அரசியலுக்கு வருவதற்கான எல்லா நல்ல தகுதிகளும் இருக்கும் இவருக்கு எனது முதல் வரவேற்பு




இவரும் வருவதால் திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி என்பது உறுதியாகிறது என்றுகூறி ஜல்லியடிக்கப்போகும் அம்மாவின் தொண்டரடி குண்டர்களுக்கு இப்போதே கதவை திறந்து வைக்கிறேன்

வட்டமிடும் கழுகுகள்

கலைஞர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘எதைக் கொண்டு’ இந்த ஆட்சியை அசிங்கப்படுத்தலாம்; அப்புறப்படுத்தலாம். என்று ஆதிக்க சக்திகள் தீவிர சிந்தனையிலும் செயலிலும் இறங்குவதுண்டு.‘அவசர நிலை’ அறிவிக்கப்பட்டிருந்தும் கூட, ஜனநாயகத்துக்கு ஆதரவாளர் களையெல்லாம் சென்னைக்கு வரவழைத்துப் பேச வைத்தார் என்கிற கோபத்தில் முதலில் ஆட்சி கலைக்கப்பட்டது.

தம்மை ஒரு திரையாகப் பயன்படுத்தி ஆதிக்க சக்திகள் நடத்திய திரைமறைவு வேலைகளைப் புரிந்து கொண்ட இந்திரா அம்மையார் ‘அவசர நிலை’க் காலத்தில் நடந்த அத்துமீறல்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.ஆளுநர் பரிந்துரையோ, சட்ட விதிமுறைகளோ தேவையில்லை. ‘அதர்வைஸ்’ - அதாவது எனக்குப் பிடிக்க வில்லை. என்று தனது சொந்த விருப்பத்தை, அதி காரத்தைப் பயன்படுத்தி மறு முறை ஆட்சியைக் கலைத்தார் யோக்கியர் வெங்கட ராமன். அதை நியாயப்படுத்துவதற்காகத் தேடிப்பிடித்து வெகு நாட்களுக்குப் பின் சொல்லப்பட்ட காரணம், ‘ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் கலைஞரைச் சந்தித்தார்’ என்பதுதான்.

‘அகதி’ யாகத் தமிழகம் வந்த கவிஞர் காசி ஆனந்தன் தனது மகளின் படிப்புக்கு உதவ முடியுமா? என்று கேட்கவே கலைஞரைச் சந்தித்தார்.ஆனால், காசி ஆனந்தன் கலைஞரைச் சந்தித்ததால் அவர் மூலம் இந்தியாவின் ரகசியங்களெல்லாம் இலங்கைக்குக் கடத்தப்பட்டிருக்கும் என்று ஆதிக்க சக்திகளின் மூளைகளெல்லாம் பொய்விரித்தன.இப்போது அதே காசி ஆனந்தனின் கவிதைகளை, பேட்டிகளை, காதல் விவ காரங்களை, அவருடைய மகள் திருமண நிகழ்ச்சியை ஆதிக்க சக்திகளின் ஏடுகள் ஆரவாரத்துடன் வெளியிடுகின்றனவே, இம்முறை ஈழத்து ரகசியங்களையெல்லாம் இவர்களுக்குக் கடத்திக் கொண்டுவந்து தந்தாரா?

இந்த ஏடுகளின் நாடகம் நமக்குப் புரியாததல்ல.எத்தனை முறை கவிழ்த்தாலும் மீண்டும் மீண்டும் இந்தச் ‘சூத்திரன்’ வெற்றி பெறுகிறானே... விடலாமா? இம்முறை எத்தனையோ, புனைவுகள்! ஐந்தாவது முறையாகக் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார் என்று தெரிந்த நாள் முதலே புதிய புதிய பொய்கள் போர் தொடுக்கும் வியூகங்கள் அதன் தொடர்ச்சியாகத் தான் நீதிபதிகளை ஆர்க் காடு வீராசாமி விமர்சித்தார்; கலைஞர் அதை வர வேற்கிறார். இந்த ஒரு கார ணத்தை வைத்தே சூத்திரன் ஆட்சியை ஒழித்து விடலாம் என்று அதிக்க சக்திகளின் மூளைகளெல்லாம் கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கின்றன.நீதிபதிகளைக் கஞ்சா வழக்கில் சிக்கவைக்கலாம்; காரைவிட்டு மோதவிடலாம், எங்களுடன் மோதினால் தீர்ப்புரைப் போருக்கும் இதுதான் கதி என்று. எச்சரிப்பதுபோல் கல்லூரி மாணவிகளைப் பேருந்திலேயே பூட்டி வைத்து உயிருடன் எரிக்கலாம், காவல் துறையைப் பயன்படுத்தி நீதிபதி மீது வழக்கு போட் டுக் கைது. செய்ய முடியுமா என்று ஆலோசிக்கலாம்...

இவ்வாறு எத்தனையோ ஜனநாயக முறையிலான, சட்டபூர்வமான சாத்வீக மான, ஆரோக்கியமான வழிமுறைகள் இருக்கும் போது நீதித் துறையின் மீது அதிருப்தி தெரிவித்து ஆர்க்காடு. வீராசாமி பேசலாமா?கருத்துச் சுதந்திரமா?அதைப் பயன்படுத்த சூத்திரர்களுக்கு அருகதை உண்டா?அவாள் ஏடுகள் எல்லாம் துள்ளிக் குதிக்கின்றன.ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெரிதா?ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டத்தின் ஆட்சி தான் என்பதைப் புரிந்து கொண்டு சட்டங்களையும் நீதிமுறைகளையும் காப்பாற்றும் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ள நீதிமன்றங்களின் உரிமைகள் பெரிதா? வெகுகாலமாகவே இப்படியொரு அதிகாரப் போட்டி அமைதியாகவும் உறுத்தல்களுடனும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இந்தியா பல தேசிய இனங்களையும் பண்பாட்டு முறைகளையும், கொண்ட நாடு என்பதால் ‘ஆயுதங்களே வலிமை வாய்ந்ததவை என்பதை அறியாத அற்பர் கள். நாங்கள் நினைத்தால்...’’ என்கிற அதிகார ஆசை பாதுகாப்புத் துறைகளுள்- ராணுவத்துக்குள்- வலிமை பெறாமல் போய்விட்டது.யோசித்துப் பார்த்தால்,

1. முடிவெடுக்கும் அதிகாரம்
2. அதனை மக்கள் நம்பும் விதத்தில் நடைமுறைப்படுத்தும் சாதுரியம்
3. சாதுரியம் சாத்தியமாகாத போது மூர்க்கமான முறையில் அடக்கும் ஆயுத பலம்.இந்த மூன்றும் சேர்ந்த பலாத்கார நிறுவனம்தான் அரசு என்பது.பல நூற்றாண்டுகளாக இந்த மூன்று ‘அணிகலன்’ களோடும் ‘முடியரசு’ அரியணையில் இருந்தது. வாரிசுரிமை, தெய்வீக உரிமை என்கிற பெயரில் அரசனே எல்லாமுகமாக இருந்தான்.காலம் மாறியது. வாளின் இடத்தை செல்வம் பற்றியது. பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை முதலாளித்துவம் மெய்ப்பித்தது.இப்போது மூலதனத்துக்கு முன் எல்லாத் திறமை களும் பணிப்பெண்களே! மார்க்சின் சொற்களில் சொல்வதனால் - ‘‘எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ; அங்கெல்லாம் அது மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது.

இது காறும் போற்றிப் பாராட்டப்பட்டு பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய்க் கருதப் பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது.மருத்துவரையும், வழிக்கறிஞரையும், சமய குருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர் ஆக்கிவிடாது.’’ஒரு கோடீஸ்வரன், இங்கே நான்தான் ராஜா என்று முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உண்மையில் அவனே ‘குடி யரசின்’ வேந்தன். நாடாளு மன்ற ஜனநாயகம், சட்டத் தின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு, ஆன்மீகம், அரசியல் எல்லாமே மூலதனத்துக்கு முன் கூலி அடிமைகளே!சரியாகச் சொல்வதனால் இங்கே உண்மையான ஜனநாய கம் இருக்க முடியாது. சுதந்திரமான நீதித்துறை இருக்க முடியாது. கட்டுப் பாடுள்ள ராணுவம் கூட இருக்க முடியாது.இது ஒரு பொது விதி என்றாலும், இந்திய சமூகக் கட்டமைப்பில் முதலாளித்துவ உள்ளடம்கூட இதர நாடுகளிலிருந்து தனித் தன்மை பெற்றிருக்கிறது.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறராகவே இருந்தாலும் இந்திய வரலாறு என்பது கூடுதல் பரிமாணமாகத் திராவிட ஆரியப் போராட்டங்களின் தொகுப்பாகவே இருக்கிறது.சுதந்திர(!) இந்தியாவின் அரசியல் சாசனத்தை விடவும் மனுதர்மமே இன்றும் இங்கே மதிப்பு வாய்ந்ததாய், செல்வாக்கு மிகுந்ததால், ஆதிக்கம் செலுத்துவதாய் இருக்கிறது.இங்கே தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவராக முதல் குடிமகன் என்கிற இடத்தில் அமரமுடியும். ஆனால் அவர் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஆரிய சனாதன சாத்திரங்களுக்குக் கட்டுப்பட்டவரே! காசிப் பல்கலை நிறுவனர் சிலையை ஜெகஜீவன்ராம் திறந்தால் சனாதன தர்மமே தீட்டாகிவிட்டதாய்த் துடித்த பிறபோக்குவாதிகள் அவர் சிலையைக் கழுவி வேதமந்திரங்களால் புனிதப் படுத்தினார்கள். காந்தி சிலை ‘புனிதமான’ அன்று முதல் குடிமகனின் மானமும் தகுதியும் இழிவு செய்யப்பட்டதே! மனுதர்மத்துக்குமுன் அரசியல் சாசனம் தலை குனிந்து நின்றதே!எனக்குச் சமமாக அதே விமானத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் பயணப் செய்வதா என்று ஓர் ஆரியப் பெண்மணி சினந்த பொழுது அந்த மத்திய அமைச்சர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார்.

தீண்டாமைச் சட்டம், மத்திய அமைச்சருக்கான, பாதுகாப்பு எல்லாம் இருந்தும் எப்படி இந்தக் கொடுமை நடந்தது? வானத்தில் பறக்க வாய்ப்பளித்தாலும் சூத்திரனும் பஞ்சமனும் பணிந்து நிற்கவேண்டியவர்களே என்பதை மறந்துவிடக் கூடாது என்று மனுதர்மம் ஆணையிடுகிறது. அரசியல் சாசனம் பகிரங்கமாகமான பங்கம் செய்யப்படுகிறது.நந்தன் காலத்திலிருந்து இன்று வரை சிதம்பரம் கோயிலுக்குள் உழைக்கும் மக்கள் நுழைய முடியவில்லை. தமிழன் கட்டிய கோயிலில் தமிழில் ஆராதனை செய்ய முடியவில்லை. கிளர்ந்தெழும் மானமுள்ளோர் தாக்கப்படுகிறார்கள். அரசியல் சாசனத்தின் உறுதி மொழிகள் எல்லாம் மாய மாய் மறைந்து விடுகின்றன. ஏன்?

ஏனென்றால் மனுதர் மத்தைப் பகைத்துக் கொள்ளும் அளவிற்கு அரசியல் சாசனம் ஒன்றும் பாமரத்தனமானது அல்ல.இந்த நாட்டில் எரியும் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதன் பின்னணியில் மனுதர்மத்துக்கும் மனித தர்மத்துக்குமான போராட்டமே மறைந்திருக்கும்.மூன்று சதவிகிதமே உள்ள ஒரு பிரிவினர் முழு தேசத்தையே முடக்கிவைக்க முடியுமா? என்று கேட்கலாம். எவ்வளவுதான் அறிவும் ஆற்றலும் உள்ள இனமாக இருந்தாலும் அது பண்பாடுள்ள இனமாக இருந்தால் எதிரிகள் அதை எளிதில் வெற்றி கொண்டுவிடுவார்கள் என்பதுதான் வரலாறு.வரலாற்றாசிரியரும் தத்துவ மேதையுமான ராகுல சாங்கிருத்தியாயன் எழுதுகிறார்.

‘‘முரடர்களும் சண்டைப் பிரியர்களுமான ஜெர்மானியர்கள், நாகரிகமும் பண்பாடும் மிகுந்த ரோமானியர்களையும் கி.பி. நாலாம் நூற்றாண்டில் அழித்து விட்டார்கள். அதைப் போலவே ஆரியர்களும் சிந்து நதி தீரத்தில் வாழ்ந்திருந்த மக்களைத் தோற்கடித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்தினர்.’’இதோ நேரு எழுதிய ‘உலக சரித்திரம்’ நம் கண் முன்னே விரிகிறது.‘‘ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அது ஏற்கனவே நாகரிகம் வாய்ந்த நாடாக இருந்தது. மொகஞ்ஜோதாரோவில் நமக்குக் கிடைத்திருக்கும் சான்றுகளிலிருந்து ஆரியர்களின் வருகைக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இந்தியாவின் வட மேற்குப் பாகத்தில் திராவிடர்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்றிருந்தது என்று தெளிவாகத் தெரிகிறது. ஆரியர்கள் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல் ஆசியாவின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டுப் பரவினார்கள்.

‘‘இந்திய ஆரியர்களையும் கிரேக்க ஆரியர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் ஒருவித ஜனநாயகம் இருந்தது.ஆனால் இந்த ஜனநாயக உரிமைகள் ஆரியர்களுக்கு மட்டுமே என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவர்களின் (ஆரியர்களின்) கீழ் அடிமைகளாக இருந்தவர்களுக்கும் அவர் களால் தாழ்ந்த சாதிகள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் ஜனநாயகமோ, சுதந்திரமோ கிடையாது.‘‘தாங்களால் வெற்றி கொள்ளப்பட்ட மக்களிட மிருந்து பிரிந்து வாழ்வதற்காக சாதி முறையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆரியர்கள் தங்களைத் தவிர மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இறுமாப்பும் வீண் பெருமையும் கொண்டிருந்த தோடு, மற்றவர்களோடு தாங்கள் கலப்பதையும் விரும்பவில்லை...’’நேரு மேலும் எழுதுகிறார்:

‘‘தங்களை ஆளும் அரசர்கள் ‘தவறி’ நடக்க அவர்கள் (ஆரியர்கள்) விடுவதில்லை. தவறு செய்யும் மன்னன் உடனே நீக்கப்படுவான்...’’சரி; அரசர்களின் ‘சரி’ ‘தவறு’களை முடிவு செய்வது யார்? அவர்கள்தான்.அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்தும் உரிமை தனக்கு உண்டு என்றே அவர்களில் ஒவ்வொருவரும் நம்புகிறான்.இந்த நம்பிக்கையோடு அவன் அரசியலைக் கண்காணிக்கிறான்.கலைஞரை அவனுக்குப் பிடிக்கவில்லை; உடனே கழக அரசு கலைக்கப்படுகிறது.வி.பி. சிங்கை அவனுக்குப் பிடிக்கவில்லை; அவ்வளவு தான்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுகிறது. தேசமே தீப்பற்றி எரிகிறது.இன்று போல் அன்றும் தான். பல தமிழ் மன்னர்கள் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார்கள். மனுதர்மத்துக்குப் பயந்து ஒருவன் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான்.

இன்னொரு மன்னன் தன் கையையே வெட்டிக் கொண்டான்.‘நீதி’ காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னையும் தன் வம்சத்தையும் வருத்திக் கொண்டவர் வரலாறுதான். திராவிடர்களின் தமிழர்களின் வரலாறு.தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, தனக்கு எது வெற்றியைத் தருகிறதோ அதுதான் ‘சரி’, அதுதான் ‘நீதி’ என்று சாதிப்பதுதான் மனுவாதிகளின் வரலாறு.சாணக்கியனின் சந்தர்ப்ப வாதங்களும், சதிகளும் ராஜ தந்திரம் அர்த்த சாஸ்திரம் - என்று கொண்டாடப்படு கிறதென்றால் அவர்களின் நீதி நேர்மை பற்றிய உச்சாடனங்களுக்கு என்ன பொருள்?ஈராயிரம் ஆண்டுகளுக்கும், மேலாக நடக்கும் இந்தக் கருத்து முரண்பாடுகளின், இனப் போராட்டங்களின் உள்ளடக்கத்தை இந்திய சமூக அமைப்பின் ஒவ்வொரு, அம்சத்திலும், ஒவ்வொரு அசைவிலும் பார்க்கலாம். இப்போது ‘நீதிபதிகளின் கௌரத்துக்காகக் குரல் கொடுக்கும் ஏடுகளும் போராட்டங்களும் கூட ‘வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவையே!

நீதித்துறை விமர்சனத்து அப்பாற்பட்டது என்கிற பார்வை கூட சனாதன தர்மத்தைக் காக்கும் முயற்சியே! அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் விமர்சனம் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று வாதிடுகிறவர்கள் நீதி மன்றங்களின் புனிதத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றப் புறப்பட்டவர்கள் என்று பொருளல்ல. உண்மையில் நீதிபதிகளை மயக்குகிறார்கள்; வஞ்சகவலை விரிக்கிறார்கள்; அந்தச் சூத்திரர்களைப் பழிவாங்கு என்ற உசுப்பி விடுகிறார்கள் என்று குற்றம் சாற்றினால் அது தவறா?நீதித்துறைமீது ஒரு விமர்சனம் எழுந்து, அது தொடர்பாக ஏடுகள் கருத்துகளைப் புனைந்துருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீதிமன்ற, நடைபாதையில் நீதிபதிகளுக்கு மலர்ப்படுக்கைபோட்டு வரவேற்புத் தருவது நீதிபதிகளை வளைத்துப் போடும் குற்ற நடவடிக்கையாகாதா?வம்பர்களின் கொம்பு சீவும் நரித்தனத்துக்கு ஆதரவாக ஆர்க்காட்டாரின் மீதும் கலைஞர் மீதும் கடுமை காட்டும் பல முன்னாள் நீதிபதிகளும் ‘புகழ் பெற்ற’ வழக்கறிஞர்களும் ‘சோ’ குருமூர்த்தி போன்ற சட்டவியல் அறிஞர்களும் ‘மலர்க் கம்பளம்’ விரித்து நீதிபதிகளை மயக்கும் இந்தப் ‘மோகனாஸ்திரம்’ குறித்து விமர்சிக்காதது ஏன்?

ஆர்க்காட்டாரின் விமர்சனத்துக்கும், போட்டியாளர்களின் மாய்மாலத்துக்கும் அப்பால், சிந்திக்கத் தெரிந்த சாதாரண மக்களின் கேள்வி இதுதான்!‘‘ஆர்க்காடு வீராசாமி ஒரு மனுவாதியாக இருந்தால் அவருடைய பேச்சு ஏடுகளாலும் எடுபிடிகளாலும் இந்த அளவுக்கு எதிர்ப்புக்கு இலக்காகியிருக்குமா?’’ஆர்க்காட்டார் ‘அவாளாக’ இருந்திருந்தால் நீதித் துறை தாக்கப்பட்டிருக்கும்.முன்பு அளவுக்கு அதிகமாகத்தான் வீட்டிற்கு நாற்காலி வாங்கிப் போட்டார் என்பதற்காக ஒரு நீதிபதி ஏளனத்துக்கும் கண்டத்துக்கும் ஆளானார். அவர் பொதுப் பணத்தை விரயம் செய்தார் என்பதற்காக அல்ல, சூத்திரர் என் பதற்காகவே ‘கண்ணிய வான்கள்’ கூட்டத்தால் கண்டிக்கப்பட்டார்.நாட்டில் நடக்கும் சம்பவங்களிலிருந்து அறியப்படும் உண்மை என்னவென்றால், நடைமுறையில் உள்ள சமூக அமைப்பில் மார்க்ஸ் சொல்வதுபோல் நீதித்துறைப் பணியாளர்களும் கூலி உழைப்பாளர்களே!நீதிபதி என்பது ஒரு குணச்சித்திரம் - ‘கேரக்டர்’ - அல்ல; அது ஊதியம் தரும் ஒரு மேட்டிமைத்தனமான தொழில்...முரண்பாடுகளும் போராட்டங்களும் மிகுந்த ஒரு சமூக அமைப்பில் ‘மேட்டிமைத்தனமான தொழில்’ என்பது அபாயகரமானதே.

இதில் மனுவாதி மாத்திரமல்ல, அடிமட்டத்திலிருந்து வரும் சூத்திரன்கூட புனிதனாக இருக்க முடிவதில்லை.‘‘மார்க்ஸ் எழுதுகிறார்: ‘‘பழைய சமுதாயத்தின் அடி மட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ‘அபாயகரமான வர்க்கம்’ பாட்டாளி வர்க்கப் புரட்சியால் (நாம் ‘சூத்திர எழுச்சியால்’ என்றும் சொல்லலாம் - கட்டுரையாளர்) எங்கேனும் ஒரு சில இடங்களில் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சக்தியின் கைக் கருவியாய் லஞ்சம் பெற்று ஊழியம் புரியவே. மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றன’’ (மார்க்ஸ் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அடிமை நிலையானது. பாட்டாளிகளை மாத்திரமல்ல, மருத்துவவரையும், மதகுருக்களையும், கவிஞர்களையும் கூட ஆசையின் பின்னே ஓடு கிறவர்களாய் மாற்றிவிடுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான ‘பணப்பட்டு வாடா’வைத் தவிர வேறு ஓட்டுமில்லை உறவும் இல்லை என்று ஆக்கிறது.

சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பரப்பு ஆகிய ‘புனிதப் பேரானந்தங்களை’ எல்லாம் தன் னலக் கணிப்பெனும் உறை பனிக்குளிர் நீரில் மூழ்கடித்துவிட்டது... சுருங்கச் சொல்வதெனில் சமயத்துறைப் பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் மூடி மறைக்கப்பட்ட, சுரண்டலுக்குப் பதிலாக வெட்க உணர்ச்சியற்ற அம்மண மான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.வெட்க உணர்ச்சி தேவையற்ற ஒரு சமூகத்தில் யாரையும் விலைக்கு வாங்கலாம். நீதிபதிகளும் இதற்கு விலக் கானவர்கள் அல்லர்.இங்கே லஞ்சம் கொடுத்தால் நீதியை விலைக்கு வாங்கலாம் என்று நிரூபணம் ஆகியிருக்கிறதே! ரூபாய் முப்பதாயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்ட ஒரு நீதிபதி இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே கைது செய்யும் படி ஆணை பிறப்பித்தாரே! இந்த லஞ்ச விவகாரம் நாடெங்கும் கேவலமாய்ப் பேசப்பட்டு காறித் துப்பப்பட்டதே! நீதியின் காவலர்கள்’ புனிதப் போராளிகள் - யாரும் வெட்கித் தலை குனிந்து தற்கொலை செய்து கொள்ளவில்லையே!லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு நீதிபதி குடியரசுத் தலைவரைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிப்பது இவர்களுக்கு ஒரு சாதாரண நிகழ்வு. நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெளிவரக் கூடாத அசம்பாவிதங்கள்; அவ்வளவுதான்.இதுபோன்ற சம்பவங்களில் ரகசியம் காப்பாற்றப்பட்டு திடும்என ஒரு நாள் கைது செய்யப்பட்டிருந்தால் நமது உளவுத்துறை, காவல் துறை, நீதித்துறை அனைத்துக்கும் விழா நடத்தியிருப்பார்கள். அடடா, எத்தனை ஏமாற்றம்!இந்து சாம்ராஜ்யம், ராம ராஜ்யம், அகன்றபாரதம் என்றெல்லாம் இவர்தம் பரிவாரங்களுக்கு எத்தனை கனவுகள்! இந்தக் கனவுகளைக் குத்திக் கிழிக்கும் முட்களாக எத்தனை தொந்தரவுகள்!மனுதர்மத்துக்கும், சாணக்கியன் சபதத்துக்கும் விரோதமாகக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் இருக்கலாமா?

‘‘எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், எத்தனை முறை ஆட்சியைக் கவிழ்த்தாலும் இந்த இராவணன் கலைஞர் பீனிக்ஸ் பறவையாய் எழுகிறானே...’’ இந்த ஆற்றாமைக் குரூரத்திலிருந்து கிளம்பும் சனாதனக் சகிப்பின்மை தான் இவர்களின் எழுத்தில், பேச்சில், பொங்கி வழிகிறது.அவர்கள் அறியாததா?நமது நீதித் துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் மனநிறை வுடன்தான் இருக்கிறார்களா?

தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறையாவது நீதித் துறையின்மீது கண்டனம், அல்லது வருத்தம், அல்லது திருப்தி தெரிவிக்காத நீதிபதி உண்டா?நீதித்துறையில் ஊழல் மலிந்துவிட்டது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே வருந்தியிருக்கிறார்கள்.முல்லை பெரியாறு நதிநீர் வழக்கில், காவிரி நதிநீர் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்குரியதானது; பகிரங்கமாக மீறப்பட்டது. அந்த நீதிபதிகளின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. நீதி மன்றத்தில் என்ன செய்ய முடிந்தது? போக்கிரிகள் நினைத்தால் நீதித்துறையை மீற முடியும் என்று நிரூபிக்கிறார்கள்.வலுத்தவன் ஜெயிப்பான் என்பதுதான் ‘கட்டப் பஞ்சாயத்தின்’ விதி.இம்மாதிரியான போக்குகள் தலைதூக்குமானால், நீதிமன்றங்களுக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கும் வித்தியாசம் இருக்காது. நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்தின் நிலைக்கு மாறக் கூடாது என்பது தவறா?

-இளவேனில்
ஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட்டது. சாரதாபீடத்தின் தலைவர் சுவருபானந்தா உட்பட பல பார்ப்பனர்கள் ஆகமத்துக்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். மடாதிபதிகளும் சுவாமிஜிகளும் விமானத்திலும்இ குளிரூட்டப்பட்ட பேருந்துகளிலும் பயணம் செய்கிறார்களே; இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று கேட்டார் நாவிதர் சங்கத் தலைவி ராதாரவி! தமிழ்நாட்டில் இதுவரை பெரியார் இயக்கங்கள் எழுப்பிய கேள்விகள் - இப்போதுஇ பல்வேறு முகாம்களிலிருந்து ஒலிக்கத் துவங்கியுள்ளது.

பிரிட்டனில் - அயிஷா ஆஸ்மி என்ற முஸ்லீம் பள்ளி ஆசிரியை வகுப்பில் முகத்தை ‘பர்தா’ போட்டு மூடிக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார். தனது பர்தாவை வகுப்பறையில் நீக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர்இ தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதுஇ அவரவர் விருப்பம். அதை மதத் தலைவர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் மதச் சட்டங்களுக்கான வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி முஸ்லீம் மதகுருமார்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்று வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் குயாசிம் ரசீல்இ ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வடமாநிலங்களிலும்இ வடகிழக்கு மாநிலங்களிலும் கிராமப்புற முஸ்லிம் பெண்கள்இ தினக் கூலிகளாகவும்இ உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? என்பது நியாயமான கேள்வி.

இசுலாம் மார்க்கத்தின்படிஇ பர்தா அணிவது கட்டாயமில்லை என்று சமூக சீர்திருத்தவாதியும்இ சிறந்த நடிகையுமான சப்னா ஆஸ்மி கூறினார். இதற்கு அவர் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. சீக்கிய இளைஞர்களிடமும் தலைப்பாகை அணியும் மதப் பழக்கம் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் - 80 சதவீத இளைஞர்கள் முடிவெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சீரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே கூறுகிறார். இந்த மத அடையாளங்களில் பெண்ணடிமையும்இ மூட நம்பிக்கைகளும் - வசதிக் குறைவுகளும் அடங்கியுள்ளன. ஆனால்இ பார்ப்பனர்கள் இன்னமும் தங்களின் மத அடையாளம் என்று கூறிக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாத ‘இந்துக்களை’ இழிவுபடுத்துகின்றனர். அதாவது தன்னை ‘பிராமணன்’ என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.

பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால் ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும்இ ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான்இ பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால் அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?

“பிராமணர்களின்” தாசி புத்திரர்கள்தான் சூத்திரர்கள் என்று தான் - மனுதர்மமும் கூறுகிறது! பர்தாஇ தலைப்பாகை பற்றி எல்லாம் விவாதித்து வரும் பார்ப்பனர்கள் பார்ப்பன எடுகள் அவர்களின் ஆசிரியருக்குக் கடிதப் பகுதிகளில் ‘பூணூல்’ போடுவதை மட்டும் விவாதத்துக்கே உட்படுத்த மறுப்பதை கவனிக்க வேண்டும்! பூணூல் அறுப்பு தொடங்கினால்தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?

நன்றி கீற்று இணையதளம்

ஆன்மீகமும் ஆரியர்களும்

ஒரு சாரரில் உள்ள பிரபலமானவர்களை தாக்கி எழுதினாலே தெரிந்து விடும் அவர் எச்சார்புடையவர் என்று. இத்தமிழ்மணத்தில் யாரும் எச்சார்பினரையோ அதில் பிரபலமானவர்களையோ தாக்கி எழுதுவதே கிடையாது. பார்ப்பனர்களைத் தவிர!

எச்சார்பினரிலும் தீவிரவாதம், மிதவாதம் மற்றும் வாதமின்மை என்ற மூன்று வகையுண்டு. தீவிரவாதிகள் அடித்துக்கொன்டு நாறுவதைத்தான் நாம் அன்றாடம் பார்க்கின்றோமே. அந்த தீவிரவாதத்தைதான் பார்ப்பனர் எதிர்க்கின்றீர்கள் என்றால், ஆன்மீகம் மற்றும் ஆன்மீக வாதிகளின் வெட்க்ககேடான செயல்களையும் சொல்லலாமே. காஞ்சி காமகேடி சுப்பிர மணி செய்யாத லீலைகளா? அதனை ஏன் இந்த பார்ப்புகள் எழுதுவது இல்லை? தமிழ்மணம் தீவிரவாதிகளுக்கானது அல்ல என்றுதான் நானும் சொல்வேன்.
உலகத்தில் பகுத்தறிவு இயக்கம் இறக்கவில்லை. இறைவனை அடைவதற்கு எந்த ஒரு பார்ப்பன இடைத்தரகரும் எங்களுக்கு தேவையில்லை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். அதன் விளைவாகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவிகளில் தமிழ் பூசை போன்ற ஆரம்பங்கள். உண்மையில் பகுத்தறிவு என்பது என்ன? பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான்.
உன் மனத்தில் தோன்றுவதை, சரியென்று நினைத்தால், தைரியமாக செய், உன்னை அமுக்க நினைத்து, யாராவது சொல்லும் வேத புருடாக்களை நம்பாதே. யார் சொல்வதையும், பகுத்து அறிந்துகொள். போலியான தகவல்கள் மூலம், தன்னை பெரியாளாக காண்பித்து தவறான முறையில், உன்னை ஆட்கொள்ள நினைப்பவர்களின் பிரசங்கங்களையும், செயல்களையும் பகுத்து அறிந்துகொள்.
தன்னிகரில்லா தமிழர் பண்பாட்டினையும் அவர்கள்தம் உணர்வினையும், காக்கும் தீச்சுவராகத்தான் பெரியாரையும், கருனாநிதியையும் நாங்கள் இன்று பார்க்கின்றோம்.இதுதான் எங்களுக்கான இறை நம்பிக்கை.

கண்டிப்பாக இறை நம்பிக்கை ஒரு மனிதனுக்கு வேண்டும். மனிதனை நல்வழிப்படுத்துவதில் இறை நம்பிக்கை இன்றியமையாத பங்கு வகிக்கின்றது, ஆனால் அந்த இறைநம்பிக்கை இயல்பாக இருக்க வேண்டும். மனமுவந்து செய்யும் செய்யும் காரியங்களை தடை செய்ய பார்ப்பனர்களான இவர்கள்யார்? இப்படித்தான் செய்யவேன்டும், இந்த மொழியில் செய்யக்கூடாது என்று தடைபோட இவர்கள் என்ன இறைத்தூதர்களா?.
உழைக்கும் மக்கள் கடவுளை ஒரு எட்டாக் கனியாகவே பார்க்கவில்லை. தனக்கு பிடித்ததையெல்லாம் இறைவனுக்கு படைத்து மகிழ்ந்தான். தான் குடிக்கும் கள், தான் உன்னும் புலால் அனைத்தையும் கடவுளுக்கு ஆசையோடு கொடுத்து மகிழ்ந்தான். அதை சட்டம் போட்டு தடுக்கப்பார்த்தனர்.

மக்கள் நல்ல பதிலடி கொடுத்தார்கள்.
99.99 சதவிகித மக்கள் , இறை நம்பிக்கை உடையவர்கள்தான். அவர்கள் அனைவரும் அய்யா பெரியாரை எதிர்க்கவில்லை.
0.001 சதவிகித பார்ப்பன மக்கள் மட்டும்தான், பெரியாரையும், அவர் கருத்துக்களையும், தொண்டர்களையும் வெறுக்கின்றனர். திமுக, திக, இவர்களுக்கு ஓட்டுப்போடும் எல்லோரும் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் என்றா நினைக்கின்றீர்கள்? தவறு, திமுக, ஓட்டுப்போடும்
99.99 சதவிகிதத்தினர் மற்றும் திகவை ஆதரிக்கும்
99.99 சதவிகிததினர் இறைநம்பிக்கை உள்ளவர்களே.பெரியாரை போன்று ஆயிரம் பேர்கள் வந்தாலும், தமிழனை இனி தட்டியெழுப்புவது கடினம்தான். அந்த அளவுக்கு அமுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தூக்கத்தில் ஆழ்த்தப்பட்டு இருக்கின்றான் மனிதன். இந்த அளவுக்கு பெரியார் செய்ததினால்தான் கொஞ்சமாவது சூடு சொரணை வந்திருக்கிறது நம் மக்களுக்கு.
ஆன்மீகவாதிகள் சாதித்தது என்ன? பெரியார் சிலையை உடைத்தனர். பெரியார், கருனாநிதி, வீரமனி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் கருத்துக்களை இழிவாக பேசினர். தலைவர்களுக்கு சிலை வைப்பதை முட்டாள் தனம் என்கிறார்கள்.தலைவர்களுக்கு மாலையிடுவதை முட்டாள் தனம் என்கிறார்கள். வேறு என்ன தெரியும் இந்த மிருகங்களுக்கு?
திராவிடர்கள் தங்கள் உழைப்பாலும் நல்ல மந்ததலும் தங்கள் வாழ்க்கையில் மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றனர். உங்களளப் போன்ற பாப்பான்களை நாங்கள் தீண்டத்தாகதவர்கள் என ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. நீயே திருந்தினால் உண்டு. நாங்களாக திருத்தினால் நிச்சயம் அந்நிலை உருவாகும்

தர்மயுத்தம்



எமது திசைவழியையும்
தந்திரோபாயங்களை உறுதி
செய்வதற்கு எதிரியின்
மூலோபங்களை முதலில் சரியாக
அடையாளம் கண்டிருக்க
வேண்டும். தந்திரோபாயங்கள்
குறித்து எப்போதும் விழிப்பாக
இருக்க வேண்டும். ஒரு சிவில்
யுத்தத்தின் போது, எதிரி
பொதுவாக தனித்தனியாக
குழுக்களை பிரித்தழிக்க முனையும்
அதே வேளை தனிநபர்களாகவும்
கையாளும். எதிரியின் இந்த
முயற்சிக்கு வாய்ப்பான சூழல்
குறித்து நாம் எப்பொழுதும்
ஆராய்ந்தவண்ணமிருப்பது
அவசியமாகும். மக்கள் பலம்,
விநியோகம், போக்குவரத்து,
தொடர்புமுறை, போர்க்கருவிகள்,
வழிநடத்தக்கூடிய தலைமை
போன்ற அனைத்துமே இந்த
வாய்ப்பான சூழலுக்குள்
அடக்கலாம். எமது இறுதி
இலக்கை நோக்கிய
பயணத்திற்கென எமது
ஆராய்வுக்கு கிட்டிய எமக்கேயுரிய
போர்த்தந்திரோபாயங்களை
நாங்கள் வகுத்துக்கொள்ள
வேண்டும்.

(கெரில்லா போர் முறை பற்றிய
நூலில் சே குவேரா) இப்போது நடக்கும் "போலி"ச் சண்டைகளை பார்த்தபோது காரணமின்றி நினைவுக்கு வந்ததில்


மேலிருக்கும் பின்னூட்டம் பாருங்கள் அப்படியே கேட்டிருக்கும் கேள்வியையும் பாருங்கள்
விடாது கருப்புவும் இன்ன பிற திராவிட நண்பர்களும் பிராமணீயம் பற்றி கடின வார்த்தைகள் கூறி விமர்சிப்பதில் தவறென்ன உள்ளது? மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்பதுவும் நேருவை மாமா என்பதும் ..... இவ்வளவு ஏன் ஜெயலலிதாவை அம்மா என்பதும் இதுபோன்ற உறவுமுறைகளால் தானா?

படத்தின் மேல் சுட்டி பெரிதாக பாருங்கள்

பின்னூட்டம் இடம்பெற்ற பதிவின் சுட்டி இது
ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நாளுக்கு நாள் அதைப் படிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள். அடைபட்ட கால்வாயினால் வெள்ளம் வீதியில் பெருக்கெடுப்பதுபோல் இண்டு இடுக்கிலுள்ள வாசகர் குழாத்திடையே செய்தி பரவியது. வாசகர்கள் பதறியடித்துக் கொண்டு ஓலைச்சுவடி இதழை வாங்கிப் பார்க்க ஓடினார்கள். அவர்கள் ஓடிய வேகம் சாலை விபத்தைக் காண ஓடுபவர்களின் வேகத்தை ஒட்டியதாக இருந்தது. மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் விமர்சகர்களும் இலக்கிய இதழ் துணையாசிரியர்களும் பெரும் பாய்ச்சலாக வந்துகொண்டிருந்தனர். எப்படி அவர்களுக்கு அதற்குள் வாசம் எட்டியது எனத் தெரியவில்லை.

"ஐயா, கதையைப் படிப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்" என்று வாசகர்களைப் பார்த்து விமர்சகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் கதையை முதன் முதலாகப் படிக்கக் கொடுத்துவைத்தவர் யார் என்ற தேடலும் கிளம்பிற்று. கண்கள் கலங்கி உடல் வியர்த்திருந்த ஒரு தீவிர வாசகர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் அவரது சொற்களில் தானியங்கியாகக் கற்பனையின் ஜிகினாத் துகள்களும் உயர்ந்த செண்ட் வாசனையும் வரத் தொடங்கின. தன்னால் இவ்வாறு கற்பனா வளத்துடன் வருணிக்க முடிவதை எண்ணி அவருக்குப் பெருமிதம் பொங்கிற்று. சொல்தடுமாற்றத்துடன் மட்டுமே பேச முடிந்த அந்த இளம் வாசகர் இதனால் சிறுவயது முதலே தனக்கு இருந்து வந்த பேச்சுத் தயக்கத்தை மறந்தவராகப் பேசினார். பேச்சு அவருக்குச் சரளமாக வர ஆரம்பித்தது. அவரது பேச்சில் தீர்மானமும் நிச்சயமும் தன்னம்பிக்கையும் இருந்தன.

அவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இத்தனை பேர் இப்படி ஆர்வமாகக் கேட்கிறார்கள்? அவர்கள் படிக்க முடிந்த விடயம்தானே? அதையும் நான் ஏன் விவரித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது? நான் சொல்வது அத்தனையும் அடுத்த மாதம் எல்லா இலக்கிய இதழ்களிலும் வரப் போகிறதா?

விமர்சகர்கள் அவர்களின் தொழில் தந்திரப்படி அரும்பு விட்டுக்கொண்டிருந்த வாசகரின் கற்பனைகளை நுட்பமான கேள்விகள் வழியாக இதழ் மலர்ச் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் உருவாக்க விரும்பும் கருத்துக்களை அவர் வாய்வழியே வரவழைக்க முடிந்துவிட்டது அவர்களுக்கு வெற்றிதானே! ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையின், பிடரி முடிவளர்த்திருந்த ஒரு இளம் விமர்சகர் - அவரை ஏன் சக விமர்சகர்கள் 'கூகை' என அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை - ஆங்கிலத்தில் கேட்டார்: "ஐயா, நீங்கள் முதன்முறையாக இதைப் படித்தபோதும் இதன் கரு இப்படித்தான் மறைந்திருந்ததா?" திடீரென வாசகருக்கும் தனக்குத் தெரிந்த ஆங்கில மொழித் திறனைக் காட்ட வேண்டும் என்னும் ஆவல் உண்டாயிற்று. அவர் தன் தொண்டையைக் கனைத்தபடி ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்: "Yes, it is as opaque as a deep coat of tar." இந்த பதிலில் விமர்சகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர் ஆங்கிலத்தில் பேசியது நம்பகத் தன்மைக்கு அதிகப்படியான ஒரு சான்றாகவும் அவர்களுக்குத் தோன்றியது.

அந்தக் கதையின் உச்சம் ஒரு முழுமையான மறைவுதான் என்பது எல்லா மனங்களிலும் பட்டது. மிகுந்த விட்டம் கொண்ட ஒரு இதழில் அக்கதை தன் மொழியை மட்டும் வெளிப்படையாகக் காட்டி நின்றது. சிரியரின் மொழித்திறன் அந்த அளவுக்குத்தான் அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தது போலிருக்கிறது.

இறைவா, அந்த மறைவு, படைப்புத் தன் சிகரத்தைக் கண்ட வெற்றியில் கெக்கலித்துக் கொண்டிருக்கிறது. அதன் சிறப்பு அதன் கெட்டியும் திடத்தன்மையும்தான். புரிதல் என்னும் வெளிச்சம் ஊடுருவ முடியாத கருமைதான் அதை ஸ்திரப்படுத்தியிருக்கிறது. பாம்புகளின் கண்களின் கருமையையொத்த ஓர் உண்மையை முற்றாக மறைத்துக் கொண்டு அந்தக் கதை நெருங்கத் துடித்துக் கொண்டிருக்கும் புரிதலை அண்ட விடாமல் காத்தது.

கதை வெளிவந்த முதல் சில நாட்களிலேயே ஓலைச்சுவடிப் பிரதிக்குக் குவியத் தொடங்கிய கூட்டம் தடித்துக் கொண்டே வந்தது. அதன் அடர்த்தியைச் சமாளிக்க முடியாமல் அனைவரையும் கொடுக்குப் பிடித்து நிற்க வைக்கும் முயற்சியும் தோற்றது. அலையலையாகப் பிரதிகள் லாரிகளில் வந்து குவிந்தும் பலர் பொறுமை காக்க முடியாமல் பிடுங்கிக் கொண்டு ஓடினர். பல பிரதிகள் இழுபறியில் கசங்கிக் கிழிந்தன.
புத்தகக் கடைகளுக்குக் காவல் துறையினரின் உதவி தேவைப்பட்டது. எனினும் அவர்களின் வாகனங்கள் கூட்டத்தை நெருங்க முடியாமல் தெருவிலேயே நிறுத்தி வைக்கப் பட்டன. திரண்டு வந்த கூட்டம் காவல்துறையினரை மதிக்காமல் தள்ளிக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. விமர்சகர்கள் தங்கள் குறிப்புக்களில் இந்தச் சூழல்களையும் குறித்துக் கொண்டனர். விமர்சனம் என்பது உணர்ச்சி பொங்காது எழுதப்படவேண்டும் என்னும் விதியை அறிந்தவர்களாக இருந்தாலும் இந்தச் சூழலின் உணர்வுகள் அவர்களைத் தாக்குவதை அவர்களின் நாளைய எழுத்துப் பிரதிபலிக்கும் என்றே தோன்றியது.

வாசகர் கூட்டம் என்பது விரிவடைந்துகொண்டே போனது. மாணவர்கள், ஜேப்படித் திருடர்கள், சிரியர்கள், திரைப்படத் துறையினர், எத்துவாளிகள், அரசியல்வாதிகள், குண்டர்கள், சாமியார்கள், வியாபாரிகள், முடிச்சுமாறிகள், எழுத்தாளர்கள், வேசிகள், ஓவியர்கள், தொழிலாளர்கள், மாணவிகள், சகல ஊடகங்களையும் சார்ந்த பணியாளர்கள்... யார்தான் அங்கில்லை? அரசாங்கச் சேவகர்களும் கோப்புகளுக்குச் சிவப்பு நாடா கட்டி வைத்துவிட்டு விரைந்து வரத் தொடங்கினர்.

பார்க்கப் பார்க்க அந்தக் கதை ஒரு பிரமைதானோ என்ற சந்தேகம் பலர் மனங்களிலும் முளைத்து வலுப்பட்டு வந்தது. திடத்தன்மை கொண்ட நீரும், இருளும், கரு மேகங்களும் முடை நாற்றமுடைய காற்றும் கல்லும் இணைந்து ரசாயன மாற்றத்தால் இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டனர். இந்தச் சந்தேகம் அடக்கி வைத்துக் கொள்ள முடியாத மன அரிப்பானபோது இவை பற்றிய பேச்சுக்கள் தொடங்கின. இந்தப் பேச்சு பரவத் தொடங்கியதும் அவர்கள் சொன்னவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்குக் கத்தி பதில் சொல்லத் தொடங்கினர். ஒரு காகிதத்தின் மேல் இத்தனைக் கெட்டியான கதையை உருவாக்க முடியுமா என அவர்கள் கேட்டனர். ஆம்! அந்தக் கதையின் கனம் அவ்வப்போதாவது கைகளில் தாங்க முடியாத அளவுக்குக் கனக்கத்தான் செய்தது. தொடர்ந்து கைகளில் தாங்கியிருந்தால் அது கனம் அதிகரித்தும் குறைந்தும் துடிப்பதும் உணரப் பட்டது. அதன் கனபரிமாணம் பற்றி வாதங்கள் வெடித்தன. கத்துதலும் சலசலப்பும் ஏற்பட்டன. அந்தச் சலசலப்பு கைகலப்பாக மாறலாம் என்ற செய்தி வெட்டவெளியில் அச்சுறுத்துவதுபோலப் பரவிற்று
.
ஆனால் அந்தக் கனத்துக்கும் அதில் ஒளிந்துள்ள மறைவுண்மைக்கும் யாராலும் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உளவியல் அறிஅர் ஒருவர் தான் சொல்வது ஒரு ஊகம்தான் என்னும் முன்னுரையுடன் தன் மாணவர்களுக்கு விளக்கம் தந்தார். இப்படி மறைந்துள்ள ஒரு பொருளுக்கு வாசகர்கள் இப்படி சைப்படுவது ஏன் என்பது அந்தக் கதாசிரியருக்கே ஒரு புரியாத புதிராக இருக்கலாம். இப்படி ஒரு கூட்டம் மறை பொருளை எண்ணிக் கலவரப் படுவது சிரியருக்கு மிகப் பெரிய கேள்வியாகி அது பூதாகரமாக வளர்ந்திருக்கலாம். இதை மனதில் கொண்டு இந்த மக்களுக்கு ஒரு மறை பொருளைத் தெரிந்து கொள்ளும் சை இப்போதுதான் முதன் முறையாகத் தோன்றியிருக்கிறது என்ற தவறான எண்ணத்திற்கு அவர் வரலாம். அந்த ஆசிரியர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது என்று தன் பேச்சை முடித்தார் பேராசிரியர்.

இலக்கிய இதழ்கள் அன்றி நாளிதழ்களும் சினிமா இதழ்களும் பொழுது போக்கு இதழ்களும் காட்டிய ஆர்வத்தில் அந்த அலுவலகங்களில் பதற்றம் கூடிக்கொண்டே போயிற்று. தொலைபேசிகள் இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்தன. சகல இதழ்களின் நிருபர்களும் குறைந்தது நான்கு பக்கத்திற்கு இதைப்பற்றிய ஸ்டோரி எழுதுமாறு பணிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் கதையைப் பத்திபத்தியாகப் பிரித்து அவற்றுள் ஒளிந்துள்ள பொருளுக்கு சமூக/ அறிவியல்/ உடற்கூறு/ ஜோதிட/ இலக்கிய அறிவுறுத்தல்கள் என்ன என்பதைப் பின்னிப் பின்னி எழுதிக் கொண்டிருந்தனர். இதை சிரியர்கள் படித்து ஓகே சொல்லவேண்டும். ரசம் ஊறியது காணாதென்று சிரியர்களுக்குத் தோன்றிவிட்டால் மீண்டும் முழுமையாக எழுதிவிடும்படி கிவிடும்.

ஆசிரியர்களுக்கு இதுபோன்ற ஒரு நாள் விடிந்ததே இல்லை. அவர்களுடைய மூளைகள் கொதித்துக் கொண்டிருந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அதிசயம் இன்று தேடி வந்திருக்கிறது. அதனைப் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். நாளை உலக இதழ்கள் அனைத்திலும் இக்கதை வெளிவரும். அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுவது ஒரு சிரியனின் திறனைப் பொறுத்தது; கற்பனையைப் பொறுத்தது. வாய்ப்பு வாசலில் வந்து நிற்கிறது.

மறைப்பு பெரிய விடயமில்லை. ஆனால் அதன் கனமும் இருண்மையும். அந்த அபூர்வ நிலைமைதான் ரத்தத்தைச் சூடேற்றுகின்றது. ஆக அதுதான் ஸ்டோரியின் மையம். இதில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இல்லை. எப்போது மறைவு மையம் கொண்டுவிட்டதோ அப்போதே அந்த ஸ்டோரிக்குக் கருத்துப் படிமம் எழுத்தைவிட முக்கியமாகிவிடுகிறது. ஆனால் இந்தப் பார்வையில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இருந்தது. கருத்துப் படிமம் முக்கியம் என்றாலும் எழுத்துத்தான் அதிக ரசத்தை உறிஞ்சும் திறன்கொண்டது என்று அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பாரில் விவேகமான சில விமர்சகர்கள் வாதிட்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் சகல மன இயற்கைகளையும் சகல மனப் பிறழ்வுகளையும் பச்சையாகச் சித்திரிக்கும் மாத நாவல்களை விடவும் இடுக்குகளில் கற்பனைத் திறன் கொழிக்கும் தட்டையான எழுத்துக்கள் ஏன் அதிக விமர்சனப் பாராட்டுக்கள் பெறுகின்றன என்று அவர்கள் கேட்டதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

படைப்பைப் படித்த பலர் - முக்கியமாக இளைஞர்கள் - படைப்பாளரை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவருக்குப் புரியும் மொழி எதுவாக இருப்பினும் அந்தப் பெருங் கூட்டத்தில் அதையும் கற்றுத் தேர்ந்தவர்கள் சிலரேனும் இருந்ததில் ச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆனால் அந்தப் படைப்பாளர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமலும் முகத்தில் எளிய பாவ பேதங்களைக் கூடக் காட்டாமலும் இருந்தார். அன்பு செய்வோரை அலட்சியம் செய்வதாகக் கூட்டத்தினர் புரிந்து கொண்டதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? பொறுமையிழந்த கூட்டத்தினர் முரட்டுத் தனமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். சொல்லவோ எழுதவோ இயலாத மிக பாசமான சொற்களில் அவரைக் கேலி செய்யவும் சென்சிட்டிவான அவருடைய கற்பனா மனத்தைப் புண்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். பாசச் சொற்களை மேலும் தோண்டி பாசமாக்குவதில் கற்பனைத்திறன் கொண்டவர்களிடையே ஒரு போட்டாபோட்டி ஏற்பட்டுவிட்டதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

கூகையின் அலுவலகத்தில் நிருபர் தொகுத்துத் தந்த இந்தக் கேள்விகளைக் கூகை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். ஆணித்தரமான கேள்விகள் என்றாலும் அவற்றை அப்படியே வெளியிட்டால் காகிதம் அழுகத் தொடங்கிவிடும் என்று தோன்றியதால் அவற்றை சிரியரிடம் கொண்டு சென்றார். ஆசிரியர் புரட்டிப்பார்த்துவிட்டு இவற்றை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றார். திடீரென்று தன் நினைவுக்கு வந்ததுபோல் அவர் ஏன் அந்தக் கதை இன்னும் தன் மேஜைக்கு வந்து சேரவில்லையென்று கத்தத் தொடங்கினார்.

கூகை தன் மனதில் உள்ளதைச் சொன்னார். இந்தக் கதையில் சில இடைப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்கக் கூடும் என்ற தனது சந்தேகம் அடங்குவதாக இல்லை என்றார். இந்தக் கதையைப் பற்றிப் பெண்ணிய விமர்சகர்கள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை என்று சொன்ன கூகையின் முகம் இறுகிப் போயிருந்தது. விடயத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டியதுதானே என்றார் ஆசிரியர். தொனி குற்றம் சாட்டுவது போல இருந்தது. "எனக்கு மேல் தகவல் தெரிந்தால் சொல்லுகிறேன் சார்!" என்று அவர் வெளியே வந்தார்.

கூகை மறுபடியும் தன் கையில் இருந்த பிரதியை உற்றுப் பார்த்தார். அதற்குள் அலுவலகம் முழுக்க அதைப் பற்றிச் சலசலவெனப் பேச்சுக்கள் பரவின. மற்றவர்களை அவர் கலந்தாலோசித்தார். அவர்கள் பிரதிகளிலும் அப்படித்தான் இருப்பதாகச் சொன்னார்கள். கையிருப்புத் தீர்ந்து போனதால் ஓலைச்சுவடி புதிய எடிசன் போட்டிருப்பதால் அதில் இந்த விஅயம் சரி செய்யப் பட்டிருக்கலாம் என சிலர் மீண்டும் தங்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு புதிய பதிப்பு வாங்க கடைகளுக்கு விரைந்தனர்.

அப்போதுதான் உக்கிரமாக மழை பெய்யத் தொடங்கியிருந்தது. ஆசிரியருக்கு விஅயம் எட்டியவுடன் "ஏன் மழையில் போக வேண்டும்? என் காரைக் கொடுத்திருப்பேனே!" என்றார்.

கூகை தெருவைப் பார்த்தபோது இப்படித் தொடர்ந்து பெய்தால் நெடுஞ்சாலையில் கூடத் தோணியில்தான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டார். செல்போன் வழியாகத் தன் அலுவலக நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் மின்சாரமும் நின்றுவிட்டது. தம்மைச் சிறிது சுவாசப் படுத்திக் கொள்ள அப்படியே ஏணிப்படியில் உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரின் செல்போன் கிணுகிணுத்தது. பெரிய ஏமாற்றம் சார் என்று சொன்னார்கள். என்னவென்று கேட்டார். புதிய எடிசன் வந்துவிட்டது. ஆனால் அதில் இந்தக் கதையைக் காணோம் என்று சொன்னார்கள்.

"ஏன், ஏன்?" என்று கத்தினார் கூகை. "தெரியாது சார்! பக்கங்களெல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கதை இடம் பெற்ற 6 பக்கங்களிலும் ஒரு முலையில்லாத சிலையின் கோட்டுச் சித்திரம் மட்டும் திரும்பத் திரும்ப அச்சிடப் பட்டுள்ளது. எழுத்துக்களையே காணோம்! என்றனர். கூகை மீண்டும் கேள்விகள் கேட்க முயன்றபோது தொடர்பு அறுந்துவிட்டது; அல்லது முறிக்கப் பட்டிருக்கலாம் எனவும் அவருக்குச் சந்தேகம் தட்டியது.
கூகை ஏணிப்படிக் கைப்பிடியில் தன் கைகளை வழுக்கியவாறே இறங்கி முதல் தளத்துக்கு வந்தபோது ஆசிரியரின் கத்தல் கேட்டது. கூகை மெதுவாக அவர் அறைக்குள் நுழைந்தார். அடுத்த பதிப்பில் கதை இல்லாதது பற்றியும் கோட்டுச் சித்திரம் மட்டும் இருப்பது பற்றியும் சொன்னார். "பெரிய மர்மமாக இருக்கிறது சார்!" என்றார்.

"இதில் என்ன பெரிய மர்மம்? புதிய எடிசனில் கதை இல்லாதது மர்மமா?" என்றார்.

"இல்லை!"

"கோட்டுச் சித்திரத்தில் பெண்ணுக்கு முலையில்லாதது மர்மமா?"
"இல்லை"

"அப்புறம்?"

"பெண்ணும் முலையும் மையமாக உள்ள இந்தக் கதை முழுவதிலும் ஒரு பெண் கூட இல்லை. அதுதான் மர்மம்!" என்றார் கூகை.
ரெ.கார்த்திகேசு
[நன்றி: சுந்தர ராமசாமி மற்றும் காலச்சுவடு ஆகஸ்ட்
2004]

புலி வருதுடோய்!

யப்பாடா வருது வருதுன்னு இத்தனை நாளா சொல்லி சொல்லி நமக்கும் அலுத்துபோச்சி இன்னைக்குத்தான் கடேசியா இந்த புலி வருது சரி இப்போதைக்கு உலகமெங்கும் இருக்கும் புலிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கிறாங்களோ யாருக்கும் தெரியாது. இந்தியாவில அதுக்கு தடை, இலங்கைல தடை, அமெரிக்காவுல தடை இப்படி இருக்க கனடா அய்ரோப்பா எல்லாம் ஒருகாலத்தில் சுதந்திரமா சுத்துன புலிக்கு இப்ப தடை.
இன்னிக்கு எனக்கு தெரிஞ்ச இந்த பெரியவங்க புலியப் புடிக்க என்ன மாதிரி ஐடியாவெல்லாம் சொல்லுவாங்க பாக்கலாமா?
சர் ஐசக் நியூட்டன்: புலி வரும்போது நீங்க அதைப் பிடிக்க வேண்டாம் அது உங்களை பிடிக்க விடுங்க ஏன்னா ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் விணை உண்டு அது உங்களை பிடிச்சா நீங்க அதை பிடிச்ச மாதிரி.

ஐன்ஸ்டைன்: புலி வற்ற திசைக்கு எதிர் திசையில புலி ஓடிவர வேகத்தில ஓடுங்க அதுவும் ஓடும் பிறகென்ன அது களைச்சுபோன சமயம் பாத்து E=MC2 (ஸ்கொயர்) சூத்திரத்தை சொல்லுங்க ஒன்னும் தெரியாம மண்டைய போடும்

ஜார்ஜ் புஷ்: அட இதுக்கென்னா பெரிசா வேணும் அந்த புலி சதாம் உசேனுக்கும் பின் லெடனுக்கும் நெருக்கமானது அதனால அதை பிடிச்சு கொடுத்தா அந்த நாட்டு மேல படைய்டுக்க மாட்டேன்னு சொல்லுங்க எல்லாம் சகட்டுமேனிக்கி அதை பிடிக்க அலைவாங்க அத சாட்டி ரெண்டு புது ஜெட் விமானத்தில குண்டு போட்டு நம்ம பலத்தையும் டெஸ்ட் பண்ணிக்கலாம்.
கருணாநிதி : அந்தப் புலிக்கு என்னா வேனும்னு கேளுய்யா அதுல ஒரு பாதியாவது கொடுத்து செட்டில் பன்னு இல்லையா நம்ம ராம நாராயண்னுக்கு சொல்லி அடுத்த படத்தில் ஹீரோவாக்கு அது தன்னால படியும்
ஜெயாக்கா : என்னது புலியா ஒடனே அதுமேல கஞ்சா கேச போடு அப்புறம் அதுவாவே வந்து கால்ல விழும் அப்போ புடி.
ராமதாஸ்: நல்லா பிரியானி பன்னிப் போடுங்கய்யா ... இல்லையா அதை பிடிக்க யாரெல்லாம் அலையிறான்னு பாரு அவனுக்கு எதிரா ஒரு அறிக்கை விடு அடங்கலையா ஒரு வாரம் தமிழ் நாட்டில பந்த் ஏன் வெளிய இருக்கவன் அதை பிடிக்க போறான்.
ரஜினி காந்த் : ந்-தா வந்து புடிக்கிறேன் இன்னிக்கு வெற்றேன் நாளேக்கு வற்றேன்ன்னு பிரஸ்ஸை கூப்பிட்டு பேட்டி கொடுத்தா அது ஏன் வருது உள்ளேயே கிடந்து சாகும்.
அஜித் : ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... நான் தனி ஆளு இல்லை எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்குன்னு ஒரு சவுண்டு சும்மான்னாச்சும் வுட்டா அது இவர பாத்து பயத்தில தற்கொலை பன்னிக்காது?