில் ஒரு முக்கியமான முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பெரியார் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தையும், தொழிலாளர் அமைப்புகளையும் நடத்திச் செல்ல பலர் உள்ளனர் என்பதை தனது அனுபவத்திலிருந்து பெரியார் அறிந்திருந்தார். பாரம்பரியமான மதக் கேடுகளை வெளிப்படுத்தவும், அதிகாரம் நிறைந்த மேல்ஜாதி பார்ப்பனரை எதிர்த்துப் போராடவும் வெகுசிலரே முன்வந்தனர். இந்தச் சூழ்நிலையில் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்களாக சமூகக் கலாசார நிலையில் பின்தங்கியிருந்த மக்களை முன்னேற்றம் பெறச் செய்யும் பணியை மேற்கொள்ள சுதந்திரமாக இருக்க வேண்டி தனது சமதர்மச் செயல்பாடுகளை பெரியார் குறைத்துக் கொண்டார்.
பெரியாரை மீண்டும் காங்கிர° கட்சிக்குக் கொண்டு வர ராஜாஜி என்றழைக்கப்பட்ட சி. ராஜ கோபாலச்சாரியின் தலைமையில்
1934-இல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது: ஆனால் அது வெற்றி பெறவில்லை. இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை வளர்ப்பது, முக்கியமான பெரிய பெரிய தொழிற் சாலைகள், வியாபார நிறுவனங்களின் செயல்பாடு களில் சமதர்மத்தை நடைமுறைப்படுத்தல், கடன்சுமை நிறைந்த விவசாயிகளின் துயர் துடைத்தல் போன்ற செயல்பாடுகள்கொண்ட ஒரு செயல்திட்டத்தைப் பெரியார் தயாரித்தார். அந்தச் செயல்திட்டத்தை நீதிக் கட்சிக்கும், அப்போது புகழ் பெற்று வளர்ந்து வந்த காங்கிர° கட்சிக்கும் பெரியார் அனுப்பி வைத்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கை காங்கிரசுக்கு ஏற்பு இல்லை என்பதால், அது அவரின் செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூக நீதியை நிலைநாட்டும் இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட பெரியாரின் கோரிக்கைகளில் பலவற்றையும் நீதிக் கட்சி ஏற்றுக் கொண்டதால், பெரியார் அதனைத் தொடர்ந்து ஆதரித்தார்.
ஒரு சிறிய கால இடைவெளி நீங்கலாக
1921- ஆம் ஆண்டு முதல்
1937 வரை சென்னை ராஜதானியில் ஆட்சி செய்து வந்த நீதிக் கட்சி தேர்தலில் காங்கிர° கட்சியிடம் தோல்வி அடைந்தது. ராஜகோபலாச்சாரி தலைமையில் அமைந்த காங்கிர° அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக அறிமுகப் படுத்தியது. இவ்வாறு இந்தி பேசாத மக்களை இரண்டாம் தரக் குடி மக்களாக ஆக்கும் இந்த முயற்சியை எதிர்த்தவர்கள் பெரியாரின் சீரிய தலைமையின் கீழ் ஒரு மாபெரும் போராட்டத்தைத் மேற்கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட
1200 பேருக்கும் மேலானவர்கள்
1938- இல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாழ்க்கையின் கடுமை காரணமாக அவர்களில் தாளமுத்து மற்றும் நடராசன் என்ற இரு தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்தப் போராட்டம் வேகம் பெற்றபோது, பெரியாருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனைஅளிக்கப் பட்டது. ஆனாலும் அவர் ஆறுமாத காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
1920 மற்றும்
1930 -க்கு இடைப் பட்ட காலத்தில் பெரியார் அய்ந்து முறை சிறை தண்டனை அடைந்துள்ளார்.
1938 நவம்பரில் சென்னையில் நடந்த பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ. ராமசாமியைப் பெரியார் என்று அழைப்பது என்ற தீர்மானம் ஒன்று நிறைவேற் றப்பட்டது.
பெரியார் சிறைவாசத்தில் இருந்தபோது,
1938 டிசம்பர்
29 அன்று நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதை எதிர்த்த பெரியாருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. ஆனால் அவர் ஆறுமாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னும் இந்திக்கு எதிரான போராட்டத்தைத் தான் தொடர்ந்து நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார்.
நீதிக்கட்சி
சிறையில் இருக்கையில் நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம். நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
1938 டிசம்பர்
29, 30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தனது மாநில மாநாட்டில் இவ்வாறு தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், தனது வாழ்நாள் தொடக்கம் முதல் இறுதி வரை மக்கள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போரடியவர் பெரியார். இப்போது அவரது இயக்கத்திற்கு ஒரு புதிய தோற்றத்தினை அவர் சேர்த்து, சுதந்திர திராவிட நாடு கோரிக்கையினை முன்வைத்தார். தங்களின் சமூக ஆதிக்கத்திற்காக மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த உயர்ஜாதி பார்ப்பனர்கள் வடஇந்திய முதலாளிகளான பனியாக்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியைத் திணிக்கவும், தென்னிந்திய மக்களைப் பொருளாதார ரீதியில் சுரண்டவும் செய்வதைக் கண்ட பெரியார்
1938-39 இல் திராவிட நாடு கோரிக்கையை எழுப்ப வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானார்.
திராவிடர்கள் என்று பெரியார் குறிப்பிட்டது, ஒரு இனத்தின் தொடர்புடைய ரத்தத் தூய்மையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பெரியார் திராவிட இனத்தைப் பார்த்தார். வேதங்கள், புராணங்கள், தர்ம சா°திரங்கள் போன்றவற்றில் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கலாசாரப் பாகுபாட்டுக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த உயர்ஜாதி பார்ப்பனர் ஆரியர்கள். சமத்துவ சமூக வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டவர்கள் திராவிடர்கள்.
1944 டிசம்பரில் உத்திரப் பிரதேச கான்பூரில் நடைபெற்ற பிற்படுததப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மாநாட்டில் பேசும் போது, தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்வதைக் கைவிட்டு தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் உள்ள பார்ப்பனல்லாத மக்களுக்குப் பெரியார் வேண்டுகோள் விடுத்ததை இங்கு நினைவு கூறவேண்டும்.
1939 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. காங்கிர° கட்சியின் தலைவரைக் கலந்தாலோசிக்காமலேயே இந்தியா வையும் போரில் ஆங்கிலேயர் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மற்றும் ஏழு மாகாணங்களில் ஆட்சியில் இருந்த காங்கிர° அமைச்சரவைகள் அக்டோபர்
29 அன்று பதவி விலகின. அப்போது எதிர்கட்சியான நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரை அரசு அமைக்கும் படி மாநில ஆளுநரும், கவர்னர் ஜெனரலும்
1940 மற்றும்
1942 ஆண்டுகளில் இருமுறை அழைத்தனர். தனிப்பட்ட முறையில் பெரியாரின் நண்பராக இருந்த காங்கிர°காரர் ராஜபோலாச்சாரியும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அரசு அமைக்க பெரியாருக்கு ஆலோசனை கூறியதுடன், நீதிக் கட்சி அரசுக்குத் தான் வெளியில் இருந்து ஆதரவு அளிப்ப தாகவும் கூறினார். ஆளுநர் மற்றும் அவரது ஆலோசகர்களின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் விரும்புவதாக ராஜாஜி விளக்கம் அளித்தார். ஆனால் இருமுறையும் ஆட்சி அமைக்க பெரியார் மறுத்துவிட்டார். முதலாவது, பொதுமக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெறாமல் ஆட்சி அமைப்பது சரியற்றது என்று பெரியார் கருதினார். இரண்டாவதாக, ஜாதி அமைப்பு முறையை ஒழிக்கும், மனிதநேயம் மிக்க பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் தனது முக்கியமான பணிக்கு, ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்வது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பெரியார் கருதினார்.
1940 ஜனவரி
5 அன்று பெரியார் பம்பாய் சென்றார். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் இருமுறை விருந்தளித்தார்.
1940 ஜனவரி 8-ந்தேதியன்று அவர்கள் மு°லிம் லீக் தலவர் ஜின்னாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தனி திராவிட நாட்டிற்காகப் பாடுபடும் தன் முடிவைப் பற்றி அப்போது பெரியார் அவரிடம் விளக்கினார்.
சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த ஆளுநரும் அவரது ஆலோசகர்களும் பள்ளிகளில் இருந்த கட்டாய பாடமான இந்தியை
1940 ஜனவரி 21 அன்று நீக்கி விட்டார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து மேற்கொண்ட பேராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பாராட்டி ஜின்னா பெரியாருக்குத் தந்தி ஒன்று அனுப்பினார்.
1921 முதல் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி
1937 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின், அதன் தலைவர்களில் பலரும் சோர்வடைந்திருந்தனர். அதனால் அவர்கள் செயல்படாமல் இருந்தனர். இத்தகைய நெருக்கடியான ஒரு நேரத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள பெரியார் சம்மதித்தார். சமூகத்தில் பின்தங்கியிருந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றும் அரசியல் கட்சி ஒன்று அவசியம் தேவை என்பதை பெரியார் உணர்ந்திருந்ததுதான் இதன் காரணம். அந்த நெருக்கடியான நேரத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் இருவர் பெரியாருக்குத் துணையாக உறுதியுடன் நின்றனர். சர். ஆர்.கே. ஷண்முகமும், ஏ.டி. பன்னீர்செல்வமும்தான் அந்த இரு தவைர்கள். அப்போது முன்னவர் கொச்சி சம°தானத்தின் திவானாக இருந்தார். பின்னர்
1947-இல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிஅமைச்சராக ஆனார். பின்னவர் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து, பின்னர் 1930-இல் சென்னை மாகாணத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர். ஆங்கில அரசின் உள்துறை அமைச்சரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக ஓமன் கடலுக்கு மேல் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் திரு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இத்தகைய திடீர் விபத்தினால் பன்னீர் செல்வம் உயிரிழந்தது தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பு என்று பெரியார் புலம்பினார்.
நீதிக்கட்சியின்
15-வது மாநில மாநாடு
1940 ஆக°ட் மாதத்தில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போதுதான், பின்னர் அறிஞர் அண்ணா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பட்ட சி (ன்ன காஞ்சிபுரம்) ந (டராஜன்) அண்ணா துரை கட்சியின் இணைச் செயலாளராக ஆனார். தனது ஈடுஇணையற்ற எழுத்தாற்றலாலும், பேச்சாற் றலாலும் அவர் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தார். பெரியாரின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்களைத் தனது கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களின் மூலம் பரப்புவதில் அவர் பெரும்பங்காற்றினார்.
1941 பிப்ரவரி மாதத்தில் புரட்சி ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் எம். என். ராய் சென்னைக்கு வந்து பெரியாரின் விருந்தினராகத் தங்கினார். காங்கிர° கட்சிக்கு எதிராக அனைத்திந்திய அளவில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்குவ தில் அவர் பெரியாரின் உதவியை நாடினார். பாசிச வாதியான முசோலனி, நாசிசவாதியான ஹிட்லர், இராணுவ வெறி கொண்ட டோஜோ ஆகியோரை விட ஆங்கில ஏகாதிபத்தியமே மேலானது என்று கருதிய இவருவரும் இங்கிலாந்து நாட்டின் போர் முயற்சிக ளுக்கு ஆதரவு அளித்தனர்.
தொடர்ந்து பெரியார் கோரி வந்ததின் விளைவாக, ரயில் நிலையங்களிலம் மற்ற உணவு விடுதிகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்படும் வழக்கம்
1941 மார்ச் மாதத்தில் ஒழிக்கப்பட்டது.
நீதிக்கட்சியில் இருந்த பிற்போக்கு மனம் கொண்ட ஒரு பிரிவினர் பெரியாரின் புரட்சிகரமான சமூக சீர்திருத்த திட்டங்களையும், மதஇலக்கியங்களை கடுமையாக விமர்சித்ததையும் பகுத்தறிவுக் கொள்கை களைப் பிரச்சாரம்செய்தததையும் விரும்பவில்லை. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாத பெரியார் தன்னைச் சுற்றி இளைஞர்க ளும் பொதுமக்களும் கொண்ட ஒரு பெரும் கூட்டத்தினைத் திரட்டிக் கொண்டு தன் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இந்த
1942-43 ஆம் ஆண்டு காலத்தில்தான் மணியம்மையார் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார்; அத்துடன் பெரியார் அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் அவர் கவனித்துக் கொண்டார். தன் தலைவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர் அவருக்கு மிகுந்த விசுவாசத்துடன்சேவை செய்தார். பின்னர்
1949-இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
1944 - 1973
1944 ஆக°ட்
27 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநில மாடு பெரியாரின் இயக்கத்தின் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது ஆங்கில ஆட்சியினால் அளிக்கப்பட்ட பதவிகள், பட்டங்கள்,அனைத்iயும் கைவிடும்படி அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தங்கள் பெயருக்குப் பின்னிருந்த ஜாதிப்பட்டங்களை யும் கூட கைவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர். இயக்கத்தின் உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடக்கூடாதென்பதும் முடிவு செய்யப்பட் டது. வேறு சொற்களில் கூறுவதானால், இது வரை ஓர் அரசியல் கட்சியாக இருந்த நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறி அரசியல் சார்பற்ற சமூகக் கலாசார இயக்கமாக ஆனது. இன்றும் கூட அது இவ்வாறுதான் உள்ளது.
இப்போது திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ள திரு வீரமணிக்கு 11 வயதாக இருக்கும்போது அவரை மேசை மீது நிற்கவைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க சேலம் மாநாட்டில் பேச வைக்க பெரியார் அனுமதித்தார். சுயமரியாதை இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று வீரமணியை பார்வையாளருக்கு அறிஞர் அண்ணா அறிமுகப் படுத்தினார். (ஆழ்ந்த பக்தி கொண்ட திருஞான சம்பந்தர் சைவப் புராணப்பாடல்கள் இயற்றியவர்.)
1944 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வாரம் முதல் ,
1945 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை பெரியார் வடஇந்தியப் பயணம் ஒன்று மேற்கொண்டார்.
1944 டிசம்பர்
27 அன்று கொல்கத்தா தீவிர ஜனநாயகக் கட்சி மாட்டில் பெரியார் பேசினார். அப்போது தனது நாத்தீகக் கருத்தின் ஆசான் என்று கூறி கூட்டத்தினருக்கு பெரியாரை எம்.என். ராய் அறிமுகப் படுத்தினார்.
3 : 2 என்ற் அளவில் கருப்புப் பின்னணியின் நடுவே சிவப்பு வட்டம் கொண்டதாக திராவிடர் கழகத்தின் கொடி
1946-இல் வடிவமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்து மத ஆதிக்கத்தின் கீழ் திராவிடர்கள் பட்ட இழிவுகளுக்கும், ஒடுக்கு முறைக்கும் அடையாளமாக கருப்பு விளங்கியது. மக்களிடையே இருக்கும் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் நீக்கவும், அனைத்து வகையான, குறிப்பாக சமூகக் கலாசாரச் சுரண்டல்களிலிருந்தும் அவர்களைக் காக்கவும், உறுதியான முயற்சிகள் மேற் கொள்வதைக் காட்டுவதாக சிவப்பு அமைந்திக்கிறது.
மதுரையில்
1946 மே மாதத்தில் கருஞ்சட்டைப் படை இருநாள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. பார்ப்பன இந்து சனாதனிகளின் தூண்டுதலால், மாநாடு நடந்த பந்தல் இரண்டாம் நாள் எரிக்கப்பட்டது. அதே ஆண்டு
9-ஆம் தேதியன்று,. இந்திய அரசமைப்புச் சட்ட மன்றம் அமைக்கப்பட்ட முறைக்கு எதிராகப் பெரியார் உறுதியாகக் குரல் எழுப்பினார்.
1947ஆக°ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததை பெரியார் துக்க தினமாக அறிவித்தார். பொருளாதாரச் சுரண்டல் மட்டுமன்றி, சமூகக் கலாசார ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன - பனியா கூட்டணியிடம் அரசு அதிகார மாற்றம் செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி என்று பெரியார் கருதியதுவே இதன் காரணம். ஆங்கிலேயர் ஆட்சியை விட இந்த ஆட்சி மிக மோசமானதாக இருக்கும் என்றுஅவர் கருதினார்.
1950-இல் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது, ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெரியார் இது போன்ற கருத்தையே கொண்டிருந்தார்.மகாத்மா காந்தியுடன் பெரியார் சில அடிப்படைச் செய்திகளில் கருத்து மாறுபட்டவ ராக இருந்தபோதும், இந்துத்வ மதவெறியர்களின் குண்டுக்கு காந்தி இரையான
1948 ஜனவரி
30 அன்று பெரியார் பெரிதும் வருந்தினார். இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் ஆலோசனை கூறினார்
1948 மார்ச் மாதத்தில் சென்னை மாகாண அரசு கருஞ்சட்டைப் படை தொண்டர்களுக்கு தடை விதித்தது. இதனால் திராவிடர் கழகத்துக்கு மேலும் பரவலான விளம்பரம் கிடைத்தது.அதன் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், அவர்களில் பெரும்பாலோர் கருஞ்சட்டை அணிந்து 1948 மே
8,9 தேதகளில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டனர்.
1948 ஜுன் மாதத்தில் மறுபடியும் பள்ளிகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரியார் அதற்கு எதிரான தனது போராட்டத்தை மறுபடியும் தொடங்கினார். தொடக்க கட்டத்தில் அதிகாரிகள் உறுதியாக இருந்து, இந்தப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும்., பொதுமக்களின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளான அவர்கள் கட்டாய இந்தி பாடத் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் மிக ஆழமாகவும், உறுதியாகவும் வேரூன்றியிருந்த சமூகக் கேடுகள் அனைத்தும் வர்ணஜாதி என்னும் ஜாதி நடைமுறையைக் பின் பற்றுவதையே மய்யமாகக் கொண்டவையாகும். சமத்துவமற்ற அடுக்கு முறை ஜாதி அமைப்புக்கு புனிதத் தன்மை அளிக்கும் இந்து மதக் கோட்பாட்டி லிருந்தும், அதனைப் பின்பற்றுவதிலிருந்தும் பிரிக்க முடியாத ஓர்அடிப்படை அம்சமாகவே இந்த ஜாதி அமைப்புமுறை அமைந்ததாகும். இந்த ஜாதி அமைப்பு முறையால் பயனடைபவர்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே; நியாயமற்ற சலுகைகள் மற்றும் பாரம்பரியமாகப்பெற்று வரும் அனுகூலங்கள்ஆகியவற்றின் மூலம் அவர்கள் அளப்பரிய செல்வத்தையும், மன ஆற்றலையும் பெற்றிருந்தனர். இத்தகைய சமூக நடைமுறையை முற்றிலும் மாற்றவேண்டும் என்று போராடுவோர் சமமற்ற ஒரு போரில் ஈடுபடவேண்டிய நிலையில் இருந்தனர். இந்தயாவில் நிலவும் சமூகக் கேடுகளை ஒழிக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் தனிப்பட்டவர்களும், இயக்கங்களும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் தங்கள் பாதையை விட்டு விலாகாமல் முழு ஈடுபாட்டுடனும்,தியாக உணர்வுடனும் செயல்படவேண்டும் என்பதைப் பெரியார் தனது பட்டறிவினாலும், தீவிர சிந்தனை யாலும் உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரம் பெற அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், தங்கள் நோக்கத்திற்காப் போராடும் ஆர்வத்தை அவர்கள் இழந்து விடுவார்கள் என்று பெரியார் கருதினார். ஆனால் அவரைப் பின்பற்றியவர்களில் பலரும் வேறுவிதக் கருத்து கொண்டிருந்தனர்; அரசியலில் ஈடுபட்டு அரசாட்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினர். பெரியாரிடமிருந்து பிரிந்து செல்லத் தேவையான ஒரு வாய்ப்பினை அவர்கள் எதிர் நோக்கியிருந்தனர். தனது
70-வது வயதில்
30 வயதான மணியம்மையை மணந்து கொண்டதன் மூலம் பெரியார் ஒரு மோசமான முன் உதாரணத்தை உருவாக்கி விட்டார் என்று கூறிக்கொண்டு அவர்கள்
1948 ஜுலை
9 அன்று திராவிடர் கழக்தை விட்டு வெளியேறினார்கள். பிரிந்து சென்ற அவர்கள் சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.
இதுபோன்று வேண்டுமென்றே வேறொரு நோக்கத்துடன் உணர்ச்சி பூர்வமாக எழுந்த எதிர்ப்பு களைப் பற்றி சிறிதும் சஞ்சலம் அடையாத பெரியார் விழிப்புணர்வு கொண்ட சமத்துவ சமூகம் ஒன்றை உருவாக்க இரட்டை மடங்கு வேகத்துடன் தொடர்ந்து செயலாற்றினார்.
1950 ஜனவரி
26 அன்று இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபின், வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு கல்வி நிறுவனச் சேர்க்கையிலும், அரசுப் பணி வாய்ப் பிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் சென்னை அரசின் சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றனர். வேறுபாடு காட்டக் கூடாது என்ற அடிப்படை உரிமை இதனால் மீறப்படுவதாக அவர்கள் கூறினர். நீதிமன்றங்களும் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, சமூக நீதியை வளர்க்கும் இட ஒதுக்கீட்டு முறை அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தன. இத் தீர்ப்பை எதிர்த்து பெரியார் பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் ஏற்பாடு செய்து நடத்தினார். நாளாக ஆக இந்தப் போராட்டம் தீவிர மடைந்தது. இதன் விளைவாக
1951-இல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான முதல் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி அரசமைப்பு சட்டத்தில் பிரிவு
15-இல் விதி 2 சேர்க்கப்பட்டது; “தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் அல்லத சமுக அளவிலும் கல்வி நிiயிலும் பின்தங்கியுள்ள இதரப் பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான சட்டங்கள் இயற்றுவதை இந்த விதியிலோ அலலது
29-ஆம் பிரிவின் 2-வது விதியிலோ கூறப்பட்டிருப்பது எதுவும் அரசுக்குத் தடையில்லை.”
1952 செப்டம்பார் 23 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப் பட்டது.
1953-இல் பெரியால் அறிவுறுத்தியபடி, மாநிலம் முழுவதிலும் புத்தர்தினம் கொண்டாடப் பட்டது. பகுத்தறிவு வழியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார் கற்றவர்களும், கல்வியறிவற்ற மக்களும் வழிபடும் எண்ணற்ற தெய்வங்களின் செயலற்ற தன்மையை எடுத்துக் காட்டும் முறையில் விநாயகர் சிலைகளை உடைத்தார்.
இதற்கிடையே
1952-54 ஆண்டுகளுக்கிடையே ராஜகோபாலாச்சாரி இரண்டாவது முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவிக்கு வந்தார். பள்ளிகளில் காலையில் மட்டுமே வகுப்புகள் நடத்தும் திட்டத்தை கொண்டு வந்த அவர், பிற்பகலில் தங்களின் பெற்றோரின் குலத்தொழிலை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல் கட்டமாக இத் திட்டம் மாநிலத்தின் கிராமப் புறப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது. சூத்திர, பஞ்சம ஜாதி மக்கள் கல்வி யறிவற்றவர்களாகவும், அரைகுறையாகப் படித்தவர் களாகவும் வைத்திருக்கும் தந்திரம் மிக்க ஒரு வழியே இத் திட்டம் என்பதை திராவிடத் தலைவர்கள் சரியாக மதிப்பிட்டனர். பல நூறு ஆண்டு காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின் அவர்களது பிள்ளைகள் இப்போதுதான் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலாச்சாரியாரின் இக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வி திட்டம் என்று கண்டனம் செய்த அவர்கள் இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்ற போராட்டத்தை பெரியார் தலைமையில் தொடங்கினார்கள். இதன் விளைவாக 1954 மார்ச் மாதத்தில் ராஜகோபலாச்சாரி முதல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.; ஏப்ரல்
14 அன்று காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அரைநாள் படிக்கும் கல்வித் திட்டத்தை காமராஜர் நீக்கினார். மாநிலத்தின் மூலை முடுக்களில் எல்லாம் மக்கள் கல்வி கற்கும் வசதிகளை அரசு விரிவுபடுத்தும் என்று பெரியாருக்கு அவர் உறுதி அளித்தார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் நிருவாகத்தில் வாய்ப்புகள் அளிக்கும் இட ஒதுக்கீட்டு முறையை நேர்மையுடன் நடைமுறைப் படுத்தவும் அவர் உறுதியளித்தார். காமராஜர் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றியதால், பெரியார் காமராஜருக்கு தடையின்றி ஆதரவு அளித்தார்.
1925 -இல் காங்கிரசை விட்டு விலகி
30 ஆண்டுகள் கழிந்த பின் பெரியார் காங்கிரசை ஆதரித்தார் என்ற போதிலும், அவர் அளித்த ஆதரவு தனிப்பட்ட காமராஜர் என்பவருக்காகத்தானே அன்றி காங்கிர° கட்சிக்காக அல்ல.
1954 நவம்பர் டிசம்பர் மாதங்களிலும்,
1955 ஜனவரியிலும் பெரியாரும் அவரின் மனைவி மணியம்மையாரும் பர்மா மலேசிய நாடுகளுக்குப் பிரச்சாரச் சுற்றுப் பயணம் சென்றனர். தற்போது மியான்மார் எனப்படும் பர்மாவில், புத்த மத நாடாடு ஒன்றில் கலந்து கொண்ட பெரியார், டாக்டர் பி. ஆர். அம்பேத்காருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
1956 டிசம்பர்
6 அன்று அம்பேத்கார் மரணமடை வதற்கு முன் இந்த இரு பெரியவர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டது இதுவே இறுதி முறாயகும். இந்தியாவில் நிலவும் சமூக மதப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தனர்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமிக்கு அஞ்சலி செலுத்த பெரியார்
1955 மார்ச்
28 அன்று தஞ்சாவூரில் இடுகாட்டுக்குச் சென்றார். அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் அழகிரி திராவிடர் கழகக் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்டவரும், பொறி பறக்கும் பேச்சாற்றல் கொண்டவரும் ஆவார்.
1949-ஆம் ஆண்டு இதே நாளில் அவர் உயிர் நீத்தார். சூத்திரர்களுக்குத் தனியாகப் புதைக்கும் இடம் உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அறிவிப்புப் பலகை அங்கிருப்பதைப் பெரியார் கண்டார். இவ்வாறு இறந்தபின் புதைக்கும், எரிக்கும் இடுகாட்டிலும் கூட வர்ணதர்மத்தைக் கடைபிடிப்பதை அறிவிக்கும் பலகை வைத்திருப்பதை ஆட்சேபித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக அந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டு, அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.
வர்ண தர்மம் காப்பாற்றப்படுவதன் அடையாளமாக ராமன் இருப்பதால், ராமனின் படத்தை எரிக்கும் போராட்டம் ஒன்றை திராவிடர் கழகம் 1956 ஆக°ட்
1 அன்று மேற்கொண்டது. அச் சமயம் பெரியார் தடுப்புக் காவலில் கைது செய்யப் பட்டார்.
1956 நவம்பர்
1 அன்று மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில உருவாக்கப்பட்டன; பெரியார் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.
சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தெரிவிப்பதற்காக பார்ப்பனர்கள் கொடுத்த யோசனைப்படி உணவு விடுதிகளில் பார்ப்பனர் உணவுவிடுதி என்ற பெயர்ப்பலகைகள் அக்கலாத்தில்இருந்தன. இவ்வாறு வர்ணதர்மத்தைக் குறிக்கும் செயலுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து,
1957 மே மாதம்
5-ந்தேதியன்று சென்னையில் உள்ள ஓர் உணவு விடுதியின் முன் ஓர் அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியது. தினமும் அங்கு சென்று போராடிய தொண்டர்கள் நாளொன்றுக்கு
10 பேர் வீதம் கைதாயினர்.
1958 மார்ச் 22 அன்று கழகத்தின் கோரிக்கை வெற்றி பெறும் வரை இது தொடர்ந்து நடந்தது.
1957 நவம்பர்
26 அன்று வர்ணஜாதி முறைக்குப் பாதுகாப்பு அளித்து உதவும் அரசமைப்பு சட்டப் பிரிவின் நகல்களைத் திராவிடர் கழகத்தின்
10,000 தொண்டர்கள் கொளுத்திப் போராட்டம் நடத்தினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்
3000-க்கும் மேற்பட்டோருக்கு 2 மாதம் முதல்
3 ஆண்டு வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
1957 டிசம்பர்
4 அன்று, காவல் துறை தினப் பதிவேடுகளில், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறை காட்ட தனது தொண்டர்களைத் தூண்டினார் என்று பெரியாரின் மீது குற்றம் சாட்டி பொய்யாகப் பதிவு செய்யப் பட்ட வழக்கில் பெரியாருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது; பெரியார் இக் குற்றச்சாட்டை மறுத்தார்.
ஜாதிநடைமுறையை ஆதரிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு நகல்களை எரித்ததற்காக சிறை தண்டனை பெற்ற ராமசாமி, வெள்ளைச்சாமி என்ற இரண்டு தொண்டர்கள் சிறையில் இருக்கும்போதே உயிர் நீத்தனர். அவர்களின் உடல்களை கழகத்தினரிடம் அளிக்க விரும்பாத சிறை அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி பெருமுயற்சியின் பேரில் அவற்றைப் பெற்ற மணியம்மையார் திருச்சியின் முக்கிய வீதிகளின் வழியே நடந்த ஒரு உணர்ச்சி வயப்பட்ட மாபெரும் ஊர்வலத்தில் அவற்றை எடுத்துச் சென்று உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தார். சிறை தண்டனையின் கடுமையினால், சிறைவாசம் செய்த
15 தொண்டர்கள் விடுதலை அடைந்தபின் உயிர் நீத்தனர்.
பெங்களூரில்
1959 ஜனவரியில் அரசு சார்பில் நடைபெற்ற அனைத்திந்திய மொழிகள் மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். ஜெனரல் கரியப்பா மற்றும் மேடப்பா ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலத்தை இந்திய அரசின் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டிய அவசியத்தைப் பெரியார் வலியுறுத்தினார். பிப்ரவரி மாதத்தில் வடஇந்திய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பெரியார், பகுத்தறிவு, சமூக நீதி, சுயமரியாதை வாழ்க்கை முறை ஆகிய கொள்கைகள் பற்றி பிரச்சாரம் செய்தார்.
ஜாதி நடைமுறையினை மத்திய அரசு பாதுகாத்து கடை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்திய வரை படத்தை எரிக்குமாறு
1960 ஜுன் மாதத்தில் பெரியார் மக்களைக் கேட்டுக் கொண்டார். இப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக
4000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.வளம் சேர்க்கும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு விட்டு இயக்கத்தின் முழுநேரத் தொண்டராகப் பணியாற்ற முன்வந்த இன்றையக் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை வரவேற்றுப் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் ஒரு சிறப்புக் கட்டுரையை
1962-இல் பெரியார் எழுதினார்.
முழு நேரக் கட்சிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து தமிழக முதல்வர் பதவியை விட்டு விலக காமராஜர் முன்வந்தபோது, இச்செயல் அவருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்று பெரியார் ஒரு தந்தியை காமராஜருக்கு அனுப்பினார். என்றாலும் காமராஜர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை; அதன் விளைவாக
1963 அக்டோபர்
3 அன்று எம். பக்தவத்சலம் முதல்வர் பொறுப்பேற்றார்.
சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்புக் கமிஷன் பரிந்துரைத்தபடி, இந்திய நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை யினைப் பரப்புவதைத் தடை செய்யும் சட்டம் ஒன்று
1963-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மிகத் தீவிரமாக இந்த சட்டத்தை எதிர்த்தார்.
நில உச்சவரம்பு நிர்ணயித்து தமிழ்நாடுஅரசு இயற்றிய சட்டத்திற்கு எதிராகத் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஏப்ரல்
1964-இல் மாநில மெங்கும் கண்டனக் கூட்டங்களைத் திராவிடர் கழகம் நடத்தியது.
இந்தித் திணிப்பிற்கு எதிராக
1965 ஜனவரி
25 முதல் பிப்ரவரி
15 வரை தமிழ் நாட்டில் கொழுந்து விட்டு எரிந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்; எந்த திசையில் போராடுவது என்ற நோக்கமின்றி நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்படாத இந்தப் போராட்டத்தைப் பெரியார் குறை கூறினார்.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்துத்வக் கோட்பாடினால் வெறியூட்டப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல்
1966 நவம்பர்
7 அன்று டில்லியில் இருந்த காமராஜர் வீட்டினை எரித்து அவரைக் கொலை செய்யவும் முயன்றனர். காட்டாண்டித்தனமாக இச் செயலைக் கண்டித்த பெரியார் அனைத்து வகைகளிலும் காமராஜரைக் காப்பாற்ற விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1957, 1962 மற்றும்
1967 பொதுத் தேர்தல்களிக்ல திராவிடர் கழகம் காங்கிர° கட்சியை ஆதரித்தது; 1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரியா எதிர்த்தார். ஆட்சி அமைத்தவுடன், அறிஞர் அண்ணா தனது அமைச்சர்கள் அனைவருடனும் திருச்சி சென்று தனது ஆசானான பெரியாருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று திமுக பெயர் மாற்றம் செய்தபோதும், சுயமரியதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று அறவித்தபோதும் பெரியார் மகிழ்ச்சி அடைந்தார்.
1967 வரை இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், சுயமரியாதைக் கொள்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய திருமணங்களை நடத்தி வந்தனர்.
1967-இல் பெரியார் வடஇந்தியச் சுற்றுப் பயணம் ஒன்று மேற்கொண்டு, ஜாதி முறையை ஒழிக்கப் பாடு படுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். லக்னோவில் அக்டோபர்
12, 13 தேதிகளில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மாநாடு ஒன்றில் பெரியார் பேசினார்.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் தன்னிகற்றத் தலைவராக விளங்கிய அறிஞர் அண்ணா
1969 பிப்ரவரி
3-ந்தேதி தனது
60-வது வயதில் காலமானார்.தன் முக்கியச் சீடர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இறந்தபோது பெரியார் மிகமிக வருந்தினார்.
வர்ண ஜாதியின் மூல காரணங்களில் ஒன்றான ஆகமக் கோயில்களில் பார்ப்பனர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது என்று கடைபிடிக்கப் பட்டு வந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஒரு போராட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகம் தனது செயல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்தது.
அனைத்துலக நாடுகளின் கல்வி, அறிவியல்,காலச்சார அமைப்பினால் பெரியாருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.
1970 ஜுன் மாதம்
27-ந்தேதி இந்த விருதை மத்தியக் கல்வி அமைச்சர் திரிகுணாசென் பெரியாரிடம் வழங்கினார். “புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீ°, சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள், இழிவான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் பகைவர்” என்று பெரியாரைப் பற்றி இந்த விருதில் புகழ்ந்து உரைக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே
1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
1971 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே
1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
1973 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
ஜாதி வேறுபாடின்றி தகுதி படைத்த அனைத்து ஜாதி மக்களையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ்நாடு அரச
1971-இல் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் குழப்பம் நிறைந்த தீர்ப்பு ஒன்றை
1972 மார்ச்
14 அன்று வழங்கியது. தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று கோரும் பிற்போக்காளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் இத் தீர்ப்புக்கு விளக்கம் அளித்தபோது, சமூக, மத மற்றும் கலாசாரத் துறை உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் சம மனித உரிமைகளுக்காகப் போராட மக்களை வேண்டி பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். இந்து மதம் என்றழைக்கப்படும் வேத, பார்ப்பன சனாதன தர்மத்தின்படி சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுடுத்தப்பட்ட திராவிட இன மக்களுக்கு ஏற்பட்ட இழிவை நீக்குவதற்கு இப் போராட்டம் தேவையானதாக இருந்தது.
1973 டிசம்பர் 8 , 9 தேதிகளில் சென்னையில் ஒரு மாநாடு நடத்த பெரியார் ஏற்பாடு செய்தார். தமிழரின் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு என்று அது அழைக்கப்பட்டது. கோயில்களின் கருவறையில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் நுழைவதற் சம உரிமைகளும் வாய்ப்புகளும் பெறப் போராடுவதற்காக கருவறை நுழைவுப் போராட்டம் என்ற ஒரு போராட்டத்தை மேற்கொள்ள இந்த மாநாடு முடிவு செய்தது. சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமூக நடைமுறையை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத நடவடிக்கையாக, பூஜாரிகள் நியமனம் மற்றும் இதர மதச் சடங்குகள்,சம்பிரதாயங்களில் பார்ப்பனர் பெற்றுள்ள ஆதிக்கத்தினையும், உரிமையற்ற சலுகைகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை விளக்க பெரியார் ஒரு பெரும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
கடவுளை மறுத்து, கடவுள் வழிபாட்டையும், பிரச்சாரத்தையும் எதிர்த்து 1967-இல் பெரியார் கூறிய புகழ்பெற்ற பொன்மொழிகளை பெரியாரின் சிலை மேடையில் பொறித்ததற்கு எதிரான வழக்கு ஒன்று அக்டோபர் 11அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
1973 டிசம்பர்
19 அன்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற தனது இறுதிக் கூட்டத்தில் சமூகச் சமத்துவத்தையும், தன்மானம் நிறைந்த வாழ்க்கை முறையையும் பெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள மக்களுக்கு ஆர்வமளிக்கும் பேரழைப்பு ஒன்றை பெரியர் விடுத்தார்.
பெரியாரின் வாழ்க்கை, வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, ஒரு புது யுகத்தின் தொடக்க மாக அமைந்ததாகும்.
நன்றி: பெரியார்.ஓஆர்ஜி
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்
( 1919- 25)
தங்களின் உடல், மன, ஒழுக்கத் திறன்களை அனைவரும் வளர்த்துக் கொள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே பெரியார் ஈ. வெ. ராமசாமி
( 17-9-1879 - 24-12-1973) அவர்களின் அடிப்படைத் தத்துவம். இந்த இலக்கை எட்ட, மக்களிடையே நிலவும் அனைத்து வகையான வேறு பாடுகளுக்கு முடிவு கட்டி, சமூக நீதி உணர்வையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும் வளர்க்க அவர் விரும்பினார்.
தனது கொள்கைளை நடைமுறைப்படுத்த, சென்னை ராஜதானி சங்கத்துடன் 1917- ஆம் ஆண்டில் பெரியார் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டார். பார்ப்பனல்லாதவர்களுக்கும் , சிறுபான்மை சமூக மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களையும் நோக்கில் இட ஒதுக்கீடு அளிக்கும் ஜாதி பிரதிநிதித்து வம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த சங்கம் வேண்டுகோள் வைத்துப் போராடியது.
தேசிய காங்கிர° கட்சியை மகாத்மா காந்தி
( 1869- 1948) வழி நடத்திச் சென்ற
1919- ஆம் ஆண்டில் பெரியார் காங்கிரசில் சேர்ந்தார். ஈரோடு நகராட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அப்போது அவர் வகித்து வந்த
29 பொதுப் பதவிகளையும் அவர் துறந்தார். நல்ல லாபம் கிடைத்துக் கொண்டிருந்த தனது மளிகை மற்றும் விவசாயப் பொருள்கள் மொத்த வியாபாரத்தையும் கைவிட்டார்; அப்போதுதான் புதிய தாகத் தொடங்கப் பட்ட தனது நூற்பாலையையும்அவர் மூடிவிட்டார். காதி பயன்படுத்தும் பழக்கத்தை பரப்புவது, கள்ளுக்கடை மறியல் செய்வது அந்நிய நாட்டுத் துணி விற்கும் கடைகளைப் புறக்கணிப்பது, தீண்டாமையை ஒழிப்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களைப் பெரியார் முழுமனதுடன் ஏற்றுத் தீவிரமாகச் செயல்பட்டார்.
1921-இல் கள்ளுக் கடை மறியல் செய்ததற்காக அவர் ஈரோட்டில் சிறைத் தண்டனை பெற்றார். அவரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும இப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, பேராட்டத்தின் வேகம் கூடியது; ஏதேனும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டிய கட்டாய நிலை நிருவாகத்திற்கு ஏற்பட்டது.
திருப்பூரில்
1922-இல் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டி கூட்டத்தில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பிறப்பினால் மக்களிடையே வேறு பாடு காட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வர, அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் அனைத்துக் கோயிலுக்குள்ளும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். வேதம் மற்றும் இந்து சா°திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை எடுத்துக் காட்டி கமிட்டியில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, அது நிறைவேற்றப்பட இயலாமல் தடுத்து நிறுத்தினர். உயர் ஜாதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் இந்த எதிர்ப்புப் போக்கினால் ஆவேசம் அடைந்த பெரியார் மனுதர்ம சா°திரம், ராமாயணம் ஆகியவற்றைக் கொளுத்தப் போவதாக அறிவித்தார். மக்களின் சமூக, மத, கலாசார அம்சங்களைப் பற்றி இந்த புராண, சா°திரங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளத் தனது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இந்த அறிவிப்பை பெரியார் வெளியிட்டார்.
சமூகக் கலாசாரப்புரட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்ற பெரியாரின் உறுதியான முடிவு, தனது முன்னேற்றத் திட்டங்களை நடை முறைப் படுத்தியவர்கள் எதிரிகளாக இருந்தபோதும் அவர்களையும் ஆதரிக்கும் நிலைக்கு அவரை ஆளாக்கியது. இந்து கோயில்கள் மற்றும் மத அறக்கட்டனைகளின் நிருவாகத்தில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி, தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தி வந்த உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் நீதிக் கட்சி 1923-இல் இந்து மத அறக்கட்டளைக் குழுவை உருவாக்கியதை, ஒரு காங்கிர°காரராக இருந்த போதும் பெரியார் ஆதரித்ததன் காரணம் இதுதான்.
நவீன இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக வரலாற்றுப் புகழ் மிக்க வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்
(1924-25) பெரு வெற்றி பெற்றதற்கு பெரியார் ஆற்றிய பங்கு சற்றும் குறைந்ததல்ல. பொதுப் பாதைகளை தீண்டத்தகாத மக்கள் சுதந்திர மாக எந்த விதத் தடையுமின்றிப் பயன்படுத்தவும், அது போன்ற மற்ற சமத்துவம் நிறைந்த சமூக நடவடிக்கை களை மேற்கொள்ளவும் இப் போராட்டம் வழி வகுத்தது.
ஆங்கிலேய அரசாங்கம் நடத்தும் பள்ளிகளுக்கு ஒரு மாற்றாக தேசிய பயிற்சிப் பள்ளி ஒன்று தமிழ் நாட்டின் தென் பகுதியில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சேரன்மாதேவியில் தொடங்கப்பட்டது. குருகுலம் என்று அழைக்கப்பட்ட அந்த பள்ளியை தமிழ்நாடு காங்கிர° கமிட்டியும், இதர பார்ப்பனரல்லாத புரவலர்களும் இணைந்து தான் உருவாக்கினர். அதனை வி.வி.எ°. அய்யர் என்ற ஒரு பார்ப்பனர் நிருவகித்து வந்தார். அவரது நிருவாகத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களி டையே பாகுபாடு காட்டப்பட்டது. உணவு, தங்கும் இடம் மற்றும் பாடதிட்டம் போன்றவற்றில் மற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை விட மேலான முறையில் பார்ப்பன மாணவர்கள் நடத்தப்பட்டனர். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பெரியார் இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
வர்ண ஜாதி நடைமுறை ஒழிக்கப்படும்போது தான், உலக மக்கள் அனைவரும் அனைத்து உரிமை களையும் சமமாக அனுபவிப்பது என்ற கோட்பாடு நடைமுறையில் வெற்றிபெறும் என்று பெரியார் உறுதியாக நம்பினார். இவ்வாறு ஜாதிகள் அழிந்து, சமூகச் சீரமைப்பு ஏற்படும்வரை, சமூக நீதியை நிலைநாட்ட ஓர் ஆக்க பூர்வமான செயல்பாடாக ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன் காரணமாக
1919- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த தமிழ்நாடு காங்கிர° கமிட்டிக் கூட்டத்திலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சிகள் எந்த விதப் பயனையும் அளிக்கவில்லை; காங்கிர° கமிட்டி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதனால்
1925- நவம்பரில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின் போது பெரியார் காங்கிர° இயக்கத்தை விட்டு விலகினார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அமைப்பு முறைக்கு எதிராகப் போராடவும் மகாத்மா காந்தி தயாராக இல்லாத நிலையில், பெரியால் அவரை விட்டுப் பிரிந்து வர நேரிட்டது.
சுயமரியாதை இயக்கம்
நாட்டின் செல்வத்தையும் முன்னேற்றப் பயன்களையும் மக்களின் அனைத்துப்பிரிவினரும் சமமாக நுகரும் வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும், அரசாட்சியிலும் நிருவாகத்திலும் தங்களின் மக்கள்தொகைக் கேற்ற பிரதிநிதித்துவத்தை அனைத்து சமூக மக்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதும்தான் பெரியாரின் கோட்பாடாகும். பெரியாருக்கு முன்பும் வேறு பலரும், குறிப்பாக நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் இந்தச் சமூக நீதிக் கொள்கையை வலியுறுத்தி வந்தது. ஒரு ஆரோக்கியமான உலகக் கண்ணோட் டத்தைப் பெற்றிருக்க உதவும் வகையில் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள மக்களுக்குப் பகுத்தறிவுப் பார்வை தேவை என்று பெரியார் வலியுறுத்தியதுதான் அவரது மிகச் சிறந்த ஈடு இணையற்ற பங்களிப்பாகும். ஒரு புதுவகையான சமத்துவம் நிறைந்த சமூக அமைப்பை உருவாக்க முன்னோடியாக பிறப்பின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த, பாரம்பரியமான ஜாதி அமைப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். வேறு சொற்களில் கூறுவதானால், வலிவுபெற்ற வளம் மிகுந்த ஒரு பொருளாதார நிலையையும் சுதந்திரமான அரசியல் அமைப்பையும் உருவாக்கும் முன், ஒரு பலம் பொருந்திய சமூகக் கலாசார அடித் தளம் போடப்படவேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
இந்த நிலையில்தான்,
1925-இல் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம், கேலிக்குரிய தீங்கிழைக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக் கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரம் ஒன்றினை இடைவிடாது மேற்கொண்டது. மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களை விழிப்புணர்வு பெறச் செய்ய அவர் விரும்பினார். அர்த்தமற்ற பிரிவினைகளுக்கும், நீதியற்ற பாகுபாடு ககளுக்கும் வழிவகுக்கும் மத அமைப்புகள் மற்றும் மதிப்பீடுகளை மாற்றத் தேவையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாறி வரும் காலத்தின் தேவைக் கேற்றபடி அவற்றை மாற்றிக் கொண்டு, இன்றைய சூழ்நிலையுடன் நடைபோட இயன்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பார்ப்பன புரோகிதர்களும், மதச் சடங்குகளும் அற்ற திருமணங்களைச் சுயமரியாதைக்காரர்கள் நடத்தினர். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவம் நிலவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஜாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்களை அவர்கள் ஊக்குவித்தனர்.
1920-ஆம் ஆண்டு வாக்கிலேயே பெரியார் குடும்பக் கட்டுப் பாட்டு திட்டத்தின் தேவையைப் பற்றி பிரச்சாரம் செய்து வந்தார். கோயில் தேவதாசி முறையினையும், குழந்தைத் திருமணத்தையும் சட்டப்படி ஒழிக்க அவர் ஆதரவு திரட்டினார். அப்போதிருந்த சென்னை ராஜதானி அரசின் பணி வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறை
1928- இல் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு பெரியாரின் தொடர்ந்த தீவிரமான பிரச்சாரமே முக்கியக் காரணமாக அமைந்தது.
மாநாடு
சுயமரியாதை இயக்கம்
1925-இல் தொடங்கப் பட்டபோதும்,
1929- பிப்ரவரியில்தான் முதல் சுயமரியாதை இயக்க மாநல மாநாடு செங்கல்பட்டில் பெரியாரால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம் மாநாட்டிற்கு டபிள்யூ. பி. சவுந்தரபாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு எம்.ஆர்.ஜெயகர் தலைமை வகித்தார். விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிற்கு சர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். இம் மாநாடுகள் மக்களுக்கு ஆர்வத்தை அளித்தது மட்டுமன்றி, ஜாதி ஒழிப்பு, சமூக ஒருங்கி ணைப்பு, பெண்களுக்கு சமஉரிமைகள் வழங்குவது போன்றவை பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன.
வேதகால சனாதன தர்தமத்தின் அடிப்படையில் அமைந்த, ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வர்ண ஜாதி அமைப்பு முறை நீடிக்க வேண்டும் என்ற எந்த வித ஆர்வமும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு இல்லை என்பதால், இத்தகைய சமத்துவமற்ற சமூக அமைப்பை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்திய அரசை சம்மதிக்கச் செய்யவோ அல்லது நிர்பந்திக்கவோ இயலும் என்று பெரியாரும் அவரைப் பின்பற்றியவர்களும் கருதினர். அதன் காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் ஒரு மித நிலையையே கடை பிடித்து வந்தனர்.
சமூகக் கலாசார சமத்துவத்திற்குப் போராடுவது என்ற தனது முதல் செயல்திட்டத்துடன் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டத் தையும் பெரியார்
1930- ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் இணைத்துக் கொண்டார். காம்ரேட் எம். சிங்காரவேலு என்ற முன்னணிக் கம்யூனி°டுத் தலைவ ருடன் சேர்ந்து, மிகப் பெரிய முதலாளிகள், நிலச் சுவான்தார்கள் ஆகியோர் மக்களைச் சுரண்டி வாழ்வதற்கு எதிராகக் போராடுமாறு தொழிலாளர், விவசாயக் கூலிகள் அமைப்புகளைப் பெரியார் உருவாக்கினார். கம்யூனி°டு கட்சியையும், அதன் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளையும் தடை செய்ய மத்திய, மாநில அரசகள்
1930-ஆம் ஆண்டுகளின் இடையில் நடவடிக்கைகள் மேற்கொண்டன. சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளைத் தடுக்கவும் அவர்கள் தொடங்கினர். இந்த நேரத்தில் ஒரு முக்கியமான முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பெரியார் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தையும், தொழிலாளர் அமைப்புகளையும் நடத்திச் செல்ல பலர் உள்ளனர் என்பதை தனது அனுபவத்திலிருந்து பெரியார் அறிந்திருந்தார். பாரம்பரியமான மதக் கேடுகளை வெளிப்படுத்தவும், அதிகாரம் நிறைந்த மேல்ஜாதி பார்ப்பனரை எதிர்த்துப் போராடவும் வெகுசிலரே முன்வந்தனர். இந்தச் சூழ்நிலையில் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்களாக சமூகக் கலாசார நிலையில் பின்தங்கியிருந்த மக்களை முன்னேற்றம் பெறச் செய்யும் பணியை மேற்கொள்ள சுதந்திரமாக இருக்க வேண்டி தனது சமதர்மச் செயல்பாடுகளை பெரியார் குறைத்துக் கொண்டார்.
பெரியாரை மீண்டும் காங்கிர° கட்சிக்குக் கொண்டு வர ராஜாஜி என்றழைக்கப்பட்ட சி. ராஜ கோபாலச்சாரியின் தலைமையில்
1934-இல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது: ஆனால் அது வெற்றி பெறவில்லை. இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை வளர்ப்பது, முக்கியமான பெரிய பெரிய தொழிற் சாலைகள், வியாபார நிறுவனங்களின் செயல்பாடு களில் சமதர்மத்தை நடைமுறைப்படுத்தல், கடன்சுமை நிறைந்த விவசாயிகளின் துயர் துடைத்தல் போன்ற செயல்பாடுகள்கொண்ட ஒரு செயல்திட்டத்தைப் பெரியார் தயாரித்தார். அந்தச் செயல்திட்டத்தை நீதிக் கட்சிக்கும், அப்போது புகழ் பெற்று வளர்ந்து வந்த காங்கிர° கட்சிக்கும் பெரியார் அனுப்பி வைத்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கை காங்கிரசுக்கு ஏற்பு இல்லை என்பதால், அது அவரின் செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூக நீதியை நிலைநாட்டும் இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட பெரியாரின் கோரிக்கைகளில் பலவற்றையும் நீதிக் கட்சி ஏற்றுக் கொண்டதால், பெரியார் அதனைத் தொடர்ந்து ஆதரித்தார்.
ஒரு சிறிய கால இடைவெளி நீங்கலாக
1921- ஆம் ஆண்டு முதல்
1937 வரை சென்னை ராஜதானியில் ஆட்சி செய்து வந்த நீதிக் கட்சி தேர்தலில் காங்கிர° கட்சியிடம் தோல்வி அடைந்தது. ராஜகோபலாச்சாரி தலைமையில் அமைந்த காங்கிர° அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக அறிமுகப் படுத்தியது. இவ்வாறு இந்தி பேசாத மக்களை இரண்டாம் தரக் குடி மக்களாக ஆக்கும் இந்த முயற்சியை எதிர்த்தவர்கள் பெரியாரின் சீரிய தலைமையின் கீழ் ஒரு மாபெரும் போராட்டத்தைத் மேற்கொண்டனர். பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட
1200 பேருக்கும் மேலானவர்கள்
1938- இல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாழ்க்கையின் கடுமை காரணமாக அவர்களில் தாளமுத்து மற்றும் நடராசன் என்ற இரு தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்தப் போராட்டம் வேகம் பெற்றபோது, பெரியாருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனைஅளிக்கப் பட்டது. ஆனாலும் அவர் ஆறுமாத காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
1920 மற்றும்
1930 -க்கு இடைப் பட்ட காலத்தில் பெரியார் அய்ந்து முறை சிறை தண்டனை அடைந்துள்ளார்.
1938 நவம்பரில் சென்னையில் நடந்த பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ. ராமசாமியைப் பெரியார் என்று அழைப்பது என்ற தீர்மானம் ஒன்று நிறைவேற் றப்பட்டது.
பெரியார் சிறைவாசத்தில் இருந்தபோது,
1938 டிசம்பர்
29 அன்று நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டதை எதிர்த்த பெரியாருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. ஆனால் அவர் ஆறுமாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னும் இந்திக்கு எதிரான போராட்டத்தைத் தான் தொடர்ந்து நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார்.
நீதிக்கட்சி
சிறையில் இருக்கையில் நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம். நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
1938 டிசம்பர்
29, 30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தனது மாநில மாநாட்டில் இவ்வாறு தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், தனது வாழ்நாள் தொடக்கம் முதல் இறுதி வரை மக்கள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போரடியவர் பெரியார். இப்போது அவரது இயக்கத்திற்கு ஒரு புதிய தோற்றத்தினை அவர் சேர்த்து, சுதந்திர திராவிட நாடு கோரிக்கையினை முன்வைத்தார். தங்களின் சமூக ஆதிக்கத்திற்காக மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த உயர்ஜாதி பார்ப்பனர்கள் வடஇந்திய முதலாளிகளான பனியாக்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியைத் திணிக்கவும், தென்னிந்திய மக்களைப் பொருளாதார ரீதியில் சுரண்டவும் செய்வதைக் கண்ட பெரியார்
1938-39 இல் திராவிட நாடு கோரிக்கையை எழுப்ப வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானார்.
திராவிடர்கள் என்று பெரியார் குறிப்பிட்டது, ஒரு இனத்தின் தொடர்புடைய ரத்தத் தூய்மையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பெரியார் திராவிட இனத்தைப் பார்த்தார். வேதங்கள், புராணங்கள், தர்ம சா°திரங்கள் போன்றவற்றில் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கலாசாரப் பாகுபாட்டுக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த உயர்ஜாதி பார்ப்பனர் ஆரியர்கள். சமத்துவ சமூக வாழ்க்கை முறை மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டவர்கள் திராவிடர்கள்.
1944 டிசம்பரில் உத்திரப் பிரதேச கான்பூரில் நடைபெற்ற பிற்படுததப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மாநாட்டில் பேசும் போது, தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்வதைக் கைவிட்டு தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் உள்ள பார்ப்பனல்லாத மக்களுக்குப் பெரியார் வேண்டுகோள் விடுத்ததை இங்கு நினைவு கூறவேண்டும்.
1939 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. காங்கிர° கட்சியின் தலைவரைக் கலந்தாலோசிக்காமலேயே இந்தியா வையும் போரில் ஆங்கிலேயர் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மற்றும் ஏழு மாகாணங்களில் ஆட்சியில் இருந்த காங்கிர° அமைச்சரவைகள் அக்டோபர்
29 அன்று பதவி விலகின. அப்போது எதிர்கட்சியான நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரை அரசு அமைக்கும் படி மாநில ஆளுநரும், கவர்னர் ஜெனரலும்
1940 மற்றும்
1942 ஆண்டுகளில் இருமுறை அழைத்தனர். தனிப்பட்ட முறையில் பெரியாரின் நண்பராக இருந்த காங்கிர°காரர் ராஜபோலாச்சாரியும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அரசு அமைக்க பெரியாருக்கு ஆலோசனை கூறியதுடன், நீதிக் கட்சி அரசுக்குத் தான் வெளியில் இருந்து ஆதரவு அளிப்ப தாகவும் கூறினார். ஆளுநர் மற்றும் அவரது ஆலோசகர்களின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் விரும்புவதாக ராஜாஜி விளக்கம் அளித்தார். ஆனால் இருமுறையும் ஆட்சி அமைக்க பெரியார் மறுத்துவிட்டார். முதலாவது, பொதுமக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெறாமல் ஆட்சி அமைப்பது சரியற்றது என்று பெரியார் கருதினார். இரண்டாவதாக, ஜாதி அமைப்பு முறையை ஒழிக்கும், மனிதநேயம் மிக்க பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் தனது முக்கியமான பணிக்கு, ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்வது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பெரியார் கருதினார்.
1940 ஜனவரி
5 அன்று பெரியார் பம்பாய் சென்றார். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் இருமுறை விருந்தளித்தார்.
1940 ஜனவரி 8-ந்தேதியன்று அவர்கள் மு°லிம் லீக் தலவர் ஜின்னாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தனி திராவிட நாட்டிற்காகப் பாடுபடும் தன் முடிவைப் பற்றி அப்போது பெரியார் அவரிடம் விளக்கினார்.
சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த ஆளுநரும் அவரது ஆலோசகர்களும் பள்ளிகளில் இருந்த கட்டாய பாடமான இந்தியை
1940 ஜனவரி 21 அன்று நீக்கி விட்டார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து மேற்கொண்ட பேராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பாராட்டி ஜின்னா பெரியாருக்குத் தந்தி ஒன்று அனுப்பினார்.
1921 முதல் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி
1937 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின், அதன் தலைவர்களில் பலரும் சோர்வடைந்திருந்தனர். அதனால் அவர்கள் செயல்படாமல் இருந்தனர். இத்தகைய நெருக்கடியான ஒரு நேரத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள பெரியார் சம்மதித்தார். சமூகத்தில் பின்தங்கியிருந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றும் அரசியல் கட்சி ஒன்று அவசியம் தேவை என்பதை பெரியார் உணர்ந்திருந்ததுதான் இதன் காரணம். அந்த நெருக்கடியான நேரத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் இருவர் பெரியாருக்குத் துணையாக உறுதியுடன் நின்றனர். சர். ஆர்.கே. ஷண்முகமும், ஏ.டி. பன்னீர்செல்வமும்தான் அந்த இரு தவைர்கள். அப்போது முன்னவர் கொச்சி சம°தானத்தின் திவானாக இருந்தார். பின்னர்
1947-இல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிஅமைச்சராக ஆனார். பின்னவர் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து, பின்னர் 1930-இல் சென்னை மாகாணத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர். ஆங்கில அரசின் உள்துறை அமைச்சரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக ஓமன் கடலுக்கு மேல் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் திரு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இத்தகைய திடீர் விபத்தினால் பன்னீர் செல்வம் உயிரிழந்தது தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பு என்று பெரியார் புலம்பினார்.
நீதிக்கட்சியின்
15-வது மாநில மாநாடு
1940 ஆக°ட் மாதத்தில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போதுதான், பின்னர் அறிஞர் அண்ணா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பட்ட சி (ன்ன காஞ்சிபுரம்) ந (டராஜன்) அண்ணா துரை கட்சியின் இணைச் செயலாளராக ஆனார். தனது ஈடுஇணையற்ற எழுத்தாற்றலாலும், பேச்சாற் றலாலும் அவர் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தார். பெரியாரின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல் திட்டங்களைத் தனது கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களின் மூலம் பரப்புவதில் அவர் பெரும்பங்காற்றினார்.
1941 பிப்ரவரி மாதத்தில் புரட்சி ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் எம். என். ராய் சென்னைக்கு வந்து பெரியாரின் விருந்தினராகத் தங்கினார். காங்கிர° கட்சிக்கு எதிராக அனைத்திந்திய அளவில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்குவ தில் அவர் பெரியாரின் உதவியை நாடினார். பாசிச வாதியான முசோலனி, நாசிசவாதியான ஹிட்லர், இராணுவ வெறி கொண்ட டோஜோ ஆகியோரை விட ஆங்கில ஏகாதிபத்தியமே மேலானது என்று கருதிய இவருவரும் இங்கிலாந்து நாட்டின் போர் முயற்சிக ளுக்கு ஆதரவு அளித்தனர்.
தொடர்ந்து பெரியார் கோரி வந்ததின் விளைவாக, ரயில் நிலையங்களிலம் மற்ற உணவு விடுதிகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்படும் வழக்கம்
1941 மார்ச் மாதத்தில் ஒழிக்கப்பட்டது.
நீதிக்கட்சியில் இருந்த பிற்போக்கு மனம் கொண்ட ஒரு பிரிவினர் பெரியாரின் புரட்சிகரமான சமூக சீர்திருத்த திட்டங்களையும், மதஇலக்கியங்களை கடுமையாக விமர்சித்ததையும் பகுத்தறிவுக் கொள்கை களைப் பிரச்சாரம்செய்தததையும் விரும்பவில்லை. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாத பெரியார் தன்னைச் சுற்றி இளைஞர்க ளும் பொதுமக்களும் கொண்ட ஒரு பெரும் கூட்டத்தினைத் திரட்டிக் கொண்டு தன் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இந்த
1942-43 ஆம் ஆண்டு காலத்தில்தான் மணியம்மையார் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார்; அத்துடன் பெரியார் அவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் அவர் கவனித்துக் கொண்டார். தன் தலைவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர் அவருக்கு மிகுந்த விசுவாசத்துடன்சேவை செய்தார். பின்னர்
1949-இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
1944 - 1973
1944 ஆக°ட்
27 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநில மாடு பெரியாரின் இயக்கத்தின் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது ஆங்கில ஆட்சியினால் அளிக்கப்பட்ட பதவிகள், பட்டங்கள்,அனைத்iயும் கைவிடும்படி அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தங்கள் பெயருக்குப் பின்னிருந்த ஜாதிப்பட்டங்களை யும் கூட கைவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர். இயக்கத்தின் உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடக்கூடாதென்பதும் முடிவு செய்யப்பட் டது. வேறு சொற்களில் கூறுவதானால், இது வரை ஓர் அரசியல் கட்சியாக இருந்த நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறி அரசியல் சார்பற்ற சமூகக் கலாசார இயக்கமாக ஆனது. இன்றும் கூட அது இவ்வாறுதான் உள்ளது.
இப்போது திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ள திரு வீரமணிக்கு 11 வயதாக இருக்கும்போது அவரை மேசை மீது நிற்கவைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க சேலம் மாநாட்டில் பேச வைக்க பெரியார் அனுமதித்தார். சுயமரியாதை இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று வீரமணியை பார்வையாளருக்கு அறிஞர் அண்ணா அறிமுகப் படுத்தினார். (ஆழ்ந்த பக்தி கொண்ட திருஞான சம்பந்தர் சைவப் புராணப்பாடல்கள் இயற்றியவர்.)
1944 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வாரம் முதல் ,
1945 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை பெரியார் வடஇந்தியப் பயணம் ஒன்று மேற்கொண்டார்.
1944 டிசம்பர்
27 அன்று கொல்கத்தா தீவிர ஜனநாயகக் கட்சி மாட்டில் பெரியார் பேசினார். அப்போது தனது நாத்தீகக் கருத்தின் ஆசான் என்று கூறி கூட்டத்தினருக்கு பெரியாரை எம்.என். ராய் அறிமுகப் படுத்தினார்.
3 : 2 என்ற் அளவில் கருப்புப் பின்னணியின் நடுவே சிவப்பு வட்டம் கொண்டதாக திராவிடர் கழகத்தின் கொடி
1946-இல் வடிவமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்து மத ஆதிக்கத்தின் கீழ் திராவிடர்கள் பட்ட இழிவுகளுக்கும், ஒடுக்கு முறைக்கும் அடையாளமாக கருப்பு விளங்கியது. மக்களிடையே இருக்கும் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் நீக்கவும், அனைத்து வகையான, குறிப்பாக சமூகக் கலாசாரச் சுரண்டல்களிலிருந்தும் அவர்களைக் காக்கவும், உறுதியான முயற்சிகள் மேற் கொள்வதைக் காட்டுவதாக சிவப்பு அமைந்திக்கிறது.
மதுரையில்
1946 மே மாதத்தில் கருஞ்சட்டைப் படை இருநாள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. பார்ப்பன இந்து சனாதனிகளின் தூண்டுதலால், மாநாடு நடந்த பந்தல் இரண்டாம் நாள் எரிக்கப்பட்டது. அதே ஆண்டு
9-ஆம் தேதியன்று,. இந்திய அரசமைப்புச் சட்ட மன்றம் அமைக்கப்பட்ட முறைக்கு எதிராகப் பெரியார் உறுதியாகக் குரல் எழுப்பினார்.
1947ஆக°ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததை பெரியார் துக்க தினமாக அறிவித்தார். பொருளாதாரச் சுரண்டல் மட்டுமன்றி, சமூகக் கலாசார ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன - பனியா கூட்டணியிடம் அரசு அதிகார மாற்றம் செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி என்று பெரியார் கருதியதுவே இதன் காரணம். ஆங்கிலேயர் ஆட்சியை விட இந்த ஆட்சி மிக மோசமானதாக இருக்கும் என்றுஅவர் கருதினார்.
1950-இல் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது, ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும் பெரியார் இது போன்ற கருத்தையே கொண்டிருந்தார்.மகாத்மா காந்தியுடன் பெரியார் சில அடிப்படைச் செய்திகளில் கருத்து மாறுபட்டவ ராக இருந்தபோதும், இந்துத்வ மதவெறியர்களின் குண்டுக்கு காந்தி இரையான
1948 ஜனவரி
30 அன்று பெரியார் பெரிதும் வருந்தினார். இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் ஆலோசனை கூறினார்
1948 மார்ச் மாதத்தில் சென்னை மாகாண அரசு கருஞ்சட்டைப் படை தொண்டர்களுக்கு தடை விதித்தது. இதனால் திராவிடர் கழகத்துக்கு மேலும் பரவலான விளம்பரம் கிடைத்தது.அதன் விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், அவர்களில் பெரும்பாலோர் கருஞ்சட்டை அணிந்து 1948 மே
8,9 தேதகளில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டனர்.
1948 ஜுன் மாதத்தில் மறுபடியும் பள்ளிகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரியார் அதற்கு எதிரான தனது போராட்டத்தை மறுபடியும் தொடங்கினார். தொடக்க கட்டத்தில் அதிகாரிகள் உறுதியாக இருந்து, இந்தப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும்., பொதுமக்களின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளான அவர்கள் கட்டாய இந்தி பாடத் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் மிக ஆழமாகவும், உறுதியாகவும் வேரூன்றியிருந்த சமூகக் கேடுகள் அனைத்தும் வர்ணஜாதி என்னும் ஜாதி நடைமுறையைக் பின் பற்றுவதையே மய்யமாகக் கொண்டவையாகும். சமத்துவமற்ற அடுக்கு முறை ஜாதி அமைப்புக்கு புனிதத் தன்மை அளிக்கும் இந்து மதக் கோட்பாட்டி லிருந்தும், அதனைப் பின்பற்றுவதிலிருந்தும் பிரிக்க முடியாத ஓர்அடிப்படை அம்சமாகவே இந்த ஜாதி அமைப்புமுறை அமைந்ததாகும். இந்த ஜாதி அமைப்பு முறையால் பயனடைபவர்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே; நியாயமற்ற சலுகைகள் மற்றும் பாரம்பரியமாகப்பெற்று வரும் அனுகூலங்கள்ஆகியவற்றின் மூலம் அவர்கள் அளப்பரிய செல்வத்தையும், மன ஆற்றலையும் பெற்றிருந்தனர். இத்தகைய சமூக நடைமுறையை முற்றிலும் மாற்றவேண்டும் என்று போராடுவோர் சமமற்ற ஒரு போரில் ஈடுபடவேண்டிய நிலையில் இருந்தனர். இந்தயாவில் நிலவும் சமூகக் கேடுகளை ஒழிக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் தனிப்பட்டவர்களும், இயக்கங்களும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் தங்கள் பாதையை விட்டு விலாகாமல் முழு ஈடுபாட்டுடனும்,தியாக உணர்வுடனும் செயல்படவேண்டும் என்பதைப் பெரியார் தனது பட்டறிவினாலும், தீவிர சிந்தனை யாலும் உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரம் பெற அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், தங்கள் நோக்கத்திற்காப் போராடும் ஆர்வத்தை அவர்கள் இழந்து விடுவார்கள் என்று பெரியார் கருதினார். ஆனால் அவரைப் பின்பற்றியவர்களில் பலரும் வேறுவிதக் கருத்து கொண்டிருந்தனர்; அரசியலில் ஈடுபட்டு அரசாட்சியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினர். பெரியாரிடமிருந்து பிரிந்து செல்லத் தேவையான ஒரு வாய்ப்பினை அவர்கள் எதிர் நோக்கியிருந்தனர். தனது
70-வது வயதில்
30 வயதான மணியம்மையை மணந்து கொண்டதன் மூலம் பெரியார் ஒரு மோசமான முன் உதாரணத்தை உருவாக்கி விட்டார் என்று கூறிக்கொண்டு அவர்கள்
1948 ஜுலை
9 அன்று திராவிடர் கழக்தை விட்டு வெளியேறினார்கள். பிரிந்து சென்ற அவர்கள் சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.
இதுபோன்று வேண்டுமென்றே வேறொரு நோக்கத்துடன் உணர்ச்சி பூர்வமாக எழுந்த எதிர்ப்பு களைப் பற்றி சிறிதும் சஞ்சலம் அடையாத பெரியார் விழிப்புணர்வு கொண்ட சமத்துவ சமூகம் ஒன்றை உருவாக்க இரட்டை மடங்கு வேகத்துடன் தொடர்ந்து செயலாற்றினார்.
1950 ஜனவரி
26 அன்று இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபின், வரலாற்று ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு கல்வி நிறுவனச் சேர்க்கையிலும், அரசுப் பணி வாய்ப் பிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் சென்னை அரசின் சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றனர். வேறுபாடு காட்டக் கூடாது என்ற அடிப்படை உரிமை இதனால் மீறப்படுவதாக அவர்கள் கூறினர். நீதிமன்றங்களும் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, சமூக நீதியை வளர்க்கும் இட ஒதுக்கீட்டு முறை அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தன. இத் தீர்ப்பை எதிர்த்து பெரியார் பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் ஏற்பாடு செய்து நடத்தினார். நாளாக ஆக இந்தப் போராட்டம் தீவிர மடைந்தது. இதன் விளைவாக
1951-இல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கான முதல் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி அரசமைப்பு சட்டத்தில் பிரிவு
15-இல் விதி 2 சேர்க்கப்பட்டது; “தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் அல்லத சமுக அளவிலும் கல்வி நிiயிலும் பின்தங்கியுள்ள இதரப் பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான சட்டங்கள் இயற்றுவதை இந்த விதியிலோ அலலது
29-ஆம் பிரிவின் 2-வது விதியிலோ கூறப்பட்டிருப்பது எதுவும் அரசுக்குத் தடையில்லை.”
1952 செப்டம்பார் 23 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப் பட்டது.
1953-இல் பெரியால் அறிவுறுத்தியபடி, மாநிலம் முழுவதிலும் புத்தர்தினம் கொண்டாடப் பட்டது. பகுத்தறிவு வழியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார் கற்றவர்களும், கல்வியறிவற்ற மக்களும் வழிபடும் எண்ணற்ற தெய்வங்களின் செயலற்ற தன்மையை எடுத்துக் காட்டும் முறையில் விநாயகர் சிலைகளை உடைத்தார்.
இதற்கிடையே
1952-54 ஆண்டுகளுக்கிடையே ராஜகோபாலாச்சாரி இரண்டாவது முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவிக்கு வந்தார். பள்ளிகளில் காலையில் மட்டுமே வகுப்புகள் நடத்தும் திட்டத்தை கொண்டு வந்த அவர், பிற்பகலில் தங்களின் பெற்றோரின் குலத்தொழிலை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல் கட்டமாக இத் திட்டம் மாநிலத்தின் கிராமப் புறப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது. சூத்திர, பஞ்சம ஜாதி மக்கள் கல்வி யறிவற்றவர்களாகவும், அரைகுறையாகப் படித்தவர் களாகவும் வைத்திருக்கும் தந்திரம் மிக்க ஒரு வழியே இத் திட்டம் என்பதை திராவிடத் தலைவர்கள் சரியாக மதிப்பிட்டனர். பல நூறு ஆண்டு காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின் அவர்களது பிள்ளைகள் இப்போதுதான் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ராஜகோபாலாச்சாரியாரின் இக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வி திட்டம் என்று கண்டனம் செய்த அவர்கள் இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்ற போராட்டத்தை பெரியார் தலைமையில் தொடங்கினார்கள். இதன் விளைவாக 1954 மார்ச் மாதத்தில் ராஜகோபலாச்சாரி முதல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.; ஏப்ரல்
14 அன்று காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அரைநாள் படிக்கும் கல்வித் திட்டத்தை காமராஜர் நீக்கினார். மாநிலத்தின் மூலை முடுக்களில் எல்லாம் மக்கள் கல்வி கற்கும் வசதிகளை அரசு விரிவுபடுத்தும் என்று பெரியாருக்கு அவர் உறுதி அளித்தார். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் நிருவாகத்தில் வாய்ப்புகள் அளிக்கும் இட ஒதுக்கீட்டு முறையை நேர்மையுடன் நடைமுறைப் படுத்தவும் அவர் உறுதியளித்தார். காமராஜர் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றியதால், பெரியார் காமராஜருக்கு தடையின்றி ஆதரவு அளித்தார்.
1925 -இல் காங்கிரசை விட்டு விலகி
30 ஆண்டுகள் கழிந்த பின் பெரியார் காங்கிரசை ஆதரித்தார் என்ற போதிலும், அவர் அளித்த ஆதரவு தனிப்பட்ட காமராஜர் என்பவருக்காகத்தானே அன்றி காங்கிர° கட்சிக்காக அல்ல.
1954 நவம்பர் டிசம்பர் மாதங்களிலும்,
1955 ஜனவரியிலும் பெரியாரும் அவரின் மனைவி மணியம்மையாரும் பர்மா மலேசிய நாடுகளுக்குப் பிரச்சாரச் சுற்றுப் பயணம் சென்றனர். தற்போது மியான்மார் எனப்படும் பர்மாவில், புத்த மத நாடாடு ஒன்றில் கலந்து கொண்ட பெரியார், டாக்டர் பி. ஆர். அம்பேத்காருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
1956 டிசம்பர்
6 அன்று அம்பேத்கார் மரணமடை வதற்கு முன் இந்த இரு பெரியவர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டது இதுவே இறுதி முறாயகும். இந்தியாவில் நிலவும் சமூக மதப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தனர்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமிக்கு அஞ்சலி செலுத்த பெரியார்
1955 மார்ச்
28 அன்று தஞ்சாவூரில் இடுகாட்டுக்குச் சென்றார். அஞ்சா நெஞ்சன் என்றழைக்கப்படும் அழகிரி திராவிடர் கழகக் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்டவரும், பொறி பறக்கும் பேச்சாற்றல் கொண்டவரும் ஆவார்.
1949-ஆம் ஆண்டு இதே நாளில் அவர் உயிர் நீத்தார். சூத்திரர்களுக்குத் தனியாகப் புதைக்கும் இடம் உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அறிவிப்புப் பலகை அங்கிருப்பதைப் பெரியார் கண்டார். இவ்வாறு இறந்தபின் புதைக்கும், எரிக்கும் இடுகாட்டிலும் கூட வர்ணதர்மத்தைக் கடைபிடிப்பதை அறிவிக்கும் பலகை வைத்திருப்பதை ஆட்சேபித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக அந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டு, அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.
வர்ண தர்மம் காப்பாற்றப்படுவதன் அடையாளமாக ராமன் இருப்பதால், ராமனின் படத்தை எரிக்கும் போராட்டம் ஒன்றை திராவிடர் கழகம் 1956 ஆக°ட்
1 அன்று மேற்கொண்டது. அச் சமயம் பெரியார் தடுப்புக் காவலில் கைது செய்யப் பட்டார்.
1956 நவம்பர்
1 அன்று மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில உருவாக்கப்பட்டன; பெரியார் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.
சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தெரிவிப்பதற்காக பார்ப்பனர்கள் கொடுத்த யோசனைப்படி உணவு விடுதிகளில் பார்ப்பனர் உணவுவிடுதி என்ற பெயர்ப்பலகைகள் அக்கலாத்தில்இருந்தன. இவ்வாறு வர்ணதர்மத்தைக் குறிக்கும் செயலுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து,
1957 மே மாதம்
5-ந்தேதியன்று சென்னையில் உள்ள ஓர் உணவு விடுதியின் முன் ஓர் அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியது. தினமும் அங்கு சென்று போராடிய தொண்டர்கள் நாளொன்றுக்கு
10 பேர் வீதம் கைதாயினர்.
1958 மார்ச் 22 அன்று கழகத்தின் கோரிக்கை வெற்றி பெறும் வரை இது தொடர்ந்து நடந்தது.
1957 நவம்பர்
26 அன்று வர்ணஜாதி முறைக்குப் பாதுகாப்பு அளித்து உதவும் அரசமைப்பு சட்டப் பிரிவின் நகல்களைத் திராவிடர் கழகத்தின்
10,000 தொண்டர்கள் கொளுத்திப் போராட்டம் நடத்தினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்
3000-க்கும் மேற்பட்டோருக்கு 2 மாதம் முதல்
3 ஆண்டு வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
1957 டிசம்பர்
4 அன்று, காவல் துறை தினப் பதிவேடுகளில், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறை காட்ட தனது தொண்டர்களைத் தூண்டினார் என்று பெரியாரின் மீது குற்றம் சாட்டி பொய்யாகப் பதிவு செய்யப் பட்ட வழக்கில் பெரியாருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது; பெரியார் இக் குற்றச்சாட்டை மறுத்தார்.
ஜாதிநடைமுறையை ஆதரிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு நகல்களை எரித்ததற்காக சிறை தண்டனை பெற்ற ராமசாமி, வெள்ளைச்சாமி என்ற இரண்டு தொண்டர்கள் சிறையில் இருக்கும்போதே உயிர் நீத்தனர். அவர்களின் உடல்களை கழகத்தினரிடம் அளிக்க விரும்பாத சிறை அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி பெருமுயற்சியின் பேரில் அவற்றைப் பெற்ற மணியம்மையார் திருச்சியின் முக்கிய வீதிகளின் வழியே நடந்த ஒரு உணர்ச்சி வயப்பட்ட மாபெரும் ஊர்வலத்தில் அவற்றை எடுத்துச் சென்று உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தார். சிறை தண்டனையின் கடுமையினால், சிறைவாசம் செய்த
15 தொண்டர்கள் விடுதலை அடைந்தபின் உயிர் நீத்தனர்.
பெங்களூரில்
1959 ஜனவரியில் அரசு சார்பில் நடைபெற்ற அனைத்திந்திய மொழிகள் மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். ஜெனரல் கரியப்பா மற்றும் மேடப்பா ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலத்தை இந்திய அரசின் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டிய அவசியத்தைப் பெரியார் வலியுறுத்தினார். பிப்ரவரி மாதத்தில் வடஇந்திய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பெரியார், பகுத்தறிவு, சமூக நீதி, சுயமரியாதை வாழ்க்கை முறை ஆகிய கொள்கைகள் பற்றி பிரச்சாரம் செய்தார்.
ஜாதி நடைமுறையினை மத்திய அரசு பாதுகாத்து கடை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்திய வரை படத்தை எரிக்குமாறு
1960 ஜுன் மாதத்தில் பெரியார் மக்களைக் கேட்டுக் கொண்டார். இப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக
4000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.வளம் சேர்க்கும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு விட்டு இயக்கத்தின் முழுநேரத் தொண்டராகப் பணியாற்ற முன்வந்த இன்றையக் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை வரவேற்றுப் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் ஒரு சிறப்புக் கட்டுரையை
1962-இல் பெரியார் எழுதினார்.
முழு நேரக் கட்சிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து தமிழக முதல்வர் பதவியை விட்டு விலக காமராஜர் முன்வந்தபோது, இச்செயல் அவருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்று பெரியார் ஒரு தந்தியை காமராஜருக்கு அனுப்பினார். என்றாலும் காமராஜர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை; அதன் விளைவாக
1963 அக்டோபர்
3 அன்று எம். பக்தவத்சலம் முதல்வர் பொறுப்பேற்றார்.
சர். சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்புக் கமிஷன் பரிந்துரைத்தபடி, இந்திய நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் கோரிக்கை யினைப் பரப்புவதைத் தடை செய்யும் சட்டம் ஒன்று
1963-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மிகத் தீவிரமாக இந்த சட்டத்தை எதிர்த்தார்.
நில உச்சவரம்பு நிர்ணயித்து தமிழ்நாடுஅரசு இயற்றிய சட்டத்திற்கு எதிராகத் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஏப்ரல்
1964-இல் மாநில மெங்கும் கண்டனக் கூட்டங்களைத் திராவிடர் கழகம் நடத்தியது.
இந்தித் திணிப்பிற்கு எதிராக
1965 ஜனவரி
25 முதல் பிப்ரவரி
15 வரை தமிழ் நாட்டில் கொழுந்து விட்டு எரிந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்; எந்த திசையில் போராடுவது என்ற நோக்கமின்றி நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்படாத இந்தப் போராட்டத்தைப் பெரியார் குறை கூறினார்.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்துத்வக் கோட்பாடினால் வெறியூட்டப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல்
1966 நவம்பர்
7 அன்று டில்லியில் இருந்த காமராஜர் வீட்டினை எரித்து அவரைக் கொலை செய்யவும் முயன்றனர். காட்டாண்டித்தனமாக இச் செயலைக் கண்டித்த பெரியார் அனைத்து வகைகளிலும் காமராஜரைக் காப்பாற்ற விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1957, 1962 மற்றும்
1967 பொதுத் தேர்தல்களிக்ல திராவிடர் கழகம் காங்கிர° கட்சியை ஆதரித்தது; 1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரியா எதிர்த்தார். ஆட்சி அமைத்தவுடன், அறிஞர் அண்ணா தனது அமைச்சர்கள் அனைவருடனும் திருச்சி சென்று தனது ஆசானான பெரியாருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று திமுக பெயர் மாற்றம் செய்தபோதும், சுயமரியதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று அறவித்தபோதும் பெரியார் மகிழ்ச்சி அடைந்தார்.
1967 வரை இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், சுயமரியாதைக் கொள்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய திருமணங்களை நடத்தி வந்தனர்.
1967-இல் பெரியார் வடஇந்தியச் சுற்றுப் பயணம் ஒன்று மேற்கொண்டு, ஜாதி முறையை ஒழிக்கப் பாடு படுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். லக்னோவில் அக்டோபர்
12, 13 தேதிகளில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மாநாடு ஒன்றில் பெரியார் பேசினார்.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் தன்னிகற்றத் தலைவராக விளங்கிய அறிஞர் அண்ணா
1969 பிப்ரவரி
3-ந்தேதி தனது
60-வது வயதில் காலமானார்.தன் முக்கியச் சீடர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா இறந்தபோது பெரியார் மிகமிக வருந்தினார்.
வர்ண ஜாதியின் மூல காரணங்களில் ஒன்றான ஆகமக் கோயில்களில் பார்ப்பனர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது என்று கடைபிடிக்கப் பட்டு வந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஒரு போராட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகம் தனது செயல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்தது.
அனைத்துலக நாடுகளின் கல்வி, அறிவியல்,காலச்சார அமைப்பினால் பெரியாருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.
1970 ஜுன் மாதம்
27-ந்தேதி இந்த விருதை மத்தியக் கல்வி அமைச்சர் திரிகுணாசென் பெரியாரிடம் வழங்கினார். “புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீ°, சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள், இழிவான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் பகைவர்” என்று பெரியாரைப் பற்றி இந்த விருதில் புகழ்ந்து உரைக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே
1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
1971 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
உண்மை என்ற தமிழ் மாத இதழையும் (தற்போது இது மாதமிரு இதழாக வெளிவருகிறது) மாடர்ன் ரேஷனலி°ட் என்ற ஆங்கில மாத இதழையும பெரியார் முறையே
1970 மற்றும்
1971 ஆம் ஆண்டுகளில் தொடங்கினார். பகுத்தறிவு மனிதநேயக் கொள்கைகளைத் பரவலாகப் பரப்பும் நோக்கத்துடன் இப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ராமாயணத் தைப் பற்றி பெரியார் எழுதிய நூலின் இந்தி மொழி பெயர்ப்புக்கு அரசு விதித்திருந்த தடையை அலகாபாத் உயர்நீதி மன்றம்
1971-இல் நீக்கியது. சென்னை காங்கிர° அரசினால் தடை செய்யப்பட்டி ருந்த ராவண காவியம் என்ற நூலுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும்
1971-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த ஜாதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, தகுதி படைத்த அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்கான சட்டம் ஒன்றை திமுக அரசு
1971 ஜனவரி
12 அன்று நிறைவேற்றியது. மூடநம்பிக்கை ஒழிப்பு மாபெரும் பேரணி ஒன்று சேலத்தில் ஜனவரி
23 அன்று நடத்தப்பட்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப் பட்ட கடவுள்களின் உண்மையான உருவங்களைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் பேரணியினர் எடுத்துச் சென்றனர். இவற்றைப் பார்த்த சகிப்புத் தன்மை அற்ற சனாதனிகள் சிலர் கூட்டத்தினர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். ஆழ்ந்த தவத்தில் இருந்த சூத்திரன் சம்புகன் தலையை வெட்டிக் கொன்ற ராமனின் படத்தை அடிப்பதற்கு பேரணியிர் அந்த செருப்புகளையே பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் தொண்டர் களின் இச்செயல் செய்தித் துறையினால் அளவுக்கு அதிகமாக பெரிதுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. பேரணியினர் எடுத்துச் சென்ற ஆண், பெண் கடவுள்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
1973 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்த நிகழ்ச்சி திமுக காங்கிர° கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டது. என்றாலும் இரு கட்சிகளும் பெருவெற்றி பெற்றன; திமுக தமிழ்நாடு சட்டமன்றத்திலும், காங்கிர° மத்தியிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிஅமைத்தன.
ஜாதி வேறுபாடின்றி தகுதி படைத்த அனைத்து ஜாதி மக்களையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ்நாடு அரச
1971-இல் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் குழப்பம் நிறைந்த தீர்ப்பு ஒன்றை
1972 மார்ச்
14 அன்று வழங்கியது. தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று கோரும் பிற்போக்காளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் இத் தீர்ப்புக்கு விளக்கம் அளித்தபோது, சமூக, மத மற்றும் கலாசாரத் துறை உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் சம மனித உரிமைகளுக்காகப் போராட மக்களை வேண்டி பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். இந்து மதம் என்றழைக்கப்படும் வேத, பார்ப்பன சனாதன தர்மத்தின்படி சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுடுத்தப்பட்ட திராவிட இன மக்களுக்கு ஏற்பட்ட இழிவை நீக்குவதற்கு இப் போராட்டம் தேவையானதாக இருந்தது.
1973 டிசம்பர் 8 , 9 தேதிகளில் சென்னையில் ஒரு மாநாடு நடத்த பெரியார் ஏற்பாடு செய்தார். தமிழரின் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு என்று அது அழைக்கப்பட்டது. கோயில்களின் கருவறையில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் நுழைவதற் சம உரிமைகளும் வாய்ப்புகளும் பெறப் போராடுவதற்காக கருவறை நுழைவுப் போராட்டம் என்ற ஒரு போராட்டத்தை மேற்கொள்ள இந்த மாநாடு முடிவு செய்தது. சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமூக நடைமுறையை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத நடவடிக்கையாக, பூஜாரிகள் நியமனம் மற்றும் இதர மதச் சடங்குகள்,சம்பிரதாயங்களில் பார்ப்பனர் பெற்றுள்ள ஆதிக்கத்தினையும், உரிமையற்ற சலுகைகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை விளக்க பெரியார் ஒரு பெரும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
கடவுளை மறுத்து, கடவுள் வழிபாட்டையும், பிரச்சாரத்தையும் எதிர்த்து 1967-இல் பெரியார் கூறிய புகழ்பெற்ற பொன்மொழிகளை பெரியாரின் சிலை மேடையில் பொறித்ததற்கு எதிரான வழக்கு ஒன்று அக்டோபர் 11அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
1973 டிசம்பர்
19 அன்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற தனது இறுதிக் கூட்டத்தில் சமூகச் சமத்துவத்தையும், தன்மானம் நிறைந்த வாழ்க்கை முறையையும் பெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள மக்களுக்கு ஆர்வமளிக்கும் பேரழைப்பு ஒன்றை பெரியர் விடுத்தார்.
பெரியாரின் வாழ்க்கை, வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, ஒரு புது யுகத்தின் தொடக்க மாக அமைந்ததாகும்.
நன்றி: பெரியார்.ஓஆர்ஜி
Subscribe to:
Posts (Atom)