இறுதி வரை திமுக

சிலரது தவறான ஆலோசனையால் கருணாநிதி தன் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக கருணாநிதிக்கு தவறான ஆலோசனை கூறியது யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட தயாநிதி மாறன், கருணாநிதிக்கு தன் மீது ஏற்ட்ட சந்தேகம் தம்மை மிகவும் பாதித்ததாக கூறினார்.
மந்திரி பதவி பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும், தாம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தம்மை வருத்தமடையச் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக தொண்டராக பிறந்த தாம் திமுக தொண்டராகவே இறக்கவும் விரும்புவதாக கூறிய தயாநிதி மாறன், கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து கட்சியின் ஆதரவாளராக இருக்கப் போவதாகவும் கூறினார்.
பதவி விலகல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தாம் பேசியதாகவும், இந்த முடிவு குறிதது அவர்கள் அதிரச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

3 comments:

வால்டர் said...

விஎஸ்கே பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

பிராமின் தாத்தா,

இத்தனை நாள் தயாநிதி மாறனை இகழ்ந்தீர்கள். அவர் கொண்டு வந்த ஒரு ரூபாய் தொலைபேசித் திட்டத்தையும் காறி உமிழ்ந்தீர்கள்.

இன்றைக்கு திமுகவின் உட்கட்சிக்குள் சண்டை என்றதும் கருணாநிதிக்கு எதிரி என்றதும் தயாநிதியை புகழ்கிறீர்கள்.

பாப்பானை நடிப்பில் மிஞ்ச இந்த உலகத்தில் ஆட்களே இல்லை!

koothanalluran said...

மாறன் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்

Anonymous said...

கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ