‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.
ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.
சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.
காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.
பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?
ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?
மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.
ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.

-பெரியார்




‘‘உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்குக் கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின்போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார்!’ என்று தி.மு.க. தலைவர் முன்பொருமுறை சொல்லியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால் தயாநிதி மாறன் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும்போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?’’







‘‘உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட. இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க&வை மட்டும்தான் குறிவைத்துப் பேசுகிறார்கள். தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.அதேசமயம், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடுமுரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்துத்தான் பாதிக்கிறது. வாரிசுகளும் பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இருந்தாலும், தி.மு.க. போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரைக் கொண்டு வருவது என்பதை அந்தத் தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நீங்கள் குறிப்பிடும் Ôதிணிப்புÕ என்ற வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகு காலத்துக்கு உட்கார வைத்துவிட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால், அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக, அண்ணனை... அவரை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, Ôதிணிப்புÕ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.’’






நன்றி : ஜூனியர் விகடன்
ஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் 'ஓ பக்கங்கள்'. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று 'ஓ பக்கங்கள்'.

மேற்படி இதழின் 'ஓ பக்கங்கள்' தலைப்பு "சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்". இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.

இவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் 'கலைஞரின் மகள்' என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.

ஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.
இதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.
இந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.
செம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் தகுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா? அல்லது வேறு காரணங்களா? அந்தக் காரணங்கள் 'வாரிசு' என்பதைவிட மேலானவையா? மேலும் ஞாநி 'வாரிசு' என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.
ஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.
ராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி 'எப்போது?' என்பதுதான்; 'ஆவாரா?' என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.
ஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.
கண்ணன் காலச்சுவடு
தமிழ்க் கலாசாரப்படி வேட்டி, சட்டையணிந்து கொண்டு பொது விழாவொன்றில் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணனை கூட்ட அரங்கின் வாசலிலேயே அங்கிருந்த காவலாளி தடுத்து நிறுத்தி வெளியேற்றிய அசிங்கம், தமிழர்களின் தலைநகரான சென்னையில்தான் நடந்திருக்கிறது.
எப்போதுமே பேண்ட், சட்டையுடன் காட்சியளிக்கும் அமெரிக்கை நாராயணன், கிராமங்களில் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டும் தொழிலதிபர்களிடையே பேசுவதற்காக வழக்கத்திற்கு மாறாக வேட்டி, சட்டையணிந்து சென்றபோதுதான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
அந்த நிமிடத்தில் வெட்கித் தலைகுனிந்த தனது வேதனையை வெளிப்படுத்தினார் அவர்.
‘‘மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையின் கௌரவ ஆலோசகராக நான் பதவி வகித்து வருகிறேன். இந்தியத் திருநாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே, ‘கிராமங்களின் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதனால், ‘கிராமந்தோறும் கிராமத் தொழில் மையம்’ திட்டத்தை வெற்றியடையச் செய்ய தொழிலதிபர்களும், தொழில் முனைவோரும் ஆர்வம் காட்ட வேண்டுமென்று’’ வலியுறுத்தினார் பிரதமர்.
அவரின் எண்ண ஓட்டத்திற்கேற்பதான், தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நானும் கிராமங்களில் கிராமச் தொழில் மையத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்தப் பணியை தீவிரப்படுத்தும் வேகத்தில்தான் சென்னையிலுள்ள பல தொழிலதிபர்களைச் சந்தித்து நான் பேசி வருகிறேன். இதையறிந்த நண்பர்கள் சிலர், ரோட்டரி சங்கக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
சென்னையிலுள்ள மெட்ராஸ் எஸ்பிளனேட், அம்பத்தூர், சென்னை கேலக்ஸி மற்றும் வடமேற்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள சென்னை கிரிக்கெட் கிளப் கூட்டரங்கில் கடந்த 19_ம் தேதியன்று சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் அழைப்பிற்கேற்ப நானும் கூட்டத்திற்குச் செல்ல புறப்பட்டேன். அமெரிக்காவில் பணிபுரிந்து பேண்ட், சட்டை அணிவதையே வழக்கமாகக் கொண்டவன்தான் நான். என்றாலும் கிராம மக்களின் வளர்ச்சிக்காக பேசச் செல்கிறோமே என்பதற்காக வேட்டி சட்டையணிந்து கொண்டு கூட்டத்திற்குச் சென்றேன். எனது காரிலிருந்து இறங்கி கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்ற போது, அங்கிருந்த கிளப் ஊழியர் என்னிடம், ‘வேட்டி, சட்டை அணிந்து கொண்டு உள்ளே செல்லக்கூடாது’ என்று கூறி என்னைத் தடுத்தார்.
அந்த ஊழியரிடம், ‘நான்தான் இந்தக் கூட்டத்தில் பேசப் போகிற முக்கியமான நபர்’ என்றேன். ‘அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. வேட்டி, சட்டையணிந்த யாரையும் கிளப்பிற்குள் விடக்கூடாது’ என்று எனக்கு சங்க நிர்வாகிகள் உத்தரவு போட்டுள்ளனர். அதை என்னால் மீற முடியாது!’ என்றார் அந்த ஊழியர். அவர் தொடர்ந்து பேசியதில் மரியாதைக் குறைவான வார்த்தைகள் விழுந்தன.
அதனால் அவமானத்திற்குள்ளான நான் எனது கைபேசி மூலம் ரோட்டரி சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு எனது நிலையை வருத்தத்தோடு தெரிவித்தேன். அவர்களும் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். பின்பு சங்க நிர்வாகிகளுடன் ரோட்டரி உறுப்பினர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகும், வேட்டி, சட்டையுடன் என்னை கூட்டத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் அந்த ஊழியர்.
அங்கு அவமானத்திற்குள்ளான எனக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று, தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மதிக்காத இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுவது. மற்றொன்று, கிராம மக்களின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயமென்பதால், வேட்டியை மாற்றி பேண்ட் அணிந்து கொண்டு கூட்டத்தில் பேசுவதென்பது தான்.
‘அந்தக் கூட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் வந்திருக்கும் தொழில் அதிபருடன் பேசுகின்ற வாய்ப்பை இழந்து விடுவோமோ?’ என்ற ஆதங்கம் காரணமாக நான் அந்த இடத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்குச் சென்று பேண்ட் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு கூட்டத்தில் பேசினேன். என்றாலும் எனது கலாசாரத்திற்கு ஏற்பட்ட அவமானத்தில் இருந்து என்னால் எளிதாக விடுபடமுடியவில்லை’’ என்றார் அமெரிக்கை நாராயணன்.
இந்த அவலம் பற்றி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளில் ஒருவரான ரோட்டரி சங்க நிர்வாகி, ஆடிட்டர் துரைராஜ் கண்ணடியரிடம் பேசினோம். அவரும் ‘‘அமெரிக்கை நாராயணனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் வெட்கித் தலைகுனிந்தோம்!’’ என்றார்.
இவர்களின் குமுறல்களுக்கு விடை காண சென்னை கிரிக்கெட் கிளப் பொருளாளர் வினோத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
‘‘உடையணிவது குறித்து கிளப்பிற்கென்று தனியாக ஒரு விதி இருக்கிறது. இது குறித்து உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். வேட்டி கட்டிக்கொண்டு கிளப்பிற்குள் வரக்கூடாது என்பது ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் ஏற்படுத்திய விதிமுறைதான். அதைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
கடந்த சில நாட்களாக நான் ஊரில் இல்லாததால் கடந்த 19_ம் தேதி என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், வேட்டி கட்டி வருபவர்களை கிளப்பிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் ஏற்கெனவே நடந்துள்ளது!
எப்படி உடையணிந்து வரவேண்டுமென்பது எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அழைத்து வரும் நபர்களும் எந்த உடையணிந்து வரவேண்டுமென்பதை நாங்கள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.
‘தமிழக முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் வேட்டியோடு வந்தால் திருப்பி அனுப்புவீர்களா?’ என்பதற்கு நான் பதில் கூற முடியாது.
ஆனால், எங்கள் உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளில் வேட்டி கட்டிய அர்ச்சகர்களைக் கொண்டு சடங்கு செய்யும் நிலையிருந்தால், அந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கிளப்பில் நடத்தாமல் தவிர்த்து விடுங்கள் என்று நாங்கள் முன்கூட்டியே கூறிவிடுவோம்.
உடை அணிவது குறித்து கிளப் கடைப்பிடித்து வரும் நடைமுறையில் எந்த சமரசத்திற்கும் நாங்கள் உடன்படுவதில்லை!’’ என்றார் வினோத்குமார், இறுதியாக.
தமிழ், தமிழர் பாதுகாப்புப் பேரவைகளெல்லாம் இதற்கு என்ன செய்யப்போகின்றன என்பதுதான் கேள்வி.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார்.


‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.

அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.
(மேலும் சுவாரஸ்ய கழுத்தருப்புக்கள் தொடரும்)

பக்கத்துவீட்டுப் படுக்கையறை யை எட்டிப் பார்ப்பது எவ்வளவு அநாகரிகம்!ஆனால், இரவும் பகலும், ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னதான் நடக்கும்? பார்க்கலாமா என்கிற வக்கிரமான உணர்வைப் பகிரங்கமான ஒரு நிகழ்ச்சியாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்துக் காட்டியது.இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராகும்போதே ஒருவர். எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுத்தான் புறப்படுவார். இந்தியாவிலிருந்து நடிகை ஷில்பா கலந்து கொண்டார்.இதே போட்டியில் கலந்து கொண்ட இங்கிலாந்து நடிகை ஜேட்கூடி ஒருகட்டத்தில் ஷில்பாவை நாய் என்று திட்டி விட்டாராம்.இது நிறவெறி என்று ஒரு புயல் கிளம்பியது. ஜேட் வெளியேற்றப்பட்டார். ஷில்பா இறுதிவரை நின்று வெற்றி பெற்று விட்டாராம்.இதிலே நமக்கு எழும் ஒரு கேள்வி. இங்கிலாந்து நடிகை நாய் என்று சொன்னதே நிறவெறி என்று கத்துகிறவர்கள், வெள்ளையர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று நிறவெறியை ஆதரித்து, இந்திய மக்களை இழிவு செய்வது குறித்து இன்று வரை எந்த இந்தியனுக்கும் நியாயமாய் வரவேண்டிய கோபம் வரவில்லையே ஏன்?நிறவெறியை உலகுக்கு அறிமுகப்படுத்திய பார்ப்பன சாத்திரங்கள்மீது ஆத்திரம் வராத சுயமரியாதையற்ற இந்தியர்கள் இங்கிலாந்து நிகழ்ச்சிக்காகக் குரைப்பது வேடிக்கை அல்லவா!இப்படியும் ஒரு தொழிலா?
நாத்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன.

உதாரணமாக, பகவத் கீதை என்பது, இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும், மேலானதுமான புத்தகம் என்று பெயர். முகம்மதியர்கள் குரானை மதிப்பதைவிட, கிறித்துவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதி பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே ‘பகவான் வாக்கு' என்று அர்த்தம். ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட, 100க்கு 99 பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார்கூட, கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்!இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல், கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அவற்றைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்?

ஆகவே, இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் - கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.ஆதலால், நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இதுமாத்திரமல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு - தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாத்திகமானாலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாத ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டுச் சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு, பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று இருக்கவும் இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத் தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டது என்று சொல்லாமல் வேறு என்ன பொருள் சொல்ல முடியும்?இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார் தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் - அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும், மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அந்தப் பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்பண்ணப்படுமானால் யார் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
-பெரியார்

சென்னை: நடிகர் ரஜினியின், "சிவாஜி' பட "சிடி' "அவுட்'டாகி விட்டது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார்போல்,சென்னையிலுள்ள இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து "சிவாஜி, பெரியார்' படங்கள் மற்றும் ஆபாச பட ஸ்டில்கள் அடங்கிய "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டம் பேகம் சாகிப் தெருவில் "அன்னை ஆப்செட் பிரின்டிங் பிரஸ்' செயல்பட்டு வருகிறது. அதில், புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களின் கவர்கள் ரகசியமாக பிரின்டிங் செய்யப்படுவதாக, வீடியோ பைரசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீடியோ பைரசி உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.பிரின்டிங் பிரசிற்குள் பண்டல், பண்டலாக "சிவாஜி, பெரியார்' மற்றும் ஆபாச பட "சிடி'க்களின் பட கவர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் ஜோசப் செல்வன்(38), போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரது சகோதரர் சகாயராஜன்(33), டிசைனர் தமிழரசன், "மிஷின் ஆபரேட்டர்' ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவல்லிக்கேணி முனியப்பன் தெருவிலுள்ள மற்றொரு பிரின்டிங் பிரசிலும் இதே பாணியில் பிரின்டிங் செய்து வந்தனர். இதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களில் இருந்து இரண்டு லட்சம் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11.60 லட்சம். பின்னர், இரண்டு "பிரின்டிங் பிரஸ்'களுக்கும் சீல் வைத்தனர்.
வீடியோ பைரசி போலீசார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டர் மற்றும் ரேப்பர் சீட்டுகளை போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் பார்வையிட்டு, சோதனை நடத்திய போலீசாரை பாராட்டினார். பெரியார் படம் ஏற்கனவே திரையிடப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் ஓடி வருகிறது. ஆனால், ரஜினியின் "சிவாஜி' படம் வரும் 31ம் தேதி தான் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்குள் அந்த படத்தின் "சிடி' கவர்கள் பண்டல், பண்டலாக பிரின்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த படத்தின் போலி "சிடி' வெளியாகி விட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



நல்ல லெகஸி நாடு எப்படி உறுப்படும்னு ஜல்லி அடிக்க ரெடியாப்பா?
பண்டித ஜவஹர்லால் நேரு ராமாயண்த்தைப் பற்றிக் கற்பனை என்று சொன்னது பொய்யா ?
படித்த அறிஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா?இல்லையா?இதிஹாசம் என்னும் கதைகள் முக்கியமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுங் குறிவைப்பது எதனால்?அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகட்கு அவர்களுக்கு ஏற்ற பதில்கள்.அட அடி மடையர்களே நாசா பற்றியெல்லாம் உண்மையைப் பேசுங்கள்,அவர்கள் மறுத்துள்ளதை ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?இந்த அறிவியல் யுகத்தில் வாழ்கிறீர்களா இல்லைக் கற்கால்த்தில் வாழ நினைக்கிறீர்களா?மதவாதிகள் ராம்ராஜ்யம் கேட்கிறார்கள்.அதற்கு எந்த ராமன் ஆட்சியைக் கொடுக்கப் போகிறீர்கள்?வால்மீஹியின் ராமனா?கம்பனின் ராமனா?எந்த ராமன் உங்கள் ராமன்?

எத்தனை சீதைகள் நெருப்பில் குளிப்பார்கள்?அரசியல் சீதைகளை என்ன செய்வது?"

இறுதி வரை திமுக

சிலரது தவறான ஆலோசனையால் கருணாநிதி தன் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக கருணாநிதிக்கு தவறான ஆலோசனை கூறியது யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட தயாநிதி மாறன், கருணாநிதிக்கு தன் மீது ஏற்ட்ட சந்தேகம் தம்மை மிகவும் பாதித்ததாக கூறினார்.
மந்திரி பதவி பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும், தாம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தம்மை வருத்தமடையச் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக தொண்டராக பிறந்த தாம் திமுக தொண்டராகவே இறக்கவும் விரும்புவதாக கூறிய தயாநிதி மாறன், கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து கட்சியின் ஆதரவாளராக இருக்கப் போவதாகவும் கூறினார்.
பதவி விலகல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தாம் பேசியதாகவும், இந்த முடிவு குறிதது அவர்கள் அதிரச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

//கோபால கிருஷ்ணுடு என்ற பெயரில் டோண்டு வந்து இங்கு கமெண்டு போட்டிருந்தார். ஏற்கெனவே கோவி.கண்ணன் பதிவில் சென்று சொந்த பெயருடனும் அனானியாகவும் கலைஞரைத் திட்டித் தீர்த்து விட்டுக் கடைசியாக இங்கு வந்து என் பதிவில் தன் கோவணத்தைக் கழட்டி பேழ முயன்று இருக்கிறார்.

இன்னொரு கண்டுபிடிப்பும் சொன்னார். அதாவது போலி, கருப்பு, சிவமுருகன், நான், மகேந்திரன் எல்லோரும் ஒன்றாம்.

ஆரியனையும் அவனின் குடுமிகளையும் பற்றி எழுதினால் போலியாகத்தான் இருக்க வேண்டும்.

ஹாஹாஹா...சூப்பர் கண்டு பிடிப்பு.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் கிழட்டு ஓல்டுமேன் டோண்டு.

பெயரை மாற்றி மாற்றி உங்கள் பதிவுகளிலேயே கழிந்து கொள்ளுங்கள். என் பதிவுக்கு உங்கள் வறட்டு வாதங்களும் கழிசடை எழுத்துக்களும் தேவை இல்லை!//

வால்டர் வெற்றிவேலின் பதிவில் இருந்த பின்னூட்டம் இதற்கு எனது பதில் ....

நோ கமெண்ட்ஸ்

:))


டாகுமெண்ட்டரி கொஞ்சம் நீளம் பொறுமையாக பார்க்கவும்

ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் சமீபத்தில் எடுத்துச் சென்றார்
நம் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு.


ராமர் பாலம் தொடர்பாக எந்தெந்த ஆவணங்களில், நூல்களில் என்னவெல்லாம் பொய்யும் புரட்டும் கூறப்பட்டுள்ளதோ அதையெல்லாம் எனக்குக் காட்டுங்கள் என்று அவர் நூலக நிர்வாக அதிகாரி சாமி
சிவஞானத்திடம் கேட்டார். இதையடுத்து கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், மானசராமாயணம், அத்யாத்ம ராமாயணம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஆரிய நூல்தொகுப்புகள் அவரிடம்
காட்டப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான நூல்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றை சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.

இந்த நூல் தொகுப்புகளிலிருந்து தனக்குத் தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டார் பாலு. பின்னர் சில பகுதிகளை ஜெராக்ஸ் பிரதியும் எடுத்துக் கொண்டார். ராமர் பாலம்
தொடர்பான பழங்கால வரைபடங்களையும் அவர் பார்வையிட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். 23ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்களை அழிக்க பாலு முயன்றதாக ஜெயா டிவி புரளிச்செய்தி வெளியிட்டது.


சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் செந்தமிழ்நாடும் இந்தியாவும் வளம் கொழிக்கும். அந்த வளம் கொழிக்கக் கூடாது என்று எண்ணுகின்றவர்கள் வேண்டுமானால் இதற்கு குறுக்குப்
பாதையிலே ஏதாவது இடையூறு செய்யலாம், அந்த இடையூறுகள் செய்யாமல் ஒதுங்கியிருந்து உதவிடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


இந்தத் திட்டத்தினுடைய பயன்கள் என்ன என்பதை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் சொன்ன போது, கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும். தமிழகம் மற்றும் அண்டை
மாநிலத் துறைமுகங்களில் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும். ராமேஸ்வரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும்
பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அன்னியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாடிக்கைத் தரம் மேம்படும். வேலைவாய்ப்பு பெருகும். தூத்துக்குடி
துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும்.
கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும். மன்னார் வளைகுடாவிலிருந்து பாக். கடல் சென்று வர மீனவர்களுக்கு வசதியளிக்கும். இலங்கை
உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்பெறும். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு
நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும். ராமேஸ்வரம், தொண்டி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாகை ஆகிய கடலோர நகரங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்.

தென் மாவட்டங்கள் பெருமளவிற்கு வளர்ச்சி பெறும் என்ற இந்த நல்ல நோக்கத்தோடு தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

10.5.2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.

மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம்.
இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், "இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், (இது
தான் ஆடம்ஸ் பாலம் - அதாவது ராமர் பாலம்) பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது தான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்'' என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இது அ.தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டிருக்கின்ற தலையாய நோக்கம். அன்று சொன்னதை இன்றைக்கு அதனை மறந்து விட்டு..?

பாவம் அவர்தான் என்ன செய்வார்? பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பால்தாக்கரே, சென்னை பார்ப்பன சங்கம், சோ ராமசாமி போன்று
எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டி இருக்கிறது.

திடீரென்று மதவாதிகளால் எப்படி அயோத்தியில் மதவாதம் புகுந்த காரணத்தால் அங்கே ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்தனரோ, அதன் காரணமாக இந்தியாவிலே ரத்த ஆறு
ஓடியதோ, அதைப் போலவே இன்னும் ஒரு வன்முறை நிகழ்ச்சிக்கு வித்திட சில பேர் முயன்று வருகின்றனர். அது ராமர் கட்டிய பாலம், அந்தப் பாலத்தை உடைத்தால் விபரீதம் உண்டாகும்,
ஆகவே இந்தத் திட்டத்தையே நிறுத்த வேண்டுமென்று பார்ப்பனர் இன்றைக்கு கிளம்பி இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பன மதவாதிகள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் இந்தத் திட்டம் நிறைவேறி தென்னகம் வளம் கொழிக்கும்
பூமியாக - பசுமைத் தாயகமாக ஆகி விட்டால் என்ன செய்வதென்று எரிச்சலால் தான் இது வரக் கூடாது என்பதற்காக துணைக்கு ராமரை அழைத்து வருகிறார்கள். வடமாநில ஆரிய மிருகங்களின்
கெட்ட எண்ணத்திற்கு இங்குள்ள தமிழக பார்ப்பனர்களும் துணை போகின்றனர்!

இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால், ராமர் பாலத்தை இடிப்பதை நிறுத்தாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக அ.தி.மு.க. எடுக்கும் என்று அறிக்கை ஒன்று ஜெயலலிதா
வெளியிட்டுள்ளார். "நான் ஒரு பாப்பாத்தி!" என்று சட்டசபையிலே மார்தட்டியவருமான ஜெயலலிதா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு தனது முயற்சியே
காரணம் என்று சொல்லி இருக்கிறார் தன் அறிக்கையில்!
இதில் வேடிக்கை என்னவென்றால் - இந்த திட்டம் வருவதற்கும் ஜெயலலிதா காரணமாம், வருவதை தடுப்பதற்கும் ஜெயலலிதா காரணமாம்!


ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்கிறோமே தவிர சேது சமுத்திரத் திட்டம் வேண்டாமென்று சொல்லவில்லையே என்று கூட அவர் சொன்னாலும் சொல்வார். சொல்வதற்கு அவர்களுக்கு
இடம் இருக்கிறது. ஆரியன் வாய் என்றைக்கு தனது சொல்லில் இருந்து வழுவாமல் இருந்திருக்கிறது?


பழமைவாய்ந்த ராமர் பாலம் இடிக்கப்படுவதை தடுக்க வழக்கு தொடரப்போவதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

1. ராமனால் கட்டப்பட்டதாக சொல்லி ஆடம்ஸ் பாலத்தை இடிக்க தடை கோரும் பாஜக, மற்றும் இந்து மத வெறியர்கள் ஏன் பாபரால் உண்மையிலேயே கட்டப்பட்ட மசூதியை இடிக்க ஆசைப்படுகிறார்கள்?


2. ராமன் என்பவன் உண்மையில் இருந்தான் என்பதற்க்கு என்ன ஆதாரம்? கற்பனையான ராமாயணம் உண்மை என்றால் ஏன் அது ஒரு பண்டைக்கால தமிழ் மன்னனால் கட்டப்பட்ட பாலமாக்வே இருக்கக் கூடாது?


3. இந்த பார்ப்பனர்களுக்கு வேறு உருப்படியாக எதுவும் சிந்திக்கவே தெரியாதா?