குஜராத் மோடியின் நரகல் கக்கும் வாய் நாளுக்கு நாள் தாழ்த்தப்பட்ட , மற்றும் சிறுபான்மை இனத்தை குஜராத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அழித்தொழிக்காமல் விடாது போல் இருக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிந்தய கலவரத்தை முன்னின்று நடத்தியதோடு மட்டும் இன்றி அதை ஒரு இனத்தை அழிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக் கொண்ட ரத்த வெறி பிடித்த மோடியின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் இல்லை.

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கக் கூடாது என உலகம் முழுக்க எதிர்ப்புகள் எழும்பியுள்ள நிலையில் மோடி எழுதியிருக்கும் ஒரு புத்தகம் "கர்மயோக்" (Karmayog) அதாவது துப்புறவாளர்களின் நிலையை நியாயப் படுத்தி இருக்கிறது அதுவும் மதம், கடவுளின் பெயரால்
குஜராத்தின் பெருமையாகவும் அதை சொல்கிறார். மேலும் இந்த தொழிலைச் செய்வதன் மூலம் ஹரிஜன்கள் சமூகக் கடைமையாற்றி சந்தோசம் அடைவதாகவும் கழிவைக் கக்கியிருக்கிறது அந்த மட மோடி.

இதே மோடியின் பார்வை "பார்ப்பனர்கள் டெல்லியில் கழிவரை சுத்தம் செய்பவர்களாய் இருப்பதற்கும் இதே பதிலைத்தான் சொல்லுமா எனத் தெரியவில்லை. "

ஒரு குலத்தை சேர்ந்தவன் அதே தொழிலை தொடர்ந்து செய்வதோடு மட்டும் இன்றி அதன் மூலம் குலத் தொழிலையும் தனது சமூக கடமையாக செய்ய வேண்Dஉம் என சொன்ன "ராஜகோபாலாச்சாரிக்கும் இந்த ரத்த வெரிபிடித்த ஓநாய்க்கும் அதிக வித்யாசம் இல்லை இந்த விசயத்தில்.

ஆன்மீகத் தொண்டாக அனுபவமாக கழிவுகளை சுத்தம் செய்வதைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லும் மோடி தானும் தன் கொலைக்கும்பல் கூட்டத்தை சேர்ந்த அத்துவானி, போன்றவர்களை ரதயாத்திரை மூலம் ஆன்மீகம் வளர்ப்பதை விடுத்து மலம் சுமந்து ஆன்மீகம் வளர்க்கலாம்.

ஏன் அந்த சமூகக் கடமையை செய்வதன் மூலம் சொர்கதுக்கு நேரடி டிக்கட் கிடைக்கும் என்றால் அந்த வேலையை தனது பாஜக தொண்டர்களை செய்யச் சொல்லலாம் , முதல் காரியமாக மோடியே அதை ஆரம்பித்து வைக்கலாம் . தலித்துக்களும் பிற தாழ்ந்த குலமும் கூடையில் சுமக்கும் மலத்தினை வேண்டுமானால் மோடியின் கும்பல் வாழை இலையில் சுமக்கட்டும் காஞ்சி சுப்புணியின் ஸ்டைலில்.



மேலும் விபரங்களுக்கு

இது தொடர்பான விரிவான பதிவை எவறேனும் இட்டால் நல்லது :(

தசாவதாரம் ட்ரெய்லர்


எங்கெல்லாம் தேடியும் கிடைக்காத இந்த ட்ரெய்லர் இணையத்தில் முதல் முறையாக தசாவதாரம் ட்ரெய்லர். வலையேற்ற முடியாத காரணத்தால் இதை கோப்புகள் பகிரும் தளத்தில் உள்ளிட்டுருக்கிறேன் . தரவிறக்கம் செய்து என்ஜாய் மக்களே என்ஜாய்!

இங்கே க்ளிக்கி டவுன்லோட் செய்யவும் பின்னர் MS Office ல் திறக்கவும்


உங்களைப் பாக்க எக்கச்சக்கமா மனுஷங்க வர்றாங்க.. நிச்சயமா மக்கள் மனம் கவர்ந்த தலைவராத்தான் இருக்கணும்...."

-தன் அருகிலுள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பிரமுகரிடம் கரகரத்த குரலில் கேட்டார் அந்த நடிகர்.

தாம் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்றும், தம்மைக் கொல்ல நடந்த தாக்குதலில் தப்பித்து கத்திக்குத்துக்காக சிகிச்சைக்கு வந்த விஷயத்தையும் தமது மாறாத புன்னகையுடன் பதிலாகக் கூறினார் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்.

தன்னலமற்ற அவரின் சேவையைக் கேள்விப்பட்டிருந்த நடிகர்,
"நீங்க அப்படியே செத்துருக்கணும்.. அப்பந்தான் தமிழ் நாட்டில் நல்ல பெயர் எடுக்கமுடியும்.. தியாகத்துக்கு இங்க மதிப்பில்லே..."

-உரத்து கரகரத்த குரலில் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

சென்னை ஜி.எச். மருத்துவமனையில் எழுபதுகளின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

அந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.இராதா! பதிலளித்தது CITU தொழிற்சங்கத்தலைவர், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர் வி.பி. சிந்தன்!!

-இப்படி ஒளிவு மறைவின்றி சமூகவிமரிசனம் செய்ய நடிகவேளால்தான் முடியும்!

இராதாகிருஷ்ணனுடைய பெற்றோர்களின் பூர்வீகம் ஆந்திராவானாலும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறித் தஞ்சமடைந்து ஜெகன்னாதையரின் நாடகக் கம்பெனியில்தான்.

சிறிய வயதிலேயே ‘பாயசம்' என்ற பாத்திரத்தில் பிரபலமாகி ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சந்தனத்தேவன்' படத்தில் கதாநாயகன் வேடம். அதன் அதிபரான டி.ஆர் சுந்தரத்திற்கு - மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிற நீளமான பெயர் பிடிக்கவில்லை. முன்னும் பின்னும் வெட்டி - எம்.ஆர்.
ராதாவாக்கினார். ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம். வெளிவந்தது 1939இல்.

திரைப்படத்தில் 1939-ல் நுழைந்தாலும் நாடகத்தை மறக்காது வளர்த்த கலைஞர் இராதா. "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற வாசகங்கள் அவரது நாடகக் கம்பெனியின் திரைச்சீலையில் இடம் பெற்றிருந்தது, அவரது தொடக்க காலத் தொடர்புகளால்தான். கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் நண்பர் எம்.ஆர்.இராதா.
தனது ஒரு பெண்ணுக்கு ரஷ்யா ராணி என்று பெயர் சூட்டியிருந்தார். எம்.ஜி.ஆர். மீது சுட்ட வழக்கில் அவருக்காக வாதாடியவர் கம்யூனிஸ்டு கட்சியின் என்.டி.

வானமாமலை! பெரியாரின் திராவிடர் கழகச் சித்தாந்தத்தில் பிடிப்பு ஏற்பட்டதை இறுதிவரை இராதா விடவில்லை. பெரியாருக்கு ஏற்பட்ட கண்டன விமரிசனங்கள் இராதாவுக்கும் தொடர்ந்தது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் நாடகங்களை அரங்கேற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரப் போராட்டம் பற்றிச் சித்தரிக்கத் தணிக்கை முறை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாத்திகக் கருத்துக்களைச் சொல்லத் தடை இருந்தது. இராதா நாடகத்தின் பெயரை மாற்றித் திரையிட்டுக் கைதாவார். காங்கிரஸ் ஆட்சியில் 59 முறை கைதானாவர் இராதா!.

கட்டணம் செலுத்தாமல் தனது நாடகங்களைப் பார்க்க வரும் உள்ளூர் பிரமுகர்களுக்கு "ஓசியில் பார்ப்போர்களுக்காக" என்று போர்டு மாட்டி ‘ஒதுக்கிய' பெருமை இராதாவையே சாரும்.

வில்லன்-தந்தை-சமூக விமரிசகர்- நகைச்சுவைப் பாத்திரம் என எல்லாவற்றையும் அவர் ஒருவரே ஏற்று நடித்தது தனிச்சிறப்பு. அவரது ஏற்ற இறக்கமுள்ள, கரகரத்து கீச்சுக்குரலாக மாறும் உச்சரிப்பு அவரது சமூக எள்ளலுக்கு பலம் சேர்த்தது. விளம்பரமின்றி உதவி செய்யும் சுபாவம் அவருக்கு உண்டு. அவர் இப்போது இருந்திருந்தால் ‘ராமர் சேது' விவகாரத்தில் ஊர் ஊராகப் போய் அவரது பாணியில் நாடகம் போட்டிருப்பார்!

லேட்டான தீபாவளி ஷ்பெஷல் !!

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

-(குடிஅரசு கட்டுரை: 31.10.1937)


தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

-(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

நரகமாகும் நந்திகிராம்

‘‘இந்த விழாவுக்கு யாரெல்லாம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. வராதவர்கள் பட்டியலை நீங்கள் எடுத்து உங்கள் அறையின் சுவரில் தொங்க விட்டுக் கொள்ளுங்கள்!’’ &மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, செய்தியாளர் களிடம் அளித்த பதில் இது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராமில் நடைபெற்ற வன்செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துப் பல திரைக் கலைஞர்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவைப் புறக்கணித்தார்கள். இந்த விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பல கலைஞர்கள் பங்கேற்காதது குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அப்போது அவர் இவ்வாறு பதில் சொல்லி யிருக்கிறார்.

இந்தப் பதில் எந்தவிதமான உணர்வை வெளிப்படுத்துகிறது? நந்திகிராம் தொடர்பான சிக்கலில் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை முதல்வர் விரும்பவில்லை. அதிலும் இந்தப் பிரச்னையை முன்னிட்டு எழுத் தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அறிஞர்கள் ஒரு விழாவைப் புறக்கணிப்பதை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்தப் பதிலின் விளைவாக என்ன நடந்தது தெரியுமா? அடுத்த நாள் திரைப்பட விழா நடந்த அரங்கத்துக்கு அருகில் உள்ள இன்னொரு இடத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

ஒருபுறம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கலைஞர்கள், காவல்துறையால் தாக் கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அதே காவல்துறை நந்திகிராமில் ஆயுதம் தாங்கிய ஆளும் கட்சியினர் தங்கள் விருப்பப்படி செயல் படும்போது கைகட்டி வேடிக்கை


பார்த்திருக்கிறது. அல்லது அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கிறது. அதாவது, ஆளும் கட்சியினர் கைகளில் ஆயுதங்களுடன் வன்செயல்களில் ஈடுபடும்போது காவல்துறை அனுமதிக்கிறது. மற்றவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட சட்டம்-&ஒழுங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தடுக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அனுமதிக்க வேண்டிய ஜனநாயகரீதியான எதிர்ப்பை காவல்துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது. ஆனால், ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டிய வன்செயல்களை அது அனுமதித்திருக்கிறது.

கடந்த ஜனவரியில் இருந்து பத்து மாதங்களுக்கு மேலாக நந்திகிராம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

‘‘இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 27 பேர் ‘நிலப்பாதுகாப்புக் குழு’வினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1500 பேருக்கும் அதிகமானோர் பத்து மாதங்களாக நிவாரண முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. அந்தப் பகுதியில் காவல்துறையோ மற்ற நிர்வாகமோ செயல்பட முடியவில்லை. இப்படி ஒரு பகுதி மட்டும் ‘விடுவிக்கப்பட்ட’ பகுதியாக இருக்கும் நிலையை எந்த ஒரு மாநில அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் அங்கு சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்குத் தேவை யான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் வீடு திரும்பினார்கள்.’’ &இதுவே நந்திகிராம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தரும் விளக்கம்.

நந்திகிராம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கி அதை ஒரு விடுவிக்கப்பட்ட பகுதியாக வைத்திருக்கவே முதலில் புத்ததேவ் விரும்பினார். மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சில சட்டங்களில் இருந்து அந்தப் பகுதி விலக்களிக்கப்படும் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்தது. மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை அவர் கைவிட்டார். ஆனால், அந்த எதிர்ப்பே வேறொரு வகையில் அந்தப் பகுதியை விடுவிக்கப்பட்ட பகுதியாக மாற்றிவிட்டது. நந்திகிராம் மக்களுக்கு இப்படி ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை நடத்துவதற்கான சக்தியை யார் கொடுத்திருப்பார்கள்? ‘பெருமுதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவை செய்யும் ஓர் அரசு, மக்களுடைய போராட்டத்தை எப்படி ஒடுக்க முயலும்’ என்ற பாடத்தை அவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்திருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்வது என்று யார் அரசியல் வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? தெலுங்கானா, ஸ்ரீகாகுளம், புன்னப்புரா, வயலார் விவசாயிகளின் போராட்ட வரலாறு குறித்துப் பேசி மக்களை யார் அரசியல்படுத்தி இருக்க முடியும்? அன்று மக்களுக்குப் போர்க்குணத்தை ஊட்டியவர்களே இன்று அவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கி இருக்கிறார்கள்!

மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் இப்போது அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டது. விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்கும் பணியில் நிர்வாகத்துக்குப் பதிலாக கட்சியே இறங்கிவிட்டது. காவல்துறையும் மத்திய ரிசர்வ் காவல் படையும் செய்ய வேண்டிய வேலையை ஆயுதம் தாங்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்து முடித்து விட்டார்கள். ‘நிலப் பாதுகாப்புக் குழு’வின் ஆதரவாளர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி, அவர்களுக்குப் பின்னால் இருந்து துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே மீண்டும் நந்திகிராம் பகுதிகளில் மார்க்சிஸ்ட்கள் நுழைந்தனர். நிலப் பாதுகாப்புக் குழு தன்னுடைய எதிர்ப்பைக் கைவிட்டுப் பின்வாங்கியது. அதன்பிறகு முழுப்பகுதியிலும் கட்சிக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் செங்கொடியுடன் முகத்தை மூடிக்கொண்டு நகர்வலம் வந்து தங்கள் வெற்றியை உறுதிசெய்து இருக்கிறார்கள். அதுவரை மத்திய ரிசர்வ் காவல் படையை தேசிய நெடுஞ்சாலை 41&ல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதாவது மார்க்சிஸ்ட்களின் செயல்திட்டம் நிறைவேறிய பிறகே மத்திய ரிசர்வ் படை நந்திகிராம் பகுதிக்குள் நுழைய முடிந்திருக்கிறது.

தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றில் வந்திருக்கும் பல செய்திகளில் இருந்து இதுவே அங்கு நடந்திருப்பதாக அறிய முடிகிறது. இந்த விடுவிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்கு கட்சியினர் செய்த செயலை புத்ததேவ் எப்படிப் பார்க்கிறார்?

‘‘எதிர்க்கட்சிகளுக்கும் நிலப் பாதுகாப்பு குழுவினருக்கும் அவர்களுடைய பாணியிலேயே தகுந்த பாடம் புகட்டப் பட்டுள்ளது’’ என்கிறார். ‘‘இப்போது நந்திகிராமில் நிலவுவது மயான அமைதி என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த 11 மாதங்களும் அங்கு சொர்க்கத்தின் அமைதி நிலவியதா?’’ என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டரீதியாக ஓர் ஆட்சி செய்ய வேண்டிய ஒரு வேலையை சட்டவிரோதமாக தன்னுடைய கட்சியினர் செய்து விட்டார்களே என்று அவர் கவலைப் படவில்லை. நிர்வாகம் சீர்குலைந்து விட்டதே என்று அவர் வருந்தவில்லை. ஒரு நிலப்பரப்பில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு ஆளும் கட்சியினர் ஆயுதங்களுடன் களத்தில் இறங்கலாம் என்ற ‘முன்மாதிரி நீதி’யை உருவாக்கி விட்டோமே என்ற வேதனை அவருக்கு இல்லை. மாறாக எதிர்த்தரப்புக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது என்று பெருமிதம் கொள்கிறார். மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்போர்க்கு அவருடைய இந்த அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது.

தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் ஆட்சியில் இருப்பவர்களின் தவறுகளை மற்ற கட்சியினரைவிட துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்ற நம்பிக்கை பரவலாக மக்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே மார்க்சிஸ்ட் கட்சியினருக்குத் தொடர்ந்து போராடும் ஆற்றலை அளித்து இருக்கும். ஆனால், மேற்குவங்கத்தில் நடைபெற்றிருக்கக் கூடிய நந்திகிராம் நிகழ்வுகள், அந்தக் கட்சியினரின் தார்மீக வலிமையைக் குறைக்கும் வல்லமை பெற்றவை.

கடந்த வாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், ‘‘சர்வாதிகாரப் போக்கை தி.மு.க. அரசு மேற்கொண்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று மதுரையில் பேசியதாக செய்திகள் வந்தன. மேற்கு வங்க முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா நீடிக்கும்வரை எந்த மாநிலத்தின் முதல்வரையும் எதிர்க்கும் அற வலிமையை முழுமையான அளவில் மார்க்சிஸ்ட்களிடம் காண முடியாது!

-ஜென்ராம்,ஜூனியர் விகடன்.

Dont do's and donts "are You Fetish"?


Most of the sexual orientations popularly called fetishism are regarded as normal variations of human sexuality by psychologists and medical doctors. Even those orientations that are potential forms of fetishism are usually considered unobjectionable as long as all involved persons feel comfortable. Only if the diagnostic criteria presented in detail below are met, the medical diagnosis of fetishism is justified. The leading thought is that a fetishist is not ill because of his or her addiction but because he or she suffers from it.


The affected person, her object or another person experience impairment or distress in multiple functional areas. Functional area refers to different aspects of life such as private social contacts, job, etc. It is sufficient for the diagnosis if one of the participants is being hurt or mistreated in any other way.


For More info Click here :)


கனிமொழியைக் கவிஞராகவே ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள், மந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாதா?’ என்று சோ உங்களைக் கிண்டலடித்திருக்கிறாரே?

‘‘சாகித்ய அகாடமியின் தலைவராக இருந்த கேரளக் கவிஞர் சச்சிதானந்தன் என்னைக் கவிஞர் என்று ஏற்றுக்கொள்கிறார். ஜெயகாந்தன் ஏற்றுக்கொள்கிறார். எத்தனையோ வளரும் கவிஞர்களுக்கெல்லாம் தராசாக இருக்கும் சுஜாதா ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவருக்குத் தெரிந்த கவிஞர்களான வாலி, வைரமுத்துவும்கூட என்னைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும்விட ‘சோ’வுக்கு கவிதை அதிகம் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த அறியாமைக்காக நான் வருத்தப்படுகிறேன். அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பதில் சொல்வதில் அர்த்தமில்லை.’’
-குமுதம் ரிப்போர்ட்டர்

தத்துவப் புதர் பாரதி

“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!

இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’

-ஆனாரூனா

ஹே ராம் சிங்கள ரத்னா !

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு.

"இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமையால் புலிகளுக்கு எதிரே அமர்ந்து, அவர்களுடன் உத்தியோகபூர்வமான முறையில் இந்திய அரசாங்கம் எதுவித பேச்சுக்களையும் மேற்கொள்ளாது" என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும் சிறிலங்கா அரசாங்கத்தின் உயரிய விருதான "சிங்கள ரத்னா" விருது பெற்றவான ராம், கொழும்பில் நடைபெற்ற இந்திய கூட்டரசின் விடுதலை நாள் விழாவில் "திருவாய்" மலர்ந்துள்ளார்.

இவர் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியோ அரசியல்வாதியோ அல்ல. ஆனால் இந்தியாவின் கொள்கைகள் அனைத்தும் "பார்ப்பனர்" நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயற்படுகிறவர்களில் முதன்மையானவர். இந்த பார்ப்பனரின் கூட்டாளிகள்தான் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றவர்களாக உள்ளனர்.

சரி... தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா இதுவரையும் பேச்சுவார்த்தையே நடத்தியதே இல்லை என்கிறாரே ராம்? உண்மையா?

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் வடக்கு-கிழக்கு இந்திய மாநிலங்களின் நிலைமை தொடர்பில் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் பக.16-இல் "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" (பக். 16) என்ற தலைப்பின் கீழ் பல அமைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அசாம் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா, மற்றும் அகன்ற நாகாலாந்து கோரி போராடும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) ஆகிய அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசால் வடக்கு கிழக்கு மாநிலங்களிலே "பாரிய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி குழுக்கள்" என்று பட்டியலிடப்பட்ட அமைப்புகளில் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) இரண்டைத் தவிர அனைத்துமே 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சட்டவிரோத அமைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா), நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) அமைப்புகள் மீதான தடை கூட 2002 ஆம் ஆண்டுதான் நீக்கப்பட்டது.

ஆனால் 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் இந்த இரு அமைப்புகளுடன் இந்திய அரசாங்கம் "யுத்த நிறுத்த ஒப்பந்தம்" செய்து கொண்டது. 1997 ஆம் ஆண்டு முதல் ஓகஸ்ட் 1 ஆம் நாள் முதல் இது நடைமுறைக்கு வந்தது.

அப்போதும் இந்த நாகா அமைப்புகள் "தடை செய்யப்பட்ட அமைப்புகள்" தான்!

இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய், ஜப்பானின் ஒசாகா நகரத்தில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்பின் தலைவர்களான ஐசக் மற்றும் மூய்வா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியதாக திருவாளர் இந்து ராமின் "இந்து"வின் 2001 டிசம்.9 ஆம் நாளிட்ட நாளிதழ்தான் செய்தி வெளியிட்டது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

அதே நாளிட்ட இந்து நாளிதழில் ஏற்கெனவே நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்புடன் பாரிஸ் மற்றும் பாங்கொங்க் ஆகிய நகரங்களில் அரசாங்கத் தூதுவர்கள் மூலம் இரகசியப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்"தான்!

நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டமில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரையிலும்

தாய்லாந்தின் பாங்கொங்கில் 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் 21 முதல் 23 வரையிலும்

நாகா அமைப்புக்களுடன் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி கே.பத்மநாபய்யா நாகா அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தினார்.

அப்போதும் இந்த நாகா அமைப்புக்கள் "தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்" தான்!

2002 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள்தான் நாகாலாந்து தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து ராமுக்கு உரித்தான குழும ஏடுகளில் இவைகள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மற்றும் அனைத்துலக ஊடகங்களும் இதனை பதிவு செய்துதான் உள்ளன.

இந்தியப் பிரதமர்களாக இருந்த பி.வி.நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் வாஜ்பாய் ஆகியோரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால்தான் நாகா அமைப்புக்களுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவானது என்று இதே இந்து ராமின் "புரண்ட்லைன்"தான் (Volume 16 - Issue 27, Dec. 25, 1999 - Jan 07, 2000) பதிவும் செய்துள்ளது.

அதேபோல் அசாமில் தனிநாடு கோரி போராடும் உல்ஃபா அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்று இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இதே உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று புகழ்பெற்ற அசாமிய பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி முன்முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து உல்ஃபாவினால் மக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு 3 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேச்சுக்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

இப் பேச்சுக்கள் குறித்தும் பதிவு செய்துள்ள இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையானது (பக். 18)

- உல்ஃபா அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள உல்ஃபா அமைப்பினர் 5 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சாதகமாக பரிசீலிக்கவும இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பதாகவும்

- அமைதிப் பேச்சுக்கள் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாகக் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் நாள் முதல் 2006 ஆம் ஆண்டு செப்ரம்பர் 20 ஆம் நாள் வரை ஒருதலைபட்சமான நடவடிக்கை நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு பிரகடனப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்புடன்தான் அமைதிப் பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கமே ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் நிறுத்த வெளியிடுகிறது.

"தடை செய்யப்பட்ட" உல்ஃபா அமைப்பின் உறுப்பினர்களை விடுவிப்பது குறித்து "சாதகமாக" பரிசீலிப்பதாக இந்திய அரசாங்கமே அறிவிக்கிறது.

மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுவினருடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு அப்பால் "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" ஒப்பந்தம் என்ற ஒரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையின்படி,

- போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி

- அசாமில் செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை

- அசாமில் இயங்கி வரும் டி.எச்.டி எனப்படும் டிமா ஹலான் டோஹாஹ்

- மேகாலயாவில் இயங்கி வரும் அசிக் தேசிய தன்னார்வ சபை

ஆகிய அமைப்புடன் இத்தகைய "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" என்கிற ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்துள்ளது.

"சிங்கள ரத்னா" "இந்து" ராம் அவர்களே!

இந்த அமைப்புக்கள் அனைத்துமே தற்போதும் இந்திய அரசாங்கத்தால் "தடை செய்யப்பட்டவைதான்"!-

தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன்தான்

இந்தியப் பிரதமர்களும் பேசுகிறார்கள்-

இந்திய சிறப்புப் பிரதிநிதிகளும் பேசுகிறார்கள்-

ஒப்பந்தங்களை உருவாக்குகிறார்கள்-

ஒப்பந்தங்களை நீடிக்கிறார்கள்.

இப்படியான நிலையில் "தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் இந்தியா பேசாது" என்று இந்து ராம் "ஒரு தலைபட்சமாக" பிரகடனம் செய்கிறார்.

ஆம்-

இந்திய சிறப்புப் பிரதிநிதியாக ஈழப் பிரச்சனையிலே செயற்பட்டு தமிழர் தரப்பிடம் தோல்வியடைந்து போன அதே "இந்து" ராம்தான் இப்போதும் நஞ்சு கக்குகிறார்!

தமிழர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதற்காக எங்கோ இருக்கும் நோர்வே நாட்டவர்கள் கடல் கடந்து வந்து தமிழர் தரப்பினருடன் பேசுகின்ற போது இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் தொடர்புபட்ட

தமிழ்நாடு அரசாங்கமும்

இந்திய அரசாங்கமும்

இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஏன் அக்கறை கொள்ளக்கூடாது?

ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது?

ஏன் இலங்கைத் தமிழர் பற்றி பேசக்கூடாது?

தடை செய்யப்பட்ட உல்ஃபாவுடன் பேச்சுகள் நடத்த வேண்டும் என்று புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி களமிறங்கிய போது அவரை பொடாவில் போடவில்லையே! அவரை பயங்கரவாதியாக சித்தரிக்கவில்லையே!

உல்ஃபா அமைப்புடன் பேச்சுக்கள் நடத்தலாம் என்று புதுடில்லிக்குச் சென்று அசாம் முதல்வர் பேசலாம்- அசாம் எழுத்தாளர் வலியுறுத்தலாம்- அவர் பதவியிலே நீடிக்கலாம்!

ஆனால்

தங்கள் தொப்புள்கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் பேசினால்மட்டும் "இந்து" ராமின் கண்களுக்கு "பயங்கரவாத"மாகத் தெரியும்! குய்யோ முறையோ என கூப்பாடு போடுவார்கள்!

பசியாலும், பட்டினியாலும் வாடும் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத் தமிழர்கள் சேகரித்த உணவுப் பொருட்களை அனுப்ப 74 வயது பெரியவர் பழ. நெடுமாறனை சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளுகின்ற அளவிலே "தடை செய்யப்பட்ட இயக்கம்" என்ற பதத்தை வைத்துக் கொண்டு எழுது கோல்களின் மூலமாக பார்ப்பன லொபிகள் மூலமாக தமிழகத்திலே ஒருவித "அச்ச" நிலையை அல்லவா "இந்து" ராம் குழுக்கள் உருவாக்கி வைத்துள்ளன.

"இந்து" ராமுக்கு எதுவும் தெரியாது என்பதோ

"இந்து" ராம் எதனையும் அறியாதவர் என்பதோ அல்ல.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு

தமிழர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்து விடக் கூடாது என்பதும்

தமிழர் தரப்புடன் இந்தியா பேசிவிடுமோ?

பார்ப்னர்களாகிய நாங்கள் நடமாடுகின்ற போது- இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக நாங்கள் இருக்கும்போது அப்படி ஒருபோதும் பேசவிட வேமாட்டோம் என்ற பார்ப்பன ஆதிக்க வெறியும்தான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சலுக்குக் காரணம்!

காலம்காலமாக தமிழினத்தின் மீது "பார்ப்பன ஆதிக்கவாதிகள்- வெறியர்கள்" கொண்டிருக்கும் வரலாற்று வன்மப் பகையின் வெளிப்பாடுதான் "இந்து" ராமின் "கொழும்பு" கூச்சல்!.

எங்கள் யாழ்ப்பாணம்

"என்ன பறுவதம் ஆச்சி நீங்களும் வந்து கியூவிலை நிக்கிறியள்".
"ஓமடா மேனை கந்தசஷ்டி விரதத்திற்கு ஒரு நேரம் இரவிலை சாப்பிடுகிறது".
"பாணே சாப்பிடப் போறியள்"
" வேறு என்ன இருக்கு இஞ்சை சாப்பிட"
"ஆச்சி இப்ப காலை எட்டுமணி. மூண்டு மணி செல்லும் பாண் தர"
"அறுவாங்கள் பாதையை மூடிப்போட்டு சாமான்கள் அனுப்பாமல் விட்டால் சனம் என்ன சாகிறதே?"
"இல்லையாச்சி கப்பலிலை சாமான்கள் வருகுதெண்டு சொல்லுகினம்"
"உது எங்களை ஏமாத்த இப்படிச் சொல்லுறான்கள்".
"இல்லை ஆச்சி சாமான்கள் வருகுது தான். ஆனால், வியாபாரியள் பதுக்கி வைச்சு கொள்ளை இலாபம் அடிக்கிறாங்கள்;" மோசக் காரர்கள்.
"அநியாயமாய் போவார் ஏன் இப்படிச் செய்யினம்".
"வேறு என்ன பண ஆசைதான்; பெரிய முதலாளிகளாகத் தான் பாக்கினம்"
"இஞ்சை எங்கடை சனம் சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள். நாசமாய் போவார் சாமான்களின்ரை விலையைக் கூட்டிவித்து சொர்க்கத்திற்கே போகப் போயினம்".
"ஏலாத நேரத்தில ஆச்சி கந்தசஷ்டி விரதம் பிடிக்க வேணுமோ?"
"எட மேனை எப்ப பாதையை மூடினாங்களோ அண்டைக்குத் தொடக்கம் கந்தசஷ்டி விரதம் தானே? ஒரு நேரம் தான் சாப்பிட வழி இருந்தது. இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு. அது தான் ஒரு இறாத்தல் பாண் வாங்கினால் இரண்டு நாளைக்குக் காலந்தள்ளலாம் எண்டு வந்தனான்".
சூரியனும் புதினம் பார்க்கப் புறப்பட்டு மேலெழுந்து கொண்டிருந்தான். நேரம் ஏற ஏறச் சூடு நிரம்பிய செங்கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.
நேரம் பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பாண் கியூவில் நின்றவர்கள் நன்றாகச் சோர்ந்து போனார்கள்.
பறுவதம் ஆச்சி தலையிலை சீலைத் தலைப்பைப் போட்டுக் கொண்டு வெய்யிலில் வெதும்பிக் கொண்டு நிற்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
"ஆச்சி நீங்கள் கியூவிலை நிற்க வேண்டாம். போய் அந்த குந்திலை இருங்கோ. கொடுக்கத் தொடங்கேக்கை வந்து வாங்குங்கோ நாங்கள் விட்டுத் தாறம்".
"பிள்ளையள் கவனமாய் நில்லுங்கோ. வெள்ளை வான் திரியுது எண்டு கேள்வி."
"சரி ஆச்சி"
பறுவதம் ஆச்சி நிண்டு நிண்டு சரியாகக் களைச்சுப் போனா. மற்றப் பக்கத்திலுள்ள கடைக்குந்தில் போய் இருந்தவ படுத்துத் தூங்கிவிட்டா.
****
பறுவதம் ஆச்சி கோண்டாவிலில் தான் இருக்கின்றா. புருசன் கந்தப்பு பத்து வருடங்களுக்கு முன்பு ஷெல் விழுந்து செத்துப்போனார். இரண்டு ஆம்பிளைப் பிள்ளைகள் இத்தாலிக்குக் களவாய் போகப் போனவங்கள் போனவங்கள் தான். இற்றைவரை எதுவிதமான தகவலும் இல்லை.
கணவன் இறந்த வேதனையாலும் பிள்ளைகளைக் காணாமலும் பறுவதம் ஆச்சி நல்லாய் நொந்துபோனர்.
ஊரில் உள்ள சில வீடுகளுக்குச் சென்று அரிசி இடித்து மாவாக்கி வறுத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் வயிற்றைக் கழுவி வந்தார். அதனாலை `மா இடிக்கும் பறுவதம் ஆச்சி' என்று எல்லோரும் அழைப்பார்கள். வேலைச் சுத்தம், மனச் சுத்தம் அதனால் எல்லோருடைய மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து வந்தா.
கல்யாண வீடு, சாமத்திய வீடு என்று வந்தால் பலகாரம் சுடுவதற்கு பறுவதம் ஆச்சி கட்டாயமாகக் கூப்பிடப்படுவா. அரியதரம், முறுக்கு, பால்றொட்டி, சிப்பி, பயித்தம் பலகாரம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தா.
****
"எடி வள்ளியம்மை வெறுந்தேத்தண்ணி குடிக்கேலாமல் கிடக்கு கொஞ்சச் சீனி தாறியே!
"உண்ணாணை அக்கா ஒரு சொட்டு சீனியும் இல்ல. அறுவான்கள் ஏழை எளியதுகள் வாங்க முடியாமல் நானூறு ரூபாயல்லே விக்கினம். அதுக்கும் கியூவாம்".
"பொன்னம்பலத்தாற்றை பெண்சாதி சொன்னா பேரப்பிள்ளைக்குக் கொடுக்க பால்மா இல்லையாம். அரிசி, மா, சீனி காசிருந்தாலும் வாங்கேலாமல் கிடக்காம். உள்ளிப்பூடு மூவாயிரம் ரூபாவுக்கு விக்கினமாம்."
"ஓமக்கா அவ சொல்லுகிறது உண்மை தான். எங்கடை இவரும் போய் கியூவிலை நிண்டு விட்டுத் திரும்பி வந்தவர். "
"இப்ப வேலைவெட்டி தொழில் துறையள் ஒண்டும் இல்லை. கியூவிலை நிற்கிற வேலை ஒண்டு மட்டும் தான் நடக்குது."
"நல்லாச் சொன்னியள் அக்கா".
"சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சனம் பட்டினியாலை சாகப் போகுதுகள்."
"அது ஒண்டுதான் இஞ்சை மலிவாய் கிடைக்கும் போலை தெரியுது".
"ஓமடி பிள்ளை தலையைச் சுத்துது நான் வாறன்" நாட்டு நிலைமை காரணமாக பெருந்தொகையான மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராகப் பறுவதம் ஆச்சியும் இருக்கின்றார்.
****
"ஆச்சி ஒழும்பெணே பாண் கொடுக்கத் தொடங்கி விட்டாங்கள்" என்று அவரின் கையில் மெல்லமாகத் தட்டுகிறன்.
அவ எழும்பவே இல்லை. நானும் என்னுடன் பாண் கியூவில் நின்ற வேறு சிலரும் சேர்ந்து முகத்திற்குத் தண்ணீர் தெளித்துப் பார்த்தோம். அவ அசைவதாய்த் தெரியவில்லை.
அவ போய்ச் சேர்ந்துவிட்டா. நாங்கள் பதறிப்போனோம். ஒரு ஏழைக்கிழ பரிதாபமாக மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
யாழ். பெரியாஸ்பத்திரி சவச்சாலையில் பறுவதம் ஆச்சியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அநாதைப் பிணம்.
அரசாங்க செலவில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊருக்கு உழைத்த பறுவதம் ஆச்சியை ஊரே மறந்துவிட்டது.
பட்டினிச் சாவை எதிர்நோக்கும் மக்களிடையே மனிதாபிமானத்தை எப்படிக் காண முடியும். யாழ்ப்பாணப் பட்டினத்தில் இருந்து சயிக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் வழி மறித்து "கொக்குவில் சம்பியன் ஒழுங்கையடியிலை இரண்டு பெடியங்களைச் சுட்டுப்போட்டாங்களாம்" என்றார்.
நான் கே.கே.எஸ். வீதி வழியால் போகாமல் நாச்சிமார் கோயிலடியாலை திருப்பி தின்னவேலிச் சந்திக்கு வந்து பலாலி றோட்டாலை போய் உரும்பிராய் சந்தியாலை திரும்பி மருதனார்மடத்தடிக்கு வந்து கே.கே.எஸ். வீதி வழியாக வீட்டை வந்து சேர்ந்தேன்.
வீட்டில ஒரே கூக்குரல் சத்தம். என்ன என்று வாசலில் நின்றவரிடம் கேட்டேன்.
"உன்ரை அப்பாவை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டார்களாம். அதுதான் கொம்மா குளறி அழுகிறா" என்று சொன்னார். அம்மா என்னைக் கண்டதும் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டா.
"அம்மா அழாதேங்கோ நான் பொலிஸிலும் போய் என்றி போட்டுவிட்டு வாறன்"
"தம்பி நீர் பொலிஸுக்குப் போக வேண்டாம். பணம் கறக்க ஆட்கடத்தல் வேலையில சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவையின்ரை வேலையாகத்தான் இருக்கும்" என்று மாமா கூறினார்.
வடபுலத்து நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று என் மனத்தில் தோன்றியது.
"அருந்தவன் அப்பான்ரை பாடு என்னவாம்"
"ஒண்டுமாய்த் தெரியேல்லை குஞ்சி"
"சனம் இஞ்சை சாப்பாடு இல்லாமல் சாகக்கிடக்குதுகள் அதுக்குள்ளை கப்பம் பெறுகிறதற்கு கடத்தலும் நடக்குது"
"யார் கடத்தினதெண்டு தெரிஞ்சால் போய்ப் பேசிப்பார்கலாமெண்டால் ஒண்டுமாய் தெரியேல்ல குஞ்சி."
"மனித உரிமைகளுக்கான கந்தோரிலை போய் அறிவிச்சனிங்களே?"
"ஓம் குஞ்சி, எல்லா வழியாலும் போய்ப்பார்த்தம் ஒண்டும் சரிவரேல்ல."
"தம்பி எங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரவேணும். விளக்கெரிக்க மண்ணெண்ணெய் இல்லை. அதுக்கிள்ளை மின்சாரத்தை நிப்பாட்டி ஆறு மணித்தியாலம் தான் தாறாங்கள். வெளிச்சம் இல்லாத நேரத்தில களவுகளல்லே நடக்குது. மூண்டு சங்கக்கடை உடைச்சு சாமான் எல்லாம் களவெடுத்துப் போட்டாங்களாம். வேறுகடையளும் உடைச்சிருக்காம் எண்டு சொல்லுகினம்."
"வருத்தக்காறரை அவசரமாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவும் வாகன வசதி இல்லை. பெற்றோல், டீசல் இல்லாதபடியால் கார், ஓட்டோ ஒண்டும் ஓடுறேல்ல. எரிபொருள் தட்டுப்பாட்டால் பஸ் போக்குவரத்தும் ஒழுங்கில்லை. பொதுசனம்தான் நல்லாய் கஷ்டப்படுதுகள். யாரை நொந்து என்ன பயன். காசு உள்ளவங்கள் எல்லாம் வெளிநாடெண்டு ஓடிவிட்டாங்கள். நாங்கள் ஏழையள்தான் இஞ்சையிருந்து கஷ்டப்படுகிறம். எங்களுக்கும் யமதர்மராஜன் தேதி குறிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்."
என்று குஞ்சி தனது ஆதங்கத்தை பொரிந்து கொட்டினார்.
சற்று நேரத்தில சயிக்கிளில் வேகமாக ஓடிவந்த அருந்தவத்தின் நண்பன் தியாகு....
"இஞ்ச மச்சான் உன்ரை அப்பாவை உடுவில் மல்வம் றோட்டிலை சுட்டுப் போட்டிருக்கு. நான் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வாறன்."
"ஐயோ அப்பா உங்களுக்கு ஏன் இந்த நிலை வர வேண்டும். எங்களை அநாதையாக்கிவிட்டுப் போய்விட்டீங்களே" என்று அழுதேன்.
"வா மச்சான் சயிக்கிள்ளை ஏறு போவம்."
நாங்கள் இருவரும் அங்கு போய்ச் சேர்ந்தபோது பொலிஸார் அங்கு காவலுக்கு நிற்கின்றார்கள். அவர்களிடம் போய் "இறந்திருப்பவர் எனது தந்தை என்று சொன்னேன்."
நீதிவான் வந்து விசாரணை முடிந்ததும் பிரேதத்தை யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுகின்றார்கள். நானும் தியாகுவும் வீட்டுக்கு வந்து விபரங்களைச் சொல்லிவிட்டு சின்னத்துரையற்றை காரிலை யாழ். ஆஸ்பத்திரியை நோக்கிச் செல்கின்றோம்.
இக்கொடுமைகளைப் பார்த்து சகிக்க முடியாமல் சூரியனும் மேற்கில் போய் மறைந்து கொண்டான்.

சிறுகதை- இணுவை வசந்தன்