அய்யய்யோ

சமீபத்தில் ஒரு மூன்று நாட்களாக செந்தழல் ரவியின் பதிவுகளை காணவில்லை. அப்படியே போட்டாலும் வேலைவாய்ப்பு செய்திகளை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். என்ன வென்று நம்பத்தகுந்த வட்டாரங்களை விட்டு புலனாய்வு செய்ததில் கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமாக இருந்தது. அவர் அனுப்பிய ரகசிய மின் அஞ்சல் அம்பலமாகிவிட்டது. எனக்கு ரகசியமாக வந்த மின் அஞ்சல் இங்கே,

ஹாய் ஹாய் ஹாய்,

வரும் சனிக்கிழமை கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஹைதராபாத் வருகிறேன், அங்கு ஒரு நாள் தங்கி ஹோட்டலில் ரூம் போட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாக இருக்கிறேன். படித்த பட்டாத்தாரிகள் கூடும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் போண்டா போடும் வேலைக்கு நல்ல சமையல் ஆட்களை தெரிவு செய்வதற்கும், ரகசிய கேமரா மூலம் பதிவர் சந்திப்பில் கூடும் பதிவர்களை படம் பிடித்து போலியார்களுக்கு அனுப்புபவர்களை கண்கானிக்கும் வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் எனது கம்பெனி ஆர்வம் காட்டுகிறது. போலியர்களுக்கு தகவல் கொடுப்பவர்களை கண்டுபிடிக்கும் வேலைக்கு நிறைய பதிவர்கள் என் கம்பெனியை அனுகியுள்ளனர். இந்த வேலையைப் பற்றி பத்திரிக்கையில் விளம்பரம் செய்துவிடுங்கள். படித்த ஆண்கள் / பெண்களுக்கு இந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் எனது விஜயத்தில் 3 நாட்கள் கோல்கொண்டாவிற்கு செல்வதாக திட்டம் உள்ளது. ஆர்வம் உள்ள நண்ப/நண்பிகள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஹைதராபாத் வலைப்பதிவு போண்டா பிரியர்களை/நண்பர்களை சந்தித்துப்பேச ஆசை, பல நண்பர்களுடன் தொலை பேசினேன், தொலைபேசி மட்டுமே பேசியது. என்னை தொடர்பு கொள்ள வேண்டியவர்களுக்கு எனது செல்போன் எண் 98805 97061 மற்றும் அலுவலக எண் 00412987654 தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

போண்டா போடுவதற்கு ஆள் எடுக்கும் இந்த தகவல் ரகசியமாக இருக்கட்டும், அதிக கூட்டம் சேர்ந்தால் சமாளிக்க முடியாமல் போய்விடும். அப்படியே ஒரு நடுத்தெரு போண்டா நெட் காபே முழுவதையும் மூன்று நாட்களுக்கு முன்பதிவு செய்துவிடவும். வரவிரும்பும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் போண்டா மற்றும் மசால் தோசை ஆர்டர் செய்ய வசதியாக இருக்கும்.

இப்படிக்கு
செந்தழல் ரவி

இப்பொழுதான அவர் எந்த நோக்கத்தில் இந்த ஆள்தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. தனது பதிவுகளுக்கு அனானியாக பின்னூட்டம் இடுபவர்கள் மட்டுமே பின்னூட்டம் போடுவதாகவும் அதனால் தான் தமிழ்மணத்தில ப்ளாகர்கள் ஆதரவு இல்லாமல் தனித்து விடப் பட்டதாகவும் ஒரு நாள் என்னிடம் புலம்பினார். மேலும் அனானிகளை ஆதரிப்பது போலவே பதிவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும் பதிவர்களுக்கு போண்டா சப்ளை செய்து அவர்களை தனது நிரந்தர பின்னூட்ட சங்க உறுப்பினர்களாக ஆக்க கடும் முயற்சி செய்வது அம்பலமாகி உள்ளது ..


எப்பாடு பட்டாவது தனது சங்கத்தையும் தன்னுடைய பெயரையும் தமிழ்மண முகப்பில் தெரியவைக்க ரவி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்

பின்குறிப்பு: சங்கம் ஒன்றை தொடங்கும் முயற்சியில் சம்மந்தப் பட்ட பதிவர் இருப்பதாக இந்த மெயிலை எனக்கு அனுப்பிய அன்பர் தெரிவிக்கிறார்

பைரவன்

கிணத்துக்குள் கிடக்கும் வட்ட நிலவின் பிம்பம் கண்ட பைரவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தனது நான்கு கால்களையும் வளைத்து கிணற்றை நோக்கி வாலைக் குழைத்தவாறு குரைக்க ஆரம்பித்தார் . மேலே இருக்கும் நிலவு தண்ணீருக்குள் விழுந்து போனதாக ஒரு எண்ணம் போலும்.
அவருக்கு எப்போதும் இப்படியே நான்கு கால்களும் நான்கு வேதங்கள் போல அவற்றை மடக்கியபடியே நான்முகன் இருக்கும் திசை எதுவென்று தேடிக்கொண்டிருப்பார்.. அது அவர்தான் என்பதே தெரியாமல்.
என்னடா நாயை போய் மரியாதைகொடுத்து அவர் இவர் என்று அழைப்பதாக யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர் பைரவர்.. நான்கு வேதங்களை ஓதிய நான்முகன் பிரம்மன்.
முன்பு ஒரு காலத்தில் மானுடப் பிறவி வழிகாட்டல் இல்லாமல் மகத்தான மகோன்னதம் அடைந்த காலத்தில் இதை வைத்து நாம் கொஞ்சம் தேற்றலாமே என நினைத்த ஒரு பிறவி தங்களுக்கு வழிகாட்டுவதற்காக கடவுளை வேண்டினார்கள். அவர்களுக்கு முன்பு ஒரு நான்கு தலை நாய் தோன்றியது.
அந்த நான்கு தலை நாய் மனிதனைப் பார்த்து மனிதா இங்கே பார் நானே ப்ரம்ம தேவன்... இதோ நான்கு வேதம் ... இதனை சரியாக கேட்டுக் கொண்டு ..மனிதர்களைப் பிரிக்க வேண்டும் அப்படி பிரித்தால் மனிதர்களின் ஒரு பிரிவினர்கள் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.
மற்ற இருபிரிவினரும் உங்கள் செயல் சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் மற்ற இருவர்களின் பிறப்பு முதல் இறப்புவரை அவர்கள் மீது அக்கரை செலுத்துவது போல இரு பிரிவினர்களின் வாழ்க்கை முறையை வரையறுக்க வேண்டும்.. இதில் உங்களுக்கு இழப்பு இருக்கும் அதாவது அரசபதவி,வியாபாரம் நீங்கள் செய்யமுடியாது..
ஆனால் அதன் பலன்களை நீங்கள் அடையலாம் ! இப்படிசெய்யும் போது ... இதை நீங்கள் குலத்தொழில் போல அதாவது இந்த நான்கு வேதத்தை உங்களுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். இது வேறு எங்காவது செல்லும் போது அதன் சூட்சமம் வெளிப்பட்டு உங்கள் இனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். நாய்களை மக்கள் கல்லால் அடிக்க ஆரம்பித்துவிடுவர் என்று கூறி ம்றைந்தார்
அன்று முதல் நாய்கள் நான்முகனாக பார்க்கப்பட்டன . பைரவருக்கு தனது தலைகளை தேடுவதில் அவ்வப்போது சிக்கல் வரும் அப்போதெல்லாம் அவர் தேடி ஓடுவது நீர் நிலைகளுக்குத்தான். அங்கேதான் கண்ணாடி வசதி உண்டு. அதனது முகம் சரியாக பொருந்தி நான்முகம் நாய்முகமாக இருக்கிறதா எனத் தேடி அவர் அலையும் போது எல்லாம் வாலைக் கடிக்கும் பழக்கம் வருகிரது.
நாளு நாளாக அவருக்கு அதுவும் போய் பன்றிகளுக்கு காவல் காக்க ஆரம்பித்துவிட்டார். முன்பெல்லாம் பன்றிகள் மேல் பயங்கரக் கோபம் கொண்டவர்தான் பைரவர். ஆனால் இப்போது அப்படி யில்லை பன்றி வராகமூர்த்தியின் அவதாரம் எனத் தெரிந்து கொண்டு அவர் அதை நேசிக்க ஆரம்பித்து விட்டார். தன் காவலுக்கு இருக்கும் எல்லா பைரவர்களையும் ஒன்றாய் சேர்த்து இப்போது பன்றிக்காவல் மட்டுமே புறிகிறார்.

காரணம் இதுதான். வழக்கமாக பன்றிகள் தான் உண்டு தனது உணவுக்கு வழியுண்டு எனத்தான் இருந்தன ஆனால் கடந்த சில காலமாக ஒரு நல்ல காவலன் இல்லாத காரணத்தால் அடுத்தவர் விளை நிலத்தில் கால்வைத்து அங்கே சந்தனம் என்ற பெயரில் இருட்டில் திருட்டு வேலை செய்ய ஆரம்பித்தன.
இது எப்படி ஆயினும் குலத்துக்கு கேடாக வருமே என நினைத்த பைரவர் அவை இனியும் இப்படியே போனால் ஒரு நாள் அடிப்பட்டே சாகும் என அறிந்து அவை உணவுக்கு மட்டும் உழைத்தால் போதும் என அவர்கள் காலம்காலமாக அரும்பாடு பட்டு அடுத்தவர்மேல் தினிக்க நினைக்கும் குலத்தொழில் மட்டுமே செய்ய தலைப்படவேண்டும் எனப் பணிக்கலானார்.
பன்றிகள் கேட்காத போது சில கட்டுடைத்து வேறு இடம் தேடின, கொஞ்சம் அடிபட்டு வந்து ஓலமிட்டன. பைரவர் என்ன செய்வார். பாவம் அவருக்கும் இப்போது வேலை இல்லை.
வேதங்களை மனிதர்களும் படித்து மணியாட்டலாம் எனச் சொன்னதில் பைரவருக்கு கடும் கோபம். இப்போதெல்லாம் மனிதனை கண்டாலே பைரவருக்கு ஆத்திரம்தான். பன்றி வளர்த்த மனிதன் தானே இவன் நம்மை மீறி ஆலயம் சென்றால் அங்கே முன்பு மணியாட்டிய நமக்கு என்ன மரியாதை என நினைத்தார்.
அவருக்கு தெரியவில்லை பாவம் முன்பு பைரவர்கள் மட்டுமே காவலுக்காய் கோயில் இருந்ததால் மனிதர்கள் போட்டதை சாப்பிட்டு தனது காலத்தை ஓட்டி வந்தனர் ஆனால் இப்போது பைரவர்கள் கோயிலை மட்டும் நம்பி இல்லை..
ஆனால் மனிதர்கள் எப்போதும் போல மணியாட்ட முடியாது என பைரவர்கள் தடுத்ததால் புதிதாய் பொருப்பேற்ற மன்னன் இனி மனிதர்களும் மணியாட்டலாம் எனச் சொல்ல சில நல்ல பைரவர்கள் அதாவது அந்த தொழில் நமக்கு வேண்டாம் இத்தனை காலம் மனிதனை அண்டவிடாமல் செய்தது தவறு என எண்ணியவர்கள் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் மணியாட்டுவதை தனது மணிமகுடம் எனக் கருதிய சில வெறிகொண்ட பைரவர்கள் இனியும் பொருத்தால் கோயில் மனிதனுக்கு மட்டுமே என்றாகிவிடும் என எண்ணி தவறான முறையில் மனிதர்களை கடிக்க ஆரம்பித்தன.
பன்றிகளுக்கு மட்டும் ஒரு சட்டம் பைரவர்களுக்கு ஒரு சட்டமா என மனிதன் நினைக்காமல் இரண்டும் ஒன்றே எனத் தெரிந்தே வைத்திருந்தான் எல்லா பைரவர்களுக்கும் அவன் தடியெடுத்து அடித்து துறத்தி வைக்கவில்லை சில வெறிபிடித்து மனிதர்களை கடிக்க வந்த பைரவர்களை மட்டும் ஒதுக்கத் துவங்கினான்.
சில நேரம் அமைதிகாத்த அவை சில நேரம் எதற்கென்றே தெரியாமல் எல்லோரையும் கடிக்க ஆரம்பிக்க இவனுக்கு பைரவர்கள் என்றாலே வெறுப்பு வந்தது. அந்த நாயின் அறிவுறையை ஏற்ற ஒரு பிரிவினர் .. நாயின் வாக்கை வேதவாக்கு என்றனர்.

மனிதர்கள் பிரிந்தனர். கால ஓட்டத்தில் அந்த பிரிவில் சிலர் நாயின் பேச்சை மறந்தனர் ... சொந்த இனத்தையே தூற்றினர் ... அவர்கள் மற்ற பிரிவினருக்கு நல்லவராக தெரிந்தனர்... நாயின் வாக்கு செயல்பட ஆரம்பித்தது ....அன்று முதல் நாயைக் கண்டவர்கள் கல்லை எடுக்க ஆரம்பித்தனர் .
மனிதன் எங்கே கண்டாலும் பைரவரை அடிக்க ஆரம்பித்தான் இப்போது பைரவர் அடுத்த ஆள் எப்போது வருமென்று காத்துக் கிடக்கிறார். கடித்து வைக்கத்தான்.

இது ஒரு உள்குத்துப் பதிவு


சென்னை, செப். 9-ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் திடீரென முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அவ்வப்போது அதிரடி மாற்றங்களை செய்து வருவது வழக்கம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலாவுக்கும் கட்சியில் ஜெயலலிதா முக்கியஇடம் அளித்துள்ளார். அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக வி.கே. சசிகலா (தென்சென்னை மாவட்டம்) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று அறிவித்திருக்கிறார். அவருடன் முன்னாள் மந்திரி வளர்மதி ஜெபராஜ் உள்பட 44பெண்களும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக சசிகலா கலந்து கொள்வது வழக்கம். இனிமேல் அங்கீகார பதவியுடன் அவர் கலந்து கொள்வார். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சசிகலாவுக்கு உயர்பதவி அளிக்கப்படுவதற்கு முன்னோட்டம் தான் இந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவி என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக அ.தி. மு.க. செயற்குழு உறுப்பினராகத்தான் நியமித்தார். அதன் பிறகு கொள்கை பரப்புச் செயலாளர், எம்.பி. என பதவி உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்டர் கோவிந்தனின் கமெண்ட்: நடராஜனுக்கு பதவி குடுப்பாங்களா? இல்லை வழக்கம்போல அவரு வெளியதானா?

பின்னூட்ட (நயா)நாயகரா?

இந்த பதிவு எழுத காரணம் ஜிகே என என்னாலும் சிலரால், கோவியாரே என்றும், சிலர் GK என்றும், அவரால் கோவி கண்ணன் என்றும், செந்தமிழ் ரவியால் பின்னூட்ட நாயகர் என்றும் துப்பறியும் சாம்புவால் கரோலின் விவகாரத்தில் அடிபட்டவர் என்றும் அழைக்கப்படும் திரு . கோவி.கண்ணன் அவர்கள் தனது பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு பதிலில் இவ்வாறு சொல்கிறார்..

"நான் எந்த பதிவையும் உ முதல் உ வரைப் படிப்பதில்லை."

அப்படியென்றால் படிக்காமல் எப்படி எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுகிரார்? இவருக்கு பின்னூட்ட நாயகர் பட்டம் செல்லுமா? செல்லாதா என்று சொல்லுங்கள்?

குஷ்பு- கற்பு -வெங்காயம்

கோலிவுட்டில் பல கெட்டப்புகளில் பவனி வந்தாலும், வார்த்தைகளுக்கு அரிதாரம் பூசாமல் பேசுவதில் வல்லவர் நடிகர் சத்யராஜ். தற்போது ‘பெரியார்’ படத்தில் தந்தை பெரியார் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரியார் என்றாலே சர்ச்சைதான். அப்படியிருக்க, அவர் வாழ்வைச் சித்திரிக்கும் சினிமா பற்றியும் சர்ச்சைகள் கிளம்பியிருப்பது ஆச்சர்யமல்ல. இது குறித்து சத்யராஜிடம் சில கேள்விகளைக் கேட்டோம். வழக்கமாக லொள்ளாகப் பதில் சொல்லும் அவர், இம்முறை அதனை முழுமையாகக் குறைத்துக்கொண்டு சீரியஸாகப் பேசினார்.

‘‘கற்பு என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘என்னைப் பொறுத்தவரை, கற்பு என்கிற வார்த் தையே பெண் அடிமைத்தனத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஆணாதிக்க சக்திகளால் உருவாக்கப் பட்ட சூழ்ச்சிதான்.’’

‘‘பெரியார் படத்துக்கு அரசு 95 லட்சம் கொடுத்த விஷயம் விவகாரமாய் பேசப்படுகிறதே?’’

‘‘இது புதுவிஷயம் ஒண்ணும் கிடையாது. ஏற்கெனவே ‘காந்தி’ படத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது. ‘அம்பேத்கர்’ படத்துக்கு மகாராஷ்டிர அரசும், மத்திய அரசும் தனித்தனியாக நிதி கொடுத்திருக்காங்க. அப்படியிருக்க, ‘பெரியார்’ படத்துக்குக் கொடுப்பதில் என்ன தப்பு?’’

‘‘மணியம்மையார் கேரக்டரில் நடிகை குஷ்பு நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கேரக்டருக்கு அவர் ஒருவர்தான் பொருத்த மானவரா?’’

‘‘சினிமாவுக்கு முக அமைப்பு ரொம்பவும் முக்கியம். முக்கோண வடிவில், வட்ட வடிவில், சதுர வடிவில்... மனிதர்களுக்கு இப்படி பலவகையான முக அமைப்புகள் இருக்கு. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு ஏறக்குறைய முக்கோண வடிவ முகம். புரட்சித் தலைவருக்கு, சரத்குமாருக்கு சதுர வடிவ முக அமைப்பு. வட்ட வடிவமான முகம் சிவாஜி சார், ஜெமினிகணேசன், விஜயகாந்த்துக்கெல்லாம் இருக்கும். மணியம்மையாருக்கும் வட்ட முகம்தான். குஷ்புவோட முக அமைப்பு, அப்படியே அச்சுஅசலா பொருந்தியிருக்கு. முக அமைப்பு இருந்தால் மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேணும்... அது குஷ்புவிடம் நிறைய இருக்கு. இந்தியாவிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.

என்னைப் பெரியாராக நடிக்கத் தேர்ந்தெடுத்தப்ப, ‘பெரியாருக்கு உள்ள நீள்வட்ட முக அமைப்பு அப்படியே உங்களுக்குப் பொருந்தியிருக்கு’னு டைரக்டர் ஞானராஜசேகரன் சொன்னார். அப்பவே நான் ‘வேற யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறாங்க?’னு கேட்டேன். ‘குஷ்புவும் நடிக்கிறாங்க’னு சொல்லிட்டு, ‘மணியம்மை கேரக்டருக்கு குஷ்பு பொருத்தமா இருப்பாங்க’னும் சொன்னார்.

குஷ்புவைப் பற்றி இன்னொரு விஷயம்... நானாவது பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிய ஈடுபாடு கொண்டவன். அதனால் ‘பெரியார்’ படத்துக்குப் பணம் வாங்காம நடிக்கிறேன். ஆனால் குஷ்பு, தான் சினிமாவில் நடிக்க வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைதான் சம்பளமாக வாங்குகிறார். அப்படி என்றால், அவரும் இந்தப் படத்தில் நடிப்பதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெருமைக்குரிய விஷயமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப்பட்டவரைத்தான் இன்று விமர்சனங்கள் மூலம் வேதனைப்பட வைக்கிறார்கள்.’’

‘‘பெரியார் படம் மற்ற வரலாற்று நாயகர்கள் படத்திலிருந்து எந்த வகையில் வேறு பட்டிருக்கும்?’’

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல சிவாஜி சாருக்குப் படம் முழுக்க ஒரே கெட்டப்தான். ‘காந்தி’யில தென்னாப்பிரிக்க பாரீஸ்டர் காந்தி, அப்புறம் சுதந்திர போராட்ட கால காந்தி என்று ரெண்டே கெட்டப்தான். ஆனால் அறங்காவலர், வியாபாரி, நகரசபைத் தலைவர் இப்படி நிறைய முகங்களும் அனுபவங்களும் பெரியாருக்கு உண்டு. கட்டபொம்மன், வெள்ளைக்காரனுக்கு ‘வட்டி கட்டமுடியாது’ என்று மட்டும்தான் சொல்லியிருப்பான். ஆனால் படத்தில் வீரத்துக்காக ‘வரி, வட்டி, கிஸ்தி’ என்று கம்பீரமாக நம் இஷ்டத்துக்கு டயலாக் எழுதி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்த வேலையை ‘பெரியார்’ படத்தில் செய்ய முடியாது. ராஜாஜியோடு பெரியார் பேசியது, பாரதியாரோடு பேசியது, காந்தியோடு பேசியது என்று ஒவ்வொரு பேச்சுக்கும் ஆதாரமிருக்கிறது. அந்த ஆதாரங்களையெல்லாம் முக்கியமாக வைத்துக்கொண்டுதான் படமெடுக்கப்படுகிறது. அதனால், ரொம்பவும் ஜாக்கிரதையோடு படமாக்கப்படுகிறது... நானும் நடிக்கிறேன்.’’

‘‘படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டர் வருகிறதா?’’

‘‘பெரியார் தி.க. ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு பெரிதாக ஏதுமில்லை. இதுவரை எம்.ஜி.ஆர். சம்பந்தமான காட்சி எதுவும் எடுக்கவில்லை. அப்படி எதுவும் ஸ்கிரிப்ட்டில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி டைரக்டர் இதுவரையில் வெளியில் சொல்லவில்லை. அதனால் அதுபற்றி எனக்கும் தெரியவில்லை. மற்றபடி, இந்த விஷயத்தில் உங்களுக்கு விவரம் எதுவும் தேவையென்றால், அதை டைரக்டரிடம்தான் கேட்க வேண்டும்.’’

‘‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’

‘‘சினிமாவுல நிரந்தரப் பகை என்பதே கிடையாது. ‘எனக்குப் ‘பெரியார்’ படம் நல்லா வந்தா போதும்’ என்று தங்கர்பச்சான் தெளிவாகச் சொல்லிட்டார். ஏங்க, 200 வருஷமா இங்கிலீஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்... ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சுட்டுக் கொன்றான். இன்னிக்கு நாம அதையெல்லாம் மறந்துட்டு, லண்டன்லேர்ந்து வெள்ளைக்கார மந்திரி வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையா? வெள்ளைக்காரன் சண்டையையே நாம கண்டுக்கலை. இந்த தங்கர்&குஷ்பு சமாசாரம் எம்மாத்திரம்? பெரியார் பாஷையில் சொல்வதானால், அது ஒரு வெங்காயம்... விட்டுதள்ள வேண்டிய விஷயம்தான்.’’

‘‘சத்யராஜ் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுகிறவர், ஆடுகிறவர்... அவர் எப்படி பெரியார் கேரக்டரில் நடிக்கலாம் என்று ஒருசிலர் விமர்சிப்பது குறித்து..?’’

‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வேறு, நடிப்பு வேறு. மதுவைக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லீக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்பார்கள். அதனால் அவர் காந்தி கதாபாத்திரத்தில் நடித்ததே தப்பு என்று சொல்ல முடியுமா? சினிமாவுல நடிகர்கள் எல்லோரும் பலவிதமான கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஒரு நடிகரோட தனிப்பட்ட கேரக்டரை பார்க்குற நீங்க, அவர் செய்கிற கேரக்டரில் நேர்த்தியும், பெர்ஃபெக்ஷனும் இருக்கா என்பதையும் பாருங்க. அதைவிட்டுட்டு, அவர் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுவது பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏன் போறீங்க?’’

நன்றி-ஜூனியர் விகடன்

லிஃப்ட்- தேன்கூடு போட்டி


இது சொந்த கதை. இங்கே துபையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற 7 நட்சத்திர விடுதி (பர்ஜ் அல் அராப்) யின் லிஃப்ட்டில் ஒருமுறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அது தனியாக அங்கே வேலை செய்பவர்கள் துப்புறவுப் பணியாளர்கள் பயன் படுத்தும் லிஃப்ட்.

அங்கே யாரோ ஒரு குசும்பு ஆசாமி தனது கைவண்ணத்தை காட்டியிருந்தார் ஆங்கிலத்தில்.

"இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி பயர் டு நாட் யூஸ் லிஃப்ட்"

இதற்கு கீழே நம் குசும்பனின் கைவண்ணம்

"யூஸ் வாட்டர் "

A CUT AND PASTE POST- PERIYAR

நான் சாதாரணமான ஆள்தான். என் கூட்டத்தில் வந்து கூடியிருக்கிறீர்கள். சாதாரணமான ஆள்தான் என்றாலும் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் கும்பிடுகிற சாமிகளான ராமனையும், பிள்ளையாரையும் உடைத்து தூள்தூளாக ஆக்கினவன்.

பெரும்பாலோர் மதிக்கிற ராமனையும் அவன் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சீதை ஒரு ஒண்ணா நம்பர் விபச்சாரி; "அவள் சினையானதே' ராவணனால்; அதுவும் இலங்கையில் என்பதை ராமாயணத்திலிருந்தே எடுத்துக்காட்டி வருகிறவன். 20, 30 வருஷத்திற்கு முன்பாகவே நான் சாஸ்திரத்தை, மநுதர்ம சாஸ்திரத்தை நெருப்பிலே போட்டு எரித்தவன். இந்த ராமாயணத்தை எரிக்கணும் என்று சொன்னவன். எல்லோரும் ஜனநாயகம் (மக்களாட்சி) என்று சொல்வதை நான் முழுப் பித்தலாட்டம், மக்களைப் பிடித்த பேய் என்று சொல்லுகிறவன்.


சாதி ஒழியணும் என்பதுதான் எங்களுடைய முதலாவது கொள்கை. பார்ப்பானும் இருக்கக்கூடாது; பறையனும் இருக்கக்கூடாது; மனிதன்தான் இருக்கணும் என்று சொல்லுகிறோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லுகிறான். சாதி காப்பாற்றப்படும் என்பது, மூலாதார உரிமை என்று அரசமைப்புச் சட்டத்திலே எழுதி வைத்துக் கொள்கிறான். அதில் நாம் சூத்திரன் நாலாஞ்சாதி மக்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்! இதுக்குப் பேர் ஜனநாயகமா? நாம் 100க்கு 97 பேர். அவன்கள் 100க்கு 3 பேர். அவனிடம் ஆட்சி இருக்கிறது. அவன் சாதியைக் காப்பாற்ற சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற மற்றக் கட்சிக்காரனெல்லாம் அவன் போடுகிற எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு, அந்தச் சட்டத்தின் மீது சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு அவனுடைய சட்டசபையில் உட்காருகிறான். அவனுக்கு சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க முடியுமா? சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், கிளர்ச்சி தவிர வேறு ஏதாவது வழி நமக்கு இருக்கிறதா?

20 கோடி ரூபாய் இந்த வருஷத்து கல்விக்கு செலவாகிறதே! இவையெல்லாம் யாருடைய பணம்? நம் பணம்தான்; ஆனால் இதனால் படிக்கிறவன் நூற்றுக்கு நூறு பார்ப்பான் தானே? நாம் வரி கொடுத்துத்தானே இப்படிப் பணம் செலவிட முடிகிறது? நம்மிடத்தில் வரி வாங்கணும் என்றால், அவன் தேவையை உத்தேசித்து அல்ல. நம்மைப் "பாப்பராக' (பணம் இழந்தவன்) ஆக்கவேணும்; பிச்சையெடுக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? ஏன் நமக்குப் படிப்பு வராதா? நம் வாயிலே மாத்திரம் படிப்பு நுழையாதா?
இவற்றையெல்லாம் மீறி நம் பையன்கள் இப்போது படித்து விடுகிறார்கள்.


அதைத் தடுக்கவும் சூத்திரனைப் படிக்க விடக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் பார்ப்பான் செய்கிறான். வெளிப்படையாகச் சொல்லவில்லை. வேறுவிதமாக அதையே சொல்லுகிறான்.

பள்ளிக்கூடத்திலே தகுதி, திறமை அடிப்படையில் இனிமேல் சேர்க்கணும்; ஜாதி அடிப்படையில் பின் தங்கியவர்கள் இவர்கள் என்பதைப் பார்த்து, எந்தவிதச் சலுகையும் கூடாது என்பதாக ஓர் உத்தரவு போடணும் என்கிறான். இன்னும் நூற்றுக்கு 70 - 80 மார்க் வாங்கினவனைத்தான் சேர்க்கணும் என்கிறான்.

பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?

டாக்டர், எஞ்சினியர் என்று ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடிக்கிற உத்தியோகம் எல்லாம் நமக்குக் கிடைக்காதபடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து அவனே படிக்கும்படியான அளவுக்கு வசதி செய்து கொண்டான். வேறு ஒரு நாடாக இருந்தால், இந்த மாதிரி அக்கிரமம் செய்கிற பார்ப்பானைச் சுட்டுத்தள்ளியே இருப்பார்களே!

சாதாரணமாக நாட்டு வைத்தியம் பண்ணணும் என்றால், தனியாகப் பிராக்டீஸ் (தொழில்) செய்கிறவர்கள் ஒரு சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. ஓமியோபதி டாக்டர் என்கிறான். ஆனால், அலோபதி ஆங்கில மருத்துவர் டாக்டர் படிப்பு படிக்கணும் என்றால் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன அர்த்தம்?

3 பேர் வேலைக்கு வரணும் என்றால் 30 வருடமாக நாம் முட்டிக் கொள்ள வேணும். பார்ப்பான் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூச்சல் போடுகிறான் என்றால் இது எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத்தனத்திற்குக் கேள்வி கேட்பாரே இல்லையே! ஒரு பயலும் இதை எடுத்துக்காட்டி இதற்குப் பரிகாரம் தேடணும் என்று வருவதே கிடையாதே! நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது.

தகுதியும், திறமையும் தான் முக்கியமா? அதை அளப்பதற்கு தர்மா மீட்டர் பார்ப்பான்தானா? நம்மவன் படித்தால் என்ன, இவன் அப்பன் வீட்டு முதல் குறைந்தா போகிறது? முதலிலே ‘இண்டர்மீடியெட்' படித்தால் போதும் என்றான். இப்போது என்ன என்றால், நீ அது பாஸ் பண்ணியிருந்தாலும் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன போக்கிரித்தனம்!

மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்! அவன்தான் பெரிய பெரிய எஞ்சினியரை எல்லாம் நிர்ணயிக்கிறான். சீப் எக்சிகியூடிவ் எஞ்சினியர் போன்ற பலவித உத்தியோகஸ்தர்களையும் நியமிக்கிறான் என்றால் அதற்கு மாத்திரம் தகுதி, திறமை வேண்டாமா?


சேலம் - பொட்டிரெட்டிப்பட்டியில் 25.3.1959 அன்று ஆற்றிய உரை