வெறிநாய்கள் ஜாக்கிரதை !

ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பா¢சோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய், களலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி!
கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது.
முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர்.
நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது.
நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன.
மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV)
ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV)
திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன.
கடிபடுவதற்கு முன்பே, எச்சா¢க்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை.
நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும்.
உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று.
காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீ¡¢ல் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும்.
அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும்.
எ¡¢ச்சல் உண்டக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது.
கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது.
மருத்துவரை உடனே அனுகவும்.
முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை,
www.attur.com

UAE (அமீரக) நாய் இதுதான்


நான் பேச நினைப்பதெல்லாம்..











திருந்த மாட்டீங்களாடா?

லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார்.

கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும்.

தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் `பூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது.

இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தாரிடம் சொல்ல, இப்போது கன்சாபாபா முன்பு நீண்ட கிï வரிசையில் கூட்டம் கூடி நிற்கிறது.

அந்த கிராமம் முழுவதும் `` ஜெய் கோ கன்சா பாபா கீ'' என்ற குரல் முழங்குகிறது.

அவர் மாயாஜாலம் நிகழ்த் துகிறாரா! போலிச் சாமியாராப பூ எப்படி பணமாக மாறுகிறது என்பது பற்றி யாரும் கேள்வி

கேட்கவில்லை.பணத்தை வாங்கிகொண்டு போய் உடனடியாக செலவழித்து வருகின்றனர். இதற்கு காரணம் ரூபாய் நோட்டு மாயமாக மறைந்து விடக்கூடாது என்ற பயம் தான்.

இதற்கிடையே அங்குள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ரோசன்லால் என்பவர் இந்த சாமியார் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று போலீசில் புகார் கூறியுள்ளார்.

ஏற்கனவே இதுபோல் ஒரு சாமியார் வந்து நோயைக் குணப்படுத்துவதாக கூறி பிரம்பால் ஒரு சிறுவனை அடித்தபோது அவன் இறந்துவிட்டான். அதேபோல் மற்றொரு சாமியார் தண்ணீரில் விபூதி கலந்துகொடுத்து ஒருபெண் காணாமல் போய்விட்டார். அதேபோல் இவரும் போலிச்சாமியார் தான் என்கிறார் அவர்.

இதுகுறித்து கஞ்சா பாபா கூறும்போது ``நான் கடவுளின் அவதாரமாக வந்திருக்கிறேன். என்னிடம் உண்மை இருக்கிறது. ஏழைகளை சந்தோசப் படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். என்னை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அந்தப் பகுதியை சுற்றிலும் வங்கிகளோ, ஏ.டி.எம். மையங்களோ கிடையாது. இந்த நிலையில் பணம் தரும் சாமியாரை பலர் `ஏ.டி.எம். பாபா' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். பாமரர்கள், படித்தவர்கள் என அனைவருமே கன்சா பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள்.

பக்தர்களுக்கு பணம் தரும் இந்த நவீன சாமியாரால் எட்டுபட்டி சுத்துக்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பேர் `எங்க ஊருக்கு வாங்க பாபா' என்று அவரை அன்புடன் அழைத்து வருகின்றனர்

(கண்டிப்பாக 2020 இந்தியா வல்லரசாகிவிடும் என்ற பயத்தில் சீனா அந்த ஆசாமியை நேபாளம் வழியே கள்ள பாஸ்போர்ட்டில் கடத்த முயற்ச்சிப்பதாக காற்றுவழி தகவல் தெரிவிக்கிறது)
இத் தொடர்ப் பதிவின் முதல் பாகம் இங்கே

மக்கள் மனசு என்ற பெயரில் தினகரனில் ஒரு தொடர் கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டது. அதில் திமுகவில் யாருக்கு ஆதரவு அதிகம் எனப்பொருள்படும் விதமாக வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு அழகிரி மிகக் குறைவான அளவே ஆதரவோடு இருக்கிறார் எனச் செய்தி வெளியிட்டது. மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மற்ற மூன்று ஊழியர்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தமிழகம் கொந்தளித்தது. அழகிரியை தூக்கில் போடு என்பதைத் தவிற ஏனைய பிற சொல்லாடல்களோடு தனது சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தது சன் டி,வி.
தயாநிதி மாறன் முதல் கட்சியின் கடைசித் தொண்டன் வரை இந்த விவகாரம் தயாநிதிக்கே பூமாரங்காய் வந்து தாக்கும் எனத் தெரிந்திருக்க வில்லை. ஆனால் அதற்கான வேலைகளை தயாநிதிமுன்வந்து செய்தார் என செய்திகள் வெளியானபோது யாரும் நம்பவில்லை.
அழகிரியின் செயலை அன்போடு கண்டித்த திமுக தலைமை, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து சன். நிறுவனத்தின் வாயை முதலில் அடைத்தது.

உள்துறைச் செயலரை மிரட்டியது முதல் கட்சியின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தது வரை திமுக செயற்குழுவால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்ட தயாநிதி அமைச்சர் பதிவியை தானாக துறந்தார். திமுக காரனாக பிறந்தேன் திமுக காரனாகவே இறப்பேன் என தாத்தாவுக்கு ஒரு சூசகத் தகவலைஅனுப்பியதோடு தனது பக்க செயல்பாடுகளை ஓரம் கட்டினார்.

அதன்பின் கட்சியில் அழகிரியை முன்னிலைப் படுத்த ஏதுவாக மதுரை இடைத்தேர்தல். திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பொருப்பாளராக வலம் வந்த அழகிரி தன் சாதூர்யமான காய் நகர்த்தல்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடித் தந்ததோடு மதுரை மக்கள் ஆதரவு தனக்கு இன்னும் இருப்பதை தெளிவுபடுத்தினார்.

இந்த செய்திகளின் பின்னால் எந்த ஒரு இடத்திலும் திமுக தலைவராக வருவதற்கான சாத்தியக்கூறுகளை நம்மால் தயாநிதியிடம் காணமுடியவில்லை. கட்சித் தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் ஒரே சாதகத்தினைக் கொண்டு அவர் தாந்தோன்றித் தனமாகவும் தன்னை விட மூத்த தலைவர்களை கொஞ்சம் ஏளனமாக நடத்தியதாகவும் கூறப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு எல்லாம் காரணகர்த்தா ஆற்க்காட்டார் என இப்போது செய்திகள் வருகின்றன.

கலாநிதிமாறனின் பணபலமும், ஊடக பலமும், தயாநிதி மாறனின் ஆளுமைத் திறமையும் மட்டுமே ஸ்டாலின் இடத்தை திமுகவிடம் இருந்து பறித்து தயாநிதியிடம் கொடுத்துவிடப் போதுமானதில்லை. அனாமதேயமாக ஸ்டாலின் மேல் சுமத்தப் படும் சில குற்றச்சாட்டுகளுக்குள் நுழைந்து பார்க்காமல் ஸ்டாலினை நோக்கினால் கட்சியில் ஸ்டாலின் பங்கு என்னவென்று விளங்கும்.

கல்லூரி காலத்தில் மிசா கைதில் ஆரம்பித்த ஸ்டாலினுடைய கட்சிப் பிரவேசம் தயாநிதிபோல பதவியை கட்சியின் சுகபோகங்களை உள்ளே வந்தவுடன் அனுபவித்துவிடவில்லை. அவரும் அதற்கு தயாராக இல்லை. அடிமட்டத் தொண்டனான தன்னை திமுக தலைமைக்கு தகுதியுடையவராக தன்னை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பொருமையும் அவகாசமும் கடந்த முப்பது ஆண்டுகாலங்களில் கிடைத்திருக்கிறது. வாரிசு அரசியல் எனப் பரப்பப்படும் எந்த குற்றச்சாட்டுக்களும் ஸ்டாலினுக்கு பொருந்தாது.

(தொடரும்)....
கலைஞருக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யார் தலைவராக வரவேண்டும் என்ற விவாதம் இப்போதே ஆரம்பித்துவிட்டதை நினைத்தால் கொஞ்சம் வியப்பாய் இருகிறது. ஆனால் இது ஒன்றும் புதிய விசயம் இல்லை.

எல்லா கட்சிகளையும் போலவே திமுகவிலும் குழுக்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அப்படி தனியாக குழு அதன் பின் கட்சி என்றபின் அதில் மாபெரும் வெற்றி கண்டவர் எம் ஜி ராமச்சந்திரன் மட்டுமே. காரணம் அவரின் கட்சியினரோடான நெருக்கம். " கலைஞர் பேனாவால் மூளையை தீண்டுபவர் என்றால் எம்ஜிஆர் வாய் வார்த்தையால் வயிற்றை தொடுபவர். ஏழைகள் நிறைந்த இந்த மாநிலம் எம்ஜிஆரின் வார்த்தைகளுக்கு தாரை வார்க்கப் பட்டது அப்படித்தான்.

அதன் பின் குறிப்பிடத் தகுந்த அளவில் கட்சியின் உணர்வுகளை கிளப்பி விட்டு கிளம்பிச் சென்றவர் நம் அன்புச்சகோதரியின் அவசர கால அண்ணன் வைகோ. அவரின் மாபெரும் வெற்றி (?) பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

அந்த வரிசையில் சமீப காலத்தில் எல்லா வகையிலும் புயலைக் கிளப்பியவர் மறைந்த மாறனின் இளைய புதல்வர் தயாநிதி மாறன். கட்சிக்குள் தந்தையின் மறைவுக்குப் பின் கலைஞரின் பாசம் மட்டுமே தகுதியாய் கொண்டு, கொண்டு வரப்பட்ட புது முகம் மத்திய சென்னையின் மாபெரும் வெற்றிக்கு கருணாநிதியின் பேரன் என்ற ஒரு தகுதி மட்டுமே போதுமானதாய் இருந்தது. யாருக்கும் தயாநிதியின் பிற ஆளுமைத் தகுதிகள் பற்றிய கேள்வி எழுந்திடவில்லை.

மத்திய அமைச்சரவையில் சக்திமிக்க துறை. சுட்டும் விரலசைவில் சுதந்திர கட்டளைகள் என மிகச் சுதந்திரமாக அனுமதிக்கப் பட்ட எல்லா வழிகளையும் கையாண்டு தகவல் தொழிநுட்பத் துறையில் இதுவரை இருந்த எந்த அமைச்சரையும் விட மிகச் சிறப்பான பணிபுரிய மென்மேலும் கிரீடங்கள் என ஒப்பந்தங்கள் வந்து குவிய அதில் அவரின் சீறிய முயற்சியில் தமிழகத்துக்கும் ஒரு பங்கு கிடைத்தே வந்தது.

எங்கே போனாலும் கலைஞரின் ஊன்று கோலாய் இருந்த ஆற்காட்டார் கொஞ்சம் நம் கண்களில் இருந்து மறைய ஆரம்பித்தார். இளம் கன்றாய் கார்பொரேட் காஸ்ட்யூமில் தயாநிதி தாத்தாவின் எல்லா அசைவுகளுக்கும் அர்த்தம் கொடுக்கும் தலைந்கர தி.முக.வின் இன்னொரு முகமானார்.

கலாநிதி மாறன். முறசொலி மாறனின் மூத்த மகன். தந்தை வழியில் அரசியலுக்குள் வராமல் சரியான காலகட்டத்தில் பூமாலை என்ற ஒரு குட்டியூண்டு விடியோ செய்திப் பிரிவு அனுபவத்தில் ஆரம்பித்த சன் டிவி எனும் விதை இன்று ஆலமரமாய். எல்லா துறைகளிலும் உயரம் தொட்ட அவருக்கு இன்று வானமே எல்லை. திமுகவால் அடைந்த பலனுக்கு கைமாறாக எல்லா தேர்தல்களிலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் அறிவிக்கப் படாத கட்சி சேனலாக இருந்தது. திமுகவின் தேர்தல் வெற்றிகளில் சன் டிவிக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் திமுக எனும் மாபெரும் படைக்குப் பின்னால் அதுவும் ஒரு துணைப்படை ஆனது.

திமுகவின் ஆட்சி அமைந்த பின்னரும் மத்தியில் தயாநிதிமந்திரியான பின்னரும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் பரஸ்பர பயன்பாடுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

எல்லாமே தினகரனின் அரைப்பக்க கருத்துக் கணிப்பு ஒன்று வரும் வரை.......

(தொடரும்)

பட்டய கிளப்புது பா.ம.க

அவ்வப்போது அரசுத் தரப்புக்கு எதிராக அதிரடிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அடுத்த கட்டமாக தற்போது தனியார் பொறியியல் கல்லூரி அதிபர்களுக்கு எதிராகவும் தங்களின்அஸ்திரத்தை எடுத்திருக் கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் களுக்கு பா.ம.க&வின் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் எச்சரிக்கை அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த அறிக்கையில் இருப்பது இதுதான்... ‘தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் பொறியியல் கல்விக்கான நேர்காணலை நடத்தி மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இப்படி ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்டு சேரும் மாணவர்களுக்கு தங்கள் கல்லூரியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே தங்கள் நிர்வாகம் வசூல் செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அரசின் தொழில்நுட்ப இயக்ககம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வாங்க வேண்டும் என்பது மருத்துவர்


அய்யா அவர்களின் நிலைப்பாடு ஆகும். எனவே, தங்கள் கல்லூரி நிர்வாகம் கூடுதலாக எந்தக் கட்டணத்தையும் வாங்க வேண்டாம். மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு உரிய பற்றுச்சீட்டு (ரசீது) வழங்க வேண்டும். இதை எந்தக் கல்வி நிறுவனம் மீறினாலும், பாட்டாளி மக்கள் கட்சி அந்த நிறுவனத்துக்கு எதிராக போராடும் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். நீங்கள் இதைக் கட்டாயம் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறோம்’ என்று அந்த அறிக்கை முடிகிறது.

அதோடு கல்லூரி மாணவர்களிடம், ‘அரசு அறிவித்துள்ள கட்டணத்தைத் தவிர உங்களிடம் கூடுதலான கட்ட ணத்தை நீங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் கட்டச் சொல்லி கேட்கிறதா? நீங்கள் கட்டுகிற கட்டணங்களுக்கு உரிய பற்றுச்சீட்டு தரவில்லையா? உடன டியாக கீழ்கண்ட கைபேசி எண்களில் நீங்கள் தொடர்பு கொண்டு உரிய தகவல் அளிக்கவும்’ என்று ஒரு பிட் நோட்டீஸ§ம் விநியோகிக்கப் படுகிறது.

பா.ம.க&வுக்கு மிகவும் ராசியான தர்மபுரி மாவட்டத்தில் தான் இந்த எச்சரிக்கை அறிக்கையின் தொடக்க விழா நடந்திருக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. எம்.பி.யான டாக்டர் செந்திலிடம், ÔÔஇது ஒருவகை மிரட்டல் அல்லவா?ÕÕ என்றோம்.



‘‘மிரட்டல் என்று ஏன் எடுத்துக்கணும்..? அறிவுரைன்னு எடுத்துக்கலாமே..! மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், எங்க மருத்துவர் அய்யா சொன்னபடி உயர் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள ஊழலை ஒழிக்கவும் ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் இதுபோன்ற அறிவுரை அறிக்கைகளை அனுப்பி வருகிறோம். அன்பான அறிவுரையாகத்தான் சொல்றோம். அதைப் பின்பற்றினால் அந்தக் கல்லூரி நிர்வாகங்களுக்கு நல்லது. மாறாக, ‘நீங்க யார் எங்களை கேள்வி கேட்கிறது? நாங்க எங்க விருப்பப்படி அடாவடியாகக் கட்டணம் வசூலிப்போம்’னு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டால் அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுவோம். எங்களுக்குத் தெரியாம கூடுதல் கட்டணம் வசூலிச்சிடலாம்னு மட்டும் எந்த தனியார் கல்லூரியும் தப்பு கணக்குப் போட்டுட வேண்டாம்! எல்லா இடத்திலேயும், எல்லா மட்டத்திலேயும் ஆளு வச்சுருக்கோம். தப்பு நடந்தா தகவல் அடுத்த நிமிஷமே எங்க காதுக்கு வந்துடும்’’ என்று ‘ரமணா’ ஸ்டைலில் சொன்னார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் ஒருவர் இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசினார். ‘‘உண்மையை சொல்லப்போனா அரசு நிர்ணயிச்சிருக்கிற கட்டணம் எங்களுக்குக் கட்டுபடியாகாது. ஏன்னா, அரசுக் கல்லூரிகளைவிட எங்கக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு நவீன உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். அந்தக் கணக்கு எல்லாம் பார்த்தா எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுது. இருந்தாலும் கல்வி என்பது சேவை என்பதால் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம். எனக்குக்கூட பா.ம.க&விடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. அந்த அறிக்கைக்கு தேவையே இல்லை. தப்பு நடந்தால்தானே கண்காணிப்பு தேவை!’’ என்றார்.

பா.ம.க&வின் தலைவர் ஜி.கே. மணியிடம் பேசினோம். ‘‘எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆணைக்கு இணங்க இந்த நல்ல செயலை செய்து வருகிறோம். தர்மபுரி பின்தங்கிய மாவட்டம் என்பதால், இந்த நடவடிக்கையை முதலில் அங்கு செயல்படுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் விரைவில் இது போன்ற அறிவுரை அடங்கிய அறிக்கை அனுப்பப் படும்’’ என்றார்.

அவரிடமும், ‘‘பா.ம.க&வின் நடவடிக்கை மிரட்டல் தொனியில் இருக்கிறதே?’’ என்று கேட்டோம். ‘‘மடியில கனம் இருக்கிறவன்தான் பயப் படணும். உயர் கல்வித்துறையில கூடுதல் கட்டணம் வசூலிக்கிறாங்க... கல்வி வியாபாரமாகிடுச்சுன்னு எங்க மருத்துவர் அய்யா நல்லதுக்கு சுட்டிக்காட்டினா, ‘புகார் யாரும் தரலை’ங்கிறாங்க. புகார் கொடுத்தா அந்த மாணவனை அந்தக் கல்லூரி நிர்வாகம் சும்மா விடுமா? அதுக்குதான் Ôமாணவர்களே, பெற்றோர்களே வாங்க! நாங்க இருக்கிறோம்Õனு அவங்களை பா.ம.க. அரவணைச்சுக்குது. மிரட்டல்னு எடுத்துக்கிட்டா மிரட்டல்தான். நல்லதுக்குன்னு எடுத்துக்கிட்டா நல்லதுதான்’’ என்று அதிரடியாக முடித்தார்.

நன்றி- ஜூனியர் விகடன்

கிழுமத்தூருக்கு பயர்பாக்ஸில் போக வேண்டுமா என ஓசை செல்லா போட்ட பதிவும் இது தொடர்பாக பாலபாரதி போட்ட பதிவும் என் பெயரை கெடுக்கும் விதமாக என் ஊரின் பெயரை கெடுக்கும் விதமாக இருக்கிறது. உடனே இருவரும் அதனை சரிசெய்ய வேண்டும் என இப் பதிவின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என எழுதத் தோன்றினாலும் உண்மை அவர்களுக்கு தெரியாத போது அவர்களை நொந்து கொள்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். அதனால் முதலில் என் தரப்பு விளக்கத்தினை கொடுத்துவிடலாம் என்பதற்க்காக இந்த பதிவு


"அய்யா சாமிகளா எங்க ஊரு பேருலதான் என்னோட கொலைப்பூவும் இருக்கு அதாவது "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்" நீங்க சொல்ற மாதிரி அது கிழு"மா"த்தூர் எக்ஸ்பிரஸ் இல்லை"


இது மொக்கைப் பதிவா என்று யாராவது சொல்லுங்க...


போன பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்ட அனானி அய்யா என்னாலயும் "பாப்பான்" பேரு இல்லாம பதிவு போட முடியும் தெரிஞ்சுக்கோங்க....

அடடா இப்ப சொல்லிட்டனோ?


சரி அடுத்த தபா ட்ரை பன்றேன்.
யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

-பெரியார் 26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

மாமியும் மசால் வடையும்

இப் பதிவு சூடான இடுகைகளில் வரும் பதிவுகளை கேலி செய்வதற்க்காக அல்ல !!
சென்னை : சேது சமுத்திரதில் இருப்பது மணல் திட்டு தான் என நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள இமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்தில் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை இடிக்க கூடாது என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சேது சமுத்திர திட்ட மேலாண்மை இயக்குனர் ரகுபதி சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் சேது சமுத்திரத்தில் இருப்பது வெறும் மணல் திட்டு தான், மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என கூறினார். நாசா விண்வெளி மையம் சேது சமுத்திர திட்ட கமிஷனுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த செய்தியை கேட்டநடமாடும் ட்ராபிக் சிக்னல் இராம கோபாலன் நாசாவின் நாக்கார சக்திகளை மைனாரிட்டி கருணாநிதியின் கைக்கூலிகள் விலைக்கு வாங்கிவிட்டதாக மூன்றாம் அணித் தலைவி அம்மா விடப்போகும் மொக்கை அறிக்கையில் தன் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு போயஸ் கார்டனுக்கு பேக்ஸ் அனுப்ப போவதாக அங்கீகரிக்காத தகவல்கள் தெரிவிக்கின்றன

போண்டா பிரியர் தனக்கு யாரும் போண்டா கொடுத்தால் கூட துணைக்கு வரவில்லை என்பதாலும் போண்டா சாப்பிட்ட பலர் ஒரு தொண்டனின் கலாய்த்தலில் கலங்கிக் கிடப்பதாலும் இனி பின்னூட்டம் போட்டுக் கொள்வது போல போண்டாவையும் தாமே தயாரித்துக் கொண்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் துண்டை தரையில் போட்டு தாண்டி அணானிமஸாக முரளிமனோகர் மேல் சத்தியம் செய்கின்றன. என்னதான் நமக்கு இடைஞ்சல் செய்தாலும் பகைவனுக்கும் அருள்வதே நம் பண்பாகும் அதனால் இந்த எளியோனின் எ"லி"ய உதவி.

உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும்.
தேங்காய் கீற்றினை சிறு சிறு பற்களாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்புடன் இரண்டு பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி மாவில் போடவும்.
இதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டு, எண்ணெய் காய்ந்ததும், எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
கண்கரண்டியினால் அடிக்கடி புரட்டிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுக்கவும்.

கோதுமை மாவில், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். 2 மணிநேரம் இந்த மாவை ஊறவிடவேண்டும்.

உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கையும் தேங்காய் துருவலையும் மிருதுவாக அரைத்துக் கொண்டு இத்துடன் சீனியையும் சேர்த்து கனமான ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கிளறுங்கள். இதில் 2 கரண்டி நெய்யையும் சேர்க்க வேண்டும். ஏலக்காய் பொடியையும் இத்துடன் சேர்த்த பிறகு இறக்கி வையுங்கள்.

ஊறின மாவை சம உருண்டைகளாக்கி ரொட்டிபோல் விரல்களால் தட்டி நடுவில் உருளைக் கிழங்கு பூரணத்தை வைத்து மூடிவிடுங்கள். திரும்பவும் இதை விரல்களல் தட்டி வெறும் தோசைக்கல்லில் போட்டு எடுக்கவேண்டும். விரல்களில் ஒட்டாமல் இருக்க அரிசிமாவைத் தொட்டுக் கொள்ளலாம். இரண்டு புறமும் நெய்விட்டு மறுபடியும் புரட்டி எடுத்தால் மொறுமொறுப்பாக மெத்தென்று இருக்கும்.

பின்குறிப்பு: இந்த சமையல் குறிப்பில் ஏதும் சந்தேகம் இருப்பின் என்னைக் கேக்க வேண்டாம்.
இதில் சந்தேகம் இருப்பவர்கள் பின்னூட்டத்தில்; தெரிவிக்கவும் மொத்த ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்(என்னுடைய காரில் டோர் டெலிவரி செய்யப்படும்)

பனி கொட்டும் குளிர் காலைப் பொழுது, ஒரு பச்சிளம் குழந்தையின் அழு குரல் இதயத்தில் முட்டியது. தூக்கம் பிடிக்காமல் குடிசை யிலிருந்து வெளியே வந்தாள் மாரி. குழந்தையின் அழுகுரல் எங்கிருந்து வருகிறது? - சுற்றிலும் பார்த்தாள் மாரி. எதிரிலிருந்த குப்பைத் தொட் டியை எட்டிப் பார்த்தாள். பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை எறும்புகள் மொய்த்துக் கடிக்க, வலியிலும் குளிரிலும் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. பதறிப்போன மாரி குழந்தையை எடுத்தாள். எறும்புக்கடி, குளிர், அதனுடன் காய்ச்சலும் சேர்ந்து குழந்தையை வதைப்பதை உணர்ந்தாள். அள்ளி அணைத்துக் கொண்டு குடிசைக்குத் திரும்பினாள். உடனடியாகக் குழந்தைக்குப் பால்தர வேண்டுமே என்கிற பதைப்புடன் குடி மயக்கத்தில் கிடந்த கணவனை உலுக்கிக் குழந்தையின் கதையைச் சொல்லிப் பால் வாங்குவதற்கு ஏதாவது காசு இருக்கிறதா? என்று கேட்டாள்.

``நான் குடிப்பதற்கே காசு இல்லை. உனக்கென்னடி ஊதாரித்தனம்?’’ என்று திட்டிவிட்டுப் படுத்துக் கொண்டான். இரண்டொரு நாள் எப்படியோ சமாளித்தாள் மாரி. குழந்தைக்கு `சின்னி’ என்று பெயரிட் டாள்.

வயதான காலத்திலும், கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து குடிகாரக் கணவனையும் இந்த அனாதைக் குழந்தை சின்னியையும் எப்படிக் காப்பாற்றுவது? என்கிற கவலை அவளை அழுத்தியது.

அவளைப் பரிவுடன் பார்க்க அந்தக் குடிசையில் இருந்த ஒரே உயிர், அவள் வளர்த்த நாய் `பாணி’தான்.

ஒருநாள் வேலையிலிருந்து குடிசைக்குத் திரும்பிய மாரி நம்ப முடியாத ஆச்சரியத்தைக் கண்டாள். நான்கு குட்டிகளை ஈன்றிருந்த `பாணி’ குழந்தை சின்னியின் வாய்க்குள் தனது காம்புகளில் ஒன்றைப் புகுத்திப் பாலூட்டிக் கொண்டி ருந்தது.

மானுடத் தாய் போலவே தனது முன்னங்கால் (கை) ஒன்றை குழந்தைமீது வாஞ் சையுடன் போட்டு அணைத் துக் கொண்டிருந்தது. சின்னி ஆனந்தமாகப் பால் குடித்துக் கொண்டிருந்தான்.
`சின்னி’க்கு ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சி யில், கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் மாரி.

அன்னை `பாணி’க்கும் குழந்தை `சின்னி’க்கும் நாளுக்கு நாள் பந்தமும் பாசமும் செழித்து வளர்ந்தன. தனது நான்கு குட்டிகளை விடவும் இந்தப் பிள்ளை மீது `பாணி’க்குத் தணியாத அன்பு.

அந்தக் குட்டிகளெல்லாம் வளர்ந்து எங்கெங்கோ ஓடி விட்டன. பாணியும் சின்னியும் மட்டும் பிரிக்க முடியாத தாய் சேயாக... அந்தப் பகுதி மக்களே பக்தியுடன் பார்த் துச் செல்லும் விதத்தில் அன்புக்கும் பாசத்துக்கும் காவியமாய்த் திகழ்ந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும், `சின்னி’ தன் `தாயிடமே’ பால் குடித்துக் கொண்டிருக்கிறான்.

அவன்மீது அன்பு கொண்ட சில குழந்தைகள் சின்னியைத் தங்களுடன் ள்ளிக்கு அழைத்துச் செல் கிறார்கள். கூடவே அவள் தாய் `பாணி’யும் செல்கிறாள். பள்ளி முடியும் வரையிலும் பள்ளியின் வராந்தாவில் ஓர் ஓரமாகப் படுத்துக் கிடந்து விட்டு, பள்ளி விட்டதும் சின்னியை அழைத்துக் கொண்டு மாரியின் குடிசைக்கு வந்து விடுகிறாள் `பாணி.’

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது, மாரி இறந்து விட்டாள். மாரியின் கணவன் அன்றே `பாணி’யையும் `சின்னி’யையும் தன் குடிசையிலிருந்து விரட்டி விட்டான்.

மாரியின் தங்கை சகாயம் இப்போது பாணிக்கும் சின்னிக்கும் தன் குடிசையில் புகலிடம் தந்திருக்கிறாள்.

இந்த உணர்ச்சிமிகு காவி யம் பெங்களூர் தர்சனி பாளையம் பகுதியிலுள்ள குடிசைப்பகுதி மக்களையும் தாண்டி பத்திரிகைகளாலும்கூட விவரிக்கப்படும் போதுகூட ஒரே ஒரு மனிதன் மட்டும் அந்தக் குழந்தையிடம் எந்தப் பரிவும் காட்டாது முகம் திருப்பிச் செல்கிறான்.

அவன் அதே தெருவில் தான் இருக்கிறான். அவன் தான் சின்னியின் இறந்து போன தாயை மோகத்தில் அணைத்து, கோபத்தில் உதைத்துக் கொடுமைப் படுத்திய கணவன். அவனுக்குப் பிறந்த குழந்தையைத் தான் `பாணி’ பாசத்துடன் வளர்த்து வருகிறாள்.
``மற்ற எல்லா மிருகங் களையும் விடப் பசுவைத் தான் கோமாதா என்கிறோம். நாய்ப்பாலைக் குடிக்க முடியுமா?’’ என்று `கிரிமினல்’ சங்கராச்சாரி கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

நாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்தான் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தந்தை, அவன் பெயர் ரோமுலஸ். அவன் பெயரால்தான் ரோமாபுரி நிர் மாணிக்கப்பட்டது.

சங்கராச்சாரி குடிப்பது திருட்டுப்பால். எந்தப் பசுவும் மனிதர்களுக்காகச் சுரப்ப தில்லை. ஆனால், `பாணி’யோ தாயினும் சாலப் பரிந்தூட்டுகிறது.

சங்கராச்சாரி கூட்டம் சின்னியை அவதார புருஷனாக்காமல் இருந்தால் போதும்

தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து
நண்பர் லக்கிலுக் பதிவில் போண்டா புகழ் பதிவர் (தேவையின்றி மூக்கு நுழைப்பவர்) வழக்கம்போல உளரி வைத்திருக்கிறார். இதோ அவரே சொல்கிறார் பாருங்கள்.

பொது நோக்கு ஒரு விஷயத்தில் இருக்கும்போது அதற்கு எதிராக எழுத தில் வேண்டும். இப்பதிவில் உங்களிடம் அதைப் பார்க்கிறேன். ரமேஷ் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வளவே.

காஞ்சி சங்காராச்சாரி காமகேடி சுப்ரமணி மீதும் குற்றச்சாட்டுதான் உள்ளது. அதனால் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பாகி விடுமா? அனுராதா ரமணன் கொடுத்த செக்ஸ் புகார் பொய் என்று ஆகிவிடுமா? சங்கரராமனை கொலை செய்தது பொய் என்று ஆகிவிடுமா? சரி உங்கள் வாதப்படி இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றே ஒப்புக் கொள்கிறேன். மதுரையில் தினகரன் ஊழியர்களை கொலை செய்தது அழகிரி என்று தினமலரும் "நீங்களும்" சொல்கிறீர்களே, அதற்கு ஏதேனும் இந்த மாதிரி தில் வைத்திருக்கிறீர்களா?


அதை விசாரிப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரை ரமேஷ் பற்றி நல்ல செய்திகளை பலர் கூறிவிட்டனர்.

ரமேஷ் ஒரு பார்பானன். தினமலர் ஓனரின் பையன். எனவே அவர் என்னதான் குற்றங்கள் கொடுமைகள் புரிந்தாலும் பாராட்டப்பட வேண்டியவன் உங்கள் ப்ராமண பாஷையில். கீதையிலும் மனுவிலும் வேதத்திலும்கூட சொல்லி இருக்கின்றனர். பாப்பான் எந்த தவறு செய்தாலும் அவனை தண்டிக்கக் கூடாது, மன்னித்து விட்டுவிட வேண்டும் என்று! எனவே அந்த பக்கங்களை எடுத்துச் சென்று நீதிபதியிடம் காட்டினால் குற்றமற்றவர் என விட்டாலும் விடுவார். முயற்சி செய்து பாருங்கள் .

சில நாட்களுக்கு முன் பழம்பெரும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் அவர்கள் தேவையில்லாமல் ஒரு நல்லவரை அவதூறு செய்கிறார்கள் என இந்த நிகழ்ச்சி பற்றிப் பேசும்போது கூறினார். அது உண்மையா பொய்யா என்பது விசாரணையில் தெரிய வரட்டும்.

குற்றமே இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. ஆனால் சிலநாட்களுக்கு முன்பே இதுபற்றி பஞ்சாபகேசன் என்ற பாப்பானுக்கு தெரிந்து இருக்கிறது! அது எப்படி பார்பனர்களுக்கு மட்டும் முன்பே தெரியும்? குற்றம் செய்வதற்கு முன் எல்லோரிடமும் சொல்லி விட்டுத்தான் செய்தாரோ? அவர் செய்த செக்ஸ் டார்ச்சருக்கு மற்ற சென்னைப் சென்னை பார்ப்பன எழுத்தாளர் சங்கமும் உடந்தையா?

ஆனால் எனது இப்பின்னூட்டம் உங்கள் நன்றியுணர்ச்சியைப் பாராட்டி போடப்பட்டது. அதிலும் நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்பது தெரிந்தும் தைரியமாகப் போட்டது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.

ஆமாம். பாப்பானை நல்லவன் என்று வாழ்த்தினால் அவர் நல்ல பதிவர். பாப்பான் செய்த திருடு. கொலை, கொள்ளை, கற்பழிப்பு பற்றி எழுதினால் அவர் தூஷணப் பதிவர்! நல்லா இருக்கயா உம்ம நியாயம்!

ப்ளஸ் டூவுக்கு மேல் பல காரணங்களால் படிக்க முடியாது வாழ்நாள் முழுதும் மனம் மருகுபவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே அந்துமணியின் அப்பதிலுக்கு நோக்கமாக இருந்திருக்க வேண்டும். கணிசமான பேர் கடனோ உடனோ வாங்கி தொழிற்கல்வியில் சேர்ந்து அவதிப்படுகின்றனர். ஏனெனில் அவை இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்று அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. பலர் பாதியிலேயே படிப்பை விடுகின்றனர். என்ன இழப்பு சம்பந்தப்பட்டவருக்கெல்லாம் ஆகிறது என்று கணக்கு போட்டால் தலையே சுற்றும்.

அந்துமணி ரமேஷ் சொன்னதுக்கும் பார்பனர் ராஜாஜி சொன்னதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! ராஜாஜி குலக்கல்வி வேண்டும்னு சொன்னார். அந்துமணி ரமேஷ் 12ம் வகுப்போட ஊத்தி மூடிட்டு மாடு மேய்க்க போங்கடாங்கிறார். இதனை பார்ப்பன இளைஞர்களிடம் சொல்வாரா அந்துமணி ரமேஷ்? படிக்க வைக்க வசதி இல்லைன்னா பையனின் அப்பா, அம்மா அல்லவா யோசிக்க வேண்டும். 12ம் வகுப்போடு நிறுத்திக்கச் சொல்ல அந்துமணி ரமேஷ்க்கு என்ன அருகதை இருக்கு? அந்துமணி ரமேஷை யாரும் காசு கேட்டாங்களா படிக்க வைக்க? அவருக்கு ஏன் இந்த கெட்ட எண்ணமும் கெடு புத்தியும்? சம்பந்தப் பட்டவர்கள் அல்லவா முடிவு செய்ய வேண்டும் படிப்பைப் பற்றி? அதனைச் சொல்ல அந்துமணி ரமேஷுக்கோ உங்களுக்கோ என்ன அருகதை இருக்கிறது. ?

இத்தனை நாள் எத்தனை எத்தனையோ பணியாளர்களை ரமேஷ் தொட்டிருக்கிறான். மறுத்தவர்களை இடம் மாற்றி விடுவேன் அல்லது பணியில் இருந்து தூக்கி விடுவேன் என்று சொல்லி மிரட்டியே பெண்டாண்டு இருக்கிறான் என்று செய்திகள் வருகிறது. உமா என்கிற பெண் தன் கால்செருப்பு கொண்டு நையப் புடைத்திருக்கிறாள்.

ரமேசுக்கு அரிப்பு எடித்தால் விலைமாதர்களிடம் செல்லவேண்டியது தானே அல்லது அறுத்து நாய்க்கோ காக்காய்க்கோ போடட்டுமே.
இந்த படத்துக்கும் சற்றுமுன்னில் வந்த இந்தப் பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் ஏதாவது தொடர்புபடுத்தி நீங்கள் அர்த்தப் படுத்திக்கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல. !!


‘‘காலம் காலமாக வேறொரு மொழி கோயில்களில் இருந்து வருகிறது என்று சொல் வதால் மட்டுமே தமிழ் வழி பாடு கூடாது என்று சொல் வது தவறு. ஏழாம் நூற்றாண்டி லேயே தமிழின் மந்திர சக்தியை சமணர்களிடம் அனல் வாதம், புனல் வாதம் செய்து நிரூபித்தார் திருஞானசம்பந்தர். பாம்பு கடித்து இறந்தவனை உயிர்ப்பித்ததும், இறந்த பெண்ணை சாம்பலிலிருந்து மீட்டெ டுத்ததும் தமிழின் மந்திர சக்தியை உலகுக்கு எடுத்துக் காட்டிய சம்பவங்கள். திருக்கோயில் கதவை மூடவும், திறக்கவும் செய்த அந்த மந்திரத் தமிழ், கும்பாபிஷேகங்கள் செய்ய உதவாதா? சகலமும் தெரிந்த சாமிக்குத் தமிழ் தெரியாதா’’

-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

உயர்ந்த ஜாதித் தத்துவம்

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
கடந்த இரண்டுநாட்களாக நடைபெற்று வந்த அறிக்கை போர்களும் அக்கப் போர்களும் கட்டாங் கடைசியாக ஒரு முற்றிய நிலைக்கு வந்திருக்கின்றன. தம்பி பாவனா பிரிவினைவாத போருக்குப் பின் சிபிக்கும் நயன் தாராவுக்கும் சண்டை முற்றியது இது இரண்டுக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவும் இதனால் மணமுவந்த சிபி லீ மெரிடியன் ஓட்டலுள் தனி பார்ட்டி அரேஞ்செய்து பாவனாவை அழைப்பதாக திட்டம் தீட்டியிருந்தார், குசும்பன் பாவனாவின் உண்மையான முகத்தை பாசக்கார குடும்பத்துக்கு காட்டிவிட்டதால் பதிவுலகில் இருப்பதை விட பாழாய் போகலாம் என எக்ஸ்பிரஸ் மேல் தலையை கொடுத்து எக்ஸ்பிரஸை கொல்லவும் திட்டம் தீட்டினார். ஆனா இது எதுவும் நடக்காமல் போனது காரணம் வரமாட்டார் என எதிர்பார்த்த நயன் வந்து சிபியின் சட்டையை பிடித்து உலுக்கி என்னை விட்டு ஓடி போக முடியுமா என்றதும் ஆப் ஆன சிபி இன்னொரு புல்லுக்கும் ஆர்டர் தந்ததாக அங்கிகரிக்கப் படாத வட்டாரக் குசும்புகள் தெரிவிக்கின்றன. ஒரு வழியாக சண்டை "முற்றியது"

அந்த சரித்திரப் புகழ்பெற்ற படம் இங்கே :