குஜராத் மோடியின் நரகல் கக்கும் வாய் நாளுக்கு நாள் தாழ்த்தப்பட்ட , மற்றும் சிறுபான்மை இனத்தை குஜராத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அழித்தொழிக்காமல் விடாது போல் இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிந்தய கலவரத்தை முன்னின்று நடத்தியதோடு மட்டும் இன்றி அதை ஒரு இனத்தை அழிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக் கொண்ட ரத்த வெறி பிடித்த மோடியின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் இல்லை.

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கக் கூடாது என உலகம் முழுக்க எதிர்ப்புகள் எழும்பியுள்ள நிலையில் மோடி எழுதியிருக்கும் ஒரு புத்தகம் "கர்மயோக்" (Karmayog) அதாவது துப்புறவாளர்களின் நிலையை நியாயப் படுத்தி இருக்கிறது அதுவும் மதம், கடவுளின் பெயரால்
குஜராத்தின் பெருமையாகவும் அதை சொல்கிறார். மேலும் இந்த தொழிலைச் செய்வதன் மூலம் ஹரிஜன்கள் சமூகக் கடைமையாற்றி சந்தோசம் அடைவதாகவும் கழிவைக் கக்கியிருக்கிறது அந்த மட மோடி.

இதே மோடியின் பார்வை "பார்ப்பனர்கள் டெல்லியில் கழிவரை சுத்தம் செய்பவர்களாய் இருப்பதற்கும் இதே பதிலைத்தான் சொல்லுமா எனத் தெரியவில்லை. "

ஒரு குலத்தை சேர்ந்தவன் அதே தொழிலை தொடர்ந்து செய்வதோடு மட்டும் இன்றி அதன் மூலம் குலத் தொழிலையும் தனது சமூக கடமையாக செய்ய வேண்Dஉம் என சொன்ன "ராஜகோபாலாச்சாரிக்கும் இந்த ரத்த வெரிபிடித்த ஓநாய்க்கும் அதிக வித்யாசம் இல்லை இந்த விசயத்தில்.

ஆன்மீகத் தொண்டாக அனுபவமாக கழிவுகளை சுத்தம் செய்வதைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லும் மோடி தானும் தன் கொலைக்கும்பல் கூட்டத்தை சேர்ந்த அத்துவானி, போன்றவர்களை ரதயாத்திரை மூலம் ஆன்மீகம் வளர்ப்பதை விடுத்து மலம் சுமந்து ஆன்மீகம் வளர்க்கலாம்.

ஏன் அந்த சமூகக் கடமையை செய்வதன் மூலம் சொர்கதுக்கு நேரடி டிக்கட் கிடைக்கும் என்றால் அந்த வேலையை தனது பாஜக தொண்டர்களை செய்யச் சொல்லலாம் , முதல் காரியமாக மோடியே அதை ஆரம்பித்து வைக்கலாம் . தலித்துக்களும் பிற தாழ்ந்த குலமும் கூடையில் சுமக்கும் மலத்தினை வேண்டுமானால் மோடியின் கும்பல் வாழை இலையில் சுமக்கட்டும் காஞ்சி சுப்புணியின் ஸ்டைலில்.



மேலும் விபரங்களுக்கு

இது தொடர்பான விரிவான பதிவை எவறேனும் இட்டால் நல்லது :(

தசாவதாரம் ட்ரெய்லர்


எங்கெல்லாம் தேடியும் கிடைக்காத இந்த ட்ரெய்லர் இணையத்தில் முதல் முறையாக தசாவதாரம் ட்ரெய்லர். வலையேற்ற முடியாத காரணத்தால் இதை கோப்புகள் பகிரும் தளத்தில் உள்ளிட்டுருக்கிறேன் . தரவிறக்கம் செய்து என்ஜாய் மக்களே என்ஜாய்!

இங்கே க்ளிக்கி டவுன்லோட் செய்யவும் பின்னர் MS Office ல் திறக்கவும்


உங்களைப் பாக்க எக்கச்சக்கமா மனுஷங்க வர்றாங்க.. நிச்சயமா மக்கள் மனம் கவர்ந்த தலைவராத்தான் இருக்கணும்...."

-தன் அருகிலுள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பிரமுகரிடம் கரகரத்த குரலில் கேட்டார் அந்த நடிகர்.

தாம் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்றும், தம்மைக் கொல்ல நடந்த தாக்குதலில் தப்பித்து கத்திக்குத்துக்காக சிகிச்சைக்கு வந்த விஷயத்தையும் தமது மாறாத புன்னகையுடன் பதிலாகக் கூறினார் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்.

தன்னலமற்ற அவரின் சேவையைக் கேள்விப்பட்டிருந்த நடிகர்,
"நீங்க அப்படியே செத்துருக்கணும்.. அப்பந்தான் தமிழ் நாட்டில் நல்ல பெயர் எடுக்கமுடியும்.. தியாகத்துக்கு இங்க மதிப்பில்லே..."

-உரத்து கரகரத்த குரலில் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

சென்னை ஜி.எச். மருத்துவமனையில் எழுபதுகளின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

அந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.இராதா! பதிலளித்தது CITU தொழிற்சங்கத்தலைவர், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர் வி.பி. சிந்தன்!!

-இப்படி ஒளிவு மறைவின்றி சமூகவிமரிசனம் செய்ய நடிகவேளால்தான் முடியும்!

இராதாகிருஷ்ணனுடைய பெற்றோர்களின் பூர்வீகம் ஆந்திராவானாலும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறித் தஞ்சமடைந்து ஜெகன்னாதையரின் நாடகக் கம்பெனியில்தான்.

சிறிய வயதிலேயே ‘பாயசம்' என்ற பாத்திரத்தில் பிரபலமாகி ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சந்தனத்தேவன்' படத்தில் கதாநாயகன் வேடம். அதன் அதிபரான டி.ஆர் சுந்தரத்திற்கு - மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிற நீளமான பெயர் பிடிக்கவில்லை. முன்னும் பின்னும் வெட்டி - எம்.ஆர்.
ராதாவாக்கினார். ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம். வெளிவந்தது 1939இல்.

திரைப்படத்தில் 1939-ல் நுழைந்தாலும் நாடகத்தை மறக்காது வளர்த்த கலைஞர் இராதா. "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற வாசகங்கள் அவரது நாடகக் கம்பெனியின் திரைச்சீலையில் இடம் பெற்றிருந்தது, அவரது தொடக்க காலத் தொடர்புகளால்தான். கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் நண்பர் எம்.ஆர்.இராதா.
தனது ஒரு பெண்ணுக்கு ரஷ்யா ராணி என்று பெயர் சூட்டியிருந்தார். எம்.ஜி.ஆர். மீது சுட்ட வழக்கில் அவருக்காக வாதாடியவர் கம்யூனிஸ்டு கட்சியின் என்.டி.

வானமாமலை! பெரியாரின் திராவிடர் கழகச் சித்தாந்தத்தில் பிடிப்பு ஏற்பட்டதை இறுதிவரை இராதா விடவில்லை. பெரியாருக்கு ஏற்பட்ட கண்டன விமரிசனங்கள் இராதாவுக்கும் தொடர்ந்தது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் நாடகங்களை அரங்கேற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரப் போராட்டம் பற்றிச் சித்தரிக்கத் தணிக்கை முறை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாத்திகக் கருத்துக்களைச் சொல்லத் தடை இருந்தது. இராதா நாடகத்தின் பெயரை மாற்றித் திரையிட்டுக் கைதாவார். காங்கிரஸ் ஆட்சியில் 59 முறை கைதானாவர் இராதா!.

கட்டணம் செலுத்தாமல் தனது நாடகங்களைப் பார்க்க வரும் உள்ளூர் பிரமுகர்களுக்கு "ஓசியில் பார்ப்போர்களுக்காக" என்று போர்டு மாட்டி ‘ஒதுக்கிய' பெருமை இராதாவையே சாரும்.

வில்லன்-தந்தை-சமூக விமரிசகர்- நகைச்சுவைப் பாத்திரம் என எல்லாவற்றையும் அவர் ஒருவரே ஏற்று நடித்தது தனிச்சிறப்பு. அவரது ஏற்ற இறக்கமுள்ள, கரகரத்து கீச்சுக்குரலாக மாறும் உச்சரிப்பு அவரது சமூக எள்ளலுக்கு பலம் சேர்த்தது. விளம்பரமின்றி உதவி செய்யும் சுபாவம் அவருக்கு உண்டு. அவர் இப்போது இருந்திருந்தால் ‘ராமர் சேது' விவகாரத்தில் ஊர் ஊராகப் போய் அவரது பாணியில் நாடகம் போட்டிருப்பார்!

லேட்டான தீபாவளி ஷ்பெஷல் !!

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

-(குடிஅரசு கட்டுரை: 31.10.1937)


தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

-(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

நரகமாகும் நந்திகிராம்

‘‘இந்த விழாவுக்கு யாரெல்லாம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. வராதவர்கள் பட்டியலை நீங்கள் எடுத்து உங்கள் அறையின் சுவரில் தொங்க விட்டுக் கொள்ளுங்கள்!’’ &மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, செய்தியாளர் களிடம் அளித்த பதில் இது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராமில் நடைபெற்ற வன்செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துப் பல திரைக் கலைஞர்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவைப் புறக்கணித்தார்கள். இந்த விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பல கலைஞர்கள் பங்கேற்காதது குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அப்போது அவர் இவ்வாறு பதில் சொல்லி யிருக்கிறார்.

இந்தப் பதில் எந்தவிதமான உணர்வை வெளிப்படுத்துகிறது? நந்திகிராம் தொடர்பான சிக்கலில் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை முதல்வர் விரும்பவில்லை. அதிலும் இந்தப் பிரச்னையை முன்னிட்டு எழுத் தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அறிஞர்கள் ஒரு விழாவைப் புறக்கணிப்பதை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்தப் பதிலின் விளைவாக என்ன நடந்தது தெரியுமா? அடுத்த நாள் திரைப்பட விழா நடந்த அரங்கத்துக்கு அருகில் உள்ள இன்னொரு இடத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

ஒருபுறம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கலைஞர்கள், காவல்துறையால் தாக் கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அதே காவல்துறை நந்திகிராமில் ஆயுதம் தாங்கிய ஆளும் கட்சியினர் தங்கள் விருப்பப்படி செயல் படும்போது கைகட்டி வேடிக்கை


பார்த்திருக்கிறது. அல்லது அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கிறது. அதாவது, ஆளும் கட்சியினர் கைகளில் ஆயுதங்களுடன் வன்செயல்களில் ஈடுபடும்போது காவல்துறை அனுமதிக்கிறது. மற்றவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட சட்டம்-&ஒழுங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தடுக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அனுமதிக்க வேண்டிய ஜனநாயகரீதியான எதிர்ப்பை காவல்துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது. ஆனால், ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டிய வன்செயல்களை அது அனுமதித்திருக்கிறது.

கடந்த ஜனவரியில் இருந்து பத்து மாதங்களுக்கு மேலாக நந்திகிராம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

‘‘இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 27 பேர் ‘நிலப்பாதுகாப்புக் குழு’வினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1500 பேருக்கும் அதிகமானோர் பத்து மாதங்களாக நிவாரண முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. அந்தப் பகுதியில் காவல்துறையோ மற்ற நிர்வாகமோ செயல்பட முடியவில்லை. இப்படி ஒரு பகுதி மட்டும் ‘விடுவிக்கப்பட்ட’ பகுதியாக இருக்கும் நிலையை எந்த ஒரு மாநில அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் அங்கு சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்குத் தேவை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் வீடு திரும்பினார்கள்.’’ &இதுவே நந்திகிராம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தரும் விளக்கம்.

நந்திகிராம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கி அதை ஒரு விடுவிக்கப்பட்ட பகுதியாக வைத்திருக்கவே முதலில் புத்ததேவ் விரும்பினார். மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சில சட்டங்களில் இருந்து அந்தப் பகுதி விலக்களிக்கப்படும் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்தது. மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை அவர் கைவிட்டார். ஆனால், அந்த எதிர்ப்பே வேறொரு வகையில் அந்தப் பகுதியை விடுவிக்கப்பட்ட பகுதியாக மாற்றிவிட்டது. நந்திகிராம் மக்களுக்கு இப்படி ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்துவதற்கான சக்தியை யார் கொடுத்திருப்பார்கள்? ‘பெருமுதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவை செய்யும் ஓர் அரசு, மக்களுடைய போராட்டத்தை எப்படி ஒடுக்க முயலும்’ என்ற பாடத்தை அவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்திருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்வது என்று யார் அரசியல் வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தெலுங்கானா, ஸ்ரீகாகுளம், புன்னப்புரா, வயலார் விவசாயிகளின் போராட்ட வரலாறு குறித்துப் பேசி மக்களை யார் அரசியல்படுத்தி இருக்க முடியும்? அன்று மக்களுக்குப் போர்க்குணத்தை ஊட்டியவர்களே இன்று அவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள்!

மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் இப்போது அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டது. விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்கும் பணியில் நிர்வாகத்துக்குப் பதிலாக கட்சியே இறங்கிவிட்டது. காவல்துறையும் மத்திய ரிசர்வ் காவல் படையும் செய்ய வேண்டிய வேலையை ஆயுதம் தாங்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்து முடித்து விட்டார்கள். ‘நிலப் பாதுகாப்புக் குழு’வின் ஆதரவாளர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி, அவர்களுக்குப் பின்னால் இருந்து துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே மீண்டும் நந்திகிராம் பகுதிகளில் மார்க்சிஸ்ட்கள் நுழைந்தனர். நிலப் பாதுகாப்புக் குழு தன்னுடைய எதிர்ப்பைக் கைவிட்டுப் பின்வாங்கியது. அதன்பிறகு முழுப்பகுதியிலும் கட்சிக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் செங்கொடியுடன் முகத்தை மூடிக்கொண்டு நகர்வலம் வந்து தங்கள் வெற்றியை உறுதிசெய்து இருக்கிறார்கள். அதுவரை மத்திய ரிசர்வ் காவல் படையை தேசிய நெடுஞ்சாலை 41&ல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதாவது மார்க்சிஸ்ட்களின் செயல்திட்டம் நிறைவேறிய பிறகே மத்திய ரிசர்வ் படை நந்திகிராம் பகுதிக்குள் நுழைய முடிந்திருக்கிறது.

தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றில் வந்திருக்கும் பல செய்திகளில் இருந்து இதுவே அங்கு நடந்திருப்பதாக அறிய முடிகிறது. இந்த விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்கு கட்சியினர் செய்த செயலை புத்ததேவ் எப்படிப் பார்க்கிறார்?

‘‘எதிர்க்கட்சிகளுக்கும் நிலப் பாதுகாப்பு குழுவினருக்கும் அவர்களுடைய பாணியிலேயே தகுந்த பாடம் புகட்டப் பட்டுள்ளது’’ என்கிறார். ‘‘இப்போது நந்திகிராமில் நிலவுவது மயான அமைதி என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த 11 மாதங்களும் அங்கு சொர்க்கத்தின் அமைதி நிலவியதா?’’ என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டரீதியாக ஓர் ஆட்சி செய்ய வேண்டிய ஒரு வேலையை சட்டவிரோதமாக தன்னுடைய கட்சியினர் செய்து விட்டார்களே என்று அவர் கவலைப் படவில்லை. நிர்வாகம் சீர்குலைந்து விட்டதே என்று அவர் வருந்தவில்லை. ஒரு நிலப்பரப்பில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு ஆளும் கட்சியினர் ஆயுதங்களுடன் களத்தில் இறங்கலாம் என்ற ‘முன்மாதிரி நீதி’யை உருவாக்கி விட்டோமே என்ற வேதனை அவருக்கு இல்லை. மாறாக எதிர்த்தரப்புக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது என்று பெருமிதம் கொள்கிறார். மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்போர்க்கு அவருடைய இந்த அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது.

தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் ஆட்சியில் இருப்பவர்களின் தவறுகளை மற்ற கட்சியினரைவிட துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்ற நம்பிக்கை பரவலாக மக்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே மார்க்சிஸ்ட் கட்சியினருக்குத் தொடர்ந்து போராடும் ஆற்றலை அளித்து இருக்கும். ஆனால், மேற்குவங்கத்தில் நடைபெற்றிருக்கக் கூடிய நந்திகிராம் நிகழ்வுகள், அந்தக் கட்சியினரின் தார்மீக வலிமையைக் குறைக்கும் வல்லமை பெற்றவை.

கடந்த வாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், ‘‘சர்வாதிகாரப் போக்கை தி.மு.க. அரசு மேற்கொண்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று மதுரையில் பேசியதாக செய்திகள் வந்தன. மேற்கு வங்க முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா நீடிக்கும்வரை எந்த மாநிலத்தின் முதல்வரையும் எதிர்க்கும் அற வலிமையை முழுமையான அளவில் மார்க்சிஸ்ட்களிடம் காண முடியாது!

-ஜென்ராம்,ஜூனியர் விகடன்.

Dont do's and donts "are You Fetish"?


Most of the sexual orientations popularly called fetishism are regarded as normal variations of human sexuality by psychologists and medical doctors. Even those orientations that are potential forms of fetishism are usually considered unobjectionable as long as all involved persons feel comfortable. Only if the diagnostic criteria presented in detail below are met, the medical diagnosis of fetishism is justified. The leading thought is that a fetishist is not ill because of his or her addiction but because he or she suffers from it.


The affected person, her object or another person experience impairment or distress in multiple functional areas. Functional area refers to different aspects of life such as private social contacts, job, etc. It is sufficient for the diagnosis if one of the participants is being hurt or mistreated in any other way.


For More info Click here :)


கனிமொழியைக் கவிஞராகவே ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள், மந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாதா?’ என்று சோ உங்களைக் கிண்டலடித்திருக்கிறாரே?

‘‘சாகித்ய அகாடமியின் தலைவராக இருந்த கேரளக் கவிஞர் சச்சிதானந்தன் என்னைக் கவிஞர் என்று ஏற்றுக்கொள்கிறார். ஜெயகாந்தன் ஏற்றுக்கொள்கிறார். எத்தனையோ வளரும் கவிஞர்களுக்கெல்லாம் தராசாக இருக்கும் சுஜாதா ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவருக்குத் தெரிந்த கவிஞர்களான வாலி, வைரமுத்துவும்கூட என்னைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும்விட ‘சோ’வுக்கு கவிதை அதிகம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த அறியாமைக்காக நான் வருத்தப்படுகிறேன். அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பதில் சொல்வதில் அர்த்தமில்லை.’’
-குமுதம் ரிப்போர்ட்டர்

தத்துவப் புதர் பாரதி

“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!

இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’

-ஆனாரூனா

ஹே ராம் சிங்கள ரத்னா !

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு.

"இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமையால் புலிகளுக்கு எதிரே அமர்ந்து, அவர்களுடன் உத்தியோகபூர்வமான முறையில் இந்திய அரசாங்கம் எதுவித பேச்சுக்களையும் மேற்கொள்ளாது" என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும் சிறிலங்கா அரசாங்கத்தின் உயரிய விருதான "சிங்கள ரத்னா" விருது பெற்றவான ராம், கொழும்பில் நடைபெற்ற இந்திய கூட்டரசின் விடுதலை நாள் விழாவில் "திருவாய்" மலர்ந்துள்ளார்.

இவர் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியோ அரசியல்வாதியோ அல்ல. ஆனால் இந்தியாவின் கொள்கைகள் அனைத்தும் "பார்ப்பனர்" நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயற்படுகிறவர்களில் முதன்மையானவர். இந்த பார்ப்பனரின் கூட்டாளிகள்தான் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றவர்களாக உள்ளனர்.

சரி... தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா இதுவரையும் பேச்சுவார்த்தையே நடத்தியதே இல்லை என்கிறாரே ராம்? உண்மையா?

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் வடக்கு-கிழக்கு இந்திய மாநிலங்களின் நிலைமை தொடர்பில் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் பக.16-இல் "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" (பக். 16) என்ற தலைப்பின் கீழ் பல அமைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அசாம் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா, மற்றும் அகன்ற நாகாலாந்து கோரி போராடும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) ஆகிய அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசால் வடக்கு கிழக்கு மாநிலங்களிலே "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" என்று பட்டியலிடப்பட்ட அமைப்புகளில் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) இரண்டைத் தவிர அனைத்துமே 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சட்டவிரோத அமைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) அமைப்புகள் மீதான தடை கூட 2002 ஆம் ஆண்டுதான் நீக்கப்பட்டது.

ஆனால் 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் இந்த இரு அமைப்புகளுடன் இந்திய அரசாங்கம் "யுத்த நிறுத்த ஒப்பந்தம்" செய்து கொண்டது. 1997 ஆம் ஆண்டு முதல் ஓகஸ்ட் 1 ஆம் நாள் முதல் இது நடைமுறைக்கு வந்தது.

அப்போதும் இந்த நாகா அமைப்புகள் "தடை செய்யப்பட்ட அமைப்புகள்" தான்!

இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய், ஜப்பானின் ஒசாகா நகரத்தில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்பின் தலைவர்களான ஐசக் மற்றும் மூய்வா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியதாக திருவாளர் இந்து ராமின் "இந்து"வின் 2001 டிசம்.9 ஆம் நாளிட்ட நாளிதழ்தான் செய்தி வெளியிட்டது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

அதே நாளிட்ட இந்து நாளிதழில் ஏற்கெனவே நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்புடன் பாரிஸ் மற்றும் பாங்கொங்க் ஆகிய நகரங்களில் அரசாங்கத் தூதுவர்கள் மூலம் இரகசியப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்"தான்!

நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டமில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரையிலும்

தாய்லாந்தின் பாங்கொங்கில் 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் 21 முதல் 23 வரையிலும்

நாகா அமைப்புக்களுடன் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி கே.பத்மநாபய்யா நாகா அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தினார்.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

2002 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள்தான் நாகாலாந்து தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து ராமுக்கு உரித்தான குழும ஏடுகளில் இவைகள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மற்றும் அனைத்துலக ஊடகங்களும் இதனை பதிவு செய்துதான் உள்ளன.

இந்தியப் பிரதமர்களாக இருந்த பி.வி.நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் வாஜ்பாய் ஆகியோரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால்தான் நாகா அமைப்புக்களுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவானது என்று இதே இந்து ராமின் "புரண்ட்லைன்"தான் (Volume 16 - Issue 27, Dec. 25, 1999 - Jan 07, 2000) பதிவும் செய்துள்ளது.

அதேபோல் அசாமில் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்று இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இதே உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று புகழ்பெற்ற அசாமிய பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி முன்முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து உல்ஃபாவினால் மக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு 3 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேச்சுக்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

இப் பேச்சுக்கள் குறித்தும் பதிவு செய்துள்ள இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையானது (பக். 18)

- உல்ஃபா அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள உல்ஃபா அமைப்பினர் 5 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்கவும இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பதாகவும்

- அமைதிப் பேச்சுக்கள் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாகக் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் நாள் முதல் 2006 ஆம் ஆண்டு செப்ரம்பர் 20 ஆம் நாள் வரை ஒருதலைபட்சமான நடவடிக்கை நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு பிரகடனப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்புடன்தான் அமைதிப் பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கமே ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் நிறுத்த வெளியிடுகிறது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்பின் உறுப்பினர்களை விடுவிப்பது குறித்து "சாதகமாக" பரிசீலிப்பதாக இந்திய அரசாங்கமே அறிவிக்கிறது.

மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுவினருடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு அப்பால் "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" ஒப்பந்தம் என்ற ஒரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையின்படி,

- போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி

- அசாமில் செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை

- அசாமில் இயங்கி வரும் டி.எச்.டி எனப்படும் டிமா ஹலான் டோஹாஹ்

- மேகாலயாவில் இயங்கி வரும் அசிக் தேசிய தன்னார்வ சபை

ஆகிய அமைப்புடன் இத்தகைய "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" என்கிற ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்துள்ளது.

"சிங்கள ரத்னா" "இந்து" ராம் அவர்களே!

இந்த அமைப்புக்கள் அனைத்துமே தற்போதும் இந்திய அரசாங்கத்தால் "தடை செய்யப்பட்டவைதான்"!-

தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன்தான்

இந்தியப் பிரதமர்களும் பேசுகிறார்கள்-

இந்திய சிறப்புப் பிரதிநிதிகளும் பேசுகிறார்கள்-

ஒப்பந்தங்களை உருவாக்குகிறார்கள்-

ஒப்பந்தங்களை நீடிக்கிறார்கள்.

இப்படியான நிலையில் "தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் இந்தியா பேசாது" என்று இந்து ராம் "ஒரு தலைபட்சமாக" பிரகடனம் செய்கிறார்.

ஆம்-

இந்திய சிறப்புப் பிரதிநிதியாக ஈழப் பிரச்சனையிலே செயற்பட்டு தமிழர் தரப்பிடம் தோல்வியடைந்து போன அதே "இந்து" ராம்தான் இப்போதும் நஞ்சு கக்குகிறார்!

தமிழர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதற்காக எங்கோ இருக்கும் நோர்வே நாட்டவர்கள் கடல் கடந்து வந்து தமிழர் தரப்பினருடன் பேசுகின்ற போது இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் தொடர்புபட்ட

தமிழ்நாடு அரசாங்கமும்

இந்திய அரசாங்கமும்

இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஏன் அக்கறை கொள்ளக்கூடாது?

ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது?

ஏன் இலங்கைத் தமிழர் பற்றி பேசக்கூடாது?

தடை செய்யப்பட்ட உல்ஃபாவுடன் பேச்சுகள் நடத்த வேண்டும் என்று புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி களமிறங்கிய போது அவரை பொடாவில் போடவில்லையே! அவரை பயங்கரவாதியாக சித்தரிக்கவில்லையே!

உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடத்தலாம் என்று புதுடில்லிக்குச் சென்று அசாம் முதல்வர் பேசலாம்- அசாம் எழுத்தாளர் வலியுறுத்தலாம்- அவர் பதவியிலே நீடிக்கலாம்!

ஆனால்

தங்கள் தொப்புள்கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் பேசினால்மட்டும் "இந்து" ராமின் கண்களுக்கு "பயங்கரவாத"மாகத் தெரியும்! குய்யோ முறையோ என கூப்பாடு போடுவார்கள்!

பசியாலும், பட்டினியாலும் வாடும் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத் தமிழர்கள் சேகரித்த உணவுப் பொருட்களை அனுப்ப 74 வயது பெரியவர் பழ. நெடுமாறனை சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளுகின்ற அளவிலே "தடை செய்யப்பட்ட இயக்கம்" என்ற பதத்தை வைத்துக் கொண்டு எழுது கோல்களின் மூலமாக பார்ப்பன லொபிகள் மூலமாக தமிழகத்திலே ஒருவித "அச்ச" நிலையை அல்லவா "இந்து" ராம் குழுக்கள் உருவாக்கி வைத்துள்ளன.

"இந்து" ராமுக்கு எதுவும் தெரியாது என்பதோ

"இந்து" ராம் எதனையும் அறியாதவர் என்பதோ அல்ல.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு

தமிழர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்து விடக் கூடாது என்பதும்

தமிழர் தரப்புடன் இந்தியா பேசிவிடுமோ?

பார்ப்னர்களாகிய நாங்கள் நடமாடுகின்ற போது- இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக நாங்கள் இருக்கும்போது அப்படி ஒருபோதும் பேசவிட வேமாட்டோம் என்ற பார்ப்பன ஆதிக்க வெறியும்தான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சலுக்குக் காரணம்!

காலம்காலமாக தமிழினத்தின் மீது "பார்ப்பன ஆதிக்கவாதிகள்- வெறியர்கள்" கொண்டிருக்கும் வரலாற்று வன்மப் பகையின் வெளிப்பாடுதான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சல்!.

எங்கள் யாழ்ப்பாணம்

"என்ன பறுவதம் ஆச்சி நீங்களும் வந்து கியூவிலை நிக்கிறியள்".
"ஓமடா மேனை கந்தசஷ்டி விரதத்திற்கு ஒரு நேரம் இரவிலை சாப்பிடுகிறது".
"பாணே சாப்பிடப் போறியள்"
" வேறு என்ன இருக்கு இஞ்சை சாப்பிட"
"ஆச்சி இப்ப காலை எட்டுமணி. மூண்டு மணி செல்லும் பாண் தர"
"அறுவாங்கள் பாதையை மூடிப்போட்டு சாமான்கள் அனுப்பாமல் விட்டால் சனம் என்ன சாகிறதே?"
"இல்லையாச்சி கப்பலிலை சாமான்கள் வருகுதெண்டு சொல்லுகினம்"
"உது எங்களை ஏமாத்த இப்படிச் சொல்லுறான்கள்".
"இல்லை ஆச்சி சாமான்கள் வருகுது தான். ஆனால், வியாபாரியள் பதுக்கி வைச்சு கொள்ளை இலாபம் அடிக்கிறாங்கள்;" மோசக் காரர்கள்.
"அநியாயமாய் போவார் ஏன் இப்படிச் செய்யினம்".
"வேறு என்ன பண ஆசைதான்; பெரிய முதலாளிகளாகத் தான் பாக்கினம்"
"இஞ்சை எங்கடை சனம் சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள். நாசமாய் போவார் சாமான்களின்ரை விலையைக் கூட்டிவித்து சொர்க்கத்திற்கே போகப் போயினம்".
"ஏலாத நேரத்தில ஆச்சி கந்தசஷ்டி விரதம் பிடிக்க வேணுமோ?"
"எட மேனை எப்ப பாதையை மூடினாங்களோ அண்டைக்குத் தொடக்கம் கந்தசஷ்டி விரதம் தானே? ஒரு நேரம் தான் சாப்பிட வழி இருந்தது. இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு. அது தான் ஒரு இறாத்தல் பாண் வாங்கினால் இரண்டு நாளைக்குக் காலந்தள்ளலாம் எண்டு வந்தனான்".
சூரியனும் புதினம் பார்க்கப் புறப்பட்டு மேலெழுந்து கொண்டிருந்தான். நேரம் ஏற ஏறச் சூடு நிரம்பிய செங்கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.
நேரம் பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பாண் கியூவில் நின்றவர்கள் நன்றாகச் சோர்ந்து போனார்கள்.
பறுவதம் ஆச்சி தலையிலை சீலைத் தலைப்பைப் போட்டுக் கொண்டு வெய்யிலில் வெதும்பிக் கொண்டு நிற்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
"ஆச்சி நீங்கள் கியூவிலை நிற்க வேண்டாம். போய் அந்த குந்திலை இருங்கோ. கொடுக்கத் தொடங்கேக்கை வந்து வாங்குங்கோ நாங்கள் விட்டுத் தாறம்".
"பிள்ளையள் கவனமாய் நில்லுங்கோ. வெள்ளை வான் திரியுது எண்டு கேள்வி."
"சரி ஆச்சி"
பறுவதம் ஆச்சி நிண்டு நிண்டு சரியாகக் களைச்சுப் போனா. மற்றப் பக்கத்திலுள்ள கடைக்குந்தில் போய் இருந்தவ படுத்துத் தூங்கிவிட்டா.
****
பறுவதம் ஆச்சி கோண்டாவிலில் தான் இருக்கின்றா. புருசன் கந்தப்பு பத்து வருடங்களுக்கு முன்பு ஷெல் விழுந்து செத்துப்போனார். இரண்டு ஆம்பிளைப் பிள்ளைகள் இத்தாலிக்குக் களவாய் போகப் போனவங்கள் போனவங்கள் தான். இற்றைவரை எதுவிதமான தகவலும் இல்லை.
கணவன் இறந்த வேதனையாலும் பிள்ளைகளைக் காணாமலும் பறுவதம் ஆச்சி நல்லாய் நொந்துபோனர்.
ஊரில் உள்ள சில வீடுகளுக்குச் சென்று அரிசி இடித்து மாவாக்கி வறுத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் வயிற்றைக் கழுவி வந்தார். அதனாலை `மா இடிக்கும் பறுவதம் ஆச்சி' என்று எல்லோரும் அழைப்பார்கள். வேலைச் சுத்தம், மனச் சுத்தம் அதனால் எல்லோருடைய மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து வந்தா.
கல்யாண வீடு, சாமத்திய வீடு என்று வந்தால் பலகாரம் சுடுவதற்கு பறுவதம் ஆச்சி கட்டாயமாகக் கூப்பிடப்படுவா. அரியதரம், முறுக்கு, பால்றொட்டி, சிப்பி, பயித்தம் பலகாரம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தா.
****
"எடி வள்ளியம்மை வெறுந்தேத்தண்ணி குடிக்கேலாமல் கிடக்கு கொஞ்சச் சீனி தாறியே!
"உண்ணாணை அக்கா ஒரு சொட்டு சீனியும் இல்ல. அறுவான்கள் ஏழை எளியதுகள் வாங்க முடியாமல் நானூறு ரூபாயல்லே விக்கினம். அதுக்கும் கியூவாம்".
"பொன்னம்பலத்தாற்றை பெண்சாதி சொன்னா பேரப்பிள்ளைக்குக் கொடுக்க பால்மா இல்லையாம். அரிசி, மா, சீனி காசிருந்தாலும் வாங்கேலாமல் கிடக்காம். உள்ளிப்பூடு மூவாயிரம் ரூபாவுக்கு விக்கினமாம்."
"ஓமக்கா அவ சொல்லுகிறது உண்மை தான். எங்கடை இவரும் போய் கியூவிலை நிண்டு விட்டுத் திரும்பி வந்தவர். "
"இப்ப வேலைவெட்டி தொழில் துறையள் ஒண்டும் இல்லை. கியூவிலை நிற்கிற வேலை ஒண்டு மட்டும் தான் நடக்குது."
"நல்லாச் சொன்னியள் அக்கா".
"சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சனம் பட்டினியாலை சாகப் போகுதுகள்."
"அது ஒண்டுதான் இஞ்சை மலிவாய் கிடைக்கும் போலை தெரியுது".
"ஓமடி பிள்ளை தலையைச் சுத்துது நான் வாறன்" நாட்டு நிலைமை காரணமாக பெருந்தொகையான மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராகப் பறுவதம் ஆச்சியும் இருக்கின்றார்.
****
"ஆச்சி ஒழும்பெணே பாண் கொடுக்கத் தொடங்கி விட்டாங்கள்" என்று அவரின் கையில் மெல்லமாகத் தட்டுகிறன்.
அவ எழும்பவே இல்லை. நானும் என்னுடன் பாண் கியூவில் நின்ற வேறு சிலரும் சேர்ந்து முகத்திற்குத் தண்ணீர் தெளித்துப் பார்த்தோம். அவ அசைவதாய்த் தெரியவில்லை.
அவ போய்ச் சேர்ந்துவிட்டா. நாங்கள் பதறிப்போனோம். ஒரு ஏழைக்கிழ பரிதாபமாக மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
யாழ். பெரியாஸ்பத்திரி சவச்சாலையில் பறுவதம் ஆச்சியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அநாதைப் பிணம்.
அரசாங்க செலவில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊருக்கு உழைத்த பறுவதம் ஆச்சியை ஊரே மறந்துவிட்டது.
பட்டினிச் சாவை எதிர்நோக்கும் மக்களிடையே மனிதாபிமானத்தை எப்படிக் காண முடியும். யாழ்ப்பாணப் பட்டினத்தில் இருந்து சயிக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் வழி மறித்து "கொக்குவில் சம்பியன் ஒழுங்கையடியிலை இரண்டு பெடியங்களைச் சுட்டுப்போட்டாங்களாம்" என்றார்.
நான் கே.கே.எஸ். வீதி வழியால் போகாமல் நாச்சிமார் கோயிலடியாலை திருப்பி தின்னவேலிச் சந்திக்கு வந்து பலாலி றோட்டாலை போய் உரும்பிராய் சந்தியாலை திரும்பி மருதனார்மடத்தடிக்கு வந்து கே.கே.எஸ். வீதி வழியாக வீட்டை வந்து சேர்ந்தேன்.
வீட்டில ஒரே கூக்குரல் சத்தம். என்ன என்று வாசலில் நின்றவரிடம் கேட்டேன்.
"உன்ரை அப்பாவை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டார்களாம். அதுதான் கொம்மா குளறி அழுகிறா" என்று சொன்னார். அம்மா என்னைக் கண்டதும் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டா.
"அம்மா அழாதேங்கோ நான் பொலிஸிலும் போய் என்றி போட்டுவிட்டு வாறன்"
"தம்பி நீர் பொலிஸுக்குப் போக வேண்டாம். பணம் கறக்க ஆட்கடத்தல் வேலையில சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவையின்ரை வேலையாகத்தான் இருக்கும்" என்று மாமா கூறினார்.
வடபுலத்து நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று என் மனத்தில் தோன்றியது.
"அருந்தவன் அப்பான்ரை பாடு என்னவாம்"
"ஒண்டுமாய்த் தெரியேல்லை குஞ்சி"
"சனம் இஞ்சை சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள் அதுக்குள்ளை கப்பம் பெறுகிறதற்கு கடத்தலும் நடக்குது"
"யார் கடத்தினதெண்டு தெரிஞ்சால் போய்ப் பேசிப்பார்கலாமெண்டால் ஒண்டுமாய் தெரியேல்ல குஞ்சி."
"மனித உரிமைகளுக்கான கந்தோரிலை போய் அறிவிச்சனிங்களே?"
"ஓம் குஞ்சி, எல்லா வழியாலும் போய்ப்பார்த்தம் ஒண்டும் சரிவரேல்ல."
"தம்பி எங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரவேணும். விளக்கெரிக்க மண்ணெண்ணெய் இல்லை. அதுக்கிள்ளை மின்சாரத்தை நிப்பாட்டி ஆறு மணித்தியாலம் தான் தாறாங்கள். வெளிச்சம் இல்லாத நேரத்தில களவுகளல்லே நடக்குது. மூண்டு சங்கக்கடை உடைச்சு சாமான் எல்லாம் களவெடுத்துப் போட்டாங்களாம். வேறுகடையளும் உடைச்சிருக்காம் எண்டு சொல்லுகினம்."
"வருத்தக்காறரை அவசரமாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவும் வாகன வசதி இல்லை. பெற்றோல், டீசல் இல்லாதபடியால் கார், ஓட்டோ ஒண்டும் ஓடுறேல்ல. எரிபொருள் தட்டுப்பாட்டால் பஸ் போக்குவரத்தும் ஒழுங்கில்லை. பொதுசனம்தான் நல்லாய் கஷ்டப்படுதுகள். யாரை நொந்து என்ன பயன். காசு உள்ளவங்கள் எல்லாம் வெளிநாடெண்டு ஓடிவிட்டாங்கள். நாங்கள் ஏழையள்தான் இஞ்சையிருந்து கஷ்டப்படுகிறம். எங்களுக்கும் யமதர்மராஜன் தேதி குறிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்."
என்று குஞ்சி தனது ஆதங்கத்தை பொரிந்து கொட்டினார்.
சற்று நேரத்தில சயிக்கிளில் வேகமாக ஓடிவந்த அருந்தவத்தின் நண்பன் தியாகு....
"இஞ்ச மச்சான் உன்ரை அப்பாவை உடுவில் மல்வம் றோட்டிலை சுட்டுப் போட்டிருக்கு. நான் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வாறன்."
"ஐயோ அப்பா உங்களுக்கு ஏன் இந்த நிலை வர வேண்டும். எங்களை அநாதையாக்கிவிட்டுப் போய்விட்டீங்களே" என்று அழுதேன்.
"வா மச்சான் சயிக்கிள்ளை ஏறு போவம்."
நாங்கள் இருவரும் அங்கு போய்ச் சேர்ந்தபோது பொலிஸார் அங்கு காவலுக்கு நிற்கின்றார்கள். அவர்களிடம் போய் "இறந்திருப்பவர் எனது தந்தை என்று சொன்னேன்."
நீதிவான் வந்து விசாரணை முடிந்ததும் பிரேதத்தை யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுகின்றார்கள். நானும் தியாகுவும் வீட்டுக்கு வந்து விபரங்களைச் சொல்லிவிட்டு சின்னத்துரையற்றை காரிலை யாழ். ஆஸ்பத்திரியை நோக்கிச் செல்கின்றோம்.
இக்கொடுமைகளைப் பார்த்து சகிக்க முடியாமல் சூரியனும் மேற்கில் போய் மறைந்து கொண்டான்.

சிறுகதை- இணுவை வசந்தன்

ஜெய் ஸ்ரீராம் !!

புதுடில்லி: " சுதந்திர இந்தியாவில் உயர் ஜாதியினரின் நிர்வாகம் காரணமாகவே ஊழல் பெருத்து விட்டது' என, சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் முன், இடஒதுக்கீட்டை ஆதரித்து சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி வாதிட்டதாவது: இந்திய சமூகத்தில் பல நுõற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. அவர்களின் பழைய காயங்களுக்கு இடஒதுக்கீடு என்ற மருந்தை அரசு தடவி வருகிறது. உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த தற்போதைய தலைமுறையினர், தங்களின் மூதாதையர் செய்த தவறுகளுக்காக சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும். புத்திசாலியான வஞ்சகனை விட, நேர்மையான அப்பாவிக்குத் தான் நான் ஆதரவு தருவேன். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மூலம் பெயரளவில் உள்ள அறிவாளிகளையே உருவாக்க முடியும் என இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவித்த கருத்தே அவர்கள் மனு விவாதத்திற்கு ஏற்றதல்ல என்று எண்ண வைக்கிறது. அதற்காகவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆதிதிராவிட மக்களிடையே மிகவும் பின்தங்கிய மக்கள் இருப்பது மரபணு ரீதியான விபத்தே. குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த காரணத்துக்காகவே, பின்தங்கிய நிலையில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியவில்லை. அந்த அளவுக்கு சமுதாய அமைப்பு உள்ளது.இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதம் பேர் உள்ளனர். இதுவே, அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானது என்பதற்கு ஆதாரம். மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை மீறி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை, இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உருவாக்க பார்க்கின்றனர். ஆர்.வெங்கட்ராமன் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தான், இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் பழமையான தீர்ப்பு. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையில் இருந்து அந்த தீர்ப்பே நீக்கப்பட்டு விட்டது. உயர் ஜாதி மக்களின் அதிகார செல்வாக்கிற்கு இதுவே சிறந்த உதாரணம். உயர் ஜாதி மக்களின் நிர்வாகம் காரணமாகவே, சுதந்திர இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது.இவ்வாறு ராம் ஜெத்மலானி வாதிட்டார்.இந்த வழக்கில், டில்லி மாநில அரசு சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் அசோக் பான், " மண்டல் கமிஷன் அறிக்கை அமலான பிறகு டில்லியில் இதர பிற்படுத் தப்பட் டவர்கள் பட்டியலில் 85 புதிய ஜாதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. டில்லியின் மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். எனவே, டில்லி மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானதே' என்றார்.

கனிமொழி அமைச்சராகிறார்?

கனிமொழி எம்.பி. நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவரை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- நீங்கள் கவிஞராகவும், எம்.பி.யாகவும் ஆகிவிட்டீர்கள். மத்திய மந்திரியாக ஆவது எப்போது?


பதில்:- மத்திய மந்திரியாக ஆவேன் என்று ஆரூடம் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மத்திய மந்திரியாக ஆவேனா? மத்திய மந்திரியாக ஆக மாட்டேனா? என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. ஆனால் இப்போதுள்ள இந்த பதவி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.


பதில்:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்த பெண் எம்.பி.க்களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கலாமா?


பதில்:- நல்ல ஆலோசனை தான். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்த பெண் எம்.பி.க்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்வேன்.


கேள்வி:- ஆண்கள், பெண்கள் சம உரிமையால் நிறைய பேர் விவாகரத்து செய்யும் நிலைமை உருவாகி வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:- ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்று வரும்போது இது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் நடப்பதால் தான். எனவே ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் இத போன்ற பிரச்சினைகள் வராது.


கேள்வி:- தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத பெண்கள் தலைவர்களாக வந்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் பின்னால் ஆண்கள் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறதே?


பதில்:- உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு சில இடங்களில் தலைவிக்கு பின்னால், அவரது கணவர் செயல்படுகின்றனர். நாளடைவில் பெண்கள் தனியாக சிறந்த தலைவியாக செயல்படும் நிலைமை உருவாகும்.
ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற பின்பு மாநில அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி, அறக்கட்டளை நிகழ்ச்சிகள் வரை தினசரி ஏதோ ஒரு மேடையில் கனிமொழியைப் பார்க்க முடிகிறது. கலைஞருக்கு எதிராக உச்சநீதிமன்றமோ, தனிநபர்களோ, யார் விமர்சனம் செய்தாலும், அதை, தான் சார்ந்த இலக்கிய மற்றும் நட்பு வட்டங்களைப் பயன்படுத்தி பதிலடி தருகிறார் கனிமொழி. இந்த நிலையில், அவரைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து.......

டெல்லி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?

“நான் கலந்து கொண்ட முதல் கூட்டத்தொடர் கூச்சலும், குழப்பமுமாகத்தான் நடந்தது. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. மற்றபடி டெல்லி அனுபவங்கள் நன்றாகவே இருக்கின்றன. செய்திகளில் மட்டுமே பார்த்தும், கேள்விப்பட்டும் வந்த மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிர, இளம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஒட்டுமொத்த இந்தியாவில் நிலவும் முக்கியமான பிரச்னைகள் பற்றி விவாதிக்கவும், அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. ‘டெல்லி அரசியலில் கவனமாக இருங்கள்’ என்று சில நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். அதை நானும் மனதில் இருத்தி இருக்கிறேன்.’’

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்த உடனேயே வெகுண்டெழுந்து, அதுகுறித்து தனியாக கருத்தரங்கு நடத்தினீர்கள். ஏன்.. அப்பா மீது அல்லது உங்கள் தலைவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் என்பதாலா?

“இன்றைய காலகட்டத்தில் யாருமே கேள்வி கேட்கமுடியாத இடத்தில் எவர் ஒருவரும், எந்த அமைப்பும் இல்லை. இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் செய்த விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்ப விரும்பினேன். அப்பாவைப் பற்றி ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதையே தொழிலாகவும் சிலர் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி அப்பாவும் கவலைப்படவில்லை. நானும் கவலை கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் நிச்சயமாக வரம்பு மீறிய ஒன்று. மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதும்கூட. இந்த உணர்வுகளைத்தான் உரிய முறையில் வெளிப்படுத்த நினைத்தேன். இத்தோடு நில்லாமல் பல தளங்களிலும் இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒன்றே அவசியம் இல்லாதது என்பதை இப்போது மட்டுமல்ல; எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது அதைச் சொல்லவும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அவ்வளவுதான்.’’

சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி மட்டும் விவாதம் நடத்தாமல், ராமர் உள்பட வேறு விஷயங்களைப் பற்றியும் விமர்சனம் செய்ததால்தான் பிரச்னை திசை திரும்பிவிட்டதா?

“ஆமாம்.. ஆதம் பாலம் என்று சொல்லப்பட்டு வந்ததை திடீரென்று ராமர் பாலம் என்று சொல்ல ஆரம்பித்ததால்தான் பிரச்னை வேறு வடிவம் பெற்றது. சுற்றுச்சூழல், பொருளாதார நன்மை தீமைகள் பற்றி கருத்துக்களை எடுத்துச் சொல்லி விவாதம் செய்திருந்தால் அதில் நேர்மை, உண்மை உண்டு என்று ஒப்புக் கொள்ளலாம். எல்லாவற்றையும் அரசியல் ஆதாயத்திற்காக மாற்ற நினைப்பதை ஏற்க முடியாது இல்லையா? தவிர, வால்மீகி ராமாயணம் எழுதிய காலத்தில் ராமர் தென்னிந்தியாவிற்கே வரவில்லை. வட இந்தியாவில் அவர் இருந்திருக்கத்தான் வாய்ப்பு உண்டு என்று ரொமீலா தாப்பர் என்ற வரலாற்று ஆய்வாளரும்கூட எழுதியிருக்கிறார். இவர் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு உரிய பதிலைத் தராமல், வால்மீகி எழுதிய சில விஷயங்களை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, தலைவரை(கலைஞர்) மட்டும் ஏன் குறிவைக்கவேண்டும். அறிவுபூர்வமான வாதங்களை முன் வைக்க வேண்டியதுதானே?’’

ராமர் பாலம் என்ற ஒன்று இருந்ததா, இல்லையா? என்பதே சர்ச்சையாக இருக்கும்போது, அந்தப் பாலத்தில் ஆதம் நடந்து போனார் என்று சொல்லி புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறீர்களே?

“ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பதுபோல, ஆதம் அந்தப் பாலத்தில் நடந்துபோனதாகவும் இன்னொரு மதத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் உண்டு. கலைஞரின் விமர்சனத்தை, குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக சிலர் மாற்ற முயன்றபோது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவர் சில வாதங்களை முன் வைத்தார் என்பதற்காக இதைச் சொன்னேன். இதுபற்றி என்னிடம் கேள்வி கேட்கப்பட்டதால்தான் இதையும் சொன்னேன். வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் அறிவியல் உண்மைகளை மதங்கள் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தபோதும், பிற்காலத்தில் உண்மையை உணர்ந்து, மதங்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டதைக் காண முடியும். அறிவியல் ரீதியான காரணங்களை முன்வைத்து தங்கள் கருத்துக்களைச் சொல்லாமல், மத நம்பிக்கைகளை முன்வைத்து நாட்டு முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.’’

கலைஞரின் தலையை வாங்குவோம்.. நாக்கை அறுப்போம் என்றெல்லாம் வேதாந்தி செய்த விமர்சனம் உங்கள் கவனத்திற்கு வந்தபோது, அதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

“வேதாந்தி போன்றவர்கள் இருக்கும் கலாசாரத்திற்குள் இருந்து இதுமாதிரியான வார்த்தைகளைத் தவிர, வேறு நாகரிகமான விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. இதை நான் அப்பாவின் மீதான விமர்சனமாகப் பார்க்கவில்லை. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு, சுயமரியாதைக் கருத்துக்களுக்கு, பகுத்தறிவுக்கு எதிரான ஒன்றாகவும், அச்சுறுத்தும் முயற்சியாகவும்தான் அதைப் பார்த்தேன். இதைச் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்ற இயல்பான கோபம் எனக்கு வந்தது. மற்றபடி இந்த வயதிலும் மதவாதிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் கலைஞருக்கு நான் மகளாக இருப்பதிலும், அப்படிப்பட்டவரை என் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்.’’

கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற சிறுவயதில் கேட்ட கோஷங்களை இப்போது மீண்டும் கேட்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“பெரியாரின் கொள்கைகள், வார்த்தைகள் இன்றைக்கும் விட்டுவிட முடியாத விஷயங்கள் என்பதை உணர்த்துகின்றன. ‘அந்தக் கருத்துக்களுக்கு எல்லாம் அவசியம் இல்லை. அதற்கான காலம் முடிந்துவிட்டது’ என்று சிலர் சொல்வது உண்மையல்ல. எனவே, பகுத்தறிவுக் கொள்கை என்ற ஆயுதத்தைக் கீழே போட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. மீண்டும் மீண்டும் வலிமை சேர்க்க வேண்டிய அரண்களாக அவை இருக்கின்றன என்பதும் புரிகிறது.’’

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தயாநிதிமாறன் பற்றி விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.. அந்தச் சம்பவத்தால் கலைஞர் வேதனை அடைந்தார் என்று சொல்லியிருக்கிறீர்கள்.. மாறன் குடும்பத்துடன் விரிசல் வந்ததால் கலைஞர் வேதனை அடைந்தாரா? இல்லை.. அவர்களால் கலைஞர் வேதனையை அனுபவித்ததால் விரிசல் வந்ததா?

“இரண்டுமே காரணமாக அமைந்தது என்றுதான் நினைக்கிறேன். உடலில் ஒரு பாகத்தில் பிரச்னை.. அதனால் வேதனை என்றால் அதற்காக அறுவை சிகிச்சை செய்வோம். இந்த சிகிச்சையால் சிலகாலம் வேதனையை அனுபவிப்பது உண்டு. இப்போது வேதனைக்குக் காரணம், அந்த நோயா? அல்லது அறுவை சிகிச்சையா? என்று பிரித்துப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.’’

புதிய கட்சிகள் வரவுக்குப் பிறகு தி.மு.கவில் இளைஞர்களின் வரவும், இருப்பும் குறைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

“அரசியல் கட்சிகளில் முழுமையாக இணைந்து இளைஞர்கள் செயல்படுவது என்பது எல்லாக் கட்சியிலுமே குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால், தி.மு.க.வில் இருந்து பெருமளவு இளைஞர்கள் வெளியே போகிறார்கள் என்பது உண்மையல்ல. அண்ணன் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குப் பெருந்திரளாகக் கூடும் இளைஞர்களைப் பார்ப்பவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்யமாட்டார்கள்.’’

தே.மு.தி.க., அ.இ.ச.ம.க. போன்ற புதிய கட்சிகளின் வளர்ச்சி தி.மு.க.வை எந்தவகையிலும் பாதிக்காது என்று நம்புகிறீர்களா?

“தி.மு.கழகம் தோன்றிய பிறகு எத்தனையோ கட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவை எதுவுமே தி.மு.க.வை பாதித்ததாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த இயக்கமும் பலமான எதிர்க்கட்சியாகக்கூட வரவில்லை. அந்தக் கட்சியாலும்கூட தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. தி.மு.க.வின் பலத்தைக் குறைக்க முடியவில்லை. மற்றபடி எந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், முடிவையும் காலம்தான் முடிவு செய்யும்.’’

நாடறிந்த நடிகர்களுக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்காது என்று சொல்ல வருகிறீர்களா?

“நீங்கள் எந்த நடிகர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. எதிர்பார்ப்புகளை மட்டும் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் பற்றி மக்கள் தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.’’

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“சிலருக்கு ஐம்பது, அறுபது வயதுக்குள்ளாக மனரீதியான பிரச்னைகள் வந்து அவர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட சிலர் செய்யும் வாதங்களையும், கோஷங்களையும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.’’ (இது சூப்பரா இருக்கே )

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். அதில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. நீங்கள் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறதா?

“மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம். அது என்னையும் சேர்த்த மாற்றமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை.’’

கர்ப்பப்பை பாதுகாப்பு கருத்தரங்கு முதல் காவலர் குடியிருப்பு திறப்பு வரை, இசை நிகழ்ச்சி தொடங்கி, இஃப்தார் விருந்து வரை எல்லா இடங்களிலும் உங்களைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம், அன்புத் தொல்லையா? இல்லை ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதா?

“இரண்டும் இல்லை. நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி அழைக்கிறார்கள். தேர்ந்தெடுத்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். எல்லோரையும் போலவேதான் நானும் இதைச் செய்கிறேன்.’’

ஸ்டாலின் தன்னைக் கொலை செய்ய நினைத்தார் என்று ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“இதேதொனியில் அபத்தமான ஒரு குற்றச்சாட்டை ஜெயலலிதா முன்பு கூறியபோது, ‘ஜெயலலிதா அவர் வீட்டு மாடிப்படியில் ஏறும்போது இடறிவிழுந்தால்கூட, கருணாநிதிதான் படிக்கட்டில் எண்ணெய் ஊற்றிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு எதற்கெடுத்தாலும் நானே காரணம் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்’ என்று தலைவர் ஒருமுறை முரசொலியில் எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. அண்ணன் ஸ்டாலினைப் பொறுத்தவரை அவருக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு இடையில் இவரைப் பற்றிய நினைவுகூட வருமா என்று தெரியவில்லை. எதிரிகளை களத்தில் சந்தித்துப் பழக்கப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர் அண்ணன் ஸ்டாலின். இப்படிப்பட்ட தரக்குறைவான சிந்தனை அவருக்கு இருப்பதாக எவர் சொன்னாலும் அது அபத்தமான ஒன்றாகும். பொதுவாகவே, அரசியலை அரசியலால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இப்படித் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் கூறுவதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.’’

-குமுதம் ரிப்போர்ட்டர்

என்னதான் எழுதினார் ஞானி?

/பதிவுலகின் இன்றைய பரபரப்பான ஞானிக்கு இன்னும் மக்கள் சரியான எதிர் விணை புறிய மக்கள் வசதிக்காக விகடன் கட்டுரை இங்கே மக்கா படிச்சுட்டு எத்தால வேனாலும் அடிங்கோ/

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்பான் பாரதி. இந்த ‘ஓ பக்க’க் கட்டுரையும் அப்படித்-தான்... பாரதி வழியில் பேசாப் பொரு-ளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!

‘எந்த ஒரு சமூகம் தன் குழந்தை-களையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!’ என்பது அறிஞன் வாக்கு.



இதைச் சற்றே மாற்றியமைத்துச் சொல்வ-தானால், எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறதோ, அந்தச் சமூகம் ஒரு சுரண்டல் சமூகம்!’ என்பேன் நான்.

குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், படிப்பதும் விளையாடுவதும் தான். முதியவர்கள்..? இந்தச் சமூகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் போதுமான அளவு வேலை செய்து முடித்தாயிற்று. இனி உடலையும் உள்ளத்தையும் வருத்திக்-கொள்ளாமல் ஓய்வெடுப்-பதும்,


மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்துகொண்டு எஞ்சிய காலத்தை இனிமையான-தாகக் கழிப்பதும்தான் முதியவர்களின் நிஜமான தேவை. அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது-தான் குடும்பத்தின், சமூகத்தின் கடமை.

அப்படியானால், 84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைப்படுத்திக்கொண்டு இருப்ப-தைப் பார்த்து, நாம் ஏன் வாய் மூடிச் சகித்துக்கொண்டு இருக்கிறோம்?

கலைஞர் கருணாநிதிதான் அந்த முதியவர்!

அவருடைய சில கருத்துக்களுடனும், அரசியலுடனும், நிர்வாக வழி முறைகளுடனும் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டுதான். ஆனால், ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடு-வதைப் பார்த்துக்-கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கை-யில் பல துறைகளில் மிகுந்த புத்திக்-கூர்மையுடன் செயல்படுவதைத் தன் முத்திரை யாக நிலை நிறுத்திவைத்தி-ருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?

மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ

84 வயது முதியவர் ஒருவர் நம் வீட்டில் இருந்தால், அவர் இந்த நிலையிலும் வேலைக்குச் செல்வதை நாம் விரும்புவோமா? அனுமதிப்-போமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நடந்த உண்ணா-விரதப் பந்தலில், உட்கார்ந்த நிலையி-லேயே தன்னை மீறிய களைப்பில் அவர் தலை துவள்கிறது. உதட்டோரம் வடியும் எச்சிலை கைக்குட்டை எடுத்துத் துடைத்துக்கொள்ளவும் முடியாத அயர்ச்சியில் அவர் இருக்-கிறார். அவரால் நடக்க முடியவில்லை. சிறுசிறு அடிகளாக எடுத்துவைக்கும்-போது, இரு பக்கமும் பிடித்துக்-கொள்ள ஆட்கள் தேவைப்படு-கிறார்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்கவோ, நின்றிருந்தால் வாகாக உட்காரவோ, குழந்தையைப் போல அவருக்குப் பிடிமானம் தேவைப்படுகிறது.

என் அப்பா இந்த நிலையில் அலுவலக வேலைக்குப் போய்க்-கொண்டு இருந்தாரானால், நிச்சயம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் மகனாகவே நான் இருப்பேன்.



மேடைப் பேச்சுக்களில் ஒரு விஷயத்திலிருந்து இடையில் இன்னொன்றுக்குத் தாவிப்போய் விரிவாகப் பேசினாலும், மீண்டும் விட்ட இடத்துக்கே கச்சிதமாக வந்து அர்த்தத்துடன் கோத்துக்-கொள்ளும் பேச்சாற்றல் உடையவர் கருணாநிதி. இப்-போது பல வாக்கியங்களைப் பாதியில் விட்டுவிட்டு வேறொன்-றுக்குப் போய்-விடுகிறார். சட்டைப்பையில் வைத்த காகிதத்தை மறந்து-போய் வேறெங்கோ தேடிய-தையும், ஒரு காலில் கட் ஷ¨ கழன்றுபோனது-கூடத் தெரியாமலே தொடர்ந்து நடந்த-தையும் பத்திரிகைச் செய்தி தெரி-விக்கிறது.

இவை எதுவும் அவருடைய குறைகள் அல்ல; முதுமையில் எவருக்கும் இயல்பானவை. உடல் பலவீனமும், செயல் பலவீனமும் எல்லா மனிதர்-களும் முதுமையில் சந்தித்தே தீர வேண்டியவை. ஆனால், அப்போதும் கடும் உழைப்புக்கு அவர்களை உட்படுத்துவதை ஒரு குடும்பமும் சமூகமும் தொடர்ந்து செய்யுமானால், அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கருணாநிதி சராசரியாக இன்று ஒரு நாளைக்கு 18 மணி நேரமாவது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் அரசியல் உள்ளிட்ட பணிகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.

அரசாங்கக் கோப்புகளைப் படித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது, அரசியல் எதிரிகளுக்குப் பதில் அறிக்கைகளைக் காரசாரமாக உடனுக்குடன் வெளி யிடுவது, எதிரிகளிடமிருந்து மட்டு-மல்ல... கூட்டணி நண்பர்களிடமிருந்தும் தன் ஆட்சியைக் காப்பாற்ற தொடர் வியூகங்கள் வகுப்பது, முன்னாள் உடன்பிறப்புக்களும் இந்நாள் எதிரி-களுமான மாறன் சகோதரர்களை எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு அச்சுறுத்தலாக வளரவிடாமல் பல வீனப்-படுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது... இதெல்லாம் போக, எஞ்சிய நேரத்தில் தன் மனதுக்கு விருப்பமான இலக்கிய & சினிமா & விளை-யாட்டு ரசனைகளில் திளைப்-பது என்று, தான் விழித்-திருக்கும் 18 மணி நேரத்தில் 36 மணி நேரத்துக்-கான உழைப்பை அவர் கொடுத்தாக வேண்டியிருக்-கிறது.

இதில் பாதியைக்கூட, அவர் வயதில் பாதியளவே இருக்கும் ஒருவரால் செய்ய முடி-யாது. இதைப் பார்த்து பிரமிக்கி-றார்கள். Ôதலைவர் மாதிரி வருமா!Õ என்கிறார்கள். உண்மையில், இது பிரமிப்புக்கான விஷயம்தானா?

கலைஞர் கருணாநிதிக்கு இனிமேல் வாழ்க்கையில் அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; புதிய அவதூறுகளும் இல்லை; சந்திப்பதற்-கான புதிய விமர்சனங்களும் இல்லை. அவருக்-குச் சூட்டப்படும் புகழுரை-களும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் இனி புதிதாக மாறுவதற்கும் வழியும் இல்லை.

யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரீடத்தைத் தரித்திருக்க வேண்டும்? இதையெல்லாம் ‘விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலேÕ சுதந்திரமாகச் சிறகடிக்க வேண்டியவர் அவர். தன்னை உண்மையான பகுத்தறிவாளராக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் முதலமைச்சர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, எழுத்தாளர் & இலக்கியவாதி & சமூகச் சிந்தனையாளராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?

அவருடைய ரத்த வாரிசுகளும் அரசியல் வாரிசுகளுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி மூவருக்கும் ஒரு கேள்வி: ‘ஒரு தலைவராக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் உபாதைகளுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?’

தி.மு.க&வினருக்கு ஒரு கேள்வி: ‘கட்சிக்குள் ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதை எழுதாத விதி-யாக ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, இப்போதே ஸ்டாலினை முதல்வராக்கு-வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிவிட்டு, சோனியா கட்சித் தலைவராக இருந்து காங்கிரஸை வழிநடத்துவது போல, கட்சித் தலைவராக மட்டும் இருந்து-கொண்டு கலைஞர் உங்களை வழிநடத்-தினால், உங்களால் அரசியல் எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறீர்களா? உங்கள் அச்சத்தி-னால், ஒரு முதியவரை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டுமா?’

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு கேள்வி: ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ வேண்டுமென்று கேட்ட பாரதிக்கு அது 39 வயது வரைகூட வாய்க்கவில்லை. உங்களுக்கு அது 80 வயது தாண்டும் வரை வாய்த்தது. இன்னும் 20 ஆண்டுகள் உங்கள் விருப்பம் போல் ஓய்வெடுக்கவும், உங்கள் விருப்பம் போல் கருத்து தெரிவிக்கவும், உங்கள் விருப்பம் போல் கலை இலக்கியப் படைப்புகளில் ஈடுபடவும் தடையாக இருக்கும் பதவி யைத் தூக்கி எறியக்கூட வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்கு-கிறீர்கள்? இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உங்களை நீங்களேதானே விடுவித்துக்-கொள்ள வேண்டும்?

திராவிடத்தால் வீழ்ந்தோமா ?

பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.

-வே.ஆனைமுத்து

பாரதி நாத்திகனா சோ !?..

வாழ்க தமிழுடன்

பெறுநர்

சோ
ஆசிரியர்
துக்ளக்
சென்னை.

என்றென்றும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான சோவே தங்களின் 26.09.2007 தேதியிட்ட துக்ளக் தலையங்கம் கண்டேன். வெளிப்படையாகவே தமிழை, தமிழினத்தை தாங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள். இந்தத் தமிழர்களும் சூடு சொரணையற்றவர்களாக இதனையும் பார்த்துக் கொண்டு சும்மாத்தான் இருக்கப் போகின்றார்கள்.

00

இராமர் குறித்துத் தமிழக முதல்வர் கருத்துச் சொன்னால் தாங்கள் தமிழினத்தையே கேவலப்படுத்த முனைந்துள்ளீர்கள். உங்கள் உள்ளத்திற்குள்ளே நீண்ட நாட்களாக தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளீர்களோ அதனை மிகத்திறமையாக தங்கள் தலையங்கத்திலே எழுதித் தமிழினத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள்.

இராமன் என்று ஒருவன் இல்லை என்றால் அதற்குத் தொல்காப்பியனையும் திருவள்ளுவரையும் இழுக்க வேண்டிய அவசியம் என்ன.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்
நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்
ஒன்று உன்மையொன்றோதி மற்
றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்
கவிதை மிக நல்லதேனும் அக்
கதைகள் பொய்யெனத் தெளிவுறக் கண்டோம்

என்கின்றான் எங்கள் எட்டையபுரத்தான் பாரதி.

நண்பர் மாலன் குமுதம் இதழில் ஆசிரியராக இருந்த காலம் அதன் கடைசிப்பக்கத்தில் ஒருமுறை இந்தக்கவிதையினை வெளியிட்டிருந்தார். இந்தக் கவிதையைத் தாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. இது உண்மைக்கவிஞன் பாரதியின் வரிகள். வடமொழியை காசிச் சர்வகலாசாலையிலே கற்றவனின் கூற்று. இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்கின்றான் பாரதி.

நேரு நாத்திகர் என்று சொல்லி உள்ளீர்கள். அது நாடறிந்த உண்மை. ஆனால் பாரதி நாத்திகனா சோ!?..

கண்ணகியைப் பற்றி நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கின்றேன். அது அதீத கற்பனை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளுவப்பேராசானையும், தொல்காப்பியனையும் நாங்கள் சொல்ல மாட்டோம் நாங்கள் சொல்லமாட்டோம் என்றே நரித்தனமாக கொச்சைப்ப்டுத்தியுள்ளீர்களே.

தமிழின் மீது இத்தனை வெறுப்போடு ஏன் தமிழில் வார இதழ் நடத்துகிறீர்கள். தங்களின் மொழியான வடமொழியில் நடத்த வேண்டியதுதானே.

வான்மீகத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்தபோது தமிழர் பண்பாட்டிற்கேற்றபடி கம்பன் மொழிமாற்றம் செய்தான்.வான்மீகத்தை அப்படியே தமிழில் தாங்கள் தந்தால் அந்த நாகரிகத்தைத் தமிழர்கள் கேட்டுச் சிரிப்பார்கள்.

எல்லை தாண்டுகிறீகள் சோ.

தங்களைத் தாங்களே அறிவாளி என்றும் மேதை என்றும் மகுடம் சூட்டிக்கொள்கின்ற அறியாமையில் இருந்து விடுபடுங்கள்.

நல்ல தமிழர்கள் வீறுகொண்டு எழும் வரை தாங்கள் இந்த அறியாமையில் இருந்து விடுபட மாட்டீர்கள். தொல்காப்பியனையும், வள்ளுவனையும் தொட்ட உங்களை விடப் போவதில்லை தமிழர்கள்.

பார்ப்பீர்கள் விரைவில்..


-நெல்லை கண்ணன்
20/09/2007
நெல்லை நகரம்
சேது சமுத்திரத் திட்டம் 150 ஆண்டுகால கனவு. தமிழன் விழித்துக் கொண்டிருந்தாலே திட்டங்களை நிறைவேற்றப்படாத பாடு பட வேண்டும். கனவு கண்டு கொண்டிருந்தால் நிறைவேறுமா? அதுவும் 150 ஆண்டு கால கனவு. (சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அது தொடர்பான விளக்கங்களையும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.)

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிற நிலையில், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என வானர சேனைகளாக மாறியிருக்கிறார்கள் இந்துத்துவா அமைப்பினர். அந்த மணல் திட்டுகள் சாதாரணமானவையல்லவாம். ராமரால் பாதுகாக்க முடியாமல் போன சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிக் கொண்டு போனபோது, அவளை மீட்க வழி தெரியாமல் தவித்த ராமனுக்கு இன்ஜினியர் அனுமாரும் அவரது இனத்தைச் சேர்ந்த வானர சேனைகளும், அணில்குஞ்சும் சேர்ந்து கட்டிக் கொடுத்த பாலம் தான் அந்த மணல் திட்டுகளாம். அதனால், சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக் கூடாது என்பது தான் இந்துத்துவா அமைப்பினரின் வாதம்.

வடக்கிலேயே மார்க்கெட் போய்விட்ட ராமர் லேபிளை தெற்கில் வந்து வியாபாரம் செய்யலாம் என இந்துத்துவா அமைப்பினரும் அவர்களது அரசியல் கட்சியான பா.ஜ.கவும், சாதுக்கள் என்ற பெயர்கொண்ட ஆன்மீக அடவாடி (ஆ)சாமிகளும் கௌபீனத்தை (அட கோவணம் தாங்க) வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார்கள். இந்த ராமர் மார்க் இந்துத்துவாவிற்கு அமெரிக்காவின் நாசா அமைப்பிடமிருந்து ‘ஐஏஎஸ்ஓ 9001’ சான்றிதழ் வாங்கப் பார்த்தார்கள். நாசா எடுத்த செயற்கைக் கோள் படத்திலேயே அது பல லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமர் கட்டிய பாலம் தான் என்பது உறுதியாகிவிட்டது என இணையதளத்தில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாசமாய்ப் போக... நாசா அப்படியா சொல்லியிருக்கிறது? என அதன் அறிக்கைகளை கடலுக்கடியில் தொடர்ச்சியான மணல் திட்டு இருக்கிறது என்று தான் சொல்லியிருந்தது. இந்துத்துவாவின் இணையதள விற்பன்னர்கள் தான் அதற்கு ராமர் லேபிளை ஒட்டி விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. கடைசியில் நாசாவே ஒரு விளக்கமான அறிக்கையும் கொடுத்து விட்டது. அந்த மணல் திட்டு என்பது மனித முயற்சியில் உருவானதில்லை. (அதாவது நாசா விஞ்ஞானிகளுக்கும் ராமர் அவதாரம் என்றோ, லட்சுமணன் அவரது தம்பி என்றோ, அனுமான் அவர்களது பக்தர் என்றோ தெரியாது. எல்லோருமே அவர்களுக்கு மனிதர்கள் தான். அந்த மனிதர்களால் உருவாகவில்லை) இயற்கையாக உருவான மணல் திட்டுகள் என அறிவித்து விட்டனர்.

நாசாவின் ஐ.எஸ்.ஓ சான்றிதழை வைத்து ராமர் மார்க் இந்துத்துவாவை வியாபாரம் செய்து விடலாம் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதன் பிறகு தான், ராமர் பாலத்தை மீட்போம் என மகாயாகம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கோவணத்தை வரிந்து கட்டத் தொடங்கிவிட்டனர். ராமர் பாலத்தைக் காப்பதற்காக பல 100 பேர் உயிர்த்தியாகம் செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்றார் இந்து முன்னணி ராம கோபாலன். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்ற உமாபாரதியோ திடுமென தமிழகத்திற்கு வந்து, ‘பாலத்தைக் காப்பாற்றியே தீருவேன். முடிந்தால் கைது செய்து பார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் தொகாகடியா, பாலத்தை காக்கச் சொல்லி ஒரு கோடி பேர் கடிதம் எழுதுவோம். நாடு முழுவதும் சாலை மறியல் செய்வோம் என ஆவேசத்தைக் கிளப்பினார். 1 கோடி 3 கோடி 100 கோடி என அவர்கள் பேசினார்களே தவிர, அதனைத் தமிழகத்தில் தெருக் கோடிகளில் நின்று உலக அரசியலை அலசுபவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. இதனால் ராமர் பாணியிலேயே விதவிதமான பானங்கள் ஏவத் தொடங்கி விட்டார்கள். ராமர் பாலம் அமைந்துள்ள மணல் திட்டுகளில் உலகிலேயே எங்கேயும் கிடைக்காத தோரியம் கனிமம் இருக்கிறது. ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. 25 கிலோ மணல் எடுத்தால் ஒரு கிலோ தோரியம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ராமர் சேது பாலம் பாதுகாப்பு குழுவின் தலைவர் டாக்டர் கல்யாணராமன்.

ரொம்ப நல்லதாகப் போய் விட்டது. சேதுக் கால்வாயைத் தோண்டும் கருவிகளைக் கொண்டு அந்த மணலை எடுத்து, கரைக்கு கொண்டு வந்து தோரியத்தைப் பிரித்தெடுக்கத் தொடங்கினால், கடலும், ஆழமாகும், தோரியமும் கிடைக்கும். அரசுக்கு வருமானமும் பெருகும். சேதுக் கால்வாய்த் திட்டச் செலவுகளைத் தோரியத்தால் ஈடு கட்டிவிடலாம். எனவே, சீதையை மீட்கப் போன ராமர், அந்த மணல் திட்டுகளில் தோரியத்தைப் புதைத்து விட்டுப் போயிருந்தால் அது நாட்டுக்கு இலாபம் தான்.

இந்துத்வா அமைப்பினரின் அடுத்த பானம், ராமர் பாலத்தை இடித்தால் ராமேஸ்வரத்தை சுனாமி தாக்கும் என்பது தான். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என துணை பானங்களையும் ஏவுகிறார்கள். 2004ல் தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கிய போது ராமேஸ்வரம், திருச்செந்தூர் கடற்கரைகள் தப்பின. அதற்குக் காரணம், அவற்றிற்கு முன்உள்ள இலங்கைக் தீவு சுனாமியின் கோரத் தாக்குதலை எதிர் கொள்ள நேர்ந்ததால் ராமேஸ்வரம் தப்பியது. சேதுக் கால்வாய் பணிகள் நடைபெற்றாலும் இலங்கையை யாரும் எதுவும் செய்யப் போவதில்லை. அது அப்படியே தான் இருக்கும் என்பதால் ராமேஸ்வரத்திற்கு பெரிய ஆபத்து எதுவுமில்லை. ராமேஸ்வரம் அருகேயுள்ள மணல் திட்டுகள் கடலுக்குள் புதைந்திருக்கின்றன. இலங்கை என்கிற பெரிதான மணல் திட்டு, கடலுக்கு மேலே தீவாகக் காட்சியளிக்கின்றது. இது இயற்கையான அமைப்பேயன்றி பாலம், பைபாஸ் என்று எதுவும் கிடையாது.

இல்லாத பாலத்தைக் காப்பதற்காகத்தான் யாகம், ஆர்ப்பாட்டம் என வெற்று பானங்களை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ராமர் மார்க் இந்துத்துவா அமைப்பினர். ஆகஸ்ட் 26ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த மகாயாகம், மகாநாடு இவற்றிற்காக பல மாநிலங்களிலிருந்தும் ராமர் பக்தர்களைக் கொண்டு வந்து குவித்தன இந்த அமைப்புகள் ஆந்திராவிலிருந்து வந்த இந்துத்துவா அமைப்பினர், டிக்கெட்டே வாங்காமல் வைகை எக்ஸ்பிரஸிலும், குருவாயூர் எக்ஸ்பிரஸிலும் உள்ள ரிசர்வ் பெட்டிகளில் ஏறி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். முறையாக முன் பதிவு செய்திருந்த பணிகளுக்கு இடமில்லை. இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து விசாரித்திருக்கிறார்கள். மறுத்திருக்கிறார்கள் அந்த ‘வித்அவுட்’ ராமர்கள். அப்புறம் போலீஸ் ‘கவனிக்க’த் தொடங்க ராமர் பாலத்தை அப்புறம் காப்போம். இப்போது நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் என ஓடியிருக்கிறார்கள் இந்த ‘வித்அவுட்’ பேர்வழிகள்.

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்தவர்கள் தான், எந்த நூற்றாண்டிலும் கட்டப்படாத ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம் என்று குரல் கொடுக்கிற அதிசயக் காட்சியை காண முடிகிறது. ராமர், அணிலுடன் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் பாலம் கட்டிய ராமர், மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் ஒரு நல்ல பாலத்தைக் கட்டியிருக்கலாமே? வெள்ளைக் காரன் வந்து தானே இரண்டு ஊர்களுக்கும் நடுவே தண்டவாளத்தையும், திறந்து மூடும் வசதியுள்ள பாம்பன் பாலத்தையும் போட்டுவிட்டுப் போனான். ராமர் பாலம் கட்டாமல் விட்டதால், தான் பாம்பன் பஸ் பாலம் கட்டப்பட்டது.

தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாலம் போட்ட ராமர் அண்ட் கோ, மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாலம் போடாமல் எப்படிக் கடலை கடந்து சென்றது? அடுத்த மாநாட்டில் இந்துத்துவா அமைப்பினர் விளக்கட்டும். அதற்கு முன் மாநாட்டிற்கு வருபவர்கள் முறைப்படி ரயில்களில் டிக்கெட் வாங்கி வரட்டும்.

கோ.வி. லெனின்
திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கன்னு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோன்னு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/

ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசங்க. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவப்பட்டு என் 'டவுட்'ஐ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்.

ராமன் கட்டின பாலத்த சேதப்படுத்த கூடாதுன்னு சொல்லுறது சரிதானுங்க. அதே மாதிரி கங்கை ஆத்துல இருக்குற அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லணுமுங்க. கங்கை சிவபெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாங்க? அத எப்படி அணை கட்டி தடுக்கலாமுங்க ?

நீங்க அதுக்கு ஒரு வெப்சைட் போடணுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்ணிய ஆத்துல பொணத்த போடக்கூடாதுனாவது நீங்க சொல்லணுமுங்க.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."

எங்க அனுமாரு பசங்களை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விப்பட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாகாலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குறமாதிரி கட்ட முடியல! ஒரு பாலத்தக் கூட ஒழுங்கா கட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISIட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க?

பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க தெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மையா எதிர்க்க முடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேற....

"environmental impact" சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியப்போகுதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுற ப்ராஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளப்பணும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டணும்... இன்னும் எம்புட்டோ பெரிய பிரச்சினை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் ஏனுங்க நீங்க அடக்கி வாசிக்கிறீங்க?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"

இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க. உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்ணியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்'னு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குறாங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்.... காசக் குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க?

- பிரகாஷ் (jaya.v.prakash@gmail.com)



ராவணன் கருணாநிதி

ராமன்..... இந்திய அரசியலின் ஓட்டு வங்கியாக பார"தீய" சனதா கட்சியால் கண்டுபிடிக்கப் பட்ட வாக்கு எந்திரம். மக்களை பிரித்து அதில் மதத் துவேசம் வளர்த்து குடுமிகளை குண்டுபோட வைக்கும் கொடூர முகத்துக்கு சொந்தக்கார கட்சிகளின் அனாமதேய அரசியல் தலைவன்.

விஎச்பி எனப்படும் வெகுஜன விரோத கட்சியின் முன்னாள் எம்பி ஒன்று கருணாநிதியின் தலைக்கு எடைக்கு எடை தங்கம் தரத் தயாராக இருக்கிறதாக அறிவித்துள்ளது. ஜந்துக்கள் காலம் கூட மலையேறிவிட வேண்டும்.

முதலில் கலைஞரின் தலைக்கு விலைவைக்கும் மடையர்களுக்கு ஒரு கேள்வி அது கலைஞருக்கு மட்டும் சொந்தமானதில்லை மூடர்களே. தமிழ் பேசும் எல்லா மக்களுக்கும் சொந்தமானது, அப்படி இருக்க கலைஞரின் தலைக்கு எந்த முகாந்திரத்தில் விலை வைத்தீர்கள். கதாசிரியர், அரசியல் தலைவர், ஆளுங்கட்சி தலைவர், சினிமா பாடல் ஆசிரியர், இலக்கியவாதி என பல தலைகளுக்கு சொந்தக் காரர்தான் கலைஞர். அவரின் மொழிகேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு விலை வைக்கவேண்டும் அதுதான் கருணாநிதியின் உண்மையான விலையாக இருக்க முடியும் அதை விடுத்து வெறும் கருணாநிதியின் தலையை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.

நீங்களே சொல்வது போல பத்து தலை கொண்ட ராவணன் கருணாநிதி என்றால் கூட அதன் ஒற்றைத் தலைகூட அவருக்கு சொந்தமில்லை..மக்களுக்காய், தமிழுக்காய், தமிழனுக்காய் அயராது உழைக்கும் அந்த தலை தமிழினத்தின் தலையாய சொத்து. அதை விடுக்க கலைஞருக்கே உரிமை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா மூடர்களே?

ராமன் இல்லை என்பது இந்துக்கள் மனசை புண்படுத்துவதாக இருப்பின் எந்த பொதுஜன இந்துவும் "உங்கள் ராமனை அடிவருடும் கட்சி தலைவர்களை தவிர" வெளியில் வந்து போராட வில்லையே ஏன்? உண்மை சுடும் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் தெரியாமல் இருக்கிறது?. தமிழனுக்கு ஒரு விலைவைத்தால் அதுதான் கருணாநிதியின் விலை என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத மூடர்களே மக்களுக்கான போராட்டமாக எதையாவது என்றைக்கு செய்து தொலைக்கப் போகிறீர்கள்? ராமன் இல்லாத அரசியல் பூச்சாண்டிகள் என்றைக்கு உங்கள் கூட்டத்தில் உண்டாகும்?. அனுசக்தி ஒப்பந்த விசயத்தில் கூட உங்கள் எதிர்ப்பு இல்லையே இந்த அளவுக்கு. உங்களுக்கு ராமன் மேல் ஏன் இத்தனை பற்று?.

தமிழகத்தில் எந்த காலமும் உங்களால் காலடி வைக்க முடியாது என உண்மை தெரிந்து போனதால் இந்த கோபமா? ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திராவிடம் இல்லாத அரசியலை தமிழகத்தில் விதைக்க முடியாது என்பதால்தானே மடையர்களே இன்றைக்கு வந்த விசயகாந்து கூட திராவிடத்தை சேர்த்தார் பெயரில் மட்டுமாவது?.

தனது மதசார்பின்மை முகத்தை காவிக் கோவனம் மறைக்க "திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தார் என்ற கேள்வியை கேட்டு நானும் இந்துதான் பிஜேபியோடு கூட்டு வைக்க எந்த தடையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லும் விசயகாந்துக்கு ஒரு கேள்வி. நீ தமிழனா? எந்த காலேஜில் தமிழ் படித்தாய். மொழி சார்ந்த விசயங்களையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களையும் எந்த வித்யாசமும் இல்லாமல் கேள்வி கேட்கும் விசயகாந்துக்கு ஆட்சியை அள்ளிக் கொடுத்தால் அடக் கண்றாவியே.... என்றல்லவா இருக்கும்?. இதில் வளர்கிறாரம். கட்சிக்கு என்ன காம்ப்ளான் சப்ளையா செய்கிறார்?

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்க்கோர் குணமுண்டு என்பதை வாளெடுத்துதான் மெய்ப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் அதற்கும் தயார்தான் வரிசையாக வாருங்கள் முண்டங்களே.... உங்களின் ராமக் குறிகள் எங்கள் குறிகளாய் இருக்கும்.

ராமன் இருந்ததை வரலாற்று ரீதியாக தொல்லியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாத கோழைகள் நீங்கள் என்பது உலகத்தமிழனுக்கு தெரியும் என்பதாலேயே அவரின் சொற்கள் உங்கள் மனசை காயப் படுத்திவிட்டதாக "பத்துவா" தருகிறீர்கள் உங்களுக்கு மனசு எங்கேயடா இருக்கிறது? பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் கொலைசெய்யப் பட்டபோது எங்கே போனது உங்கள் மனசு? குஜராத்தில் கிழிக்கப் பட்ட முஸ்லிம்களின் குடல் தொங்கியபோது எங்கே போனது உங்கள் மனசு?, பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எங்கே போனது உங்கள் மனசு? ராமனின் பேரையும் சீதையின் பேரையும் சொல்லி கொலைகள் செய்யும் உங்களுக்கு மனசு இருக்கிரதா என்றே எங்களுக்கு சந்தேகம் இருக்கிறதே?

முதலில் உங்களுக்கு மனசு இருக்கிறதா இல்லையா என்று ஒரு மருத்துவ சான்றிதழ் கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் ராமன் இருந்தானா இல்லையா என்று. ஃபத்வா யாருக்கு வழங்கப் பட வேண்டும் என்று..

தமிழுக்கு இன்னொரு அணிகலன் தமிழ்ஓசை - இதுவெறும் விளம்பரமன்று, உண்மை.

மண் பயனுறச் செய்கிறது மக்கள் தொலைக்காட்சி - இதுவும் வெறும் பாராட்டன்று. தமிழ் மக்களின் ஒருமித்த கருத்து.

ஒரு நாளேடு, ஒரு தொலைக்காட்சி என இரண்டு துறைகளிலும் பெரும் சாதனை படைத்திருப்பவர். ஒரு ஆங்கிலச் சொல்கூடக் கலக்காமல், இலக்கணம் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாவதற்குப் பெரும் பின்னணியாக இருந்தவரும் நீங்கள். உங்களின் தமிழ் உணர்வு, தமிழ் இனப்பற்று ஆகியன வெறும் உதட்டசைவன்று, உள்ளத்திலிருந்து பீறிடும் உணர்ச்சி என்பதைப் பல நேரம் உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தவன் நான். தமிழ் உணர்வும், சமூகநீதியும் உங்களின் இருபெரும் கொள்கைகள், இரண்டுமே இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு மிகத்தேவையான கோட்பாடுகள் என்பதை அனைவரும் அறிவோம்.

1980களில் சாதாரண வன்னியர் சங்கமாக வெளிப்பட்டு, பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்து இன்று தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தில்லியிலும் கூட, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும். உங்களின் வளர்ச்சி எவரையும் மலைக்க வைக்கும். இனியும் பல கிளைகள் விரிந்து வானுயர வளரும் வல்லமை உங்களுக்கு உண்டு என்று நம்புகிறவன் நான்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. வோடு கூட்டணி அமைத்திருந்தாலும் உங்கள் போக்கு சற்று வேறுபட்டதாகவே உள்ளது. எதிரிக் கட்சியைப் போல இல்லாமல், நல்லதோர் எதிர்க்கட்சியைப் போல நாங்கள் செயல்படுவோம் என்னும் உங்களின் அறிவிப்பு ஆரோக்கியமானதுதான். எந்தவொரு கட்சியோடு நாம் கூட்டணி வைத்திருந்தாலும், மக்களோடு கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முகாமையானது. மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் நண்பனாகவும், அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டும் தோழனாகவும் நீங்கள் செயல்பட முனைவதில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்பதுதானே நம் வள்ளுவப் பேராசானின் வாக்கு.

இடித்துரைக்காத அரசு கெடும் என்பது உண்மைதான். அதேவேளையில், இடித்துக் கொண்டே இருந்தாலும் அது கெடும் என்பதை நீங்கள் உறுதியாய் அறிந்திருப்பீர்கள். என்ன காரணத்தினாலோ, தமிழக அரசை இப்போது நீங்கள் தொடர்ந்து இடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போக்கு இன்றைய அரசுக்கும், எதிர்காலத் தமிழ்நாட்டிற்கும் கேடுவிளைவித்து விடுமோ என்னும் அச்சம் காரணமாகவே இம்மடல் எழுத நேர்ந்தது.

இந்த ஆட்சிக்காலம் முடியும் வரையில், கண்டிப்பாக நாங்கள் இந்த அரசுக்குத் துணை இருப்போம் என்று நீங்கள் பலமுறை சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள். அதற்கு நீங்கள் அடிக்கடி அழுத்தம் கொடுப்பதே சில நேரங்களில் அச்சப்படுவதற்கும் காரணமாகின்றது. வெளிப்படையான உண்மைக்கு யாரும் அழுத்தம் தருவதில்லை, ஐயம் வரும்போதுதான் அழுத்தமும் வருகிறது.

தி.மு.க.விற்கும், பா.ம.க.விற்கும் இடையில் முற்றிக் கொண்டிருக்கும் அறிக்கைப் போர்கள், இரண்டுக்கும் இடையில் பிளவு வலுத்துக் கொண்டிருக்கிறதோ என்னும் எண்ணத்தையே உருவாக்குகிறது, பிளவு ஏற்படுமானால், உங்கள் இருவரில் யாருக்கு இலாபம், யாருக்கு நட்டம் என்னும் கணக்கை இப்போதே சில ஏடுகள் பார்க்கத் தொடங்கிவிட்டன. என்னைப் பொறுத்தளவு, உங்களுக்குள் ஏற்படுகிற பிரிவு, ஜெயலலிதாவிற்கு இலாபமாகவும், தமிழ் மக்களுக்கு நட்டமாகவும் முடியும் என்றுதான் கருதுகிறேன்.

மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நீதியின் குரல் போன்ற ஒருசில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஜெயா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கள் கோபத்தில், ஜெயலலிதாவின் புன்னகையைப் பார்க்க நேர்கிறது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தி.மு.க.விற்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இரண்டும் ஒன்றுதான் என்று குறிப்பிடும் சில தலைவர்களின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். சமமற்றவர்களைச் சமமாக்கிக் காட்டுவது மறைமுகமாக மோசமானவர்களுக்குத் துணை போவதுதான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

எங்கள் கூட்டணிக்கு வந்தால் மரு.இராமதாசை மரியாதையோடு நடத்துவோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதைப் படித்த போது என்னால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அவர்கள் ஊர் அகராதியில் மரியாதை என்ற ஒரு சொல்லே கிடையாது என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள் ஒருமுறை உங்கள் துணைவியாரின் வேண்டுகோளைக் கொச்சைப்படுத்தி ஒரு நாள் கூடச் சிறையில் இருக்கும் துணிவில்லாதவர் என்று உங்களை இழிவுபடுத்த அந்த அம்மையார் முயன்ற அநாகரிகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மதிப்பு தரப்படுமா இல்லையா என்பதைக் காட்டிலும், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருப்பது தமிழகத்திற்கு நல்லது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

குறையில்லாத மனிதன், குறையில்லாத கட்சி, குறையில்லாத ஆட்சி உலகில் எங்கும் இருக்க முடியாது. தி.மு.க. ஆட்சியிலும் குறைகள் இருக்கலாம். ஆனாலும் இன்றைய ஆட்சி மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிற ஒரு ஜனநாயக ஆட்சி என்பதையும், நேற்றைய ஆட்சி மக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்திய சர்வதிகார ஆட்சி என்பதையும் யார்தான் மறுக்க முடியும்.

இரண்டுமே வேண்டாம், மூன்றாவது அணியை முகிழ்க்க வைப்பதுதான் சரி என்று சிலர் கருதுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் மூன்று என்ன, முப்பது அணிகள் கூடத் தோன்றலாம். ஆனால் அதற்கான ஒரு சிறிய வாய்ப்புக் கூட இன்று இல்லை என்பதுதானே நடைமுறை உண்மை. அப்படியே இருந்தாலும், அந்த மூன்றாவது இடத்தில் நடிகர் விஜயகாந்த் நின்று கொண்டிருப்பதாக ஏடுகள் சில கணிக்கும் போது, நாம் எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் நம்மைத் தாக்குகிறது.

இந்தச் சூழலில், கலைஞர் தலைமையிலான தமிழக அரசைத் தொடர்ந்து எதிர்ப்பது ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்த் போன்றவர்களுக்கும் நம்மையறியமால் நாம் செய்யும் உதவியாக அல்லவா முடிந்துவிடும்.

இவ்வாறெல்லாம் நான் எழுதுவதன் மூலம், தி.மு.கழக ஆட்சியை எந்தவித விமர்சனமும் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என்று நான் கூறுவதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. உங்கள் எதிர்ப்பின் அளவும், கலைஞர் மீது நீங்கள் காட்டும் கசப்பின் அளவும் கூடிக்கொண்டே போவதாக என் போன்றவர்கள் கருதுகின்றோம். அது தி.மு.க.விற்குக் கேடுவிளைவிக்கும் என்பதற்காக அன்று, இந்நாட்டு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதற்காக நீங்கள் இருவரும் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இறுதியாக இரண்டு செய்திகளை நினைவுபடுத்தி என் மடலை நான் முடிக்கிறேன்.

அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் பா.ம.க. அதன் கூட்டணிக் கட்சியாக இருந்திருக்கிறது. அந்த வேளைகளில் அ.தி.மு.க. ஆட்சியின் குறைகள், தவறுகள் குறித்து உங்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம், எல்லாவற்றையும் அன்புச் சகோதரி பார்த்துக் கொள்வார் என்றுதான் விடையளித்திருக்கிறீர்கள். ஆளுங்கட்சியை எதிர்த்து அப்போது நீங்கள் பெரும் போராட்டம் எதையும் நடத்தியதாக எனக்கு நினைவில்லை.

இப்போதும் கூட, மத்திய அரசின் ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது. நீங்களே ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டியும் இருக்கிறீர்கள். ஆனால் மத்திய அரசை எதிர்த்துப் பெரும் போராட்டம் எதிலும் நீங்கள் ஈடுபடவில்லை. அன்று அந்த அன்புச் சகோதரியிடம் காட்டிய பரிவை, இன்று இந்த அன்புச் சகோதரரிடம் காட்டக் கூடாதா?

இன்றும் தில்லி அரசிடம் காட்டும் நிதானத்தை, தமிழக அரசிடமும் காட்டக்கூடாதா?

என் இரண்டு வினாக்களிலும் இருக்கும் நியாயத்தை நீங்கள் கோபப்படாமல் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
சுப.வீரபாண்டியன்


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார்.

‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன... தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்...?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, முன்பு ஒரு காலத்துல?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்... ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ & எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.

சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல... சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

என்றேன்.

துவங்கினேன்... ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.
விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்...’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்...

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்... என் வெளிச்சத்தில்.
சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே... அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.
அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.
காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.
என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான்.

அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.
என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.
என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.
உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.
அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

ராவணன் பிராமணன்

ராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியும் பிற இந்து அமைப்புகளும் இந்துக்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாகப் போராட்டங்களை நடத்தியது. எதிர்ப்பின் வலுகண்டு மறுநாளே, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மாற்றுப்பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, ஈரோடு முப்பெரும் விழாவில் பேசும்போது, ‘‘யார் ராமன்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.


முதல்வரின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்-திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘ராவணன் பிராமணன், ராமன் சத்திரியன்’ என்று இன்னொரு திரியையும் பற்றவைத்திருக்கிறார்.

சுவாமியை சந்தித்தோம். ‘‘கருணாநிதி ஆவேசப்படவும், ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை மறுநாளே வாபஸ் பெற்றுவிட்டதால், அதிர்ச்சியடைந்திருக்கும் கருணாநிதிக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை. இனிமேல் பகுத்தறிவுக் கதைகள் பேசி அரசியல் செய்ய முடியுமா? கவலை வந்துவிட்டது. ‘ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?’ என்று கேட்கும் இவரால், ‘கன்னிமேரிக்கு கர்த்தர் எப்படிப் பிறந்தார்’ என்று கேட்க முடியுமா? கருணாநிதி, இந்துக்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், கவர்னரிடம் அனுமதி வாங்கி அவர்மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்றவரிடம், ‘ராவணன் பிராமணன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’ என்றோம்.

‘‘ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான். அதனால் இனி, திராவிடக் கட்சிகள் சத்திரியனான ராமனுக்கு விழா எடுக்குமா?’’ என்றார்.

‘கீதாச்சார்யன்’ பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் நம்மிடம், ‘‘ராவணன் பிராமணன்தான். அவன் சாம வேதத்தில் நிபுணன். ஏகப்பட்ட யாகங்கள் செய்தவன். தேவ குலத்தில் பிறந்து தீய செயல்களில் ஈடுபடுபவனை அசுரன் என்றும், மற்ற இனத்தில் பிறந்து தீமைகள் செய்பவர்களை ராட்சதன் என்றும் சொல்வார்கள். அப்படித் தீமை செய்தவன்தான் ராவணன். மற்றபடி வால்மீகி ராமாயணத்திலோ, கம்ப ராமாயணத்திலோ ராமர் பாலத்துக்கான யாகத்துக்கு ராவணன் வந்ததாகத் தகவல் இல்லை. அதேநேரம், ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம் என்று நிறைய ராமாயணங்கள் உண்டு. சுவாமி குறிப்பிடும் சம்பவம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை’’ என்றார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவனிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ‘‘ராவணன் பிராமணன் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்வது சரியென்றால் வர்ணாசிரம தத்துவப்படி அவன் எப்படி ஆட்சி நடத்தியிருக்க முடியும்? சத்திரியன்தானே ஆட்சி நடத்த முடியும்? எங்களைப் பொறுத்தவரை ராமனை ஆரிய இனத்தின் அடையாளமாகவே பார்க்கிறோம். இப்போது பிரச்னை ராமன் சத்திரியனா, ராவணன் பிராமணனா என்பதல்ல. தமிழ்நாட்டுக்கு நன்மை தரக்கூடிய சேதுசமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

நன்றி: ஜூனியர் விகடன்