ஜெய் ஸ்ரீராம் !!

புதுடில்லி: " சுதந்திர இந்தியாவில் உயர் ஜாதியினரின் நிர்வாகம் காரணமாகவே ஊழல் பெருத்து விட்டது' என, சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் முன், இடஒதுக்கீட்டை ஆதரித்து சீனியர் வக்கீல் ராம் ஜெத்மலானி வாதிட்டதாவது: இந்திய சமூகத்தில் பல நுõற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. அவர்களின் பழைய காயங்களுக்கு இடஒதுக்கீடு என்ற மருந்தை அரசு தடவி வருகிறது. உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த தற்போதைய தலைமுறையினர், தங்களின் மூதாதையர் செய்த தவறுகளுக்காக சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும். புத்திசாலியான வஞ்சகனை விட, நேர்மையான அப்பாவிக்குத் தான் நான் ஆதரவு தருவேன். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மூலம் பெயரளவில் உள்ள அறிவாளிகளையே உருவாக்க முடியும் என இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவித்த கருத்தே அவர்கள் மனு விவாதத்திற்கு ஏற்றதல்ல என்று எண்ண வைக்கிறது. அதற்காகவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆதிதிராவிட மக்களிடையே மிகவும் பின்தங்கிய மக்கள் இருப்பது மரபணு ரீதியான விபத்தே. குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த காரணத்துக்காகவே, பின்தங்கிய நிலையில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியவில்லை. அந்த அளவுக்கு சமுதாய அமைப்பு உள்ளது.இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதம் பேர் உள்ளனர். இதுவே, அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானது என்பதற்கு ஆதாரம். மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை மீறி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை, இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உருவாக்க பார்க்கின்றனர். ஆர்.வெங்கட்ராமன் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தான், இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் பழமையான தீர்ப்பு. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் அறிக்கையில் இருந்து அந்த தீர்ப்பே நீக்கப்பட்டு விட்டது. உயர் ஜாதி மக்களின் அதிகார செல்வாக்கிற்கு இதுவே சிறந்த உதாரணம். உயர் ஜாதி மக்களின் நிர்வாகம் காரணமாகவே, சுதந்திர இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது.இவ்வாறு ராம் ஜெத்மலானி வாதிட்டார்.இந்த வழக்கில், டில்லி மாநில அரசு சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் அசோக் பான், " மண்டல் கமிஷன் அறிக்கை அமலான பிறகு டில்லியில் இதர பிற்படுத் தப்பட் டவர்கள் பட்டியலில் 85 புதிய ஜாதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. டில்லியின் மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். எனவே, டில்லி மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கை சரியானதே' என்றார்.

கனிமொழி அமைச்சராகிறார்?

கனிமொழி எம்.பி. நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவரை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


கேள்வி:- நீங்கள் கவிஞராகவும், எம்.பி.யாகவும் ஆகிவிட்டீர்கள். மத்திய மந்திரியாக ஆவது எப்போது?


பதில்:- மத்திய மந்திரியாக ஆவேன் என்று ஆரூடம் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மத்திய மந்திரியாக ஆவேனா? மத்திய மந்திரியாக ஆக மாட்டேனா? என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. ஆனால் இப்போதுள்ள இந்த பதவி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.


பதில்:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்த பெண் எம்.பி.க்களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கலாமா?


பதில்:- நல்ல ஆலோசனை தான். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்த பெண் எம்.பி.க்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்வேன்.


கேள்வி:- ஆண்கள், பெண்கள் சம உரிமையால் நிறைய பேர் விவாகரத்து செய்யும் நிலைமை உருவாகி வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:- ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்று வரும்போது இது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல் நடப்பதால் தான். எனவே ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் இத போன்ற பிரச்சினைகள் வராது.


கேள்வி:- தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத பெண்கள் தலைவர்களாக வந்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் பின்னால் ஆண்கள் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறதே?


பதில்:- உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு சில இடங்களில் தலைவிக்கு பின்னால், அவரது கணவர் செயல்படுகின்றனர். நாளடைவில் பெண்கள் தனியாக சிறந்த தலைவியாக செயல்படும் நிலைமை உருவாகும்.
ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற பின்பு மாநில அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி, அறக்கட்டளை நிகழ்ச்சிகள் வரை தினசரி ஏதோ ஒரு மேடையில் கனிமொழியைப் பார்க்க முடிகிறது. கலைஞருக்கு எதிராக உச்சநீதிமன்றமோ, தனிநபர்களோ, யார் விமர்சனம் செய்தாலும், அதை, தான் சார்ந்த இலக்கிய மற்றும் நட்பு வட்டங்களைப் பயன்படுத்தி பதிலடி தருகிறார் கனிமொழி. இந்த நிலையில், அவரைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து.......

டெல்லி அனுபவங்கள் எப்படி இருக்கின்றன?

“நான் கலந்து கொண்ட முதல் கூட்டத்தொடர் கூச்சலும், குழப்பமுமாகத்தான் நடந்தது. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. மற்றபடி டெல்லி அனுபவங்கள் நன்றாகவே இருக்கின்றன. செய்திகளில் மட்டுமே பார்த்தும், கேள்விப்பட்டும் வந்த மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிர, இளம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஒட்டுமொத்த இந்தியாவில் நிலவும் முக்கியமான பிரச்னைகள் பற்றி விவாதிக்கவும், அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. ‘டெல்லி அரசியலில் கவனமாக இருங்கள்’ என்று சில நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். அதை நானும் மனதில் இருத்தி இருக்கிறேன்.’’

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்த உடனேயே வெகுண்டெழுந்து, அதுகுறித்து தனியாக கருத்தரங்கு நடத்தினீர்கள். ஏன்.. அப்பா மீது அல்லது உங்கள் தலைவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் என்பதாலா?

“இன்றைய காலகட்டத்தில் யாருமே கேள்வி கேட்கமுடியாத இடத்தில் எவர் ஒருவரும், எந்த அமைப்பும் இல்லை. இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் செய்த விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்ப விரும்பினேன். அப்பாவைப் பற்றி ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதையே தொழிலாகவும் சிலர் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி அப்பாவும் கவலைப்படவில்லை. நானும் கவலை கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் நிச்சயமாக வரம்பு மீறிய ஒன்று. மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதும்கூட. இந்த உணர்வுகளைத்தான் உரிய முறையில் வெளிப்படுத்த நினைத்தேன். இத்தோடு நில்லாமல் பல தளங்களிலும் இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒன்றே அவசியம் இல்லாதது என்பதை இப்போது மட்டுமல்ல; எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது அதைச் சொல்லவும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அவ்வளவுதான்.’’

சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி மட்டும் விவாதம் நடத்தாமல், ராமர் உள்பட வேறு விஷயங்களைப் பற்றியும் விமர்சனம் செய்ததால்தான் பிரச்னை திசை திரும்பிவிட்டதா?

“ஆமாம்.. ஆதம் பாலம் என்று சொல்லப்பட்டு வந்ததை திடீரென்று ராமர் பாலம் என்று சொல்ல ஆரம்பித்ததால்தான் பிரச்னை வேறு வடிவம் பெற்றது. சுற்றுச்சூழல், பொருளாதார நன்மை தீமைகள் பற்றி கருத்துக்களை எடுத்துச் சொல்லி விவாதம் செய்திருந்தால் அதில் நேர்மை, உண்மை உண்டு என்று ஒப்புக் கொள்ளலாம். எல்லாவற்றையும் அரசியல் ஆதாயத்திற்காக மாற்ற நினைப்பதை ஏற்க முடியாது இல்லையா? தவிர, வால்மீகி ராமாயணம் எழுதிய காலத்தில் ராமர் தென்னிந்தியாவிற்கே வரவில்லை. வட இந்தியாவில் அவர் இருந்திருக்கத்தான் வாய்ப்பு உண்டு என்று ரொமீலா தாப்பர் என்ற வரலாற்று ஆய்வாளரும்கூட எழுதியிருக்கிறார். இவர் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு உரிய பதிலைத் தராமல், வால்மீகி எழுதிய சில விஷயங்களை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, தலைவரை(கலைஞர்) மட்டும் ஏன் குறிவைக்கவேண்டும். அறிவுபூர்வமான வாதங்களை முன் வைக்க வேண்டியதுதானே?’’

ராமர் பாலம் என்ற ஒன்று இருந்ததா, இல்லையா? என்பதே சர்ச்சையாக இருக்கும்போது, அந்தப் பாலத்தில் ஆதம் நடந்து போனார் என்று சொல்லி புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறீர்களே?

“ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பதுபோல, ஆதம் அந்தப் பாலத்தில் நடந்துபோனதாகவும் இன்னொரு மதத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் உண்டு. கலைஞரின் விமர்சனத்தை, குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக சிலர் மாற்ற முயன்றபோது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவர் சில வாதங்களை முன் வைத்தார் என்பதற்காக இதைச் சொன்னேன். இதுபற்றி என்னிடம் கேள்வி கேட்கப்பட்டதால்தான் இதையும் சொன்னேன். வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் அறிவியல் உண்மைகளை மதங்கள் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தபோதும், பிற்காலத்தில் உண்மையை உணர்ந்து, மதங்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டதைக் காண முடியும். அறிவியல் ரீதியான காரணங்களை முன்வைத்து தங்கள் கருத்துக்களைச் சொல்லாமல், மத நம்பிக்கைகளை முன்வைத்து நாட்டு முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்.’’

கலைஞரின் தலையை வாங்குவோம்.. நாக்கை அறுப்போம் என்றெல்லாம் வேதாந்தி செய்த விமர்சனம் உங்கள் கவனத்திற்கு வந்தபோது, அதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

“வேதாந்தி போன்றவர்கள் இருக்கும் கலாசாரத்திற்குள் இருந்து இதுமாதிரியான வார்த்தைகளைத் தவிர, வேறு நாகரிகமான விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. இதை நான் அப்பாவின் மீதான விமர்சனமாகப் பார்க்கவில்லை. திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு, சுயமரியாதைக் கருத்துக்களுக்கு, பகுத்தறிவுக்கு எதிரான ஒன்றாகவும், அச்சுறுத்தும் முயற்சியாகவும்தான் அதைப் பார்த்தேன். இதைச் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்ற இயல்பான கோபம் எனக்கு வந்தது. மற்றபடி இந்த வயதிலும் மதவாதிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் கலைஞருக்கு நான் மகளாக இருப்பதிலும், அப்படிப்பட்டவரை என் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்.’’

கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற சிறுவயதில் கேட்ட கோஷங்களை இப்போது மீண்டும் கேட்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“பெரியாரின் கொள்கைகள், வார்த்தைகள் இன்றைக்கும் விட்டுவிட முடியாத விஷயங்கள் என்பதை உணர்த்துகின்றன. ‘அந்தக் கருத்துக்களுக்கு எல்லாம் அவசியம் இல்லை. அதற்கான காலம் முடிந்துவிட்டது’ என்று சிலர் சொல்வது உண்மையல்ல. எனவே, பகுத்தறிவுக் கொள்கை என்ற ஆயுதத்தைக் கீழே போட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. மீண்டும் மீண்டும் வலிமை சேர்க்க வேண்டிய அரண்களாக அவை இருக்கின்றன என்பதும் புரிகிறது.’’

கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தயாநிதிமாறன் பற்றி விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.. அந்தச் சம்பவத்தால் கலைஞர் வேதனை அடைந்தார் என்று சொல்லியிருக்கிறீர்கள்.. மாறன் குடும்பத்துடன் விரிசல் வந்ததால் கலைஞர் வேதனை அடைந்தாரா? இல்லை.. அவர்களால் கலைஞர் வேதனையை அனுபவித்ததால் விரிசல் வந்ததா?

“இரண்டுமே காரணமாக அமைந்தது என்றுதான் நினைக்கிறேன். உடலில் ஒரு பாகத்தில் பிரச்னை.. அதனால் வேதனை என்றால் அதற்காக அறுவை சிகிச்சை செய்வோம். இந்த சிகிச்சையால் சிலகாலம் வேதனையை அனுபவிப்பது உண்டு. இப்போது வேதனைக்குக் காரணம், அந்த நோயா? அல்லது அறுவை சிகிச்சையா? என்று பிரித்துப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.’’

புதிய கட்சிகள் வரவுக்குப் பிறகு தி.மு.கவில் இளைஞர்களின் வரவும், இருப்பும் குறைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

“அரசியல் கட்சிகளில் முழுமையாக இணைந்து இளைஞர்கள் செயல்படுவது என்பது எல்லாக் கட்சியிலுமே குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால், தி.மு.க.வில் இருந்து பெருமளவு இளைஞர்கள் வெளியே போகிறார்கள் என்பது உண்மையல்ல. அண்ணன் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குப் பெருந்திரளாகக் கூடும் இளைஞர்களைப் பார்ப்பவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்யமாட்டார்கள்.’’

தே.மு.தி.க., அ.இ.ச.ம.க. போன்ற புதிய கட்சிகளின் வளர்ச்சி தி.மு.க.வை எந்தவகையிலும் பாதிக்காது என்று நம்புகிறீர்களா?

“தி.மு.கழகம் தோன்றிய பிறகு எத்தனையோ கட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவை எதுவுமே தி.மு.க.வை பாதித்ததாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த இயக்கமும் பலமான எதிர்க்கட்சியாகக்கூட வரவில்லை. அந்தக் கட்சியாலும்கூட தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. தி.மு.க.வின் பலத்தைக் குறைக்க முடியவில்லை. மற்றபடி எந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், முடிவையும் காலம்தான் முடிவு செய்யும்.’’

நாடறிந்த நடிகர்களுக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்காது என்று சொல்ல வருகிறீர்களா?

“நீங்கள் எந்த நடிகர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. எதிர்பார்ப்புகளை மட்டும் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் பற்றி மக்கள் தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.’’

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“சிலருக்கு ஐம்பது, அறுபது வயதுக்குள்ளாக மனரீதியான பிரச்னைகள் வந்து அவர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட சிலர் செய்யும் வாதங்களையும், கோஷங்களையும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.’’ (இது சூப்பரா இருக்கே )

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். அதில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. நீங்கள் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறதா?

“மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம். அது என்னையும் சேர்த்த மாற்றமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை.’’

கர்ப்பப்பை பாதுகாப்பு கருத்தரங்கு முதல் காவலர் குடியிருப்பு திறப்பு வரை, இசை நிகழ்ச்சி தொடங்கி, இஃப்தார் விருந்து வரை எல்லா இடங்களிலும் உங்களைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம், அன்புத் தொல்லையா? இல்லை ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதா?

“இரண்டும் இல்லை. நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி அழைக்கிறார்கள். தேர்ந்தெடுத்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். எல்லோரையும் போலவேதான் நானும் இதைச் செய்கிறேன்.’’

ஸ்டாலின் தன்னைக் கொலை செய்ய நினைத்தார் என்று ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“இதேதொனியில் அபத்தமான ஒரு குற்றச்சாட்டை ஜெயலலிதா முன்பு கூறியபோது, ‘ஜெயலலிதா அவர் வீட்டு மாடிப்படியில் ஏறும்போது இடறிவிழுந்தால்கூட, கருணாநிதிதான் படிக்கட்டில் எண்ணெய் ஊற்றிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு எதற்கெடுத்தாலும் நானே காரணம் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்’ என்று தலைவர் ஒருமுறை முரசொலியில் எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. அண்ணன் ஸ்டாலினைப் பொறுத்தவரை அவருக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு இடையில் இவரைப் பற்றிய நினைவுகூட வருமா என்று தெரியவில்லை. எதிரிகளை களத்தில் சந்தித்துப் பழக்கப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர் அண்ணன் ஸ்டாலின். இப்படிப்பட்ட தரக்குறைவான சிந்தனை அவருக்கு இருப்பதாக எவர் சொன்னாலும் அது அபத்தமான ஒன்றாகும். பொதுவாகவே, அரசியலை அரசியலால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இப்படித் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் கூறுவதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.’’

-குமுதம் ரிப்போர்ட்டர்

என்னதான் எழுதினார் ஞானி?

/பதிவுலகின் இன்றைய பரபரப்பான ஞானிக்கு இன்னும் மக்கள் சரியான எதிர் விணை புறிய மக்கள் வசதிக்காக விகடன் கட்டுரை இங்கே மக்கா படிச்சுட்டு எத்தால வேனாலும் அடிங்கோ/

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்பான் பாரதி. இந்த ‘ஓ பக்க’க் கட்டுரையும் அப்படித்-தான்... பாரதி வழியில் பேசாப் பொரு-ளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!

‘எந்த ஒரு சமூகம் தன் குழந்தை-களையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!’ என்பது அறிஞன் வாக்கு.



இதைச் சற்றே மாற்றியமைத்துச் சொல்வ-தானால், எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறதோ, அந்தச் சமூகம் ஒரு சுரண்டல் சமூகம்!’ என்பேன் நான்.

குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், படிப்பதும் விளையாடுவதும் தான். முதியவர்கள்..? இந்தச் சமூகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் போதுமான அளவு வேலை செய்து முடித்தாயிற்று. இனி உடலையும் உள்ளத்தையும் வருத்திக்-கொள்ளாமல் ஓய்வெடுப்-பதும்,


மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்துகொண்டு எஞ்சிய காலத்தை இனிமையான-தாகக் கழிப்பதும்தான் முதியவர்களின் நிஜமான தேவை. அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது-தான் குடும்பத்தின், சமூகத்தின் கடமை.

அப்படியானால், 84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைப்படுத்திக்கொண்டு இருப்ப-தைப் பார்த்து, நாம் ஏன் வாய் மூடிச் சகித்துக்கொண்டு இருக்கிறோம்?

கலைஞர் கருணாநிதிதான் அந்த முதியவர்!

அவருடைய சில கருத்துக்களுடனும், அரசியலுடனும், நிர்வாக வழி முறைகளுடனும் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டுதான். ஆனால், ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடு-வதைப் பார்த்துக்-கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கை-யில் பல துறைகளில் மிகுந்த புத்திக்-கூர்மையுடன் செயல்படுவதைத் தன் முத்திரை யாக நிலை நிறுத்திவைத்தி-ருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?

மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ

84 வயது முதியவர் ஒருவர் நம் வீட்டில் இருந்தால், அவர் இந்த நிலையிலும் வேலைக்குச் செல்வதை நாம் விரும்புவோமா? அனுமதிப்-போமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நடந்த உண்ணா-விரதப் பந்தலில், உட்கார்ந்த நிலையி-லேயே தன்னை மீறிய களைப்பில் அவர் தலை துவள்கிறது. உதட்டோரம் வடியும் எச்சிலை கைக்குட்டை எடுத்துத் துடைத்துக்கொள்ளவும் முடியாத அயர்ச்சியில் அவர் இருக்-கிறார். அவரால் நடக்க முடியவில்லை. சிறுசிறு அடிகளாக எடுத்துவைக்கும்-போது, இரு பக்கமும் பிடித்துக்-கொள்ள ஆட்கள் தேவைப்படு-கிறார்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்கவோ, நின்றிருந்தால் வாகாக உட்காரவோ, குழந்தையைப் போல அவருக்குப் பிடிமானம் தேவைப்படுகிறது.

என் அப்பா இந்த நிலையில் அலுவலக வேலைக்குப் போய்க்-கொண்டு இருந்தாரானால், நிச்சயம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் மகனாகவே நான் இருப்பேன்.



மேடைப் பேச்சுக்களில் ஒரு விஷயத்திலிருந்து இடையில் இன்னொன்றுக்குத் தாவிப்போய் விரிவாகப் பேசினாலும், மீண்டும் விட்ட இடத்துக்கே கச்சிதமாக வந்து அர்த்தத்துடன் கோத்துக்-கொள்ளும் பேச்சாற்றல் உடையவர் கருணாநிதி. இப்-போது பல வாக்கியங்களைப் பாதியில் விட்டுவிட்டு வேறொன்-றுக்குப் போய்-விடுகிறார். சட்டைப்பையில் வைத்த காகிதத்தை மறந்து-போய் வேறெங்கோ தேடிய-தையும், ஒரு காலில் கட் ஷ¨ கழன்றுபோனது-கூடத் தெரியாமலே தொடர்ந்து நடந்த-தையும் பத்திரிகைச் செய்தி தெரி-விக்கிறது.

இவை எதுவும் அவருடைய குறைகள் அல்ல; முதுமையில் எவருக்கும் இயல்பானவை. உடல் பலவீனமும், செயல் பலவீனமும் எல்லா மனிதர்-களும் முதுமையில் சந்தித்தே தீர வேண்டியவை. ஆனால், அப்போதும் கடும் உழைப்புக்கு அவர்களை உட்படுத்துவதை ஒரு குடும்பமும் சமூகமும் தொடர்ந்து செய்யுமானால், அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கருணாநிதி சராசரியாக இன்று ஒரு நாளைக்கு 18 மணி நேரமாவது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் அரசியல் உள்ளிட்ட பணிகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.

அரசாங்கக் கோப்புகளைப் படித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது, அரசியல் எதிரிகளுக்குப் பதில் அறிக்கைகளைக் காரசாரமாக உடனுக்குடன் வெளி யிடுவது, எதிரிகளிடமிருந்து மட்டு-மல்ல... கூட்டணி நண்பர்களிடமிருந்தும் தன் ஆட்சியைக் காப்பாற்ற தொடர் வியூகங்கள் வகுப்பது, முன்னாள் உடன்பிறப்புக்களும் இந்நாள் எதிரி-களுமான மாறன் சகோதரர்களை எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு அச்சுறுத்தலாக வளரவிடாமல் பல வீனப்-படுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது... இதெல்லாம் போக, எஞ்சிய நேரத்தில் தன் மனதுக்கு விருப்பமான இலக்கிய & சினிமா & விளை-யாட்டு ரசனைகளில் திளைப்-பது என்று, தான் விழித்-திருக்கும் 18 மணி நேரத்தில் 36 மணி நேரத்துக்-கான உழைப்பை அவர் கொடுத்தாக வேண்டியிருக்-கிறது.

இதில் பாதியைக்கூட, அவர் வயதில் பாதியளவே இருக்கும் ஒருவரால் செய்ய முடி-யாது. இதைப் பார்த்து பிரமிக்கி-றார்கள். Ôதலைவர் மாதிரி வருமா!Õ என்கிறார்கள். உண்மையில், இது பிரமிப்புக்கான விஷயம்தானா?

கலைஞர் கருணாநிதிக்கு இனிமேல் வாழ்க்கையில் அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; புதிய அவதூறுகளும் இல்லை; சந்திப்பதற்-கான புதிய விமர்சனங்களும் இல்லை. அவருக்-குச் சூட்டப்படும் புகழுரை-களும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் இனி புதிதாக மாறுவதற்கும் வழியும் இல்லை.

யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரீடத்தைத் தரித்திருக்க வேண்டும்? இதையெல்லாம் ‘விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலேÕ சுதந்திரமாகச் சிறகடிக்க வேண்டியவர் அவர். தன்னை உண்மையான பகுத்தறிவாளராக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் முதலமைச்சர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, எழுத்தாளர் & இலக்கியவாதி & சமூகச் சிந்தனையாளராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?

அவருடைய ரத்த வாரிசுகளும் அரசியல் வாரிசுகளுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி மூவருக்கும் ஒரு கேள்வி: ‘ஒரு தலைவராக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் உபாதைகளுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?’

தி.மு.க&வினருக்கு ஒரு கேள்வி: ‘கட்சிக்குள் ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதை எழுதாத விதி-யாக ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, இப்போதே ஸ்டாலினை முதல்வராக்கு-வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிவிட்டு, சோனியா கட்சித் தலைவராக இருந்து காங்கிரஸை வழிநடத்துவது போல, கட்சித் தலைவராக மட்டும் இருந்து-கொண்டு கலைஞர் உங்களை வழிநடத்-தினால், உங்களால் அரசியல் எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறீர்களா? உங்கள் அச்சத்தி-னால், ஒரு முதியவரை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டுமா?’

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு கேள்வி: ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ வேண்டுமென்று கேட்ட பாரதிக்கு அது 39 வயது வரைகூட வாய்க்கவில்லை. உங்களுக்கு அது 80 வயது தாண்டும் வரை வாய்த்தது. இன்னும் 20 ஆண்டுகள் உங்கள் விருப்பம் போல் ஓய்வெடுக்கவும், உங்கள் விருப்பம் போல் கருத்து தெரிவிக்கவும், உங்கள் விருப்பம் போல் கலை இலக்கியப் படைப்புகளில் ஈடுபடவும் தடையாக இருக்கும் பதவி யைத் தூக்கி எறியக்கூட வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்கு-கிறீர்கள்? இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உங்களை நீங்களேதானே விடுவித்துக்-கொள்ள வேண்டும்?